Jump to content

சீனாவின் நெருக்கமான அரவணைப்புக்குள் ராஜபக்ஷக்கள் மீண்டும் செல்வதற்கு புதுடில்லி அனுமதிக்கக்கூடாது


Recommended Posts

சுயாதிபத்தியம் கொண்ட அரசு என்ற வகையில் இலங்கை சீனாவுடன் பணியாற்றுவதற்கு சுதந்திரம் இருக்கின்றது என்ற போதிலும் பெய்ஜிங்குடனான இலங்கையின் உறவுகள் இந்தியாவின் பாதுகாப்பு நலன்களைப் பாதிக்குமாக இருந்தால், இந்தியா அதன் செல்வாக்கைப் பிரயோகிக்கும் என்பதை தெளிவாகக்கூறிவிடவேண்டும் என்றும் சீனாவின் நெருக்கமான அரவணைப்புக்குள் ராஜபக்ஷக்கள் மீண்டும் செல்வதற்கு அனுமதித்து இந்தியா தவறிழைத்துவிடக்கூடாது என்றும் இந்தியாவின் முக்கியமான தேசிய ஆங்கிலப் பத்திரிகைகள் ஆசிரிய தலையங்கங்களில் வலியுறுத்தியிருக்கின்றன.

gota.jpg

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்ஷ பதவியேற்றதையடுத்து இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான எதிர்கால உறவுமுறைகள் தொடர்பில் இந்துஸ்தான் ரைம்ஸும் டெக்கான் ஹெரால்டும் இன்று புதன்கிழமை ஆசிரிய தலையங்கங்களை தீட்டியிருக்கின்றன.

' இலங்கையில்  பலவான் ' என்ற தலைப்பில் டெக்கான் ஹெரால்ட்  அதன் ஆசிரிய தலையங்கத்தில் கூறியிருப்பதாவது ;

 ஜனாதிபதி தேர்தலில் கோத்தாபய ராஜபக்சவின் நிறைவான வெற்றி இலங்கையின் ஜனநாயகத்துக்கு நல்ல அறிகுறியைக் காட்டவில்லை.முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் சகோதரரும் முன்னாள் பாதுகாப்பு செயலாளருமான கோத்தாபய இலங்கையின் உள்நாட்டுப்போரில் அரசாங்கத்தின் வெற்றிக்கு காரணமானவர் என்று பரவலாக புகழப்படுகிறார். ' கண்டிப்பான மனிதர் ' என்ற அவரது படிமம் தேர்தல் வெற்றியில் பெரும் பங்கை வகித்தது.

இவ்வருடம் ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று உள்நாட்டு இஸ்லாமிய தீவிரவாதிகள் கொழும்பிலும் ஏனைய நகரங்களிலும் மேற்கொண்ட தொடர் குண்டுத்தாக்குதல்களில் 250 க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர்.கோதாபயவின் தேர்தல் பிரசாரம் தேசிய பாதுகாப்பு மீது கவனத்தைக் குவித்தது மாத்திரமல்ல, முஸ்லிம் தீவிரவாதத்தைத் தோற்கடிக்க சிறந்த வேட்பாளராக அவரை முன்னிலைப்படுத்தவும் செய்தது.சிங்கள பௌத்தர்கள் மத்தியில் பெருமளவுக்கு எடுபட்ட இந்தச் செய்தி அவரின் தேர்தல் வெற்றிக்கு பங்களிப்பைச் செய்தது. 

கோதாபய மக்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்துகின்ற கருத்துக்களைக் கொண்ட ஒருவர்.சிங்கள பௌத்தர்களினால் போர் வெற்றி நாயகன் என்று அவர் போற்றப்படுகிறார்.ஆனால், இன, மத சிறுபான்மையினத்தவர்களும் முற்போக்கு -- தாராளவாத போக்குடைய இலங்கையர்களும் அட்டூழியங்களையும் போர்க்குற்றங்களையும் அவர் செய்ததாக குற்றஞ்சாட்டுகிறார்கள்.எதிர்க்கருத்து கொண்டவர்களின் குரல்வளையை நசுக்குவதற்கும் ஜனநாயக நிறுவனங்களைப் பலவீனப்படடுத்துவதற்கும் மக்களின் உரிமைகளை மீறுவதற்கும் தயங்காத ஒரு எதேச்சாதிகார ஜனாதிபதியாக அவர் இருப்பார் என்று உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பெரும் கவலை வெளிப்படுத்தப்படுகிறது.

கொழும்பில் மீண்டும் ராஜபக்சாக்கள் ஆட்சியதிகாரத்துக்கு வந்திருப்பது இந்தியாவுக்கு கவலையைக் கொடுக்கும்.விடுதலை புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளுக்கு இந்தியா ஆதரவை வழங்கிய காரணத்தினால் ராஜபக்ச சகோதரர்களுடனான இந்தியாவின் உறவுகள் பலமானவையாக இருந்தபோதிலும், அவர்கள் சீனாவுடன் நெருக்கமான உறவுகளை வளர்த்துக்கொண்டதை அடுத்து உறவுகள் கசப்படைய ஆரம்பித்தன.

சர்வதேச மனித உரிமைகள் மன்றங்களில் இலங்கைக்கு பெய்ஜிங் ஆதரவை வழங்கியதையடுத்து ராஜபக்சாக்கள் சீனாவுடன் மேலும் நெருக்கமாகிக்கொண்டார்கள்.சீனாவின் மண்டலமும் பாதையும் செயற்திட்டத்தில் மிகவும் உற்சாகமான ஒரு பங்காளியாக இலங்கை மாறியது.சீனாவின் நீர்மூழ்கிகளும் போர்க்கப்பல்களும் கொழும்பு துறைமுகத்தில் வந்து தரித்து நிற்பதற்கும் கூட மகிந்த ராஜபக்ச அரசாங்கம் அனுமதித்தது.போர்க் குற்றங்களுக்காக பொறுப்புக்கூறல்,  மற்றும் மனித உரிமைகள் விவகாரங்களில் மேற்குலக நாடுகள் நெருக்குதலைக் கொடுக்குமானால் கோதாபய ராஜபக்ச அரசாங்கம் மீண்டும் சீனாவின் பக்கமாக சாயும் என்று எதிர்பார்க்கலாம்.

பொதுவில் இலங்கையுடனும் குறிப்பாக ராஜபக்சாக்களுடனுமான சீனாவின் பலம்பொருந்திய பிணைப்பு கவலை தருவதாகும்.இலங்கையின் தலைவர்களையும் அதிகாரிகளையும் நெருக்குவாரத்துக்குள்ளாக்குவதன் மூலமாக அந்த பிணைப்பை பலவீனப்படுத்திவிட முடியாது. பதிலாக இலங்கையில் முதலீடுகளைச் செய்வது தொடர்பிலும் உட்கட்டமைப்பு திட்டங்களை நடைமுறைப்படுத்துவதது தொடர்பிலும் தீர்மானங்களை எடுப்பதை துரிதப்படுத்துவதன் மூலம் இந்தியா பயனடையமுடியும்.இந்தியா முன்னெடுக்கும்  உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டங்களில் பெருமளவானவை தமிழ் வடக்கு மாகாணத்தியேயே இடம்பெறுகின்றன. இலங்கையின் ஏனைய பகுதிகளில்  குறிப்பாக சிங்கள பகுதிகளில் மக்கள் பயனடையக்கூடிய திட்டங்களை நடைமுறைப்படுத்தி நேசக்கரத்தை நீட்டினால் அயலார் மற்றும் பங்காளி என்ற இந்தியாவின் படிமம் மேம்படும்.இலங்கை கேந்திரமுக்கியத்துவ அடிப்படையில் முக்கியமானது.சீனாவின் நெருக்கமான அரவணைப்புக்குள் ராஜபக்சாக்கள் மீண்டும் சென்றுவிட அனுமதித்து இந்தியா மீண்டும் தவறிழைக்கக்கூடாது.அவ்வாறு செய்வது இந்தியாவுக்கு கட்டுப்படியாகாது.

இந்துஸ்தான் ரைம்ஸ்

இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் ராஜபக்ச குடும்பத்தை மீண்டும் ஆட்சியதிகாரத்துக்கு கொண்டுவந்திருக்கிறது.சகோதரர் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது விடுதலை புலிகளுடனான உள்நாட்டுப்போரின் இறுதிக்கட்டங்களில் பாதுகாப்பு விவகாரங்களைக் கையாண்ட கோதாபய ராஜபக்ச புதிய ஜனாதிபதியாக பதவியேற்றிருக்கிறார்.தென்னிலங்கையின் சிங்கள பெரும்பான்மையினரின் பரந்தளவிலான ஆதரவை பெற்றிருக்கும் கோதாபய, அதை பயன்படுத்தி வடக்கு, கிழக்கில் தமிழ், முஸ்லிம் சிறுபான்மையினத்தவர்களடமிருந்து வெளிக்காட்டப்பட்ட எதிர்ப்பை சரியீடு செய்யக்கூடியதாக இருக்கும். அவரது வருகை கொழும்பில் புதிய அரசாங்கம் ஒன்றின் வருகையை மாத்திரமல்ல, சகல சமூகங்களையும் அரவணைக்கின்ற ஒரு இலங்கைக்கான இடவெளியின் குறுகலையும் குறித்து நிற்கிறது.

இந்தியா ஒரு சங்கடமான நிலையில் இருக்கிறது.ஐந்து வருடங்களுக்கு முன்னர் மகிந்த ராஜபக்சவை பதவிகவிழ்ப்பதற்கு மைத்திரிபால சிறிசேனவினதும் ரணில் விக்கிரமசிங்கவினதும் தலைமையிலான அன்றைய எதிரணி கூட்டுச்சேருவதை இந்திய தீவிரமாக ஆதரித்தது. இந்தியா அவ்வாறு செய்ததற்கு இரு காரணிகள் தூண்டுதலாக இருந்தன. சீனா நோக்கிய புவிசார் அரசியல் சாய்வுக்கு ராஜபக்சாக்களின் செயற்பாடுகள் உதவின. அரசியல்ரீதியில் சகல சமூகங்களையும் அரவணைக்கின்ற இலங்கையொன்றை உருவாக்குவதற்கான இந்தியாவின் முயற்சிகளுக்கு ராஜபக்சாக்களின் கடுமையான  தமிழர் விரோதப் போக்கு எதிரானதாக இருந்தது.

ஆனால், ராஜபக்சவை தூக்கியெறிந்துவிட்டு மைத்திரி -- ரணில் தலைமையில் ஏற்படுத்தப்பட்ட ஆட்சி நொய்தானது என்பது இந்தியாவுக்கு தெரிந்திருந்தது.இரு தலைவர்களும் ஒத்துப்போகவில்லை.பொருளாதாரமும் முன்னேற்றம் காணவில்லை.ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் பாதுகாப்பு விவகாரத்தில் அரசாங்கத்தின் நம்பகத்தன்மையை பெரிதும் பாதித்தது.எந்த நேரத்திலும் ராஜபக்சாக்கள் ஆட்சியதிகாரத்துக்கு வந்துவிடுவர் என்ற நிலையே காணப்பட்டது. இந்தியா அவர்களுடன் ஊடாட்டங்களைச் செய்து தேர்தலில் தலையிடப்போவதில்லை என்று உறுதியளித்தது.

கோதாபய ராஜபக்சவுடன் பணியாற்றுவதைத் தவிர இந்தியாவுக்கு வேறு தெரிவு இல்லை.அதன் காரணத்தினால்தான் விவேகமான ஒரு நடவடிக்கையாக வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் செவ்வாய்கிழமை கொழும்புக்கு விஜயம் செய்து புதிய ஜனாதிபதியைச் சந்தித்தார். இம்மாத இறுதியில் கோதாபய புதுடில்லிக்கு விஜயம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், இந்தியா இரு விவகாரங்கள் தொடர்பில் தெளிவான எல்லைக்கோட்டைக் கீறிவிடவேண்டும். முதலாவது சீனா சம்பந்தப்பட்ட விவகாரம்.சுயாதிபத்தியம் கொண்ட ஒரு அரசு என்ற வகையில் பெய்ஜிங்குடன் பணியாற்றுவதற்கு கொழும்புக்கு சுதந்திரம் இருக்கிறது.ஆனால், சீனாவுடனான இலங்கையின் உறவுகள் இந்தியாவின் பாதுகாப்பு நலன்களைப் பாதிக்குமாக இருந்தால், தனது செல்வாக்கைப் பிரயோகிக்கவேண்டிவரும் என்பதை புதுடில்லி இலங்கைக்கு தெளிவுபுத்திவிட வேண்டும்.

 இரண்டாவது விவகாரம் தமிழர்களின் பிரச்சினை.  தமிழர்களின் கிளர்ச்சி மீண்டும் மூளக்கூடியதாக இலங்கையை இரு பிரத்தியேகமான இனத்துவ அரசாக மாற்றிவிடக்கூடாது என்று ராஜபக்சாக்களுக்கு சொல்லப்படவேண்டும்.அவ்வாறான நிலைமை தோன்றினால், அது இரு நாடுகளுக்குமே பாதகமாயமையும்.நேபாளத்தில் இழைத்த தவறில் இருந்து இந்தியா படிப்பினைகளைப் பெற்றுக்கொள்ளவேண்டும். அந்நாட்டில் கே.பி.ஒலியின் தீவிர தேசியவாத -- பெரும்பான்மையினவாத அரசாங்கத்தை அனுசரித்துப்போகும் முயற்சியில் இந்தியா சகல சமூகங்களையும் அரவணைத்துச் செல்லக்கூடிய ஏற்பாடுகளுடனான அரசியலமைப்பொன்றை உருவாக்கும் செயன்முறைகளுக்கு வழங்கிய ஆதரவை விலக்கிக்கொண்டது.அதன் விளைவாக நேபாளத்தில் தனக்கிருந்த செல்வாக்குசெலுத்தும் தகுதியை இந்திய இழந்தது.சீனா கணிசமான ஊடுருவர்களை செய்தது.கொழும்பில் உள்ள அரசாங்கத்தை டில்லி மதிக்கவேண்டும்.ஆனால், அவசியமான வேளைகளில் உறுதியை வெளிக்காட்டவேண்டும்.

https://www.virakesari.lk/article/69367

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனியென்ன தீவில் குடும்ப ஆட்சி சைனாவின் திட்டங்கள் இனி தடையின்றி தொடரும் பழையபடி மாரித்தவக்கைக்கள் போல் மேட்கு உலகமும் டெல்லியும் கத்துவினம். கோத்தா வருவதுக்கு சான்சே இல்லை என்று நினைத்தவர்கள் அவர் வந்தபின்  இன்னும் அபத்தமாய் நினைப்பது கோத்தா சைனாவின் பக்கம் போகமாட்டார் என்று நினைப்பது .மகிந்த குடும்பம் திரும்ப வந்ததுக்கு காரணமே சைனா தான் அதை விட்டு ஓவர் நைட்டில் இலங்கை சிங்கபூர் ஆகிடும் கொத்தாவால் என்று கொழும்பு பேப்பர்கள் கதைவிடுவது சகிக்க முடியல.

Link to comment
Share on other sites

"இரண்டாவது விவகாரம் தமிழர்களின் பிரச்சினை.  தமிழர்களின் கிளர்ச்சி மீண்டும் மூளக்கூடியதாக இலங்கையை இரு பிரத்தியேகமான இனத்துவ அரசாக மாற்றிவிடக்கூடாது என்று ராஜபக்சாக்களுக்கு சொல்லப்படவேண்டும்.அவ்வாறான நிலைமை தோன்றினால், அது இரு நாடுகளுக்குமே பாதகமாயமையும்

இந்த அச்சில் வைத்துத்தான் உங்களுக்கான (இந்தியாவிற்கான) அழிவை சீனா செய்துவருகின்றது.
 

இந்த அணுகுமுறையில் இந்திய வெளிவிவகார கொள்கை மாறும்வரை, சீனாவை / சிங்களத்தை ஒன்றும் செய்யமுடியாது. 

Link to comment
Share on other sites

1 hour ago, ampanai said:

"இரண்டாவது விவகாரம் தமிழர்களின் பிரச்சினை.  தமிழர்களின் கிளர்ச்சி மீண்டும் மூளக்கூடியதாக இலங்கையை இரு பிரத்தியேகமான இனத்துவ அரசாக மாற்றிவிடக்கூடாது என்று ராஜபக்சாக்களுக்கு சொல்லப்படவேண்டும்.அவ்வாறான நிலைமை தோன்றினால், அது இரு நாடுகளுக்குமே பாதகமாயமையும்

இந்த அச்சில் வைத்துத்தான் உங்களுக்கான (இந்தியாவிற்கான) அழிவை சீனா செய்துவருகின்றது.
 

இந்த அணுகுமுறையில் இந்திய வெளிவிவகார கொள்கை மாறும்வரை, சீனாவை / சிங்களத்தை ஒன்றும் செய்யமுடியாது. 

சரியான கூற்று 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில்.. தமிழகத்தில்.. கருணாநிதி குடும்ப ஆட்சியும் உழலும் போல்.. சொறீலங்காவில். ராஜபக்ச குடும்ப ஆட்சியும் சீன உறவும்... கட்டுப்படுத்தவே முடியாதவை.

கட்டுப்படுத்த இருந்த ஒரே கராணியான விடுதலைப்புலிகளையும் தமிழர் விடுதலைப் போராட்டத்தையும்.. இல்லாமல் செய்ய கங்கணம் கட்டியதன் மூலம்.. ஹிந்தியா தனது தலையில் தானே மண்ணைவாரிப் போட்டுள்ளது. அவ்வளவே. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நீங்கள் மீள மீள பொய்யை சொல்வதால் உண்மை ஆகாது. 1.தேசிய அல்லது குறைந்தது  மாநில கட்சி அந்தஸ்து இருந்தால் மட்டுமே நிரந்தர சின்னம். 2. மாநில கட்சி அந்தஸ்துக்கு ஒன்றில் 10% வாக்கு அல்லது 2% வாக்கும் இரு லோக்சபா சீட்டில் வெற்றியும் அடைந்திருக்க வேண்டும். 3. இது இரெண்டும் நாதக வுக்கு இல்லை. 4. மாநில கட்சி அந்தஸ்து இல்லாவிடின் - தேர்தல் அறிவிக்கப்பட்டு யார் முதலில் கோருகிறார்களோ அவர்களுக்கே சின்னம் கொடுக்கப்படும். 5. சீமான் அசட்டையாக தூங்கி கொண்டிருக்க ஏனையோர் (திமுக) தந்திரமாக சுயேட்சை மூலம் அந்த சின்னத்தை கோரி விட்டது. 6. வாசனுக்கு இப்படி யாரும் செய்யவில்லை. 7. திருமாவின் சின்னத்தையும், வைகோவின் சின்னத்தையும் இன்னொரு தக்க காரணம் சொல்லி மடக்கினாலும், திருமா போராடி வென்றார். வைகோ விட்டு விட்டார். 8. சீமானும் சுப்ரீம் கோர்ட் வரை போனார். முடியவில்லை. 9. தேர்தல் ஆணையம் களவு செய்கிறதெனில் சுப்ரீம் கோர்ட்டும் அதை ஆமோதித்ததா? உண்மையில் இதில் ஆணையத்தின் எந்த பாரபட்சமும் இல்லை, சீமானின் சோம்பேறித்தனத்தை பாவித்து திமுக சின்னத்தை சுயேட்சை மூலம் தந்திரமாக முடக்கி விட்டது.
    • திருநெல்வேலி மக்களவை தொகுதியில் பாஜகவின் நயினார் நாகேந்திரன் வெற்றிபெறுவார் என ஊகிக்கின்றேன்.
    • ஏன் அந்தக்கவலை? தமிழ்நாட்டில் பிஜேபி ஆட்சிக்கு வந்தால் அப்படி என்ன பெரிதாக கெடுதல் நடந்து விடும்?
    • ஒம் 1000ரூபாய்க்கு பிற‌ந்த‌வ‌ங்ள் என்று  திருட‌ர்க‌ளை பார்த்து சொல்லி விட்டா ச‌கோத‌ரி காளிய‌ம்மாள் வென்று விட‌க் கூடாது என்று அந்த‌ தொகுதியில் ஒரு ஓட்டுக்கு 2000ரூபாய்......................ப‌டிச்ச‌ அறிவுள்ள‌ ஜீவிக‌ள் அந்த் 2000ரூபாயை வேண்டி இருக்காதுக‌ள் ஏழை ம‌க்க‌ள் க‌ண்டிப்பாய் வேண்டி இருப்பின‌ம்......................ப‌ண‌ம் கொடுக்கும் முறைய‌ முற்றிலுமாய் இல்மாம‌ ப‌ண்ண‌னும்...............................பொய் என்றால் பாருங்கோ என்னும் ப‌த்து வ‌ருட‌ம் க‌ழித்து காசு கொடுத்து ம‌க்க‌ளிட‌ன் ஓட்டை பெற‌ முடியாது...............கால‌ம் கால‌மாய் வேண்டின‌ வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் கை நீட்டி வேண்டுங்க‌ள்..................... சிறு கால‌ம் போக‌ காசு கொண்டு வ‌ருப‌வ‌ர்க‌ளுக்கு வீட்டுக்குள் வைச்சு ஊமை குத்து விழும் அதை காணொளி மூல‌ம் காண‌லாம் க‌ண்டு ரசிக்க‌லாம்😂😁🤣......................................
    • யார் து…துரைமுருகன் சொல்வதையா…நோ சான்ஸ்🤣. ஜூன் 4 தெரியும்தானே ஏன் அவசரம். எனது ஒரே கவலை பிஜேபி எவ்வளவு சீட் எடுக்கப்போகிறது என்பது மட்டுமே. பூஜ்ஜியம் என்றால் சந்தோசம்.  பூஜ்ஜியத்துக்கு மேல் கூடும் ஒவ்வொரு சீட்டுக்கும் ஏற்ப கவலை கூடும். தேர்தல் கட்டம் கட்டமாக தானே நடக்குது? இன்று முழு உபிக்கும் நடக்கவில்லை. நடந்த இடங்களில் 67% மாம். ஆனால் மேற்கு வங்கத்தில் நடந்த இடங்களில் 77 சதவீதமாம். இன்று நடந்த மொத்த தொகுதிகளில் 62% பதிவு. ஆனால் தமிழ் நாட்டு தொகுதிகளில் 72.09% நான் யாழ்கள திமுக ஆதரவாளன் இல்லை. ஆனால் சீமான், பிஜேபியை எதிர்ப்பவன். பழனிச்சாமி எதிர்கட்சி தலைவர், குறைந்ததது 29% வாக்கு வங்கி உள்ள கட்சியின் தலைவர். அவர் எப்படி வாக்கை பிரிப்பவர் ஆவார்? விட்டால் திமுக வும் வாக்கை பிரிக்கும் கட்சி என்பீர்கள் போலுள்ளது. 10% கீழே வாக்கு வங்கி, தனியே ஒரு தொகுதியிலும் வெல்ல வாய்ப்பு இல்லை என தெளிவாக தெரிந்தும், 39 தொகுதியிலும் நிற்பவர்கள்தான் வாக்கை பிரிப்போர்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.