Jump to content

இலங்கை ஜனாதிபதியான கோட்டாபய: இந்தியா- இலங்கை உறவு இனி எப்படி இருக்கும்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை ஜனாதிபதியான கோட்டாபய: இந்தியா- இலங்கை உறவு இனி எப்படி இருக்கும்?

கோட்டாபய ராஜபக்ஷ Image captionகோட்டாபய ராஜபக்ஷ

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தேர்வுசெய்யப்பட்டிருக்கும் நிலையில், இலங்கையில் சிறுபான்மையினரின் எதிர்காலம், வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல், இந்தியா - இலங்கை உறவு ஆகியவை குறித்து ஃப்ரண்ட்லைன் இதழின் அசோசியேட் எடிட்டரும் மூத்த பத்திரிகையாளருமான ஆர்.கே. ராதாகிருஷ்ணிடம் பேசினார் பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதன். பேட்டியிலிருந்து:

கேள்வி: நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றிபெற்றிருக்கிறார். இந்தத் தேர்தல் முடிவுகள் சொல்வதென்ன?

தில்: கடந்த ஏப்ரலில் அங்கு குண்டுவெடிப்புகள் நடந்தபோதே, அங்கு யார் ஜெயிக்கப்போகிறார்கள் என்பது தீர்மானமாகிவிட்டது. மஹிந்த ராஜபக்ஷவைப் பொறுத்தவரை, கடந்த 2009ல் புலிகளை வெற்றிகொண்டதிலிருந்து, தேசப் பாதுகாப்பு என்ற விஷயம் என்பதில் அவரைத் தவிர வேறு யாராலும் உரிமை கொண்டாட முடியாத விஷயமாகவே இருந்தது.

ஏப்ரல் 21ஆம் தேதி ஈஸ்டர் குண்டுவெடிப்புகள் நடந்தன. 27ஆம் தேதியே கோட்டாபய தான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்துவிட்டார். அப்போது அவருடைய கட்சியான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனகூட இதை முடிவுசெய்யவில்லை. மே மாதம் நான் மஹிந்தவைச் சந்தித்தபோதுகூட அவர் இதனை உறுதிப்படுத்தவில்லை.

ஆனால், கோட்டாபய ஏப்ரலிலேயே பணிகளைத் துவங்கிவிட்டார். கோட்டாபய பாதுகாப்புத் துறை செயலராக இருந்தவர். போரை வழிநடத்தியவர். ஆகவே ஏப்ரல் 21க்குப் பிறகு இந்த விஷயம்தான் மக்களின் மனதில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதைக் காண முடிகிறது. அதே நேரத்தில் பொருளாதாரப் பிரச்சனைகளும் பெருகிவந்தன. அதனால், தற்போதைய அரசைச் சேர்ந்த யாரும் வெல்ல முடியாத சூழலும் உருவானது.

35 ஜனாதிபதி வேட்பாளர்களில் பிரதான வேட்பாளர்கள் இருவர். ஒருவர் கோட்டாபய. மற்றொருவர் சஜித் பிரேமதாஸ. ரணசிங்க பிரேமதாஸவின் மகனான சஜித், தற்போதைய அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர். ஆனால், பொருளாதார ரீதியில் சாதித்தவர் அல்ல. கோட்டாபயவைப் பொறுத்தவரை, அவர் போரை முடிவுக்குக் கொண்டுவந்தவர் என்ற பெயர் இருக்கிறது.

தங்கள் பகுதியைச் சேர்ந்தவர் என்பதால் சிங்களர்கள் எல்லாம் திரண்டுவந்து கோட்டாபயவுக்கு வாக்களித்துவிட்டார்கள் என்றும் சொல்ல முடியாது. காரணம் இருவருமே இலங்கையின் தென்பகுதியைச் சேர்ந்தவர்கள். சிங்களர்களைப் பொறுத்தவரை, தங்களுக்குத் தேவைப்படும் பாதுகாப்பை அளிக்கக்கூடியவர் கோட்டாபயதான் என முடிவுசெய்தார்கள்.

வெற்றியை கொண்டாடும் மக்கள்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

கே. ஈஸ்டர் தாக்குதலின் காரணமாக, பாதுகாப்பு குறித்த அச்சத்தில் சிங்களர்கள் கோட்டாபயவுக்கு வாக்களித்தார்கள் என்றால், சிறுபான்மையினருக்கு அந்த அச்ச உணர்வு ஏன் ஏற்படவில்லை அல்லது அவர்கள் ஏன் அதனை முதன்மையாக நினைக்கவில்லை?

ப. தமிழ் பகுதிகளில் புலிகள் இருந்தபோது, அவர்கள் தமிழர்களுக்குப் பாதுகாப்பாக இருந்தார்கள். 2009க்கு முன்பாக புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் இருந்து ஒருவர் அழைத்துச் செல்லப்படுவது, விசாரணைக்காக சிறையில் வைக்கப்படுவது என்பது கிடையாது. அதன் நீட்சியாகத்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பை மக்கள் பார்க்கிறார்கள். கூட்டமைப்பைப் பொறுத்தவரை, நாம் யாரை விரும்புகிறோம் என்பதைவிட, யார் வேண்டாம் என்பதில்தான் முடிவெடுக்க முடிகிறது. அந்த அடிப்படையில் பல தமிழர்கள் கொல்லப்பட காரணமாக இருந்த, காணாமல் போக காரணமாக இருந்த கோட்டாபய வரக்கூடாது என்பதில் மக்கள் தீர்மானமாக இருந்தார்கள்.

இதில் ஒரு சுவாரஸ்யமான விஷயத்தைக் கவனிக்க வேண்டும். டெலோவைச் சேர்ந்த சிவாஜிலிங்கம் இந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டார். தமிழர்களின் வாக்குகளைப் பிரிக்க வேண்டுமென நினைத்தார். ஆனால், மக்கள் அவரை விரும்பவில்லை. அதேபோல வடமாகாணத்தின் முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரனும் இம்மாதிரி ஒரு நிலைப்பாட்டை எடுத்தார்.

கோட்டாபய, சஜித் ஆகிய இருவரில் யார் வந்தாலும் தமிழர்களுக்கு ஏதும் செய்வதாகத் தெரியவில்லை; மக்கள் தங்கள் மனசாட்சியின்படி முடிவெடுக்க வேண்டுமென அவர் கூறினார். இது கோட்டாபயவுக்கு சாதாகமான ஒரு விஷயம். ஆனால், அதையும் மக்கள் ஏற்கவில்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்புதான் இன்றைக்கும் தமிழ் மக்களின் பாதுகாவலனாக இருக்கிறது என்பது இந்தத் தேர்தல் முடிவுகள் சொல்லியிருக்கின்றன.

கோட்டாபய ராஜபக்ஷ

கே. இந்தத் தேர்தலில் வாக்களிப்பு முடிவுகளைப் பார்க்கும்போது, மக்கள் இனரீதியாக பிளவுபட்டு வாக்களித்திருப்பதைப் போலத் தெரிகிறது. ஆகவே இந்தப் பிளவானது தற்போதைய ஜனாதிபதி அதிகாரப்பகிர்வு தொடர்பாக முடிவெடுப்பதில் ஏதாவது தாக்கத்தை ஏற்படுத்துமா?

ப. அதிகாரப் பகிர்வு என்பது இனி இலங்கையில் நடக்காது. 13வது திருத்தச் சட்டம் என்பது இனி ஒருபோதும் நிறைவேறாது. நாம் இனி யதார்த்தமான தீர்வுகளைப் பற்றி மட்டுமே பேசப்போகிறோம் என கோட்டாபய மிகத் தெளிவாகச் சொல்லிவிட்டார். ஆகவே, அவருடைய தீர்வில் 13வது திருத்தச் சட்டம், மஹிந்த கூறிய 13வது திருத்தச் சட்டம் ப்ளஸ் ஆகிய எதுவுமே கிடையாது. கோட்டாபயவைப் பொறுத்தவரை, ஒரு ஒருங்கிணைந்த நாட்டிற்குள் தமிழர்கள் வேண்டுமென்றால் இருந்துகொள்ளலாம், அவ்வளவுதான். அதுதான் நிதர்சனம். இதில் இந்தியா செய்யக்கூடியது ஏதுமில்லை.

கே. கோட்டாபய பதவியேற்ற பிறகு பேசும்போது சிங்கள மக்களின் வாக்குகளால்தான் வெற்றிபெற்றதாகத் தெரிவித்திருக்கிறார். ஆகவே, இனி தமிழ் மக்கள், சிறுபான்மையினரைப் பொறுத்தவரை ஜனாதிபதியை அணுகுவதென்பது எவ்விதத்தில் இருக்க முடியும்?

ப. அவர்கள் தங்கள் கோரிக்கைகளில் வலுவாக இருக்க வேண்டும். யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் 13 கோரிக்கைகளை முன்வைத்திருக்கிறார்கள். அதிலிருந்து ஆரம்பிக்கலாம். தமிழர்கள் என்ன கேட்டாலும் கோட்டாபய ராஜபக்ஷ கொடுக்கப்போவதில்லை. ஆனால், ஐநா, ஐநா மனித உரிமைகள் சபை, ஊடகங்களிடம் தமிழர்கள் தங்கள் நியாயமான கோரிக்கைகளைத் தொடர்ந்து பேச வேண்டும்.

மக்கள்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

கே. விரைவிலேயே நாடாளுமன்றத் தேர்தலும் நடக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. அந்தத் தேர்தலின் முடிவுகளிலும் இந்த வெற்றி எதிரொலிக்குமா?

ப. நிச்சயமாக எதிரொலிக்கும். தமிழ்ப் பகுதிகள் நிச்சயம் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குத்தான் வாக்களிப்பார்கள். இஸ்லாமியக் கட்சிகளைப் பொறுத்தவரை அவர்கள் ஆல் சிலோன் மக்கள் காங்கிரஸ் போன்ற இஸ்லாமியக் கட்சிகளுக்கே வாக்களிப்பார்கள். மத்திய இலங்கையில் சிலோன் ஒர்க்கர்ஸ் காங்கிரசிற்கு சில இடங்கள் கிடைக்கலாம். இலங்கைப் நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 225 இடங்களில் 196 இடங்கள் வாக்காளர்களால் தேர்வுசெய்யப்படும். மீதமுள்ள 29 இடங்கள் தேசியப் பட்டியல் எனப்படும் நியமன இடங்கள். இதில் ஒவ்வொரு கட்சியும் பெறும் வாக்குகளின் சதவீதத்தின் அடிப்படையில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.

விரைவிலேயே மஹிந்த ராஜபக்ஷ பிரதமராகப் பதவியேற்கக்கூடும். ரணில் விக்ரமசிங்கே எதிர்க்கட்சித் தலைவராகலாம். ஆகவே, 2005ல் என்ன நடந்ததோ, அதுதான் நடக்கும். மறுபடியும் அதே அவலங்கள்தான் நடக்கும்.

கே. 2005-2015ஆம் ஆண்டுகளில் கட்டுப்பாடுகளும் கண்காணிப்புகளும் அதிகமாக இருந்தன. இந்த முறை அதெல்லாம் மாறக்கூடுமா?

ப. அப்படி நடக்கப்போவதாகத் தெரியவில்லை. முன்னாள் ராணுவத் தளபதியான கமல் குணரட்னேவை பாதுகாப்புச் செயலராக நியமித்திருக்கிறார்கள். சரேந்திர சில்வா ராணுவத்தின் தலைமை கமாண்டோ. கோட்டாபய பாதுகாப்பு செயலராக இருந்தவர். ஆகவே, 2005-2015வரை இருந்த அதே கட்டமைப்பு இப்போதும் தொடரப் போகிறது. எதுவும் மாறப்போவதில்லை.

கே. முந்தைய ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன, சந்திரிகா குமாரதுங்கவின் அரசியல் எதிர்காலம் என்ன ஆகும்?

ப. சந்திரிகா குமாரதுங்கவைப் பொறுத்தவரை அவர் கிட்டத்தட்ட ஓய்வில்தான் இருக்கிறார். 2015ல் இவர்களையெல்லாம் ஒருங்கிணைப்பதற்காக அவர் மீண்டும் முன்னணிக்கு வந்தார். அதற்குப் பிறகு அரசுக்குள் ஏற்பட்ட குழப்பங்களைப் பார்த்து விலகிக்கொண்டுவிட்டார். பிறகு, இந்தத் தேர்தலின்போது ஒரே ஒரு அறிக்கையே வெளியிட்டார். அவ்வளவுதான். அந்த பாணியில்தான் இனி அவர் தொடர்வார்.

மைத்திரிபால சிறிசேனவைப் பொறுத்தவரை அவருக்கென மிகப் பெரிய பங்களாவை அரசு ஒதுக்கியுள்ளது. அதற்கு அமைச்சரவை ஒப்புதலும் வழங்கப்பட்டுவிட்டது. அவர் ஒரு மூத்த நபடாளுமன்றவாதியாக நடத்தப்படுவார்.

கே. கோட்டாபய ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் நின்று வெற்றிபெற்றிருக்கிறார். இனி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நிலை என்னவாகும்?

ப. இது ஒரு சுவாரஸ்யமான விஷயம். 2015ஆம் ஆண்டின் இறுதியில்தான் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி துவங்கப்படுகிறது. ஜி.எல். பீரீஸ் அதன் தலைவராக இருக்கிறார். 2018வரை மஹிந்த அந்தக் கட்சியிலேயே இல்லை. ஆனால், உள்ளாட்சித் தேர்தலில் இந்தக் கட்சிக்குப் பெரும் வெற்றி கிடைக்கிறது. மக்கள் தம் கட்சியை விரும்புகிறார்கள் என்று தெரிந்தவுடன் மஹிந்த பொதுஜன பெரமுனவில் சேர்கிறார். அதைத் தன் கட்சியாக மாற்றிக்கொள்கிறார். அதற்கு அடுத்த ஒரு வருடத்தில் இவ்வளவு பெரிய வெற்றி கிடைக்கிறது.

இலங்கையின் வரலாற்றைப் பொறுத்தவரை இரு கட்சிகள்தான். ஒன்று ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி. மற்றொன்று ஐக்கிய தேசியக் கட்சி. மூன்றாவது கட்சிக்கு அங்கு இடமே கிடையாது. ஆகவே அதே நிலைதான் நீடிக்கப்போகிறது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து மீதமுள்ளவர்களும் அங்கே சென்றுவிடுவார்கள். 2010-2014 வரையிலான மஹிந்த அமைச்சரவையில் 99 அமைச்சர்கள் இருந்தார்கள். ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து வந்தவர்களுக்கும் இடம் கொடுக்கப்பட்டது. அதே போன்ற சூழல்தான் இனியும் ஏற்படும். சுதந்திரக் கட்சி என்பது இனி இல்லை என்றே சொல்லிவிடலாம்.

தேர்தல் பரப்புரைபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

கே. புதிய ஜனாதிபதியை இந்தியா இனி எப்படி அணுகும்?

ப. இந்தியாவைப் பொறுத்தவரை தமிழர் பிரச்சனை என்பது ஒரு வியூக ரீதியான பிரச்சனை. உண்மையிலேயே அந்தப் பிரச்சனையில் ஏதும் அவர்கள் செய்யவில்லை. ராஜீவ் காந்தி முன்வைத்த 13வது திருத்தச் சட்டத்தைத் தவிர, தில்லியிலிருந்து தமிழர்களுக்கு நல்லது செய்யக்கூடிய ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இலங்கையில் இருந்த ஆயுதக் குழுக்களுக்கு இந்தியா ஆயுதம் வழங்கியது தமிழர் மீதான அக்கறையில் அல்ல. அவர்களை ஒரு கருவியாகப் பயன்படுத்தத்தான்.

தற்போதைய சூழலை பொறுத்தவரை, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்தான் ஒரே துருப்புச் சீட்டு. அவருக்கு பல நாடுகளில் எதிர்மறையான பிம்பம் இருந்தால்கூட, இலங்கையில் நல்ல பெயர் இருக்கிறது. அவர் அங்கே முதல் நிலை செயலராக இருந்தபோதும் தூதராக இருந்தபோதும் நல்ல உறவை ஏற்படுத்தியிருக்கிறார். இனியும் நல்ல தூதரக அதிகாரிகளை நியமித்து உறவை நாம் மேம்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் தென்னிந்தியாவில் புதிய ராணுவக் கட்டமைப்பை இந்தியா உருவாக்க வேண்டிய தேவை ஏற்படும்.

கே. ராஜபக்ஷக்களைப் பொருத்தவரை அவர்கள் சீனாவுக்கு நெருக்கமானவர்கள் என்ற பிம்பம் இருக்கிறது. இனி என்ன ஆகும்?

ப. நான் ஒரு அணிசேராக் கொள்கையைக் கடைப்பிடிக்கப் போகிறேன் என்கிறார் கோட்டாபய. அதாவது இந்தியாவுடனோ, சீனாவுடனோ நெருக்கமாக இருக்கப் போவதில்லை என்றிருக்கிறார். ஆனால், மஹிந்தவைப் பொறுத்தவரை இந்தியா எங்கள் சகோதரன். ஆனால், சீனாவுடன் வர்த்தக உறவுகளை வைத்திருக்கிறோம் என்பார். ஆகவே மஹிந்தவின் நிலைப்பாட்டிலிருந்து கோட்டாபயவின் நிலைப்பாடு மாறுபடுகிறது.

தேர்தலுக்கு ஒரு நாளைக்கு முன்பாக, சீனாவின் கடற்படைக் கப்பல் கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டது. எந்த நாட்டிலும் தேர்தல் சமயத்தில் கூட்டு ராணுவப் பயிற்சி நடக்காது. ஆனால், தேர்தல் சமயத்தில் சீனக் கப்பல் அங்கு வந்திருப்பது ஒரு சமிக்ஞையாகத்தான், அதாவது சீனா எந்த நேரத்திலும் வரவேற்கப்படுகிறது என்பதன் சமிக்ஞையாகத்தான் அது பார்க்கப்படுகிறது.

https://www.bbc.com/tamil/india-50473017

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது .
    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.