Jump to content

சிறுபான்மை தேசிய இனங்கள் வாக்களிப்பின் ஊடாக உலகிற்கு ஒரு செய்தியை கூறியுள்ளனர் - சிவஞானம் சிறிதரன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சிறுபான்மை தேசிய இனங்கள் வாக்களிப்பின் ஊடாக உலகிற்கு ஒரு செய்தியை கூறியுள்ளனர் - சிவஞானம் சிறிதரன்

சிறுபான்மை தேசிய இனங்கள் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஒருமித்து வாக்களித்து தங்கள் முடிவுகளை வெளிப்படுத்தியதன்  ஊடாக தமது மன எண்ணப்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

20191119_152957.jpg

ஜனாதிபதி தேர்தலுக்கு பிற்பாடான கள நிலைமைகள் குறித்து கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் அமைப்பாளர்கள்  உடனான கலந்துரையாடலின் போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் இங்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் இனிவரும் காலங்கள் மிகவும் இக்கட்டானவையாக இருக்கலாம் ஆனால் தமிழ்தேசிய உணர்வுடன் அனைவரும் துணிவுடன் பயணிக்கவேண்டும் பயணித்து எமது இனத்தினுடைய இலக்குகளை அடைவதற்கு உங்களால் முடிந்த அளவிற்கு பங்களிப்பு வழங்க வேண்டும் என்று கூறியதுடன் இந்தத் தேர்தலில் நாம் தென்னிலங்கை ஆட்சியாளர்களுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் ஒரு செய்தியை கூறியிருக்கின்றோம்.

இந்த இலங்கைத் தீவில் சிறுபான்மை தேசிய இனங்கள் ஆகிய நாங்கள் பெரும்பான்மைத் தேசிய இனத்திற்கு வழங்கப்படுகின்ற சகல உரிமைகளையும் வழங்கக் கூடிய தலைவர்களை ஏற்றுக்கொள்வோம் என்பதையும் ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப் பகிர்வை கோருகிறோம் என்பதுமாகும் 

20191119_164054.jpg

இதைப் புரிந்து கொண்டு புதிதாக பதவி ஏற்றிருக்கும் ஜனாதிபதி செயற்படுவார் எனவும் எண்ணுகின்றேன் என்றார்.

இக்கலந்துரையாடலில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள் கரைச்சி பூநகரி பச்சிலைப்பள்ளி பிரதேச சபையினுடைய தவிசாளர்கள் பிரதேசசபை உறுப்பினர்கள் கட்சியின் அமைப்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
 

https://www.virakesari.lk/article/69317

Link to comment
Share on other sites

’அமைச்சுப் பதவிகளை ஏற்கோம்’

-எஸ்.நிதர்ஷன்

தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாமலிருக்கின்ற இன்றைய சூழ்நிலையில் நாங்கள் அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொள்ளவதற்கான சாத்தியப்பாடுகள் எதுவும் இல்லையென, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.

அத்துடன், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வைக் காணாமல் அமைச்சுப் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டால், அது தமிழ் மக்களுக்குப் பாதிப்பையே ஏற்படுத்துமெனவும், அவர் கூறினார்.

யாழ்ப்பாணத்தில், நேற்று (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், ஓர் அரசியல் தீர்வில்லாமல், தாங்கள் மத்திய அரசாங்கத்துடன் அமைச்சுப் பொறுப்புகளை பகிர்ந்துகொள்ளல் என்பது, இயலாமையின் வெளிப்பாடாகவே அமையுமே தவிர, இயலாதவன் செய்கின்ற காரியமாக முடியுமெனவும் கூறினார்.

சஜித்தின் தோல்வி:

ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸவின் தோல்விக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகளும் காரணமாக இருக்கலாமெனத் தெரிவித்த சிறிதரன்,  அதேபோல சஜித்தின் செயற்பாடுகளும் அவர் சார்ந்த கட்சியினதும் செயற்பாடுகளும் காரணமாக அமைவதாகவும் கூறினார்.

சஜித்துக்கு ஆதரவாக தாங்கள் செய்த பிரசாரம், தென்பகுதியிலே வேறு விதமாக கொண்டு செல்லப்பட்டதெனவும், அவர் கூறினார்.

அச்சத்தைப் போக்க வேண்டும்:

மனிதர்களை மதிக்காத, மனித உரிமைகளை துச்சமாக மதிக்கின்ற, மனித மாண்புகளை நினைக்காக ஒருவரான கோட்டாபய ராஜபக்‌ஷ ஜனாதிபதியாக வந்திருக்கின்றார் என்ற அச்ச உணர்வு தமிழ் மக்கள் ஏற்பட்டிருக்கின்றதெனத் தெரிவித்த சிறிதரன், ஆகையால், தமிழ் மக்களின் இந்த அச்ச உணர்வை அவர் மாற்றியமைக்க வேண்டியது அவசியமெனவும் கூறினார்.

பயமுறுத்தல்கள் அல்லது அடிமைப்படுத்தல்களுக்கு ஊடாக ஓர் இனத்தை அடக்கி வைத்திருக்கலாம் என்று யாரும் நினைத்தால், அந்த நிலைமைகள் எங்கேயும் நிலைத்ததாக வரலாறுகள் இல்லையெனவும் அதனை அவர் உணர்ந்துகொண்டு, தனது செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டுமென்றும், அவர் கூறினார்.

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/அமசசப-பதவகள-ஏறகம/71-241252

Link to comment
Share on other sites

8 hours ago, ampanai said:

ஓர் அரசியல் தீர்வில்லாமல், தாங்கள் மத்திய அரசாங்கத்துடன் அமைச்சுப் பொறுப்புகளை பகிர்ந்துகொள்ளல் என்பது, இயலாமையின் வெளிப்பாடாகவே அமையுமே தவிர, இயலாதவன் செய்கின்ற காரியமாக முடியுமெனவும் கூறினார்.

கூத்தமைப்பினது சகுனியான சுமந்திரனின் நீண்டநாள் கனவாக உள்ள அமைச்சர் நாற்காலிக் கனவில் மண்ணை அள்ளிப் போட்டுள்ளார் சிறிதரன்!

அத்துடன் சுமந்திரன் ஒன்றுமே இயலாதவன் என்பதையும் போட்டுடைத்துள்ளார்!

சம்மந்தன், சுமந்திரனின் சிங்கள-பௌத்த எஜமானர்கள் இராஜினாமா செய்துவிட்டார்கள்.
இவர்கள் இராஜினாமா செய்வது எப்போது?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.