Jump to content

மக்கள் உணர்வுகளை மதிக்கின்றாரா டக்ளஸ்? மக்கள் உணர்வுகளை மிதிக்கிறாரா சம்பந்தன் ?


Recommended Posts

Sham Varathan Sham Varathan 

மக்கள் உணர்வுகளை மதிக்கின்றாரா டக்ளஸ்?

மக்கள் உணர்வுகளை மிதிக்கிறாரா சம்பந்தன் ?

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் என்னை நம்பவேண்டும் , நான் செய்விப்பேன் என்று கோட்டாபாயவுக்காக தமிழர்கள் மத்தியில் மக்கள் ஆணையை கோரினார் டக்ளஸ் தேவானந்தா . ஆனால் வழமைபோல தமிழ் தேசிய கூட்டமைப்பின் உசுப்பேற்றலுக்கும், ரிஷாட் தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காகவும் அள்ளி வீசிய எச்சிலைக்கும் ஆசைப்பட்ட தமிழர்கள் தாங்கள் எங்கு நிற்கின்றோம் , பெரும்பான்மை மக்களின் மனநிலை என்னவென்று அறியாமல் குருட்டு நம்பிக்கையில் சஜித் பிரேமதாசா வெற்றி பெறுவார் என்று டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கையை நிராகரித்தார்கள் .

கூட்டமைப்பின் தலைமை சம்பந்தர் அற்ப சலுகைக்காக கோட்டாபாயவிடம் மண்டியிட மாட்டோம் , அரசியல் தீர்வை பெற்றுத் தருவோம் என்று மக்களை முட்டாளாக்கி , இரத்தத்தை சூடாக்கி, வெள்ளை வேன் வரும் என்று பூச்சாண்டி காட்டி சஜித் பிரேமதாசாவிற்காக கடுமையாக உழைத்தார்கள். இவர்களின் நரி தந்திரமும் , கபட நாடகமும் புரிந்து கொள்ள முடியாத அப்பாவி மக்கள் கூட்டமைப்பு கைகாட்டியபடி ஆட்டு மந்தைகள் போல் சஜித்துக்கு வாக்களித்து இன்று தனிமைப்படுத்தப்பட்டு நடுவீதியில் நிற்கிறார்கள்.
மக்களை நடுவீதியில் விட்டு விட்டு பெரும்பான்மை சிங்கள மக்கள் மத்தியில் பகைமை தீயை வளர்த்து விட்டு , தாங்கள் மக்களிடம் கோரிய ஆணைக்கு எதிராக தமிழ் தேசியத்தையும் , சமஷ்டி, சுயநிர்ணயம் எல்லாவற்றையும் காற்றில் பறக்கவிட்டு தங்களையும் , தங்கள் குடும்பத்தையும் பாதுகாத்துக் கொள்வதற்காக , யாரை கொலைகாரன் , கொள்ளைக்காரன் என்று சொன்னார்களோ அதே கோட்டாபாயாவிடம் அமைச்சர் பதவிக்காக மண்டியிட தயாராகியுள்ளார்கள்.
இதே நேரம் தனக்கு மக்கள் ஆணை வழங்கவில்லை என்பதற்காக டக்ளஸ் தேவானந்தா தனக்கு கிடைக்கவிருந்த அமைச்சர் பதவியை தூக்கி வீசியுள்ளார்.
இங்கு மக்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டியது இவை அனைத்தும் அடுத்து வரும் பாராளுமன்ற தேர்தலுக்கான கூட்டமைப்பின் நாடகம் என்று. இந்த ஆட்சியில் அரசியல் தீர்வு வாராவிட்டால் பதவி விலகி அரசியலில் இருந்து ஒதுங்குவேன் என்று சொன்ன சுமந்திரன் எந்த முகத்துடன் அமைச்சர் பதவியை கோருவார்? இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்று கொடுத்தால் அரசியல் தீர்வு பாதிக்கும் என்ற சம்மந்தன் எவ்வாறு அமைச்சர் ஆவார்?

இங்கே யார் மக்களுக்கானவர்கள் என்பதை மக்களே தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.

Image may contain: 1 person
Image may contain: 1 person, closeup
 
 
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.