Jump to content

200 கோடி பரிமாற்றம்… சஜித்தை தோற்கடித்தது இவர்களா?: முக்கிய பிரமுகர் வெளியிட்ட ‘பகீர்’ தகவல்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
ranil-sumantheran-696x387.jpg
 
 

ஐனாதிபதித் தேர்தலில் புதிய ஐனநாயக முன்னணியின் ஐனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவை ஆதரிப்பிதாக தமிழரசுக் கட்சியினர் அவசர அவசரமாக எடுத்த நிலைப்பாட்டிற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் நரித் தந்திரமே காரணமென்று குறிப்பிட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், ரணிலிற்கு பிரதமர் பதவி இல்லை என்றவுடன் கட்சிப் பதவியையாவது காப்பாற்றுவதற்காக ரணிலும் சுமந்திரனும் மேற்கொண்ட சதியினாலேயே சஜித் பிரேமதாச தோற்கடிக்கப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று (18) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய போதே இதனை தெரிவித்தார்.

“தமிழ் அரசுக்கட்சியினர் இவ்வளவு தூரம் குத்திடியடிச்சும் 13 இலட்சம் வாக்குகளால் கோட்டாபய வெற்றி பெற்றுள்ளார்.  நீங்கள் செய்த வேலை இராஜதந்திரமா என்று கேட்கிறேன். ஒருவிடயத்தில் பிளான்1 என்றும் பிளான் 2 என்றும் இருக்க வேண்டும். இவர்களிடம் அப்படி ஏதும் இருந்ததா. ஓன்றுல் எதிர்பார்க்க முடியாது. நீங்கள் சஜித்தை ஆதரிப்பது என்பது ஒரு பிளான் என்றால், சஜித் வெற்றி பெறாவிட்டால் அடுத்த பிளான் என்ன என்று ஏதும் வைத்திருந்தீர்களா?.

என்னைப் பொறுத்தவரையில் அநியாயம் செய்பவர் இரண்டு பேரும் என்று சொன்னேன. ஆக யார் வந்தாலும் எங்களுக்கு பிரச்சனையில்லை. எதற்கும் நாங்கள் ரெடி. இதில் மக்களை நாங்கள் தோல்வியடைந்தவர்களாக வீழ்ச்சியடைந்தவர்களாக இனிமேல் ஒன்றும் நடக்காது என்று விடமால், விழ விழ எழவோம் என்பதற்கமைய அழைத்துச் செல்ல வேண்டும்.

ஆக வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது தமிழ் மக்களாக இருக்க வேண்டுமென்ற அடிப்படையில் நாங்கள் எங்கள் மக்களுக்கு எங்களை நாங்களே ஆளக் கூடிய தீர்வை எடுத்துக் கொடுப்பதற்கு, அதாவது அத்தனை பேரும் கட்சி பேதங்களைக் கடந்து தமிழன் என்ற உணர்வோடு வீறு நடைபோட வேண்டும்.

தேர்தல் பரப்புரை ஆரம்பத்தில் சிங்கள பௌத்த இனவெறிக் கூச்சல் உச்சக் கட்டத்தில் இருக்கும் போது கூட்டமைப்பு உத்தியோகபூர்வமாக ஆதரவைக் கொடுத்தால் ஆதரவு கொடுக்கும் தரப்பிற்கு அது தென்னிலங்கையில் பாரிய வாக்கு வங்கி வீழ்ச்சியடைச் செய்யும் என்று பலர் நம்பினார்கள். அதிலே உண்மையும் இல்லாமல் இல்லை. அது தான் களநிலவரம். அது தான் உண்மை.

அவ்வாறான நிலைப்பாட்டில் இருந்த கூட்டமைப்பினர் குறிப்பாக தமிழரசுக்கட்சியினர் இங்கே நடைபெற்ற கிராம மட்ட கருத்தரங்குகளிலே நாங்கள் பகிரங்கமாகச் சொல்ல முடியாது என்றும் நீங்கள் கீழ் மட்டத்தில் வேலை செய்யுங்கள் என்றும் மக்களிடம் சொன்னவர்கள் திடீரென்று வவுனியாவிலே தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் கூட்டப்பட்டு அதுவும் கூட்டமைப்பின் மூன்று கட்சிகளைக் கூட அழைத்து பேசாமல் தாமாக அவசரமாக அறிவித்ததன் பின்னனி என்ன?.

ஆனால் நிலைமைகள் இவ்வாறிருக்கையில் சஜித் பிரேமதாச விட்ட தவறு என்னவென்றால், நான் ஒரு புதிய பிரதமரை நியமிப்பேன் என்று கூறியது தான். அதனோடு ரணில் விக்கிரமசிங்க அலேட் ஆகிவிட்டார். அவர் அரசியலில் ஒரு நரி. நரித்தந்திரம் கொண்டவர். ஆக அந்த ஐயா சொல்லி, எங்கட ஐயா சேர்ந்து தான் இதனைச் செய்திருக்கிறார்கள்.

இதற்கு பணப்பட்டுவாடா நடந்ததாக சொல்லப்படுகிறது. 200 கோடி செலவுக்கு என்று கொடுத்தாகவும் கூறப்படுகிறது. அதை செலவழித்தீர்களோ வைத்திருக்கிறீர்களோ தெரியாது. நாங்கள் அதைப்பற்றி கணக்கும் கேட்கவில்லை. மிச்சத்தையும் கேட்கவில்லை. நீங்களே அதை வைத்துக் கொள்ளுங்கள்.

ஆனால் நீங்கள் இப்பொழுது இந்த நிலைக்கு கொண்டு வந்த விட்டிருக்கின்றீர்கள் என்றால், கோத்தா மகிந்த ரணிலொடு சேர்ந்த தீர்வைக் கொண்டு வாருங்கள். நாங்கள் சந்தேசப்படுகிறோம். அது உங்கள் இராஜதந்திரம் என்றால் நாங்கள் ஆதரிக்கிறோம். இல்லை என்று சொன்னால் அவர் கட்சியில் பதவியில் இருப்பதற்காக ஆதரவு என்று நீங்கள் சும்மா கேமை கொடுத்தீர்களா?.

ஆக நீங்கள் சேர்வதோ இல்லையோ என்பது பிரச்சனை அல்ல. அதாவது பெறுபேறுகள் மக்களுக்கு தெரிய வேண்டும். திரைமறைவில் நீங்கள் எதையும் கதையுங்கோ. என்னத்தையும் செய்யுங்கோ. எங்களுக்கு அதைப்பற்றி தேவையில்லை. நாங்கள் அதைப்பறி கதைக்க வரவில்லை. ஆனால் வெளிப்படையாக சொல்லுங்கள் செயற்படுங்கள். அவ்வாறு இல்லாவிட்டால் நீங்கள் திருந்த வேண்டும். அவ்வாறு திருந்தாவிட்டால் வருந்த வேண்டி வரும் என்றார்.

http://www.pagetamil.com/88297/?fbclid=IwAR08oNzDstx1K7CGvrSI5DATt3LCnfBVRM4Nqmcmz7UsqMYd_wCUDAjXLcs

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில விடயங்கள் உண்மை தானோ?
இந்தாள காமடியனா பாக்கிறதால நம்பவும் முடியல!

Link to comment
Share on other sites

3 hours ago, பெருமாள் said:

ஐனாதிபதித் தேர்தலில் புதிய ஐனநாயக முன்னணியின் ஐனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவை ஆதரிப்பிதாக தமிழரசுக் கட்சியினர் அவசர அவசரமாக எடுத்த நிலைப்பாட்டிற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் நரித் தந்திரமே காரணமென்று குறிப்பிட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் இவ்வருட இறுதியில் வருகிறது என முன்பே தெரியும். பொது வேட்பாளரை நிறுத்துவதா இல்லையா என்பதை முன்கூட்டியே கலந்தாலோசித்து இருக்க வேண்டும்.

அப்படி செய்யாமல் தமிழ் மக்கள் பேரவை, இறுதி நேரத்தில் தமிழர்கள் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பான கதையை ஆரம்பித்த போது தெற்கில் தமிழர்களுக்கு எதிரான பிரச்சாரம் ஆரம்பித்து விட்டது. 

இதில் 5 கட்சிகள், மாணவர்கள் வெளிப்படையாக கூடியது மட்டுமில்லாமல் 13 அம்ச கோரிக்கையை உருவாக்கும் போது அக்கோரிக்கையை காட்டியே நாடு பிரியப்போகுது என்ற பிரச்சாரம் தெற்கில் ஆரம்பிக்கப்பட்டு விட்டது.

பின் விக்னேஸ்வரன் சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ், ஆங்கிலத்தில் ஐக்கியம் என்றும் சிங்களத்தில் உள்ள சொல் ஒற்றையாட்சியை குறிப்பது போல் உள்ளது என கூற விக்னேஸ்வரன் இவ்வாறு கூறினார் என சொல்லி சஜித் நாட்டை பிரிக்க துணைபோகிறார் என தெற்கில் பிரச்சாரம் நடந்தது.

13 கோரிக்கைகளை ஏற்காவிட்டால் தாம் யாரையும் ஆதரிக்க மாட்டோம் என கூறியவர்கள், பின் யார் வரக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு சஜித்தை ஆதரிப்பதாக கூறிய போது, சஜித் தமிழர்களின் 13 கோரிக்கைகளையும் ஏற்று விட்டார், அதனால் தான் கூட்டமைப்பு அவரை ஆதரித்தது என பிரச்சாரம் செய்தார்கள்.

ராஜபக்சக்களை தோற்கடிப்பது பற்றி சுமந்திரன் கூறிய கருத்தை திரிவுபடுத்தி சிங்களவர்களை தோற்கடிப்பது பற்றி அவர் கூறியதாகவும் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது.

என்னைப்பொறுத்தவரை கூட்டமைப்பு சஜித்தை ஆதரிக்குமாறு கோர முன்னரே தெற்கில் இனவாதப்பிரச்சாரத்தின் மூலம் ஆட்களை திரட்டி விட்டார்கள்.

பொதுவேட்பாளர் பற்றிய பேச்சை ஆரம்பித்தவர்கள், 13 கோரிக்கைகளை உருவாக்கியவர்கள் கோத்தபாயவை வெல்ல வைப்பதற்காகவே அதை ஆரம்பித்தார்கள் என்பது எனது எண்ணம். அது பற்றி முன்பே எழுதியிருந்தேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேண்டாதவர்களை கழுத்தறுப்பதில் இரண்டு வகை உண்டு  ஒன்று எதிராளி ஆகி சண்டையிடுவது இரண்டு கூடவே சேர்ந்து இருந்து படுகுழியில் விழுத்துவது  கூத்தமைப்பு செய்தது இரண்டாவது கோத்தா கும்பலின் தேர்தல் வியுகம் இம்முறை மாறுபட்டது சிறுபான்மை இனம்களிடம் தங்கியிருத்தல் கூடாது எனும் முடிவு அதற்கமைய பெட்டியை குடுத்து சஜித் பக்கம் கூத்தமைப்பை போகசெயதனர் அப்படியும் ஒருவேளை வெல்லும் நிலைமை வந்தால் வாக்குகளை பிரிக்க சிவாஜியை நிக்க வைத்தது கோத்தா கும்பல் இவ்வளவு மாஸ்ட்டர் பிளானும் கோத்தா கும்பலின் திட்டம் என் கருத்து பொய் என்றால் சும் சம் கோத்தா அரசில் எந்த பதவியோ அல்லது சலுகைகளோ பெறக்கூடாது ஆனால்  இருந்து பாருங்கள் இலகுவாக சலுகைகள் வேண்டி நிற்பார்கள் .

Link to comment
Share on other sites

5 hours ago, பெருமாள் said:

இதற்கு பணப்பட்டுவாடா நடந்ததாக சொல்லப்படுகிறது. 200 கோடி செலவுக்கு என்று கொடுத்தாகவும் கூறப்படுகிறது. அதை செலவழித்தீர்களோ வைத்திருக்கிறீர்களோ தெரியாது. நாங்கள் அதைப்பற்றி கணக்கும் கேட்கவில்லை. மிச்சத்தையும் கேட்கவில்லை. நீங்களே அதை வைத்துக் கொள்ளுங்கள்.

5 கூட்டம் கூட போடவில்லை! மிச்சம் 195 கோடி என்னாச்சு?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.