Jump to content

சரித் அசலங்கவின் சதம் வீண்: ஆப்கானிடம் வீழ்ந்தது இலங்கை


Recommended Posts

சரித் அசலங்கவின் சதம் வீண்: ஆப்கானிடம் வீழ்ந்தது இலங்கை

charith-aslanka-696x445.jpg
ACC
dimo.gif

பங்களாதேஷில் நடைபெற்றுவரும் வளர்ந்துவரும் ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணிக்கு எதிராக இன்று (18) நடைபெற்ற 3ஆவது லீக் ஆட்டத்தில் சகலதுறையிலும் பிரகாசித்த ஆப்கானிஸ்தான் அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்று அரையிறுதிக்குத் தகுதி பெற்றது.

இதன்மூலம், இம்முறை வளர்ந்துவரும் ஆசிய கிண்ண ஒருநாள் தொடரில் அடுத்தடுத்து மூன்று தோல்விகளை சந்தித்த நடப்புச் சம்பியனான இலங்கை வளர்ந்துவரும் அணி அரையிறுதிக்குச் செல்லும் வாய்ப்பை இழந்தது.

 

இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் உள்ளிட்ட 8 நாடுகள் பங்கேற்கும் இம்முறை போட்டித் தொடர் தற்போது பங்களாதேஷில் நடைபெற்று வருகின்றது.

இதில் குழுவில் இடம்பெற்றுள்ள இலங்கை வளர்ந்துவரும் அணி, முதல் லீக் ஆட்டத்தில் ஓமானிடம் 4 விக்கெட் வித்தியாசத்திலும், இரண்டாவது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் 94 ஓட்டங்கள் வித்தியாசத்திலும் தோல்வியைத் தழுவியது.

இந்த நிலையில், இன்று (18) கொக்ஸ் பசாரில் நடைபெற்ற தீர்மானமிக்க மூன்றாவது லீக் ஆட்டத்தில் இலங்கை அணி ஆப்கானிஸ்தானை எதிர்கொண்டது.

இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் வளர்ந்துவரும் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

பெதும் நிஸ்ஸங்க, மினோத் பானுக்க ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். பெதும் நிஸ்ஸங்க முதல் பந்திலேயே டக்அவுட் ஆனார்.

அடுத்து வந்த ஹசித போயகொட 8 ஓட்டங்களுடன் வெளியேற, முதலிரண்டு போட்டிகளில் பிரகாசிக்கத் தவறிய மினோத் பானுக்க 42 ஓட்டங்களை எடுத்த நிலையில் வெளியேறினார்.

 

4ஆவது விக்கெட்டுக்கு அணித் தலைவர் சரித் அசலங்க, கமிந்து மெண்டிஸ் ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

கமிந்து மெண்டிஸ் 71 பந்தில் 63 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார். இலங்கை அணிக்காக அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அணித் தலைவர் சரித் அசலங்க 106 பந்துகளில் 100 ஓட்டங்களை விளாசி ஆட்டமிழந்தார்

எனினும், தொடர்ந்து வந்த பின்வரிசை வீரர்களும் அடுத்தடுத்து விக்கெட்டுக்களை பறிகொடுக்க 49.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து இலங்கை அணி 238 ஓட்டங்களை எடுத்தது

பாகிஸ்தான் வளர்ந்துவரும் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் 5 ஓட்டங்களுக்கு 7 7 விக்கெட்டுக்களை பறிகொடுத்த இலங்கை அணி, இந்தப் போட்டியில் 36 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்தது.

பந்துவீச்சில் அஸ்மதுல்லாஹ் ஒமர்சாய் மற்றும் அப்துல் வாஸி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், யூசுப் ஷசாய் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தனர்.

பின்னர் 239 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணிக்கு அப்துல் மலிக் மற்றும் சஹிதுல்லாஹ் ஜோடி நல்லதொரு ஆரம்பத்தைப் பெற்றுக் கொடுத்தனர்

இருவரும் முதல் விக்கெட்டுக்காக 99 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்றிருந்த போது அப்துல் மலிக் 47 ஓட்டங்களை எடுத்து ரன்அவுட் முறையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பஹீர் ஷா 10 ஓட்டங்களை எடுத்து வெளியேறினார்.

அதன்பின்னர் சஹிதுல்லாஹ்வுடன் ஜோடி சேர்ந்த டர்விஷ் ரசூலி மூன்றாவது விக்கெட்டுக்காக 119 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து ஆப்கானிஸ்தான் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் துடுப்பெடுத்தாடிய சஹிதுல்லாஹ் 102 ஓட்டங்களையும், டர்விஷ் ரசூலி 61 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்

இறுதியில் ஆப்கானிஸ்தான் வளர்ந்துவரும் அணி 44.5 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட் இழப்புக்கு 242 ஓட்டங்களை பெற்று இலகுவான வெற்றியை பெற்றுக்கொண்டதுடன், அரையிறுதியில் விளையாடும் வாய்ப்பை பெற்றது.

இலங்கை அணியின் பந்துவீச்சில் கலன பெரேரா, சரித் அசலங்க ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் கைப்பற்றியிருந்தனர்

http://www.thepapare.com/acc-emerging-teams-asia-cup-2019-sri-lanka-vs-afghanistan-match-report-scorecard-tamil/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.