Jump to content

வறுமை நிலையிலுள்ள திறமையானவர்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் – ஜனாதிபதி அதிரடி!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வறுமை நிலையிலுள்ள திறமையானவர்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் – ஜனாதிபதி அதிரடி!

 In இலங்கை      November 22, 2019 8:23 am GMT      0 Comments      1459      by : Benitlas

dw-1.jpg

முக்கிய நியமனங்களின் போது திறமையானவர்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் புதிய அமைச்சர்கள் இன்று காலை சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து அங்கு உரையாற்றிய போதே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, ’13 ஆவது அரசியல் யாப்பிற்கு இணங்க வரையறுக்கப்பட்ட அமைச்சரவை எண்ணிக்கைக்கு அமைவாகவே அமைச்சர்களை நியமிக்க வேண்டியுள்ளது.

15 அமைச்சர்கள் இன்று நியமிக்கப்பட்டார்கள். இந்த நியமனங்களையும் பெரும் சிரமத்திற்கு மத்தியிலேயே செய்யவேண்டி இருந்தது. இன்று அமைச்சர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

தேர்தல் விஞ்ஞாபனத்தில் பொது மக்கள் முன்னிலையில் தூய்மையான அரச நிர்வாகத்தை முன்னிலைப்படுத்திய விடயங்களுக்கு மக்கள் ஆணையை கோரி இருந்தோம். மக்களும் அதற்கான ஆணையை வழங்கியுள்ளனர்.

தற்பொழுது இடைக்கால அரசாங்கத்துக்கான அமைச்சரவை நியமிக்கப்பட்டுள்ளது. விசேடமாக நாம் முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபன விடயங்களை அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும்.

இதற்காகவே இடைக்கால அரசாங்கத்தில் 15 பேரைக் கொண்ட அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்களின் எதிர்பார்ப்புக்களை முழுமையாக நாம் நிறைவேற்ற வேண்டும்.

அமைச்சர்கள் அதற்கு ஏற்ற வகையில் செயற்பட வேண்டும். தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு அமைவாக பொதுத் தேர்தலை நாம் நடத்த வேண்டும். அந்த தேர்தலில் நாம் அமோக வெற்றி பெறவெண்டும். இதற்கு அனைவரதும் ஒத்துழைப்பு அவசியம்.

பொது மக்கள் எதிர்பார்க்கும் யுகத்திற்கு நாம் நாட்டை முன்னெடுக்க வேண்டும். அந்த யுகத்தை நோக்கி பயணிப்பதற்கு நாம் முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்ட விடயங்களை செயற்படுத்த வேண்டும்.

இதற்கு உங்கள் அனைவரதும் ஒத்துழைப்பு அவசியம். ஜனாதிபதி இன்றைய அமைச்சர்கள் நியமனத்தை தொடர்ந்து எதிர்வரும் திங்கட்கிழமை அளவில் இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.

இராஜாங்க அமைச்சர்கள் தமது கடமைகளை செய்வதற்கு அமைச்சர்கள் தமது ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும். சமீப காலத்தில் இருந்த இராஜாங்க அமைச்சர்கள் முறையாக செயற்படுவதற்கு இடமளிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்ததையும் நாம் கேட்கக்கூடியதாக இருந்தது.

இராஜாங்க அமைச்சர்கள் கடந்த காலங்களில் தமது கையெழுத்துக்களை இடும் பயிற்சியில் ஈடுபடவே இடமளிக்கப்பட்டிருந்தது. இராஜாங்க அமைச்சர்கள் செயற்படுவதற்கு முழுமையான ஒத்துழைப்புக்களை அமைச்சர்கள் வழங்க வேண்டும்.

அதே போன்று தேர்தல் விஞ்ஞாபனத்தில் நாம் முன்வைத்த விடயங்களை நடைமுறைப்படுத்துவதிலும் முழுமையாக கவனம் செலுத்தப்படல் வேண்டும்.

நியாதிக்க சபை, கூட்டுத்தாபனம் என்பன நட்டத்தில் செயற்படுகின்றன. இவை இலாபம் மிக்க நிறுவனங்களாக கட்டியெழுப்பப்பட வேண்டும்.

இவற்றிற்கு தலைவர்களை நியமிக்கும் போது திறமை, தொழில் அனுபவங்களில் கவனம் செலுத்தப்படல் வேண்டும். அத்தகையோரை நியமிப்பதன் மூலமே இவற்றை இலாபம் மிக்கதாக முன்னெடுக்க முடியும்.

இந்த நிறுவனங்களுக்கு தலைவர்களை நியமிப்பது தொடர்பாக தெரிவுக்குழு மூலம் நாம் நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளோம்.

அமைச்சுக்களுக்கு உட்பட்ட கூட்டுத்தாபனம், நியாதிக்க சபைகளுக்கு தலைவர்களை நியமிப்பது தொடர்பாக அமைச்சர்கள் பொருத்தமானவர்களின் பெயர் விபரங்களை இந்த தெரிவுக்குழுவிற்கு சமர்ப்பிக்க வேண்டும்.

அமைச்சுக்களில் காணப்படும் வெற்றிடங்களுக்கு அமைச்சர்கள் தமது பிரதேசத்தை சேர்ந்தவர்களை நியமிப்பது வழமையாக இருந்து வருகின்றது.

தமது பிரதேசத்தில் வறுமைக்குடும்பங்களில் உள்ள திறமை மிக்கவர்களுக்கு இதில் முக்கிய இடம் வழங்கப்படவேணடும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

http://athavannews.com/வறுமை-நிலையிலுள்ள-திறமைய/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் எப்போதும் என்னை தேர்தல் விற்பனர் என்றோ - என் கணிப்புகள் திறம் என்றோ சொன்னதில்லை.  நான் என்ன லயலா கொலிஜா அல்லது இந்தியா டுடேயா? சர்வே எடுக்க. அல்லது சாத்திரக்காரனா🤣 நான் கணிக்கிறேன் என நீங்கள் எழுதுவதே சுத்த பைத்தியக்காரத்தனம். எல்லாரையும் போல் நான் என் கருத்தை எதிர்வுகூறலாக எழுதுகிறேன். அது என் கருத்து மட்டுமே. Pure speculation. அது சரி வரும், பிழைக்கும் - I don’t give a monkey’s.
    • சீமான் பேசுவ‌தை உள‌வுத்துறை தொட்டு ப‌ல‌ர் கேட்ப‌து உண்டு சீமான் தேர்த‌ல் ஆணைய‌த்தை ப‌ற்றி அவ‌தூறாக‌ பொய்யாக‌ பேசி விட்டார் என்று வ‌ழ‌க்கு தொடுக்க‌ வேண்டிய‌து தானே நீங்க‌ள் சொல்லுவ‌து ம‌ட்டும் உண்மை என்று எத‌ன் அடிப்ப‌டையில் ந‌ம்புவ‌து இத‌ற்க்கு உங்க‌ளால் ப‌தில் அளிக்க‌ முடியுமா.....................நேர்மையான‌வ‌ர்க‌ள் என்றால் நேர்மையின் ப‌டி தான் ந‌ட‌ப்பின‌ம் 2009க்கு முத‌ல் ஒரு முக‌ம் 2009க்கு பின் இன்னொரு முக‌ம் இதில் சீனானை ப‌ற்றி விம‌ர்சிப்ப‌து வெக்க‌க் கேடு.................... சீமான் ஊட‌க‌த்துக்கு கொடுத்த‌ பேட்டி அப்ப‌டியே இருக்கு அதை ப‌ல‌ ல‌ச்ச‌ம் பேர் பார்த்து இருக்கின‌ம் தேர்த‌ல் ஆணைய‌த்துக்கு சீமான் பேசின‌து தெரியாம‌ போகுமா அல்ல‌து உள‌வுத்துறை இப்ப‌டியான‌ விடைய‌த்தில் தூங்கி கொண்டு இருக்குமா ஜ‌ன‌நாய‌க‌ நாட்டின் தேர்த‌ல் ஆணைய‌த்தை சீமான் தேவை இல்லாம‌ அவ‌தூறாக‌ பொய்யாக‌ பேசி விட்டார் என்று சீமானை கைது செய்து இருக்க‌லாமே அல்ல‌து சீமான் பிர‌ச்சார‌ம் செய்ய‌க் கூடாது என்று த‌டை விதித்து இருக்க‌லாமே தேர்த‌ல் ஆனைய‌ம்........................பொல்லை கொடுத்து அடி வேண்ட‌ வேண்டாம்😁........................
    • இதுவரை பல தரம் கேட்டும் நீங்கள் பதில் சொல்லாத கேள்வி-  இவ்வளவு மோசமான தேர்தல் முறையில், எப்படியும் தோற்கடிப்பார்கள் என தெரிந்து, அதுவும் தனியே ஏன் 2016 இல் இருந்து போட்டியிட்டு மண்ணை கவ்வுகிறார்? பேசாமல் தேர்தலுக்கு அப்பால் இயக்கம் நடத்தலாமே? வாங்கோ என்னை வசைபாட எனவே வாழும் அகலிகை….சாரி யாழுக்கு வரும் கல்யாண். நான் கஜேஸ் கட்டுகாசு இழப்பார் என கூறவில்லை. நான் வெல்லமாட்டார்கள் என கூறிய அத்தனை தேர்தல்களிலும் அவர்கள் வெல்லவில்லை. கடந்த முறை சொன்னது போலவே யாழில் ஒரு சீட்டை எடுத்தார் பொன்னர். அம்பாறை மக்களை ஏமாற்றி அடுத்த சீட்டை 100 வாக்கு வித்தியாசத்தில் எடுத்தார் குதிரை கஜே.   நேற்று வைரவர் பூசை பலமோ?
    • மற்றவர்களிடம் கேள்வி கேட்கும் போதே நீங்களும் ஏதோ ஒரு ஐடியாவை வைத்துள்ளீர்கள் என நம்புகிறேன்.எடுத்து(துணிவாக) விடுங்கள் பார்க்கலாம். ஆப்பா  இல்லை காப்பா என பின்னர் பார்க்கலாம்.
    • உங்களுக்கு மேலே இருப்பது என் பதில். இப்போ யார் கோமாளி🤣 இதுவும் சீமான் ப்ரோ விட்டா இன்னொரு அவிட்டா. இல்லை என்றால் இப்படி தேர்தல் ஆணையம் சொன்ன ஆதாரம் எங்கே? அண்ணன் சொல்வதை எல்லாம் மொக்கு தம்பிகள் நம்பலாம். எல்லாரும் நம்ப தேவையில்லை. நீங்கள் ஏலவே என்னை 200 உபி என பல இடங்களில் எழுதிவிட்டீர்களே. எனக்கு ஒரு நற்பெயர் மீதும் ஆர்வம் இல்லை. அப்படி புற இருக்கோ இல்லையோ இ டோண்ட் கேர். இருந்தாலும் - சீமான் முகத்திரையை கிழிக்காமல் அந்த பெயரை தக்கவைப்பதிலும் பார்க்க கெட்ட பெயரே மேல்🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.