Jump to content

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான புதிய அமைச்சரவை சத்தியப்பிரமாணம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ddd.jpg

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான புதிய அமைச்சரவை சத்தியப்பிரமாணம்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான புதிய அமைச்சரவை சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் புதிய அமைச்சரவை இன்று(வெள்ளிக்கிழமை) காலை சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளது.

இதற்கமைய, நிதி, பொருளாதார மற்றும் கொள்கை திட்டமிடல், புத்தசாசனா, கலாசார விவகாரங்கள், மத விவகாரங்கள், நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வீட்டுவசதி அமைச்சராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.

நீதி மறுசீரமைப்பு மற்றும் சட்ட சீர்திருத்த அமைச்சராக நிமல் சிறிபால டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சராக ஆறுமுகம் தொண்டமான் நியமிக்கப்பட்டுள்ளார்.

வெளிநாட்டு உறவுகள், திறன் அபிவிருத்தி தொழிற்துறை அமைச்சராக தினேஷ் குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

கடற்தொழில் மற்றும் நீரியல்வள அமைச்சராக டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்பட்டுள்ளார்.

சுகாதார மற்றும் சுதேச மருத்துவம் மற்றும் மகளிர் சிறுவர் அலுவல்கள் அமைச்சராக பவித்ரா வன்னிஆராச்சி நியமிக்கப்பட்டுள்ளார்.

தகவல் தொலைத்தொடர்பு, உயர்கல்வி மற்றும் புத்தாக்கல் அமைச்சராக பந்துல குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

பொது நிர்வாகம், உள்துறை, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சராக ஜனக பண்டார தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளார்.

மஹாவலி கமத் தொழில், நீர்பாசனத்துறை மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சராக சமல் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.

கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சராக டளஸ் அலகபெரும நியமிக்கப்பட்டுள்ளார்.

துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சராக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.

சிறிய மற்றும் நடுத்தர தொழில் மேம்பாடு, தொழில் வழங்கல் மேம்பாட்டு அமைச்சராக விமல் வீரவன்ச நியமிக்கப்பட்டுள்ளார்.

பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவம் மற்றும் மின்சக்தி எரிசக்தி அமைச்சராக மஹிந்த அமரவீர நியமிக்கப்பட்டுள்ளார்.

சுற்றாடல் மற்றும் வனஜீவராசிகள், காணி மற்றும் காணி விவகார அமைச்சராக எஸ்.எம்.சந்திரசேன நியமிக்கப்பட்டுள்ளார்.

பெருந்தோட்ட மற்றும் ஏற்றுமதி வேளாண்மை அமைச்சராக டொக்டர் ரமேஷ் பதிரன நியமிக்கப்பட்டுள்ளார்.

http://athavannews.com/மஹிந்த-ராஜபக்ஷ-தலைமையிலா/

###########    ###########    #############   ############# 

%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81.jpg

புதிய அமைச்சரவையில் தொண்டமானிற்கு திகாவின் அமைச்சு

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான புதிய அமைச்சரவை சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் புதிய அமைச்சரவை இன்று(வெள்ளிக்கிழமை) காலை சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளது.

இதன்போது சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சராக ஆறுமுகம் தொண்டமான் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான அரசாங்கத்தில் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சராக திகாம்பரம் செயற்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/புதிய-அமைச்சரவையில்-தொண்/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF.jpg

மஹிந்தவின் புதிய அமைச்சரவையில் டக்ளஸிற்கும் அமைச்சுப் பதவி!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான புதிய அமைச்சரவை சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் புதிய அமைச்சரவை இன்று(வெள்ளிக்கிழமை) காலை சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளது.

இதன்போது கடற்தொழில் மற்றும் நீரியல்வள அமைச்சராக டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு இடம்பெற்ற ஆட்சி மாற்றத்தின் போது டக்ளஸ் தேவானந்தாவிற்கு அமைச்சு பதவி வழங்கப்பட்டு சில தினங்கள் மாத்திரமே அவர் அமைச்சராக செயற்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/மஹிந்தவின்-புதிய-அமைச்சர/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரு தமிழ் அமைச்சர்கள்... நியமிக்கப் பட் ட நிலையில்,
இதுவரை... ஒரு முஸ்லீம் அமைச்சர்களும்... நியமிக்கப் படவில்லை, என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்களம்  ஏதோ... ஒரு   முடிவில் உள்ளது போல் தெரிகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, தமிழ் சிறி said:

நிதி, பொருளாதார மற்றும் கொள்கை திட்டமிடல், புத்தசாசனா, கலாசார விவகாரங்கள், மத விவகாரங்கள், நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வீட்டுவசதி அமைச்சராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.

1 நகர அபிவிருத்தி, வீட்டு வசதி - குபேர மூலை , வருமானம் உண்டு .👌

2 சட்ட அமைச்சு - றங் கிளீனர் & சைரன் வைத்த பரோடா கார் கிடைக்கும் . 😄

3 தோட்ட உட்கட்டமைப்பு - கூட்டுறவு , தொழில் சங்கம் , வழியா அடித்தால் உண்டு.

4 வெளியுறவு -  உலகம் சுற்றும் வாலிபன் ஆனால் பைசா தேறாது. 😢

5 கடல்தொழில் - தலைவலியை உண்டு பண்ணும் &  நீரியல் - றால் பண்ணை , ஏற்றுமதியில் கொமிசன் உண்டு .

6 சுகாதாரம் - றோக்குத்தர்மார் & தனி ஒருவன் பாணியில் அடித்தால் வருமானம் உண்டு.

7 தொலை தொடர்பு - 3g /4g உரிமம், ரயலாக், ஏர் ரெல் போன்ற நிறுவனங்களிடம் கொமிசன் அடித்தால் உண்டு.

8 மாகாண சபை/உள்ளூராட்சி - ஒதுக்கப்படும் நிதியில் அடித்தால் உண்டு. 😄

9 தொழில் , உணவு பாதுகாப்பு - தொழில் முனைவோரிடம் கமிசன் மற்றும் மசாலா தூள் பொக்கெற்கள், பாண் விசுகொத்து வகையில் வருமானம் உண்டு.👍

10 கல்வி விளையாட்டு - கை காசு போட வேண்டி வரும் .😢

11 கப்பல், நெடுஞ்சாலை - அட்சய பாத்திரம் அள்ள அள்ள குறையாது. 👍

12 சிறிய நடுத்தர தொழில் அபிவிருத்தி - ரப்பர் ஸ்ராம்ப் & சைரன் வைத்த பரடா கார் கிடைக்கும்.

13 போக்குவரத்து , எரிசக்தி - சிறிய அளவில் கீர்த்தி உண்டு .

14 வனஜீவரசி, காணி : சிங்கம்புலி யானை கொடுத்தால் உண்டு ஆனால் காணி விவகாரம் கோடிகள் கை மாறும்.👍

15 பெருந்தோட்டம் - தேத்தூள்  ஏற்றுமதி , ஊழியர் சேம நல நிதி வகையில் வருமானம் .

டிஸ்கி :

mqdefault.jpg

 ஏதோ என் சிற்றறிவுக்கு எட்டிய வகையில் வரிசைபடுத்தி உள்ளேன் .. கள உறவுகள் நீங்களும் வரிசைபடுத்தலாமே..? ☺️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மஹிந்த ராஜபக்ஷ அமைச்சரவை பொறுப்பேற்பு - 2 தமிழர்களுக்கு இடம்; முஸ்லிம்கள் இல்லை

பிரதமர் பதவியேற்புபடத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionகோப்புப்படம்

இலங்கை அரசின் புதிய அமைச்சரவை இன்று வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுள்ளது.

சத்திய பிரமாண நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

இந்த அமைச்சரவையில் இந்திய வம்சாவளித் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றம் சென்ற ஆறுமுகன் தொண்டமானும், வட மாகாண தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்திய நாடாளுமன்றம் சென்ற டக்ளஸ் தேவானந்தாவும் அமைச்சு பொறுப்புக்களை ஏற்றுள்ளனர்.

புதிய அமைச்சரவையில் முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஒருவர் கூட இடம்பிடிக்கவில்லை.

இலங்கை அமைச்சரவை

துறை அமைச்சர்
நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை, நகர அபிவிருத்தி, நீர்பாசனம், வீட்டு வசதி மற்றும் புத்த சாசனம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ
நீதிமன்றம், மனித உரிமைகள், சட்ட மறுசீரமைப்பு நிமல் சிறிபால டி சில்வா
சமூக வலுவூட்டல், உட்கட்டமைப்பு வசதிகள் ஆறுமுகன் தொண்டமான்
வெளிநாட்டு தொடர்புகள், வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் தொடர்பு, திறன் அபிவிருத்தி தினேஷ் குணவர்தன
மகளிர், சிறுவர் விவகாரம், சமூக பாதுகாப்பு, சுகாதாரம், சுதேச மருத்துவம் பவித்ரா வன்னியாராச்சி
கடல் தொழில் மற்றும் நீரியல் வளம் டக்ளஸ் தேவானந்தா
தகவல், தொலைத்தொடர்பு, உயர்கல்வி மற்றும் புதிய உற்பத்திகள் அபிவிருத்தி பந்துல குணவர்தன
அரச நிர்வாக, உள்விவகாரம், உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் ஜனக்க பண்டார தென்னக்கோன்
விவசாயம், பெருந்தோட்டம், மகாவலி கிராமிய அபிவிருத்தி, உணவு பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் விவகாரம் சமல் ராஜபக்ஷ
வீதி, பெருந்தெருக்கல், துறைமுகம் மற்றும் கடற்சார் விவகாரம் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ
கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரம் டளஸ் அழகபெரும
சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை, கைத்தொழில் மற்றும் வளங்கள் முமைத்துவம் விமல் வீரவங்ச
பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவம் மற்றும் மின்சக்தி , மின்வலு மஹிந்த அமரவீர
காணி, காணி மறுசீரமைப்பு, சுற்றாடல், வனஜீவராசிகள் எஸ்.எம்.சந்திரசேன
பெருந்தோட்ட கைத்தொழில், ஏற்றுமதி விவசாயம் ரமேஷ் பத்திரண

சுற்றுலாத்துறை, விமான சேவைகள், முதலீட்டு ஊக்குவிப்பு

https://www.bbc.com/tamil/sri-lanka-50514076

பிரசன்ன ரணதுங்க
Link to comment
Share on other sites

டக்கிளசுக்கு வாழ்த்துகள். மிக மோசமாக பாதிக்கப்பட்ட சமூகமாகவும் சவால்களை சந்திக்கும் சமூகமாகவும் இருக்கும் தமிழ் மீனவ சமூகமும் இவரால் பயன் பெற்றால் சந்தோசம்.

Link to comment
Share on other sites

9 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

14 வனஜீவரசி, காணி : சிங்கம்புலி யானை கொடுத்தால் உண்டு ஆனால் காணி விவகாரம் கோடிகள் கை மாறும்.👍

இந்த அமைச்சால் தான் தமிழர் பூர்வீக நிலங்கள் அபகரிப்பு செய்யப்பட்டு வந்தது. ரணில் - சஜித் அரசில் இருந்து இது மாறுபடுமா இல்லை தொடருமா.... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, ampanai said:

இந்த அமைச்சால் தான் தமிழர் பூர்வீக நிலங்கள் அபகரிப்பு செய்யப்பட்டு வந்தது. ரணில் - சஜித் அரசில் இருந்து இது மாறுபடுமா இல்லை தொடருமா.... 

நான் தமிழக உறவு தோழர் .. இங்குள்ள கணக்குகளின்படி வருமானம் வரும் துறையை வரிசைப்படுத்தி எழுதினேன்..  எனது சிற்றறிவுக்கு எட்டிய வரை தொடரும் என்றே தோன்றுகிறது.. 😢

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அரசின் புதிய அமைச்சரவை இன்று வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுள்ளது.

சத்திய பிரமாண நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

இந்த அமைச்சரவையில் இந்திய வம்சாவளித் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றம் சென்ற ஆறுமுகன் தொண்டமானும், வட மாகாண தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்திய நாடாளுமன்றம் சென்ற டக்ளஸ் தேவானந்தாவும் அமைச்சு பொறுப்புக்களை ஏற்றுள்ளனர்.

புதிய அமைச்சரவையில் முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஒருவர் கூட இடம்பிடிக்கவில்லை.

இலங்கை அமைச்சரவை

துறை அமைச்சர்
நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை, நகர அபிவிருத்தி, நீர்பாசனம், வீட்டு வசதி மற்றும் புத்த சாசனம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ
நீதிமன்றம், மனித உரிமைகள், சட்ட மறுசீரமைப்பு நிமல் சிறிபால டி சில்வா
சமூக வலுவூட்டல், உட்கட்டமைப்பு வசதிகள் ஆறுமுகன் தொண்டமான்
வெளிநாட்டு தொடர்புகள், வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் தொடர்பு, திறன் அபிவிருத்தி தினேஷ் குணவர்தன
மகளிர், சிறுவர் விவகாரம், சமூக பாதுகாப்பு, சுகாதாரம், சுதேச மருத்துவம் பவித்ரா வன்னியாராச்சி
கடல் தொழில் மற்றும் நீரியல் வளம் டக்ளஸ் தேவானந்தா
தகவல், தொலைத்தொடர்பு, உயர்கல்வி மற்றும் புதிய உற்பத்திகள் அபிவிருத்தி பந்துல குணவர்தன
அரச நிர்வாக, உள்விவகாரம், உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் ஜனக்க பண்டார தென்னக்கோன்
விவசாயம், பெருந்தோட்டம், மகாவலி கிராமிய அபிவிருத்தி, உணவு பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் விவகாரம் சமல் ராஜபக்ஷ
வீதி, பெருந்தெருக்கல், துறைமுகம் மற்றும் கடற்சார் விவகாரம் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ
கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரம் டளஸ் அழகபெரும
சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை, கைத்தொழில் மற்றும் வளங்கள் முமைத்துவம் விமல் வீரவங்ச
பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவம் மற்றும் மின்சக்தி , மின்வலு மஹிந்த அமரவீர
காணி, காணி மறுசீரமைப்பு, சுற்றாடல், வனஜீவராசிகள் எஸ்.எம்.சந்திரசேன
பெருந்தோட்ட கைத்தொழில், ஏற்றுமதி விவசாயம் ரமேஷ் பத்திரண
சுற்றுலாத்துறை, விமான சேவைகள், முதலீட்டு ஊக்குவிப்பு

பிரசன்ன ரணதுங்க

https://www.bbc.com/tamil/sri-lanka-50514076?ocid=socialflow_facebook&fbclid=IwAR0ykWC8EfEZFO2CExIcH18cuHhEEXYNHP98aWYD30XZlbNgpmnGvggAxVA

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

1 நகர அபிவிருத்தி, வீட்டு வசதி - குபேர மூலை , வருமானம் உண்டு .👌

மாவை சேனாதி ராசாவுக்கு .... கொடுத்திருக்கலாம். 😛

2 சட்ட அமைச்சு - றங் கிளீனர் & சைரன் வைத்த பரோடா கார் கிடைக்கும் . 😄

சுமந்திரனுக்கு... கிடைக்க வேண்டிய பதவி, நழுவி  போச்சு.  :grin:

3 தோட்ட உட்கட்டமைப்பு - கூட்டுறவு , தொழில் சங்கம் , வழியா அடித்தால் உண்டு.

கிளி நொச்சியில்... சாராய கடை இல்லை.  இனி....  எமது மக்களுக்கு,  வேண்டும் என்று, 
பாராளுமன்றத்தில்  பேசிய ஸ்ரீதரனுக்கு தான்  இந்தப் பதவி பொருத்தமாக இருக்கும். 😮

4 வெளியுறவு -  உலகம் சுற்றும் வாலிபன் ஆனால் பைசா தேறாது. 😢

உங்களுடைய...  முதல்வர் பழனிச்சாமி,  🇺🇸அமெரிக்காவுக்கு..  🛩️  போக முதலே... 
கோட்டு , சூட்டு  போட்டுக் கொண்டு..  :120_speaking_head:  ஐக்கிய நாடுகள் சபை வரை...  
போனவர்கள் தான்...   🇺🇳 சம்பந்தன் , சுமந்திரன், மாவை.... கோஸ்ட்டிகள்.  

tw_warning: அதுக்குப் பிறகு...  அந்த  இழவுகளில்  இருந்து, மீள  முடியாமல் தவிக்கின்றோம்.  tw_warning:

சும்மா... இருய்யா... பிலிப்சு....  🔨

டிஸ்கி: கனக்க எழுத வேண்டி இருந்தது, இந்தக் கிலிசு கேடுகளை.. எழுதினால்...
எனக்கு... "விசர்"  வந்து விடும்.  :grin:

Link to comment
Share on other sites

20 hours ago, தமிழ் சிறி said:

சுகாதார மற்றும் சுதேச மருத்துவம் மற்றும் மகளிர் சிறுவர் அலுவல்கள் அமைச்சராக பவித்ரா வன்னிஆராச்சி நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை அமைச்சரவையின் ஒரே பெண் அமைச்சர் - பவித்ரா வன்னியராச்சி!

இலங்கையின் முதல் பெண் பிரதமரான சிரிமாவோ பண்டாரநாயகேவின் விருப்பத்துக்கு இணங்க 1990-ல் அரசியலுக்குள் நுழைந்தவர் பவித்ரா தேவி.

பவித்ரா வன்னியராச்சி

மகிந்த ராஜபக்சே தலைமையிலான 15 பேர் கொண்ட புதிய அமைச்சரவைக்கு இலங்கையில், நேற்று பதவிப்பிரமாணம் செய்து வைத்தார் புதிய அதிபர் கோத்தபய ராஜபக்சே. புதிய அமைச்சரவையின் ஒரே பெண் அமைச்சராக பவித்ரா தேவி வன்னியராச்சி பொறுப்பேற்றிருக்கிறார். இவருக்கு பெண்கள், குழந்தைகள் நலன் மற்றும் சமூகப் பாதுகாப்புத்துறை, சுகாதாரம் மற்றும் மண்சார்ந்த மருத்துவத்துறை ஆகிய இலாக்காக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

 

இலங்கையின் முதல் பெண் பிரதமரான சிரிமாவோ பண்டாரநாயகேவின் விருப்பத்துக்கு இணங்க 1990-ல் அரசியலுக்குள் நுழைந்தவர் பவித்ரா தேவி. இலங்கை விடுதலைக் கட்சியின் மகளிர் அணித்தலைவராக இருந்தவர். பின்னர், 1993-ல் சபரகுமாவா மாகாண உறுப்பினராகவும் 1994-ல் ரத்னபுரா மாவட்டத்துக்கான இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்தவர்.

இலங்கை பவித்ரா வன்னியராச்சி
 
இலங்கை பவித்ரா வன்னியராச்சி

அடிப்படையில் வழக்கறிஞரான பவித்ரா இலங்கை உச்ச நீதிமன்ற வழக்கறிஞராகப் பணியாற்றியவர். 2000-ம் வருடம் தொடங்கி இலங்கை அமைச்சரவையின் பல்வேறு அமைச்சர் பதவிகளை வகித்துவந்தார். இன அழிப்புப் போர் காலகட்டத்தில் அப்போது அதிபராக இருந்த மகிந்தாவின் கீழ் இளைஞர் நலன் துறை அமைச்சராக இருந்தவர் பவித்ரா.

``விடுதலைப்புலிகளுக்கு ரணில் விக்ரமசிங்கே மறைமுக ஆதரவு அளித்துவந்தார், பிரபாகரனிடம் இலங்கையின் ஒருபகுதியைக் கொடுத்துவிட்டார்’’ எனத் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தவர் பவித்ரா.

https://www.vikatan.com/government-and-politics/international/pavithra-wanniarachi-the-only-woman-minister-in-rajapakse-cabinet

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எத்தனையோ தேசங்களுக்கு போயிருக்கேன்.. என் தாயக பூமியில் தான் கடற்கரை முள்ளு வேலிக்குள் அடைபட்டுக்கிடக்குது காண்கிறேன். உங்களுக்கு அதன் வலி புரிய வாய்ப்பில்லை. உக்ரைனுக்கு நீலிக்கண்ணீர் வடிக்கிறீங்க. அப்பவே விளங்கிட்டுது இப்படி கருத்து வருமுன்னு. கண்டுகொள்ளவதில் பயனில்லை. ஏனெனில்.. எல்லாத்தையும் சகித்துப் போகிற.. கூட்டத்துக்குள் நீங்கள் வந்து கனகாலம். 
    • இராணுவத்தின் நிர்வாகத்தின் கீழ் ஒட்டுசுட்டான் ஓட்டு தொழிற்சாலை – புனரமைப்பையும் ஆரம்பித்தனா் March 29, 2024     ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலை இராணுவ சமூக சேவையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. அத்துடன், அந்தத் தொழிற்சாலையை புனரமைக்கும் பணிகளில் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் முல்லைத்தீவு மாவட்டத்துக்கு சென்ற இராணுவத் தளபதி லெப். ஜெனரல் விக்கும் லியனகே பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார். இதன் போது, ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலைக்கும் சென்று அங்கு முன்னெடுக்கப்படும் புனரமைப்பு பணிகளையும் பார்வையிட்டார். இந்தத் தொழிற்சாலையை கடந்த பெப்ரவரி 15ஆம் திகதி முதல் புனரமைப்பு பணிகள் இடம்பெற்று வருகின்றன. கூழாமுறிப்பில் அமைந்துள்ள இந்த ஓட்டுத் தொழிற்சாலை உள்நாட்டு போர் காரணமாக கடந்த 1983ஆம் ஆண்டு முதல் செயலிழந்து காணப்பட்டது. எனினும், 2009ஆம் ஆண்டின் பின்னர் இந்தத் தொழிற்சாலையை மீண்டும் இயக்க மாறி மாறி வந்த அரசாங்கங்கள் உறுதியளித்தன. ஆனால், அவை எதுவும் நடக்கவில்லை. இந்த நிலையிலேயே, இலங்கை பீங்கான் கூட்டுத்தாபனம் தொழிற்சாலையை இராணுவ சமூக சேவையின் கீழ் வழங்கியுள்ளது. இதைத் தொடர்ந்தே தொழிற்சாலையை புனரமைக்கும் பணிகளில் இராணுவம் ஈடுபட்டுள்ளது. “நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும் உள்நாட்டு மக்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் அந்தப் பகுதி மக்களின் நலனை மேம்படுத்தவும் இந்த தொழிற்சாலை புதுப்பிக்கப்படுகிறது” என்று இராணுவம் தெரிவித்துள்ளது.   https://www.ilakku.org/இராணுவத்தின்-நிர்வாகத்த/
    • பிளவை நோக்கிச் செல்லும் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன ஜனாதிபதி தேர்தலில்  கட்சியின் வேட்பாளரை நிறுத்தவேண்டும் என ஒரு தரப்பினரும் ஜனாதபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவேண்டும் என மற்றைய தரப்பினரும்  உறுதியாக நிற்பதன் காரணமாக ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன பிளவுபடும் நிலை உருவாகியுள்ளதாக டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் ராஜபக்ச குடும்பத்திற்கு ஆதரவான தரப்பினர் கட்சி தனது சொந்தவேட்பாளரை நிறுத்தி தேர்தலில் போட்டியிடவேண்டும் என  தெரிவித்துள்ளனர். கட்சியின் நிறைவேற்றுகுழுவின் கூட்டத்தில் இந்த கருத்து வெளியாகியுள்ளது - எனினும் தேர்தல் திகதி அறிவிக்கப்படாததால் இது குறித்து கட்சி இன்னமும் தீவிரமாக ஆராயவில்லை. இதேவேளை அரசாங்கத்தில் அமைச்சரவை பதவிகளை வகிக்கும்  பொதுஜனபெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேர்தலில் போட்டியிடும் பட்சத்தில் அவருக்கே ஆதரவளிக்கவேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டை கொண்டுள்ளனர். R   https://www.tamilmirror.lk/செய்திகள்/பிளவை-நோக்கிச்-செல்லும்-ஸ்ரீலங்கா-பொதுஜனபெரமுன/175-335341
    • முல்லைத்தீவில் புத்தாண்டை முன்னிட்டு இராணுவத்தின் மாபெரும் விளையாட்டு ! (புதியவன்) இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் விளையாட்டு விழா முன்னாயத்த கலந்துரையாடல். மலர இருக்கும் 2024 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட இலங்கை இராணுவத்தின் 59 வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் முள்ளியவளை பிரதேசம் மாமூலை டைமன் விளையாட்டுக் கழக மைதானத்தில் (07.04.2024) அன்று மாபெரும் விளையாட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது. அத்தோடு அன்றைய தினம் காலையில் மரதன் ஓட்டம், துவிச்சக்கரவண்டி ஓட்டம், ஏனைய மைதான விளையாட்டுக்கள், இரவு மாபெரும் இன்னிசை நிகழ்வும் இடம்பெறவுள்ளது. இதன் முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் (28) மு.ப 10.00 மணியளவில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் முல்லைத்தீவு மாவட்ட 59 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர்ஜென்ரல் பிரசன்ன விஜயசூரிய தலைமையில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் பிரதம அதிதியாக மேலதிக மாவட்ட செயலாளர் திரு.எஸ்.குணபாலன் கலந்து சிறப்பித்தார். இந்த நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ம.உமாமகள், முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , வலயக்கல்வி பணிமனையின் அதிகாரிகள், கலாசார உத்தியோகத்தர், மாவட்ட மருத்துவர்கள் , முல்லைத்தீவு மாவட்ட இராணுவ அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.   https://newuthayan.com/article/புத்தாண்டை_முன்னிட்டு_இராணுவத்தின்_மாபெரும்_விளையாட்டு_கலந்துரையாடல்!  
    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.