Jump to content

ஸ்டெம்செல்' தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பெண் #iamthechange


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

'ஸ்டெம்செல்' தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பெண் #iamthechange

p07vbwnk.jpg
 
'ஸ்டெம் செல்' தானம் குறித்த விழுப்புணர்வு ஏன் முக்கியம்? #iamthechange

(Be the Change என்றார் காந்தி. I am the Change என்கிறார்கள் இவர்கள். ஒன்றுமற்ற ஒரு வெளியிலிருந்து சுயம்புவாக எழுந்து வந்து எல்லோருக்குமான உந்துதலாக மாறி நிற்கும் நம்பிக்கை மனுசிகளின் கதைகளை பிபிசி தமிழ் தொகுத்துள்ளது. அதன் 14வது அத்தியாயம் இது.)

தானத்தில் புதிய தானம், 'ஸ்டெம்செல் தானம்'. இன்றைய சூழலில் இதுவே மிக சிறந்த தானம் என்கிறார் கோவையை சேர்ந்த, இந்தியாவின் உறவின்முறை இல்லாத முதல் பெண் எலும்பு மஜ்ஜை நன்கொடையாளர் (Non-Related, First Female Bone Marrow Donor in India) மாசிலாமணி.

கோவை புறநகர் பகுதியில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் வசித்து வரும் இந்த பெண் 10 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார்.

கடந்த 2012 ஆம் ஆண்டில், அவர் வாழ்ந்து வந்த பகுதியிலேயே வசித்து வந்த கவியரசன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவரும் 8 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார்.

இவர்களுக்கு 6 வயதில் மதிவதனி எனும் பெயர் கொண்ட மகளும், 2 வயதில் நீலவேந்தன் எனும் பெயர் கொண்ட மகனும் உள்ளனர்.

மாசிலாமணி Image captionமாசிலாமணி

மதிவதனி பிறந்த ஆறு மாதத்தில் அவளுக்கு தலசீமியா என்கிற ஹீமோகுளோபின் குறைபாடு நோய் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

Presentational grey line

iamthechange தொடரின் முந்தைய கட்டுரைகளைப் படிக்க:

“எம்மதமும் சம்மதமில்லை” - சாதி,மதமற்றவர் என சான்றிதழ் பெற்றவர் கூறுவது என்ன?

Presentational grey line

இதனால் அன்று முதல் குறைந்தது மாதந்தோறும் ஒருமுறை ரத்தமாற்றம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

'ஸ்டெம்செல்' தானம்

சென்னை சேர்ந்த மருத்துவரான ரேவதிராஜ் அறிவுறுத்தல்படி, 'ஸ்டெம்செல்' சிகிச்சை எடுக்கும் முயற்சியை முன்னெடுத்தனர்.

இதற்காக மேற்கொள்ளப்பட்ட சோதனையில், மகள் மதிவதனிக்கு தாய், தந்தை, தம்பி என உறவினர்கள் எவருடைய குருத்தணு பொருந்தவில்லை.

அதனால் கொடையாளர்களிடம் இருந்து பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதற்காக பதிவு செய்ய சென்ற மாசிலாமணி மற்றும் அவரது கணவர் கவியரசன் என இருவரும் தங்களையும் கொடையாளர்களாக பதிவு செய்து கொண்டனர்.

இது நடைபெற்று 3 ஆண்டுகளுக்கு பிறகு, மாசிலாமணியிடமிருந்து 3 வயது குழந்தைக்கு எலும்பு மஜ்ஜை நன்கொடை தேவைப்படுகிறது என்கிற தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது குழந்தைக்கு இத்தனை ஆண்டுகளாக நன்கொடை கிடைக்கவில்லையே என்று காத்திருந்த அவர், குடும்பம் மற்றும் சுற்றம் காட்டிய எதிர்ப்புகளையும் மீறி கணவரின் ஒத்துழைப்போடு எலும்பு மஜ்ஜை நன்கொடை செய்துள்ளார்.

'ஸ்டெம்செல்' தானம்

இந்தியாவில் முதல் முறையாக எலும்பு மஜ்ஜை நன்கொடை செய்த பெண் என்கிற பெருமை எனக்கு கிடைத்திருப்பதை காட்டிலும், தன்னால் ஒரு குழந்தையின் உயிரை காக்க முடிந்ததையே தான் பெருமையாக கருதுவதாக கூறுகிறார் மாசிலாமணி.

உலகத்தில் பல கோடி கணக்கானவர்கள், தன்னை போன்ற கொடையாளர்களுக்காக காத்திருப்பதாக கூறும் இவர், இதற்காகவே தான் சந்திக்கும் ஒவ்வொருவரிடமும் 'ஸ்டெம்செல்' தானம் குறித்தான முக்கியத்துவம் தொடர்பாக தொடர்ந்து பிரசாரம் செய்கிறேன் என்கிறார்.

https://www.bbc.com/tamil/india-50465481

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.