Jump to content

நள்ளிரவு முதல் பாணின் விலை அதிகரிப்பு!


Recommended Posts

இன்று நள்ளிரவு முதல் பாண் உட்பட பேக்கரி உற்பத்தி உணவுப் பொருட்களின் விலையை அதிகரிப்பதற்கு அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

அதன்படி 450 கிராம் பாண் ஒன்றின் விலையானது 5 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.

இன்று காலை இடம்பெற்ற அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் பேச்சுவார்த்தையின்போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த 16 ஆம் திகதி ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 8 ரூபாவினால் அதிகரித்தமையின் காரணமாக தாம் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் அதன் காரணமாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எனினும் கடந்த 16 ஆம் திகதி கோதுமை மாவின் விலை 8 ரூபாவினால் அதிகரிக்கப்படவில்லை என நிதியமைச்சும் பிறிமா நிறுவனமும் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/69313

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏலவே அதளபாதளத்தில் கிடக்கும் சொறீலங்காவின் பொருளாதாரம் மீள வழியைக் காணம். இதில கோத்தா வரவு வேற. 

பிரதான கடன் வழங்கும் நாடுகள்... கோத்தாவின் வரவை எச்சரிக்கையுடனேயே பார்க்கின்றன.

எனி கோத்தாவுக்கு வாக்குப் போட்டோர்.. பாணும் சாப்பிட முடியாது. மீண்டும் சிறிமாவோ பண்டாரநாயக்காவின் யுகத்துக்குப் போய் இலைக்கஞ்சி தான் குடிக்க வேண்டும். இனவாதத்திற்கு சிங்கள மக்கள் வாக்களித்துக் கொண்டே வந்தால்.. அவர்கள்.. மூன்றாம் உலக நாடுகள் பட்டியலிலேயே தொடர்ந்து வாழ நேரிடும்.

மிக விரைவில்.. சிங்களவர்களின் கையில் 10 ஆயிரம் ரூபா நோட்டுப் புழங்கினாலும்.. ஆச்சரியமில்லை.

சிம்பாபேக்கு ஒரு முகாபே போல்.. சொறீலங்காவுக்கு ஒரு ராஜபக்ச குடும்பம்.

நவீன உலக ஒழுங்கில் நவீனமாக.. லிபரலாகச் சிந்திக்க மறுப்பின்..  சிங்களம்.. அதன் இனவெறிக்கு அதுவே பலியாகும் நாள் தொலைதூரத்தில் இல்லை. 

----------------------------------------------------

A street vendor near Harare, Zimbabwe - November 2019

https://www.bbc.co.uk/news/world-africa-50454812

Link to comment
Share on other sites

பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னராக பாணின் விலை குறைக்கப்பட்டு மீண்டும் தேர்தலின் பின்னர் அதிகரிக்கப்படும் / படலாம். பண்ணும் அரசியலும் நகமும் சதையும் போன்றவை சிங்கள அரசியலில். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போர் முடிந்தபின் அபிவிருத்தி என்று பார்க்கும்போது போர் செய்து நாட்டை காப்பாற்றினவரையே வின்சண்டன் சேர்ச்சிலை ஓய்வெடுக்க அனுப்பியவர்கள் பிரிட்டன் மக்கள் இலங்கையில் கோத்தா இனவாத சக்கரத்தில் நாடு நல்லா இருக்கும்டோய் .

Link to comment
Share on other sites

பாணின் விலை ஐந்து ரூபாவினால் விலை குறைப்பு: உடன் அமுலில்..!

உடன் அமுலிற்கு வரும் வகையில், 450 கிராம் நிறையுடைய ஒரு இராத்தல் பாணின் விலை ஐந்து ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நேற்று நள்ளிரவு(20.11.2019) முதல் 450 கிராம் பாண் ஒன்றின் விலையானது 5 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டிருந்த நிலையிலேயே இன்று(21.11.2019) மறுபடியும் , 450 கிராம் நிறையடைய ஒரு இராத்தல் பாணின் விலை 5 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/69380

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.