Jump to content

றொஹிங்யா இனப்படுகொலை | குற்றவியல் நீதிமன்றத்திற்குத் தயாராகும் ஒங் சான் சூ சீ


nunavilan

Recommended Posts

றொஹிங்யா இனப்படுகொலை | குற்றவியல் நீதிமன்றத்திற்குத் தயாராகும் ஒங் சான் சூ சீ

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரணைக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது
ICC approves probe into Myanmar's alleged crimes against Rohingya
துரத்தப்பட்டு இரண்டாவது வருடத்தை வங்காள தேசத்தில் கொக்ஸ் பஜாரில் நினைவுகூரும் றொஹிங்யா அகதிகள் – படம்: ரஹ்மான் / ராய்ட்டர்ஸ்

மியான்மாரில் (பர்மா) ரொஹிங்யா சிறுபான்மையினருக்கு எதிராக இனவழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அந் நாட்டின் அரசு மற்றும் இராணுவத்தினர் மீது மனித உரிமை அமைப்புகள் நீணடகாலமாகக் குற்றஞ்சாட்டி வந்தன. அந்நாட்டின் தலைவர் ஓங் சான் சூ சி இக்குற்றங்களை மறுத்தது மட்டுமல்லாது அதுபற்றிய விசாரணைகளை மேற்கொள்ளவும் மறுத்து வருகிறார். அகிம்சை முறையில் ஜனநாயகத்தை மீட்கப் போராடியவர் எனக்கூறி இவருக்கு 1991 இல் நோபல் பரிசு வழங்கப்பட்டது.

இன்று (வியாழன், நவம்பர் 14, 2019) சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் நீதிபதிகள் 2017 இல் மியான்மார் அதன் சிறுபான்மையினரான றொஹிங்க்யா முஸ்லிம்கள் மீது மேற்கொண்ட தாக்குதல்களின் போது, மனிதகுலத்துக்கெதிரான குற்றங்களைப் புரிந்துள்ளது என்பதை அங்கீகரித்த்துடன் அது தொடர்பான முழு விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளார்கள்.

நேற்று ஆர்ஜன்ரீனாவில் றொஹிங்யா முஸ்லிம்ளின் இனப்படுகொலைக் குற்ற வழக்கொன்றும் மியன்மார் தலைவர் ஒங் சான் சு சி மீது பதியப்பட்டுள்ளது.

மியான்மாரிலிருந்து பலவந்தமாக விரட்டப்பட்ட 740,000 க்கும் அதிகமான றொஹிங்யா முஸ்லிம்கள் பங்களாதேசத்தில் வசதிகளற்ற முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் மீது ஏவப்பட்ட வன்முறை இனப்படுகொலைக்குச் சமமாகும் என ஐ.நா. விசாரணைக்குழு தீர்ப்பளித்துள்ளது.

உலகில் இழைக்கப்படும் மிகக் கொடுமையான குற்றங்களை விசாரிப்பதற்கென 2002 இல் நிறுவப்பட்ட ஹேக் கைத் தளமாகக் கொண்ட சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மியன்மார் தொடர்பாக விசாரணைகளைத் தொடங்குமாறு அதன் வழக்குத் தொடுநருக்கு உத்தரவிட்டுள்ளது.

இதே வேளை கம்பியா வும் 57 நாடுகள் அங்கம் வகிக்கும் இஸ்லாமிய ஒத்துழைப்புக்கான அமைப்பு சார்பில் மியன்மார் மீது இனப்படுகொலைக்கான வழக்கொன்றை நீதிக்கான சர்வதேச நீதிமன்றத்தில் (International Court of Justice (ICJ)) தொடுத்துள்ளது. அடையாளப்படுத்தத்தக்க இனம், மதம் என்ற அடிப்படையில் றொஹிங்யா மக்கள் தனிமைப்படுத்தப்பட்டு அவர்கள் மீது ஒழுங்கமைக்கப்பட்ட வன்முறை, நாடுகடத்தல், துன்புறுத்தல் ஆகிய குற்றங்கள் இழைக்கப்பட்டன என அவ் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

றொஹிங்யா மாக்கள் மீது இனப்படுகொலையோ அல்லது இனச்சுத்திகரிப்போ நிகழ்த்தப்படவில்லை என மியன்மார் பல காலமாகச் சொல்லிவருகிறது.

மியன்மார் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் ஒரு அங்கத்தவராக இல்லாது போனாலும், துரத்தப்பட்ட அகதிகள் தங்கியிருக்கும் வங்களாதேசம் அங்கத்தவராக இருக்கின்ற படியால் இவ் விசாரணையை மேற்கொள்வதற்கு அதற்கு அதிகாரமுண்டு என சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கூறியுள்ளது.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முதன்மை வழக்குத் தொடுநர் ஃபற்றூ பென்சூடா மியான்மார் மீதான ஆரம்ப விசாரணைகளை செப்டம்பர் 2018 இல் ஆரம்பித்திருந்தாராயினும் இந்த வருடம் ஜூலையில் முழுமையான விசாரணை ஒன்றைத் தொடன்குவற்கு விண்ணப்பித்திருந்தார். இந்த வாரம் அவ் விசாரணைக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கம்பியாவினால் தொடரப்பட்ட வழக்கின் மீதான விசாரணைகள் வரும் டிசம்பரில் ஆரம்பமாகவுள்ளது. நீதிக்கான சர்வதேச நீதிமன்றம் பொதுவாக நாடுகளுக்கிடையேயான எல்லைப் பிரச்சினைகள் போன்றவற்றையே விசாரித்து வந்தாலும் தற்போது தான் இனப்படுகொலை, பயங்கரவாதம் போன்ற விடயங்களில் ஐ.நா. விதிமுறைகள் (UN Conventions) மீறப்படுவதை விசாரிக்கத் தொடங்கியுள்ளது.

அதே வேளை, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நாடுகள் மீதல்லாது தனிப்பட்டவர்கள் சம்பந்தப்படும் குற்றவியல் நடவடிக்கைகளை மட்டுமே விசாரித்து அவர்களைக் கைது செய்வதற்கான பிடியாணைகளை வழங்கும். அந்த வகையில் மியன்மாரின் இராணுவத் தலைவர்கள் குறிவைக்கப்படுவதற்கான சாத்தியங்கள் உண்டு.

ஓங் சான் சு சி விடயத்தில், மியன்மாரின் உயர் அதிகாரிகளில் ஒருவர் என்ற வகையில், றொஹிங்யா மக்கள் மீது ஏவப்பட்ட வன்முறைகள் மனிதத்துக்கு எதிரானவை எனக்கூறி ஆர்ஜென்ரீனாவில் புதன் கிழமை வழக்குத் தொடரப்பட்டுள்ளது. உலகளாவிய அதிகார வரம்பு தத்துவத்தின் கீழ் (principle of universal jurisdiction) லத்தின் அமெரிக்க மனித உரிமைகள் அமைப்புகள் இவ் வழக்கைத் தொடர்ந்துள்ளன.

இவ் வழக்கில் பெரும்பான்மை இனமொன்றினால் சிறுபான்மை இனமொன்றின் இருப்பு அச்சுறுத்தப்படுகின்றது எனவும் அதற்குக் காரணமான மின் ஓங்க் ஹிளெயிங் உட்பட்ட இராணுவத் தலைவர்களும், ஓங் சான் சு சி உட்பட்ட சிவிலியன் தலைவர்களும் நீதியை எதிர்கொள்ள வேண்டுமெனவும் கோரி வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உலகளாவிய அதிகார வரம்பு தத்துவத்தின் கீழ், ஆர்ஜென்ரீன நீதிமன்றங்கள் பல வழக்குகளை ஏற்கெனவே நடத்தியிருக்கின்றன. அவற்றில் ஸ்பெயினில் சர்வாதிகாரி ஃபிரான்சிஸ்கோ ஃபிராங்கோவின் ஆட்சி, சீனாவின் ஃபலுன் கொங் அமைப்பு ஆகியன விசாரிக்கப்பட்டிருந்தன.

Rohingya men kneel as members of Myanmar's security forces stand guard in Inn Din village in September 2017 [Reuters]
செப்டம்பர் 2017 இல் இன் டின் கிராமத்தில் இராணுவத்தினரால் முழங்காலில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் றொஹிங்யா முஸ்லிம்கள் – படம்: ராய்ட்டர்ஸ்
‘இனப்படுகொலை’

2017 இல் மியான்மார் இராணுவத்தினால் றொஹிங்யா முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட வன்முறைகள் ‘இனப்படுகொலை’ என ஐ.நா. விசாரணைக்குழு அடையாளப்படுத்தி ஐ.நா. பாதுகாப்புச் சபை (UN Security Council) இவ் விடயத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு (International Criminal Court (ICC)) விசாரணையொன்றுக்காகப் பரிந்துரைக்கும்படி கேட்டிருந்தது. ஆனால் அதற்குத் தேவையே இல்லாமல் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தானாகவே விசாரணையொன்றை ஆரம்பித்துள்ளது.

இம் மூன்று வழக்குகள் தொடர்பாகவும் மியன்மார் இதுவரை அறிக்கையெதையும் வெளியிடவில்லை. தனது உள்ளக விசாரணைக் குழு, சொல்லப்படும் குற்றங்களை விசாரிக்கும் தகைமையைக் கொண்டிருக்கிறது என மியன்மார் அரசு முன்னர் இக் கோரிக்கையை நிராகரித்திருந்தது.

மியன்மாரின் பெரும்பான்மையினர் 2017 இல் நடைபெற்ற இராணுவ அட்டூழியங்களுக்குப் பெரும்பாலும் ஆதரவு தருவதாலும், முஸ்லிம் சிறுபான்மையினர் மியன்மாரின் குடியுரிமை கொண்டவர்களல்ல என அவர்கள் கருதுவதாலும் இராணுவ, சிவில் தலைமைகள் தொடர்ந்தும் கடும் போக்கையே கைக்கொண்டு வருகின்றனர்.

https://marumoli.com/றொஹிங்யா-இனப்படுகொலை-கு/?fbclid=IwAR0IOSc0Lqgssw8z-2yoBr9DaLtZOXARvcY0Js7SXCrzxRMJgAfat2AEKu0

Link to comment
Share on other sites


ஒரு சமாதானத்திற்காக நோபல் பரிசை வென்றவர் இந்த அம்மையார்.  எவ்வளவுதூரம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன்னராக இவரோ இல்லை இவர் தளபதிகளோ நிறுத்தப்படுவார்கள் என தெரியவில்லை.   

அதேவேளை பல தலைவர்கள் நிறுத்தப்பட்டும் உள்ளார்கள். 


 

Link to comment
Share on other sites

1 hour ago, ampanai said:


ஒரு சமாதானத்திற்காக நோபல் பரிசை வென்றவர் இந்த அம்மையார்.  எவ்வளவுதூரம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன்னராக இவரோ இல்லை இவர் தளபதிகளோ நிறுத்தப்படுவார்கள் என தெரியவில்லை.   

 

இதுதான் பெரும்பாலான இடங்களில் யதார்த்தமாகவுள்ளது.

அடக்குமுறைக்கு எதிராக போராடுவோர் தங்களுக்கு இன்னொரு குழுமத்தை அடக்கும் சந்தர்ப்பம் கிடைத்தால் எந்த அடக்குமுறைக்கு எதிராக போராடினார்களோ அதை விட மோசமாக செய்யத் தயங்குவதில்லை.

ஈழத்தமிழர் விடயத்திலும் பல உதாரணங்கள் உள்ளன. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nunavilan said:

2017 இல் மியான்மார் இராணுவத்தினால் றொஹிங்யா முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட வன்முறைகள் ‘இனப்படுகொலை’ என ஐ.நா. விசாரணைக்குழு அடையாளப்படுத்தி ஐ.நா. பாதுகாப்புச் சபை (UN Security Council) இவ் விடயத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு (International Criminal Court (ICC)) விசாரணையொன்றுக்காகப் பரிந்துரைக்கும்படி கேட்டிருந்தது. ஆனால் அதற்குத் தேவையே இல்லாமல் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தானாகவே விசாரணையொன்றை ஆரம்பித்துள்ளது.

ஆனால் இதை விட மோசமான இனப்படுகொலை நிகழ்த்தப்பட்ட இலங்கையில்.. ஏன் இந்த நடவடிக்கை இல்லை...??!

எல்லாம் எம்மவர்களின்.. மறப்போம்.. மன்னிப்போம்.. செயற்பாடுகளின் விளைவே. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.