Jump to content

புதிய ஆளுநர்கள் சற்று முன்னர் பதவிப் பிரமாணம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Tikiri-Kobbekaduwa--668x450.jpg

புதிய ஆளுநர்கள் சற்று முன்னர் பதவிப் பிரமாணம்

6 மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் சற்று முன்னர் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு முன்பாக அவர்கள் இன்று (வியாழக்கிழமை) பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர்.

இதன்படி 6 மாகாணங்களுக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர்கள் விபரம்,

  • மேல் மாகாணம் – டொக்டர் சீதா அரபேபொல
  • மத்திய மாகாணம் – லலித் யு கமகே
  • ஊவா மாகாணம் – ராஜா கொல்லூரே
  • தென் மாகாணம் – டொக்டர் வில்லி கமகே
  • வடமேல் மாகாண – ஏ.ஜே.எம் முஸம்மில்
  • சப்ரகமுவ மாகாணம் – டிகிரி கொப்பேகடுவ

6 மாகாணங்களுக்கான ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளபோதிலும் வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கான ஆளுநர்கள் நியமிக்கப்படவில்லையென்பது சுட்டிக்காட்டத்தக்கது.

வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் உட்பட அனைத்து ஆளுநர்களையும் தங்கள் பதவிகளில் இருந்து விலகுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று அறிவுறுத்தல் விடுத்திருந்தார்.

இதனையடுத்து வடக்கு, கிழக்கு உட்பட அனைத்து ஆளுநர்களும் தமது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்தனர்.

அந்தவகையில் மேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.முஸம்மில், வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன், மத்திய மாகாண ஆளுநர் ரஜித கீர்த்தி தென்னகோன், ஊவா மாகாண ஆளுநர் மைத்ரி குணரத்ன, தென் மாகாண ஆளுநர் ஹேமால் குணசேகர, கிழக்கு மாகாண ஆளுநர் விஜயலால் டி சில்வா, வடமத்திய மாகாண ஆளுநர் சரத் ஏக்கநாயக்க, வடமேல் மாகாண ஆளுநர்பசேல ஜயரத்ன சப்ரகமுவ மாகாண ஆளுநர் தம்ம திஸாநாயக்க ஆகியோர் பதவி விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/புதிய-ஆளுநர்கள்-பதவிப்-ப/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன ஒரு தமிழருக்கும் ஆளுநராகும் தகுதி இல்லைப் போல.. கோத்தாவின் கூடாரத்தில். 

Link to comment
Share on other sites

1 hour ago, nedukkalapoovan said:

என்ன ஒரு தமிழருக்கும் ஆளுநராகும் தகுதி இல்லைப் போல.. கோத்தாவின் கூடாரத்தில். 

தகுதியுள்ள ஒரு தமிழரையாவது காட்டுங்கள் பார்க்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, Jude said:

தகுதியுள்ள ஒரு தமிழரையாவது காட்டுங்கள் பார்க்கலாம்.

எத்தனையோ பேர் இருக்கிறார்கள். இளம் ஆட்கள் இருக்கிறார்கள். இந்த ஆளுநர்களை விட தகுதி வாய்ந்த பல தமிழர்கள் அரச சேவைகளில் சேவையாற்றி அரசியல் ரீதியாக ஓரங்கட்டப்பட்டு இருக்கிறார்கள்.

உதாரணத்துக்கு.. யாழ் மாநகர ஆணையாளராக இருந்த.. பொ.வாகீசன். ஒரு நேர்த்தியான அதிகாரி. சகல தகமைகளையும் கொண்டவர். இளையவர். ஜப்பான் வரை அனுப்பப்பட்டு.. அரச கரம.. விவகாரங்கள் வரை புகட்டட்டவர். இன்று.. செயற்படாத.. மாகாண சபைக்குள்.. ஒளித்து வைக்கப்பட்டுள்ளார்.

இவர் ஓர் உதாரணம். இப்படிப் பலர். உங்களுக்குத் தெரியவில்லை என்பதற்காக..??!

தற்போதைய வடக்கு ஆளுநருக்கு என்னானது..?! அவருக்கும் அந்தத் தகுதி இல்லாமல் போய்விட்டதா..??????!

நல்லாவே கோத்தாவுக்கு முண்டுகொடுக்கிறீர்கள்.. எதுக்கோ..??!

கோத்தா ஒரு சர்வாதிகாரி பாசிச இனவாதி.. என்பதை மிகவிரைவில் உலகம் உணரும். 

 

Link to comment
Share on other sites

2 hours ago, Jude said:

தகுதியுள்ள ஒரு தமிழரையாவது காட்டுங்கள் பார்க்கலாம்.

ஏன் விநாயகமூர்த்தி முரளீதரன் இல்லையா   ???? 

1 hour ago, nedukkalapoovan said:

எத்தனையோ பேர் இருக்கிறார்கள். இளம் ஆட்கள் இருக்கிறார்கள். இந்த ஆளுநர்களை விட தகுதி வாய்ந்த பல தமிழர்கள் அரச சேவைகளில் சேவையாற்றி அரசியல் ரீதியாக ஓரங்கட்டப்பட்டு இருக்கிறார்கள்.

உதாரணத்துக்கு.. யாழ் மாநகர ஆணையாளராக இருந்த.. பொ.வாகீசன். ஒரு நேர்த்தியான அதிகாரி. சகல தகமைகளையும் கொண்டவர். இளையவர். ஜப்பான் வரை அனுப்பப்பட்டு.. அரச கரம.. விவகாரங்கள் வரை புகட்டட்டவர். இன்று.. செயற்படாத.. மாகாண சபைக்குள்.. ஒளித்து வைக்கப்பட்டுள்ளார்.

இவர் ஓர் உதாரணம். இப்படிப் பலர். உங்களுக்குத் தெரியவில்லை என்பதற்காக..??!

தற்போதைய வடக்கு ஆளுநருக்கு என்னானது..?! அவருக்கும் அந்தத் தகுதி இல்லாமல் போய்விட்டதா..??????!

நல்லாவே கோத்தாவுக்கு முண்டுகொடுக்கிறீர்கள்.. எதுக்கோ..??!

கோத்தா ஒரு சர்வாதிகாரி பாசிச இனவாதி.. என்பதை மிகவிரைவில் உலகம் உணரும். 

 

நெடுக்ஸ்,  

ஜுட் நையாண்டி செய்கிறார். நீங்கள் வேறு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Jude said:

தகுதியுள்ள ஒரு தமிழரையாவது காட்டுங்கள் பார்க்கலாம்.

சிங்கள தேசத்துக்கோ

கோத்தபாயவுக்கோ

ஒரு  தமிழரும்  தகுதியற்றவர்கள் தானே?

(நன்றி மோகன்  அண்ணா விருப்புக்கு)

Link to comment
Share on other sites

வட மாகாண ஆளுனரக ஆரியவம்ச திசநாயக்கவை நியமனம் செய்யலாம். மக்களின் விருப்பம. அது. 

Link to comment
Share on other sites

மகிந்த சகோதரர்கள் பொதுவாக வடக்கு கிழக்கிற்கு முன்னால் இராணுவத் தளபதிகளை நியமிப்பதையே வழக்கமாக கொண்டவர்கள். பார்ப்போம் இந்த முறை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு மாகாண ஆளுநர்  பேராசிரியர் திஸ்ஸவிதாரனவாம்.
வடக்கிற்கு முரளிதரன்🤣 என்று சொல்லினம்.
முத்தையா முரளிதரனாம்  🤣🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, Jude said:

தகுதியுள்ள ஒரு தமிழரையாவது காட்டுங்கள் பார்க்கலாம்.

 

டக்லஸ் மாமா பொருத்தமானவர் 

Link to comment
Share on other sites

பவுத்த மாநாடு கொண்டாடின சுரேன் ராகவன்ட கனவுல மண்ணை அள்ளி போட்டுட்டாங்களே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

காலமே இது பொய்யட😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப எனி டக்கிளஸ் தனக்கு வேண்டியவரை பிரேரிக்க.. கோத்தா தனக்கு வேண்டியவரப் போடுவார். எல்லாம் ஒரு சும்மா தான் நடக்குது.

ஆனாலும்.. 60,000 ரூபா ராகவனுக்கு 6,00000 கொடுத்து பாதுகாப்பென்பது.. பகிடியுடன் கூடிய யதார்த்தம்.. சொறீலங்காவில். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.