Jump to content

’காவல்காரனாக மீண்டும் எச்சரிக்கிறேன்’


Recommended Posts

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர், நாட்டில் ஆங்காங்கே சில இனவாதிகளால் எமது சிறுபான்மை சமூகத்தின் இளைஞர்கள், பொதுமக்கள் தாக்கப்படுவது தொடர்பில் பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

இனவாதத்துக்குத் துணைப்போகும் அனைவருக்கும் எமது எச்சரிக்கை என்றும் தேர்தலில் வெற்றி தோல்வி என்பது சகஜமானது; ஆனால் வெற்றியின் போதையில் அவர்களின் எல்லையைக் கடந்து செயற்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

நாட்டின் ஜனாதிபதியாக, கோட்டபாய ராஜபக்‌ஷ தெரிவு செய்யப்பட்டதையடுத்து முன்னெடுக்கப்படும் வெற்றிக்கொண்டாட்டங்களில், சிறுபான்மை மக்கள் வதைக்கப்படுவதாகவும் யாருக்கு வாக்களித்தீர்கள் என்று கேட்டு, பிரச்சினைகளை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்த அவர், தங்களது பொறுமைக்கும் ஒரு எல்லையுண்டு என்றும், தேர்தல் வெற்றியைக் கொண்டாடுவது உரிமையாக இருந்தாலும், அதில் மற்ற இனத்தைப் பழிவாங்குவது ஒரு காட்டுமிராண்டித்தனமான செயலாகும் என்றும் கூறியுள்ளார்.

இவ்வாறு, தனது சமூகத்துக்குத் தேவையற்ற வகையில் முன்னெடுக்கப்படுகின்ற இனவாதத் தாக்குதல்கள் தொடர்பில் சம்பந்தப்பட்ட அரச தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளதாகவும் இனவாதத் தாக்குதல்கள் இடம்பெற்ற பிரதேச பொலிஸ் நிலைய உயர்அதிகாரிகளுக்கும் இது தொடர்பில் எச்சரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

தொடர்ச்சியாக இவ்வாறான நடவடிக்கைகள் இடம்பெற்றால், 077-4004994 எனும் தன்னுடைய அலைபேசி இலக்கத்துக்கு அழைப்பை ஏற்படுத்துத் தெரியப்படுத்துமாறும் தன்னுடைய தொப்புள்கொடி உறவுகளுக்கு அமைச்சராகவோ தலைவனாகவோ அன்றி, காவல்காரனாக நிற்பது, தன்னுடை கடமை என்றும் அவர் கூறியுள்ளார்.

http://www.tamilmirror.lk/மலையகம்/கவலகரனக-மணடம-எசசரககறன/76-241225

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

077-4004994  இதற்கு அழைத்து பாருங்கள் ???😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெற்றி அடைந்த கட்ச்சியை சேர்ந்த குழுவினரால் தாக்குதல் நடத்தப் பட்டதால் அந்த வெற்றி கேள்விக்கும், சந்தேகத்துக்கும் உரியது. அதனாலே மது போதையில் ஏற்பட்ட குழு மோதல் என கதையை மாற்றி விட்டார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, நிலாமதி said:

077-4004994  இதற்கு அழைத்து பாருங்கள் ???😀

வில்லங்கத்தை விலைக்கு வாங்கவா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ஏராளன் said:

கடைசிவரை அமைச்சர் பெயரை சொல்லலையே?!

நானும் முழுக்க தேடிப்  பார்த்தேன், சொன்ன அமைச்சரின் பெயரை காணவில்லை.
ஆறுமுகம் தொண்டமானாக.. இருக்குமோ  என்று நினைத்தாலும், 
அவருக்கு இவ்வளவு  துணிவு... துப்பரவாக இல்லை.

 

Link to comment
Share on other sites

16 hours ago, ஏராளன் said:

கடைசிவரை அமைச்சர் பெயரை சொல்லலையே?!

 

4 hours ago, தமிழ் சிறி said:

நானும் முழுக்க தேடிப்  பார்த்தேன், சொன்ன அமைச்சரின் பெயரை காணவில்லை.
ஆறுமுகம் தொண்டமானாக.. இருக்குமோ  என்று நினைத்தாலும், 
அவருக்கு இவ்வளவு  துணிவு... துப்பரவாக இல்லை.

“பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர்” என்றுள்ளது. எனவே வடிவேல் சுரேஷ்.

Link to comment
Share on other sites

18 hours ago, ஏராளன் said:

கடைசிவரை அமைச்சர் பெயரை சொல்லலையே?!

பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ் அவர்களுக்கு வர்த்தமானி மூலம் அமைச்சரவை அந்தஸ்த்து உள்ள அமைச்சருக்கு நிகரான அதிகாரங்கள் வர்த்தமானி மூலம் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 15.03.2019 அன்று வெளியான வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் கீழ் இயங்கும் எல்கடுவ பெருந்தோட்ட கம்பளி¸ சிலாபம் பெருந்தோட்ட கம்பனி¸ கல்ஓயா சீனி தொழிற்சாலை¸ பெருந்தோட்ட முகாமைத்தவ கண்கானிப்பு பிரிவு¸ பெருந்தோட்ட உட்கட்மைப்புகளை உள்ளடக்கிய கண்கானிப்பு பிரிவின் “ளுவுயுசு Pசுழுதுநுஊவு” ஆகியன உள்ளடக்கப்பட்டுள்ளன.

பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்க அவர்களின் நேரடி சிபார்க்கும் மேற்பார்வைக்கும் கீழ் இந்த வர்த்தமாணி வெளியிடப்பட்டுள்ளது.

பொதுவாக மலையத்ததை பிரதிநிதித்தவப்படுத்தும் ஒருவருக்கு பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சு வழங்கப்பட்டு இவ்வாறு வர்த்தமானி மூலம் வழங்கப்பட்டமை இதுவே முதற் தடவையகும்.

மேற்படி இராஜாங்க அமைச்சருக்கு வழங்கப்பட்ட நிறுவனங்களின் தலைவர்களினதும் நிறைவேற்று அதிகாரிகளினதும் உடனான சந்திப்பு ஒன்று பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சில் நடைபெற்றது.

இச் சந்திப்பில் அமைச்சின் செயலாளர் இராஜாங்க அமைச்சின் செயலாளர் உட்பட அமைச்சின் அதிகாரிகள் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

இதன் போது எதிர்காலத்தில் நிறுவனங்களினால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள் குறித்து கலந்துறையாடப்பட்டன.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.