Jump to content

“அமை­தி­யான தேர்­த­லா­யினும் சகல தரப்­பையும் அர­வ­ணைக்கும் போக்கு இல்­லாமை விச­னத்­துக்­கு­ரி­யது”


Recommended Posts

நா.தனுஜா)

இலங்­கையின் ஜனா­தி­பதித் தேர்தல் பெரு­ம­ள­விற்கு அமை­தி­யா­ன­தா­கவும், நம்­ப­கத்­தன்மை மிகுந்­த­தா­கவும் இருந்த அதே­வேளை இலங்கை சமூ­கத்தில் ஒன்­றி­ணைவும், சகல தரப்­பி­ன­ரையும் அர­வ­ணைக்கும் போக்கும் இல்­லாமை விச­னத்­துக்கு­ரி­ய­தாக இருக்­கின்­றது என்று ஜனா­தி­பதித் தேர்­தலைக் கண்­கா­ணிப்­ப­தற்கு வந்­தி­ருந்த பொது­ந­ல­வாய கண்­கா­ணிப்­பாளர் குழுவின் தலைவர் புரொஸ்பர் பாணி தெரி­வித்­தி­ருக்­கிறார்.

 

election-2.jpg

 

கானா நாட்டின் முன்னாள் உள்­துறை அமைச்­ச­ரான பாணி தலை­மை­யி­லான கண்­கா­ணிப்புக் குழுவின் உறுப்­பி­னர்கள் நேற்று செவ்­வாய்­க்கி­ழமை கொழும்பு தாஜ்­ச­முத்ரா ஹோட்­டலில் செய்­தி­யாளர் மாநா­டொன்றை நடத்தி, தங்­க­ளது பூர்­வாங்க அறிக்­கையை வெளி­யிட்டனர்.

இறு­தி­ய­றிக்கை பொது­ந­ல­வாய செய­லாளர் நாய­கத்­திடம் சமர்ப்­பிக்­கப்­படும் என்றும், இலங்கை அர­சாங்கம், அர­சியல் கட்­சிகள், தேர்­தல்கள் ஆணைக்­குழு மற்றும் மக்­க­ளுக்கு அந்த அறிக்கை கிடைக்கச் செய்­யப்­படும் என்றும் அவர் அறி­வித்தார்.

பூர்­வாங்க அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டி­ருக்கும் முக்­கிய அம்­சங்கள் வரு­மாறு:

இலங்­கையின் தேர்­தல்கள் ஆணைக்­குழு நாடு பூரா­கவும் தேர்தல் செயன்­மு­றை­களை மிகவும் நேர்த்­தி­யான முறை­யிலும், செயற்­றி­ற­னு­டனும் முன்­னெ­டுத்­தி­ருந்­தது. சிறந்த முறையில் நிர்­வ­கிக்­கப்­பட்ட தேர்தல் செயன்­மு­றைகள் மூலம் தேர்­தல்­களை முறை­யாக நடத்­து­வதில் இலங்­கையில் காணப்­படும் நீண்­ட­காலப் பாரம்­ப­ரியம் வெளிப்­ப­டை­யாகத் தெரிந்­தது. வாக்­கா­ளர்­களில் 84 சத­வீ­த­மா­ன­வர்கள் தேர்­தலில் பங்­கேற்­றார்கள். இது மிகவும் கவ­னத்தைத் தூண்­டு­வ­தாக இருக்­கின்­றது. இலங்­கையின் பிர­ஜைகள் ஜன­நா­யகம் மற்றும் பொது­ந­ல­வா­யத்தின் அடிப்­படை விழு­மி­யங்கள் தொடர்பில் தெளி­வா­ன­தொரு நிலைப்­பாட்டை எடுத்­தி­ருக்­கி­றார்கள்.

என்­றாலும் இந்தத் தேர்தல் தீர்வு காணப்­ப­ட­வேண்­டிய சில முக்­கிய பிரச்­சி­னை­க­ளையும் கிளப்­பி­யி­ருக்­கி­றது.

ஒரு நம்­ப­க­மான ஜன­நா­யக செயன்­முறை என்­பது இலங்­கையின் ஒவ்­வொரு பிர­ஜைக்கும் சுதந்­தி­ர­மா­கவும், பத்­தி­ர­மா­கவும் வாக்­க­ளிப்பில் பங்­கேற்­ப­தற்­கான உரி­மையை உத்­த­ர­வா­தப்­ப­டுத்­து­கின்ற, சக­ல­ருக்கும் இடம்­த­ரு­கின்ற ஒன்­றாக இருக்­க­ வேண்டும். எதிர்­கா­லத்தில் இலங்கை சமூ­கத்தின் சகல பிரி­வி­ன­ரையும் அர­வ­ணைக்­கக்­கூ­டிய முறையில் தேர்­தல்­களை நடத்­தக்­கூ­டி­ய­தாக மேம்­பா­டு­களைச் செய்­ய­ வேண்டும் என்று இலங்கை மக்­க­ளையும், அர­சியல் தலை­வர்­க­ளையும் கேட்­டுக்­கொள்­கிறோம்.

இலங்­கையின் செழிப்­பான கலா­சார மற்றும் பன்­மைத்­துவம் மதிக்­கப்­பட வேண்டும். கொண்­டா­டப்­பட வேண்டும். சமூக ஒன்­றி­ணை­விற்கும், சகல தரப்­பி­ன­ரையும் அர­வ­ணைக்கும் போக்­கிற்கும் முன்­னு­ரிமை அளிக்­கு­மாறு சகல அர­சியல் தலை­வர்­க­ளையும் வலி­யு­றுத்திக் கேட்­டுக்­கொள்­கின்றோம்.

தேர்­த­லுக்கு முன்­ன­ரான நாட்­களில் இன மற்றும் மத பதற்ற ­நி­லையை அவ­தா­னிக்­கக்­கூ­டி­ய­தாக இருந்­தது. சில குழுக்கள் அச்­சு­றுத்­த­லுக்கு உள்­ளா­ன­தையும் நாங்கள் அவ­தா­னித்தோம். ஐக்­கி­யத்­துக்கு முன்­னு­ரிமை கொடுக்­கு­மாறும், அர­சியல் வாழ்வில் மதிப்பு மற்றும் சகிப்­புத்­தன்மை பண்­பு­களை வெளிக்­காட்­டு­மாறும் அர­சியல் மற்றும் சிவில் சமூ­கத்­ த­லை­வர்­க­ளையும், சகல பிர­ஜை­க­ளையும் கோரு­கின்றோம்.

தனியார் ஊட­கங்கள் ஊடா­கவும், சமூக ஊட­கத்­த­ளங்கள் மூலமும் வெறுப்புப் பேச்­சுகள் ஊக்­கப்­ப­டுத்­தப்­பட்­டமை விச­னத்­திற்­கு­ரிய மற்­றொரு அம்­ச­மாகும். பிர­சா­ரங்கள் முடி­வ­டைந்த பின்­ன­ரான 48 மணித்­தி­யால நேரத்­திற்­குள்ளும் கூட இந்த வெறுப்­பு­ணர்வுப் பிர­சா­ரங்கள் தொடர்ந்­ததைக் காண­ மு­டிந்­தது.

ஒரு தொகுதி ஊடக வழி­காட்­டல்கள் ஊடாக அர­சாங்க ஊட­கங்­களை ஒழுங்­க­மைப்­ப­தற்­கான அதி­கா­ரத்தை தேர்­தல்கள் ஆணைக்­குழு கொண்­டுள்­ளது. ஆனால் தனியார் ஊட­கங்கள் பெரு­ம­ள­விற்கு ஒழுங்­க­மைக்­கப்­ப­டா­தி­ருப்­ப­தா­கவே தோன்­று­கின்­றது. அடுத்த தேர்­த­லுக்கு முன்­ன­தாக ஒரு சட்­ட­ரீ­தி­யான கட்­ட­மைப்பின் ஊடாக தனியார் மற்றும் அர­சாங்க ஊட­கங்கள் சுயா­தீ­ன­மாக ஒழுங்­கு­ப­டுத்­தப்­பட வேண்டும். இது ­கு­றித்து எமது இறுதி அறிக்­கையில் விரி­வாகக் கூறுவோம்.

இலங்­கையின் அர­சி­யலில் பெண்­களின் பங்­கேற்பு குறை­வாக இருப்­பது மற்­றொரு குறிப்­பி­டத்­தக்க அம்­ச­மாகும். இந்த ஜனா­தி ­பதித் தேர்­தலில் போட்­டி­யிட்ட 35 வேட்­பா­ளர்­களில் ஒருவர் மாத்­தி­ரமே பெண் வேட்­பா­ள­ராவார். உள்­ளூ­ராட்சி மட்­டத்தில் பெண்­க­ளுக்கு 25 சத­வீத இட ­ஒ­துக்­கீட்டை அறி­மு­கப்­ப­டுத்­தி­யதன் மூலம் அர­சி­யலில் பெண்­களின் பங்­கேற்பு விட­யத்தில் இலங்கை ஏற்கனவே குறிப்பிடத்தக்களவு முன்னேற்றத்தைக் கண்டிருந்தது. தேசிய மட்டத்தில் அரசியலில் பெண்களின் பங்கேற்பையும், பிரதிநிதித்துவத்தையும் அதிகரிப்பதை உறுதிப்படுத்துவதற்கு சட்ட ரீதியான நடவடிக்கைகள் குறித்துப் பரிசீலிக்கப்பட வேண்டும்.

இந்தத் தேர்தலின் ஊடாக இலங்கை மக்கள் மீண்டும் ஒருமுறை பொதுநலவாயத்தின் அடிப்படை ஜனநாயகப் பண்புகள் மீதான தங்களது பற்றுறுதியை வெளிக்காட்டியிருக்கிறார்கள். இந்தப் பண்புகளை சகல பிரஜைகளுக்குமாக மேலும் மேம்படுத்திப் பாதுகாக்குமாறு நாம் இலங்கையின் புதிய தலைமைத்துவத்தை வலியுறுத்திக் கேட்கின்றோம்.

https://www.virakesari.lk/article/69302

Link to comment
Share on other sites

காமன்வெல்த்த்தை மகிந்த ஜனாதிபதியாக இருந்த பொழுது புறக்கணித்த கனேடிய முன்னாள் பிரதமர்.

Dr. S. JaishankarVerified account @DrSJaishankar 21h21 hours ago

An interesting conversation with @stephenharper, former PM of Canada and a close friend of India. Thank him for his commitment to the @raisinadialogue. Look forward to welcoming him for the next one in January.pic.twitter.com/SnKJdsVQ4a
EJ1H_CcWsAAdGqz.jpg
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "Jesus refulsit omnium" ["Jesus, light of all the nations"] என்ற பழைய பாடலின் என் தமிழ் மொழிபெயர்ப்பு  கி பி 340 இல் இருந்து தான் நத்தார் மார்கழி திங்கள் 25 ஆம் நாள் கொண்டாடப் படுகிறது.  உலகின் ஆரம்பகால லத்தீன் பாடல்களில் ஒன்றான இந்தப் பாடலின் [Saint Hilary of Poitiers, around the 4th century (368] ஆங்கில மொழிபெயர்ப்பை [English Translation by Kevin Hawthorne] நான் தமிழில் தருகிறேன்.    "உலக நாடுகளின் அன்பு இரட்சகர் உலர்ந்த தொட்டிலில் பிரகாசித்த கதையை குடும்பம் ஓங்கிட தெம்பை கொடுக்க கேளுங்கள் அதை நம்பிக்கை கொண்டு!"   "வானத்தில் ஒளிர்ந்து மினுங்கும் தாரகை கானத்தில் நிற்பவருக்கும் வழி காட்டிட மூன்று ஞானிகள் அறிகுறி அறிந்து அன்பு தெய்வத்தை தேடி வந்தனர்!"   "காடுமலைகள் தாண்டி மழலையை பார்த்திட மேடுபள்ளம் நடந்து பரிசுடன் வந்தனர் பாலகன் மேலே விண்மீன் நிற்க இலக்கு உணர்ந்து விழுந்து வணங்கினர்!"   "ஆத்மபலம் கொண்ட பரிசு கொண்டுவந்து கந்தல்களில் மறைந்திருந்த பாலகனை காட்டி உண்மை ஆண்டவனுக்கு சாட்சி பகிர்ந்து மண்ணுக்கும் விண்ணுக்கும், அடையாளம் காட்டினர்!"     [தமிழ் மொழி பெயர்ப்பு: கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   "Jesus, devoted redeemer of all nations, has shone forth, Let the whole family of the faithful celebrate the stories The shining star, gleaming in the heavens, makes him known at his birth and, going before, has led the Magi to his cradle Falling down, they adore the tiny baby hidden in rags, as they bear witness to the true God by bringing a mystical gift"     [Translation by Kevin Hawthorne, PhD]     
    • 71% சதவீத வாக்குபதிவாம் த. நாட்டில். அதிலும் மூன்று சென்னை தொகுதியிலும் 10% அதிக வாக்குபதிவாம். Advantage BJP? 
    • வாழ்த்துக்கள். போராடிய நளினிக்கு பாராட்டும் வழக்கறிஞர் ராய்க்கு நன்றியும். ஏனைய 1.7.86 க்கு முன் பிறந்த அனைவரும் விரைவில் இந்திய குடியுரிமையை பெற வேண்டும்.
    • போட்டியில் கலந்துகொண்ட @goshan_che வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இன்று LSG நன்றாக விளையாடியதை வைத்து கணித்திருக்கின்றீர்கள் போலிருக்கு😃 மூன்றாவது கேள்விக்கான பதிலை PBKS என்று எடுத்துக்கொள்கின்றேன்!   இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.