Jump to content

வடக்கு கிழக்கு மக்களின் வலியை புரிந்து கொள்கிறோம் _கெஹெலிய


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யுத்தம் நிறைவடைந்த பின்னர் பாரிய அபிவிருத்தியை வடக்கில் செய்தோம்.ஆயினும் வடக்கு கிழக்கு மக்கள் எமது வேட்பாளரை ஆதரிக்கவில்லை.
வடக்கு கிழக்கு மாகா­ணங்­களில் தேர்தல் முடி­வு­களை பார்க்­கும்­போது தமிழ் மக்­களின் வேதனை எங்­க­ளுக்கு புரி­கின்­றது. அந்த மக்­களின் உட­னடி தேவை என்ன என்­பது குறித்து நாங்கள் நிச்­சயம் ஆராய்ந்து பார்ப்போம் என்று ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் நாடாளுமன்ற உறுப்­பினர் கெஹெ­லிய ரம்­புக்­வெல தெரி­வித்தார். தேர்தல் முடி­வுகள் மற்றும் எதிர்­கால செயற்­பா­டுகள் தொடர்பில் கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் இதனை குறிப்­பிட்டார்.


அவர் இந்த விடயம் குறித்து மேலும் குறிப்­பி­டு­கையில்


நடந்து முடிந்த ஜனா­தி­பதி தேர்­தலில் எமது தரப்பு வேட்­பாளர் கோத்­த­பாய ராஜ­பக்ச அமோக வெற்­றி­யீட்­டி­யுள்ளார். இது­வொரு வர­லாற்று ரீதி­யான வெற்­றி­யாகும். ஐக்­கிய தேசிய கட்­சியை மக்கள் நிரா­க­ரித்­துள்­ளனர்.
ஆனால் வடக்கு கிழக்கு மாகா­ணங்­களில் தமிழ் மக்கள் அதி­க­ளவு எமது வேட்­பா­ள­ருக்கு வாக்­க­ளிக்­க­வில்லை. எனினும் வடக்கு கிழக்கு தமிழ் மக்­களின் வலியை நாங்கள் புரிந்­து­கொள்­கின்றோம்.
வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்டு இழப்­புக்­களை சந்­தித்­த­வர்கள். எனவே அவர்­க­ளுக்கு அந்த வலி இருக்கும். அதனால் தமிழ் மக்கள் தேர்­தல்­களில் தமது எதிர்ப்பை பதிவு செய்­கின்­றனர்.
உதா­ர­ண­மாக எனது மகன் ஒரு தரப்­பி­னரால் தண்­டிக்­கப்­பட்டால் என்னால் பொறுத்­துக்­கொள்ள முடி­யாமல் போகும். எனது மகன் தவறு செய்­தி­ருந்­தாலும் கூட என்னால் அவர் தண்­டிக்­கப்­ப­டு­வதை தாங்­கிக்­கொள்ள முடி­யாது. அந்த தரப்­பினர் பின்னர் என்­னிடம் ஆத­ரவு கேட்டு வந்தால் நானும் ஆத­ரவு வழங்க மாட்டேன். அதன்­போது என்­னு­டைய உணர்வு புரிந்­து­கொள்­ளப்­ப­ட­வேண்­டி­யது அவசியம்.”என்று தெரிவித்தார்.

https://newuthayan.com/வடக்கு-கிழக்கு-மக்களின்/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

வடக்கு கிழக்கு மக்களின் வலியை புரிந்து கொள்கிறோம் _கெஹெலிய 

உந்தாள் கொத்தாரை(கோத்தபாய) விட மோசமான ஆளெல்லோ? அவுஸ்ரேலியாவிலை தண்ணியடிச்சுப்போட்டு பிரண்டு விழுந்ததாலை மண்டை ஏதும் லூசாய்ப்போச்சுது போல..😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, குமாரசாமி said:

உந்தாள் கொத்தாரை(கோத்தபாய) விட மோசமான ஆளெல்லோ? அவுஸ்ரேலியாவிலை தண்ணியடிச்சுப்போட்டு பிரண்டு விழுந்ததாலை மண்டை ஏதும் லூசாய்ப்போச்சுது போல..😎

தண்ணியில் விழுந்ததாக கூறினாலும்

யன்னலால் பக்கத்து அறைக்கு தாவும் போதே விழுந்ததாக கூறினார்கள்.பக்கத்து அறை யாரோ பெண்மணிக்கு ஒதுக்கப்பட்டிருந்ததாம்.
எனினும் இந்த செய்தியை உறுதிப்படுத்த முடியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த தேர்தலுக்கு வாக்குச் சேர்க்கும் தந்திரம்

Link to comment
Share on other sites

வெறும் வார்த்தை ஜாலங்களால் துன்பங்களை அனுபவிக்கும் தமிழர்களை, ஏமாறும் மனநிலையில் உள்ள தமிழர்களை இலகுவில் ஏமாற்றிவிடலாம் என்ற நம்பிக்கையில் கெஹெலிய மட்டுமல்ல சம்மந்தன்-சுமந்திரன்-மாவை கும்பலும் அரசியல் செய்து  வருகின்றனர்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.