Jump to content

முதுமை மறதி (Dementia)


Recommended Posts

H 

முதுமை மறதி (Dementia)

Dr. Kanaga Sena, MD

 

Neuroligist, Yale School of Medicine, Bridgeport, CT. USA

Dr.Sena_.png
டாக்டர் கனக சேனா MD

மறதி நோய் (Dementia) என்பது ஒருவரின் ஞாபகசக்தியில் ஏற்படும் குறைபாடு அல்லது தடுமாற்றங்களை அறிகுறிகளாகக் கொண்ட ஒரு நோய். இது பெரும்பாலும் முதுமையில் வருவதால் முதுமை மறதி எனவும் அழைக்கப்படுகிறது.

இந் நோயின் பொதுவான அறிகுறிகள், பெயர்களை மறந்து போதல், காட்சிப் புலனுணர்வில் (visual perception) தடுமாற்றம், பிரச்சினை தீர்க்கும் (problem solving) ஆற்றல் குறைவு, தன்நம்பிக்கைக் குறைபாடு, கவனக் குவிப்பில் (focus) குறைபாடு எனப் பலவகைப்படும்.

இம் மறதி நோய் முதியவர்களில் அதிகமாகக் காணப்பட்டாலும், எந்த வயதினரையும் பாதிக்கக் கூடியதே. இந் நோய் பற்றிய புள்ளி விபரங்கள் சில:

  • உலகில் 50 மில்லியன் மனிதர்களை இந் நோய் பீடித்திருக்கிறது
  • ஒவ்வொரு வருடமும் 10 மில்லியன் மனிதர்கள் இப்பட்டியலில் சேர்க்கப்படுகிறார்கள்
  • 60-70 வீதமானோருக்கு அல்சைமர் நோயே இதற்கு முதன்மைக் காரணியாக இருக்கிறது

மறதி நோயால் பாதிக்கப்பட்டவர்களுடன் அவர்களைப் பராமரிப்போர், குடும்பத்தினர், சமூகத்தினர், அரசாங்கம் என்று பலரும் இதனால் உடல், உள, சமூக, பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு உள்ளாகிறார்கள்.

download-6-3.jpg
காரணிகள்

முதுமை மறதி என்பது ஒரு குறிப்பிடத்தக்க நோய்க்குறியீடு (குறியீடுகள் மற்றும் அறிகுறிகளின் தொகுப்பு) இது மூளையின் தொழிற்பாட்டை பாதிக்கும் வேறு நோய்களின் வெளிப்பாடாகவே இருக்கின்றது. ஞாபகமறதி என்பது படிப்படியாக மூளையின் சிந்திக்கும் ஆற்றல், நினைவில் நிறுத்தல் போன்ற தொழிற்பாடுகள் குறைவடைந்து செல்வதைக் குறிக்கும். இந்த ஞாபக மறதிக்கு காரணமாக கூறப்படும் பொதுவான காரணிகள்.

  • அல்சைமர்ஸ் நோய்
  • மூளைக்கான குருதி வழங்கல் பாதிப்படைதல்
  • மூளைக் கட்டிகள்
  • தலையில் ஏற்படும் விபத்துக்கள்
  • தொற்றுக்கள்
  • நீண்ட கால, அதிகரித்த மதுபாவனை
  • அகஞ்சுரக்கும் தொகுதியின் நீர்குலைவு
  • விற்றமின் குறைபாடுகள்
நோய் அறிகுறிகள்

குறைந்தபட்சம் 6 மாத கால அளவுக்கு இந்த பாதிப்பு தொடர்ந்தால் மட்டுமே சோதனை மூலமாக இந்நோயைக் கண்டறிய முடியும். அறிகுறிகளில் சில:

பொதுவான அறிகுறிகள்:

  • தெரிந்த நபர்களின் பெயர், வாழ்விடம் மறந்து போதல்.
  • ஆரம்பத்தில் அண்மைக்கால சம்பவங்களே மறக்கும். பின் காலம் செல்லச் செல்ல பழைய சம்பவங்களும் மறந்து போகும்.
  • வயது மறந்து போகும்.
  • சொற்கள் மறந்து போகும்.
  • புதிய மனிதர்கள் அல்லது புதிய சூழலை சந்திக்கும்போது குழப்பம் ஏற்படும்.
  • நடத்தையில் மாற்றங்கள் ஏற்படும்.
    • அடிக்கடி கோபப்படல்
    • பொருத்தமற்ற பாலியல் வெளிப்பாடுகள்
    • தனிநல சுகாதார பழக்க வழக்கங்களை கடைப்பிடிக்க தவறுதல்
  • புதிய விடயங்களை அறிந்து கொள்வதில் சிரமம் ஏற்படல்.

இந்த அறிகுறிகள் மன அழுத்தம் போன்ற வேறு நோய்களின்போதும் ஏற்படலாம்.

நோயைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகள்

ஒய்வு பெற்ற பின்னர்தான் எங்களில் பலர் மறதி நோயைப்பற்றி யோசிப்பதுண்டு. அப்போது அது காலங்கடந்த ஒன்றாகிவிடும்.

மறதி நோயைத் தவிர்க்க விரும்பினால் நீங்கள் 30-40 வயதுகளிலோ அல்லது அதற்கு முதலிலேயோ உங்கள் மூளையைக் கொஞ்சம் பராமரிக்கப் பழகியிருக்க வேண்டுமெனெ நிபுணர்கள் கருதுகிறார்கள்.

“உங்கள் மூளையின் ஆரோக்கியத்திற்கு வாழ்வியல் முக்கிய பங்காற்றுகின்றதென பற்பல ஆய்வுகளை மேற்கோள் காட்டி, பிற்ஸ்பேர்க் பல்கலைக்கழக மருத்துவக் கல்விநிலையத்தின் இணைப் பேராசிரியரும், நரம்பு-உளவள நிபுணருமான டாக்டர் போல் நுஸ்போம் கூறுகிறார்.

மறதி நோயைத் தடுக்க என்ன செய்யலாம்? சமீபத்தில் புளோறிடா வின்ரர்பார்க் ஹெல்த் ஃபவுண்டேசனுக்கு வழங்கிய பேச்சொன்றின் போது டாக்டர் நுஸ்போம் 20 ஆலோசனைகளைக் குறிப்பிடுகிறார்.

  1. தொண்டர்கள் தேவைப்படும் சங்கங்களிலோ அல்லது அமைப்புக்களிலோ சேர்ந்துகொள்ளுங்கள். இதனால், நீங்கள் ஓய்வு பெறும்போது மற்றவர்களால் ஒதுக்கப்பட்டவராக அல்லாமல், நிறைய நண்பர்களால் சூழப்பட்டிருப்பீர்கள்.
  2. பொழுது போக்கு செயற்பாடுகளைக் கற்றுக்கொள்ளுஙகள். சிக்கலான, மூளையைப் பாவிக்கும் விளையாட்டுக்கள் பல மூளையைப் பலப்படுத்துகின்றன.
  3. நீங்கள் வழமையாகப் பாவிக்காத கையைப் பாவித்து எழுதக் கற்றுக்கொள்ளுஙகள். தினமும், பல தடவைகள் செய்து பழக்கத்தில் கொண்டு வாருங்கள். இது உங்கள் மூளையின் எதிர்ப்பக்கத்திலுள்ள நரம்புக்கலங்களை இயக்கத்தில் வைத்திருக்கச் செய்கிறது.
  4. நடனம் கற்றுக் கொள்ளுங்கள். 500 பேர்களில் மேற்கொண்ட ஆய்வில், நடனமாடக் கற்றுக்கொண்டவர்களில், அல்சைமர் வியாதி உட்படப், பல மறதி நோய்களின் தாக்கம் மிகக்குறைவாக இருந்தது கண்டறியப்பட்டது. வாரத்தில் 3 அல்லது 4 தடவைகள் நடனமாடுபவர்களில், வாரத்தில் ஒரு தடவை நடனமாடுபவர்களையோ அல்லது நடனமாடாதவர்களையோ விட 76 வீதம் மறதிநோயின் தாக்கம் குறைவாகவிருந்தது.
  5. தோட்டம் செய்யத் தொடங்குங்கள். நியூசீலந்தில் 1000 பேர்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம், ஒழுஙகாகத் தோட்டம் செய்பவர்களில் மறதிநோயின் பாதிப்புக் குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது. தோட்டம் செய்வது மன அழுத்தத்தைக் குறைப்பது மட்டுமல்லாது, தோட்டத்தை வடிவமைப்பதில் அவர்கள் தமது மூளையைத் தொடர்ந்தும் உபயோகப்படுத்துகிறார்கள்.
  6. நடவுங்கள். தினமும் நடப்பதன் மூலம் மூளைக்கு இரத்தச் சுற்றோட்டம் அதிகரிப்பதால் மறதி நோயின் பாதிப்பு குறைக்கப்படுகிறது. நடைமானி (pedometer) ஒன்றை வாங்கிக்கொள்வதன் மூலம் நாளொன்றுக்குப் 10,000 அடிகள் நடப்பதற்குப் பழகிக்கொள்ளலாம். பெரும்பாலான ‘ஸ்மார்ட் ஃபோன்களில்’ இதற்கான ‘அப்’ பை (app) இலவசமாகத் தரவிறக்கிக் கொள்ளலாம்.
  7. வாசிக்கப் பழகுங்கள். தினமும் வாசிக்கும்போது கிரகிக்கப்பட்ட தகவல்களைச் சேமிக்கவும், அவற்றைச் செயலார்றவுமென மூளையின் பல பகுதிகள் இயக்கம் பெறுகின்றன. அதே போல கற்பனையைப் பாவித்து எழுதுவதும் (பார்த்து எழுதுவதல்ல!) மூளையை இயக்க நிலையில் வைத்திருக்கிறது.
  8. பின்னப் பழகிக்கொள்ளுங்கள் (knitting). இரண்டு கைகளாலும் பின்னும்போது மூளையில் இரண்டு பக்கங்களும் இயக்க நிலையில் இருப்பது மட்டுமல்லாது அது மன அழுத்தத்தையும் குறைக்கிறது.
  9. புதிய மொழியொன்றைக் கற்றுக்கொள்ளுங்கள். அது வேற்று மொழியாகவோ அல்லது கைப் பாஷையாகவோ (sign language) இருக்கலாம், உங்கள் மூளை இரண்டு மொழிகளுக்கிடையே மறி மாறித் தாவிக்கொள்வதன் மூலம் மூளையின் பல பகுதிகள் இயக்க நிலையில் வைத்திருக்கப் படுகின்றது. இரண்டு மொழிகளைப் பயின்றவர்களில் அல்சைமர் நோயின் பாதிப்பு 4 வருடங்களால் குறைக்கப்படுவதாக இங்கிலாந்திலுள்ள ஆராய்ச்சியாளரொருவர் தெரிவிக்கின்றார். அத்தோடு, சிறுவயதிலேயே கைப்பாஷையைக் கற்றுக்கொள்ளும் ஒரு குழந்தையின் விவேகம் (IQ) பன்மடங்கு அதிகரிக்கிறது என இன்னுமொரு ஆய்வு கூறுகிறது. விவேகம் கூடியவர்களில் மறதிநோய் வருவது மிக மிகக் குறைவு.
  10. ‘ஸ்கிறபிள்’ (Scrabble), ‘ மொனோபொலி’ (Monopoly) போன்ற பலகை விளையாட்டுக்களை விளையாடுங்கள். இதன் போது உங்கள் மூளை இயக்கத்திலிருப்பது மட்டுமல்லாது நண்பர்களுடன் கூடி மகிழ்வீர்கள். கணனியில் விளையாடும் ‘சொலிற்றையர்’ (solitaire) போன்ற விளையாட்டுக்களும் மூளைக்கு நல்லது. இருப்பினும், சமூக ஊடாடலுடன் கூடிய விளையாட்டுக்களையே நுஸ்போம் ஊக்குவிக்கிறார்.
  11. வாழ்நாள் முழுவதும் எதையாவது கற்றுக்கொண்டே இருங்கள். கற்கை மூளையில் கட்டுமான மாற்றஙகளையும் (structural), இரசாயன மாற்றங்களையும் ஏற்படுத்துகிறது. அத்தோடு, கல்வி ஒருவரின் வாழ்நாளையும் அதிகரிக்கிறது. உயர் கல்விக்கான பட்டங்களைப் பெற்றவர்கள் நீண்ட ஆயுளைக் கொண்டிருக்கிறார்கள் என மூளை ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். இவர்களில் அல்சைமர் வியாதி வந்தாலும் அது அவர்களின் மிக முதிய வயதுகளிலேயே வருகிறது என ஆய்வாளர் கருதுகிறார்கள்.
  12. சங்கீதத்தைக் (கர்நாடக) கேளுங்கள். இசை மூளையின் பல பகுதிகளிடையேயும் புதிய தொடுப்புகளை ஏற்படுத்துகிறது. எந்த விதமான இசையும் நல்லதாகவிருந்தாலும், கர்நாடக இசை பல நல்ல விளைவுகளைத் தருவதாக ஆய்வாளர் கண்டறிந்துள்ளனர்.
  13. இசைக் கருவியொன்றைப் பழகிக்கொள்ளுங்கள். முதுமையில் பழகுவது அவ்வளவு இலகுவாக இருக்காதெனினும், இயாகமில்லாத மூளையின் பகுதியொன்று திடீரென இயக்கம் கொள்ள இது உதவும்.
  14. பயணம் செய்யுங்கள். அது சுற்றுலாவாக இருந்தாலென்ன, அயலூருக்குச் சென்று வந்தாலென்ன பாதைகளைத் தீர்மானிப்பது முதல் அவற்றினூடு பயணம் செய்வதுவரை அது உங்களின் மூளைக்கு வேலை தருகிறது. லண்டன் நகரில் பணி புரியும் டாக்சி சாரதிகளுக்கு மூளையின் அளவு பெரிதெநக் கண்டறிந்திருக்கிறார்கள். அவர்கள் தங்கள் பல பயணங்களுக்கான தகவல்களைச் சேமித்து வைக்கப் பெரிய மூளைகள் தேவைப்படுகின்றது.
  15. தினமும் கடவுளைத் தொழுகை செய்துவாருங்கள். தினமும் கடவுளை வணங்கும்போது உடலின் நோயெதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது. வழக்கமாகத் தொழுகையை மேற்கொள்பவர்கள் நீண்ட ஆயுளைக் கொண்டவர்களாகவும், மகிழ்ச்சியோடும் அரோக்கியத்தோடும் இருப்பவர்களாகவும் அறியப்பட்டுள்ளது.
  16. தியானம் செய்யப் பழகுங்கள். தியானம் செய்வதன் மூலம் தினமும் ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைக்கலாம்.
  17. போதுமான அளவுக்குத் தூங்குங்கள். தடைப்படும் தூக்கத்துக்கும் மறதிநோய்க்கும் தொடர்புள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
  18. ஒமேகா-3 கொழுப்பமிலத்தைக் கொண்ட உணவுகளை அதிகம் சாப்பிடுங்கள். (Salmon, sardines, tuna, ocean trout, mackerel or herring). வால்நட் (இதில் மீனை விட அதிகம் ஒமேகா-3 இருக்கிறது), ஃபிளக்சீட் எண்ணை, மீன் ஈரல் எண்ணை, வால்நட் எண்ணை ஆகியனவும் ஒமெகா-3 அதிகமுள்ள உணவு வகைகள்.
  19. அதிகம் பழஙகள், மரக்கறி வகைகளைச் சாப்பிடுங்கள். மூளையின் கலங்களை அழிக்கும் ஃபிறீ றடிக்கல்ஸ் (free radicals) எனப்படும் பதார்த்தங்களைத் துப்புரவு செய்யும் ‘அன்ரி ஒக்ஸிடன்ற்ஸ்’ (antioxidants) பழங்கள், மரக்கறிவகைகளில் அதிகம் கிடைக்கிறது.
  20. ஒரு நாளைக்கு ஒரு தடவையாவது குடும்பத்தரோடோ அல்லது நண்பர்களோடோ இருந்து உணவருந்துங்கள். சமூக ஊடாடலுடன் அருந்தும் உணவு நல்லதாக அமைவது வழக்கம். தனியேயோ அல்லது பயணம்செய்யும்போதோ அருந்தும் உணவு பொதுவாக ஆரோக்கியமாக இருப்பது குறைவு.

If you don’t use it you will lose it (பாவிக்காது போனால் அது உங்களை விட்டகன்றுவிடும்) என்றொரு ஆங்கிலப் பழமொழியொன்றுண்டு. அது நமது மூளைக்குத்தான் மிக மிகப் பொருந்தும்.

https://marumoli.com/முதுமை-மறதி-dementia/?fbclid=IwAR2w4q2j0l7oz8N64GXL_SNGLyJP8OR-sxGlVGCK5zrcz91OyakIhT9bOvI

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

மறதி நோயைத் தடுக்க என்ன செய்யலாம்? சமீபத்தில் புளோறிடா வின்ரர்பார்க் ஹெல்த் ஃபவுண்டேசனுக்கு வழங்கிய பேச்சொன்றின் போது டாக்டர் நுஸ்போம் 20 ஆலோசனைகளைக் குறிப்பிடுகிறார்.

  1. தொண்டர்கள் தேவைப்படும் சங்கங்களிலோ அல்லது அமைப்புக்களிலோ சேர்ந்துகொள்ளுங்கள். இதனால், நீங்கள் ஓய்வு பெறும்போது மற்றவர்களால் ஒதுக்கப்பட்டவராக அல்லாமல், நிறைய நண்பர்களால் சூழப்பட்டிருப்பீர்கள்.
  2. பொழுது போக்கு செயற்பாடுகளைக் கற்றுக்கொள்ளுஙகள். சிக்கலான, மூளையைப் பாவிக்கும் விளையாட்டுக்கள் பல மூளையைப் பலப்படுத்துகின்றன.
  3. நீங்கள் வழமையாகப் பாவிக்காத கையைப் பாவித்து எழுதக் கற்றுக்கொள்ளுஙகள். தினமும், பல தடவைகள் செய்து பழக்கத்தில் கொண்டு வாருங்கள். இது உங்கள் மூளையின் எதிர்ப்பக்கத்திலுள்ள நரம்புக்கலங்களை இயக்கத்தில் வைத்திருக்கச் செய்கிறது.
  4. நடனம் கற்றுக் கொள்ளுங்கள். 500 பேர்களில் மேற்கொண்ட ஆய்வில், நடனமாடக் கற்றுக்கொண்டவர்களில், அல்சைமர் வியாதி உட்படப், பல மறதி நோய்களின் தாக்கம் மிகக்குறைவாக இருந்தது கண்டறியப்பட்டது. வாரத்தில் 3 அல்லது 4 தடவைகள் நடனமாடுபவர்களில், வாரத்தில் ஒரு தடவை நடனமாடுபவர்களையோ அல்லது நடனமாடாதவர்களையோ விட 76 வீதம் மறதிநோயின் தாக்கம் குறைவாகவிருந்தது.
  5. தோட்டம் செய்யத் தொடங்குங்கள். நியூசீலந்தில் 1000 பேர்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம், ஒழுஙகாகத் தோட்டம் செய்பவர்களில் மறதிநோயின் பாதிப்புக் குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது. தோட்டம் செய்வது மன அழுத்தத்தைக் குறைப்பது மட்டுமல்லாது, தோட்டத்தை வடிவமைப்பதில் அவர்கள் தமது மூளையைத் தொடர்ந்தும் உபயோகப்படுத்துகிறார்கள்.
  6. நடவுங்கள். தினமும் நடப்பதன் மூலம் மூளைக்கு இரத்தச் சுற்றோட்டம் அதிகரிப்பதால் மறதி நோயின் பாதிப்பு குறைக்கப்படுகிறது. நடைமானி (pedometer) ஒன்றை வாங்கிக்கொள்வதன் மூலம் நாளொன்றுக்குப் 10,000 அடிகள் நடப்பதற்குப் பழகிக்கொள்ளலாம். பெரும்பாலான ‘ஸ்மார்ட் ஃபோன்களில்’ இதற்கான ‘அப்’ பை (app) இலவசமாகத் தரவிறக்கிக் கொள்ளலாம்.
  7. வாசிக்கப் பழகுங்கள். தினமும் வாசிக்கும்போது கிரகிக்கப்பட்ட தகவல்களைச் சேமிக்கவும், அவற்றைச் செயலார்றவுமென மூளையின் பல பகுதிகள் இயக்கம் பெறுகின்றன. அதே போல கற்பனையைப் பாவித்து எழுதுவதும் (பார்த்து எழுதுவதல்ல!) மூளையை இயக்க நிலையில் வைத்திருக்கிறது.
  8. பின்னப் பழகிக்கொள்ளுங்கள் (knitting). இரண்டு கைகளாலும் பின்னும்போது மூளையில் இரண்டு பக்கங்களும் இயக்க நிலையில் இருப்பது மட்டுமல்லாது அது மன அழுத்தத்தையும் குறைக்கிறது.
  9. புதிய மொழியொன்றைக் கற்றுக்கொள்ளுங்கள். அது வேற்று மொழியாகவோ அல்லது கைப் பாஷையாகவோ (sign language) இருக்கலாம், உங்கள் மூளை இரண்டு மொழிகளுக்கிடையே மறி மாறித் தாவிக்கொள்வதன் மூலம் மூளையின் பல பகுதிகள் இயக்க நிலையில் வைத்திருக்கப் படுகின்றது. இரண்டு மொழிகளைப் பயின்றவர்களில் அல்சைமர் நோயின் பாதிப்பு 4 வருடங்களால் குறைக்கப்படுவதாக இங்கிலாந்திலுள்ள ஆராய்ச்சியாளரொருவர் தெரிவிக்கின்றார். அத்தோடு, சிறுவயதிலேயே கைப்பாஷையைக் கற்றுக்கொள்ளும் ஒரு குழந்தையின் விவேகம் (IQ) பன்மடங்கு அதிகரிக்கிறது என இன்னுமொரு ஆய்வு கூறுகிறது. விவேகம் கூடியவர்களில் மறதிநோய் வருவது மிக மிகக் குறைவு.
  10. ‘ஸ்கிறபிள்’ (Scrabble), ‘ மொனோபொலி’ (Monopoly) போன்ற பலகை விளையாட்டுக்களை விளையாடுங்கள். இதன் போது உங்கள் மூளை இயக்கத்திலிருப்பது மட்டுமல்லாது நண்பர்களுடன் கூடி மகிழ்வீர்கள். கணனியில் விளையாடும் ‘சொலிற்றையர்’ (solitaire) போன்ற விளையாட்டுக்களும் மூளைக்கு நல்லது. இருப்பினும், சமூக ஊடாடலுடன் கூடிய விளையாட்டுக்களையே நுஸ்போம் ஊக்குவிக்கிறார்.
  11. வாழ்நாள் முழுவதும் எதையாவது கற்றுக்கொண்டே இருங்கள். கற்கை மூளையில் கட்டுமான மாற்றஙகளையும் (structural), இரசாயன மாற்றங்களையும் ஏற்படுத்துகிறது. அத்தோடு, கல்வி ஒருவரின் வாழ்நாளையும் அதிகரிக்கிறது. உயர் கல்விக்கான பட்டங்களைப் பெற்றவர்கள் நீண்ட ஆயுளைக் கொண்டிருக்கிறார்கள் என மூளை ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். இவர்களில் அல்சைமர் வியாதி வந்தாலும் அது அவர்களின் மிக முதிய வயதுகளிலேயே வருகிறது என ஆய்வாளர் கருதுகிறார்கள்.
  12. சங்கீதத்தைக் (கர்நாடக) கேளுங்கள். இசை மூளையின் பல பகுதிகளிடையேயும் புதிய தொடுப்புகளை ஏற்படுத்துகிறது. எந்த விதமான இசையும் நல்லதாகவிருந்தாலும், கர்நாடக இசை பல நல்ல விளைவுகளைத் தருவதாக ஆய்வாளர் கண்டறிந்துள்ளனர்.
  13. இசைக் கருவியொன்றைப் பழகிக்கொள்ளுங்கள். முதுமையில் பழகுவது அவ்வளவு இலகுவாக இருக்காதெனினும், இயாகமில்லாத மூளையின் பகுதியொன்று திடீரென இயக்கம் கொள்ள இது உதவும்.
  14. பயணம் செய்யுங்கள். அது சுற்றுலாவாக இருந்தாலென்ன, அயலூருக்குச் சென்று வந்தாலென்ன பாதைகளைத் தீர்மானிப்பது முதல் அவற்றினூடு பயணம் செய்வதுவரை அது உங்களின் மூளைக்கு வேலை தருகிறது. லண்டன் நகரில் பணி புரியும் டாக்சி சாரதிகளுக்கு மூளையின் அளவு பெரிதெநக் கண்டறிந்திருக்கிறார்கள். அவர்கள் தங்கள் பல பயணங்களுக்கான தகவல்களைச் சேமித்து வைக்கப் பெரிய மூளைகள் தேவைப்படுகின்றது.
  15. தினமும் கடவுளைத் தொழுகை செய்துவாருங்கள். தினமும் கடவுளை வணங்கும்போது உடலின் நோயெதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது. வழக்கமாகத் தொழுகையை மேற்கொள்பவர்கள் நீண்ட ஆயுளைக் கொண்டவர்களாகவும், மகிழ்ச்சியோடும் அரோக்கியத்தோடும் இருப்பவர்களாகவும் அறியப்பட்டுள்ளது.
  16. தியானம் செய்யப் பழகுங்கள். தியானம் செய்வதன் மூலம் தினமும் ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைக்கலாம்.
  17. போதுமான அளவுக்குத் தூங்குங்கள். தடைப்படும் தூக்கத்துக்கும் மறதிநோய்க்கும் தொடர்புள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
  18. ஒமேகா-3 கொழுப்பமிலத்தைக் கொண்ட உணவுகளை அதிகம் சாப்பிடுங்கள். (Salmon, sardines, tuna, ocean trout, mackerel or herring). வால்நட் (இதில் மீனை விட அதிகம் ஒமேகா-3 இருக்கிறது), ஃபிளக்சீட் எண்ணை, மீன் ஈரல் எண்ணை, வால்நட் எண்ணை ஆகியனவும் ஒமெகா-3 அதிகமுள்ள உணவு வகைகள்.
  19. அதிகம் பழஙகள், மரக்கறி வகைகளைச் சாப்பிடுங்கள். மூளையின் கலங்களை அழிக்கும் ஃபிறீ றடிக்கல்ஸ் (free radicals) எனப்படும் பதார்த்தங்களைத் துப்புரவு செய்யும் ‘அன்ரி ஒக்ஸிடன்ற்ஸ்’ (antioxidants) பழங்கள், மரக்கறிவகைகளில் அதிகம் கிடைக்கிறது.
  20. ஒரு நாளைக்கு ஒரு தடவையாவது குடும்பத்தரோடோ அல்லது நண்பர்களோடோ இருந்து உணவருந்துங்கள். சமூக ஊடாடலுடன் அருந்தும் உணவு நல்லதாக அமைவது வழக்கம். தனியேயோ அல்லது பயணம்செய்யும்போதோ அருந்தும் உணவு பொதுவாக ஆரோக்கியமாக இருப்பது குறைவு.

21. தினசரி காலை மதியம் மாலை தவறாமல் யாழ்களத்தை பார்க்க வேண்டும். குறைந்த பட்சம்  ஒரு கருத்தாவது எழுத வேண்டும். அது  குண்டக்க மண்டக்க கருத்தாகவும் இருக்கலாம் அல்லது  யாரையாவது திட்டியும் எழுதலாம்.  :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

தினமும் கடவுளைத் தொழுகை செய்துவாருங்கள். தினமும் கடவுளை வணங்கும்போது உடலின் நோயெதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது. வழக்கமாகத் தொழுகையை மேற்கொள்பவர்கள் நீண்ட ஆயுளைக் கொண்டவர்களாகவும், மகிழ்ச்சியோடும் அரோக்கியத்தோடும் இருப்பவர்களாகவும் அறியப்பட்டுள்ளது.

இது உண்மை என்றால் இலங்கை தமிழர்கள், முஸ்லிம்கள் தான் நீண்ட ஆயுளைக் கொண்டவர்களாகவும் மகிழ்ச்சியோடும் அரோக்கியத்தோடும் இருப்பவர்களா இருக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ந‌ல்ல‌ ஒரு ப‌திவு நுனா அண்ணா , இணைப்புக்கு ந‌ன்றி 🤞

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/27/2019 at 5:33 PM, குமாரசாமி said:

21. தினசரி காலை மதியம் மாலை தவறாமல் யாழ்களத்தை பார்க்க வேண்டும். குறைந்த பட்சம்  ஒரு கருத்தாவது எழுத வேண்டும். அது  குண்டக்க மண்டக்க கருத்தாகவும் இருக்கலாம் அல்லது  யாரையாவது திட்டியும் எழுதலாம்.  :cool:

குண்டக்க மண்டக்க எழுதினால்...... உண்மையிலேயே மூளை நரம்புகள் துரிதமாகவும் அபரிதமாகவும் வேலை செய்யும்....😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, வல்வை சகாறா said:

குண்டக்க மண்டக்க எழுதினால்...... உண்மையிலேயே மூளை நரம்புகள் துரிதமாகவும் அபரிதமாகவும் வேலை செய்யும்....😉

முயற்சி செய்து பாருங்கள் வ.சகாறா. இனியாவது வேலை செய்கிறதா எனப் பார்ப்போம்😌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/28/2019 at 12:13 AM, பையன்26 said:

ந‌ல்ல‌ ஒரு ப‌திவு நுனா அண்ணா , இணைப்புக்கு ந‌ன்றி 🤞

பையா .....நானே இதைபார்த்திட்டு தலை தெறிக்க  வெறித்தனமா ஓடுறன், நீங்கள் பச்சை வேற போட்டுட்டு நிக்கிறீங்கள்....என்ன ஆரம்பமா.....!  😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, suvy said:

பையா .....நானே இதைபார்த்திட்டு தலை தெறிக்க  வெறித்தனமா ஓடுறன், நீங்கள் பச்சை வேற போட்டுட்டு நிக்கிறீங்கள்....என்ன ஆரம்பமா.....!  😂

மூத்த‌வ‌ரே , என்ர‌ த‌ங்கைச்சி அவ‌ளுக்கு இப்ப‌ தான் 28வ‌ய‌து ஞாவ‌க‌ ம‌ற‌தி கூட‌ , அண்ண‌ன் என்ற‌ முறையில் என‌க்கு எல்லா உண்மைக‌ளும் சொல்லுவா , நுனா அண்ணா இணைத்த‌ ப‌திவுக்கும் நான் ச‌ந்திச்ச‌ உற‌வுக‌ளின் வாழ்வையும் பார்க்கும் போது இந்த‌ ப‌திவு ச‌ரி என்று ப‌டுது மூத்த‌வ‌ரே ,

கொஞ்ச‌க் கால‌ம் போக‌ உங்க‌ளுக்கு என‌க்கு ஏன் யாழில் உள்ள‌ ப‌ல‌ருக்கும் உந்த‌ நிலை வ‌ரும் ஹி ஹி /

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

https://marumoli.com/முதுமை-மறதி-dementia/

 

தமிழர் நலன் விரும்பியும் நிறையவே தொண்டுகள் செய்பவருமான டாக்ரர் சேனாதிராஜா அவர்களின் கட்டுரை.

மறதி நோய் (Dementia) என்பது ஒருவரின் ஞாபகசக்தியில் ஏற்படும் குறைபாடு அல்லது தடுமாற்றங்களை அறிகுறிகளாகக் கொண்ட ஒரு நோய். இது பெரும்பாலும் முதுமையில் வருவதால் முதுமை மறதி எனவும் அழைக்கப்படுகிறது.

இந் நோயின் பொதுவான அறிகுறிகள், பெயர்களை மறந்து போதல், காட்சிப் புலனுணர்வில் (visual perception) தடுமாற்றம், பிரச்சினை தீர்க்கும் (problem solving) ஆற்றல் குறைவு, தன்நம்பிக்கைக் குறைபாடு, கவனக் குவிப்பில் (focus) குறைபாடு எனப் பலவகைப்படும்.

இம் மறதி நோய் முதியவர்களில் அதிகமாகக் காணப்பட்டாலும், எந்த வயதினரையும் பாதிக்கக் கூடியதே. இந் நோய் பற்றிய புள்ளி விபரங்கள் சில:

  • உலகில் 50 மில்லியன் மனிதர்களை இந் நோய் பீடித்திருக்கிறது
  • ஒவ்வொரு வருடமும் 10 மில்லியன் மனிதர்கள் இப்பட்டியலில் சேர்க்கப்படுகிறார்கள்
  • 60-70 வீதமானோருக்கு அல்சைமர் நோயே இதற்கு முதன்மைக் காரணியாக இருக்கிறது

மறதி நோயால் பாதிக்கப்பட்டவர்களுடன் அவர்களைப் பராமரிப்போர், குடும்பத்தினர், சமூகத்தினர், அரசாங்கம் என்று பலரும் இதனால் உடல், உள, சமூக, பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு உள்ளாகிறார்கள்.

download-6-3.jpg
காரணிகள்

முதுமை மறதி என்பது ஒரு குறிப்பிடத்தக்க நோய்க்குறியீடு (குறியீடுகள் மற்றும் அறிகுறிகளின் தொகுப்பு) இது மூளையின் தொழிற்பாட்டை பாதிக்கும் வேறு நோய்களின் வெளிப்பாடாகவே இருக்கின்றது. ஞாபகமறதி என்பது படிப்படியாக மூளையின் சிந்திக்கும் ஆற்றல், நினைவில் நிறுத்தல் போன்ற தொழிற்பாடுகள் குறைவடைந்து செல்வதைக் குறிக்கும். இந்த ஞாபக மறதிக்கு காரணமாக கூறப்படும் பொதுவான காரணிகள்.

  • அல்சைமர்ஸ் நோய்
  • மூளைக்கான குருதி வழங்கல் பாதிப்படைதல்
  • மூளைக் கட்டிகள்
  • தலையில் ஏற்படும் விபத்துக்கள்
  • தொற்றுக்கள்
  • நீண்ட கால, அதிகரித்த மதுபாவனை
  • அகஞ்சுரக்கும் தொகுதியின் நீர்குலைவு
  • விற்றமின் குறைபாடுகள்

நோய் அறிகுறிகள்

குறைந்தபட்சம் 6 மாத கால அளவுக்கு இந்த பாதிப்பு தொடர்ந்தால் மட்டுமே சோதனை மூலமாக இந்நோயைக் கண்டறிய முடியும். அறிகுறிகளில் சில:

பொதுவான அறிகுறிகள்:

  • தெரிந்த நபர்களின் பெயர், வாழ்விடம் மறந்து போதல்.
  • ஆரம்பத்தில் அண்மைக்கால சம்பவங்களே மறக்கும். பின் காலம் செல்லச் செல்ல பழைய சம்பவங்களும் மறந்து போகும்.
  • வயது மறந்து போகும்.
  • சொற்கள் மறந்து போகும்.
  • புதிய மனிதர்கள் அல்லது புதிய சூழலை சந்திக்கும்போது குழப்பம் ஏற்படும்.
  • நடத்தையில் மாற்றங்கள் ஏற்படும்.
    • அடிக்கடி கோபப்படல்
    • பொருத்தமற்ற பாலியல் வெளிப்பாடுகள்
    • தனிநல சுகாதார பழக்க வழக்கங்களை கடைப்பிடிக்க தவறுதல்
  • புதிய விடயங்களை அறிந்து கொள்வதில் சிரமம் ஏற்படல்.

இந்த அறிகுறிகள் மன அழுத்தம் போன்ற வேறு நோய்களின்போதும் ஏற்படலாம்.

நோயைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகள்

ஒய்வு பெற்ற பின்னர்தான் எங்களில் பலர் மறதி நோயைப்பற்றி யோசிப்பதுண்டு. அப்போது அது காலங்கடந்த ஒன்றாகிவிடும்.

மறதி நோயைத் தவிர்க்க விரும்பினால் நீங்கள் 30-40 வயதுகளிலோ அல்லது அதற்கு முதலிலேயோ உங்கள் மூளையைக் கொஞ்சம் பராமரிக்கப் பழகியிருக்க வேண்டுமெனெ நிபுணர்கள் கருதுகிறார்கள். 

“உங்கள் மூளையின் ஆரோக்கியத்திற்கு வாழ்வியல் முக்கிய பங்காற்றுகின்றதென பற்பல ஆய்வுகளை மேற்கோள் காட்டி, பிற்ஸ்பேர்க் பல்கலைக்கழக மருத்துவக் கல்விநிலையத்தின் இணைப் பேராசிரியரும், நரம்பு-உளவள நிபுணருமான டாக்டர் போல் நுஸ்போம் கூறுகிறார்.

மறதி நோயைத் தடுக்க என்ன செய்யலாம்? சமீபத்தில் புளோறிடா வின்ரர்பார்க் ஹெல்த் ஃபவுண்டேசனுக்கு வழங்கிய பேச்சொன்றின் போது டாக்டர் நுஸ்போம் 20 ஆலோசனைகளைக் குறிப்பிடுகிறார்.

  1. தொண்டர்கள் தேவைப்படும் சங்கங்களிலோ அல்லது அமைப்புக்களிலோ சேர்ந்துகொள்ளுங்கள். இதனால், நீங்கள் ஓய்வு பெறும்போது மற்றவர்களால் ஒதுக்கப்பட்டவராக அல்லாமல், நிறைய நண்பர்களால் சூழப்பட்டிருப்பீர்கள்.
  2. பொழுது போக்கு செயற்பாடுகளைக் கற்றுக்கொள்ளுஙகள். சிக்கலான, மூளையைப் பாவிக்கும் விளையாட்டுக்கள் பல மூளையைப் பலப்படுத்துகின்றன.
  3. நீங்கள் வழமையாகப் பாவிக்காத கையைப் பாவித்து எழுதக் கற்றுக்கொள்ளுஙகள். தினமும், பல தடவைகள் செய்து பழக்கத்தில் கொண்டு வாருங்கள். இது உங்கள் மூளையின் எதிர்ப்பக்கத்திலுள்ள நரம்புக்கலங்களை இயக்கத்தில் வைத்திருக்கச் செய்கிறது.
  4. நடனம் கற்றுக் கொள்ளுங்கள். 500 பேர்களில் மேற்கொண்ட ஆய்வில், நடனமாடக் கற்றுக்கொண்டவர்களில், அல்சைமர் வியாதி உட்படப், பல மறதி நோய்களின் தாக்கம் மிகக்குறைவாக இருந்தது கண்டறியப்பட்டது. வாரத்தில் 3 அல்லது 4 தடவைகள் நடனமாடுபவர்களில், வாரத்தில் ஒரு தடவை நடனமாடுபவர்களையோ அல்லது நடனமாடாதவர்களையோ விட 76 வீதம் மறதிநோயின் தாக்கம் குறைவாகவிருந்தது. 
  5. தோட்டம் செய்யத் தொடங்குங்கள். நியூசீலந்தில் 1000 பேர்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம், ஒழுஙகாகத் தோட்டம் செய்பவர்களில் மறதிநோயின் பாதிப்புக் குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது. தோட்டம் செய்வது மன அழுத்தத்தைக் குறைப்பது மட்டுமல்லாது, தோட்டத்தை வடிவமைப்பதில் அவர்கள் தமது மூளையைத் தொடர்ந்தும் உபயோகப்படுத்துகிறார்கள்.
  6. நடவுங்கள். தினமும் நடப்பதன் மூலம் மூளைக்கு இரத்தச் சுற்றோட்டம் அதிகரிப்பதால் மறதி நோயின் பாதிப்பு குறைக்கப்படுகிறது. நடைமானி (pedometer) ஒன்றை வாங்கிக்கொள்வதன் மூலம் நாளொன்றுக்குப் 10,000 அடிகள் நடப்பதற்குப் பழகிக்கொள்ளலாம். பெரும்பாலான ‘ஸ்மார்ட் ஃபோன்களில்’ இதற்கான ‘அப்’ பை (app) இலவசமாகத் தரவிறக்கிக் கொள்ளலாம்.
  7. வாசிக்கப் பழகுங்கள். தினமும் வாசிக்கும்போது கிரகிக்கப்பட்ட தகவல்களைச் சேமிக்கவும், அவற்றைச் செயலார்றவுமென மூளையின் பல பகுதிகள் இயக்கம் பெறுகின்றன. அதே போல கற்பனையைப் பாவித்து எழுதுவதும் (பார்த்து எழுதுவதல்ல!) மூளையை இயக்க நிலையில் வைத்திருக்கிறது.
  8. பின்னப் பழகிக்கொள்ளுங்கள் (knitting). இரண்டு கைகளாலும் பின்னும்போது மூளையில் இரண்டு பக்கங்களும் இயக்க நிலையில் இருப்பது மட்டுமல்லாது அது மன அழுத்தத்தையும் குறைக்கிறது. 
  9. புதிய மொழியொன்றைக் கற்றுக்கொள்ளுங்கள். அது வேற்று மொழியாகவோ அல்லது கைப் பாஷையாகவோ (sign language) இருக்கலாம், உங்கள் மூளை இரண்டு மொழிகளுக்கிடையே மறி மாறித் தாவிக்கொள்வதன் மூலம் மூளையின் பல பகுதிகள் இயக்க நிலையில் வைத்திருக்கப் படுகின்றது. இரண்டு மொழிகளைப் பயின்றவர்களில் அல்சைமர் நோயின் பாதிப்பு 4 வருடங்களால் குறைக்கப்படுவதாக இங்கிலாந்திலுள்ள ஆராய்ச்சியாளரொருவர் தெரிவிக்கின்றார். அத்தோடு, சிறுவயதிலேயே கைப்பாஷையைக் கற்றுக்கொள்ளும் ஒரு குழந்தையின் விவேகம் (IQ) பன்மடங்கு அதிகரிக்கிறது என இன்னுமொரு ஆய்வு கூறுகிறது. விவேகம் கூடியவர்களில் மறதிநோய் வருவது மிக மிகக் குறைவு.
  10. ‘ஸ்கிறபிள்’ (Scrabble), ‘ மொனோபொலி’ (Monopoly) போன்ற பலகை விளையாட்டுக்களை விளையாடுங்கள். இதன் போது உங்கள் மூளை இயக்கத்திலிருப்பது மட்டுமல்லாது நண்பர்களுடன் கூடி மகிழ்வீர்கள். கணனியில் விளையாடும் ‘சொலிற்றையர்’ (solitaire) போன்ற விளையாட்டுக்களும் மூளைக்கு நல்லது. இருப்பினும், சமூக ஊடாடலுடன் கூடிய விளையாட்டுக்களையே நுஸ்போம் ஊக்குவிக்கிறார்.
  11. வாழ்நாள் முழுவதும் எதையாவது கற்றுக்கொண்டே இருங்கள். கற்கை மூளையில் கட்டுமான மாற்றஙகளையும் (structural), இரசாயன மாற்றங்களையும் ஏற்படுத்துகிறது. அத்தோடு, கல்வி ஒருவரின் வாழ்நாளையும் அதிகரிக்கிறது. உயர் கல்விக்கான பட்டங்களைப் பெற்றவர்கள் நீண்ட ஆயுளைக் கொண்டிருக்கிறார்கள் என மூளை ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். இவர்களில் அல்சைமர் வியாதி வந்தாலும் அது அவர்களின் மிக முதிய வயதுகளிலேயே வருகிறது என ஆய்வாளர் கருதுகிறார்கள்.
  12. சங்கீதத்தைக் (கர்நாடக) கேளுங்கள். இசை மூளையின் பல பகுதிகளிடையேயும் புதிய தொடுப்புகளை ஏற்படுத்துகிறது. எந்த விதமான இசையும் நல்லதாகவிருந்தாலும், கர்நாடக இசை பல நல்ல விளைவுகளைத் தருவதாக ஆய்வாளர் கண்டறிந்துள்ளனர்.
  13. இசைக் கருவியொன்றைப் பழகிக்கொள்ளுங்கள். முதுமையில் பழகுவது அவ்வளவு இலகுவாக இருக்காதெனினும், இயாகமில்லாத மூளையின் பகுதியொன்று திடீரென இயக்கம் கொள்ள இது உதவும்.
  14. பயணம் செய்யுங்கள். அது சுற்றுலாவாக இருந்தாலென்ன, அயலூருக்குச் சென்று வந்தாலென்ன பாதைகளைத் தீர்மானிப்பது முதல் அவற்றினூடு பயணம் செய்வதுவரை அது உங்களின் மூளைக்கு வேலை தருகிறது. லண்டன் நகரில் பணி புரியும் டாக்சி சாரதிகளுக்கு மூளையின் அளவு பெரிதெநக் கண்டறிந்திருக்கிறார்கள். அவர்கள் தங்கள் பல பயணங்களுக்கான தகவல்களைச் சேமித்து வைக்கப் பெரிய மூளைகள் தேவைப்படுகின்றது. 
  15. தினமும் கடவுளைத் தொழுகை செய்துவாருங்கள். தினமும் கடவுளை வணங்கும்போது உடலின் நோயெதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது. வழக்கமாகத் தொழுகையை மேற்கொள்பவர்கள் நீண்ட ஆயுளைக் கொண்டவர்களாகவும், மகிழ்ச்சியோடும் அரோக்கியத்தோடும் இருப்பவர்களாகவும் அறியப்பட்டுள்ளது.
  16. தியானம் செய்யப் பழகுங்கள். தியானம் செய்வதன் மூலம் தினமும் ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைக்கலாம்.
  17. போதுமான அளவுக்குத் தூங்குங்கள். தடைப்படும் தூக்கத்துக்கும் மறதிநோய்க்கும் தொடர்புள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
  18. ஒமேகா-3 கொழுப்பமிலத்தைக் கொண்ட உணவுகளை அதிகம் சாப்பிடுங்கள். (Salmon, sardines, tuna, ocean trout, mackerel or herring). வால்நட் (இதில் மீனை விட அதிகம் ஒமேகா-3 இருக்கிறது), ஃபிளக்சீட் எண்ணை, மீன் ஈரல் எண்ணை, வால்நட் எண்ணை ஆகியனவும் ஒமெகா-3 அதிகமுள்ள உணவு வகைகள்.
  19. அதிகம் பழஙகள், மரக்கறி வகைகளைச் சாப்பிடுங்கள். மூளையின் கலங்களை அழிக்கும் ஃபிறீ றடிக்கல்ஸ் (free radicals) எனப்படும் பதார்த்தங்களைத் துப்புரவு செய்யும் ‘அன்ரி ஒக்ஸிடன்ற்ஸ்’ (antioxidants) பழங்கள், மரக்கறிவகைகளில் அதிகம் கிடைக்கிறது. 
  20. ஒரு நாளைக்கு ஒரு தடவையாவது குடும்பத்தரோடோ அல்லது நண்பர்களோடோ இருந்து உணவருந்துங்கள். சமூக ஊடாடலுடன் அருந்தும் உணவு நல்லதாக அமைவது வழக்கம். தனியேயோ அல்லது பயணம்செய்யும்போதோ அருந்தும் உணவு பொதுவாக ஆரோக்கியமாக இருப்பது குறைவு.

If you don’t use it you will lose it (பாவிக்காது போனால் அது உங்களை விட்டகன்றுவிடும்) என்றொரு ஆங்கிலப் பழமொழியொன்றுண்டு. அது நமது மூளைக்குத்தான் மிக மிகப் பொருந்தும்.

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.