Jump to content

இன்று அதிகாலை கனவில் வந்து மிரட்டியது; பேய் பீதியில் கிணற்றில் குதித்த வாலிபர்


Recommended Posts

Dkn_Tamil_News_2019_Nov14__570079982280732.jpg

புதுக்கடை: புதுக்கடை அருகே பேய் பீதியில் கோயில் கிணற்றுக்குள் விழுந்த வாலிபரை தீயணைப்பு துறையினர் மீட்டனர். குமரி மாவட்டம் ஐரேனிபுரம் அருகே அயனிவிளை பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன் (34) கூலி தொழிலாளி. இன்று அதிகாலை வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். திடீரென படுக்கையில் இருந்து எழுந்தார். தொடர்ந்து வீட்டில் இருந்து வேகமாக வெளியே ஓடினார். இதை வீட்டில் இருந்த யாரும் கவனிக்கவில்லை. என்னை ஒன்றும் செய்யாதே. விட்டு விடு என அலறியவாறு ஓடிய ஸ்டீபன், வீட்டில் இருந்து சிறிது தொலைவில் உள்ள நாகதேவி கோயிலுக்குள் சென்று, அந்த கோயில் வளாகத்தில் உள்ள கிணற்றில் குதித்தார். திடீரென கிணற்றில் ஏதோ சத்தம் கேட்டு, கோயில் அர்ச்சகர் பார்த்தார். அப்போது ஸ்டீபன், தண்ணீரில் நின்று கொண்டு இருந்தார். உடனடியாக அர்ச்சகர் கூச்சலிட்டார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.

பின்னர் குழித்துறை தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து, சுமார் அரை மணி நேரம் போராடி ஸ்டீபனை வெளியே மீட்டனர். அவருக்கு சிறு, சிறு காயங்கள் இருந்ததால், முதல் உதவி சிகிச்சைக்கு பின் குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் புதுக்கடை போலீசாரும்  வந்து விசாரணை நடத்தினர். கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட ஸ்டீபனிடம் போலீசார் கேட்ட போது, அவர் கூறிய தகவல்கள் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்ததுடன், சிரிக்கவும் வைத்தது. அவர் போலீசில் கூறுகையில், இன்று அதிகாலை நான் நன்றாக தூங்கி கொண்டு இருந்தேன். அப்போது 3 பேய்கள் என் கனவில் வந்தன.

நீ எங்களுடன் வந்து விடு. நாங்கள் உன்னை விட மாட்டோம் என்றன. அந்த உருவங்களை பார்த்ததும் நான் அதிர்ச்சி அடைந்தேன். என்னை ஒன்றும் செய்யாதீர்கள் என கூறிக்கொண்டு ஓட தொடங்கினேன். அந்த பேய்கள் என்னை துரத்தின. கடைசியாக நான் கோயில் கிணற்றுக்குள் விழுந்தேன். கிணற்றில் விழுந்தது கனவு தான் என்று நினைத்தேன். தண்ணீருக்குள் விழுந்த பின் தான் உண்மையிலேயே கிணற்றுக்குள் விழுந்ததை நான் உணர்ந்தேன் என்றார்.  இதை கேட்டதும் போலீசாரும் சிரித்தனர். இதற்கிடையே ஸ்டீபன் கூறும் தகவல் நம்பும்படியாக இல்லை என அந்த பகுதி பொதுமக்கள் கூறி உள்ளனர். ஏற்கனவே இந்த கிணற்றுக்குள் புதையல் இருப்பதாக கடந்த சில நாட்களாக வதந்தி உள்ளது. எனவே  புதையல் எடுக்கும் நோக்கத்துடன் யாராவது ஸ்டீபனை கிணற்றுக்குள் விழ வைத்து இருப்பார்களா? என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.

https://www.ndtv.com/tamil?pfrom=home-header-globalnav

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்டீபன் கிறிஸ்தவ பெயர் குதிச்சது நாகதேவி கோயில் அப்ப ஊர் மக்கள் சந்தேகப்படுவது சரிதான் போலிருக்கு .

Link to comment
Share on other sites

1 hour ago, பெருமாள் said:

ஸ்டீபன் கிறிஸ்தவ பெயர் குதிச்சது நாகதேவி கோயில் அப்ப ஊர் மக்கள் சந்தேகப்படுவது சரிதான் போலிருக்கு .

ஒவ்வொருவரும் தத்தமது சமயக் கிணறுகளில் குதித்தால் மட்டுமே அவர்கள் சொல்வதை நாங்கள் நம்புவோம் 😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

👉🏿 இன்று, வெள்ளிக்கிழமை ஆதலால்... 
செய்தி வாசிக்கும், அவசரத்தில்...  👈🏿
இன்று அதிகாலை கன(டா)வில் வந்து மிரட்டியது; பேய் பீதியில் கிணற்றில் குதித்த வாலிபர்,
கனடாவில்... கிணறு இருக்குதா என்று கொஞ்ச நேரம்... 
என்ரை  மூளை, பயங்கரமாய்.. சித்திக்க வெளிக்கிட்டுது. :shocked:

அட... இது, இந்தியா செய்தி என்று, தாமதமாய் தான்.. புரிந்தது. :grin: 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ampanai said:

இன்று அதிகாலை நான் நன்றாக தூங்கி கொண்டு இருந்தேன். அப்போது 3 பேய்கள் என் கனவில் வந்தன.

செய்தியில் அதிகாலை என்றுள்ளது.. பேய் வர சான்ஸ் இல்லை..

memees.php?w=650&img=Z291bmRhbWFuaS9nb3V

அவரின்ர மனைவி காலை ரிபன் இட்டலிக்கு சட்னி அரைக்க எழுப்பி இருப்பர்..மனுசன் தினமும் இதே தொல்லையா போய்டுத்து என்டு ஒரு முடிவு எடுத்திட்டார்.. 😢

Link to comment
Share on other sites

41 minutes ago, தமிழ் சிறி said:

கனடாவில்... கிணறு இருக்குதா என்று கொஞ்ச நேரம்... 
என்ரை  மூளை, பயங்கரமாய்.. சித்திக்க வெளிக்கிட்டுது. :shocked:

ஆம். கனடாவில் கிணறுகள் உள்ளன, கண்டும் இருக்கின்றேன். .
ஆனால், பேய்களை கண்டதில்லை. பிசாசுகள் இருக்கலாம் 🤩

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, ampanai said:

ஆம். கனடாவில் கிணறுகள் உள்ளன, கண்டும் இருக்கின்றேன். .
ஆனால், பேய்களை கண்டதில்லை. பிசாசுகள் இருக்கலாம் 🤩

நம்ப கஸ்ரமாய்... இருக்கு  அம்பனை.
ஒரு, கனடா கிணத்து.... படத்தை, போட்டுக் காட்டுங்களேன். :grin:

Link to comment
Share on other sites

2 hours ago, தமிழ் சிறி said:


கனடாவில்... கிணறு இருக்குதா என்று கொஞ்ச நேரம்... 

 

 

57 minutes ago, தமிழ் சிறி said:


ஒரு, கனடா கிணத்து.... படத்தை, போட்டுக் காட்டுங்களேன். :grin:

இதில் இரட்டை அர்த்தம் ஒன்றும் இல்லை தானே ?:unsure:😜

Link to comment
Share on other sites

1 hour ago, தமிழ் சிறி said:

நம்ப கஸ்ரமாய்... இருக்கு  அம்பனை.
ஒரு, கனடா கிணத்து.... படத்தை, போட்டுக் காட்டுங்களேன். :grin:

இந்த வீடு விற்பனைக்கு உள்ளத்து. அதில் கிணற்று நீர் உள்ளதாம். எல்லா வீடுகளுக்கும் நகராட்ச்சியால் நீரை வழங்க முடியாது.  

https://www.realtor.ca/real-estate/21164832/3-bedroom-single-family-house-5036-heaslip-lane-port-hope-rural-port-hope

Property Land Size, Well Water, Property Taxes, Hydro, Property Been Sold In ""As Is "" Condition.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, நிழலி said:

இதில் இரட்டை அர்த்தம் ஒன்றும் இல்லை தானே ?:unsure:😜

ம்க்கும்.... நான், இதற்கு பதில் சொல்ல மாட்டேன். :grin:
எனக்கு...   எச்சரிக்கை புள்ளிகள் தர,  "பிளான்"  பண்ணுறியள்  போலை. கிடக்கு. :7_sweat_smile:  😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ampanai said:

அந்த கோயில் வளாகத்தில் உள்ள கிணற்றில் குதித்தார். திடீரென கிணற்றில் ஏதோ சத்தம் கேட்டு, கோயில் அர்ச்சகர் பார்த்தார்.

எனக்கு  என்னமோ ஐய்யர்ரை மனிசியிலை பயங்கர டவுட். :wink:

Link to comment
Share on other sites

43 minutes ago, குமாரசாமி said:

எனக்கு  என்னமோ ஐய்யர்ரை மனிசியிலை பயங்கர டவுட். :wink:

என்னிடம் கைவசம் பச்சைகள் இல்லை கு.சா அவர்களே ( நீங்கள் ஒருக்காலும் கிணத்துக்க குதிக்க இல்லைதானே???? 🤣🤣🤣🤣🤣🤣)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Maharajah said:

என்னிடம் கைவசம் பச்சைகள் இல்லை கு.சா அவர்களே ( நீங்கள் ஒருக்காலும் கிணத்துக்க குதிக்க இல்லைதானே???? 🤣🤣🤣🤣🤣🤣)

கிணத்தடிப்பக்கம் போறேல்லை ஆனால் துரவுப்பக்கம் தடக்குப்பட்டு விழுந்த ஞாபகம் இருக்கு மற்றும் படி கருக்கு மட்டை வேலி தாறுமாறாய் கீறின கதையள் எக்கச்சக்கம்....🤣

Link to comment
Share on other sites

17 minutes ago, குமாரசாமி said:

கிணத்தடிப்பக்கம் போறேல்லை ஆனால் துரவுப்பக்கம் தடக்குப்பட்டு விழுந்த ஞாபகம் இருக்கு மற்றும் படி கருக்கு மட்டை வேலி தாறுமாறாய் கீறின கதையள் எக்கச்சக்கம்....🤣

அது ஒரு கனாக் காலம்.  

பிரபாகரன் காலத்தில் பிறந்ததை தவிர நாங்கள் வேறு ஒரு புண்ணியமும் செய்யவில்லை. 😭

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளிக்கிழமை விரதகாலங்கள் நல்ல விபரமாத்தான் கதைச்சிருக்கிறாங்கள். எல்லாரும் விவகாரமான ஆட்கள் போல🧐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, Maharajah said:

அது ஒரு கனாக் காலம்.  

பிரபாகரன் காலத்தில் பிறந்ததை தவிர நாங்கள் வேறு ஒரு புண்ணியமும் செய்யவில்லை. 😭

கருக்குமட்டை கீறினால்......கம்பி வேலியிலை தடக்குப்பட்டு விழுந்தால்.....கடியன் நாய் குலைக்க விழுந்தடிச்சு ஓடினால்.....அது கனாக்காலமே?🙃

Link to comment
Share on other sites

12 minutes ago, குமாரசாமி said:

கருக்குமட்டை கீறினால்......கம்பி வேலியிலை தடக்குப்பட்டு விழுந்தால்.....கடியன் நாய் குலைக்க விழுந்தடிச்சு ஓடினால்.....அது கனாக்காலமே?🙃

உண்மையை கூறுங்கள்,  அந்த நாட்களை நினைத்து தற்போது நீங்கள் மகிவுடையவில்லையா ? 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.