Jump to content

இலங்கை கனிஷ்ட குத்துச்சண்டை அணியில் ஹார்ட்லி மாணவன் ஷானுஜன்


Recommended Posts

இலங்கை கனிஷ்ட குத்துச்சண்டை அணியில் ஹார்ட்லி மாணவன் ஷானுஜன்

 
eeeeeeeeeee-696x464.jpg
dimo.gif

சுவீடனில் போராஸ் நகரில் நடைபெறவுள்ள கிங் ஒவ் ரிங் (King of the Ring 2019) சர்வதேச குத்துச்சண்டைப் கோதாவில் யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரியைச் சேர்ந்த விக்னேஸ்வரன் ஷானுஜன் பங்குபற்றவுள்ளார். 

சுவீடனின் போராஸ் உள்ளக அரங்கில் எதிர்வரும் 21ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை நடைபெறவுள்ள கிங் ஒவ் ரிங் குத்துச்சண்டை கோதாவில் சுவீடன், இங்கிலாந்து, நோர்வே, பின்லாந்து, போர்த்துக்கல், ஸ்கொட்லாந்து, உகண்டா, கனடா, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட 22 நாடுகளைச் சேர்ந்த சுமார் 500இற்கும் அதிகமான வீரர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.  

தட்டெறிதலில் பருத்தித்துறை ஹார்ட்லி மாணவன் சானுஜனுக்கு முதல் தங்கம்

ஐரோப்பாவில் நடைபெறுகின்ற பாடசாலை மாணவர்களுக்கான மிகப் பெரிய குத்துச்சண்டைப் போட்டி இதுவாகும்

இந்த நிலையில், குறித்த போட்டித் தொடரில் முதல்தடவையாக இலங்கையிலிருந்து ஏழு பாடசாலை மாணவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். அத்துடன், இலங்கையைச் சேர்ந்த மாணவர்கள் இவ்வாறு சர்வதேச குத்துச்சண்டைப் போட்டியொன்றில் கலந்துகொள்வது இதுவே முதல்தடவையாகும்.  

இதன்படி, ஆண்களுக்கான 81 கிலோ கிராம் எடைப் பிரிவில் பருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரி மாணவன் விக்னேஸ்வரன் ஷானுஜன் இலங்கை சார்பாக போட்டியிடவுள்ளார்

தனது ஆரம்பக் கல்வியை யாழ். தும்பளை சிவப்பிரகாசம் மகா வித்தியாலயத்தில் மேற்கொண்ட ஷானுஜன், .பொ. சாதாரண பரீட்சையில் சித்தியடைந்த பிறகு பருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரியில் உயர்தரம் கற்பதற்கு நுழைந்தார்

இதேநேரம், ஆரம்பத்தில் குண்டு எறிதல் போட்டியில் மாத்திரம் அதிக கவனம் செலுத்தி வந்த ஷானுஜன், ஹார்ட்லி கல்லூரிக்கு வந்த பிறகு அந்தக் கல்லூரியின் மெய்வல்லுனர் பயிற்றுநரான வடிவேஸ்வரன் ஹரிகரனின் வழிகாட்டலுடன் தட்டெறிதல் போட்டியிலும் கவனம் செலுத்தினார்

இதன்பிரதிபலனாக கடந்த வருடம் நடைபெற்ற மாகாண மட்டப் போட்டிகளில் பங்குகொண்டு குண்டு எறிதல் மற்றும் தட்டெறிதல் போட்டிகளில் வெற்றிகளைப் பதிவு செய்தார். எனினும், அவரால் தேசிய மட்டப் போட்டிகளில் எதிர்பார்த்தளவு திறமைகளை வெளிப்படுத்த முடியாமல் போனது.

இந்த நிலையில், இவ்வருடம் நடைபெற்ற மாகாண மட்ட பாடசாலைகள் மெய்வல்லுனர் போட்டிகளில் 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான தட்டெறிதலில் முதலிடத்தைப் பெற்றுக்கொண்ட ஷானுஜன், தேசிய மட்டப் போட்டிகளில் பங்குபற்றும் வாய்ப்பையும் பெற்றதுடன், முதல்தடவையாக தங்கப் பதக்கம் வென்று சாதனையும் படைத்தார்.

  • 1-3-9.jpg
  • 2-3-4.jpg

இந்த நிலையில், இம்மாத முற்பகுதியில் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுனர் போட்டிகளில் பங்குபற்றியிருந்த ஷானுஜன், தட்டெறிதல் போட்டியில் முதல்தடவையாக தங்கப் பதக்கத்தை வென்று அசத்தினார்

இதுஇவ்வாறிருக்க, 2018ஆம் ஆண்டு முதல் குத்துச்சண்டை விளையாட்டிலும் ஈடுபட்டு வருகின்ற ஷானுஜன், இதுவரை தேசிய மட்டத்தில் 2 தங்கம் மற்றும் 2 வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளார்

இதில் 75 + 81 எடைப் பிரிவில் போட்டியிட்ட அவர், 2018ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய கனிஷ் குத்துச்சண்டைப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும், அதனைத்தொடர்ந்து நடைபெற்ற அகில இலங்கை பாடசாலைகள் குத்துச்சண்டைப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும் அடுத்தடுத்து பெற்றுக் கொண்டார்

இதேநேரம், இவ்வருடம் நடைபெற்ற தேசிய கனிஷ் குத்துச்சண்டைப் போட்டி மற்றும் அகில இலங்கை பாடசாலைகள் குத்துச்சண்டை போட்டியில் தங்கப் பதக்கங்களை வென்று அசத்திய ஷானுஜன், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடத்தப்படுகின்ற இவ்வருடத்துக்கான குத்துச்சண்டைப் போட்டியிலும் தங்கப் பதக்கத்தினை சுவீகரித்தார்

இந்த நிலையில், ஷானுஜனின் பயிற்சியாளராக நலின் ஹெட்டியாரச்சி செயற்பட்டு வருகின்றார்

இதேநேரம், கண்டி திருத்துவக் கல்லூரி மாணவனான அத்தாப் மன்சிலும் இம்முறை போட்டித் தொடரில் கனிஷ் பிரிவில் ஆண்களுக்கான 41 கிலோ கிராம் எடைப் பிரிவில் போட்டியிடவுள்ளார்.

அண்மையில் நடைபெற்ற ஸ்டப்ஸ் கேடய குத்துச்சண்டைப் போட்டியில் பங்குபற்றியிருந்த மன்சில், அதிசிறந்த திறமைகளை வெளிப்படுத்திய வீரர்களில் ஒருவராக இடம்பிடித்தார். இவரது தந்தையான மன்சில் இலங்கை மேசைப்பந்து அணிக்காக விளையாடிய முன்னாள் வீரராவார்.

இலங்கை அணி விபரம் 

அத்தாப் மன்சில் (41 கி.கி), ஷானுஜன் (81 கி.கி), சுபான் ஹன்சஜ (49 கி.கி), கவீஷ மனதுங்க (52 கி.கி), நிசல் ரங்கன பண்டார (52 கி.கி), விமுக் ஹெட்டியாரச்சி (56 கி.கி), சேத்திய ஏக்கநாயக்க (60 கி.கி)

http://www.thepapare.com/hartley-college-shanujan-take-part-king-of-the-ring-international-boxing-tournament-tamil/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்தியாவில் லோக்சபா தேர்தல் கட்டம் கட்டமாக நடப்ப்துதான் வழமை. பெரிய மாநிலங்களில் பிரிப்பார்கள். ஆனால் வெறும் 39 தொகுதிகள் உடைய மத்திய அளவு மாநிலமான தமிழ் நாட்டில் ஒரே நாளில்தான் வைப்பார்கள்.   கை காட்டலும் தொடரும்🤣
    • கெட்ட வார்த்தை பின்னோட்டங்கள் இட்டவர்கள் எல்லோரும் நாம் தமிழர் கட்சிகளை சேர்ந்தவர்களாம்.
    • பதில் 9 புள்ளிகளில் வழங்கப்பட்டுள்ளது.
    • என்றுமே உண்மையாக இருந்தால் இந்த உலகில் வாழ்வது மிக சிரமம்.
    • நாளைய தினம் முதல் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக் கூடிய அபாயம் உள்ளதாக  எரிபொருள் விநியோகஸ்தர்கள்  சங்கம் தெரிவித்துள்ளது.    எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரி காரணமாக இந்த நிலைமை ஏற்படக்கூடிய ஆபத்து உள்ளது என்று  அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் கபில நாவுதுன்ன(Kapila Navuthunna) தெரிவித்துள்ளார். இதன்படி, எரிபொருள் நிரப்பு நிலையங்களின்  வற் தவணைகள் நாளை முதல் செலுத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். நாளை முதல் செலுத்த வேண்டிய வற் வரி இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எரிபொருள் நிலையங்கள் கடும் நெருக்கடி நிலைக்குள்ளாகியுள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரி என்பது உரிமையாளருக்கு கிடைக்க கூடிய சிறிய தொகையில் செலுத்த வேண்டிய வற் வரியாகும். அதற்குரிய வற் தவணைகள் நாளை முதல் செலுத்தப்பட வேண்டும்.   அவ்வாறு செலுத்தப்படாது விட்டால் எரிபொருள் நிலையங்களின் அடுத்தக்கப்பட்ட பயணங்கள் மேற்கொள்ள முடியாத நிலைமை ஏற்படும். கடந்த 3 மாதங்களாக இந்த பிரச்சினையை தீர்க்க கோரிக்கை விடுத்தோம். எனினும் கலந்துரையாடல் மேற்கொள்வதற்கேனும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 20ஆம் திகதிக்கு பின்னர் எரிபொருள் நிலையங்களில் கடும் நெருக்கடியை சந்திக்கும்.     இந்த VAT வரியால் சிறிய நிரப்பு நிலையங்கள் கூட 10 லட்சத்திற்கும் அதிக VAT வரி செலுத்த நேரிடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.   https://tamilwin.com/article/fuel-shortage-in-the-country-1713508148?itm_source=article
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.