Jump to content

சிரேஷ்ட ஊடகவியலாளர் காலமானார்


Recommended Posts

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பின் பத்தரிகைத் துறையில் தனக்கென தனி இடத்தை பதித்திருந்த மூத்த ஊடகவியலாளரான கதிர்காமதம்பி வாமதேவன், நேற்று (21) காலமானார்.

நேற்று காலை 11.30 மணியளவில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலேயே அவர் காலமாகியுள்ளார்.

கதிர்காமதம்பி வாமதேவன் 1980ஆம் ஆண்டு வீரகேசரி, சூடாமணி, தினபதி ஆகிய பத்திரிகைகளில் ஊடகப் பணியை ஆற்றிவந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilmirror.lk/மட்டக்களப்பு/சரஷட-ஊடகவயலளர-கலமனர/73-241387

Link to comment
Share on other sites

a14.jpg?itok=et89GSb9

மட்டக்களப்பு கல்லடியை சேர்ந்த சிரேஸ்ட ஊடகவியலாளர் கதிர்காமத்தம்பி வாமதேவன் (ஓய்வுநிலை கிராமசேவகர், சமாதான நீதவானும்) நேற்று 922) வெள்ளிக்கிழமை தனது 69ஆவது வயதில் காலமானார்.  

மட்டக்களப்பு கல்லடி நொச்சிமுனையை பிறப்பிடமாகவும் மட்டக்களப்பு சூர்யா லேனை வசிப்பிடமாகவும் கொண்டவர். அன்னாரின் பூதவுடல் மட்டக்களப்பு சூரியா லேனில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதிக்கிரியைகள்  

நாளை ஞாயிற்றுக்கிழமை பி.ப 3.00 மணியளவில் இடம்பெறும் அமரர் வாமதேவன் செங்கலடிப் பிரதேச செயலாளர் பிரிவில் 30 வருடம் கிராமசேவகராக இருந்து சேவை புரிந்ததுடன் அக்காலத்தில் தினமணி, சிந்தாமணி, ஈழநாடு, தினமுரசு, சுதந்திரன் போன்ற பத்திரிகைகளுக்கு எழுத்தாளராகவும் தமது இறுதிக் காலம்வரை வீரகேசரி பத்திரிகையின் சித்தாண்டி பிரதேச நிருபராகவும் கடமையாற்றியவர்.இவர் கிழக்கு மாகாணத்திலுள்ள பிரசித்தி பெற்ற ஆலயங்களின் தல வரலாறுகளை பத்திரிகை வாயிலாக உலகறியச் செய்த பெருந்தகையாவார். 2015 ஆம் ஆண்டு இந்து கலாசார பண்பாட்டலுவல்கள் அமைச்சிடமிருந்து கலாபூஷண விருதினையும் பெற்றிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.   

ஆரையம்பதி தினகரன் நிருபர் 

https://www.thinakaran.lk/2019/11/23/கிழக்கு/44325/சிரேஷ்ட-ஊடகவியலாளர்-வாமதேவன்-காலமானார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பு மூத்த ஊடகவியலாளர் வாமதேவன் காலமானார்!

AdminNovember 23, 2019

மட்டக்களப்பின் ஊடகத்துறையில் தனக்கென தனி இடத்தை பதித்திருந்த மூத்த ஊடகவியலாளரான கதிர்காமதம்பி வாமதேவன் (வயது 69) அவர்கள் காலமானார்.

B7E61BBD-C43E-4E6D-9DCE-234EF8D0CE44.jpe

நேற்று இரவு சுகவீனம் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் காலமானதாக உறவினர்களினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர் 1980ம் ஆண்டு வீரகேசரி ,சூடாமணி ,தினபதி ஆகிய பத்திரிகைக்கு ஊடக பணியினை ஆற்றிவந்தமை குறிப்பிடத்தக்கது.

இவர் சமூக சேவகராக நுழைந்த இவர் ஏறாவூர் வீரகேசரிக்கான மூத்த ஊடகவியவலாளராக செயற்பட்டிருந்தார்.

அவ்வேளை மறைந்த அகமது லெப்பை மாஸ்டர் என்பவரிடம் இருந்து பத்திரிகைக்கு செய்தி எழுதும் பயிற்சியை பெற்றுக்கொண்டு முதல் முதலில் அக்காலத்தில் வெளியான சுதந்திரன் எனும் பத்திரிகையின் செங்கலடி நிருபராக சேவையாற்றி வந்தார்.

இளமைக்காலத்தில் ஊடகவியலாளருக்கான பயிற்சியை பெற்று தினபதி,சிந்தாமணி ஆகிய இரு பத்திரிகைக்கும் செங்கலடி நிருபராக செயற்பட்டவர்.

இவ்வேளை சிந்தாமணி பத்திரிகையிலே வாரம் ஒரு தடவை வெளிவந்த அத்தாணி மண்டபம் பகுதியிலும் தனது எழுத்து திறமையினை வெளிக்காட்டி தனியிடம் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

D53BE2BD-672C-4588-ACF8-AE8ACA4D7C12.jpe

பத்திரிகைத்துறையிலே தனக்கென தனியிடத்தினை பதித்திருந்த கலாபூசணம் வாமதேவன் ‘ஈழநாதம்’ உள்ளிட்ட பத்திரிகைகளுக்கும் செய்தியாளராக பணியாற்றிய பெருமை இவருக்குண்டு.

இவ்வாறு பத்திரிகைத்துறையில் செய்தி எழுதுவதில் ஆர்வம்,அனுபவம் காரணமாக வீரகேசரி பத்திரிகைக்கு வெற்றிடமாக இருந்த பதவி வழங்கப்பட்டு மிகவும் சிறந்த ஊடகவியலாளர் சேவையில் ஈடுபட்டவராக விளங்கினார்.

அதுமாத்திரமன்றி பல்வேறு அமைப்புக்களிலும் பல்வேறு பதவிகளை வகித்த இவர் விருதுகள் ,சான்றுதல்கள் ,கௌரவிப்புக்கள் என பல பராட்டுக்களை தனது சேவைக்காக பெற்றுக்கொண்ட ஒரு சிறந்த பத்திரிகையாளராக மாவட்டத்தில் திகழ்ந்தமை குறிப்பிடத்தக்கது.

கலாபூசணம் வாமதேவன் தனது வாழ்கை காலத்திலே மக்களுக்கு சமூக சேவை செய்யப்பட வேண்டும் என்ற நோக்கில் சமாதான நீதவானாகவும் சமூக ஏற்பட்டாளராளாகவும் திகழ்ந்தவர்.இவருடைய ஊடக பணியினை பாராட்டி 2015ம் ஆண்டு இந்து சமய கலாச்சார திணைக்களத்தினால் கலாபூசணம் விருது வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பத்திரிகைத்துறையில் சேவையாளராக மாத்திரம் இவர் நின்று விடவில்லை அரச உத்தியோகமாகிய கிராம சேவையாளராக செங்கலடி பிரதேச செயலகப்பிரிவில் ஒரு கடமை உணர்வுடன் இடமாற்றம் இன்றி தொடர்ந்து 30 வருடங்கள் பல மக்களுக்கு பணியாற்றிய பெருமையும் இவரைச்சாரும்.


அன்னாரின் உடலம் அஞ்சலிக்காக மட்டக்களப்பு,சூரியா வீதயில் வைக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 9.00மணியளவில் கள்ளியங்காடு இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

அன்னாரின் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் அனுதாபம் தெரிவித்து அறிக்கையொன்றினையும் வெளியிட்டுள்ளது.

 

http://www.errimalai.com/?p=46423

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்......!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் சகோதரியின் மகன் 6 ஆம் வகுப்பில் இருந்து 12 ஆம் வகுப்பு வரைக்கும் சென்னையில் உள்ள பாடசாலை ஒன்றில் தமிழில் தான் படித்தார், 
    • ச‌கோ கூட‌ எழுத‌ வேண்டாம் ஒரு சுற்று சுற்றி பாருங்கோ த‌மிழ் நாட்டை................பார்த்து விட்டு யாழில் எழுதுங்கோ அத‌ற்கு நான் ப‌தில் அளிப்பேன்.............இப்ப‌ ஆளுக்கு ஒரு ஊட‌க‌ம் வைச்சு இருக்கின‌ம் அவை அடிச்சு விடுவ‌தை யாழில் வ‌ந்து க‌ருத்து என்று வைப்ப‌து அபாத்த‌ம்..............சீமான்ட‌ மூத்த‌ ம‌க‌னா அல்ல‌து உத‌ய‌நிதியா அழ‌காய் த‌மிழை வாசிக்கின‌ம் எழுதுகின‌ம் என்று பாப்போம்...............அத‌ற்க்கு பிற‌க்கு நீங்க‌ள் சீமானின் பிள்ளைக‌ளை விம‌ர்சிக்க‌ மாட்டிங்க‌ள்...............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னை ஒழுங்காய் சுத்த‌மாய் ச‌க‌ல‌ வ‌ச‌தியோடும் இருந்தால் தமிழ‌ர்க‌ள் ஏன் த‌னியார் ம‌ருத்துவ‌ம‌னைக்கு போகின‌ம்.................இப்படி ப‌ல‌ கேள்விக‌ள் இருக்கு ஆனால் அத‌ற்க்கு ஒரு போதும் விடை கிடைக்காது...........................
    • கூடா ந‌ட்ப்பு கேடா முடியும் என்று கலைஞர் சொன்னது 2011 நடுப்பகுதியில். திகார் சிறைச்சாலையில் அவரது மகள் கனிமொழி இருந்தினாலும் 2011  சட்டசபை தேர்தலில் படுதோல்வி அடைந்ததுக்கும் காரணதத்தினால்தான். 
    • ஒரு கொள்கை பற்றுள்ள தலைவன் தானும் தன் குடும்பமும் அந்த கொள்கை வழி நிண்டு காட்டல் வேண்டும். சகாயம், இஸ்ரோ விஞ்ஞானிகள், அப்துல் கலாம்….ஏன் சீமான் கூட, தமிழ் நாட்டில் தமிழ் மொழி மூலம் கல்வி கற்று வாழ்வில் நல்ல நிலையை அடைந்தோர் பலர் உள்ளனர். ஆகவே தமிழ் நாட்டில், தமிழ் வழி கல்வி அப்படி மோசமான ஒன்றல்ல. அப்படி இருந்தும் சீமான் ஆங்கில கல்வியை நாடியது அவரின் ஆங்கில மோகம், சுய நலத்தையே காட்டுகிறது.  தமிழ் மந்திர உச்சரிப்புக்கு போராடி விட்டு, மகனின் காது குத்தில் ஐயரை வைத்து சமஸ்கிருதத்தில் ஓதியது.  குடும்ப அரசியலை எதிர்த்து கொண்டே, மச்சானுக்கு சீட், மனைவிக்கு கட்சியில் பதவியில்லா அதிகாரம் வழங்கியது. அந்த வகையில் சீமானின் இன்னொரு தகிடு தத்தம்தான் இதுவும். கருணாநிதியை போலவே சீமானின் சொல்லுக்கும் செயலுக்கும் வெகுதூரம். தன் சுய நலத்துக்கு எதையும் மாற்றுவார். அவரை போலவே இவருக்கும் என்ன செய்தாலும் முட்டு கொடுக்கவும் சில கொத்தடிமைகள் இருக்கிறார்கள். #சின்ன கருணாநிதி இருக்கு. பெரிய கருணாநிதி பச்சை கள்ளன் என்பதே விடை. பொருந்தும். அச்சொட்டாக. ஏன் இல்லாமல்? தமிழ் தமிழ் என எல்லாரையும் ஏமாற்றிய கருணாநிதி குடும்ப பிள்ளைகள் ஆங்கில கல்வி கற்றதை நானும் பலரும் சிலாகித்து எழுதியுள்ளோமே. ஆகவே இந்த விடயத்தில் பெரிய கருணாநிதி கள்ளன் என்பதில் மாற்று கருத்தே இல்லை. இப்போ நான் கேட்கும் கேள்வி…. கருணாநிதி செய்ததை அப்படியே கொப்பி அடிக்கும் சீமான் கள்ளன் இல்லையா? # சின்ன கருணாநிதி
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.