Jump to content

குழந்தை ஒன்றை வெல்லுங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தங்க நகை, ரொக்கப் பணம், கலை நிகழ்ச்சிக்கான நுளைவுச்சீட்டு, சுற்றுலாவுக்கான பயண ரிக்கெற் என்று பலவிதமான பரிசுப் பொருட்களை முன் வைத்து வானொலிகள் நிகழ்ச்சிகளை நடத்துவதுண்டு. ஆனால் இங்கே வித்தியாசமாக அமெரிக்காவில் புளோரிடா மாநிலத்தில்  குழந்தை ஒன்றை வெல்லுங்கள்என்று நிகழ்ச்சி ஒன்றை ஒரு வானொலி நடத்தியிருக்கிறது.

இளம் அமெரிக்கத் தம்பதிகளான (Anthony) அந்தோணிக்கும் (Krista) கிறிஸ்டாவுக்கும்  ஒரு குழந்தையைப் பெற்றுக்கொள்ளத் தீராத ஆசை. ஆனால் அவர்களது அந்த விருப்பத்தை ஒரு செய்தி வந்து தகர்த்து விட்டது.

2017 ஆம் ஆண்டில்  ஒரு மருத்துவச் சோதனையில் அந்தோணியின் விதையில் புற்றுநோய் இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தார்கள். இதனால் இயற்கையான முறையில் அவர்களால் குழந்தைகளைப் பெற முடியாது என்பதை  மருத்துவர்கள் தம்பதிகளிடம் சொன்னார்கள்.  தம்பதிகள் இருவரும் உடைந்து போனார்கள்.

மனம் தளர்ந்து போயிருந்த தம்பதிகளின் வாழ்க்கையை புளோரிடாவில் உள்ள B103.9 வானொலி  மாற்றிக் காட்டியது. “குழந்தை ஒன்றை வெல்லுங்கள்என்ற அந்த நிகழ்ச்சியூடாக இதைச் சாத்தியமாக்கலாம் என அந்த வானொலி நம்பியது. அந்த நிகழ்ச்சிக்காக  தம்பதிகளை  வானொலி நிலையம் பேட்டி கண்டது.

கிறிஸ்டா ஒரு குழந்தையைப் பெறுவதற்கான தனது பெரிய விருப்பத்தைப் பற்றி அந்த நிகழ்சசியில்  பேசினாள். அவளது பேச்சு  பார்வையாளர்களின் இதயங்களை சென்றடைந்ததால். பலரது ஆதரவு கிறிஸ்டாவின் பேச்சுக்குக் கிடைத்தது.

அந்தோணிக்கான சிகிச்சை ஆரம்பமானது. முதலாவது முயற்சி தோல்வியிலேயே முடிந்தது. ஆனால் இரண்டாவது சிகிச்சை பயன் அளித்தது. அந்தோணியின் கடுமையான புற்றுநோயிலும் அவனுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை இயற்கையான கர்ப்பத்தை சாத்தியமாக்கியது.  இதில் வானொலி நிலையமே பல ஆயிரம் யூரோக்களின் செலவுகளை ஏற்றுக்கொண்டது.

CBEBCB69-C211-46-DB-B73-B-F39-B03-D5-CA2

ஓகஸ்ட் 2019 இல், தம்பதியினர் தங்கள் அன்புக் குழந்தை காரெட்டின் (Garrett)முதல் புகைப்படத்தை நண்பர்களுடன் மகிழ்ச்சியாக  பகிர்ந்து கொண்டனர்.  குழந்தை பிறக்கும் போது சிரமங்கள் இருந்திருந்த போதிலும்,  குழந்தை கிடைத்ததில்  அவர்கள் மிக மகிழ்ச்சியாக  இருக்கிறார்கள்.

 

 

 

    

           

     

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kavi arunasalam said:

கிறிஸ்டா ஒரு குழந்தையைப் பெறுவதற்கான தனது பெரிய விருப்பத்தைப் பற்றி அந்த நிகழ்சசியில்  பேசினாள். அவளது பேச்சு  பார்வையாளர்களின் இதயங்களை சென்றடைந்ததால். பலரது ஆதரவு கிறிஸ்டாவின் பேச்சுக்குக் கிடைத்தது.

அந்தோணிக்கான சிகிச்சை ஆரம்பமானது. முதலாவது முயற்சி தோல்வியிலேயே முடிந்தது. ஆனால் இரண்டாவது சிகிச்சை பயன் அளித்தது. அந்தோணியின் கடுமையான புற்றுநோயிலும் அவனுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை இயற்கையான கர்ப்பத்தை சாத்தியமாக்கியது. 

பல மக்களின் பிரார்த்தனை... 
இயலாத விடயத்தையும், சாத்தியமாக்கும் என்பதற்கு..நல்ல சான்று இது. :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌ல‌ம் முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.