Jump to content

ரிஷாத்தின் வாகனம் மீது கல்வீச்சு!


Recommended Posts

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் பயணித்த வாகனத் தொடரணி மீது இன்று ஞாயிற்றுக்கிழமை புத்தளத்தில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மதுரங்குளி கணமூலை பகுதியில் வைத்து மாலை 5.30 மணியளவில் இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் புத்தளம் தொகுதியில் மாத்திரம் ஐ.தே.மு அதிக வாக்குகளுடன் வெற்றி பெற்றிருந்தது.

இந்த நிலையில், குறித்த தேர்தலில் ஐ.தே.மு வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக மதுரங்குளி கணமூலை பகுதிக்கு முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.நவவி, அ.இ.ம.கா புத்தளம் மாவட்ட அமைப்பாளர் அலிசப்ரி ரஹீம் உள்ளிட்டோர் பயணம் செய்தனர்.

இதன்போது கணமூலை பிரதேசத்தில் ௯டியிருந்த சிலர் , முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பயணித்த வாகனப் பேரணி மீது தாக்குதல் நடத்தியதுடன், அவரின் வருகையை எதிர்த்து வீதியில் டயர்களையும் எரித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் முன்னாள் அமைச்சர் பயணித்த வாகனத் தொடரணி வாகனம் ஒன்றுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதுடன், எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.

இரண்டு தரப்பினர்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து, இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

எனினும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்களே இவ்வாறு தாக்குதல் நடத்தியுள்ளதாக பிரதேச மக்கள் குறிப்பிட்டனர்.

 

முந்தல் பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

EKJXKzEUEAAciOa.png

EKJXKzHUYAARCZ9.jpg

EKJXKzGVAAAzqmA.jpg

https://www.virakesari.lk/article/69622

Link to comment
Share on other sites

எனக்கு நீண்ட நாளா ஒரு டவுட்டு,  உவங்கள் முசுலிம்கள் ஏன் தங்கட வாகனம் எல்லாம் கருப்பு பேப்பர் ஒட்டுறானுகள்?  எந்த கருப்பு கண்ணாடி வாகனத்த பாத்தாலும் உவங்கட வாகனமா எல்லோ கிடக்கு   ??? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Maharajah said:

எனக்கு நீண்ட நாளா ஒரு டவுட்டு,  உவங்கள் முசுலிம்கள் ஏன் தங்கட வாகனம் எல்லாம் கருப்பு பேப்பர் ஒட்டுறானுகள்?  எந்த கருப்பு கண்ணாடி வாகனத்த பாத்தாலும் உவங்கட வாகனமா எல்லோ கிடக்கு   ??? 

கருப்புத்தான் நமக்குபிடிச்ச கல்ரு...பொண்ணுகளையே கருப்பு முட்டாக்குப் போடவைதவர்களுகு......இருட்டில்தான் அவர்கள் இரகசியம் முழுக்க..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, Maharajah said:

எனக்கு நீண்ட நாளா ஒரு டவுட்டு,  உவங்கள் முசுலிம்கள் ஏன் தங்கட வாகனம் எல்லாம் கருப்பு பேப்பர் ஒட்டுறானுகள்?  எந்த கருப்பு கண்ணாடி வாகனத்த பாத்தாலும் உவங்கட வாகனமா எல்லோ கிடக்கு   ??? 

இது சின்ன விஷயம் மகாராஜா...!

இதிலிருந்து அறிய வருவது என்னவென்றால்....வாகனம்....பெண் பால்...!😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரிஷாட் பதியூதீன்: இலங்கையில் நாடாளுமன்ற உறுப்பினரின் வாகனம் மீது தாக்குதல்

இலங்கையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் வாகனம் மீது தாக்குதல்படத்தின் காப்புரிமைRISHAD

புத்தளம் - முந்தல் பகுதியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியூதீனின் வாகன தொடரணி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவம் நேற்று மாலை நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த தாக்குதல் சம்பவத்தில் இரண்டு வாகனங்களுக்கு கடும் சேதம் ஏற்பட்டுள்ளதுடன், ஒருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

மக்கள் சந்திப்பொன்றை நடத்தி மீண்டும் வீடு திரும்பிய சந்தர்ப்பத்திலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தாக்குதல் சம்பவத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

சம்பவ இடத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் பாதுகாப்பா க அழைத்து செல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ரிஷாட் பதியூதீன் பதில்

இலங்கையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் வாகனம் மீது தாக்குதல்படத்தின் காப்புரிமைRISHAD

புதிய அரசாங்கம் ஆட்சி பீடத்திற்கு ஏறி ஒரு வார காலத்திற்குள் கட்சியொன்றின் தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினருக்கு வீதியில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் தெரிவிக்கின்றார்.

வீதியில் செல்ல முடியாதளவிற்கு கடும் மோசமான ஆட்சியொன்றே தற்போது ஆட்சிக்கு வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இவ்வாறான தவறுகளை உடனடியாக திருத்திக் கொள்ளாத பட்சத்தில், நாடு தவறான வழியிலேயே செல்லும் என அவர் கூறினார்.

மக்கள் விரைவில் இதற்கான பதிலை வழங்குவார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் தெரிவித்தார்.

விசாரணை ஆரம்பம்

இலங்கையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் வாகனம் மீது தாக்குதல்படத்தின் காப்புரிமைRISHAD

இந்த தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் சந்தேகநபர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என முந்தல் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் தரப்பினர் முந்தல் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டை அடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இதன்படி, குறித்த சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படாத நிலையில், தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக முந்தல் பொலிஸார் கூறுகின்றனர்.

https://www.bbc.com/tamil/sri-lanka-50541818

Link to comment
Share on other sites

பாவம் இந்த முசுலீம்கள். சென்ற காலங்களைப்போல் இவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்காகக் குரல்கொடுக்க இன்று எந்தத் தமிழ் அரசியல்வாதிகளும் இல்லை. 😢  

Link to comment
Share on other sites

58 minutes ago, Paanch said:

பாவம் இந்த முசுலீம்கள். சென்ற காலங்களைப்போல் இவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்காகக் குரல்கொடுக்க இன்று எந்தத் தமிழ் அரசியல்வாதிகளும் இல்லை. 😢  

இவனுகளுக்கு எதிரா ஏன் குரல் கொடுக்கோணும்?

இன்னும் திமிர்ல எமது மலையக உறவுகளை "தோட்டக்காட்டான்" என்றழைத்த  அதாவுல்லா போன்ற முசுலீம்  ரவுடிகளை ஒருவழி பண்ண வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கு.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.