Jump to content

கல்லா பெட்டியில் கை வைக்கல.. மரக்கறி திருடிய திருடர்கள்.!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கல்லாப்பெட்டியில் 'கை' வைக்கல... வெங்காயத்தை திருடிய திருடர்கள்.. கடைக்காரர் கதறல்.!

onion223-1574925403.jpg

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் காய்கறி கடைக்குள் புகுந்த கொள்ளையர்கள் பணத்தை திருடாமல் வெங்காயத்தை திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியையும் வியப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் பெரிய வெங்காயத்தின் விலை 100 ரூபாய்க்கு மேல் விற்பனையாகிறது. சின்ன வெங்காயத்தின் விலை 150 ரூபாய்க்கு மேல் விற்பனையாகிறது. நிறைய இடங்களில் சின்ன வெங்காயம் கிடைப்பது இல்லை. இந்நிலையில் தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதுமே வெங்காய விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

கனமழை பெய்த காரணத்தால் கர்நாடகம், மகாராஷ்டிரா, ஆந்திரா உள்ளிட்ட வெங்காயம் அதிகம் விளையும் மாநிலங்களில விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இதுவரை இல்லாத அளவுக்கு வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளது

பொங்கல் வரை

அரசு வெங்காய தட்டுப்பாட்டை போக்க வெளிநாடுகளில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. எனினும் தற்போதைய நிலையில் பொங்கல் பிறக்கும் வரை வெங்காய விலை பெரிய அளவில் குறைய வாய்ப்பு இல்லை என்று சொல்கிறார்கள்.

மேற்கு வங்கம்

இந்நிலையில் மேற்குவங்கத்தின் கொல்கத்தாவில் காய்கறி கடை ஒன்றில் புகுந்த மர்ம நபர்கள் வெங்காய மூட்டைகளை திருடிச் சென்றுள்ளார்கள்.. அக்சயா தாஸ் என்பவருக்கு சொந்தமான சுடஹட்டா பகுதியில் காய்கறிகளை மொத்தமாக விற்பனை செய்யும் கடை செயல்பட்டு வருகிறது

 பணம் திருடவில்லை

கடந்த செவ்வாய்க்கிழமை காலை வழக்கம் போல் கடையைத் திறக்க சென்ற போது, கடையில் பூட்டை திருடர்கள் கொள்ளையடித்தை கண்டு அக்சயா தாஸ் அதிர்ச்சி அடைந்தார். நேராக கல்லாப்பெட்டியை திறந்த பார்த்த போது அதில் உள்ள பணம் அப்படியே இருந்திருக்கிறது.

50 ஆயிரம் மதிப்பு

ஆனால் கடையில் இருந்த ரூ.50ஆயிரம் மதிப்பிலான வெங்காயத்தை மர்ம நபர்கள் திருடியிருக்கிறார்கள். மேலும் இஞ்சி மற்றும் உள்ளி ஆகியவற்றையும் அதிக அளவு திருடியிருக்கிறார்கள். இதனால் மிகுந்த வேதனை அடைந்த கடைக்காரர் தாஸ் போலீசில் புகார் அளித்தார். இதன் பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

https://tamil.oneindia.com/news/india/thieves-steal-onions-from-shop-leave-cash-behind-in-west-bengal-369830.html

டிஸ்கி:

இப்போ பணத்தை வச்சு என்ன செய்ய முடியும் ராசா.?

seeman%204321.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

தமிழகத்தில் பெரிய வெங்காயத்தின் விலை 100 ரூபாய்க்கு மேல் விற்பனையாகிறது. சின்ன வெங்காயத்தின் விலை 150 ரூபாய்க்கு மேல் விற்பனையாகிறது. நிறைய இடங்களில் சின்ன வெங்காயம் கிடைப்பது இல்லை. இந்நிலையில் தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதுமே வெங்காய விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

Bildergebnis für 5 kg sack zwiebel

இன்று கறுப்பு  வியாழக் கிழமை (Black Thursday) என்ற படியால்,
கடையில்  ஏதாவது பொருட்கள் மலிவாக போட்டிருப்பார்கள், 
வீட்டிற்கு தேவையான பொருட்கள்  அம்பிட்டால், வாங்கலாம் என்று...
சில கடைகளில் , போய் பார்த்தால்... எனக்கு ஒன்றும் தேறவில்லை. 

கடைசியாக... உணவுப் பொருட்கள் விற்கும் கடைக்குள் போய் பார்த்தால்,
ஆகா... அலைந்தது வீண் போகவில்லை என்று மனம் குதூகலித்தது. :grin:

போனகிழமை.... 80 சென்ருக்கு  வாங்கின,   ஒரு கிலோ வெங்காயம்...
இன்று ஐந்து கிலோ சாக்கில்... ஒரு ஐரோ போட்டிருந்தார்கள்.
அதாவது... ஒரு கிலோ 20 சென்ற். 

டக்கெண்டு.... ஒரு வண்டிலை,  எடுத்துக் கொண்டு வந்து,
மூன்று சாக்கு வெங்காயத்தை (15 கிலோ) மூன்று ஐரோவுக்கு  வாங்கி.
வீட்டில்... கெட்டிக்கார புருசன்  என்ற நல்ல பெயரை... வாங்கி விட்டேன்.

டிஸ்கி: அந்த வெங்காயத்தில்...  சீனிச்  சம்பல்  செய்யலாம் என்று பார்த்தால்,
அதன் செய்முறை தெரியவில்லை. ஆருக்காவது தெரிந்தால்...
தயவு செய்து, இணைத்து விடுங்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, தமிழ் சிறி said:

டக்கெண்டு.... ஒரு வண்டிலை,  எடுத்துக் கொண்டு வந்து,
மூன்று சாக்கு வெங்காயத்தை (15 கிலோ) மூன்று ஐரோவுக்கு  வாங்கி.
வீட்டில்... கெட்டிக்கார புருசன்  என்ற நல்ல பெயரை... வாங்கி விட்டேன்.

இப்ப சொல்லுவினம்.
தின்றால்ப் பிறகு அனுபவிக்கும் போது தெரியும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/28/2019 at 10:18 AM, தமிழ் சிறி said:

Bildergebnis für 5 kg sack zwiebel

இன்று கறுப்பு  வியாழக் கிழமை (Black Thursday) என்ற படியால்,
கடையில்  ஏதாவது பொருட்கள் மலிவாக போட்டிருப்பார்கள், 
வீட்டிற்கு தேவையான பொருட்கள்  அம்பிட்டால், வாங்கலாம் என்று...
சில கடைகளில் , போய் பார்த்தால்... எனக்கு ஒன்றும் தேறவில்லை. 

கடைசியாக... உணவுப் பொருட்கள் விற்கும் கடைக்குள் போய் பார்த்தால்,
ஆகா... அலைந்தது வீண் போகவில்லை என்று மனம் குதூகலித்தது. :grin:

போனகிழமை.... 80 சென்ருக்கு  வாங்கின,   ஒரு கிலோ வெங்காயம்...
இன்று ஐந்து கிலோ சாக்கில்... ஒரு ஐரோ போட்டிருந்தார்கள்.
அதாவது... ஒரு கிலோ 20 சென்ற். 

டக்கெண்டு.... ஒரு வண்டிலை,  எடுத்துக் கொண்டு வந்து,
மூன்று சாக்கு வெங்காயத்தை (15 கிலோ) மூன்று ஐரோவுக்கு  வாங்கி.
வீட்டில்... கெட்டிக்கார புருசன்  என்ற நல்ல பெயரை... வாங்கி விட்டேன்.

டிஸ்கி: அந்த வெங்காயத்தில்...  சீனிச்  சம்பல்  செய்யலாம் என்று பார்த்தால்,
அதன் செய்முறை தெரியவில்லை. ஆருக்காவது தெரிந்தால்...
தயவு செய்து, இணைத்து விடுங்கள். :)

சிறி,
நீங்கள் எல்லோரிடம் எப்பவும் ஏதோ ஒரு ரெசிபி கேட்டுக்கொண்டே இருக்கிறீர்கள், ஆனால் எதுவும் செய்வதாக தெரியவில்லை. வெங்காயத்தை அளவோடு சாப்பிடவும், உடம்பு தாங்காது! 

Link to comment
Share on other sites

3 hours ago, நீர்வேலியான் said:

சிறி,
நீங்கள் எல்லோரிடம் எப்பவும் ஏதோ ஒரு ரெசிபி கேட்டுக்கொண்டே இருக்கிறீர்கள், ஆனால் எதுவும் செய்வதாக தெரியவில்லை. வெங்காயத்தை அளவோடு சாப்பிடவும், உடம்பு தாங்காது! 

யாரின் உடம்பு?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நீர்வேலியான் said:

சிறி,
நீங்கள் எல்லோரிடம் எப்பவும் ஏதோ ஒரு ரெசிபி கேட்டுக்கொண்டே இருக்கிறீர்கள், ஆனால் எதுவும் செய்வதாக தெரியவில்லை. வெங்காயத்தை அளவோடு சாப்பிடவும், உடம்பு தாங்காது! 

நூலகர்...எல்லாப் புத்தகங்களூம் தான் சேகரிப்பார்..!

அதற்க்காக எல்லாவற்றையும் அவரால்....வாசிக்க முடியுமா?

மற்றவர்களூக்கு...ஒரு நாள் பயன்படும் தானே..!😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/2/2019 at 4:54 PM, நிழலி said:

யாரின் உடம்பு?

மிகவும் சிக்கலான கேள்வி! வயது அதிகமானால் இருவருக்கும் கூடாது😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெங்காய விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்வு … 450 புரியாணி கடைகள் அடைப்பு !!

biruyani.gif

வெங்காய விலை மிகக் கடுமையாக உயர்ந்துள்ளதால் வேலூர் உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் உள்ள 450 புரியாணி கடைகள் மூடப்பட்டன ஆயிரக்கணக்கான ஹோட்டல் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர்.

புரியாணி என்றாலே நம் அனைவரின் ஞாபத்துக்கு வருவது வேலூர் மாவட்டம் தான். அதுவும் ஆம்பூர் புரியாணி நம் அனைவரின் எச்சிலையும் ஊறவைக்கும்.  

புரியாணிக்கு புகழ் பெற்ற திருப்பத்துார், ராணிப்பேட்டை, வேலுார் மாவட்டங்களில்  1,200க்கும் மேற்பட்ட புரியாணி கடைகள் உள்ளன.  5,000 பேர் வேலை செய்கின்றனர். புரியாணிக்கு அடிப்படை தேவையான வெங்காயத்தின் விலை தற்போது எப்போதும் இல்லாத வகையில், தினமும் உயர்ந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி பெரிய வெங்காயம், 150 ரூபாய்; சின்ன வெங்காயம், 160 ரூபாய்க்கு விற்றன.

புரியாணி கடைகளில், மட்டன், சிக்கன் புரியாணிக்கு, வெங்காய தயிர் பச்சடி வழங்கப்படும். விலை உயர்வால், 15 நாட்களாக, வெங்காய தயிர் பச்சடியை நிறுத்தி விட்டனர். புரியாணி விலையும் உயர்ந்து விட்டது. இதனால் விற்பனை குறைந்து விட்டது.

வரலாறு காணாத விலை உயர்வால், வெங்காயம் தயிர் பச்சடி நிறுத்தப்பட்ட நிலையில், மட்டன் புரியாணி, கால் பிளேட், 140 ரூபாயில் இருந்து, 170 ரூபாயாக உயர்த்தப்பட்டது. இதனால், விற்பனை குறைந்து விட்டது. தினமும், 1 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்த நிலையில், தற்போது, 40 லட்சம் முதல், 50 லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடக்கிறது.

இதையடுத்து  450 புரியாணி கடைகள் மூடப்பட்டுள்ளன. புரியாணி கடைகளில் வேலை செய்யும், ஆயிரக்கணக்கான  தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

https://tamil.asianetnews.com/tamilnadu/onion-price-hike-biriyani-hotels-closed-q20ptd

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இஸ்ரேல்- ஈரான், இவங்கட நொட்டல்கள் பழகி விட்டது, தாங்கிக் கொண்டு சாதாரணமாக வாழலாம். ஆனால், இந்த "கேப்பில்" புகுந்து "திராவிடர் பேர்சியாவின் பக்கமிருந்து மாடு மேய்த்த படியே வந்த ஊடுருவிகள்" என்று "போலி விஞ்ஞானக் கடா" வெட்டும் பேர்வழிகளின் நுளம்புக் கடி தாங்கவே முடியாமல் எரிச்சல் தருகிறது😅. யோசிக்கிறேன்: இவ்வளவு வெள்ளையும் சொள்ளையுமான பேர்சியனில் இருந்து கன்னங் கரேல் திராவிடன் எப்படி உருவாகியிருப்பார்கள்? சூரியக் குளியல்? 
    • பொது நடைமுறையை சொல்கிறேன். கனடாவுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன். படிக்க போகாவிடின், கல்லூரி உ.நா.அமைச்சுக்கு அறிவிக்கும். அதன்பின், இவர் இப்போதைய நிலையை கருத்தில் எடுத்து - மாணவர் வீசா மீளப்பெறப்படும். அன்று முதல் இவர் ஓவர் ஸ்டேயர்.  ஆனால் வழக்கு முடிந்து, தண்டனையும் முடியும் வரை முதலில் ரிமாண்டிலும், பின் சிறையிலும் வைத்திருப்பார்கள். தண்டனை காலம் முடிந்ததும் நாடுகடத்துவார்கள். விண்ணப்பித்தாலும் பிணை கிடைத்திராது. குழந்தைகள் உட்பட 6 கொலை! 7வதை ரிஸ்க் எடுக்க எந்த நீதிபதியும் தயாராக இருக்கமாட்டார்கள்.
    • புராணக்கதையின் படி, ஆர்க்கிமிடிஸ் குளியல் செய்யும் பொழுது கண்ட ஒன்றால்,  மிகவும் உற்சாகமடைந்தார், அவர் குளியலறையில் இருந்து குதித்து, மீண்டும் தனது பட்டறைக்கு  / அரச   அரண்மனைக்கு  / வீட்டிற்கு ஓடினார், யுரேகா (அதாவது "நான் அதை கண்டுபிடித்தேன்") என்று கத்திக் கொண்டே, ஆனால்  " பொருத்தமற்ற உடையுடன், அதாவது நிர்வாணமாக ". ஆர்க்கிமிடிஸ் எப்போதாவது "யுரேகா" என்ற வார்த்தையை கத்தினாரா / உச்சரித்தாரா என்று சிலர் சந்தேகிக்கிறார்கள், ஏனென்றால் இது விட்ருவியஸின் [Vitruvius 80–70 BC – after c. 15 BC ] ஒரு ரோமானிய கட்டிடக் கலைஞர் மற்றும் பொறியியலாளர் ஆவார்.] குறிப்பு ஆகும்.  - இந்த சம்பவம் நடந்த பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு அவரால் எழுதப்பட்டது. வாய்வழியாக வந்த கதையை தொகுத்து கொடுக்கப்பட்டது என்பதால்?   ஆர்க்கிமிடீஸ் கி.மு.287  - கி.மு.212 ; இது அவர் வாழ்ந்த காலம்  ஆகவே அந்த பண்டைய காலத்தில் நிர்வாணம் ஒன்றும்  அதிசயமாக இருந்து இருக்காது?      எல்லோருக்கும் எனது தாழ்மையான நன்றி 
    • பிணையை  மறுப்பதனூடாக  அவர் கனடாவில்  தங்கி இருக்கும் நாட்களை  அதிகரித்து அதை  தனது  வதிவிட விசாவுக்கு  சாதகமாக்க  முயல்கிறார் போலும்? சோத்துக்கு சோறும்  ஆச்சு? இருப்புக்கு  வீடும் ஆச்சு? விசாவும் ஆச்சு?
    • மகனுக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது. எனவே வட கரோலினாவில் நிற்கிறேன். எதுக்கும்  @Justin ஐ கேட்டுப் பார்க்கவும்.அவருக்குத் தான் கிட்ட.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.