Jump to content

சமஸ்கிருதம் பிராமணர்களுக்கு மட்டும் சொந்தமா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
மங்கலேஷ் டப்ரால் மூத்த பத்திரிகையாளர், பிபிசிக்காக
  •  
முஸ்லீம்களுக்கு சமஸ்கிருதம் கற்பிப்பதில் என்ன தவறு? அது பிராமணர்களின் மொழி மட்டுமல்லபடத்தின் காப்புரிமை Getty Images

தேசிய சமஸ்கிருத அமைப்பில் படித்த ஃபரோஸ் கான், பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் அவரது நியமனம் ஒரு பெரிய சலசலப்பை உருவாக்கும் என்றும், மாணவர்கள் அவருக்கு எதிராக தர்ணாவில் அமர்வார்கள் என்றும் ஒருபோதும் கற்பனை செய்திருக்க மாட்டார்கள்.

 

இலக்கணம் மற்றும் இலக்கியத்தின் அடிப்படையில் மிகச்சிறந்த மொழியாக கருதப்படும் சமஸ்கிருதம் ஏகபோகம், சிறுபான்மை மற்றும் வகுப்புவாதத்திற்கு பலியாகியுள்ளது.

உலகளவில் சமஸ்கிருதம் மதிக்கப்படுவதற்கு காரணம் இந்துக்கள் அல்லது பிராமணர்கள் மட்டுமல்ல, மாறாக ஜெர்மன், ஆங்கிலம் மற்றும் முஸ்லீம் அறிஞர்கள் என்பதை நாம் மறந்துவிட்டோம். அவர்கள் தான் பல மொழிகளுக்கு இடையில் இந்த சீரிய மொழியை பயன்படுத்தி, பாலங்களை உருவாக்கியவர்கள்.

 
முஸ்லீம்களுக்கு சமஸ்கிருதம் கற்பிப்பதில் என்ன தவறு? அது பிராமணர்களின் மொழி மட்டுமல்லபடத்தின் காப்புரிமை Getty Images

இணக்கத்தை ஏற்படுத்தும் மொழிகள்

1953-54 ஆம் ஆண்டில், முகமது முஸ்தபா கான் என்ற 'மத்தாஹ்' திருத்தப்பட்ட உருது-இந்தி அகராதியை வெளியிட்டார், இது உத்தரப் பிரதேச மாநிலத்தின் இந்தி அமைப்பால் வெளியிடப்பட்டது. ஏழு தசாப்தங்களுக்குப் பிறகும், உருது-இந்தி மொழிக்காக இதை விட ஒரு சிறந்த அகராதி உருவாக்கப்படவில்லை.

பாலி, சமஸ்கிருதம், அரபி, பாரசீகம் மற்றும்இந்தி மொழிகளில் புலமை பெற்றிருந்தார் மத்தாஹ். மேலும் அவர் இந்த மொழிகளிலும் இந்தி அகராதியைத் தயாரித்திருந்தார்.

இந்தி-உருது அகராதியை மத்தாஹ் உருவாக்கிய பிறகு, உருது-இந்தி அகராதியையும் தயாரிக்க வேண்டும் என்று அவரது ஒரு இந்து நண்பர் மத்தாஹிடம் கேட்டுக்கொண்டார்.

 

 

டாக்டர் சம்பூர்நந்திற்கு இந்த அகராதி அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது, அவர் ஒரு அரசியல்வாதி மட்டுமல்ல, சமஸ்கிருத அறிஞராகவும் கோலோச்சியவர். மேலும் பனாரஸில் சம்பூர்நானந்த் சமஸ்கிருத வித்யாபீடமும் உருவாக்கப்பட்டது.

இது ஒரு உதாரணம் மட்டுமே. உண்மையில், நம் நாட்டில், மொழி மற்றும் கல்வித் துறையில், சமஸ்கிருதம், பாரசீகம், இந்தி, உருது ஆகியவற்றை கலந்து பரிமாறிக் கொள்ளும் ஒரு நீண்ட பாரம்பரியம் உள்ளது. முகலாய காலத்தில் தாரா ஷிகோ எழுதிய உபநிஷதங்களின் மொழிபெயர்ப்பு மொழிகளுக்கு இடையிலான நல்லிணக்கத்தையும், ஒற்றுமையையும் காட்டுகிறது. அந்த காலம், மொழிகளின் சிறப்பை எடுத்துச் சொல்லும் ஒரு முக்கியமான காலகட்டமாகும்.

முஸ்லீம்களுக்கு சமஸ்கிருதம் கற்பிப்பதில் என்ன தவறு? அது பிராமணர்களின் மொழி மட்டுமல்லபடத்தின் காப்புரிமை Thinkstock

நாடு சுதந்திரம் பெற்ற பிறகும், தொலைதூர கிராமங்களில் இரண்டு அல்லது மூன்று மொழிகளின் அறிவு பெற்றிருப்பது இயல்பானதாகவே இருந்தது. எனது தந்தையைப் போல சமஸ்கிருதம், உருது மற்றும் இந்தி மொழிகளை நன்கு அறிந்தவர்களைப் பார்ப்பது அந்த நாளில் இயல்பான ஒன்றாகவே இருந்தது.

'சத்யநாராயண கதா' என்ற படைப்பை கர்வாலியில் மொழிபெயர்த்த அவர், தனது பிரத்யேக நாட்குறிப்பை உருது மொழியில் எழுதும் பழக்கம் கொண்டவராக இருந்தார்.

இந்திக்கும் உருது மொழிக்கும் உள்ள நெருக்கமானது, இலக்கியத்தில் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. பிரேம்சந்த், ரதன்நாத் சர்ஷர், பிரிஜ் நாராயண் சாக்பஸ்த், ஃபிராக் கோரக்புரி, கிருஷ்ணா சந்தர், ராஜேந்திர சிங் பேடி மற்றும் உபேந்திரநாத் ஆஷ்க் போன்ற முக்கிய எழுத்தாளர்கள் உருது மொழியில் தங்கள் உன்னதமான படைப்புகளை படைத்தார்கள். ஆனால் அவர்கள் ஏன் உருது மொழியில் எழுதுகிறார்கள் என்ற கேள்வி ஒருபோதும் எழுந்ததில்லை.

அந்த நேரத்தில் இந்தி மற்றும் உருது மொழியை ஒன்றாகப் படிப்பது இயல்பான விஷயம், இன்றும் கூட வெளிநாட்டு அறிஞர்கள் இந்தி மற்றும் உருது மொழியை ஒன்றாகப் படிக்கிறார்கள்.

பிரேம்சந்த், பரந்த வாசக சமூகத்தை அடைய வேண்டும் என்ற நோக்கத்திற்காக ஹிந்தி மொழிக்கு வந்தார் என்றபோதிலும், அவர் ஒருபோதும் உருதுவை விட்டு வெளியேறவில்லை. இவரது கடைசி கதையான 'கஃபான்' முதலில் உருது மொழியில் தான் எழுதப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

முஸ்லீம்களுக்கு சமஸ்கிருதம் கற்பிப்பதில் என்ன தவறு? அது பிராமணர்களின் மொழி மட்டுமல்ல

இன்றும், இந்து குடும்பங்களில் பிறந்த பல உருது கவிஞர்கள் நன்றாக எழுதுகிறார்கள். ஷீன் காஃப் நிஜாம், ஜெயந்த் பர்மார், சந்திரபான் க்யால் போன்ற பல பெயர்களை பட்டியலிடலாம். உருது மொழியின் மிகப் பரந்த பாரம்பரியத்தில், மீர் மற்றும் காலபி போன்ற கவிஞர்கள் இந்தி அல்லது கடிபோலி சொற்களை பல்வேறு இடங்களில் பயன்படுத்துகின்றனர்.

ஆனால் அரசியல், மொழியை ஆயுதமாக பயன்படுத்துகிறது, கொடூரமாகவும் வெறுமையாகவும் மாற்றிவிடுகிறது. ஜெர்மனியில் ஹிட்லரின் சர்வாதிகார காலத்தில் லட்சக்கணக்கான யூதர்கள் கொல்லப்பட்ட பின்னர், தத்துவஞானி தியோடர் அடோர்னோ, 'இனி ஜெர்மன் மொழியில் கவிதை எழுதுவது சாத்தியம் இல்லை' என்று கூறினார்.

முஸ்லீம்களுக்கு சமஸ்கிருதம் கற்பிப்பதில் என்ன தவறு? அது பிராமணர்களின் மொழி மட்டுமல்லபடத்தின் காப்புரிமை Getty Images

மொழிகள் மதத்துடன் இணைக்கப்பட்டுள்ளன

சுதந்திரத்திற்குப் பிறகு, இந்தி மற்றும் உருது மொழிகளிலும் இதேபோன்ற விபத்துகள் நிகழ்ந்துள்ளன, இன்று இந்தி இந்துக்களுக்கான மொழியாகவும், உருது, முஸ்லிம்களுக்கானதாகவும் மாற்றப்படுவதைக் காண்கிறோம், இதனால் உருது மொழி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

நவீன காலங்களில் சமஸ்கிருதம் கற்பிப்பது எப்படி? மொழி என்பது 'பாயும் நீர்' என்று கருதப்படுகிறது. இதில் நாட்டிற்கு ஏற்ப மாற்றங்கள் நிகழ்கின்றன. பாயும் நீர் பிரவாகிக்காமல், தேங்கி நின்றால், குட்டையாக மாறி அழுக்காக மாறுவதைப்போல, மொழிக்கும் தடை ஏற்பட்டால், அது தேங்கி, அதன் பெருமை மங்கிப்போகும்.

சமஸ்கிருதத்திலும் இதே போன்ற சிக்கலே ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் அதை படிக்கும், எழுதும் மக்கள், அதனை புதிய யுகத்திற்கு ஏற்றவாறு மாற்றுவதற்கு போதுமான முயற்சிகளை எடுக்கவில்லை. ஆனால், எந்தவொரு புதிய சூழலையும் அல்லது புதிய வெளிப்பாட்டையும் இணைக்கும் அளவுக்கு நெகிழும் தன்மை கொண்டது சமஸ்கிருதம் என்பதுதான் அதன் ஆகச் சிறந்த சிறப்பம்சமாகும்.

துரதிர்ஷ்டவசமாக, சமஸ்கிருந்த மொழியின் நெகிழ்வுத்தன்மையை அதை கற்பிக்கும் விதத்தில் காட்டவில்லை என்பதோடு, பழைய, குறுகிய மற்றும் நிலப்பிரபுத்துவ முறையில் தொடரப்பட்டது. இதன் விளைவாக, பெரிய மொழி மாற்றங்களால் அது தீண்டத்தகாததாகவும், பொருத்தமற்ற மொழி என்றும் கருதப்படும் சூழ்நிலை உருவானது.

முஸ்லீம்களுக்கு சமஸ்கிருதம் கற்பிப்பதில் என்ன தவறு? அது பிராமணர்களின் மொழி மட்டுமல்ல

சுதந்திரத்திற்குப் பிறகு, சமஸ்கிருத நிறுவனங்கள் தேசிய அளவில் திறக்கப்பட்டன, ஆனால் அவற்றின் பாடத்திட்டம் அப்படியே இருந்தது. அதாவது நவீன காலத்திற்கான சமஸ்கிருத மொழியானது, இறந்த காலத்திலேயே அதாவது கடந்த காலத்திலேயே வைக்கப்பட்டது.

டாக்டர் ராதவல்லப் திரிபாடி மற்றும் பல்ராம் ஷுக்ல் போன்ற சில அறிஞர்கள் சமஸ்கிருத இலக்கியத்தின் பிற மரபுகளைக் கண்டுபிடித்து, அவை பிராமண பாரம்பரியம் மட்டுமல்ல என்பதை தெளிவுபடுத்தினர். சமஸ்கிருதம் என்பது, அழகு மற்றும் அலங்கரத்துக்கான மொழி மட்டுமே அல்ல. காலத்தின் பற்றாக்குறை மற்றும் நெருக்கடியின் சுமையை சுமக்கும் மொழி என்பதை சுட்டிக்காட்டிய விதிவிலக்குகள் என்றே சொல்ல்லாம்.

சமஸ்கிருதத்தின் உண்மையான வளர்ச்சி நவீன தாராளமயக் கண்ணோட்டத்திலிருந்தே இருக்க முடியும். குருகுலத்தில் பயின்ற ஆச்சாரியர்கள், புலமை பெற்ற மதத் தலைவர்கள் என்ற சிறிய வட்டத்திற்குள் சமஸ்கிருத்த்தை குறுக்கிவிட முடியாது. பிற மதங்களில் பிறந்தவர்களுக்கும் இடம் கொடுத்து, அவர்கள் மூலமாகவும் உலகத்தின் முக்கியமான மொழிகளில் ஒன்றாக இடம் பெற்றிருப்பதே சமஸ்கிருத மொழியின் மாண்பு.

https://www.bbc.com/tamil/india-50484280

Link to comment
Share on other sites

பிற மதங்களில் பிறந்தவர்களை ஏமாற்றி, மூளைச்சலவை செய்து அவர்களது மொழியையும் சிதைத்து,  அவர்களது தாய்மொழியில் அவர்களது கடவுளையே வணங்கமுடியாது செய்திருப்பதே, சமசுகிருத மொழியின் மாண்பு. 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சகோ சீமானின் பிள்ளைகள் பற்றிய கருத்தை இங்கே பதிவிட்டவன் யானே.  இங்கே எனது கேள்வி தனது பிள்ளைகள் தமிழ் படிக்காததற்கு  மேடை கோணல் என்பது.  ஆனால் அது உண்மையல்லவே.  எனவே இந்த இவரது கூற்று தேர்தல் நேரத்தில் அவரை கவிழ்க்க உதவும் என்பதே அவரின் அபிமானியான எனது கவலை. நன்றி. 
    • சீமான் தமிழ் தேசியத்தைப் பேசுகிறார், உண்மை - ஈழத்தில் கஜேந்திரகுமார் அணி தமிழ் தேசியத்தைப் பேசுவது போல பேசுகிறார்😎. இதனால் மட்டும் தமிழ் தேசியம் வாழும் என்றால், நீங்கள் குறிப்பிடும் தமிழ் தேசியம் "யூ ரியூப்" வியாபார தமிழ் தேசியம் என எடுத்துக் கொள்கிறேன்! இந்த "திராவிடர்-தமிழர் ஆணி" ஈழவருக்கு தேவையில்லாத ஆணி என்கிறேன். இதனால், தமிழ் நாட்டில் ஆட்சியில் இருக்கப் போகும் கட்சிகளோடும் (குறைந்த பட்சம் புலத்தில் வாழும்) ஈழவர் பகைத்துக் கொள்ள வேண்டி வரும். இன்னொரு பக்கம், சீமான் தம்பிகள் முன்மாதிரியில் போலிச் செய்திகள், வைரல் வீடியோக்கள், யாழில் நடப்பது போன்ற எங்களிடையேயான அர்த்தமில்லாத சண்டைகளும் வளரும். இதெல்லாம் "ஈழவரான எங்களுக்கு ரொம்ப நல்லது!" என்று நீங்கள் சொன்னால் நான் நம்புகிறேன்!  
    • உங்களுக்கு இந்தியா பற்றி நான் தந்திருப்பது தரவுகளை. நீங்கள் மேலே அலம்பியிருப்பது இந்தியா தொடர்பான உங்கள் ஆத்திரக் கருத்துக்களை. இந்தியா மீது அபிமானம் எனக்கும் இல்லை - ஆனால், தரவுகளை நோக்கித் தான் ஒரு நாட்டின் முன்னேற்றம் பற்றிய கருத்துக்கள் வர வேண்டும், அந்த நாட்டை விரும்புகிறோமா வெறுக்கிறோமா என்பதை ஒட்டியல்ல. பொருளாதார வளர்ச்சி ஊழலால் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கிறது இந்தியாவில். ஆனால், மனித வளம் அதையும் மீறி இந்தியாவை முன்னேற்றி வருகிறது. இந்தியா போன்ற கலாச்சாரப் பின்னணி கொண்ட, ஆனால் மனித வளம் மிகக் குறைந்த பாகிஸ்தானிலோ. வங்க தேசத்திலோ இந்தியாவில் இருப்பது போன்ற வளர்ச்சி இல்லை - இது உங்களுக்குக் கசக்கலாம், ஆனால் யதார்த்தம் அது தான்.
    • அருமையான கண்ணோட்டம் அழகான சிந்தனைகள் ......நல்லாயிருக்கு ......!  👍 இந்தக் கவிதையை நீங்கள் யாழ் அகவை 26 ல் பதியலாமே .......இப்பவும் நிர்வாகத்தில் சொன்னால் மாற்றிவிடுவார்கள்.........நாளையுடன் திகதி முடியுது என்று நினைக்கிறேன்.........!  
    • சீமானை எதிர்ப்பவர்கள் தங்களை அதிபுத்திசாலிகளாகவும் சீமானை ஆதரிப்பவர்கள்  கண்மூடித்தனமாக உணர்ச்சிகரமான பேச்சுக்களுக்கு மயங்கி சீமானை ஆதரிப்பது போலவும் ஒரு மாயை நிலவுகிறது.நாங்கள் சீமானை ஆதரிப்பதற்கு காரணம் தமிழ்த்தேசியத்தின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் .அதை அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டும்.இல்லாவிட்டால் ஆரியத்தை விட திராவிடமே தற்போதைய நிலையில் தமிழ்த்தேசியத்தை அழிப்பதில் முன்நிற்கிறார்கள்.ஆரியம் வட இந்தியாவில் நிலை கொண்டிருப்பதால் அதன் ஆபத்து பெரிய அளவில் இருக்காது.ஆனால் தமிழ்நாட்டுக்குள் இருந்து கொண்டு தமிழ்ப்பற்றாளர்களாக காட்டிக்கொண்டு தமிழ்த்தேசியத்தை இல்லாதொழிப்பதற்கு திராவிடம் அயராது வேலை செய்கிறது.சீமானின் எழுச்சி அவர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்குகிறது.முன்பும் ஆதித்தனார் சிலம்புச்செல்வர் கிபெவிசுவநாதம் பழ நெடுமாறன் போன்றோர் தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்திருந்தாலும் அவர்கள் இயக்கமாக இயங்கினார்களே ஒழிய தேர்தல் அரசியலில் கவனத்தை பெரிய அளவில் குவிக்க வில்லை.திராவிடத்திற்கும் தமிழ்த்தேசிய இயக்கங்கள் இருப்பதில் பிரச்சினை இல்லை.அவர்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடுவது தமது தேர்தல் அரசியலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தினாலே தமிழ்த்தேசியத்தை மூர்க்கமாக எதிர்க்கிறார்கள்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.