Jump to content

கச்சத்தீவு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த இந்திய மீனவர்கள் கோட்டாபயவிடம் கோரிக்கை


Recommended Posts

கடந்த பல வருடங்களாக நீடித்து வரும் இந்திய - இலங்கை மீனவர்கள் பிரச்சனைக்கு, இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஏழாவது ஜனாதிபதியாக பதவி ஏற்றுள்ள கோட்டாபய ராஜபஷ நிரந்தர தீர்வு காண வேண்டும் என தமிழக மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கை அரசின் தொடர் கைது நடவடிக்கையால் மீனவர்கள் மீன்பிடி தொழிலை விட்டு விட்டு மாற்று தொழில் தேடி வெளிமாவட்டங்களுக்கு இடம் பெயர்ந்து வருவதால் மீன் பிடிக்க செல்வதற்கு மீனவ தொழிலாளர்கள் இல்லாமல் விசைப்படகு உரிமையாளர்கள் தங்களது படகுகளை இயக்க முடியாமல் அவதியுற்று வருகின்றனர்.

இதனால் எதிர்வரும் காலங்களில் மீன்பிடி தொழிலாளர்கள் இல்லாமல் பாரம்பரிய மீன்பிடி தொழில் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே இந்திய பிரதமர் நரேந்திர மோதி, புதிதாக பதவி ஏற்றுள்ள இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபஷ ஆகிய இருவரும் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தி மீனவர்கள் பிரச்சனைக்கு முற்றுபுள்ளி வைப்பதுடன் இலங்கை - இந்திய இரு நாட்டு மீனவர்கள் பாரம்பரிய கடல் பகுதியில் பிரச்சனையில்லாமல் மீன் பிடிக்க வழிவகை செய்ய வேண்டும் என தமிழக மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

 

இது குறித்து இந்திய-இலங்கை மீனவ பேச்சுவார்த்தை குழு தலைவர் ஜேசு ராஜா பிபிசி தமிழிடம் பேசுகையில் இந்திய - இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தை தடைபட்டு இரு நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்வி குறியாகியுள்ளது. எனவே,புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜனாதிபதி இருநாட்டு மீனவர்களின் பேச்சுவார்தையை மீண்டும் நடத்த வேண்டும். இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபஷ இந்தியாவுக்கு வருகை தருமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோதி டிவிட்டரில் அழைப்பு விடுத்திருந்தார்.

இந்த அழைப்பை ஏற்று இந்தியா வரவுள்ள இலங்கை ஜனாதிபதி இரு நாட்டு மீனவர்களின் பேச்சுவார்தையை துரிதபடுத்தி இருநாட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் சிறக்கும் வகையில் செய்தால் தமிழக மீனவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைவார்கள். எனவே தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்க இலங்கை ஜனாதிபதி நிச்சயமாக ஒத்துழைப்பு தருவார் என நம்புவதாக தெரிவித்தார்.

இது குறித்து ராமேஸ்வரம் மீனவ சங்கத்தை சேர்ந்த எமரால்ட் பிபிசி தமிழிடம் பேசுகையில், முதலில் இலங்கையின் புதிய ஜனாதிபதிக்கு இந்திய மீனவர்கள் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம். இந்திய மீனவர்கள் தொடர்ச்சியாக எல்லை தாண்டுவதற்கு முக்கிய காரணம் குறுகிய கடல் பரப்பு. குறிப்பாக, ராமேஸ்வரத்தில் இருந்து 16 நாட்டிக்கல் தூரத்தில் இந்திய இலங்கை எல்லை உள்ளது எனவே இரு நாட்டு அரசுகளும் அமர்ந்து பேசி எல்லை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி எல்லை விரிவாக்கம் செய்தால் இரு நாட்டு மீனவர்களும் பிரச்சனையின்றி மீன் பிடிக்க உதவியாக இருக்கும்.

அதேபோல் 1974 ஆம் ஆண்டு போடப்பட்ட கச்சத்தீவு ஒப்பந்தத்தில் இரு நாட்டு மீனவர்களும் கச்சத்தீவு கடல் பகுதியை பயன்படுத்தி கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, கச்சத்தீவு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த இலங்கை ஜனாதிபதி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக மீனவர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்படுவதாக தெரிவித்தார்.

 

இது குறித்து ராமேஸ்வரம் விசைப்படகு உரிமையாளர் சகாயம் பிபிசி தமிழிடம் பேசுகையில், “இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்து புதிய அரசு அமைந்துள்ளது. புதிதாக அமைந்துள்ள இலங்கை அரசு கச்சத்தீவு பகுதி குறுகிய எல்லை பகுதியாக உள்ளதால் இரு நாட்டு மீனவர்களும், அரசும் இணைந்து பேசி பாரம்பரிய எல்லை பகுதியில் மீன் பிடிக்க வழிவகை செய்ய வேண்டும். இலங்கை அரசின் தொடர் கைது நடவடிக்கை காரணமாக இந்திய அரசு தமிழக மீனவர்களின் படகுகளை ஆழ்கடல் மீன் பிடிப்பிற்கு கொண்டு செல்ல தயார்படுத்தி வருகிறது.

இதற்கு ராமேஸ்வரம் மட்டும் அல்லாமல் தமிழக கடலோர மாவட்ட மீனவர்கள் தயராகி வருகின்றனர். எனவே ஆழ்கடல் மீன் பிடிப்பதற்கு தங்களது படகுகளை கொண்டு செல்லும் வரை கச்சத்தீவு பகுதிகளில் மீனவர்கள் மீன் பிடிக்க இலங்கையின் புதிய அரசு உதவி செய்ய வேண்டும் என கூறினார்.

Link to comment
Share on other sites

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், சமுத்திரம் மற்றும் உரை

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும், கைது செய்யபப்டுவதும் இந்தாண்டு அதிகரித்துள்ளது

- வெளியுறவுத்துறை அமைச்சகம்
#LokSabha #DMK #TNFishermen

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கச்ச தீவு கிடக்கட்டும் நெருங்கிய நட்பு நாட்டுக்கு ராமேஸ்வரத்தை தூக்கி கொடுத்துவிட போறாங்க..காசா பணமா..? ☺️

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.