Jump to content

முதுமை மறதி (Dementia)


Recommended Posts

H 

முதுமை மறதி (Dementia)

Dr. Kanaga Sena, MD

 

Neuroligist, Yale School of Medicine, Bridgeport, CT. USA

Dr.Sena_.png
டாக்டர் கனக சேனா MD

மறதி நோய் (Dementia) என்பது ஒருவரின் ஞாபகசக்தியில் ஏற்படும் குறைபாடு அல்லது தடுமாற்றங்களை அறிகுறிகளாகக் கொண்ட ஒரு நோய். இது பெரும்பாலும் முதுமையில் வருவதால் முதுமை மறதி எனவும் அழைக்கப்படுகிறது.

இந் நோயின் பொதுவான அறிகுறிகள், பெயர்களை மறந்து போதல், காட்சிப் புலனுணர்வில் (visual perception) தடுமாற்றம், பிரச்சினை தீர்க்கும் (problem solving) ஆற்றல் குறைவு, தன்நம்பிக்கைக் குறைபாடு, கவனக் குவிப்பில் (focus) குறைபாடு எனப் பலவகைப்படும்.

இம் மறதி நோய் முதியவர்களில் அதிகமாகக் காணப்பட்டாலும், எந்த வயதினரையும் பாதிக்கக் கூடியதே. இந் நோய் பற்றிய புள்ளி விபரங்கள் சில:

  • உலகில் 50 மில்லியன் மனிதர்களை இந் நோய் பீடித்திருக்கிறது
  • ஒவ்வொரு வருடமும் 10 மில்லியன் மனிதர்கள் இப்பட்டியலில் சேர்க்கப்படுகிறார்கள்
  • 60-70 வீதமானோருக்கு அல்சைமர் நோயே இதற்கு முதன்மைக் காரணியாக இருக்கிறது

மறதி நோயால் பாதிக்கப்பட்டவர்களுடன் அவர்களைப் பராமரிப்போர், குடும்பத்தினர், சமூகத்தினர், அரசாங்கம் என்று பலரும் இதனால் உடல், உள, சமூக, பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு உள்ளாகிறார்கள்.

download-6-3.jpg
காரணிகள்

முதுமை மறதி என்பது ஒரு குறிப்பிடத்தக்க நோய்க்குறியீடு (குறியீடுகள் மற்றும் அறிகுறிகளின் தொகுப்பு) இது மூளையின் தொழிற்பாட்டை பாதிக்கும் வேறு நோய்களின் வெளிப்பாடாகவே இருக்கின்றது. ஞாபகமறதி என்பது படிப்படியாக மூளையின் சிந்திக்கும் ஆற்றல், நினைவில் நிறுத்தல் போன்ற தொழிற்பாடுகள் குறைவடைந்து செல்வதைக் குறிக்கும். இந்த ஞாபக மறதிக்கு காரணமாக கூறப்படும் பொதுவான காரணிகள்.

  • அல்சைமர்ஸ் நோய்
  • மூளைக்கான குருதி வழங்கல் பாதிப்படைதல்
  • மூளைக் கட்டிகள்
  • தலையில் ஏற்படும் விபத்துக்கள்
  • தொற்றுக்கள்
  • நீண்ட கால, அதிகரித்த மதுபாவனை
  • அகஞ்சுரக்கும் தொகுதியின் நீர்குலைவு
  • விற்றமின் குறைபாடுகள்
நோய் அறிகுறிகள்

குறைந்தபட்சம் 6 மாத கால அளவுக்கு இந்த பாதிப்பு தொடர்ந்தால் மட்டுமே சோதனை மூலமாக இந்நோயைக் கண்டறிய முடியும். அறிகுறிகளில் சில:

பொதுவான அறிகுறிகள்:

  • தெரிந்த நபர்களின் பெயர், வாழ்விடம் மறந்து போதல்.
  • ஆரம்பத்தில் அண்மைக்கால சம்பவங்களே மறக்கும். பின் காலம் செல்லச் செல்ல பழைய சம்பவங்களும் மறந்து போகும்.
  • வயது மறந்து போகும்.
  • சொற்கள் மறந்து போகும்.
  • புதிய மனிதர்கள் அல்லது புதிய சூழலை சந்திக்கும்போது குழப்பம் ஏற்படும்.
  • நடத்தையில் மாற்றங்கள் ஏற்படும்.
    • அடிக்கடி கோபப்படல்
    • பொருத்தமற்ற பாலியல் வெளிப்பாடுகள்
    • தனிநல சுகாதார பழக்க வழக்கங்களை கடைப்பிடிக்க தவறுதல்
  • புதிய விடயங்களை அறிந்து கொள்வதில் சிரமம் ஏற்படல்.

இந்த அறிகுறிகள் மன அழுத்தம் போன்ற வேறு நோய்களின்போதும் ஏற்படலாம்.

நோயைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகள்

ஒய்வு பெற்ற பின்னர்தான் எங்களில் பலர் மறதி நோயைப்பற்றி யோசிப்பதுண்டு. அப்போது அது காலங்கடந்த ஒன்றாகிவிடும்.

மறதி நோயைத் தவிர்க்க விரும்பினால் நீங்கள் 30-40 வயதுகளிலோ அல்லது அதற்கு முதலிலேயோ உங்கள் மூளையைக் கொஞ்சம் பராமரிக்கப் பழகியிருக்க வேண்டுமெனெ நிபுணர்கள் கருதுகிறார்கள்.

“உங்கள் மூளையின் ஆரோக்கியத்திற்கு வாழ்வியல் முக்கிய பங்காற்றுகின்றதென பற்பல ஆய்வுகளை மேற்கோள் காட்டி, பிற்ஸ்பேர்க் பல்கலைக்கழக மருத்துவக் கல்விநிலையத்தின் இணைப் பேராசிரியரும், நரம்பு-உளவள நிபுணருமான டாக்டர் போல் நுஸ்போம் கூறுகிறார்.

மறதி நோயைத் தடுக்க என்ன செய்யலாம்? சமீபத்தில் புளோறிடா வின்ரர்பார்க் ஹெல்த் ஃபவுண்டேசனுக்கு வழங்கிய பேச்சொன்றின் போது டாக்டர் நுஸ்போம் 20 ஆலோசனைகளைக் குறிப்பிடுகிறார்.

  1. தொண்டர்கள் தேவைப்படும் சங்கங்களிலோ அல்லது அமைப்புக்களிலோ சேர்ந்துகொள்ளுங்கள். இதனால், நீங்கள் ஓய்வு பெறும்போது மற்றவர்களால் ஒதுக்கப்பட்டவராக அல்லாமல், நிறைய நண்பர்களால் சூழப்பட்டிருப்பீர்கள்.
  2. பொழுது போக்கு செயற்பாடுகளைக் கற்றுக்கொள்ளுஙகள். சிக்கலான, மூளையைப் பாவிக்கும் விளையாட்டுக்கள் பல மூளையைப் பலப்படுத்துகின்றன.
  3. நீங்கள் வழமையாகப் பாவிக்காத கையைப் பாவித்து எழுதக் கற்றுக்கொள்ளுஙகள். தினமும், பல தடவைகள் செய்து பழக்கத்தில் கொண்டு வாருங்கள். இது உங்கள் மூளையின் எதிர்ப்பக்கத்திலுள்ள நரம்புக்கலங்களை இயக்கத்தில் வைத்திருக்கச் செய்கிறது.
  4. நடனம் கற்றுக் கொள்ளுங்கள். 500 பேர்களில் மேற்கொண்ட ஆய்வில், நடனமாடக் கற்றுக்கொண்டவர்களில், அல்சைமர் வியாதி உட்படப், பல மறதி நோய்களின் தாக்கம் மிகக்குறைவாக இருந்தது கண்டறியப்பட்டது. வாரத்தில் 3 அல்லது 4 தடவைகள் நடனமாடுபவர்களில், வாரத்தில் ஒரு தடவை நடனமாடுபவர்களையோ அல்லது நடனமாடாதவர்களையோ விட 76 வீதம் மறதிநோயின் தாக்கம் குறைவாகவிருந்தது.
  5. தோட்டம் செய்யத் தொடங்குங்கள். நியூசீலந்தில் 1000 பேர்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம், ஒழுஙகாகத் தோட்டம் செய்பவர்களில் மறதிநோயின் பாதிப்புக் குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது. தோட்டம் செய்வது மன அழுத்தத்தைக் குறைப்பது மட்டுமல்லாது, தோட்டத்தை வடிவமைப்பதில் அவர்கள் தமது மூளையைத் தொடர்ந்தும் உபயோகப்படுத்துகிறார்கள்.
  6. நடவுங்கள். தினமும் நடப்பதன் மூலம் மூளைக்கு இரத்தச் சுற்றோட்டம் அதிகரிப்பதால் மறதி நோயின் பாதிப்பு குறைக்கப்படுகிறது. நடைமானி (pedometer) ஒன்றை வாங்கிக்கொள்வதன் மூலம் நாளொன்றுக்குப் 10,000 அடிகள் நடப்பதற்குப் பழகிக்கொள்ளலாம். பெரும்பாலான ‘ஸ்மார்ட் ஃபோன்களில்’ இதற்கான ‘அப்’ பை (app) இலவசமாகத் தரவிறக்கிக் கொள்ளலாம்.
  7. வாசிக்கப் பழகுங்கள். தினமும் வாசிக்கும்போது கிரகிக்கப்பட்ட தகவல்களைச் சேமிக்கவும், அவற்றைச் செயலார்றவுமென மூளையின் பல பகுதிகள் இயக்கம் பெறுகின்றன. அதே போல கற்பனையைப் பாவித்து எழுதுவதும் (பார்த்து எழுதுவதல்ல!) மூளையை இயக்க நிலையில் வைத்திருக்கிறது.
  8. பின்னப் பழகிக்கொள்ளுங்கள் (knitting). இரண்டு கைகளாலும் பின்னும்போது மூளையில் இரண்டு பக்கங்களும் இயக்க நிலையில் இருப்பது மட்டுமல்லாது அது மன அழுத்தத்தையும் குறைக்கிறது.
  9. புதிய மொழியொன்றைக் கற்றுக்கொள்ளுங்கள். அது வேற்று மொழியாகவோ அல்லது கைப் பாஷையாகவோ (sign language) இருக்கலாம், உங்கள் மூளை இரண்டு மொழிகளுக்கிடையே மறி மாறித் தாவிக்கொள்வதன் மூலம் மூளையின் பல பகுதிகள் இயக்க நிலையில் வைத்திருக்கப் படுகின்றது. இரண்டு மொழிகளைப் பயின்றவர்களில் அல்சைமர் நோயின் பாதிப்பு 4 வருடங்களால் குறைக்கப்படுவதாக இங்கிலாந்திலுள்ள ஆராய்ச்சியாளரொருவர் தெரிவிக்கின்றார். அத்தோடு, சிறுவயதிலேயே கைப்பாஷையைக் கற்றுக்கொள்ளும் ஒரு குழந்தையின் விவேகம் (IQ) பன்மடங்கு அதிகரிக்கிறது என இன்னுமொரு ஆய்வு கூறுகிறது. விவேகம் கூடியவர்களில் மறதிநோய் வருவது மிக மிகக் குறைவு.
  10. ‘ஸ்கிறபிள்’ (Scrabble), ‘ மொனோபொலி’ (Monopoly) போன்ற பலகை விளையாட்டுக்களை விளையாடுங்கள். இதன் போது உங்கள் மூளை இயக்கத்திலிருப்பது மட்டுமல்லாது நண்பர்களுடன் கூடி மகிழ்வீர்கள். கணனியில் விளையாடும் ‘சொலிற்றையர்’ (solitaire) போன்ற விளையாட்டுக்களும் மூளைக்கு நல்லது. இருப்பினும், சமூக ஊடாடலுடன் கூடிய விளையாட்டுக்களையே நுஸ்போம் ஊக்குவிக்கிறார்.
  11. வாழ்நாள் முழுவதும் எதையாவது கற்றுக்கொண்டே இருங்கள். கற்கை மூளையில் கட்டுமான மாற்றஙகளையும் (structural), இரசாயன மாற்றங்களையும் ஏற்படுத்துகிறது. அத்தோடு, கல்வி ஒருவரின் வாழ்நாளையும் அதிகரிக்கிறது. உயர் கல்விக்கான பட்டங்களைப் பெற்றவர்கள் நீண்ட ஆயுளைக் கொண்டிருக்கிறார்கள் என மூளை ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். இவர்களில் அல்சைமர் வியாதி வந்தாலும் அது அவர்களின் மிக முதிய வயதுகளிலேயே வருகிறது என ஆய்வாளர் கருதுகிறார்கள்.
  12. சங்கீதத்தைக் (கர்நாடக) கேளுங்கள். இசை மூளையின் பல பகுதிகளிடையேயும் புதிய தொடுப்புகளை ஏற்படுத்துகிறது. எந்த விதமான இசையும் நல்லதாகவிருந்தாலும், கர்நாடக இசை பல நல்ல விளைவுகளைத் தருவதாக ஆய்வாளர் கண்டறிந்துள்ளனர்.
  13. இசைக் கருவியொன்றைப் பழகிக்கொள்ளுங்கள். முதுமையில் பழகுவது அவ்வளவு இலகுவாக இருக்காதெனினும், இயாகமில்லாத மூளையின் பகுதியொன்று திடீரென இயக்கம் கொள்ள இது உதவும்.
  14. பயணம் செய்யுங்கள். அது சுற்றுலாவாக இருந்தாலென்ன, அயலூருக்குச் சென்று வந்தாலென்ன பாதைகளைத் தீர்மானிப்பது முதல் அவற்றினூடு பயணம் செய்வதுவரை அது உங்களின் மூளைக்கு வேலை தருகிறது. லண்டன் நகரில் பணி புரியும் டாக்சி சாரதிகளுக்கு மூளையின் அளவு பெரிதெநக் கண்டறிந்திருக்கிறார்கள். அவர்கள் தங்கள் பல பயணங்களுக்கான தகவல்களைச் சேமித்து வைக்கப் பெரிய மூளைகள் தேவைப்படுகின்றது.
  15. தினமும் கடவுளைத் தொழுகை செய்துவாருங்கள். தினமும் கடவுளை வணங்கும்போது உடலின் நோயெதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது. வழக்கமாகத் தொழுகையை மேற்கொள்பவர்கள் நீண்ட ஆயுளைக் கொண்டவர்களாகவும், மகிழ்ச்சியோடும் அரோக்கியத்தோடும் இருப்பவர்களாகவும் அறியப்பட்டுள்ளது.
  16. தியானம் செய்யப் பழகுங்கள். தியானம் செய்வதன் மூலம் தினமும் ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைக்கலாம்.
  17. போதுமான அளவுக்குத் தூங்குங்கள். தடைப்படும் தூக்கத்துக்கும் மறதிநோய்க்கும் தொடர்புள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
  18. ஒமேகா-3 கொழுப்பமிலத்தைக் கொண்ட உணவுகளை அதிகம் சாப்பிடுங்கள். (Salmon, sardines, tuna, ocean trout, mackerel or herring). வால்நட் (இதில் மீனை விட அதிகம் ஒமேகா-3 இருக்கிறது), ஃபிளக்சீட் எண்ணை, மீன் ஈரல் எண்ணை, வால்நட் எண்ணை ஆகியனவும் ஒமெகா-3 அதிகமுள்ள உணவு வகைகள்.
  19. அதிகம் பழஙகள், மரக்கறி வகைகளைச் சாப்பிடுங்கள். மூளையின் கலங்களை அழிக்கும் ஃபிறீ றடிக்கல்ஸ் (free radicals) எனப்படும் பதார்த்தங்களைத் துப்புரவு செய்யும் ‘அன்ரி ஒக்ஸிடன்ற்ஸ்’ (antioxidants) பழங்கள், மரக்கறிவகைகளில் அதிகம் கிடைக்கிறது.
  20. ஒரு நாளைக்கு ஒரு தடவையாவது குடும்பத்தரோடோ அல்லது நண்பர்களோடோ இருந்து உணவருந்துங்கள். சமூக ஊடாடலுடன் அருந்தும் உணவு நல்லதாக அமைவது வழக்கம். தனியேயோ அல்லது பயணம்செய்யும்போதோ அருந்தும் உணவு பொதுவாக ஆரோக்கியமாக இருப்பது குறைவு.

If you don’t use it you will lose it (பாவிக்காது போனால் அது உங்களை விட்டகன்றுவிடும்) என்றொரு ஆங்கிலப் பழமொழியொன்றுண்டு. அது நமது மூளைக்குத்தான் மிக மிகப் பொருந்தும்.

https://marumoli.com/முதுமை-மறதி-dementia/?fbclid=IwAR2w4q2j0l7oz8N64GXL_SNGLyJP8OR-sxGlVGCK5zrcz91OyakIhT9bOvI

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

மறதி நோயைத் தடுக்க என்ன செய்யலாம்? சமீபத்தில் புளோறிடா வின்ரர்பார்க் ஹெல்த் ஃபவுண்டேசனுக்கு வழங்கிய பேச்சொன்றின் போது டாக்டர் நுஸ்போம் 20 ஆலோசனைகளைக் குறிப்பிடுகிறார்.

  1. தொண்டர்கள் தேவைப்படும் சங்கங்களிலோ அல்லது அமைப்புக்களிலோ சேர்ந்துகொள்ளுங்கள். இதனால், நீங்கள் ஓய்வு பெறும்போது மற்றவர்களால் ஒதுக்கப்பட்டவராக அல்லாமல், நிறைய நண்பர்களால் சூழப்பட்டிருப்பீர்கள்.
  2. பொழுது போக்கு செயற்பாடுகளைக் கற்றுக்கொள்ளுஙகள். சிக்கலான, மூளையைப் பாவிக்கும் விளையாட்டுக்கள் பல மூளையைப் பலப்படுத்துகின்றன.
  3. நீங்கள் வழமையாகப் பாவிக்காத கையைப் பாவித்து எழுதக் கற்றுக்கொள்ளுஙகள். தினமும், பல தடவைகள் செய்து பழக்கத்தில் கொண்டு வாருங்கள். இது உங்கள் மூளையின் எதிர்ப்பக்கத்திலுள்ள நரம்புக்கலங்களை இயக்கத்தில் வைத்திருக்கச் செய்கிறது.
  4. நடனம் கற்றுக் கொள்ளுங்கள். 500 பேர்களில் மேற்கொண்ட ஆய்வில், நடனமாடக் கற்றுக்கொண்டவர்களில், அல்சைமர் வியாதி உட்படப், பல மறதி நோய்களின் தாக்கம் மிகக்குறைவாக இருந்தது கண்டறியப்பட்டது. வாரத்தில் 3 அல்லது 4 தடவைகள் நடனமாடுபவர்களில், வாரத்தில் ஒரு தடவை நடனமாடுபவர்களையோ அல்லது நடனமாடாதவர்களையோ விட 76 வீதம் மறதிநோயின் தாக்கம் குறைவாகவிருந்தது.
  5. தோட்டம் செய்யத் தொடங்குங்கள். நியூசீலந்தில் 1000 பேர்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம், ஒழுஙகாகத் தோட்டம் செய்பவர்களில் மறதிநோயின் பாதிப்புக் குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது. தோட்டம் செய்வது மன அழுத்தத்தைக் குறைப்பது மட்டுமல்லாது, தோட்டத்தை வடிவமைப்பதில் அவர்கள் தமது மூளையைத் தொடர்ந்தும் உபயோகப்படுத்துகிறார்கள்.
  6. நடவுங்கள். தினமும் நடப்பதன் மூலம் மூளைக்கு இரத்தச் சுற்றோட்டம் அதிகரிப்பதால் மறதி நோயின் பாதிப்பு குறைக்கப்படுகிறது. நடைமானி (pedometer) ஒன்றை வாங்கிக்கொள்வதன் மூலம் நாளொன்றுக்குப் 10,000 அடிகள் நடப்பதற்குப் பழகிக்கொள்ளலாம். பெரும்பாலான ‘ஸ்மார்ட் ஃபோன்களில்’ இதற்கான ‘அப்’ பை (app) இலவசமாகத் தரவிறக்கிக் கொள்ளலாம்.
  7. வாசிக்கப் பழகுங்கள். தினமும் வாசிக்கும்போது கிரகிக்கப்பட்ட தகவல்களைச் சேமிக்கவும், அவற்றைச் செயலார்றவுமென மூளையின் பல பகுதிகள் இயக்கம் பெறுகின்றன. அதே போல கற்பனையைப் பாவித்து எழுதுவதும் (பார்த்து எழுதுவதல்ல!) மூளையை இயக்க நிலையில் வைத்திருக்கிறது.
  8. பின்னப் பழகிக்கொள்ளுங்கள் (knitting). இரண்டு கைகளாலும் பின்னும்போது மூளையில் இரண்டு பக்கங்களும் இயக்க நிலையில் இருப்பது மட்டுமல்லாது அது மன அழுத்தத்தையும் குறைக்கிறது.
  9. புதிய மொழியொன்றைக் கற்றுக்கொள்ளுங்கள். அது வேற்று மொழியாகவோ அல்லது கைப் பாஷையாகவோ (sign language) இருக்கலாம், உங்கள் மூளை இரண்டு மொழிகளுக்கிடையே மறி மாறித் தாவிக்கொள்வதன் மூலம் மூளையின் பல பகுதிகள் இயக்க நிலையில் வைத்திருக்கப் படுகின்றது. இரண்டு மொழிகளைப் பயின்றவர்களில் அல்சைமர் நோயின் பாதிப்பு 4 வருடங்களால் குறைக்கப்படுவதாக இங்கிலாந்திலுள்ள ஆராய்ச்சியாளரொருவர் தெரிவிக்கின்றார். அத்தோடு, சிறுவயதிலேயே கைப்பாஷையைக் கற்றுக்கொள்ளும் ஒரு குழந்தையின் விவேகம் (IQ) பன்மடங்கு அதிகரிக்கிறது என இன்னுமொரு ஆய்வு கூறுகிறது. விவேகம் கூடியவர்களில் மறதிநோய் வருவது மிக மிகக் குறைவு.
  10. ‘ஸ்கிறபிள்’ (Scrabble), ‘ மொனோபொலி’ (Monopoly) போன்ற பலகை விளையாட்டுக்களை விளையாடுங்கள். இதன் போது உங்கள் மூளை இயக்கத்திலிருப்பது மட்டுமல்லாது நண்பர்களுடன் கூடி மகிழ்வீர்கள். கணனியில் விளையாடும் ‘சொலிற்றையர்’ (solitaire) போன்ற விளையாட்டுக்களும் மூளைக்கு நல்லது. இருப்பினும், சமூக ஊடாடலுடன் கூடிய விளையாட்டுக்களையே நுஸ்போம் ஊக்குவிக்கிறார்.
  11. வாழ்நாள் முழுவதும் எதையாவது கற்றுக்கொண்டே இருங்கள். கற்கை மூளையில் கட்டுமான மாற்றஙகளையும் (structural), இரசாயன மாற்றங்களையும் ஏற்படுத்துகிறது. அத்தோடு, கல்வி ஒருவரின் வாழ்நாளையும் அதிகரிக்கிறது. உயர் கல்விக்கான பட்டங்களைப் பெற்றவர்கள் நீண்ட ஆயுளைக் கொண்டிருக்கிறார்கள் என மூளை ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். இவர்களில் அல்சைமர் வியாதி வந்தாலும் அது அவர்களின் மிக முதிய வயதுகளிலேயே வருகிறது என ஆய்வாளர் கருதுகிறார்கள்.
  12. சங்கீதத்தைக் (கர்நாடக) கேளுங்கள். இசை மூளையின் பல பகுதிகளிடையேயும் புதிய தொடுப்புகளை ஏற்படுத்துகிறது. எந்த விதமான இசையும் நல்லதாகவிருந்தாலும், கர்நாடக இசை பல நல்ல விளைவுகளைத் தருவதாக ஆய்வாளர் கண்டறிந்துள்ளனர்.
  13. இசைக் கருவியொன்றைப் பழகிக்கொள்ளுங்கள். முதுமையில் பழகுவது அவ்வளவு இலகுவாக இருக்காதெனினும், இயாகமில்லாத மூளையின் பகுதியொன்று திடீரென இயக்கம் கொள்ள இது உதவும்.
  14. பயணம் செய்யுங்கள். அது சுற்றுலாவாக இருந்தாலென்ன, அயலூருக்குச் சென்று வந்தாலென்ன பாதைகளைத் தீர்மானிப்பது முதல் அவற்றினூடு பயணம் செய்வதுவரை அது உங்களின் மூளைக்கு வேலை தருகிறது. லண்டன் நகரில் பணி புரியும் டாக்சி சாரதிகளுக்கு மூளையின் அளவு பெரிதெநக் கண்டறிந்திருக்கிறார்கள். அவர்கள் தங்கள் பல பயணங்களுக்கான தகவல்களைச் சேமித்து வைக்கப் பெரிய மூளைகள் தேவைப்படுகின்றது.
  15. தினமும் கடவுளைத் தொழுகை செய்துவாருங்கள். தினமும் கடவுளை வணங்கும்போது உடலின் நோயெதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது. வழக்கமாகத் தொழுகையை மேற்கொள்பவர்கள் நீண்ட ஆயுளைக் கொண்டவர்களாகவும், மகிழ்ச்சியோடும் அரோக்கியத்தோடும் இருப்பவர்களாகவும் அறியப்பட்டுள்ளது.
  16. தியானம் செய்யப் பழகுங்கள். தியானம் செய்வதன் மூலம் தினமும் ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைக்கலாம்.
  17. போதுமான அளவுக்குத் தூங்குங்கள். தடைப்படும் தூக்கத்துக்கும் மறதிநோய்க்கும் தொடர்புள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
  18. ஒமேகா-3 கொழுப்பமிலத்தைக் கொண்ட உணவுகளை அதிகம் சாப்பிடுங்கள். (Salmon, sardines, tuna, ocean trout, mackerel or herring). வால்நட் (இதில் மீனை விட அதிகம் ஒமேகா-3 இருக்கிறது), ஃபிளக்சீட் எண்ணை, மீன் ஈரல் எண்ணை, வால்நட் எண்ணை ஆகியனவும் ஒமெகா-3 அதிகமுள்ள உணவு வகைகள்.
  19. அதிகம் பழஙகள், மரக்கறி வகைகளைச் சாப்பிடுங்கள். மூளையின் கலங்களை அழிக்கும் ஃபிறீ றடிக்கல்ஸ் (free radicals) எனப்படும் பதார்த்தங்களைத் துப்புரவு செய்யும் ‘அன்ரி ஒக்ஸிடன்ற்ஸ்’ (antioxidants) பழங்கள், மரக்கறிவகைகளில் அதிகம் கிடைக்கிறது.
  20. ஒரு நாளைக்கு ஒரு தடவையாவது குடும்பத்தரோடோ அல்லது நண்பர்களோடோ இருந்து உணவருந்துங்கள். சமூக ஊடாடலுடன் அருந்தும் உணவு நல்லதாக அமைவது வழக்கம். தனியேயோ அல்லது பயணம்செய்யும்போதோ அருந்தும் உணவு பொதுவாக ஆரோக்கியமாக இருப்பது குறைவு.

21. தினசரி காலை மதியம் மாலை தவறாமல் யாழ்களத்தை பார்க்க வேண்டும். குறைந்த பட்சம்  ஒரு கருத்தாவது எழுத வேண்டும். அது  குண்டக்க மண்டக்க கருத்தாகவும் இருக்கலாம் அல்லது  யாரையாவது திட்டியும் எழுதலாம்.  :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

தினமும் கடவுளைத் தொழுகை செய்துவாருங்கள். தினமும் கடவுளை வணங்கும்போது உடலின் நோயெதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது. வழக்கமாகத் தொழுகையை மேற்கொள்பவர்கள் நீண்ட ஆயுளைக் கொண்டவர்களாகவும், மகிழ்ச்சியோடும் அரோக்கியத்தோடும் இருப்பவர்களாகவும் அறியப்பட்டுள்ளது.

இது உண்மை என்றால் இலங்கை தமிழர்கள், முஸ்லிம்கள் தான் நீண்ட ஆயுளைக் கொண்டவர்களாகவும் மகிழ்ச்சியோடும் அரோக்கியத்தோடும் இருப்பவர்களா இருக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ந‌ல்ல‌ ஒரு ப‌திவு நுனா அண்ணா , இணைப்புக்கு ந‌ன்றி 🤞

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/27/2019 at 5:33 PM, குமாரசாமி said:

21. தினசரி காலை மதியம் மாலை தவறாமல் யாழ்களத்தை பார்க்க வேண்டும். குறைந்த பட்சம்  ஒரு கருத்தாவது எழுத வேண்டும். அது  குண்டக்க மண்டக்க கருத்தாகவும் இருக்கலாம் அல்லது  யாரையாவது திட்டியும் எழுதலாம்.  :cool:

குண்டக்க மண்டக்க எழுதினால்...... உண்மையிலேயே மூளை நரம்புகள் துரிதமாகவும் அபரிதமாகவும் வேலை செய்யும்....😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, வல்வை சகாறா said:

குண்டக்க மண்டக்க எழுதினால்...... உண்மையிலேயே மூளை நரம்புகள் துரிதமாகவும் அபரிதமாகவும் வேலை செய்யும்....😉

முயற்சி செய்து பாருங்கள் வ.சகாறா. இனியாவது வேலை செய்கிறதா எனப் பார்ப்போம்😌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/28/2019 at 12:13 AM, பையன்26 said:

ந‌ல்ல‌ ஒரு ப‌திவு நுனா அண்ணா , இணைப்புக்கு ந‌ன்றி 🤞

பையா .....நானே இதைபார்த்திட்டு தலை தெறிக்க  வெறித்தனமா ஓடுறன், நீங்கள் பச்சை வேற போட்டுட்டு நிக்கிறீங்கள்....என்ன ஆரம்பமா.....!  😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, suvy said:

பையா .....நானே இதைபார்த்திட்டு தலை தெறிக்க  வெறித்தனமா ஓடுறன், நீங்கள் பச்சை வேற போட்டுட்டு நிக்கிறீங்கள்....என்ன ஆரம்பமா.....!  😂

மூத்த‌வ‌ரே , என்ர‌ த‌ங்கைச்சி அவ‌ளுக்கு இப்ப‌ தான் 28வ‌ய‌து ஞாவ‌க‌ ம‌ற‌தி கூட‌ , அண்ண‌ன் என்ற‌ முறையில் என‌க்கு எல்லா உண்மைக‌ளும் சொல்லுவா , நுனா அண்ணா இணைத்த‌ ப‌திவுக்கும் நான் ச‌ந்திச்ச‌ உற‌வுக‌ளின் வாழ்வையும் பார்க்கும் போது இந்த‌ ப‌திவு ச‌ரி என்று ப‌டுது மூத்த‌வ‌ரே ,

கொஞ்ச‌க் கால‌ம் போக‌ உங்க‌ளுக்கு என‌க்கு ஏன் யாழில் உள்ள‌ ப‌ல‌ருக்கும் உந்த‌ நிலை வ‌ரும் ஹி ஹி /

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

https://marumoli.com/முதுமை-மறதி-dementia/

 

தமிழர் நலன் விரும்பியும் நிறையவே தொண்டுகள் செய்பவருமான டாக்ரர் சேனாதிராஜா அவர்களின் கட்டுரை.

மறதி நோய் (Dementia) என்பது ஒருவரின் ஞாபகசக்தியில் ஏற்படும் குறைபாடு அல்லது தடுமாற்றங்களை அறிகுறிகளாகக் கொண்ட ஒரு நோய். இது பெரும்பாலும் முதுமையில் வருவதால் முதுமை மறதி எனவும் அழைக்கப்படுகிறது.

இந் நோயின் பொதுவான அறிகுறிகள், பெயர்களை மறந்து போதல், காட்சிப் புலனுணர்வில் (visual perception) தடுமாற்றம், பிரச்சினை தீர்க்கும் (problem solving) ஆற்றல் குறைவு, தன்நம்பிக்கைக் குறைபாடு, கவனக் குவிப்பில் (focus) குறைபாடு எனப் பலவகைப்படும்.

இம் மறதி நோய் முதியவர்களில் அதிகமாகக் காணப்பட்டாலும், எந்த வயதினரையும் பாதிக்கக் கூடியதே. இந் நோய் பற்றிய புள்ளி விபரங்கள் சில:

  • உலகில் 50 மில்லியன் மனிதர்களை இந் நோய் பீடித்திருக்கிறது
  • ஒவ்வொரு வருடமும் 10 மில்லியன் மனிதர்கள் இப்பட்டியலில் சேர்க்கப்படுகிறார்கள்
  • 60-70 வீதமானோருக்கு அல்சைமர் நோயே இதற்கு முதன்மைக் காரணியாக இருக்கிறது

மறதி நோயால் பாதிக்கப்பட்டவர்களுடன் அவர்களைப் பராமரிப்போர், குடும்பத்தினர், சமூகத்தினர், அரசாங்கம் என்று பலரும் இதனால் உடல், உள, சமூக, பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு உள்ளாகிறார்கள்.

download-6-3.jpg
காரணிகள்

முதுமை மறதி என்பது ஒரு குறிப்பிடத்தக்க நோய்க்குறியீடு (குறியீடுகள் மற்றும் அறிகுறிகளின் தொகுப்பு) இது மூளையின் தொழிற்பாட்டை பாதிக்கும் வேறு நோய்களின் வெளிப்பாடாகவே இருக்கின்றது. ஞாபகமறதி என்பது படிப்படியாக மூளையின் சிந்திக்கும் ஆற்றல், நினைவில் நிறுத்தல் போன்ற தொழிற்பாடுகள் குறைவடைந்து செல்வதைக் குறிக்கும். இந்த ஞாபக மறதிக்கு காரணமாக கூறப்படும் பொதுவான காரணிகள்.

  • அல்சைமர்ஸ் நோய்
  • மூளைக்கான குருதி வழங்கல் பாதிப்படைதல்
  • மூளைக் கட்டிகள்
  • தலையில் ஏற்படும் விபத்துக்கள்
  • தொற்றுக்கள்
  • நீண்ட கால, அதிகரித்த மதுபாவனை
  • அகஞ்சுரக்கும் தொகுதியின் நீர்குலைவு
  • விற்றமின் குறைபாடுகள்

நோய் அறிகுறிகள்

குறைந்தபட்சம் 6 மாத கால அளவுக்கு இந்த பாதிப்பு தொடர்ந்தால் மட்டுமே சோதனை மூலமாக இந்நோயைக் கண்டறிய முடியும். அறிகுறிகளில் சில:

பொதுவான அறிகுறிகள்:

  • தெரிந்த நபர்களின் பெயர், வாழ்விடம் மறந்து போதல்.
  • ஆரம்பத்தில் அண்மைக்கால சம்பவங்களே மறக்கும். பின் காலம் செல்லச் செல்ல பழைய சம்பவங்களும் மறந்து போகும்.
  • வயது மறந்து போகும்.
  • சொற்கள் மறந்து போகும்.
  • புதிய மனிதர்கள் அல்லது புதிய சூழலை சந்திக்கும்போது குழப்பம் ஏற்படும்.
  • நடத்தையில் மாற்றங்கள் ஏற்படும்.
    • அடிக்கடி கோபப்படல்
    • பொருத்தமற்ற பாலியல் வெளிப்பாடுகள்
    • தனிநல சுகாதார பழக்க வழக்கங்களை கடைப்பிடிக்க தவறுதல்
  • புதிய விடயங்களை அறிந்து கொள்வதில் சிரமம் ஏற்படல்.

இந்த அறிகுறிகள் மன அழுத்தம் போன்ற வேறு நோய்களின்போதும் ஏற்படலாம்.

நோயைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகள்

ஒய்வு பெற்ற பின்னர்தான் எங்களில் பலர் மறதி நோயைப்பற்றி யோசிப்பதுண்டு. அப்போது அது காலங்கடந்த ஒன்றாகிவிடும்.

மறதி நோயைத் தவிர்க்க விரும்பினால் நீங்கள் 30-40 வயதுகளிலோ அல்லது அதற்கு முதலிலேயோ உங்கள் மூளையைக் கொஞ்சம் பராமரிக்கப் பழகியிருக்க வேண்டுமெனெ நிபுணர்கள் கருதுகிறார்கள். 

“உங்கள் மூளையின் ஆரோக்கியத்திற்கு வாழ்வியல் முக்கிய பங்காற்றுகின்றதென பற்பல ஆய்வுகளை மேற்கோள் காட்டி, பிற்ஸ்பேர்க் பல்கலைக்கழக மருத்துவக் கல்விநிலையத்தின் இணைப் பேராசிரியரும், நரம்பு-உளவள நிபுணருமான டாக்டர் போல் நுஸ்போம் கூறுகிறார்.

மறதி நோயைத் தடுக்க என்ன செய்யலாம்? சமீபத்தில் புளோறிடா வின்ரர்பார்க் ஹெல்த் ஃபவுண்டேசனுக்கு வழங்கிய பேச்சொன்றின் போது டாக்டர் நுஸ்போம் 20 ஆலோசனைகளைக் குறிப்பிடுகிறார்.

  1. தொண்டர்கள் தேவைப்படும் சங்கங்களிலோ அல்லது அமைப்புக்களிலோ சேர்ந்துகொள்ளுங்கள். இதனால், நீங்கள் ஓய்வு பெறும்போது மற்றவர்களால் ஒதுக்கப்பட்டவராக அல்லாமல், நிறைய நண்பர்களால் சூழப்பட்டிருப்பீர்கள்.
  2. பொழுது போக்கு செயற்பாடுகளைக் கற்றுக்கொள்ளுஙகள். சிக்கலான, மூளையைப் பாவிக்கும் விளையாட்டுக்கள் பல மூளையைப் பலப்படுத்துகின்றன.
  3. நீங்கள் வழமையாகப் பாவிக்காத கையைப் பாவித்து எழுதக் கற்றுக்கொள்ளுஙகள். தினமும், பல தடவைகள் செய்து பழக்கத்தில் கொண்டு வாருங்கள். இது உங்கள் மூளையின் எதிர்ப்பக்கத்திலுள்ள நரம்புக்கலங்களை இயக்கத்தில் வைத்திருக்கச் செய்கிறது.
  4. நடனம் கற்றுக் கொள்ளுங்கள். 500 பேர்களில் மேற்கொண்ட ஆய்வில், நடனமாடக் கற்றுக்கொண்டவர்களில், அல்சைமர் வியாதி உட்படப், பல மறதி நோய்களின் தாக்கம் மிகக்குறைவாக இருந்தது கண்டறியப்பட்டது. வாரத்தில் 3 அல்லது 4 தடவைகள் நடனமாடுபவர்களில், வாரத்தில் ஒரு தடவை நடனமாடுபவர்களையோ அல்லது நடனமாடாதவர்களையோ விட 76 வீதம் மறதிநோயின் தாக்கம் குறைவாகவிருந்தது. 
  5. தோட்டம் செய்யத் தொடங்குங்கள். நியூசீலந்தில் 1000 பேர்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம், ஒழுஙகாகத் தோட்டம் செய்பவர்களில் மறதிநோயின் பாதிப்புக் குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது. தோட்டம் செய்வது மன அழுத்தத்தைக் குறைப்பது மட்டுமல்லாது, தோட்டத்தை வடிவமைப்பதில் அவர்கள் தமது மூளையைத் தொடர்ந்தும் உபயோகப்படுத்துகிறார்கள்.
  6. நடவுங்கள். தினமும் நடப்பதன் மூலம் மூளைக்கு இரத்தச் சுற்றோட்டம் அதிகரிப்பதால் மறதி நோயின் பாதிப்பு குறைக்கப்படுகிறது. நடைமானி (pedometer) ஒன்றை வாங்கிக்கொள்வதன் மூலம் நாளொன்றுக்குப் 10,000 அடிகள் நடப்பதற்குப் பழகிக்கொள்ளலாம். பெரும்பாலான ‘ஸ்மார்ட் ஃபோன்களில்’ இதற்கான ‘அப்’ பை (app) இலவசமாகத் தரவிறக்கிக் கொள்ளலாம்.
  7. வாசிக்கப் பழகுங்கள். தினமும் வாசிக்கும்போது கிரகிக்கப்பட்ட தகவல்களைச் சேமிக்கவும், அவற்றைச் செயலார்றவுமென மூளையின் பல பகுதிகள் இயக்கம் பெறுகின்றன. அதே போல கற்பனையைப் பாவித்து எழுதுவதும் (பார்த்து எழுதுவதல்ல!) மூளையை இயக்க நிலையில் வைத்திருக்கிறது.
  8. பின்னப் பழகிக்கொள்ளுங்கள் (knitting). இரண்டு கைகளாலும் பின்னும்போது மூளையில் இரண்டு பக்கங்களும் இயக்க நிலையில் இருப்பது மட்டுமல்லாது அது மன அழுத்தத்தையும் குறைக்கிறது. 
  9. புதிய மொழியொன்றைக் கற்றுக்கொள்ளுங்கள். அது வேற்று மொழியாகவோ அல்லது கைப் பாஷையாகவோ (sign language) இருக்கலாம், உங்கள் மூளை இரண்டு மொழிகளுக்கிடையே மறி மாறித் தாவிக்கொள்வதன் மூலம் மூளையின் பல பகுதிகள் இயக்க நிலையில் வைத்திருக்கப் படுகின்றது. இரண்டு மொழிகளைப் பயின்றவர்களில் அல்சைமர் நோயின் பாதிப்பு 4 வருடங்களால் குறைக்கப்படுவதாக இங்கிலாந்திலுள்ள ஆராய்ச்சியாளரொருவர் தெரிவிக்கின்றார். அத்தோடு, சிறுவயதிலேயே கைப்பாஷையைக் கற்றுக்கொள்ளும் ஒரு குழந்தையின் விவேகம் (IQ) பன்மடங்கு அதிகரிக்கிறது என இன்னுமொரு ஆய்வு கூறுகிறது. விவேகம் கூடியவர்களில் மறதிநோய் வருவது மிக மிகக் குறைவு.
  10. ‘ஸ்கிறபிள்’ (Scrabble), ‘ மொனோபொலி’ (Monopoly) போன்ற பலகை விளையாட்டுக்களை விளையாடுங்கள். இதன் போது உங்கள் மூளை இயக்கத்திலிருப்பது மட்டுமல்லாது நண்பர்களுடன் கூடி மகிழ்வீர்கள். கணனியில் விளையாடும் ‘சொலிற்றையர்’ (solitaire) போன்ற விளையாட்டுக்களும் மூளைக்கு நல்லது. இருப்பினும், சமூக ஊடாடலுடன் கூடிய விளையாட்டுக்களையே நுஸ்போம் ஊக்குவிக்கிறார்.
  11. வாழ்நாள் முழுவதும் எதையாவது கற்றுக்கொண்டே இருங்கள். கற்கை மூளையில் கட்டுமான மாற்றஙகளையும் (structural), இரசாயன மாற்றங்களையும் ஏற்படுத்துகிறது. அத்தோடு, கல்வி ஒருவரின் வாழ்நாளையும் அதிகரிக்கிறது. உயர் கல்விக்கான பட்டங்களைப் பெற்றவர்கள் நீண்ட ஆயுளைக் கொண்டிருக்கிறார்கள் என மூளை ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். இவர்களில் அல்சைமர் வியாதி வந்தாலும் அது அவர்களின் மிக முதிய வயதுகளிலேயே வருகிறது என ஆய்வாளர் கருதுகிறார்கள்.
  12. சங்கீதத்தைக் (கர்நாடக) கேளுங்கள். இசை மூளையின் பல பகுதிகளிடையேயும் புதிய தொடுப்புகளை ஏற்படுத்துகிறது. எந்த விதமான இசையும் நல்லதாகவிருந்தாலும், கர்நாடக இசை பல நல்ல விளைவுகளைத் தருவதாக ஆய்வாளர் கண்டறிந்துள்ளனர்.
  13. இசைக் கருவியொன்றைப் பழகிக்கொள்ளுங்கள். முதுமையில் பழகுவது அவ்வளவு இலகுவாக இருக்காதெனினும், இயாகமில்லாத மூளையின் பகுதியொன்று திடீரென இயக்கம் கொள்ள இது உதவும்.
  14. பயணம் செய்யுங்கள். அது சுற்றுலாவாக இருந்தாலென்ன, அயலூருக்குச் சென்று வந்தாலென்ன பாதைகளைத் தீர்மானிப்பது முதல் அவற்றினூடு பயணம் செய்வதுவரை அது உங்களின் மூளைக்கு வேலை தருகிறது. லண்டன் நகரில் பணி புரியும் டாக்சி சாரதிகளுக்கு மூளையின் அளவு பெரிதெநக் கண்டறிந்திருக்கிறார்கள். அவர்கள் தங்கள் பல பயணங்களுக்கான தகவல்களைச் சேமித்து வைக்கப் பெரிய மூளைகள் தேவைப்படுகின்றது. 
  15. தினமும் கடவுளைத் தொழுகை செய்துவாருங்கள். தினமும் கடவுளை வணங்கும்போது உடலின் நோயெதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது. வழக்கமாகத் தொழுகையை மேற்கொள்பவர்கள் நீண்ட ஆயுளைக் கொண்டவர்களாகவும், மகிழ்ச்சியோடும் அரோக்கியத்தோடும் இருப்பவர்களாகவும் அறியப்பட்டுள்ளது.
  16. தியானம் செய்யப் பழகுங்கள். தியானம் செய்வதன் மூலம் தினமும் ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைக்கலாம்.
  17. போதுமான அளவுக்குத் தூங்குங்கள். தடைப்படும் தூக்கத்துக்கும் மறதிநோய்க்கும் தொடர்புள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
  18. ஒமேகா-3 கொழுப்பமிலத்தைக் கொண்ட உணவுகளை அதிகம் சாப்பிடுங்கள். (Salmon, sardines, tuna, ocean trout, mackerel or herring). வால்நட் (இதில் மீனை விட அதிகம் ஒமேகா-3 இருக்கிறது), ஃபிளக்சீட் எண்ணை, மீன் ஈரல் எண்ணை, வால்நட் எண்ணை ஆகியனவும் ஒமெகா-3 அதிகமுள்ள உணவு வகைகள்.
  19. அதிகம் பழஙகள், மரக்கறி வகைகளைச் சாப்பிடுங்கள். மூளையின் கலங்களை அழிக்கும் ஃபிறீ றடிக்கல்ஸ் (free radicals) எனப்படும் பதார்த்தங்களைத் துப்புரவு செய்யும் ‘அன்ரி ஒக்ஸிடன்ற்ஸ்’ (antioxidants) பழங்கள், மரக்கறிவகைகளில் அதிகம் கிடைக்கிறது. 
  20. ஒரு நாளைக்கு ஒரு தடவையாவது குடும்பத்தரோடோ அல்லது நண்பர்களோடோ இருந்து உணவருந்துங்கள். சமூக ஊடாடலுடன் அருந்தும் உணவு நல்லதாக அமைவது வழக்கம். தனியேயோ அல்லது பயணம்செய்யும்போதோ அருந்தும் உணவு பொதுவாக ஆரோக்கியமாக இருப்பது குறைவு.

If you don’t use it you will lose it (பாவிக்காது போனால் அது உங்களை விட்டகன்றுவிடும்) என்றொரு ஆங்கிலப் பழமொழியொன்றுண்டு. அது நமது மூளைக்குத்தான் மிக மிகப் பொருந்தும்.

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போட்டி முடிவு திகதி 34வது ஆரம்பப் போட்டி நிறைவு பெறும் வெள்ளி 19 ஏப்ரல் 2024 பிரித்தானிய நேரம் இரவு 10 மணி.   இன்னும் 25 மணித்தியாலங்களே உள்ளன. இதுவரை ஆறு பேர்தான் போட்டியில் கலந்துகொண்டுள்ளனர். இன்னும் குறைந்தது நான்கு பேராவது விரைவில் கலந்துகொண்டால்தான் யாழ்களப் போட்டி நடக்கும்! 😉
    • Yarl IT hub தொடர்பாக நானும் ஒரு பதிவை சில மாதங்களுக்கு முன் பகிர்ந்து இருந்தேன் என மிகுந்த அவையடக்கத்துடன் தெரிவித்து கொள்கின்றேன் 😀    
    • "சில கிருஸ்துக்கு முன்னைய காலத்து நகைச்சுவைகள்"  உலகின் மிகப் பழமையான பதிவு செய்யப்பட்ட நகைச்சுவையானது கிமு 1900 க்கு முந்தையதும் மற்றும் கழிப்பறை சம்பந்தமான நகைச்சுவையானதும் ஆகும் .   அப்போது தெற்கு ஈராக்கில் வாழ்ந்த சுமேரியர்களின் கூற்று இது:  "பழங்காலத்திலிருந்தே நிகழாத ஒன்று; ஒரு இளம் பெண் தன் கணவனின் மடியில் வாய்வு [பேச்சு வழக்கில் குசு] விடுவதில்லை" "Something which has never occurred since time immemorial; a young woman did not fart in her husband's lap." வால்வர்ஹாம்ப்டன் பல்கலைக்கழகத்தால் [University of Wolverhampton] வெளியிடப்பட்ட உலகின் மிகப் பழமையான முதல் 10 கேலி [ஜோக்] பட்டியலில் இது தலைமை வகிக்கிறது. [Thursday July 31, 2008]  இந்த நகைச்சுவை உங்களுக்கு வேடிக்கையாக இருந்ததா? எனக்கு அப்படி இருக்கவில்லை.  ஒவ்வொரு சமூகத்திற்கும் நகைச்சுவைக்கான அணுகுமுறை உள்ளது. இந்த அணுகுமுறை அந்த சமூகத்தின் கலாச்சார மற்றும் பாரம்பரிய விழுமியங்களில் உள்வாங்கப் பட்டுள்ளது. ஒரு குழு மக்கள் வேடிக்கையாகக் கருதும் விடயம், உலகின் வேறு சில பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கும், வேறுபட்ட பின்னணியைக் கொண்டவர்களுக்கும் புண்படுத்தக் கூடியதாக இருக்கலாம்.  என்றாலும் இதையே பதியப்பட்ட முதல் பண்டைய நகைச்சுவையாக கருதப்பட்டுள்ளது.  ......................................................... ஒரு பகிடி அதேநேரம் ஒரு புதிர், பண்டைய கிரீஸ், கிமு 429. கிரேக்க நாடக ஆசிரியரான சோஃபோக்கிள்ஸின் "ஓடிபஸ் டைரனஸ்" இல், ["Oedipus Tyrannus," by Greek playwright Sophocles,] ஒரு பாத்திரம் பின்வரும் வரியைக் கொடுக்கிறது, இது ஓரளவு நகைச்சுவையாகவும்  ஆனால் மூளைக்கு வேலையாகவும் உள்ளது. கேள்வி:  எந்த மிருகம் காலையில் நான்கு கால்களிலும், மதியம் இரண்டு கால்களிலும், மாலையில் மூன்று கால்களிலும் நடக்கும்? What animal walks on four feet in the morning, two at noon and three at evening? பதில்: மனிதன்.  குழந்தையாக நான்கு கால்களிலும், மனிதனாக  இரண்டு கால்களிலும் முதுமையில் ஊன்றுகோள்களுடன் மூன்று கால்களிலும்." ............................................................ பண்டைய கிரீஸ், கிமு 800 ,  பெயரில் ஒரு சிலேடை. ஹோமரின் "தி ஒடிஸி" - 2,800 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது. அதில்,   "ஒடிஸியஸ் சைக்ளோப்ஸிடம் தனது உண்மையான பெயர் 'யாருமில்லை' ['Nobody']  என்று கூறுகிறார்." "Odysseus tells the Cyclops that his real name is 'Nobody.'" பின் ஒரு நேரம்,  "ஒடிஸியஸ் சைக்ளோப்ஸைத் தாக்கும்படி தனது ஆட்களுக்கு அறிவுறுத்தும் போது, சைக்ளோப்ஸ் [பயத்தில் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள, உதவி தேடி] கத்துகிறார்: 'உதவி, உதவி நோபோடி என்னைத் தாக்குகிறார் !' [ ஆனால் அது ஒருவரும் என்னைத் தாக்கவில்லை என கருத்துப் படுவதால்]   'Help, Nobody is attacking me!' உதவிக்கு யாரும் போகவில்லை. ....................................................... கிமு 1100 இல் பெயர் தெரியாத ஒருவரின், ஒரு வயதான திருமணமான ஜோடியைப் பற்றிய நகைச்சுவை ஒரு கண் பார்வையற்ற ஒரு பெண்ணுக்கு திருமணமாகி 20 வருடங்கள் ஆகிறது. அவன் வேறொரு பெண்ணைக் கண்டதும் / காதலித்ததும் அவளிடம்,  "நீ ஒரு கண்ணில் பார்வையற்றவள் என்று கூறப்படுவதால் நான் உன்னை விவாகரத்து செய்கிறேன்"  'I shall divorce you because you are said to be blind in one eye.' என்று கூறினான்.  அவள் அவனுக்குப் பதிலளித்தாள்:  "திருமணமாகி 20 வருடங்கள் கழித்து நீங்கள் அதைக் இன்றுதானா கண்டுபிடித்தீர்கள்?" 'Have you just discovered that after 20 years of marriage?'" தொகுத்தது [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • இப்போ பெரும்பாலான கடைகளில் தாச்சியில் கொத்த்தை - கொத்தாமல் கிண்டுகிறார்கள் அண்ணை. நான் ஒரு கொத்து அடிப்படைவாதி. தகரத்தில் கொத்தும் கடை தேடியே பல மணிகளை வீணடித்தேன்🤣
    • சுலபமான மாலை நேர சிற்றூண்டி... - உருளைக்கிழங்கு முட்டை  ப்ரை     
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.