Jump to content

வடக்கு கிழக்கு மக்களின் வலியை புரிந்து கொள்கிறோம் _கெஹெலிய


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யுத்தம் நிறைவடைந்த பின்னர் பாரிய அபிவிருத்தியை வடக்கில் செய்தோம்.ஆயினும் வடக்கு கிழக்கு மக்கள் எமது வேட்பாளரை ஆதரிக்கவில்லை.
வடக்கு கிழக்கு மாகா­ணங்­களில் தேர்தல் முடி­வு­களை பார்க்­கும்­போது தமிழ் மக்­களின் வேதனை எங்­க­ளுக்கு புரி­கின்­றது. அந்த மக்­களின் உட­னடி தேவை என்ன என்­பது குறித்து நாங்கள் நிச்­சயம் ஆராய்ந்து பார்ப்போம் என்று ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் நாடாளுமன்ற உறுப்­பினர் கெஹெ­லிய ரம்­புக்­வெல தெரி­வித்தார். தேர்தல் முடி­வுகள் மற்றும் எதிர்­கால செயற்­பா­டுகள் தொடர்பில் கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் இதனை குறிப்­பிட்டார்.


அவர் இந்த விடயம் குறித்து மேலும் குறிப்­பி­டு­கையில்


நடந்து முடிந்த ஜனா­தி­பதி தேர்­தலில் எமது தரப்பு வேட்­பாளர் கோத்­த­பாய ராஜ­பக்ச அமோக வெற்­றி­யீட்­டி­யுள்ளார். இது­வொரு வர­லாற்று ரீதி­யான வெற்­றி­யாகும். ஐக்­கிய தேசிய கட்­சியை மக்கள் நிரா­க­ரித்­துள்­ளனர்.
ஆனால் வடக்கு கிழக்கு மாகா­ணங்­களில் தமிழ் மக்கள் அதி­க­ளவு எமது வேட்­பா­ள­ருக்கு வாக்­க­ளிக்­க­வில்லை. எனினும் வடக்கு கிழக்கு தமிழ் மக்­களின் வலியை நாங்கள் புரிந்­து­கொள்­கின்றோம்.
வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்டு இழப்­புக்­களை சந்­தித்­த­வர்கள். எனவே அவர்­க­ளுக்கு அந்த வலி இருக்கும். அதனால் தமிழ் மக்கள் தேர்­தல்­களில் தமது எதிர்ப்பை பதிவு செய்­கின்­றனர்.
உதா­ர­ண­மாக எனது மகன் ஒரு தரப்­பி­னரால் தண்­டிக்­கப்­பட்டால் என்னால் பொறுத்­துக்­கொள்ள முடி­யாமல் போகும். எனது மகன் தவறு செய்­தி­ருந்­தாலும் கூட என்னால் அவர் தண்­டிக்­கப்­ப­டு­வதை தாங்­கிக்­கொள்ள முடி­யாது. அந்த தரப்­பினர் பின்னர் என்­னிடம் ஆத­ரவு கேட்டு வந்தால் நானும் ஆத­ரவு வழங்க மாட்டேன். அதன்­போது என்­னு­டைய உணர்வு புரிந்­து­கொள்­ளப்­ப­ட­வேண்­டி­யது அவசியம்.”என்று தெரிவித்தார்.

https://newuthayan.com/வடக்கு-கிழக்கு-மக்களின்/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

வடக்கு கிழக்கு மக்களின் வலியை புரிந்து கொள்கிறோம் _கெஹெலிய 

உந்தாள் கொத்தாரை(கோத்தபாய) விட மோசமான ஆளெல்லோ? அவுஸ்ரேலியாவிலை தண்ணியடிச்சுப்போட்டு பிரண்டு விழுந்ததாலை மண்டை ஏதும் லூசாய்ப்போச்சுது போல..😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, குமாரசாமி said:

உந்தாள் கொத்தாரை(கோத்தபாய) விட மோசமான ஆளெல்லோ? அவுஸ்ரேலியாவிலை தண்ணியடிச்சுப்போட்டு பிரண்டு விழுந்ததாலை மண்டை ஏதும் லூசாய்ப்போச்சுது போல..😎

தண்ணியில் விழுந்ததாக கூறினாலும்

யன்னலால் பக்கத்து அறைக்கு தாவும் போதே விழுந்ததாக கூறினார்கள்.பக்கத்து அறை யாரோ பெண்மணிக்கு ஒதுக்கப்பட்டிருந்ததாம்.
எனினும் இந்த செய்தியை உறுதிப்படுத்த முடியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த தேர்தலுக்கு வாக்குச் சேர்க்கும் தந்திரம்

Link to comment
Share on other sites

வெறும் வார்த்தை ஜாலங்களால் துன்பங்களை அனுபவிக்கும் தமிழர்களை, ஏமாறும் மனநிலையில் உள்ள தமிழர்களை இலகுவில் ஏமாற்றிவிடலாம் என்ற நம்பிக்கையில் கெஹெலிய மட்டுமல்ல சம்மந்தன்-சுமந்திரன்-மாவை கும்பலும் அரசியல் செய்து  வருகின்றனர்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.