Jump to content

ஆண்களை தாக்கும் மார்பக புற்றுநோய்: அறிகுறிகள் என்ன?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
 
குடும்பம்படத்தின் காப்புரிமை FAMILY PHOTO Image caption மார்பக புற்றுநோய் அறிகுறிகளை ஆண்களும் சோதித்து பார்க்க வேண்டும் என்கிறார் வின்ஸ் கிட்சிங்.

ஆண்களையும் மார்பக புற்றுநோய் தாக்கும் ஆபத்து உள்ளதால், தங்கள் உடல் பாகங்களில் ஏற்படும் மாற்றங்களை கவனிக்க வேண்டும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுகின்றனர்.

 

69 வயதுடைய வின்ஸ் கிட்சிங் தனது மார்பின் இடது பக்கத்தில் ஏற்பட்ட கட்டிக்கு சிகிச்சை பெற உடனடியாக தனது மருத்துவரை அணுகினார். பரிசோதனையில் அந்த கட்டியின் ஆபத்தை அறிந்த பிறகு அறுவை சிகிச்சை மூலம் கட்டி அகற்றப்பட்டது.

மே மாதம் கண்டறியப்பட்ட இந்த புற்று நோய் கட்டி அகற்றப்பட்டு தற்போது இந்த முதியவர் நலமுடன் வாழ்கிறார்.

 

பெண்களோடு ஒப்பிடுகையில் ஆண்களுக்கு மார்பக புற்றுநோய் மிக அறிதாகவே தாக்குகிறது. ஒவ்வோர் ஆண்டும் 390 ஆண்களும் 54,800 பெண்களும் மார்பக புற்று நோயால் பாதிக்கப்படுகிறார்கள்.

எனக்கு மார்பக புற்றுநோய் இருப்பதாக பிசோதனையில் தெரியவந்தபோது நானும் என் மனைவி ஹெலனும் மிகுந்த மண வருத்தத்திற்கு ஆளானோம்'' என்று கூறுகிறார் கிட்சிங்.

வின்ஸ் கிட்சிங் Image caption வின்ஸ் கிட்சிங்

வேல்ஸ்சில் உள்ள மருத்துவமனையில் அறுவை சிகிச்சை முடிந்த பிறகு, அன்றே வீடு திரும்பும் அளவிற்கு உடல் நிலை தேறியதாக கூறுகிறார். அறுவை சிகிச்சைக்கு பிறகு எந்த வலியும் ஏற்படவில்லை. நான் மிகவும் அதிஷ்டசாலி என்றும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

ஒரு வாரத்திற்கு பிறகு கிட்சிங்கிற்கு புற்றுநோய் மேலும் பரவவில்லை என்றும் மேலதிக சிகிச்சை தேவையில்லை என்றும் அவரின் அறுவை சிகிச்சை நிபுணரிடமிருந்து செய்தி கிடைத்துள்ளது.

''எவ்வளவு நாட்களாக அந்த கட்டி இருந்தது என்று கூட எனக்கு தெரியாது, நான் என் மார்பகத்தை பெரிதாக கவனித்ததில்லை. மேலும் பல ஆண்களுக்கு தெரிந்தது போல, உடலின் அனைத்து பாகங்களையும் கண்காணிக்க வேண்டும் என்று எனக்கு தெரியாது. ஆண்களை மார்பக புற்றுநோய் தாக்கும் என நான் கேள்வி பட்டதே இல்லை. இதற்கு முன்பு என் குடும்பத்தினர் யாருக்கும் புற்று நோய் பாதிப்பு இல்லை. எனவே இந்த நோய் குறித்து நான் யோசித்ததே இல்லை.'' என்கிறார் கிட்சிங்.

மார்பக புற்று நோய் பெண்களை மட்டுமே தாக்கக்கூடிய நோயாக பலர் கருதுகின்றனர். ஆனால் சில சமயங்களில் ஆண்களையும் இந்த நோய் தாக்கும் அபாயம் உள்ளது.

அறுவை சிகிச்சை மருத்துவர் சியாரா சிரியன்னி. Image caption ஆண்களும் விழிப்போடு இருக்க வேண்டுமென சொல்கிறார் அறுவை சிகிச்சை நிபுணர் சியாரா சிரியன்னி

பொதுவாக 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களின் மார்பின் முலைக்காம்புகளுக்கு பின்னால் சிறிய அளவிலான கட்டியாக இந்த புற்றுநோய் கட்டி உருவாகிறது.

கிட்சிங்கின் அறுவை சிகிச்சை நிபுணர் சியாரா சிரியன்னி ஆண் மார்பக புற்றுநோயை "மிகவும் அரிதானது" என்று விவரித்தார், மேலும் ஆண்களை தாக்கும் மற்ற நோய்களுடன் ஒப்பிடுகையில், மார்பக புற்றுநோய் 1% தான் என்று கூறுகிறார்.

''ஆனால் ஆண்கள் விழிப்புடன் இருப்பது அவசியம். மார்பகத்தில் எதேனும் புதிய கட்டி , தோல் மாற்றங்கள் உருவானால் உடனடியாக உங்கள் மருத்துவரை நாடவேண்டும். '' என்றும் சியாரா எச்சரிக்கை விடுக்கிறார்.

மேலும் 95% ஆண்களை பாதிக்கும் மார்பக புற்றுநோய்கள் ஆரம்ப கட்டத்தில் கண்டறியப்படுகின்றன, மரபு ரீதியாக இந்த நோய் "குறிப்பிடத்தக்க சதவிகிதத்தினரை'' தாக்குகிறது என்றும் சியாரா குறிப்பிடுகிறார்.

https://www.bbc.com/tamil/global-50565243

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, பிழம்பு said:
'எவ்வளவு நாட்களாக அந்த கட்டி இருந்தது என்று கூட எனக்கு தெரியாது, நான் என் மார்பகத்தை பெரிதாக கவனித்ததில்லை.

99 வீதமான ஆண்கள்... தங்கள் மார்பகத்தை,  கவனிக்காமல்,
மற்ற பாலினித்தவர்களின் மார்பகங்களை தான்... கவனிக்கிறார்கள். 😎

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
    • நிச்சயமாக  @goshan_cheக்கு புதிய சம்பவம் என்று அவருக்கு தெரிந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால்.... அவர் @பெருமாள் யும், @பையன்26யும் கலாய்ப்பதற்காக அடி மட்டத்திற்கு இறங்கி... "தூர் வாரியிருக்கிறார்". 😂 நமக்கும் அவரை கலாய்ப்பதில் ஒரு அலாதி இன்பம். 🙂
    • நான் நினைக்கின்றேன் அவருக்கு தெரியும் இது புதிது என்று.  ஆனால் பையனின் கருத்தை மட்டும் வைத்து எப்படி சம்பவம் பழையதுதான் என்று அடிச்சு சத்தியம் பண்ணினாரோ தெரியவில்லை. ஓருவர் இங்கு எழுதுவதை மட்டும் வைத்து தனது நிலைப்பாட்டினை மாற்றும் ஆள் அல்ல அவர்.0
    • ஈரான் ஜனாதிபதியின் இலங்கை வருகை : கண்கானிப்பு நடவடிக்கையில் அமெரிக்க உளவுத்துறை. ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இலங்கை வருகையை இஸ்ரேலின் மொசாட் புலனாய்வு சேவையும், அமெரிக்க எப்.பி.ஐ உளவுத்துறையும் கண்காணித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொள்வதற்காக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி எதிர்வரும் புதன்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்நிலையில், இலங்கையில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறையில் உள்ளதோடு, ஈரானிய சிரேஷ்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் குழுவொன்று அண்மையில் இலங்கைக்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தது. ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும், சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேவேளை, கொழும்பிற்கு அழைத்து வரப்படும் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1379001
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.