Jump to content

வல்வெட்டித்துறை நகரசபைக்குட்பட்ட பகுதியில் வாழ்பவர்கள் மூன்று குழந்தைகளுக்கு மேல் குழந்தை பெற்றுக்கொண்டால் ஊக்கப்பணம் வல்வெட்டித்துறை நகரசபை தீர்மானம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வல்வெட்டித்துறை நகராட்சி மன்ற எல்லைக்குட்பட்ட பகுதியில் மூன்று குழந்தைக்குமேல் பிரசவிக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தலா பத்தாயிரம் ரூபா நிதி வழங்குவதென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

            நகராட்சி மன்ற அமர்வு நேற்று (19) இடம்பெற்றபோது இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்மக்கள் சனத்தொகையில் குறைவாக உள்ளமையினால், தம்பதியர் மூன்று குழந்தைக்குமேல் பிரசவித்தால், ஒவ்வொரு குழந்தைக்கும் தலா 10,000 ரூபா நிதி வழங்க வேண்டுமென பிரேரணை சமர்ப்பிக்க ப்பட்டது.

இதற்கு அனைத்து உறுப்பினர்களும் சம்மதமளிக்க, ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

நன்றி :- http://www.pagetamil.com/88626/?fbclid=IwAR2D1RiwYZQEYlFFPCbemIBWwldKr-aZzYFXLMt0-y94yUuudFdD_e2O9YY

Link to comment
Share on other sites

  • Replies 96
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இவ்வகை ஊக்குவிப்புக்களைத்தான் பிரெஞ்சு  அரசு  தனது  பிடியிலிருந்த ஆபிரிக்க நாட்டு மக்களுக்கு செய்தது

அது அந்த  நாடுகளில்  பிள்ளைகளை  பெறுவதும்  ஊக்குவிப்புக்களை  பெறுவதுடன் மட்டுமே நின்று

படிப்பறிவற்ற அநேக தலைமுறைகள்  தோன்ற  வழி  அமைத்தது

3  பிள்ளைகளுக்கு மேல்

அதுவும்  10 ஆயிரம்   ரூபாக்களுக்காக

4வது  பிள்ளையை  பெறுவார்கள்  என  தோன்றவில்லை??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர்ந்து வாழும் ஒவ்வொரு ஊரவரும் அவரவர் ஊர்களை கவனத்தில் எடுத்தாலே போதும் ஆரோக்கியமான சமூகத்தை கட்டி எழுப்ப முடியும். புலம்பெயர்ந்தவர்கள் தங்கள் குடும்பங்களோடு இனி நாட்டுக்குத் திரும்பி வாழப்போவதில்லை அப்படியே போனாலும் முதுமை எய்திய நிலையில் போய் அங்கு வாழ எத்தனிப்பவர்களைத் தவிர இளையவர்கள் வரவே மாட்டார்கள். புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் எண்ணிக்கை அங்கு நிரவப்பட்டதா? அல்லது யுத்தகாலத்தில் மரணமானவர்கள், விடுதலைக்கு ஆகுதியானவர்கள் இப்படியாக தமிழினத்தின் எண்ணிக்கை பெரும் வீழ்ச்சி உற்றிருக்கும் நிலையில்..... 50 ஆயிரத்திற்கும் அதிகமான விதவைகள் வாழும் நாடாக தமிழர்பகுதிகள் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கும் இன விருத்தி மிகக்குறுக்கப்பட்டிருக்கும் மிக ஆபத்தான ஒரு காலத்தில் நின்று கொண்டிருக்கும் இவ்வேளையில் இந்த நகராட்சி மன்றம் மேற்கொண்டுள்ள அறிவிப்பு சிந்திக்கப்படவேண்டிய ஒன்று.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த‌ முய‌ற்சி பாராட்ட‌ த‌க்க‌து 🙏

த‌மிழீழ‌ம் கிடைத்தாலும் புல‌ம் பெய‌ர் நாட்டில் வாழ்ப‌வ‌ர்க‌ள் அவ‌ர்க‌ளின் சொந்த‌ ஊர்க‌ளில் போய் வாழ‌ மாட்டின‌ம் அக்கா ( இது நித‌ர்ச‌ன உண்மையும் கூட‌ ) 

எல்லா ஊர்களிலும் இப்ப‌டி ந‌ட‌ந்தா எம் இன‌ம்  மீளும்   , க‌ட‌சிகட்ட‌ இன‌ அழிப்பு ம‌ற்றும் சுனாமியில் , எம் இன‌ ம‌க்க‌ள் கூட‌ அழிந்து போய் விட்டின‌ம் ,

புல‌ம் பெய‌ர் நாட்டில் இருப்ப‌வ‌ர்க‌ளும் ஊரில் உள்ள‌வ‌ர்க‌ளை காசை க‌ட்டி எடுக்கின‌ம் , 2010ம் ஆண்டுக்கு பிற‌க்கு ஈழ‌த்தில் இருந்து புல‌ம் பெய‌ர் நாட்டுக்கு வ‌ந்த‌வை அதிக‌ம் , 

25ஜ‌ந்து வ‌ருட‌த்துக்கு முத‌ல் த‌மிழீழ‌த்தில் ஒவ்வொரு பாட‌சாலையிலும் ப‌டிச்ச‌ பிள்ளைக‌ள் 600க்கு  மேல‌ , இப்ப‌ 350க்கு கீழ‌ வ‌ந்திட்டு , இப்ப‌டியே இன்னும் 20 வ‌ருட‌ம் போனால்  எங்கும் சிங்க‌ள‌ம் எதிலும் சிங்க‌ள‌ம் என்ற‌ நிலைக்கு நாடு வ‌ந்துடும்   , 

முடிஞ்ச‌ அள‌வு எம் உற‌வுக‌ளை  அவ‌ர்களின் சொந்த‌ ஊர்க‌ளில் த‌ங்க‌ வைச்சு அவைக்கு தேவையான‌ உத‌விக‌ளை செய்து குடுத்து , இல‌ங்கை தீவில் த‌மிழ‌ர்க‌ளும் பெரும்பான்மை இன‌ம் என்ற‌த‌ நிருபிக்க‌னும் இனி வ‌ரும் கால‌ங்க‌ளில் /

 

 


  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நூற்றுக்கு 25விழுக்காடு புல‌ம் பெய‌ர் நாட்டு ஈழ‌ த‌மிழ‌ர்க‌ள்  பிற‌ந்த‌ நாட்டில் வாழ‌ ஆசை ப‌டுவின‌ம் , மீத‌ம் உள்ள‌வ‌ர்க‌ள் வெளிநாடுக‌ளில் வாழ்வ‌தையே விரும்புவின‌ம்  

Link to comment
Share on other sites

விசுகு சொன்னது போல வெறும் 10 ஆயிரத்துக்கு நாலாவது பிள்ளை பெற எவர் விரும்புவினம்? இலங்கையில் இன்றிருக்கும் விலைவாசிக்கு 10 ஆயிரம் ரூபா என்பது ஒரு வாரத்துக்கு கூட போதுமானது இல்லை.

நாலாவது பிள்ளை பெற்றால் முதல் பிள்ளையின் அல்லது முதல் இரு பிள்ளைகளின் கல்வி தேவையில் அரைவாசியையாவது பொறுப்பெடுத்துக் கொள்ளுவது போன்ற திட்டங்கள் ஓரளவுக்கு தன்னும் பயன்தரலாம், ஆனால் அதற்கான நிதி வசதி நகர சபையிடம் இருக்குமா எனத் தெரியவில்லை.

 

நடைமுறையில் தோல்வியை சந்திக்கும் திட்டங்களையும் முடிவுகளையும் எடுப்பதுதான் இன்றைய எம் தமிழ் தரப்புகளின் செயற்பாடுகளாக இருக்கு.

Link to comment
Share on other sites

8 minutes ago, நிழலி said:

விசுகு சொன்னது போல வெறும் 10 ஆயிரத்துக்கு நாலாவது பிள்ளை பெற எவர் விரும்புவினம்? இலங்கையில் இன்றிருக்கும் விலைவாசிக்கு 10 ஆயிரம் ரூபா என்பது ஒரு வாரத்துக்கு கூட போதுமானது இல்லை.

நாலாவது பிள்ளை பெற்றால் முதல் பிள்ளையின் அல்லது முதல் இரு பிள்ளைகளின் கல்வி தேவையில் அரைவாசியையாவது பொறுப்பெடுத்துக் கொள்ளுவது போன்ற திட்டங்கள் ஓரளவுக்கு தன்னும் பயன்தரலாம், ஆனால் அதற்கான நிதி வசதி நகர சபையிடம் இருக்குமா எனத் தெரியவில்லை.

 

நடைமுறையில் தோல்வியை சந்திக்கும் திட்டங்களையும் முடிவுகளையும் எடுப்பதுதான் இன்றைய எம் தமிழ் தரப்புகளின் செயற்பாடுகளாக இருக்கு.

ஆனால் முயற்சி பாராட்டத்தக்கது. இதில் பெரும்பாலானோருக்கு மருகருத்து இல்லையென நம்புகிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

விசுகு சொன்னது போல வெறும் 10 ஆயிரத்துக்கு நாலாவது பிள்ளை பெற எவர் விரும்புவினம்? இலங்கையில் இன்றிருக்கும் விலைவாசிக்கு 10 ஆயிரம் ரூபா என்பது ஒரு வாரத்துக்கு கூட போதுமானது இல்லை.

நாலாவது பிள்ளை பெற்றால் முதல் பிள்ளையின் அல்லது முதல் இரு பிள்ளைகளின் கல்வி தேவையில் அரைவாசியையாவது பொறுப்பெடுத்துக் கொள்ளுவது போன்ற திட்டங்கள் ஓரளவுக்கு தன்னும் பயன்தரலாம், ஆனால் அதற்கான நிதி வசதி நகர சபையிடம் இருக்குமா எனத் தெரியவில்லை.

 

நடைமுறையில் தோல்வியை சந்திக்கும் திட்டங்களையும் முடிவுகளையும் எடுப்பதுதான் இன்றைய எம் தமிழ் தரப்புகளின் செயற்பாடுகளாக இருக்கு.

ஆரம்பிக்கப்பட்டிருக்கும் இத்திட்டத்திற்கு ஆதரவாக கால ஓட்டத்தில் மேலதிக தேவைகளுக்கு உதவ நகரசபையால் முடியாது. ஆனால் புலம்பெயர்ந்து வாழும் ஊரவர்களால் முடியும். ஒரு இந்திரவிழாவை வீழ்ச்சியுறாது தக்க வைக்கவும் வளப்படுத்தவும் பாடுபடும் போது ஒரு நேரிய ஒற்றுமை இயல்பாக ஊருக்கு வந்துவிடும். அதில் புலம்பெயர்ந்தவர்களும் நிலம்வாழ்பவர்களும் விரிசல் தொடுவதில்லை அதுபோல் இதுவும் அவர்களால் வீழ்ச்சியடையாது அவ்விடம் வாழ்பவர்களை நிறைவாகவும் ஆரோக்கியமான சமுதாயமாகவும் கட்டியெழுப்பமுடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. தமிழரைப் பொறுத்தவரை எல்லாவிடயமும் நடைமுறையில் தோல்வியைத் தொட்டுத்தான் மீளெழும் சக்தியுடையதாக மாறும். தோல்வியைச் சந்திக்கும்போதே வெற்றிக்கான பாதைகள் அகலத்திறக்கும் அக்கணம் அதனைச் சரியாக பயன்படுத்தும் விவேகம் இருந்தால் வீழ்ச்சி இல்லை. காலத்தின் அவசியம் நிச்சயமாக கண்களைத் திறக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூர நோக்கில் இந்த ஊக்குவிப்பு வழங்குவதாத இருந்தாலும் கூட, இந்த கேள்விகள் என்னுள் எழலாமல் இல்லை

இனத்தை பெருக்குவதற்கு ஊக்குவிப்பாக இருந்தாலும் கூட, 10,000/= விற்காக விருப்பமில்லாது பிள்ளைகளைப் பெற பெண்கள் அல்லது ஆண்கள் தள்ளப்படமாட்டார்களா?

பிள்ளைகளை பெற்றுவிட்டால் மட்டும் போதுமா? அவர்களை உடல் உள ஆரோக்கியமானவர்களாக, எதிர்காலத்தில் தன்னம்பிக்கையையுடன் வாழவும் ஒரு சூழல்நிலவுமா?

இப்பொழுது ஊரில் கூட கணவன் மனைவி என இருவரும் உழைத்து வாழ வேண்டிய நிலையில்இருக்கும் போது .. பிள்ளைகளைப்பெற்றுவிட்டு  வளர்ப்பது எப்படி? வயதான பெற்றோர்களிடமும் வளர்ப்பு நிலையங்களிலும்  அவர்களை வளர விடுவதா?

அது மட்டுமல்ல, பொருளாதார முன்னேற்றம் காணாது  பிள்ளைகளைப்   பெற்றுவிட்டு பின்பு பெற்றோர் தமது இயலாமையை பிள்ளைகள் அல்லது  கணவன்/மனைவி மீது காட்டுவது நடைபெறுவதும் உண்மைதானே? அதன் மூலம் ஏற்படும் உளவியல் தாக்கங்களிற்கு யார்  உதவுவார்கள்?

தற்போது நடைபெறும் சிறுவர் துஷ்பிரயோகம், பாலியல் துன்புறுத்தல், தற்காப்புடனான உடலுறவு பற்றிய அறிவு, பாலியல் கல்வியறிவு இல்லாமையால் நோய்களை  காவுதல், போதைவஸ்து பாவனை, வேலைவாய்பின்மை, கல்வியறிவு வீழ்ச்சி, மனவிரக்தியால் தற்கொலை என பல்வேறு பிரச்சனைக்களுக்கு தீர்வு காணமுடியாமல் இருக்கும் போது,

3 பிள்ளைகளுக்கு மேல் என்பதைவிடஒரு பிள்ளைக்கு மேல்  என்றால் நன்று. ஏனெனில் இப்பொழுது பொருளாதார, மற்றும் வாழ்க்கைசெலவுகளால் ஒரு பிள்ளையுடன் வாழ்பவர்களையே நான் அதிகம் காண்கிறேன்..

அத்துடன் இந்த பத்தாயிரம் ரூபாவை சரியான முறையில் உபயோகப்படுத்துவதை நகரசபை உறுதிப்படுத்துவார்கள் என நம்புகிறேன்..  அந்தப்பணம்    கள்ளுக்கொட்டிலிற்கு  போகாமல் விட்டால் சரி..

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

 பிள்ளைகளை பெற்றுவிட்டால் மட்டும் போதுமா? அவர்களை உடல் உள ஆரோக்கியமானவர்களாக, எதிர்காலத்தில் தன்னம்பிக்கையையுடன் வாழவும் ஒரு சூழல்நிலவுமா?

மிகச்சரியான கருத்து.

வல்வெட்டித்துறை நகராட்சி மன்றம் ஆபிரிக்கா ஏழைகள் மாதிரி ஒரு சமுதாயத்தை உருவாக்க முயற்சிக்கிறது. நல்ல காலமாக பத்தாயிரம் ரூபாவுக்காக பிள்ளை பெற்று கொள்ளும் அளவிற்கு முட்டாள்களாக மக்கள் அங்கே இல்லை.

 

Link to comment
Share on other sites

43 minutes ago, விளங்க நினைப்பவன் said:

மிகச்சரியான கருத்து.

வல்வெட்டித்துறை நகராட்சி மன்றம் ஆபிரிக்கா ஏழைகள் மாதிரி ஒரு சமுதாயத்தை உருவாக்க முயற்சிக்கிறது. நல்ல காலமாக பத்தாயிரம் ரூபாவுக்காக பிள்ளை பெற்று கொள்ளும் அளவிற்கு முட்டாள்களாக மக்கள் அங்கே இல்லை.

 

அடிப்படையில் ஒரு நல்ல காரியம் ஒன்றை செய்ய முயற்சிசெய்பவர்களை பாராட்ட வேண்டாமா ? 

விமர்சனம் என்கின்ற பெயரில்,  எல்லாம் தெரியும் என்கின்ற மமதையில்,   எல்லாவற்றையும் குத்திக் குதறி,  அலசி ஆராய்ந்து,  இறுதியாக தீர்ப்பும் எழுதி முடித்தாயிற்று. 

உங்கள் கண்களை அகலத் திறந்து உலகத்தில் என்ன நடக்கிறது என்பதை உற்றுப் பாருங்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்காவில் சிங்களவர்களும் சோனகர்களும் ஆபிரிக்க ஏழைகள் மாதிரியா வாழ்கிறார்கள்???

மட்டக்களப்பு மாநாகரசபையும் இப்படி ஓர் தீர்மானத்தை எடுத்தார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதுவுமே செய்யாமல் இருப்பதைவிட அவர்கள் ஏதோ ஒன்றை செய்து தமிழ் மக்களை சந்ததிகளை ஊக்குவிக்கின்றார்கள். அதை பாராட்டத்தான் வேண்டும்.  பெரும்பாலும் எதிர்மறையாகவே சிந்திக்கின்றோம். அது தப்பு.

நிழலி  சொல்வதுபோல்  5000 ரூபா ஒரு வாரத்துக்கு காணாதுதான். ஆனால் அங்கு ஒரு ஆளின் ஒருநாள் சம்பளம் சாப்பாடு தேநீருடன் குறைந்தது 1500 ரூபாவுக்கு அதிகம்.(அதுக்கும் ஆள் கிடைப்பது கஷ்டம்). சராசரி 20,000 ரூபா மாதம் உழைத்தால் ஆஹா ஓஹோ என்று இல்லாவிட்டாலும் தாராளமாய் ஒரு குடும்பம் வாழ முடியும். "பாலன் பஞ்சம் பத்து வயது வரை" என்று அது பின்பு அந்த குடும்பத்துக்கு உதவியாய் இருக்கும்.

அன்று (இந்த யுத்தகாலங்களுக்கு முன்பு) நாங்கள் எல்லாம் அறுசுவை உண்டியும் பாயாசமும் சாப்பிட்டா வளர்ந்தனாங்கள். சுற்றி வர இருக்கும் அயலில் எல்லாம் ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது ஏழெட்டு பிள்ளைகள்.எல்லோரும் செத்தா போனார்கள்.

இங்கு (பிரான்சில்) மூன்று பிள்ளைகளுக்கு மேல்தான் சரியான உதவித் தொகை,மற்றும் சில சலுகைகள் கிடைக்கும். அதுக்காக அரசாங்கம் தரும் அந்தப் பணம் பிள்ளைகளை வளர்க்க தாராளமாய் காணும்.ஆனால் நாங்கள் வீட்டுக்கும், காருக்கும் கடன் வாங்கி அதைக் கட்ட இரவு பகல் பாராமல் நாய் பேயாய் உழைக்க வேண்டி இருக்கு.அப்படி இருந்தும் சில பல  பெற்றோர்களின் சண்டைகளால் பிள்ளைகளை அரசாங்கம் எடுத்து வளர்த்து வருகிறது. இங்கு செய்யும் உழைப்பில் மூன்றில் ஒரு பங்கு ஊரில் செய்தால்கூட போதும் சராசரி வாழ்க்கைக்கு உத்தரவாதம் உண்டு. ஏனைய இனங்கள் எல்லாம் வருமானத்தைப் பார்த்தா பிள்ளைகளை பெறுகிறார்கள் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். பிழைகளை பெற்று விட்டால்  பின் ஏதோ ஒரு வகையில் வருமானம் வரும்......!  🤔

Link to comment
Share on other sites

விதவைகள் பெறும். ஒவ்வொரு பிள்ளைக்கும், அந்த பிள்ளை 21 வயதை அடையும்வரை மாதம் 10,000 அனுப்புவோம் என்று புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புகள் கூட்டாக அறிவித்து அதை நடைமுறைப்படுத்த ஆரம்பித்தால், சில பத்து ஆண்டுகளிலேயே தமிழர் மீண்டும் முதலாவது சிறுபான்மையாகி விடுவர். சர்வதேச நாடுகளில் காணப்படும் தனித்தாய் ஆதரவு (single mother support) திட்டங்கள் போன்றதாக இந்த திட்டம் அமையும். இதற்கு காரணம் பிள்ளை பெறும் பராயத்தை சேர்ந்த பல்லாயிரம் பெண்கள் போரால் விதவைகளாகி பத்துவருடங்களாக சனப்பெருக்கம் சுருங்கி வருகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Jude said:

விதவைகள் பெறும். ஒவ்வொரு பிள்ளைக்கும், அந்த பிள்ளை 21 வயதை அடையும்வரை மாதம் 10,000 அனுப்புவோம் என்று புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புகள் கூட்டாக அறிவித்து அதை நடைமுறைப்படுத்த ஆரம்பித்தால், சில பத்து ஆண்டுகளிலேயே தமிழர் மீண்டும் முதலாவது சிறுபான்மையாகி விடுவர். சர்வதேச நாடுகளில் காணப்படும் தனித்தாய் ஆதரவு (single mother support) திட்டங்கள் போன்றதாக இந்த திட்டம் அமையும். இதற்கு காரணம் பிள்ளை பெறும் பராயத்தை சேர்ந்த பல்லாயிரம் பெண்கள் போரால் விதவைகளாகி பத்துவருடங்களாக சனப்பெருக்கம் சுருங்கி வருகிறது.

விதவைகள் பிள்ளை பெறுவதை எமது சமூகம் எப்படி பார்க்கும் அண்ணா?
விதவைகள் மறுமணத்தை ஊக்குவிக்கலாம்.

Link to comment
Share on other sites

2 minutes ago, ஏராளன் said:

விதவைகள் பிள்ளை பெறுவதை எமது சமூகம் எப்படி பார்க்கும் அண்ணா?
விதவைகள் மறுமணத்தை ஊக்குவிக்கலாம்.

போதுமான ஆண்கள் இல்லை. பலதார விவாகம் சாத்தியமா? Later Day Saints of Jesus Christ என்ற கிறீஸ்தவ மதத்தை அறிமுகப்படுத்தி கிறீஸ்தவ, கத்தோலிக்க பெண்களை அந்த கிறீஸ்தவ பிரிவுக்கு மாற்றினால் பலதார விவாகத்தை அந்த மதப்படி ஊக்குவிக்கலாம். இந்துக்களுக்கு என்ன செய்யலாம்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, Maharajah said:

அடிப்படையில் ஒரு நல்ல காரியம் ஒன்றை செய்ய முயற்சிசெய்பவர்களை பாராட்ட வேண்டாமா ? 

விமர்சனம் என்கின்ற பெயரில்,  எல்லாம் தெரியும் என்கின்ற மமதையில்,   எல்லாவற்றையும் குத்திக் குதறி,  அலசி ஆராய்ந்து,  இறுதியாக தீர்ப்பும் எழுதி முடித்தாயிற்று. 

உங்கள் கண்களை அகலத் திறந்து உலகத்தில் என்ன நடக்கிறது என்பதை உற்றுப் பாருங்கள். 

இதுக்கு தான் அண்ணா 2009ம் ஆண்டு எம் இன‌ம் எம் க‌ண் முன்னே கொன்று அழிக்க‌ ப‌ட்ட‌ போது ஒருத‌ரும் உத‌வ‌ முன் வ‌ர‌ வில்லை / 

எம் இன‌த்தின் சாவ‌க் கேடு எதிலும் குறை கண்டு பிடிப்ப‌து , 

அவ‌ர்க‌ள் ந‌ல்ல‌ ஒரு முய‌ற்சியில் இற‌ங்கும் போது அவ‌ர்க‌ளை பாராட்டி ஊக்கிவித்து அவ‌ர்க‌ளின் முய‌ற்சி வெற்றிய‌டைய‌ வாழ்த்துவ‌தை த‌விர்த்து விட்டு , தேவை இல்லா வெட்டி க‌தைக‌ள் புல‌ம் பெய‌ர் நாட்டில் இருந்து கொண்டு  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Jude said:

போதுமான ஆண்கள் இல்லை. பலதார விவாகம் சாத்தியமா? Later Day Saints of Jesus Christ என்ற கிறீஸ்தவ மதத்தை அறிமுகப்படுத்தி கிறீஸ்தவ, கத்தோலிக்க பெண்களை அந்த கிறீஸ்தவ பிரிவுக்கு மாற்றினால் பலதார விவாகத்தை அந்த மதப்படி ஊக்குவிக்கலாம். இந்துக்களுக்கு என்ன செய்யலாம்? 

பலதார மணத்திற்கு ஆண்கள் ஓரளவு தயாரானாலும் பெண்கள் அனுமதிக்கமாட்டார்கள்.
பிள்ளை பெறக்கூடிய திருமணமான குடும்பங்களில் 1 அல்லது 2 பிள்ளைகளே போதும் என்று நிறுத்துகிறார்கள். குறைந்தது 3 பிள்ளைகள் பெற அவர்களை ஊக்குவிக்கலாமே? இதை தானே இந்த செய்தி தலைப்பும் சொல்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kavi arunasalam said:

0-D46912-E-FE84-489-A-9500-F5-AA56-F5885

கவி ஐயா திருமணமாகாவிட்டாலும் குழந்தையின் பிறப்பு சான்றிதழில் தந்தை பெயர் போட தடை இல்லை தானே?

ஆரோக்கியமான வலிமையான ஆண்கள் 10 குழந்தைகளாவது பெற்றுக்கொள்ளணும், சட்டபூர்வமாகவோ இல்லை வேறு மார்க்கமாகவோ (விந்துதானம்).

Link to comment
Share on other sites

27 minutes ago, Jude said:

விதவைகள் பெறும். ஒவ்வொரு பிள்ளைக்கும், அந்த பிள்ளை 21 வயதை அடையும்வரை மாதம் 10,000 அனுப்புவோம் என்று புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புகள் கூட்டாக அறிவித்து அதை நடைமுறைப்படுத்த ஆரம்பித்தால், சில பத்து ஆண்டுகளிலேயே தமிழர் மீண்டும் முதலாவது சிறுபான்மையாகி விடுவர். சர்வதேச நாடுகளில் காணப்படும் தனித்தாய் ஆதரவு (single mother support) திட்டங்கள் போன்றதாக இந்த திட்டம் அமையும். இதற்கு காரணம் பிள்ளை பெறும் பராயத்தை சேர்ந்த பல்லாயிரம் பெண்கள் போரால் விதவைகளாகி பத்துவருடங்களாக சனப்பெருக்கம் சுருங்கி வருகிறது.

 

20 minutes ago, ஏராளன் said:

விதவைகள் பிள்ளை பெறுவதை எமது சமூகம் எப்படி பார்க்கும் அண்ணா?
விதவைகள் மறுமணத்தை ஊக்குவிக்கலாம்.

 

13 minutes ago, Jude said:

போதுமான ஆண்கள் இல்லை. பலதார விவாகம் சாத்தியமா? Later Day Saints of Jesus Christ என்ற கிறீஸ்தவ மதத்தை அறிமுகப்படுத்தி கிறீஸ்தவ, கத்தோலிக்க பெண்களை அந்த கிறீஸ்தவ பிரிவுக்கு மாற்றினால் பலதார விவாகத்தை அந்த மதப்படி ஊக்குவிக்கலாம். இந்துக்களுக்கு என்ன செய்யலாம்? 

 

2 minutes ago, ஏராளன் said:

பலதார மணத்திற்கு ஆண்கள் ஓரளவு தயாரானாலும் பெண்கள் அனுமதிக்கமாட்டார்கள்.
பிள்ளை பெறக்கூடிய திருமணமான குடும்பங்களில் 1 அல்லது 2 பிள்ளைகளே போதும் என்று நிறுத்துகிறார்கள். குறைந்தது 3 பிள்ளைகள் பெற அவர்களை ஊக்குவிக்கலாமே? இதை தானே இந்த செய்தி தலைப்பும் சொல்கிறது.

பெண்களை, தலைமயிரை வெட்ட சம்மதிக்க வைத்து, காற்சட்டையும் போட்டு, ஆயுதமும் தூக்கி போர்க்களத்தில் சதிராட வைத்த எங்கள் பெண்களை பார்த்தா இன்று இனம் அழியும் தறுவாயில், “பெண்கள் அனுமதிக்கமாட்டார்கள்“ என்று சொல்கிறீர்கள்? எங்கள் பெண்களுக்கு நிலைமையை விளங்கப்படுத்துங்கள். இது போர்க்களம், இன்றைய ஆயுதம் பிள்ளை பெறுதல், ஆண்களால் முடியாத ஒன்று என்பதை புரிய வையுங்கள், எந்த பெண் எதிர்க்கிறார் என்று பார்க்கலாம்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளை பெறக்கூடிய வயதிலுள்ள நண்பனை 3 பெற்றுக்கொள்ளடா என்று சொன்னதிற்கு அவன் அலறுகிறான். 2 பிள்ளைகளோடயே சமாளிக்க முடியலையாம்.

20-28 வயதிற்குள் ஆண் பெண் திருமணம் நடந்துவிடவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எம் உற‌வுக‌ளை த‌மிழீழ‌த்தில் இருந்து புல‌ம் பெய‌ர் நாட்டுக்கு எடுப்ப‌தை எல்லாரும் நிறுத்தி கொள்ள‌னும் , ஊரில் அவைக்கு ந‌ல்ல‌ தொழில் செய்யும் வ‌ச‌தியை ஏற்ப‌டுத்தி குடுக்க‌னும் , அங்கையே அவ‌ர்க‌ள் திரும‌ண‌ம் செய்து பிள்ளைக‌ள் பெத்து எல்லா வ‌ச‌திக‌ளுட‌னும் அவ‌ர்க‌ள் வாழ‌னும் , 

புல‌ம் பெய‌ர் நாட்டில் உள்ள‌ எம் உற‌வுக‌ள் அவ‌ர்க‌ளின் ஊரில் உள்ள‌ க‌ஸ்ர‌ப‌ட்ட‌ உற‌வுக‌ளுக்கு த‌ங்க‌ளால் இய‌ன்ற‌ அள‌வு உத‌வ‌னும் , 

சிங்க‌ள‌வ‌ன் எதை எல்லாம் செய்து சாதிக்க‌ துடிச்சானோ அதை அவ‌ன் ம‌ற்ற‌ நாடுக‌ளின் உத‌வியோடு ச‌ரியாய் செய்து முடிச்சிட்டான் / 

வெளி நாட்டு மாப்பிளை என்றால் தான் பொண்ணு குடுப்போம் என்று ஒற்றை காலில் நிக்கும் பொற்றோர்க‌ள் தொட்டு ப‌ல‌ரை ந‌ல்ல‌ அறிவுரை சொல்லி திருத்தி எடுக்க‌னும் ,

எம் முன்னோர்க‌ள் பாட‌சாலையில் ப‌டிச்ச‌ கால‌த்தில் 1000க்கு மேல் ப‌ட்ட‌வ‌ர்க‌ள் ப‌டித்தார்க‌ள் , 25வருட‌த்துக்கு முத‌ல் பாட‌சாலையில் நாங்க‌ள் ப‌டிக்கும் போது 600 பிள்ளைக‌ளுக்கு கிட்ட‌ , இப்ப‌ 350க்கு கீழ‌ வ‌ந்திட்டு , இன்னும் கொஞ்ச‌ வ‌ருட‌ம் போனா த‌மிழீழ‌ பாட‌சாலை அனைத்தும் சிங்க‌ள‌ அர‌சாங்கத்தால்  சிங்க‌ள‌வ‌ர் த‌ங்கும் அழ‌கான விடுதிக‌ள் ஆக‌ மாற்றி அமைக்க‌ ப‌டும் , கார‌ண‌ம்  த‌மிழீழ‌த்தில் உள்ள‌ அனைத்து பாட‌சாலையிலும் ப‌டிக்க‌ த‌மிழ் பிள்ளைக‌ள் இல்லை என்ர‌ கார‌ண‌த்தால்  /

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.