Jump to content

சிங்கள மக்களால் தமிழ் மக்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர் – கருணா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ரதி said:

ஒரு துரோகிக்கு எப்படி காசு வந்தால் உங்களுக்கு என்ன அண்ணா?

அவர் செய்து கொண்டிருக்கும் துரோகம் என்ன? அது என் இனத்தை எவ்வளவு துன்புறுத்தும் என்ற கவலை மட்டும் தான் சகோதரி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, விசுகு said:

அவர் செய்து கொண்டிருக்கும் துரோகம் என்ன? அது என் இனத்தை எவ்வளவு துன்புறுத்தும் என்ற கவலை மட்டும் தான் சகோதரி

நீங்கள் தான் அவரை துரோகி என்று சொல்கிறீர்கள் ...அவர் இப்ப [கவனிக்கவும்] என்ன துரோகம் செய்து கொண்டு இருக்கிறார் என்று நீங்கள் தான் சொல்ல வேண்டும்...சொன்னால் தான் நான் அதற்கு பதில் எழுத முடியும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரதி said:

நீங்கள் தான் அவரை துரோகி என்று சொல்கிறீர்கள் ...அவர் இப்ப [கவனிக்கவும்] என்ன துரோகம் செய்து கொண்டு இருக்கிறார் என்று நீங்கள் தான் சொல்ல வேண்டும்...சொன்னால் தான் நான் அதற்கு பதில் எழுத முடியும் 

முதலில் நான் யாரையும் துரோகி என்று சொல்ல வில்லை சொல்வதும் இல்லை . நீங்கள் அவர் உங்களுக்கு துரோகி தானே என்று எழுதியதால் தான் என்ன துரோகம் செய்கிறார் என்று தெரிந்தால் நல்லது என்று எழுதினேன்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, விசுகு said:

முதலில் நான் யாரையும் துரோகி என்று சொல்ல வில்லை சொல்வதும் இல்லை . நீங்கள் அவர் உங்களுக்கு துரோகி தானே என்று எழுதியதால் தான் என்ன துரோகம் செய்கிறார் என்று தெரிந்தால் நல்லது என்று எழுதினேன்

 

விரிவான பதிலை நாளை எழுதுகிறேன் அண்ணா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎11‎/‎29‎/‎2019 at 8:22 PM, விசுகு said:

முதலில் நான் யாரையும் துரோகி என்று சொல்ல வில்லை சொல்வதும் இல்லை . நீங்கள் அவர் உங்களுக்கு துரோகி தானே என்று எழுதியதால் தான் என்ன துரோகம் செய்கிறார் என்று தெரிந்தால் நல்லது என்று எழுதினேன்

 

விசுகு அண்ணா , என்னை பொறுத்த வரை அவர் புலியில் இருக்கும் போது இருந்து அவரை பார்த்து வருகிறேன்.
அமைப்பில் இருக்கும் வரை தலைவருக்கும்,அமைப்புக்கும் விசுவாசமாய்த்தான் இருந்தார்.
உங்களுக்கே தெரியும். அவர் அமைப்பில் இருக்கும் போது அவர் மீது தலைமை எந்த வித குற்றச்சாட்டும்[நிதி ,பெண்] சுமத்தியதில்லை.
நீண்ட கால சமாதான நாட்களில் அவர் சோம்பேறியாகி விட்டு இருக்கலாம்...தொடர்ந்து சண்டை பிடித்து இருப்பது பிரயோசனம் இல்லை  என்று நினைத்திருக்கலாம்[அது உண்மையும் கூட].
அந்த நேரத்தில்  பலர் அவர் மனதை மாற்ற முயற்சித்திருக்கலாம்/மாத்தி இருக்கலாம்.
புலிகள் அந்த நேரத்தில் சமஸ்டியை ஏற்றிருக்கலாம் என்பது என் கருத்து....அது தலைவருக்கு விருப்பமில்லை.. கருணா தன் பாட்டில் தன் போராளிகளை கூட்டிக் கொன்டு பிரிந்து போனார்.
அவர் மீது போர் தொடுக்கும் போது அவர் தன்ட  அமைப்பை கலைத்து விட்டார்.
அதன் பின்னர் தன் இருப்பை தக்க வைத்துக் கொள்ள மகிந்தாவோடு போய் சேர்ந்தார்.
கவனமாய் பார்த்தீங்கள் என்டால் உயிருக்கு பயம் இருந்ததால் தான் அவர் கடைசி நேரம் தலைவரை போய் சந்திக்கவில்லை ...தன்னை காப்பாற்றி கொள்ள அவர் மகிந்தாவோடு சேர்ந்திருக்கலாம்.
யுத்தத்தில் வீர மரணம் அடைதல் என்பது வேறு, இப்படி போய் சா என்று சா என்று சொல்ல எங்களுக்கு எந்த அருகதையும் இல்லை என்று நினைக்கிறேன் 
அதன் பிறகு மகிந்தா சகோதரர்களோடு சேர்ந்து அவர்கள் சொன்ன வேலை [கொலை,கொள்ளை,கடத்தல் ] போன்றவற்றை செய்திருப்பார்.
அதே நேரத்தில் இறுதி யுத்தத்தில் அவர் காட்டிக் கொடுத்து தான் புலிகள் தோத்தார்கள் என்பது சுத்த மடத்தனம்...கருணா போய் எதிரியுடன் சேர்ந்திட்டார் என்று தெரிந்தும் ஒரு மாற்றமும் இல்லாமல் அமைப்பை தலைவர் அப்படியே வைத்திருந்தார் என்பது சுத்த மடத்தனம். அதே நேரத்தில் கருணா புலிகளோடு நின்றிருந்தால்  போரை வென்றிருக்கலாம் என்பதும் ஒரு அறிவீனமான கருத்து...போரை இன்னும் கொஞ்ச  நாள் நீட்டி இருக்க  முடியும்..ஆனால் கிழக்கை சேர்ந்த இன்னும் அதிகமான போராளிகளும்,மக்களும் உயிர் இழந்திருப்பார்கள்.
கருணா , மகிந்தா சகோதரர்கள் மூலம் உழைத்த காசை சர்வதேச நாடுகளில் முதலீடு செய்திருக்கலாம்...அதில் நல்ல வருமானம் வரும் என்று நினைக்கிறேன்.
நான் அறிந்த வகையில் கிழக்கில் மக்களுக்கு உதவிக் கொண்டு இருக்கிறார் ...வறிய மக்கள் தங்களுக்கு செய்த உதவியை வெளியில் சொல்ல முடியாதவர்கள் , அடுத்தவர்கள் பெரிய அமைப்பு உதவியை மட்டும் இவரிடம் வேண்டி எடுப்பினம்...ஆனால் வெட்கத்தில் பப்ளிக்காய் வந்து சொல்லாயினம் .
என்னைப் பொறுத்த வரை  அவருக்கு இனி மேல் அரசியலிலோ அல்லது பதவியில்லோ ஆசையில்லை என்று நினைக்கிறேன் .
பேருக்கு ஒரு கட் சி வைத்திருக்கிறார்...எலக்சனுக்கு முன்னர் அவ பிள்ளையான் வெளியில் வர வேண்டும்,அவர் முதலமைச்சர் ஆக வேண்டும் என்று சொன்னார்..அது நடக்குதா என்று பார்ப்போம்.
என்னைப் பொறுத்த வரைக்கும் அவர் தன்னுடைய மக்களுக்கு தன்னால் முடிந்ததை செய்கிறார்.
அங்கே அவர் என்ன செய்கிறார்,என்ன நடக்குது என்று தெரியாமல் தேவையில்லாமல் எடுத்ததெற்கெல்லாம் அவரை நக்கல் அடிப்பவர்களை பார்க்க பரிதாபமாய் உள்ளது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/1/2019 at 11:43 AM, ரதி said:

விசுகு அண்ணா , என்னை பொறுத்த வரை அவர் புலியில் இருக்கும் போது இருந்து அவரை பார்த்து வருகிறேன்.
அமைப்பில் இருக்கும் வரை தலைவருக்கும்,அமைப்புக்கும் விசுவாசமாய்த்தான் இருந்தார்.
உங்களுக்கே தெரியும். அவர் அமைப்பில் இருக்கும் போது அவர் மீது தலைமை எந்த வித குற்றச்சாட்டும்[நிதி ,பெண்] சுமத்தியதில்லை.
நீண்ட கால சமாதான நாட்களில் அவர் சோம்பேறியாகி விட்டு இருக்கலாம்...தொடர்ந்து சண்டை பிடித்து இருப்பது பிரயோசனம் இல்லை  என்று நினைத்திருக்கலாம்[அது உண்மையும் கூட].
அந்த நேரத்தில்  பலர் அவர் மனதை மாற்ற முயற்சித்திருக்கலாம்/மாத்தி இருக்கலாம்.
புலிகள் அந்த நேரத்தில் சமஸ்டியை ஏற்றிருக்கலாம் என்பது என் கருத்து....அது தலைவருக்கு விருப்பமில்லை.. கருணா தன் பாட்டில் தன் போராளிகளை கூட்டிக் கொன்டு பிரிந்து போனார்.
அவர் மீது போர் தொடுக்கும் போது அவர் தன்ட  அமைப்பை கலைத்து விட்டார்.
அதன் பின்னர் தன் இருப்பை தக்க வைத்துக் கொள்ள மகிந்தாவோடு போய் சேர்ந்தார்.
கவனமாய் பார்த்தீங்கள் என்டால் உயிருக்கு பயம் இருந்ததால் தான் அவர் கடைசி நேரம் தலைவரை போய் சந்திக்கவில்லை ...தன்னை காப்பாற்றி கொள்ள அவர் மகிந்தாவோடு சேர்ந்திருக்கலாம்.
யுத்தத்தில் வீர மரணம் அடைதல் என்பது வேறு, இப்படி போய் சா என்று சா என்று சொல்ல எங்களுக்கு எந்த அருகதையும் இல்லை என்று நினைக்கிறேன் 
அதன் பிறகு மகிந்தா சகோதரர்களோடு சேர்ந்து அவர்கள் சொன்ன வேலை [கொலை,கொள்ளை,கடத்தல் ] போன்றவற்றை செய்திருப்பார்.
அதே நேரத்தில் இறுதி யுத்தத்தில் அவர் காட்டிக் கொடுத்து தான் புலிகள் தோத்தார்கள் என்பது சுத்த மடத்தனம்...கருணா போய் எதிரியுடன் சேர்ந்திட்டார் என்று தெரிந்தும் ஒரு மாற்றமும் இல்லாமல் அமைப்பை தலைவர் அப்படியே வைத்திருந்தார் என்பது சுத்த மடத்தனம். அதே நேரத்தில் கருணா புலிகளோடு நின்றிருந்தால்  போரை வென்றிருக்கலாம் என்பதும் ஒரு அறிவீனமான கருத்து...போரை இன்னும் கொஞ்ச  நாள் நீட்டி இருக்க  முடியும்..ஆனால் கிழக்கை சேர்ந்த இன்னும் அதிகமான போராளிகளும்,மக்களும் உயிர் இழந்திருப்பார்கள்.
கருணா , மகிந்தா சகோதரர்கள் மூலம் உழைத்த காசை சர்வதேச நாடுகளில் முதலீடு செய்திருக்கலாம்...அதில் நல்ல வருமானம் வரும் என்று நினைக்கிறேன்.
நான் அறிந்த வகையில் கிழக்கில் மக்களுக்கு உதவிக் கொண்டு இருக்கிறார் ...வறிய மக்கள் தங்களுக்கு செய்த உதவியை வெளியில் சொல்ல முடியாதவர்கள் , அடுத்தவர்கள் பெரிய அமைப்பு உதவியை மட்டும் இவரிடம் வேண்டி எடுப்பினம்...ஆனால் வெட்கத்தில் பப்ளிக்காய் வந்து சொல்லாயினம் .
என்னைப் பொறுத்த வரை  அவருக்கு இனி மேல் அரசியலிலோ அல்லது பதவியில்லோ ஆசையில்லை என்று நினைக்கிறேன் .
பேருக்கு ஒரு கட் சி வைத்திருக்கிறார்...எலக்சனுக்கு முன்னர் அவ பிள்ளையான் வெளியில் வர வேண்டும்,அவர் முதலமைச்சர் ஆக வேண்டும் என்று சொன்னார்..அது நடக்குதா என்று பார்ப்போம்.
என்னைப் பொறுத்த வரைக்கும் அவர் தன்னுடைய மக்களுக்கு தன்னால் முடிந்ததை செய்கிறார்.
அங்கே அவர் என்ன செய்கிறார்,என்ன நடக்குது என்று தெரியாமல் தேவையில்லாமல் எடுத்ததெற்கெல்லாம் அவரை நக்கல் அடிப்பவர்களை பார்க்க பரிதாபமாய் உள்ளது 

 

நன்றி சகோதரி  தங்களது விரிவான  பதிலுக்கும் நேரத்துக்கும்

பேருக்கு  ஒரு  கட்சி  வைத்திருப்பவரைப்பற்றி  எழுதி

எனது பொன்னான  நேரத்தை  வீணாக்க  விரும்பவில்லை

ஆனால் இவ்வளவு  அப்பாவித்தனமாக முரளியை நம்பும்  உங்களுக்காக  ஒரு  தகவல்

இவ்வளவும்  செய்த  பின்பும்

தப்பி போய் எங்காவது  ஒதுங்கி  வாழ் என  தலைவர் சொன்னது

வரலாற்றிலேயே  இவருக்கு  மட்டும்  தான்

அதை  அவர் இறுதிவரை  பாவிக்கவே  இல்லை.....

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/1/2019 at 4:13 PM, ரதி said:

எலக்சனுக்கு முன்னர் அவ பிள்ளையான் வெளியில் வர வேண்டும்,அவர் முதலமைச்சர் ஆக வேண்டும் என்று சொன்னார்..அது நடக்குதா என்று பார்ப்போம்.

நான் எங்கேயோ முன்னர் எழுதிய ஞாபகம் ஆட்சி மாறும் போது பிள்ளையான் வருவார் என  ஆனால் அவர் வரமுடியாது களிதான் தின்னலாம் என பதிலளித்தவர்களும் உண்டு கர்ணா கூட பிள்ளையானை விரும்புகிறார் காரணம் கர்ணாவுக்கு இருக்கும் வாக்கு வங்கியை விட பிள்ளையானுக்கு வாக்கு வங்கி அதிகம் . காரணம் பிள்ளையானும் சரி கர்ணாவும் சரி தொழில் தாருங்கள் என சென்ற பல முன்னாள் போராளிகளுக்கு அரச தொழிலும் ,போராளிக்குடும்பங்களுக்கு உதவிகளும் செய்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது எனது நண்பனும் கர்ணாவை சந்திந்த்த உடன் வெளிநட்டிலிருந்து சென்றவுடன் வேலை ஒன்று எடுத்து கொடுத்தார் 

ஆனால் கூத்தமைப்பு இருந்து அப்படி எதுவும் செய்ததாக அறியவில்லை ஒரு சிபாரிசு கடிதம் கூட எடுக்க முடியாது போனால் ஐயா இல்லை ஐயாவை சந்திக்க முடியாது இதுதான் பதிலாக இருக்கும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, விசுகு said:

 

நன்றி சகோதரி  தங்களது விரிவான  பதிலுக்கும் நேரத்துக்கும்

பேருக்கு  ஒரு  கட்சி  வைத்திருப்பவரைப்பற்றி  எழுதி

எனது பொன்னான  நேரத்தை  வீணாக்க  விரும்பவில்லை

ஆனால் இவ்வளவு  அப்பாவித்தனமாக முரளியை நம்பும்  உங்களுக்காக  ஒரு  தகவல்

இவ்வளவும்  செய்த  பின்பும்

தப்பி போய் எங்காவது  ஒதுங்கி  வாழ் என  தலைவர் சொன்னது

வரலாற்றிலேயே  இவருக்கு  மட்டும்  தான்

அதை  அவர் இறுதிவரை  பாவிக்கவே  இல்லை.....

 

 

ஹாஹா மாத்தையாவோட நின்ற எவ்வளவோ பேர்  இயக்கத்தை விட்டு போயிருக்கினம் தெரியாதா அண்ணா? ...உங்கள் பொன்னான நேரத்தை வீணாக்க விரும்பா விட்டால் பேசாமல் இருங்கள் ...எதற்கு அவரை பற்றியே கதைத்து கொண்டு இருக்கிறீர்கள்....தலைவர் கருணாவின் பிரிவிற்கு பின்னர் அவரைப்  பற்றி ஒரு கதை கூட வாயைத் துறந்து கதைத்ததாய் எனக்கு நினைவு இல்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

😠😁

பிர‌பாக‌ர‌ன் உயிருக்கு ப‌ய‌ந்த‌வ‌ர் என்று அந்த‌ வ‌ஞ்ச‌க‌ம் இல்லா த‌லைவ‌ரை க‌ழுவி ஊத்தின‌ எட்ட‌ப்ப‌ன் தான் ( க‌ருணாகும்மான் )

இன்னும் இவ‌ரை ப‌ற்றி எழுத‌ ப‌ல‌ நூறு அசிங்க‌ங்க‌ள் இருக்கு , இது யாழ் க‌ள‌ம் , 

எழுதி பிற‌க்கு அதை நிர்வாக‌ம் நீக்க‌ வீனாக‌ போவ‌து எம‌து நேர‌ம் ?


 

Link to comment
Share on other sites

இங்கு நிறையபேர் கருத்துக்களை பதிவு செய்திருக்கீறிர்கள். சில கருத்துக்களை நானும் பதிய விரும்புகிறேன். போராட்டத்தில் வடக்கு,கிழக்கு, வன்னி என எல்லா இடங்களிலும் இருந்து போராளிகள் யுத்தத்தில் பாகு கொண்டார்கள்.

கருணா அம்மன் அதிலிருந்து விலகி சென்றது தமிழ் மக்கள் மத்தியில் ஒரு துரோகமாகவே  பார்க்கப்பட்ட்து. யுத்தக்காலத்தில் தமிழ் மக்கள் மற்ற இன மக்களைவிட பெரிதும் பாதிக்கப்படடார்கள்.

யுத்த காலத்தில் கிழக்கில் தமிழர்களின் காணிகள், கிராமங்கள் முஸ்லிம்களால் திடடமிட்டு அபகரிக்கப்பட்ட்து. அத்துடன் அவர்கள் பிரதேசங்களில்  நிறைய அபிவிருத்தியும் செய்யப்பட்ட்து. யுத்தத்தின் பின்னர் இதே நிலைமை வன்னியிலும் ஏட்பட்ட்து. இது உண்மையாகவே  வன்னி , கிழக்கு மக்களுக்கு  இப்போதும் பிரச்சினையாக இருக்கிறது.

புலிகள் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை  சரியாக பயன்படுத்தி அதிலிருந்து முன்னேறி இருக்கலாம். இந்திய ஒரு நாளும் ஈழம் அமைய இடமளிக்காது. இலங்கை சம்மதித்தாலும் இந்தியா  சம்மதிக்காது. அதே நேரத்தில்  எந்த நாளும் யுத்தம் செய்துகொண்டும் இருக்கமுடியாது. யுத்தம் செய்ய ஒரு காலமுண்டு , சமாதானமாயிருக்க ஒரு காலமுண்டு.

இப்போது 13 உம இல்லை வடகிழக்கு இணைப்புமில்லை. இப்போது கருணா தனது  கிழக்கு மாகாண மக்களின் நிலைமை குறித்து மிகவும் கவலைப்படுகிறார்.  என் என்றால் அங்கு முஸ்லிம்களின் ஆக்கிரமிப்பு அதிகரித்து தமிழ் மக்கள் பெரிய பிரச்சினைக்குள் இருக்கிறார்கள். எனவே கருணாவின் கூற்றில்தவறில்லை.

சிலர் கருணா நிறைய பணம் , சொத்து வைத்திருக்கிறார் என்று சொல்லுகிறார்கள். ஏன் றிஷார்ட் ஷாப்பிங் பையுடன் ஓடினவன்தானே . இன்று அவனுடைய  சொத்து மதிப்பு எவ்வளவு? இலங்கையில் உள்ள மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவன். ஏன் டக்கு, ஹிஸ்புல்லா, விஜயகலா, இன்னும் மற்றைய அரசியல் வாதிகள் எவ்வளவு சொத்து மதிப்பிற்கு கணக்கே இல்லை. இன்று இயக்கத்தை விட்டு ஓடின எத்தனையோ பேர் கோடீஸ்வரர்களாக இங்கேயும் வெளி நாட்டிலும் வசிக்கிறார்கள்.

வன்னி மக்கள் விஷேடமாக மன்னர் மக்கள் தண்ணீர் இல்லாமல், மின்சாரம் இல்லாமல் மிகவும் துன்பப்படடார்கள். இவர்களுக்காக ஒரு திடடம் கொண்டுவரப்பட்டு முடித்திருந்தார்கள். மக்கள் ஒழுங்காக  அதை பாவிக்கும்  முன்னரே அத்தனை தண்ணீர் தாங்கிகளுக்கும் குண்டு வைத்து தகர்த்தார்கள்.

மன்னாரில் மட்டும்தான் மின்பிறப்பாக்கிமூலம் மின்சாரம் இரவில் மூன்று மணித்தியாலம் வழங்குவார்கள். மன்னரை சேர்ந்த ஒரு உயர் அதிகாரி அரசுடன் பேசி மன்னருக்கு உயர் அழுத்த மின்சார திடடத்தை கொண்டு வந்தார். அதையும் தடை செய்வதற்கக அந்த  மின்சார தூண்களை தகர்த்தார்கள்.

இது குறித்து அந்த அதிகாரி புலிக்களுக்குகூறியது என்னவென்றால் இதை நீங்கள் தொடர்வீர்கள் என்றால் உங்களுக்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச ஆதரவும் இனி இல்லாமல் போகும் என்று. அதன் பின்னர் அவர்கள் அப்படி செய்யவில்லை. அது மட்டுமல்ல அந்த அதிகாரி புலிகளின் எல்லா கோரிக்கைகளுக்கும் சம்மதிக்காதபடியால் அவருக்கு மரண தண்டனை விதிக்கும்படி கங்காரு கோட்டும்கூடியது. அப்போது சலீம் என்ற இயக்கப்பெருடைய ஒருவன்தான் பொறுப்பாக இருந்தான். ஐந்து பேர் கொண்ட அந்த தீர்ப்பாயத்தில் இரண்டுக்கு இரண்டு என்று இருந்தது. ஐந்தாவதாக இருந்த நபர் (பெயர் குறிப்பிட விரும்பவில்லை) இதட்கு எதிராக வாக்களித்தபடியால் அந்த அதிகாரி தப்பினார்.

நான் ஏன் இதை எழுதுகிறேன் என்றால் வன்னி, கிழக்கு மக்கள் வித்தியாசமாகவே நடத்தப்படடார்கள். இங்கு நான் கருணாவை முழுமையாக ஆதரிக்கிறேன். வன்னி , கிழக்கு மக்கள் இனிமேல் பொய் சொல்லி எதிர்ப்பு அரசியல் செய்யும் தமிழ் அரசியல்வாத்திகளை  நம்பக்கூடாது. டக்கு, கருணா, பிள்ளையான் போன்ற மக்களுக்கு சேவை செய்யக்கூடிய அரசியல் வாதிகளுக்கு உங்கள் ஆதரவை தெரிவிக்க வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Vankalayan said:

இங்கு நிறையபேர் கருத்துக்களை பதிவு செய்திருக்கீறிர்கள். சில கருத்துக்களை நானும் பதிய விரும்புகிறேன். போராட்டத்தில் வடக்கு,கிழக்கு, வன்னி என எல்லா இடங்களிலும் இருந்து போராளிகள் யுத்தத்தில் பாகு கொண்டார்கள்.

கருணா அம்மன் அதிலிருந்து விலகி சென்றது தமிழ் மக்கள் மத்தியில் ஒரு துரோகமாகவே  பார்க்கப்பட்ட்து. யுத்தக்காலத்தில் தமிழ் மக்கள் மற்ற இன மக்களைவிட பெரிதும் பாதிக்கப்படடார்கள்.

யுத்த காலத்தில் கிழக்கில் தமிழர்களின் காணிகள், கிராமங்கள் முஸ்லிம்களால் திடடமிட்டு அபகரிக்கப்பட்ட்து. அத்துடன் அவர்கள் பிரதேசங்களில்  நிறைய அபிவிருத்தியும் செய்யப்பட்ட்து. யுத்தத்தின் பின்னர் இதே நிலைமை வன்னியிலும் ஏட்பட்ட்து. இது உண்மையாகவே  வன்னி , கிழக்கு மக்களுக்கு  இப்போதும் பிரச்சினையாக இருக்கிறது.

புலிகள் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை  சரியாக பயன்படுத்தி அதிலிருந்து முன்னேறி இருக்கலாம். இந்திய ஒரு நாளும் ஈழம் அமைய இடமளிக்காது. இலங்கை சம்மதித்தாலும் இந்தியா  சம்மதிக்காது. அதே நேரத்தில்  எந்த நாளும் யுத்தம் செய்துகொண்டும் இருக்கமுடியாது. யுத்தம் செய்ய ஒரு காலமுண்டு , சமாதானமாயிருக்க ஒரு காலமுண்டு.

இப்போது 13 உம இல்லை வடகிழக்கு இணைப்புமில்லை. இப்போது கருணா தனது  கிழக்கு மாகாண மக்களின் நிலைமை குறித்து மிகவும் கவலைப்படுகிறார்.  என் என்றால் அங்கு முஸ்லிம்களின் ஆக்கிரமிப்பு அதிகரித்து தமிழ் மக்கள் பெரிய பிரச்சினைக்குள் இருக்கிறார்கள். எனவே கருணாவின் கூற்றில்தவறில்லை.

சிலர் கருணா நிறைய பணம் , சொத்து வைத்திருக்கிறார் என்று சொல்லுகிறார்கள். ஏன் றிஷார்ட் ஷாப்பிங் பையுடன் ஓடினவன்தானே . இன்று அவனுடைய  சொத்து மதிப்பு எவ்வளவு? இலங்கையில் உள்ள மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவன். ஏன் டக்கு, ஹிஸ்புல்லா, விஜயகலா, இன்னும் மற்றைய அரசியல் வாதிகள் எவ்வளவு சொத்து மதிப்பிற்கு கணக்கே இல்லை. இன்று இயக்கத்தை விட்டு ஓடின எத்தனையோ பேர் கோடீஸ்வரர்களாக இங்கேயும் வெளி நாட்டிலும் வசிக்கிறார்கள்.

வன்னி மக்கள் விஷேடமாக மன்னர் மக்கள் தண்ணீர் இல்லாமல், மின்சாரம் இல்லாமல் மிகவும் துன்பப்படடார்கள். இவர்களுக்காக ஒரு திடடம் கொண்டுவரப்பட்டு முடித்திருந்தார்கள். மக்கள் ஒழுங்காக  அதை பாவிக்கும்  முன்னரே அத்தனை தண்ணீர் தாங்கிகளுக்கும் குண்டு வைத்து தகர்த்தார்கள்.

மன்னாரில் மட்டும்தான் மின்பிறப்பாக்கிமூலம் மின்சாரம் இரவில் மூன்று மணித்தியாலம் வழங்குவார்கள். மன்னரை சேர்ந்த ஒரு உயர் அதிகாரி அரசுடன் பேசி மன்னருக்கு உயர் அழுத்த மின்சார திடடத்தை கொண்டு வந்தார். அதையும் தடை செய்வதற்கக அந்த  மின்சார தூண்களை தகர்த்தார்கள்.

இது குறித்து அந்த அதிகாரி புலிக்களுக்குகூறியது என்னவென்றால் இதை நீங்கள் தொடர்வீர்கள் என்றால் உங்களுக்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச ஆதரவும் இனி இல்லாமல் போகும் என்று. அதன் பின்னர் அவர்கள் அப்படி செய்யவில்லை. அது மட்டுமல்ல அந்த அதிகாரி புலிகளின் எல்லா கோரிக்கைகளுக்கும் சம்மதிக்காதபடியால் அவருக்கு மரண தண்டனை விதிக்கும்படி கங்காரு கோட்டும்கூடியது. அப்போது சலீம் என்ற இயக்கப்பெருடைய ஒருவன்தான் பொறுப்பாக இருந்தான். ஐந்து பேர் கொண்ட அந்த தீர்ப்பாயத்தில் இரண்டுக்கு இரண்டு என்று இருந்தது. ஐந்தாவதாக இருந்த நபர் (பெயர் குறிப்பிட விரும்பவில்லை) இதட்கு எதிராக வாக்களித்தபடியால் அந்த அதிகாரி தப்பினார்.

நான் ஏன் இதை எழுதுகிறேன் என்றால் வன்னி, கிழக்கு மக்கள் வித்தியாசமாகவே நடத்தப்படடார்கள். இங்கு நான் கருணாவை முழுமையாக ஆதரிக்கிறேன். வன்னி , கிழக்கு மக்கள் இனிமேல் பொய் சொல்லி எதிர்ப்பு அரசியல் செய்யும் தமிழ் அரசியல்வாத்திகளை  நம்பக்கூடாது. டக்கு, கருணா, பிள்ளையான் போன்ற மக்களுக்கு சேவை செய்யக்கூடிய அரசியல் வாதிகளுக்கு உங்கள் ஆதரவை தெரிவிக்க வேண்டும். 

தம்பிக்கு கொஞ்சம் விளங்கிடுச்சி 

Link to comment
Share on other sites

Just now, தனிக்காட்டு ராஜா said:

தம்பிக்கு கொஞ்சம் விளங்கிடுச்சி 

அண்ணே வேணுமெண்டா சொல்லுங்கோ இன்னும் கொஞ்சம் எழுதிவிடுறன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Vankalayan said:

அண்ணே வேணுமெண்டா சொல்லுங்கோ இன்னும் கொஞ்சம் எழுதிவிடுறன். 

போதும் இப்ப ஓரளவுக்கு விளங்கி கொள்கிறார்கள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உற‌வே ஏன் சீமான் மீது இம்புட்டு வ‌ன்ம‌ம்..........2009 முள்ளிவாய்க்கால் இன‌ அழிப்புக்கு துணை போனாரா அல்ல‌து த‌லைவ‌ருக்கு எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வைக்கோ ராம‌தாஸ் திருமாள‌வ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் போல் துரோக‌ம் செய்தாரா...............எல்லாம் அழிந்த‌ நிலையில் த‌மிழீழ‌ம் என்ற‌ பெய‌ரை உயிர்ப்போடு வைத்து இருப்ப‌து 30ல‌ச்ச‌த்துக்கு மேல் ப‌ட்ட‌  எம் தொப்பில் கொடி உற‌வுக‌ள்...........பிர‌பாக‌ர‌ன் என்றாலே தீவிர‌வாதி என்று இருந்த‌ த‌மிழ் நாட்டில் பிர‌பாக‌ர‌ன் எம் இன‌த்தின் த‌லைவ‌ர் என்று கோடான‌ கோடி ம‌க்க‌ள் கேட்டுக்கும் ப‌டி சொன்ன‌துக்கா சீமான் மீது இம்ம‌ட்டு வெறுப்பா சீ சீ 2009க்கு முத‌ல் ஈழ‌ம் ஈழ‌ம் என்று க‌த்தின‌ கூட்ட‌ம் இப்ப‌ சிங்க‌ள‌வ‌னுக்கு விள‌ம்ப‌ர‌ம் செய்துக‌ள் இதை விட‌ கேவ‌ல‌ம் என்ன‌ இருக்கு...............அந்த‌ க‌ரும‌த்தை நான் தொட்டு என்ர‌ ந‌ட்ப்பு வ‌ட்டார‌ம் தொட்டு ஒருத‌ரும் கேடு கெட்ட‌ செய‌ல் செய்த‌து இல்லை................சீமான் மீது விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌லாம் ஆனால் அவ‌ர் கொண்ட‌ கொள்கையோடு உறுதியாய் நிக்கிறார் த‌னித்து நிக்கிறார்...........சீமான் காசு மீது பேர் ஆசை பிடித்த‌வ‌ர் என்றால் இந்த‌ தேர்த‌லில் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சு 500 கோடியும் 8 தொகுதியும் ஜா ப‌ழ‌னிசாமி கொடுத்து இருப்பார்................ த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை பார்த்தால் கூடுத‌லான‌ ஆட்க‌ள்  பெண்க‌ளுட‌ல் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருந்த‌வை அந்த‌ வ‌கையில் அண்ண‌ன் சீமான் வாழ்த்துக்க‌ள் ப‌ட‌ம் எடுத்த‌ போது விஜ‌ய‌ல‌ட்சுமி கூட‌ காத‌லோ அல்ல‌து ஏதோ ஒரு உற‌வு இருந்து இருக்கு.............நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...........ஆனால் அண்ண‌ன் சீமான் அவ‌ரின் திரும‌ண‌த்தை வெளிப்ப‌டையாய் தான் செய்தார் அப்போது ஒரு பிர‌ச்ச‌னையும் வ‌ர‌ வில்லை அர‌சிய‌லில் வ‌ள‌ந்து வ‌ரும் போது அந்த‌ பெண்ண‌ திராவிட‌ கும்ப‌ல் ஊட‌க‌ம் முன்னாள் பேச‌ விடுவ‌து ம‌னித‌ குல‌த்துக்கு அழ‌கில்லை................. சீமான் த‌வ‌று செய்தால் அதை நான் ப‌ல‌ இட‌த்தில் சுட்டி காட்டி இருக்கிறேன்.............எங்க‌ட‌ த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்று எம‌க்கு ந‌ன்றாக‌வே தெரியுன் அண்ண‌ன் சீமான் ஒரு ப‌டி மேல‌ போய் அள‌வுக்கு அதிக‌மாய் த‌லைவ‌ரை புக‌ழ் பாட‌ தொட‌ங்கி விட்டார்.............ஆர‌ம்ப‌ கால‌த்தில் அதிக‌ம் பேசினார் அப்போது எம‌க்கே தெரிந்த‌து அது உண்மை இல்லை என்று............இப்போது சீமானின் பேச்சில் ப‌ல‌ மாற்ற‌ம் தெரியுது.................நிஜ‌த்தில் ந‌ல்ல‌வ‌ர் அன்பான‌வ‌ர் ஆனால் அவ‌ரை சுற்றி ப‌ல‌ துரோகிய‌ல் இருக்கின‌ம் அவ‌ருட‌ன் க‌தைப்ப‌தை ரெக்கோட் ப‌ண்ணி  விஜேப்பியின் ஆட்க‌ளுக்கு போட்டு காட்டின‌து அப்ப‌டி க‌ட்சிக்குள் இருந்த‌வையே  ப‌ல‌ துரோக‌ங்க‌ள் செய்த‌வை உற‌வே 2009க்கு முத‌ல் த‌மிழீழ‌த்தில் ஒரு மாத்தையா ஒரு க‌ருணா.............த‌மிழ் நாட்டில் ப‌ல‌ நூறு க‌ருணா ப‌ல‌ நூறு மாத்தையா இதை எல்லாம் தாண்டி க‌ன‌த்த‌ வ‌லியோடு தான் க‌ட்சியை கொண்டு ந‌ட‌த்துகிறார் த‌ன‌து ம‌னைவிக்கு இந்த‌ தேர்த‌லில் சீட் த‌ர‌வில்லை என்று க‌ட்சியை விட்டு போன‌ ந‌ப‌ரும் இருக்கின‌ம்............... உங்க‌ட‌ பாதுகாப்புக்கு சொல்லுறேன் உற‌வே த‌மிழ் நாட்டுக்கு போகும் நிலை வ‌ந்தால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணிக்கும் இள‌ம் பெடிய‌ங்க‌ள் கூட‌ அண்ண‌ன் சீமானை ப‌ற்றி யாழில் எழுதுவ‌து போல் நேரில் த‌ப்பா க‌தைச்சு போடாதைங்கோ.............நீயார‌ட‌ எங்க‌ள் அண்ண‌ன‌ விம‌ர்சிக்க‌ என்று ச‌ண்டைக்கும் வ‌ந்து விடுவின‌ம்.............இப்ப‌டி ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்கு சொல்ல‌.............இது யாழ்க‌ள் ஆனால் இதே முக‌ நூல் என்றால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஜ‌ரிம் சீமான சீண்டி பாப்ப‌வ‌ர்க‌ளுக்கு அவேன்ட‌ பானியில் ப‌தில் அளிப்பார்க‌ள்...............6வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌க்கும் திமுக்கா சொம்புக்கும் வாத‌ம் ஏற்ப‌ட்டு க‌ட‌சியில் எப்ப‌டி போய் முடிந்த‌து என்று என‌க்கு ம‌ட்டும் தான் தெரியும்............யாழில் இருக்கும் மூத்த‌வையின் சொல்லை கேட்டு யாழில் நான் இப்ப‌ யார் கூட‌வும் முர‌ன் ப‌டுவ‌தில்லை..........இது தான் கால‌ நீர் ஓட்ட‌த்தில் பெரிய‌வ‌ர்க‌ள் சொல்ல‌  என்னை நானே மாற்றி கொண்டேன்.............. வெற்றியோ தோல்வியே த‌னித்து போட்டி யார் கூட‌வும் கூட்ட‌னி இல்லை அதுக்காக‌ தான் பெரும்பாலான‌ த‌மிழ‌க‌ இளைஞ்ர்க‌ள் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானை தொட‌ர்ந்து ஆத‌ரிக்கின‌ம்🙏🥰.................
    • மக்கள் ஏமாற்றப்படுக்கின்றார்கள் தான் ஆனால் நூறுவீதம் இல்லை.. அதே நேரம் தமிழ் அரசியல்வாதிகளும் சரியானவர்கள் இல்லை. இருப்பினும் புலம்பெயர்ந்த பலரும் அங்கிருப்பவர்களும் தமிழர் உரிமைகள் பற்றி விவாதிக்கொண்டிருக்கும் வேளையில்...... தமிழர் பகுதிகளில் ஆடம்பர உல்லாச விடுதிகளும், புலம்பெயர் மக்களின் கோடிக்கணக்கான செலவுடன் மாட மாளிகைகளும் திறந்த வெளி  அட்டகாச நிகழ்வுகளும் புலம்பெயர் மக்களின் கோடை கால கொண்டாட்ட சுற்றுலாக்களும்..... தமிழர்களுக்கு பிரச்சனை ஏதுமில்லை என்பதை சொல்லி நிற்கின்றது.   போர் மூலம் வந்த  வறுமையால் வாடுபவர்களை இனப்பிரச்சனை அட்டவணைக்குள் சேர்க்க உடன்படுமா அந்த சிங்கள இனவாத அரசுகள்? புலம்பெயர் தமிழர்களே ஊரில் வீடுகட்டிக்கொண்டு  பிற்காலத்தில்  நிம்மதியாக வாழலாம் எனும் போது.....?!  
    • சீமானுக்காக எதையும் தாங்குவார்கள் புலன்பெயர்ந்த ஈழதமிழர்கள். தேர்தலில் சீமான் வெற்றிபெறவில்லை என்றால் மெசின் மோசடி , சீமான் ஆங்கில மோகத்தால் மகனுக்கு தமிழ்நாட்டிலேயே ஆங்கில வழிக் கல்வி கற்ப்பிப்பது தமிழ் பள்ளிகள் சரியில்லை. தமிழ் தமிழ் என்று முழங்குவது அவரது அரசியல் பிழைப்பு.  இவர்  தமிழ்நாட்டு முதல் அமைச்சராக வந்தால் அரசுபாடசாலைகளிலும் தமிழை தூக்கி எறிந்துவிட்டு ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிப்பார் தமிழ் செய்த அதிஷ்டம் அவர் முதல் அமைச்சராகும் வாய்ப்பே  இல்லை
    • அங்கு ஒரு வீட்டில் கஞ்சா புகைத்திருக்கின்றனர். பின்னர், முதலாவதாக, உடனிருந்து புகைத்த நண்பரே குத்திக் கொல்லப்பட்டிருக்கின்றார். குற்றவாளி என்று கைது செய்யப்பட்டவர் கஞ்சாவில் ஒரு வலுவான போதைப் பொருளை தன் நண்பர் கலந்து விட்டதாக இப்பொழுது சொல்லுகின்றார். எதைக் கலந்தாலும், எதைப் புகைத்தாலும், ஓட ஓட சக மனிதர்களை கத்தியால் குத்தும் அளவிற்கு நிலை தடுமாறுமா.....😢 Following his arrest in the frenzied attack, the suspect, Christian Soto, waived his Miranda rights to remain silent and told investigators he was high on marijuana he claimed was given to him by one of the slaying victims that he believed was laced with a strong narcotic, Winnebago County State's Attorney J. Hanley said at a news conference Thursday. https://abcnews.go.com/US/deadly-rockford-illinois-stabbing-spree/story?id=108605783    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.