Jump to content

பொதுபல சேனா கலையும்


Recommended Posts

பொதுத் தேர்தல் நடந்து முடிந்ததும், பொதுபல சேனா அமைப்பு கலைக்கப்படுமென, அவ்வமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

ராஜகிரிய பிரதேசத்தில் இன்று (19) நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்துரையாற்றிய தேரர், சிறுபான்மையினரின் வாக்குகளின்றி, இந்த நாட்டில் அரசாங்கமொன்றை உருவாக்க முடியாதென்ற கருத்து நிலவியிருந்ததாகவும் ஆனால் இம்முறை ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள், அந்தக் கருத்தைத் தவிடுபொடியாக்கி உள்ளதாகவும் கூறினார்.

எவ்வாறாயினும், இந்த நாட்டுக்கு இப்போது, சிறந்த தலைமைத்துவமொன்று கிடைக்கப்பெற்று உள்ளதாகக் கூறிய ஞானசார தேரர், பொதுத் தேர்தலின் பின்னர், நல்லதோர் அமைச்சரவையுடன், நல்ல பயணமொன்றை மேற்கொள்ள முடியுமென்றும் இந்த நாட்டைக் கட்டியெழுப்ப, இப்போது நல்ல தலைவரொருவர் கிடைத்திருக்கிறார் என்றும் கூறினார்.

அதனால், பொதுபல சேனா என்ற அமைப்பின் தேவை, இனி தேவைப்படாது எனும் பட்சத்தில், பொதுத் தேர்தலைத் தொடர்ந்து, தமது அமைப்பைக் கலைத்துவிடத் தீர்மானித்துள்ளதாக, அவர் மேலும் கூறினார்.

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/பதபல-சன-கலயம/150-241190

Link to comment
Share on other sites

தனிச்சிங்கள தலைவர் கிடைத்திருப்பதால் பொதுபலசேனா அமைப்பை கலைத்துவிடுவோம் - ஞானசார

(செ.தேன்மொழி)

ஜனாதிபதி தேர்தலின் மூலம் நாட்டுக்கு தனிச்சிங்கள தலைவரொருவர் கிடைத்திருக்கிறார்.இதுவரை காலமும் தந்தையின்றி வாழ்ந்த பிள்ளைகள் போல் இருந்த சிங்கள இனத்தவர்களுக்கு ஒரு சிறந்த ஆண்மகன் தந்தையாக கிடைத்துள்ளார் என்று பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

 

ganasara_thero.jpg

 அத்தோடு கோத்தாபய ராஜபக்ஷ ஆட்சியை பொறுப்பேற்றுள்ளதால் தமது அமைப்பிற்கான தேவை இனிமேல் இல்லை என்றும் இதனால் பொதுத் தேர்தலின் பின்னர் பொதுபலசேனா அமைப்பை கலைப்பதாகவும் அறிவித்துள்ளார்.

இராஜகிரியவில் அமைந்துள்ள பொதுபலசேனாவின் காரியாலயத்தில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

சிங்களதீவின் ஏழாவது நிறைவேற்று ஜனாதிபதியோக பதவியேற்றுள்ள ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிற்கு நாங்கள் வாழ்த்து தெரிவிப்பதுடன், நாங்கள் இவ்வளவு காலமும் எதிர்பார்த்த சிறந்த தலைவர் எமக்கு தற்போது கிடைத்துள்ளார் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.நாட்டின் அரசியல் தலைவர்கள் அனைவரும் சிறுபான்மையினரின் ஆதரவின்றி ஜனாதிபதி ஒருவரை உருவாக்க முடியாது என்று எண்ணியிருந்தனர். ஆனால் நாங்கள் கடந்த 2014 ஆம் ஆண்டே தனிச்சிங்கள தலைவரொருவரை உருவாக்க முடியும் என்று தெரிவித்தோம். அது இன்று நிறைவேற்றப் பட்டுள்ளது. 

அரசியல் வாதிகள் சிறுபான்மையினரின் ஆதரவினை பெற்றுக் கொள்வதற்காக நாங்கள் அவர்களுடன் அரசியல் மேடைகளில் ஏறுவதை அவர்கள் விரும்பவில்லை. ஆனால் நாங்கள் மேடைகளில் ஏறாவிட்டாலும் சிங்கள தலைவரொருவரை உருவாக்க வேண்டும் என்பதற்காக  விகாரைகள் தோறும் எமது பிரசார செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தோம். அதற்கான பலன் எங்களுக்கு தற்போது கிடைத்துள்ளது. தேரர்கள் இணைந்தால் எதனையும் சாதிக்க முடியும் என்பதை தற்போது நிரூபித்துள்ளோம்.

வெற்றி ஆரவாரத்தில் இனங்களுக்கிடையில் பேதங்களை ஏற்படுத்தும் வகையில் செயற்படாமல் ஒருமித்த நாட்டை கட்டியெழுப்புவதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். தோல்வியடைந்துள்ள தரப்பினர் நாட்டில் பேதங்களை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்வார்கள்.  நாம் அவர்களின் வலையில் சிக்காமல் நாட்டை முன்னேற்றுவதற்கான செயற்பாடுகளையே மேற்கொள்ள வேண்டும்.

பிக்குகள் என்ற வகையில் எமது இனத்திற்கும் , நாட்டின் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல்கள் ஏற்பட்டிருந்தமையினால் அதிலிருந்து எம்மை பாதுகாத்துக் கொள்வதற்காக நாங்கள் எங்களுக்கென்று சங்கங்களை அமைத்துக் கொண்டு இதுவரையும் செயற்பட்டோம். ஆனால் தற்போது சிறந்த ஜனாதிபதி ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

எமது புதிய ஜனாதிபதி அவரது பதவியை பொறுப்பேற்றதை அடுத்து கருத்து தெரிவித்தபோது , பௌத்த சாசனத்தை பாதுகாப்பதாகவும், மாநாயக்க தேரர்களின் ஆசிர்வாத்தினாலேயே தாம் வெற்றிப் பெற்றதாகவும் தெரிவித்திருந்தார். இதுவே எமக்கு கிடைத்த பெரும் வெற்றி.இவ்வாறான தலைவர் ஒருவர் எமக்கு கிடைத்துள்ள நிலையில் நாங்கள் இனியும் சங்கங்களை அமைத்துக் கொண்டு செயற்பட வேண்டிய அவசியமில்லை. எமது புதிய தலைவர் நாட்டை பாதுகாப்பார் என்பதில் எமக்கு நம்பிக்கை உண்டு. அதனால் எதிர்வரும் பொது தேர்தலின் பின்னர் நாங்கள் பொதுபலசேனா அமைப்பை கலைப்பதற்கு தீர்மானித்துள்ளோம்.

இனிவரும் காலங்களில் தேரர்களாகிய நாங்கள் இனங்களுக்கிடையில் ஒற்றுமையை ஏற்படுத்துவதற்காக செயற்பட வேண்டும். அதேவேளைசிறந்த ஆட்சியாளன் நாட்டுக்கு கிடைத்துள்ளதை போன்று பாராளுமன்றத்திலும் மாற்றத்தினை ஏற்படுத்த வேண்டும். விரைவில் பொது தேர்தலை நடத்தி சிறந்த பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்து நாட்டை ஒரு குடையின் கீழ் ஆட்சிசெய்வதற்கான நிலைமைகளை ஏற்படுத்த வேண்டும்.

இனப் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடி தீர்வு காணுவதற்காக சுயாதீன ஆணைக்குழு உருவாக்கப்பட வேண்டும். இதன்போது இந்த பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடி சிறந்த தீர்வினை பெற்று நாட்டுக்குள் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.அதேவேளை ஆகம விவகாரங்கள் தொடர்பில் ஒரு அமைச்சு ஸ்தாபிக்கப்பட்டு அதன் மூலம் நாட்டிலுள்ள அனைத்து மதங்களுக்குமான நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அப்போது தனித்தனி மதம் என்ற பிரிவினை ஏற்படாது என்றார்.

https://www.virakesari.lk/article/69269

Link to comment
Share on other sites

அது சரி இனி புது ஜனாதிபதி நீங்க செய்த வேலையெல்லாம் செய்வார் என்கிறீங்க.

கலைக்கிறதுக்கு ஏன் பொதுத்தேர்தல் வரைல வெயிட்டிங்?
இப்பவே கலைக்க வேண்டியது தானே!

அதுல 2/3 பெரும்பாண்மை கிடைக்காது என்று தெரியும் போல.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஞானசார தேரரை பினாமி ஆக்கி இயக்கிய ரவுடியே... கொலைஞனே.. சனாதிபதி ஆன பின்.. பினாமிக்கு என்ன தேவை இருக்குது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆக சிங்கள கிறிஸ்தவர்கள்,தமிழர்கள்   மட்டுமே சஜித்துக்கு வாக்குப் போட்டிருக்கிறார்கள். என்னதான் சொல்லுங்கோ, தமிழரை கொள்ளை அடித்து கொலை செய்து பெற்ற பணமே இது நிறைவேற சாத்தியமாயிற்று. தேர்தலை குறிவைத்து அப்பாவி மக்களை தேவாலயத்தில் துடி துடிக்க கொன்கிறீர்களே, அந்த தேவனே உங்களை பாத்துக்கொள்ளட்டும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.