Jump to content

யாருக்கு வாக்களித்தீர்கள் எனக்கேட்டு யட்டியாந்தோட்டையில் தமிழர்கள் மீது தாக்குதல்


Recommended Posts

ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வாக்களித்தீர்கள் என கேட்டு யட்டியாந்தோட்டையில் உள்ள தமிழர்கள் மீது இனந்தெரியாத நபர்கள் நேற்றிரவு சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.

02__1_.jpg

கேகாலை, யட்டியாந்தோட்டை கனேபொல தோட்டத்தில் வசிக்கும் சிறுபான்மை மக்களாகிய இந்திய வம்சாவழியை சேர்ந்த மலையக மக்கள் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதோடு அவர்களின் வீடுகளில் இருந்த பொருட்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.

02__2_.jpg

 இதனால் இந்த மக்கள் அச்சத்திற்குள்ளாகியுள்ளதோடு மிகந்த வேதனையும் அடைந்துள்ளனர்.

02__3_.jpg

மதுபோதையினால் இரு குழுக்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினையே இதற்கு காரணம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

02__4_.jpg

தற்போது குறித்தப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

02__5_.jpg

 அப் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், ' நாங்கள் பிரபாகரனுக்கா வாக்களித்தோம்? பௌத்த சிங்களவர் ஒருவருக்கே வாக்களித்தோம். அவர்களுக்கு வாக்களித்து விட்டு அவர்களிடமிருந்து உதையும் வாங்குகின்றோம். எமது நிலை தொடர்பில் யாரும் கண்டுகொள்வதாக இல்லை" என்றார்.

02__9_.jpg

02__8_.jpg

02__7_.jpg

https://www.virakesari.lk/article/69217

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்பனை,

1. எல்லாளனை தோற்கடித்த ருவன் வலி சேயவில் பதவியேற்பு.

2. 24 மணத்தியாளத்தில் தமிழர் மீது முதலாவது தாக்குதல்.

இனி படிப்படியாக உங்கள் ஆசையின் ஒரு பகுதி(தமிழர் மீது நெருக்குவாரம்) நிறைவேறும்.

ஆனால் உங்கள் ஆசையின் மறுபகுதி (தமிழ் மக்கள் எதிர்ப்பு, சர்வதேச அளுத்தம்) மருத்துக்கும் இராது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ampanai said:

ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வாக்களித்தீர்கள் என கேட்டு யட்டியாந்தோட்டையில் உள்ள தமிழர்கள் மீது இனந்தெரியாத நபர்கள் நேற்றிரவு சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.

 தமிழ்ச்சனம் முழுக்க ஒரு சிங்களவனுக்குத்தான் வாக்களிச்சது எண்டு அந்த  இனந்தெரியாத மோட்டுக்கூட்டத்துக்கு தெரியேல்லை. 😎

Link to comment
Share on other sites

நாட்டின் பல்வேறு பகுதிகளில் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.

காலி - தலாபிட்டிய பள்ளிவாசல், இரத்தினபுரி - நிவித்திகல கெட்டனிகேவத்த பள்ளிவாசல் ஆகியவற்றின் மேல் நேற்று தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் வாசித்தேன்.

23 minutes ago, குமாரசாமி said:

தமிழ்ச்சனம் முழுக்க ஒரு சிங்களவனுக்குத்தான் வாக்களிச்சது எண்டு அந்த  இனந்தெரியாத மோட்டுக்கூட்டத்துக்கு தெரியேல்லை. 😎

UNP காரங்களுக்கே அடி விழுது. இதற்குள் தமிழர்கள் எம்மாத்திரம்?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எந்தக் குடும்பத்தின் காடைத்தனம் பொறுக்க முடியாமல்.. அதனை வீட்டுக்கு அனுப்பினீர்களோ.. அதே குடும்பத்தை மீண்டும் ஆட்சியில் அமர்த்தினால்.. இது தான் நிகழும்.

இதற்கு ஆறுமுகம் தொண்டமான் தான் பதில் சொல்லனும். 

Link to comment
Share on other sites

4 hours ago, ampanai said:

அப் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், ' நாங்கள் பிரபாகரனுக்கா வாக்களித்தோம்? பௌத்த சிங்களவர் ஒருவருக்கே வாக்களித்தோம். அவர்களுக்கு வாக்களித்து விட்டு அவர்களிடமிருந்து உதையும் வாங்குகின்றோம். எமது நிலை தொடர்பில் யாரும் கண்டுகொள்வதாக இல்லை" என்றார்.

 

Link to comment
Share on other sites

வன்முறைகளால் பாதிக்கப்பட்டால் ’சிறிகொத்தாவுக்கு அறிவிக்கவும்’

தேர்தலுக்குப் பின்னரான காலப்பகுதிகளில் இடம்பெற்று வரும் வன்முறைகளால் பாதிக்கப்படும் மக்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான, சிறிகொத்தாவுக்கு அறிவிக்குமாறு, கட்சியின் பொதுச் செயலாளரும் கல்வி அமைச்சருமான, அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் அன்னம் சின்னத்துக்கு வாக்களித்த, ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் வன்முறைகளுக்கு இலக்காகி, அசௌகரியங்களுக்கு முகங்கொடுப்பதைத் தடுப்பதற்கான பொறுப்பு கட்சிக்கு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எனவே, அவ்வாறான பிரச்சினைகளை எதிர்நோக்கியிருப்பவர்கள் கட்சியின் தலைமையகத்தின் தொலைபேசி இலக்கமான 0112-2889378, 077-9215299 என்ற இலக்கங்களுக்கு அழைத்து அறிவிக்குமாறும் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/வனமறகளல-பதககபபடடல-சறகததவகக-அறவககவம/175-241198

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, ampanai said:

 


 கேட்க பாக்க ஆக்களில்லை என்று சொல்லும் முதியவரின் ஆதங்கத்தை கேட்க மனம் வலிக்கின்றது.
நாங்கள் பிரபாகரனுக்கு வாக்களிக்கவில்லை. சிங்கள வேட்பாளருக்கே வாக்களித்தோம்.அப்படியிருந்தும் எங்களை தாக்குகின்றார்கள்.
தமிழ் அரசியல்வாதிகளே நாக்கை புடுங்கிட்டு செத்து தொலையுங்கள்.

 

Link to comment
Share on other sites

மலையக தமிழர்கள் மீதான தாக்குதல்களை தடுத்து நிறுத்துமாறு வடிவேல் சுரேஷ் கோரிக்கை

(ஆர்.விதுஷா)

ஜனாதிபதி தேர்தலை தொடர்ந்து மலையகத்தின் சில பகுதிகளில்  தமிழ் சமூகத்தின் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்களை வன்மையாக கண்டிப்பதாக இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த வன்முறைகளை தடுத்து நிறுத்த உடனடி நடவடிக்கை  எடுத்து தமிழ் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் அவர் புதிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடம் வேண்டுகோள்  விடுத்துள்ளார்.  

ஜனாதிபதியாக கோதாபய ராஜபக்ஷ பதவியேற்றதையடுத்து நாடு  பூராவும் வெற்றிக்கொண்டாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.  அதிலும் சிறுபான்மையினர் என்ற ரீதியில் எமது மக்கள் மீதான  தாக்குதல்களை ஏற்றுக்கொள்ள முடியாது. 

தேர்தல் வெற்றியை கொண்டாடுவதென்பது அவரவர் உரிமை.  ஏனைய  இனத்தவருக்கு பங்கம் விளைவிக்கும் வகையில்  செயற்படுதல் காட்டுமிராண்டிதனமான செயலாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

https://www.virakesari.lk/article/69262

Link to comment
Share on other sites

யட்டியந்தோட்டை சம்பவம் ‘தேர்தலுடன் தொடர்புடைய சம்பவம் அல்ல’

யட்டியந்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கனேபல்ல தோட்டத்தில், நேற்று (18) நடைபெற்ற தாக்குதல் சம்பவமானது,  தனிநபர்கள் இருவருக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தால் ஏற்பட்டுள்ளதென்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மதுபோதையில் இருந்த குறித்த இருவரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதாகவும், இது தொடர்பில் பொலிஸ் அவசரப் பிரிவின் 119 என்ற இலக்கத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கமைய, யட்டியந்தோட்டை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனரென, பொலிஸ் ஊடகப் பிரிவு ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்தச் சம்பவத்தை சில சமூக வலைத்தளங்கள் தவறாக திரிபுபடுத்தி வெளியிடுவதாகவும், இது தேர்தலுடன் தொடர்புடைய சம்பவம் இல்லை என்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் அறவுறுத்தியுள்ளது.

http://www.tamilmirror.lk/செய்திகள்/யடடயநதடட-சமபவம-தரதலடன-தடரபடய-சமபவம-அலல/175-241218

Link to comment
Share on other sites

’கனேபல்ல தோட்ட மக்களின் பாதுகாப்பை உறுதிபடுத்துக’

யட்டியாந்தோட்டை - கனேபல்ல தோட்ட மக்களினுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு,தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் அமைச்சருமான பழனி திகாம்பரம், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணித்துள்ளார். 

கனேபல்ல தோட்டத்திலுள்ள மக்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ள அமைச்சர் பழனி திகாம்பரம், இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு, யட்டியாந்தோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு, தொலைப்பேசியூடாக அறிவுறுத்தியுள்ளார்.

மக்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் கைது செய்யப்பட வேண்டும் எனவும் இந்த நாட்டில் மக்கள் ஜனநாயக ரீதியில் சுதந்திரமாக வாழ பொலிஸார் அவர்களது பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அதுமாத்திரமன்றி பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பதற்காக தொழிலாளர் தேசிய சங்கத்தின் கேகாலை மாவட்ட அமைப்பாளர்களை சங்கத்தின் தலைவர் அமைச்சர் பழனி திகாம்பரம் குறித்தத் தோட்டத்துக்கு அனுப்பி வைத்துள்ளார்.

http://www.tamilmirror.lk/மலையகம்/கனபலல-தடட-மககளன-பதகபப-உறதபடததக/76-241222

Link to comment
Share on other sites

யட்டியந்தொட்ட விவகாரம்: சுமூகமாகத் தீர்வு

யட்டியந்தொட்ட  கனேபொல தோட்டத்தில், நேற்று (18) இரவு ஏற்பட்ட இன முறுகல் சம்பவம், யட்டியாந்தோட்டை பொலிஸார்  தலைமையில், சுமூகமாகத் தீர்த்து வைக்கப்பட்டுள்ளது.

நாட்டின் ஜனாதிபதியாக, கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், நேற்று (18) இரவு, வெற்றிக் கொண்டாட்டங்கள் இடம்பெற்றுள்ளன. இதன்போது, அங்குள்ள பெருந்தோட்டத் தொழிலாளர்கள் வாழும் பகுதிக்குள் நுழைந்த பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் சிலர், யாருக்கு வாக்களித்தீர்கள் என்று கேட்டு, வீட்டிலிருந்து தொலைச்காட்சிப் பெட்டி, மின் விசிறி ஆகியவற்றை கீழே போட்டு உடைத்து, அங்கிருந்தவர்களைத் தாக்கியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் அறிந்த யட்டியாந்தோட்டை பொலிஸார், சம்பவ இடத்துக்கு விரைந்த பின்னர், அங்கு ஏற்பட்ட பதற்ற நிலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதுடன், இதற்குக் காரணமான ஒருவரையும் கைது செய்தனர்.

எனினும், குறித்தத் தோட்டத்திலுள்ள மக்கள், மீண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்படலாம் என்று அச்சத்துடன் இருந்த நிலையில், தாக்குதலுக்கு உள்ளான குடும்பத்தாரை, பொலிஸார் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று, இரு தரப்பினருக்கு இடையேயான பிரச்சினையை, சுமூகமாகத் தீத்து வைத்துள்ளனர்.

அத்துடன், பாதிக்கப்பட்ட நபருக்கு, தொலைக்காட்சி, மின்விசி உள்ளிட்ட நட்ட ஈடு பணத்தொகையும் வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

http://www.tamilmirror.lk/மலையகம்/யடடயநதடட-வவகரம-சமகமகத-தரவ/76-241221

Link to comment
Share on other sites

6 hours ago, ampanai said:

யட்டியந்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கனேபல்ல தோட்டத்தில், நேற்று (18) நடைபெற்ற தாக்குதல் சம்பவமானது,  தனிநபர்கள் இருவருக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தால் ஏற்பட்டுள்ளதென்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பொலிஸ் சொல்வதையெல்லாம் நம்ப முடியாது. இப்ப கோத்தா ஜனாதிபதி.

Link to comment
Share on other sites

பிள்ளையானின் கட்சியான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஆதரவாளர்கள் (எழுத்துப்பிழைகளை தவிர்த்து வாசிக்கவும்) 10 ஆம் திகதி மட்டக்களப்பில் தாக்குதல் நடத்தியிருந்தார்களாம்.

Link to comment
Share on other sites

யட்டியன்தொட்டை சம்பவத்திற்கு முடிவு எட்டப்பட்டது 

யட்டியன்தொட்ட கனேபொல தோட்டம்  மேற்பிரிவு லயன் குடியிருப்பினுள் நுழைந்த சிலர் தோட்ட மக்கள் மீது  நேற்று முந்தினம் இரவு (18) தாக்குதல் மேற்கொண்ட சம்பவத்திற்கு முடிவு எட்டப்பட்டுள்ளது

0__1_.jpg

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் இன்று (20) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர் இதே வேலை பாதிக்கபட்டவர்களுக்கும் சம்பவத்துடன் தொடர்பு உடையவர்களுக்கும் இடையில் பொலிஸாரின் தலையீட்டுடன் சமரச பேச்சுகள் நடைபெற்றுள்ளன. இதன் படி சேதமாக்கபட்ட பொருட்களை புதிதாக கொள்வனவு செய்து கொடுப்பதற்கும் இனங்கியுள்ளனர்.

தொடர்ந்து இந்த விடயம் தொடர்பில் சம்பந்தபட்ட அரச அதிகாரிகள் பொலிஸார்  தேர்தல் கண்கானிப்பு பெப்ரல் அமைப்பு மணித உரிமை அமைப்புக்கள் உடனுக்கு உடன் சம்ப இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்க்கொண்டனர்.

தேர்தலுக்காக வாக்கு சேகரிக்க சென்ற எந்த அரசியல்வாதிகளும் இது வரைக்கும் செல்லவில்லை தங்களின் இந்த நிலைமை குறித்து ஆராயவில்லை என பாதிக்கபபட்ட மக்கள்  குற்றம் கூறுகின்றனர்

இருந்தும் தமிழ் மக்களோ முஸ்லிம் மக்களோ இனவாதிகள் அல்ல அவர்கள் வாக்களித்ததும் ஒரு சிங்கள பௌத்த ஜனாதிபதி வேட்பாளருக்கே. அவர்கள் இனவாதிகளாக இருந்திருந்தால் நிச்சயமாக தமிழர்கள் சிவாஜிலிங்கத்திற்கும் முஸ்லிம்கள் ஹிஸ்புல்லாவிற்கும் வாக்களித்திருக்க வேணடும். தேர்தல் தினத்தன்றும் தேர்தல் முடிவடைந்த பின்பும் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.இந்த தாக்குதல் காரணமாக புதிய ஜனாதிபதியின் செயற்பாடுகளுக்கு குந்தகம் ஏற்படலாம் எனவே இதற்கான உரிய நடவடிக்கைகளை அரசாங்கம் உடனடியாக எடுக்க வேண்டும்.

அதே நேரம் தமிழ் முஸ்லிம் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் விசேட பிரதேசங்களுகக்கான அபிவிருத்தி அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன்  அறிக்கை ஒன்றையும் வெளியிட்டு உள்ளமை குறிப்பிடதக்கது. இவரின் சிபார்சுக்கு அமைய இவரின் செலாளர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தேவையான விடயங்களை மேற்க் கொண்டும் உள்ளனர்

தற்போது இந்த சம்பவத்திற்கும் அரசியலுக்கும் தொடர்பு இல்லை எனவும் மது போதையில் இருந்த சிலரே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் கருத்து தெரிவித்துள்ளமை  கவலை அளிக்கின்றது. 

உண்மை நிலையை பாதிக்கபட்ட மக்களிடம் நேரடியாக வினாவினால் தெரியும். எது என்னவானாலும் பரவாயில்லை இந்த பிரச்சனை தொடர்பான செய்திகளும் தீர்ப்பதற்காக எடுத்த முயற்சிகளினால் இதே போன்ற சம்பவங்கள் மேலும் இடம் பெறவில்லை  யாரும் எத்தனிக்கவும் இல்லை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. காரணம் புதிய ஜனாதிபதியன் செயற்பாடுகளாகும்  எனத் தெரிவித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/69331

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • நீங்களே தனியா நிண்டு வெல்ல முடியாது என நினைக்கும் கட்சியின் சின்னத்தை அப்படி எல்லாம் முடக்கி யாரும் மினகெட மாட்டார்கள். இது பல வருடமாக உள்ள இந்திய தேர்தல் விதி. நாதக போனமிறைக்கு முதல் முறை இரெட்டை மெழுகுதிரி, பின் விவசாயி, இப்போ மைக். போதியளவு வாக்கு எடுத்த கட்சிக்குத்தான் நிரந்தர சின்னம். லெட்டர்பேட் கடைக்கு எல்லாம் தற்காலிக சின்னம் என்பது பால வருட நடைமுறை. நடப்பு லோக்சபா எம்பிகள், சட்ட மன்ற உறுப்பினர் உள்ள விடுதலை சிறுத்தை, மதிமுகவுக்கே அவர்கள் சின்னம் இல்லை. ஒரு உள்ளாட்ட்சி சீட்டும் இல்லாத நாதக மட்டும் என்ன ஸ்பெசலா? நாதக 7%. நோட்டா 9% என நினைக்கிறேன்.
    • கையோடை இந்த திரியில் சீமான் பி ஜே பியின்  B team ஆ என கேட் க வேண்டும் போலுள்ளது.
    • ஊழ‌ல் மோச‌டி  கைத்து வ‌ழ‌க்குக்கு ப‌ய‌ந்து தான் வீஜேப்பி கூட‌ ப‌ல‌ர் கூட்ட‌னி வைச்சு இருக்கின‌ம்.............அது மெகா கூட்ட‌னி கிடையாது மான‌ம் கெட்ட‌ கூட்ட‌னிக‌ள் ரீடிவி தின‌க‌ர‌ன் சில‌ வ‌ருட‌ங்க‌ளுக்கு முத‌ல் வீஜேப்பிய‌ ப‌ற்றி பேசின‌தை யாரும் எளிதில் ம‌ற‌ந்து இருக்க‌ மாட்டின‌ம்..............மான‌ஸ்த‌ன் ச‌ர‌த்துகுமார் வீஜேப்பி கூட்ட‌னி வைக்கிற‌ க‌ட்சியுட‌ன் ச‌ம‌த்துவ‌ க‌ட்சி ஒரு போதும் கூட்ட‌னி வைக்காது என்று சொல்லி விட்டு கூட்ட‌னிக்கு போன‌ கோழை   சீமானிட‌ம் இருக்கும் துணிவும் கொண்ட‌ கொள்கையும் த‌மிழ் நாட்டில் வேறு  எந்த‌ அர‌சிய‌ல் வாதிக‌ளிட‌ம் இருக்கு🙏🙏🙏...............இதுவ‌ரை அண்ண‌ன் சீமானை த‌மிழ் நாட்டில் இருக்கும் அனைத்து பெரிய‌ க‌ட்சிக‌ளும் கூட்ட‌னிக்கு கூப்பிட்ட‌தை ஞாப‌க‌ ப‌டுத்த‌னும் சில‌ருக்கு புல‌வ‌ர் அண்ணா................வாழ்வோ சாவோ எப்ப‌வும் த‌னித்து தான் போட்டி............அவ‌ர் முத‌ல‌மைச்ச‌ர் ஆக‌லாம் ஆகாம‌ போக‌லாம் ஆனால் ஒரு த‌மிழ‌ன் க‌ட்சி ஆர‌ம்பிச்சு ஒருத‌ர் கூட‌வும் கூட்ட‌னி வைக்காம‌ அர‌சிய‌ல் செய்தார் என்று வ‌ர‌லாறு சொல்லும்🥰................அந்த‌ க‌ட்சியில் இருக்கும் திற‌மையான‌ ந‌ப‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானுக்கு பிற‌க்கு அதே வ‌ழியில் அதே நேர்மையோடு க‌ட்சியை வ‌ழி ந‌ட‌த்துவுன‌ம் அத‌ற்க்கு இன்னும் நீண்ட‌ வ‌ருட‌ம்  இருக்கு...................................   200ரூபாய் கொத்த‌டிமைக‌ளை விட‌ யாழில் அண்ண‌ன் சீமான் விடைய‌த்தில் குர‌ங்கு சேட்டை செய்ய‌ சில‌ர் இருக்கின‌ம் ஹா ஹா அவைய‌ பார்க்க‌ என‌க்கு பரிதாக‌மாய் இருக்கு😁😜....................
    • பக்கா தமிழன் அண்ணே நீங்க. அண்ணர் தான் ஒரு ஜொள்ளுப் பாட்டியாம். நம்பச் சொல்லுறார்.  தென்னை மர உச்சியை கண்டவருக்கு.. நீண்டு செல்லும் அதிவேக சாலை தெரியவில்லை. யாழில் ஊபர்..?! பிக் மி தானே இருந்திச்சு.  அப்பாடா.. ஒரு மாதிரி ஒரு உண்மையை ஒத்துக் கொண்டார். என்ன கடற்கரை பார்த்தவர்.. தரைக்கரையை பார்க்கவில்லை..?! எல்லா இராணுவ பீடங்களும் வீதி நெடுகிலும் ஏக்கர் கணக்கில் ஆக்கிரமிச்சு நிற்குது.  பீட்சா பிரியரோ..?! கே எவ் சி கண்ணில படல்ல.  கொழும்பில் இல்லாத அளவுக்கா. ஆனால் முந்தி இருந்த ஆனப்பந்தியடி வைத்தியசாலை எல்லாம் காணாமல் போயிட்டே. அண்ணருக்கு அது தெரியல்லை.  ஆரிய குளத்தில்.. பழையபடி.. வெற்றுப் பிளாஸ்டிக் போத்தல் குப்பை மிதக்கிறது.. விட்ட படகுகளை காணம். அண்ணர் அதையும் கவனிக்கேல்ல.  அண்ணரும் சாட்சி.  மது ஆறாக ஓடுவது இங்கு மட்டுமல்ல. ரகளை இல்லை என்பது தான் முக்கியம்.  உண்மை தான். ஆனால் சாப்பாடும் நல்லம் லண்டனை விட.  இதை விட மோசம் தென்னிலங்கை. யாழ் சில இடங்களில் விலை குறைவு. உண்மை தான். சீன அங்காடிகளின் வரவும் அதிகரிச்சிருக்கு. விலையும் குறைவு.. டிசைனும் நல்லது. சொறீலங்காவில் தற்போது.. காசிருந்தால்.. விரும்பிய வாழ்கையை வாழலாம். லண்டனில் காசிருந்தாலும் விரும்பிய வாழ்கையை வாழ்வது கடினம்.  இறுதியா.. வாங்கோண்ணா.. வாங்கோ. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.