Jump to content

“அமை­தி­யான தேர்­த­லா­யினும் சகல தரப்­பையும் அர­வ­ணைக்கும் போக்கு இல்­லாமை விச­னத்­துக்­கு­ரி­யது”


Recommended Posts

நா.தனுஜா)

இலங்­கையின் ஜனா­தி­பதித் தேர்தல் பெரு­ம­ள­விற்கு அமை­தி­யா­ன­தா­கவும், நம்­ப­கத்­தன்மை மிகுந்­த­தா­கவும் இருந்த அதே­வேளை இலங்கை சமூ­கத்தில் ஒன்­றி­ணைவும், சகல தரப்­பி­ன­ரையும் அர­வ­ணைக்கும் போக்கும் இல்­லாமை விச­னத்­துக்கு­ரி­ய­தாக இருக்­கின்­றது என்று ஜனா­தி­பதித் தேர்­தலைக் கண்­கா­ணிப்­ப­தற்கு வந்­தி­ருந்த பொது­ந­ல­வாய கண்­கா­ணிப்­பாளர் குழுவின் தலைவர் புரொஸ்பர் பாணி தெரி­வித்­தி­ருக்­கிறார்.

 

election-2.jpg

 

கானா நாட்டின் முன்னாள் உள்­துறை அமைச்­ச­ரான பாணி தலை­மை­யி­லான கண்­கா­ணிப்புக் குழுவின் உறுப்­பி­னர்கள் நேற்று செவ்­வாய்­க்கி­ழமை கொழும்பு தாஜ்­ச­முத்ரா ஹோட்­டலில் செய்­தி­யாளர் மாநா­டொன்றை நடத்தி, தங்­க­ளது பூர்­வாங்க அறிக்­கையை வெளி­யிட்டனர்.

இறு­தி­ய­றிக்கை பொது­ந­ல­வாய செய­லாளர் நாய­கத்­திடம் சமர்ப்­பிக்­கப்­படும் என்றும், இலங்கை அர­சாங்கம், அர­சியல் கட்­சிகள், தேர்­தல்கள் ஆணைக்­குழு மற்றும் மக்­க­ளுக்கு அந்த அறிக்கை கிடைக்கச் செய்­யப்­படும் என்றும் அவர் அறி­வித்தார்.

பூர்­வாங்க அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டி­ருக்கும் முக்­கிய அம்­சங்கள் வரு­மாறு:

இலங்­கையின் தேர்­தல்கள் ஆணைக்­குழு நாடு பூரா­கவும் தேர்தல் செயன்­மு­றை­களை மிகவும் நேர்த்­தி­யான முறை­யிலும், செயற்­றி­ற­னு­டனும் முன்­னெ­டுத்­தி­ருந்­தது. சிறந்த முறையில் நிர்­வ­கிக்­கப்­பட்ட தேர்தல் செயன்­மு­றைகள் மூலம் தேர்­தல்­களை முறை­யாக நடத்­து­வதில் இலங்­கையில் காணப்­படும் நீண்­ட­காலப் பாரம்­ப­ரியம் வெளிப்­ப­டை­யாகத் தெரிந்­தது. வாக்­கா­ளர்­களில் 84 சத­வீ­த­மா­ன­வர்கள் தேர்­தலில் பங்­கேற்­றார்கள். இது மிகவும் கவ­னத்தைத் தூண்­டு­வ­தாக இருக்­கின்­றது. இலங்­கையின் பிர­ஜைகள் ஜன­நா­யகம் மற்றும் பொது­ந­ல­வா­யத்தின் அடிப்­படை விழு­மி­யங்கள் தொடர்பில் தெளி­வா­ன­தொரு நிலைப்­பாட்டை எடுத்­தி­ருக்­கி­றார்கள்.

என்­றாலும் இந்தத் தேர்தல் தீர்வு காணப்­ப­ட­வேண்­டிய சில முக்­கிய பிரச்­சி­னை­க­ளையும் கிளப்­பி­யி­ருக்­கி­றது.

ஒரு நம்­ப­க­மான ஜன­நா­யக செயன்­முறை என்­பது இலங்­கையின் ஒவ்­வொரு பிர­ஜைக்கும் சுதந்­தி­ர­மா­கவும், பத்­தி­ர­மா­கவும் வாக்­க­ளிப்பில் பங்­கேற்­ப­தற்­கான உரி­மையை உத்­த­ர­வா­தப்­ப­டுத்­து­கின்ற, சக­ல­ருக்கும் இடம்­த­ரு­கின்ற ஒன்­றாக இருக்­க­ வேண்டும். எதிர்­கா­லத்தில் இலங்கை சமூ­கத்தின் சகல பிரி­வி­ன­ரையும் அர­வ­ணைக்­கக்­கூ­டிய முறையில் தேர்­தல்­களை நடத்­தக்­கூ­டி­ய­தாக மேம்­பா­டு­களைச் செய்­ய­ வேண்டும் என்று இலங்கை மக்­க­ளையும், அர­சியல் தலை­வர்­க­ளையும் கேட்­டுக்­கொள்­கிறோம்.

இலங்­கையின் செழிப்­பான கலா­சார மற்றும் பன்­மைத்­துவம் மதிக்­கப்­பட வேண்டும். கொண்­டா­டப்­பட வேண்டும். சமூக ஒன்­றி­ணை­விற்கும், சகல தரப்­பி­ன­ரையும் அர­வ­ணைக்கும் போக்­கிற்கும் முன்­னு­ரிமை அளிக்­கு­மாறு சகல அர­சியல் தலை­வர்­க­ளையும் வலி­யு­றுத்திக் கேட்­டுக்­கொள்­கின்றோம்.

தேர்­த­லுக்கு முன்­ன­ரான நாட்­களில் இன மற்றும் மத பதற்ற ­நி­லையை அவ­தா­னிக்­கக்­கூ­டி­ய­தாக இருந்­தது. சில குழுக்கள் அச்­சு­றுத்­த­லுக்கு உள்­ளா­ன­தையும் நாங்கள் அவ­தா­னித்தோம். ஐக்­கி­யத்­துக்கு முன்­னு­ரிமை கொடுக்­கு­மாறும், அர­சியல் வாழ்வில் மதிப்பு மற்றும் சகிப்­புத்­தன்மை பண்­பு­களை வெளிக்­காட்­டு­மாறும் அர­சியல் மற்றும் சிவில் சமூ­கத்­ த­லை­வர்­க­ளையும், சகல பிர­ஜை­க­ளையும் கோரு­கின்றோம்.

தனியார் ஊட­கங்கள் ஊடா­கவும், சமூக ஊட­கத்­த­ளங்கள் மூலமும் வெறுப்புப் பேச்­சுகள் ஊக்­கப்­ப­டுத்­தப்­பட்­டமை விச­னத்­திற்­கு­ரிய மற்­றொரு அம்­ச­மாகும். பிர­சா­ரங்கள் முடி­வ­டைந்த பின்­ன­ரான 48 மணித்­தி­யால நேரத்­திற்­குள்ளும் கூட இந்த வெறுப்­பு­ணர்வுப் பிர­சா­ரங்கள் தொடர்ந்­ததைக் காண­ மு­டிந்­தது.

ஒரு தொகுதி ஊடக வழி­காட்­டல்கள் ஊடாக அர­சாங்க ஊட­கங்­களை ஒழுங்­க­மைப்­ப­தற்­கான அதி­கா­ரத்தை தேர்­தல்கள் ஆணைக்­குழு கொண்­டுள்­ளது. ஆனால் தனியார் ஊட­கங்கள் பெரு­ம­ள­விற்கு ஒழுங்­க­மைக்­கப்­ப­டா­தி­ருப்­ப­தா­கவே தோன்­று­கின்­றது. அடுத்த தேர்­த­லுக்கு முன்­ன­தாக ஒரு சட்­ட­ரீ­தி­யான கட்­ட­மைப்பின் ஊடாக தனியார் மற்றும் அர­சாங்க ஊட­கங்கள் சுயா­தீ­ன­மாக ஒழுங்­கு­ப­டுத்­தப்­பட வேண்டும். இது ­கு­றித்து எமது இறுதி அறிக்­கையில் விரி­வாகக் கூறுவோம்.

இலங்­கையின் அர­சி­யலில் பெண்­களின் பங்­கேற்பு குறை­வாக இருப்­பது மற்­றொரு குறிப்­பி­டத்­தக்க அம்­ச­மாகும். இந்த ஜனா­தி ­பதித் தேர்­தலில் போட்­டி­யிட்ட 35 வேட்­பா­ளர்­களில் ஒருவர் மாத்­தி­ரமே பெண் வேட்­பா­ள­ராவார். உள்­ளூ­ராட்சி மட்­டத்தில் பெண்­க­ளுக்கு 25 சத­வீத இட ­ஒ­துக்­கீட்டை அறி­மு­கப்­ப­டுத்­தி­யதன் மூலம் அர­சி­யலில் பெண்­களின் பங்­கேற்பு விட­யத்தில் இலங்கை ஏற்கனவே குறிப்பிடத்தக்களவு முன்னேற்றத்தைக் கண்டிருந்தது. தேசிய மட்டத்தில் அரசியலில் பெண்களின் பங்கேற்பையும், பிரதிநிதித்துவத்தையும் அதிகரிப்பதை உறுதிப்படுத்துவதற்கு சட்ட ரீதியான நடவடிக்கைகள் குறித்துப் பரிசீலிக்கப்பட வேண்டும்.

இந்தத் தேர்தலின் ஊடாக இலங்கை மக்கள் மீண்டும் ஒருமுறை பொதுநலவாயத்தின் அடிப்படை ஜனநாயகப் பண்புகள் மீதான தங்களது பற்றுறுதியை வெளிக்காட்டியிருக்கிறார்கள். இந்தப் பண்புகளை சகல பிரஜைகளுக்குமாக மேலும் மேம்படுத்திப் பாதுகாக்குமாறு நாம் இலங்கையின் புதிய தலைமைத்துவத்தை வலியுறுத்திக் கேட்கின்றோம்.

https://www.virakesari.lk/article/69302

Link to comment
Share on other sites

காமன்வெல்த்த்தை மகிந்த ஜனாதிபதியாக இருந்த பொழுது புறக்கணித்த கனேடிய முன்னாள் பிரதமர்.

Dr. S. JaishankarVerified account @DrSJaishankar 21h21 hours ago

An interesting conversation with @stephenharper, former PM of Canada and a close friend of India. Thank him for his commitment to the @raisinadialogue. Look forward to welcoming him for the next one in January.pic.twitter.com/SnKJdsVQ4a
EJ1H_CcWsAAdGqz.jpg
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.