Jump to content

MP4 வீடியோ ஃபைல் மூலம் ஹேக்கிங்' : வாட்ஸ்அப் பயனர்களுக்கு எச்சரிக்கை


Recommended Posts

வாட்ஸ் அப் பயனர்களுக்கு ஒரு புதிய அச்சுறுத்தல் வாட்ஸ் அப் நிறுவனத்தால் புகாரளிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ் அப் நிறுவனம் தற்பொழுது அதன் பயன்பாட்டில் புதிய மால்வேர் ஒன்றை கண்டுபிடித்துள்ளது. இதைப் பயன்படுத்தி ஹேக்கர்கள் பயனரின் அனைத்து தகவல்களையும் திருட முடியும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்திய கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் (சி.இ.ஆர்.டி) வாட்ஸ்அப் இல் உள்ள பாதிப்பைச் சுட்டிக்காட்டியுள்ளது. தற்பொழுது வாட்ஸ்அப் இல் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த மால்வேர், எம்பி 4 ஃபைல் வடிவத்தில் பயனரின் போனுக்கு அனுப்பப்பட்டுத் தாக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 பயனரின் மொபைல் போனிற்கு வரும் வீடியோ ஃபைல்லை ஓபன் செய்ததும், ஹேக்கரின் கட்டுப்பாட்டிற்குள் பயனரின் வாட்ஸ்அப் அக்கௌன்ட் மற்றும் அதில் உள்ள சாட், புகைப்படம் மற்றும் போனில் உள்ள அனைத்து தகவல்களையும் ஹேக்கர்களால் திருட முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் இல் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த மால்வேர் வகை, ;உயர் தீவிரம் அச்சுறுத்தல் பிரிவின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் நிறுவனம் மற்றும் சி.இ.ஆர்.டி அறிவித்துள்ள தகவலின்படி, இந்த புதிய வாட்ஸ்அப் மால்வேர் ஆண்ட்ராய்டு மற்றும் iOS என இரண்டு தளத்தின் பயனர்களைத் தாக்கக்கூடியது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த மால்வேர், வாட்ஸ்அப் V2.19.134 வெர்ஷன்க்கு முன்னர் வந்த ஆண்ட்ராய்டு வெர்ஷன்களையும், v2.19.44-க்கு முன்னர் வந்த வாட்ஸ்அப் பிசினஸ் வெர்ஷனிற்கும், v2.19.51-க்கு முன்னர் வந்த iOS வாட்ஸ்அப் மற்றும் v2.19.51-க்கு முன்னர் வந்த iOS வாட்ஸ்அப் பிசினஸ் வெர்ஷனிற்கும், விண்டோஸ் போனுக்கான வாட்ஸ்அப் v2.18.348 வெர்ஷன் மற்றும் v2.18.15 டைசன்(Tizen) வெர்ஷனை தாக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 குறிப்பாக வாட்ஸ்அப் பயன்படுத்தும் பயனர்கள், தங்களின் வீடியோ டவுன்லோட் ஆப்ஷனில் ஆட்டோமேட்டிக் டவுன்லோட் சேவையை ஆனில் வைத்திருப்பார்கள், அதை உடனே ஆஃப் செய்து வைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொல்லப்பட்டுள்ளது. தெரியாத எண்ணில் இருந்தோ அல்லது சந்தேகத்திற்குரிய வீடியோகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.  

வாட்ஸ்அப் பாதுகாப்பை மேம்படுத்த வாட்ஸ்அப் நிறுவனம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறதென்றும், அதற்கான பல வேலைகளை வாட்ஸ்அப் தொடர்ந்து செய்து வருவதாகவும் அதன் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார். பயனர்கள் பாதுகாப்பாக இருக்க உடனடியாக சமீபத்திய வெர்ஷனை டவுன்லோட் செய்துகொள்ளும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.'

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=542178

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.