Jump to content

தந்தை செல்வா, தளபதி அமிர்... தீபாவளிச் சம்பந்தர் எனலாமா?


Recommended Posts

எங்கள் தமிழ் அரசியல் வரலாற்றை ஒரு கணம் எட்டிப் பார்க்கின்றேன்.
அடங்காத் தமிழன் சுந்தரலிங்கத்தின்  ஜனநாயக வீரம் புரிகிறது.
இரும்பு மனிதன் நாகநாதனின் வலிமை தெரிகிறது. 
கோப்பாய்க் கோமகன் வன்னியசிங்கத்தின் நேர்மை தெரிகிறது.
காவலூர்க் காவலன் பண்டிதர் கா.பொ. இரத்தினம் அவர்களின் அறிவுடைமை பளிச் சிடுகிறது.
இவற்றுக்கு மேலாக, ஈழத் தமிழினத்தின் தந்தையாக செல்வநாயகமும் தளபதியாக அமிர்தலிங்கமும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் நாகரிகம் தமிழினத்தின் உன்னதத்தை உயர்வு படுத்தி நிற்கிறது.
இன்று அந்த நிலைமைகள் ஏதும் உண்டா என்று கேட்டால் இல்லவே இல்லை.


தமிழ் அரசியல் தரப்புகளைப் பார்த்து நக்கலும் நையாண்டியும் செய்கின்ற அளவிலேயே முகநூல் பதிவுகள் உள்ளன. இந்த உண்மைகளைக்கூட எங்கள் தமிழ் அரசியல்வாதிகள் எந்தளவுக்குப் புரிந்து கொண்டுள்ளனர் என்பது கேள்விக்குரியதே. 

இவை ஒருபுறமிருக்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர் முதுமையின் பாதிப்புகளைக் கடுமையாக அனுபவித்துக் கொண்டிருப்பதால்; அவரை உதாசீனம் செய்து கூட்டமைப்பை ஒரு கூத்தாடி அமைப்பாக மாற்றி, தமிழினத்தையே கேவலப்படுத்துகின்ற நடவடிக்கைகள் நடந்தாகின்றன.

இந்த நிலையில் தமிழ் மக்களின் அரசியல் தலைமையை கூட்டமைப்பிடம் கையளித்திருப்பது சரியா? என்பதைத் தமிழ் மக்கள் மீள் பரிசீலனை செய்ய வேண்டும்.
இதை நாம் கூறுவதானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீதான காழ்ப்புணர்வன்று.

மாறாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசுக்குக் காலஅவகாசம் கொடுக்கக்கூடாது என்று தமிழ் மக்கள் கூற, இல்லை கால அவகாசம் கொடுக்க வேண்டும் எனக் கூறியது கூட்டமைப்பின் தலைமை.

இதேபோன்று பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவுக்கு ஆதரவு வழங்கும் போதெல்லாம் நிபந்தனை விதித்து தமிழ் அரசியல்கைதிகளை விடுவியுங்கள் என்றால், இல்லை நிபந் தனை விதிக்க முடியாது என்றார்கள். இன்று நிலைமை என்னவாயிற்று.

இந்த நிலைமை ஏற்படும் என்பதை அனைத்துத் தமிழ் மக்களும் அறிந்திருக்கையில், கூட்டமைப்பின் முக்கிய புள்ளிகள் மட்டும் அதை உணராமல் இருந்தது எதற்காக என்ற கேள்விக்குப் பதில் தரமுடியுமா?

ஒரு நாட்டின் அரசியல் மாற்றங்களை மதிப்பிட முடியாதவர்களைத் தமிழினம் தலைமை யாகக் கொள்ளுமாயின் அது இன்னமும் ஈனப்படுவதற்கேயன்றி வேறில்லை.
இறுதியாக அடுத்த தீபாவளிக்குத் தீர்வு என்று நான்கு தீபாவளிகள் உச்சரித்த இரா. சம்பந்தர் இனி என்ன சொல்லப் போகிறார்.

தீபாவளிக்குத் தீர்வு என்று அவர் அடிக்கடி கூறியதற்காக அவரை தீபாவளி சம்பந்தர் என்று அழைக்க முடியுமா என்ன?

ஆக, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர் தன் முதுமையை உணர்ந்து தக்க தலைவரை அறிமுகப்படுத்துவதே அவர் தமிழ் இனத்துக் குச் செய்யும் உதவியாகும்.

http://valampurii.lk/valampurii/content.php?id=19875&ctype=news

Link to comment
Share on other sites


அடங்காத் தமிழன் சுந்தரலிங்கத்தின்  ஜனநாயக வீரம் புரிகிறது.
இரும்பு மனிதன் நாகநாதனின் வலிமை தெரிகிறது. 
கோப்பாய்க் கோமகன் வன்னியசிங்கத்தின் நேர்மை தெரிகிறது.
காவலூர்க் காவலன் பண்டிதர் கா.பொ. இரத்தினம் அவர்களின் அறிவுடைமை பளிச் சிடுகிறது.
இவற்றுக்கு மேலாக, ஈழத் தமிழினத்தின் தந்தையாக செல்வநாயகமும் தளபதியாக அமிர்தலிங்கமும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் நாகரிகம் தமிழினத்தின் உன்னதத்தை உயர்வு படுத்தி நிற்கிறது.
இன்று அந்த நிலைமைகள் ஏதும் உண்டா என்று கேட்டால் இல்லவே இல்லை.

 

அமிதாலிங்கம் ஏன்  இதட்குள் வருகிறார் ?  அதட்குள் "தளபதி " என அடைமொழி வேறா  ?? 

தளபதி என்றால் போர்க்களத்தில் (போராட்ட ) முன் நின்று வழிநடாத்தியல்லோ இருக்கவேண்டும்  ? 

பிறரின் ரத்தத்தில் தங்கள் நெற்றியில் திலகமிடுவதுதானா ஒரு தளபதியின் வீரம்  ? 

பிறரின் கையில் துப்பாக்கியை கொடுத்து அவனை தமக்காக பலிகொடுத்ததுதான் இந்த தளபதிகள் செய்தது.  

பிரபாகரன் பிறந்த மண்ணில்தான் இவர்களை போன்றவர்களும் பிறந்தார்கள். 

இதுதான் எமது அதிஸ்டமும் துரதிஸ்டமும்.

 

Link to comment
Share on other sites

1 hour ago, ampanai said:

தீபாவளிக்குத் தீர்வு என்று அவர் அடிக்கடி கூறியதற்காக அவரை தீபாவளி சம்பந்தர் என்று அழைக்க முடியுமா என்ன?

தலைவனாக காட்டிக்கொள்வது இலகு.  

மக்கள் போற்றும்  தலைவனாவது  கடினம்  !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ampanai said:

எங்கள் தமிழ் அரசியல் வரலாற்றை ஒரு கணம் எட்டிப் பார்க்கின்றேன்.
அடங்காத் தமிழன் சுந்தரலிங்கத்தின்  ஜனநாயக வீரம் புரிகிறது.
இரும்பு மனிதன் நாகநாதனின் வலிமை தெரிகிறது. 
கோப்பாய்க் கோமகன் வன்னியசிங்கத்தின் நேர்மை தெரிகிறது.
காவலூர்க் காவலன் பண்டிதர் கா.பொ. இரத்தினம் அவர்களின் அறிவுடைமை பளிச் சிடுகிறது.
இவற்றுக்கு மேலாக, ஈழத் தமிழினத்தின் தந்தையாக செல்வநாயகமும் தளபதியாக அமிர்தலிங்கமும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் நாகரிகம் தமிழினத்தின் உன்னதத்தை உயர்வு படுத்தி நிற்கிறது.
இன்று அந்த நிலைமைகள் ஏதும் உண்டா என்று கேட்டால் இல்லவே இல்லை.

நல்லதொரு கட்டுரையை.... அமிர்தலிங்கத்தின்ரை, பெயரை போட்டு கெடுத்து விட்டார்கள். 
இதற்குள்... தள(ர்)பதி  என்று அடைமொழி கொடுத்ததை பார்க்க கடுப்பாக இருக்கு. 😣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Maharajah said:


அடங்காத் தமிழன் சுந்தரலிங்கத்தின்  ஜனநாயக வீரம் புரிகிறது.
இரும்பு மனிதன் நாகநாதனின் வலிமை தெரிகிறது. 
கோப்பாய்க் கோமகன் வன்னியசிங்கத்தின் நேர்மை தெரிகிறது.
காவலூர்க் காவலன் பண்டிதர் கா.பொ. இரத்தினம் அவர்களின் அறிவுடைமை பளிச் சிடுகிறது.
இவற்றுக்கு மேலாக, ஈழத் தமிழினத்தின் தந்தையாக செல்வநாயகமும் தளபதியாக அமிர்தலிங்கமும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் நாகரிகம் தமிழினத்தின் உன்னதத்தை உயர்வு படுத்தி நிற்கிறது.
இன்று அந்த நிலைமைகள் ஏதும் உண்டா என்று கேட்டால் இல்லவே இல்லை.

 

அமிதாலிங்கம் ஏன்  இதட்குள் வருகிறார் ?  அதட்குள் "தளபதி " என அடைமொழி வேறா  ?? 

தளபதி என்றால் போர்க்களத்தில் (போராட்ட ) முன் நின்று வழிநடாத்தியல்லோ இருக்கவேண்டும்  ? 

பிறரின் ரத்தத்தில் தங்கள் நெற்றியில் திலகமிடுவதுதானா ஒரு தளபதியின் வீரம்  ? 

பிறரின் கையில் துப்பாக்கியை கொடுத்து அவனை தமக்காக பலிகொடுத்ததுதான் இந்த தளபதிகள் செய்தது.  

பிரபாகரன் பிறந்த மண்ணில்தான் இவர்களை போன்றவர்களும் பிறந்தார்கள். 

இதுதான் எமது அதிஸ்டமும் துரதிஸ்டமும்.

 

மிகவும் சரியான  கருத்து, மகாராஜா. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரப்பர் ஷெல் அமிர்தலிங்கம்.. குடுகுடுப்பை சம்பந்தன்.. இவை தான் இவர்களுக்கான யதார்த்த அடைமொழிகளாக இருக்க முடியும். 

Link to comment
Share on other sites

அரசியல் ' தளபதியாகவே ' அமிர் அன்றைய தமிழர்களால் பார்க்கப்பட்டார். உசுப்பல் பேச்சுக்களால் இளையவர்களை ஆயுதம் தூக்க வைத்தவர் என்றும் கூறப்படுவார். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது .
    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.