Jump to content

பொலிவியா: புதிய நிறப்புரட்சிகளுக்கான களம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பொலிவியா: புதிய நிறப்புரட்சிகளுக்கான களம்

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ   / 2019 நவம்பர் 28 , மு.ப. 04:45


ஆட்சிக் கவிழ்ப்புகள் புதிதல்ல; இன்று ஜனநாயகத்தின் பெயரால் அவை அரங்கேறுகின்றன. இதுதான் புதிது!  

இராணுவத்தின் உதவியுடன் நடைபெற்ற ஆட்சிக் கவிழ்ப்புகள் முடிந்து, இப்போது ஜனநாயகத்தை மய்யப்படுத்தி, ஆட்சிக் கவிழ்ப்புகள் அரங்கேறுகின்றன.   

இற்றைக்கு 20 ஆண்டுகளுக்கு முன்னர், ஆட்சிக் கவிழ்ப்புகள், முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளில் நடைபெற்ற போது, அதற்கு நிறப்புரட்சிகள் எனப் பெயரிடப்பட்டன. அந்த வரைபடம், இப்போது இலத்தீன் அமெரிக்காவில் அரங்கேறுகிறது.   

image_6a2ae85bfc.jpg

அமெரிக்க ஏகபோகத்துக்கும் நவதாராளவாதத்துக்கும் எதிரான, மிகப்பெரிய போராட்டக் களமாக, இலத்தீன் அமெரிக்கா தொடர்ந்து திகழ்ந்து வருகிறது.   

கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக, அதிகளவான சதிப்புரட்சிகளையும் ஆட்சிக் கவிழ்ப்புகளையும் கண்ட பிரதேசமாக, இலத்தீன் அமெரிக்கா திகழ்கிறது.   

அமெரிக்கா தனக்குரிய பொம்மை ஆட்சியை நிறுவுவதும் அதைத் தொடர்ந்து, அதற்கெதிரான மக்கள் போராட்டங்கள் அவ்வாட்சியை முடிவுக் கொண்டு வந்து, மக்கள் ஆட்சியை நிறுவுவதும் பின்னர், அம்மக்களாட்சி இராணுவச்சதியால் முடிவுறுவதும் என்ற வட்டம் தொடர்கிறது.   

அண்மையில், பொலிவியாவில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், நான்காவது முறையாகப் போட்டியிட்ட ஜனாதிபதி ஈவா மொறாலஸ், தனக்கெதிராகப் போட்டியிட்ட வேட்பாளரை விட, ஆறு இலட்சம் வாக்குகளை அதிகமாகப் பெற்று வெற்றிபெற்ற போதும், இராணுவத் தலையீட்டின் விளைவால், அவர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.   

இலத்தீன் அமெரிக்காவில், ஆட்சிக் கவிழ்ப்பின் இன்னோர் அத்தியாயம் இப்போது அரங்கேறியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக, வெனிசுவேலாவில் எதைச் செய்ய முயன்று அமெரிக்கா தோற்றதோ, அதை அப்படியே பொலிவியாவில் அரங்கேற்றி இருக்கிறது.   

ஈவோ மொறாலஸ்: பழங்குடிகளின் தலைவர்  

2005ஆம் ஆண்டு, பொலிவியாவில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில், ஈவோ மொறாலஸ் வெற்றி பெற்று, ஜனாதிபதியாகத் தெரிவானார்.   

பழங்குடிகளில் இருந்து ஜனாதிபதியாகத் தெரிவான முதலாவது மனிதர் என்ற பெருமை இவரைச் சார்ந்தது. ‘ஐமாறா’ பழங்குடி இனத்தைச் சேர்ந்த மொறாலஸ், தனது தொழிற்சங்கச் செயற்பாடுகளால் நன்கறியப்பட்டார்.   

குறிப்பாக, பழங்குடிகள் பயன்படுத்தும் ‘கொக்கா’ இலையைத் தடைசெய்ய அமெரிக்கா முயன்றபோது, (அது கொக்கெயின் என்ற போதைப்பொருள் தயாரிக்கப் பயன்படுவது என்று காரணம் காட்டி) உரிமைப் போராட்டத்தைப் பழங்குடிகள் முன்னெடுத்தனர். 

இதைத் தொடர்ந்து, தொழிற்சங்கத் தலைவராகிய மொறாலஸ், தனது திட்டங்களால் பழங்குடிகளின் உரிமைகளைப் பெற்றுக் கொள்ளப் போராடினார். 1980களில் தனது தொழிற்சங்க நடவடிக்கைகளுக்காகப் பலமுறை சிறை சென்றார்.   

1995ஆம் ஆண்டு, தேர்தல் அரசியலில் நுழைந்த இவர், 1997ஆம் ஆண்டு, முதன்முறையாக நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டார்.   

2002ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்து, முழு பொலிவிய மக்களின் கவனத்தைப் பெற்றார். இதைத் தொடர்ந்து, 2005ஆம் ஆண்டுத் தேர்தலில், 54சதவீதமான வாக்குகளைப் பெற்று, ஜனாதிபதியானார்.   

இவரது தெரிவு, பழங்குடி மக்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியது. அதேவேளை, இது அமெரிக்காவுக்கும் பொலிவியாவில் செயற்பட்டு வந்த சுரங்க நிறுவனங்களுக்கும் அதிர்ச்சியைக் கொடுத்தது.   

மொறாலஸ், இடதுசாரிச் சிந்தனைகளுக்கும் சோசலிசச் செயற்றிட்டங்களுக்காக நன்கறியப்பட்டவர். இவரது திட்டங்களால் பழங்குடிகள் நன்மையடைந்தார்கள். சாதாரண உழைக்கும் மக்களுக்கு, கௌரவமான வாழ்வு சாத்தியமானது. இதனாலேயே, தனது இரண்டாவது, மூன்றாவது பதவிக்காலத்தை, 60சத வீதத்துக்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்று வென்றார்.   

அண்மையில் நடந்த தேர்தலிலும் இரண்டாவதாக வந்த போட்டியாளரை விட, ஆறு இலட்சத்து 65 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் அதிகம் பெற்று, வெற்றிபெற்றிருந்தார்.   

இவரது பதவிக்காலத்தில், பொலிவியாவில் வறுமை அரைவாசியாகக் குறைந்துள்ளது. ஆண்டொன்றுக்கு சராசரியாக ஐந்து சதவீதம் பொருளாதாரம் வளர்ந்துள்ளது. இவர் பதவியேற்ற போது, ‘மிகக் குறைந்த வருமானமுடைய நாடு’ என அறியப்பட்ட பொலிவியா, இப்போது குறைந்த மற்றும் மத்திய வருமானமுடைய நாடாக வளர்ந்துள்ளது. இந்த மாற்றங்கள், இலகுவில் நடந்தேறியவையல்ல.   

image_c2bcc1eb64.jpg

திட்டமிட்ட பொருளாதார வளர்ச்சி, இயற்கை வளங்களைச் சரியாகவும் வினைத்திறனுடனும் பயன்படுத்துதல், ‘சமூக நல அரசு’ என அரசாங்கத்தை மாற்றயமை, இவற்றில் பிரதானமானவை.   
2006ஆம் ஆண்டு, ஜனாதிபதியாகியவுடன் ஈவோ செய்த முத‌ற்காரியம், எண்ணெய், எரிவாயுக் கைத்தொழில்களைத் தேசிய மயமாக்கினார். இது பொலிவியாவில் இயங்கி வந்த பல்தேசிய எண்ணெய்க் கம்பெனிகளுக்குப் பெரிய இடியாகியது.   

இவ்வளவு காலமும், மிகக்குறைந்த செலவில் எண்ணெய் எடுத்து, இலாபம் பார்த்த கம்பெனிகளுக்கு, இது உவப்பானதாக இருக்கவில்லை. இந்த நடவடிக்கை மூலம், பெருந்தொகையான பணம், அரசாங்கத்தைச் சேர்வதற்கு வழி செய்தது.  இவரது அடுத்த நடவடிக்கை, அரசாங்கத்துக்கும் தனியாருக்கும் சொந்தமானதாகவும் பயன்பாடற்றும் கிடந்த சுமார் 134 மில்லியன் ஏக்கர் நிலத்தை, நிலமற்ற பழங்குடி மக்களுக்குப் பிரித்துக் கொடுத்தமையாகும்.   

இம்மக்களில் பெரும்பான்மையானோர், அடிமைகளாக வேலை செய்து வந்தவர்கள். இந்நடவடிக்கை, விவசாயத்தை ஊக்குவித்தது; தன்னிறைவை நோக்கி, பொலிவியாவை நகர்த்தியது. எல்லாவற்றுக்கும் மேலாக, நிலத்தைப் பெற்ற பழங்குடி மக்கள், வறுமையில் இருந்து விடுதலை பெற்றனர்.   

எண்ணெய், எரிவாயுவைத் தேசிய மயமாக்கியதன் விளைவால், கிடைக்கப்பெற்ற வருமானத்தில் இருந்து, பொலிவியா முழுவதும் 4,500 அரசாங்கக் கல்விச் சாலைகள், பாடசாலைகள் உருவாக்கப்பட்டன.   

இதனால், பழங்குடிக் குழந்தைகளுக்குக் கல்வி கற்பதற்கான வாய்ப்பும் பாடசாலைக்குச் செல்வதற்கான சூழலும் உருவானது. கடந்த பத்தாண்டுகளில் இந்நடவடிக்கைகள், பொலிவியாவில் உள்ள பழங்குடிச் சமூகங்களில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் பெரியதாகும்.   

குழந்தைகளைப் பாடசாலைக்கு அனுப்புவதை ஊக்குவிக்க, பாடசாலைக்குச் செல்லும் வறுமைப்பட்ட, குறைந்த வருமானமுடைய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கான நிதி வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இதன்மூலம், பாடசாலை செல்லும் குழந்தைகளுக்கு, ஆண்டொன்றுக்கு 200 பொலிவியனோஸ் (5,500 இலங்கை ரூபாய்) வழங்கப்படுகிறது. இவ்வாண்டு, இந்த உதவித்தொகையை 2.2 மில்லியன் மாணவர்கள் பெறுகிறார்கள்.   

2009ஆம் ஆண்டு, மொறாலஸ் 60 வயதைக் கடந்தவர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இதன்மூலம் ஆண்டொன்றுக்கு 2,400 பொலிவியனோஸ் (65,000 இலங்கை ரூபாய்) பெறுவார்கள். அதேபோல, பெண்களுக்கான இலவச மருத்துவ வசதிகளும் ஏற்படுத்தப்பட்டன.   

இந்த நடவடிக்கைகள், இரண்டு விடயங்களைச் சுட்டுகின்றன. முதலாவது, மக்கள் நலன்நோக்கு இருந்தால், மக்களின் நலன்களை நிறைவுசெய்யக் கூடிய நிதிவளங்களை நாடுகள் கொண்டுள்ளன.   

இரண்டாவது, அரசாங்கங்கள், தனியார் நிறுவனங்களுடன் சேர்ந்து கொள்ளையிடுகின்ற தொகையின் பெறுமதி, எவ்வளவு என்பதைப் பொலிவிய உதாரணம் சுட்டிக்காட்டி நிற்கின்றது.   

சதியின் பின்னணியும் பொலிவியாவின் எதிர்காலமும்  

தனது மக்கள் நலச் செயற்பாடுகளின் ஊடு, நன்கறியப்பட்ட மொறாலஸை பதவியில் இருந்து அகற்ற, அமெரிக்காவும் பல்தேசியக் கம்பெனிகளும் நீண்டகாலமாகக் காத்துக் கொண்டிருந்தன.   

image_e6d60bff63.jpg

பொலிவிய அரசமைப்பு, ஒருவருக்கு இரண்டு தடவைகள் ஜனாதிபதியாகப் பதவிவகிக்க அனுமதிக்கிறது. இதனால் 10 ஆண்டுகளில், மொறாலசின் தொல்லை முடிந்துவிடும் எனப் பொறுமை காத்தன. ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக, மொறாலஸ் அரசமைப்பை மக்கள் ஆணையுடன் திருத்தி, மூன்றாவது முறையாகப் போட்டியிட்டார். இதையெதிர்த்து நடைபெற்ற எதிர்ப்புகள், வெற்றி பெறவில்லை. இதனால் இம்முறை நடைபெற்ற தேர்தலிலும் அவர் வெற்றி பெறுவார் என அறிந்து, ஓர் ஆட்சிக்கவிழ்ப்புக்கான பணிகள் இடம்பெற்றன.   

இதன் இறுதி விளைவே, இராணுவத்தின் கோரிக்கைக்கு பணிந்து, மொறாலஸ் பதவி விலகி, நாட்டை விட்டு வெளியேறி உள்ளமையாகும். இந்தச் சதியின் தீவிரம் யாதெனில், ஜனாதிபதி பதவி விலகினால், அடுத்துப் பதவியேற்க வேண்டிய பதவி நிலையில் உள்ள அனைவரும் பதவி விலக நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்; அவர்களும் பதவி விலகியுள்ளனர்.   

இப்போது பல்தேசியக் கம்பெனிகளுக்கும் அமெரிக்க நலன்களுக்கும் வாய்ப்பான ஒருவர் ஜனாதிபதியாகி உள்ளார். அவர் ஜனாதிபதியாகியவுடன் செய்த முதல் காரியம், “அரசமைப்புத் திருத்தம் செல்லாது” என அறிவிப்பு வெளியிட்டமையாகும்.   

இதன் மூலம், அடுத்த தேர்தலில் மொறாலஸ் போட்டியிடுவது தடுக்கப்படுகிறது. ஏனெனில், மொறாலஸ் போட்டியிட்டால் வெற்றி பெறுவார் என்பதை அவர்கள் அறிவார்கள்.   

இன்று, இலத்தீன் அமெரிக்கா எங்கும் இவ்வாறான ஆட்சி மாற்றத்துக்கான முனைப்புகள் நடக்கின்றன. அதேபோல, அதையெதிர்த்து மக்கள் போராட்டங்களும் வெடிக்கின்றன. பொலிவியாவில், ஈவோ மொறாலஸ் நீக்கப்பட்டது அநீதியானது எனக்கூறி, பழங்குடிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில், பலர் இறந்துள்ளனர். இப்போராட்டங்கள் பொலிவியாவில், அமெரிக்கா நினைத்ததை செய்வது, இலகுவானதல்ல என்பதைக் காட்டுகின்றன.   

ஆனால், பொலிவியாவில் நடைபெற்ற இந்தச் சதியை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்கும் நாடுகளும் வாய்மூடியிருக்கும் ‘ஜனநாயக சக்திகள்’ என்று தம்மை அழைக்கும் அமைப்புகளும் மனிதர்களும் வெட்கித் தலைகுனிய வேண்டும்.  

இன்று பொலிவியாவில் நடப்பது நாளை இன்னொரு நாட்டில் நடக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இச்சம்பவங்கள் குறித்து, அவதானமாக இருக்க வேண்டிய காலத்தின் கட்டாயம்; ஆட்சி மாற்றங்களில், அமெரிக்காவின் பங்கு இல்லையென்று யார் சொன்னது?  
 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/பொலிவியா-புதிய-நிறப்புரட்சிகளுக்கான-களம்/91-241654

Link to comment
Share on other sites

இலங்கையில் இராணுவ சதி மூலம் ஆட்ச்சிக் கவிழ்ப்பு இடம்பெற சாத்தியம் உண்டா ?  

சைப்பிரஸ் போன்று ஐக்கிய நாடுகளின் சபையின் படைகள் வடகிழக்கில் நிலைபெற வாய்ப்புண்டா ?? 

Link to comment
Share on other sites

  • 4 months later...

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "இருபது இருபத்திநாலு ஒரு பெண்ணாகி"     "இருபது இருபத்திநாலு ஒரு பெண்ணாகி தனக்கு தானே நிகரென கூக்குரலிட்டு இருபது இருபத்திமூன்றை எட்டி உதைத்து தன்மை அழகியென எமக்கு காட்டுகிறாள் !"   "அருகே வந்து எம்மை ஆரத்தழுவி தன் இதழால் முத்தம் பகிர்ந்து கருத்த வானில் புத்தாண்டு தொடக்கத்தில் தலை காட்டும் விண்மீண் தானாம் !"   "சற்றும் சலிப்புத்தரா அழகிய கண்ணுடனும் பெருத்த மார்புடனும் நீண்ட கழுத்துடனும் அற்புத ஒளிவீசும் தளிர் மேனியுடனும் . பெட்டி பாம்பாக்கி கண்டவரையும் மயக்குகிறாள் !"   "ஏற்றம் கொண்ட அழகிய பிட்டத்துடனும் பெரிய பட்டை சுற்றிய இடையுடனும் நெற்றி பொட்டும் குளிர் கன்னத்துடனும் பெண்டு வந்து போதை அள்ளிவீசுகிறாள் !"   "தன்தழுவலில் எம் இதயத்தை கவர்ந்து இருபது இருபத்திமூன்றை குறை கூறி பொன்னாய் வாழ்வை மீட்டு தருவேனென்று இறுமாப்புடன் எமக்கு சத்தியம் செய்கிறாள் !"   "என்றென்றும் பெருமையுடன் நிலைத்து வாழ இன்பம் பொங்கி ஒற்றுமை ஓங்க தன் நலமற்ற தலைவர்கள் தந்து இருளை நீக்கி ஒளியைத் தருவாளாம் !"   "மானிடர் செழிக்க மலரும் ஆண்டே நம்பிக்கை விதைத்து பேதம் ஒழித்து பனி விலத்தி துணிவு தந்து எம்மை காத்து அருள் புரியாயோ !"   "கூனிக் குறுகி நொடிந்த தமிழனுக்கு தும்பையும் கயிறாக்கி பிடித்து எழும்ப இனி ஒருதெம்பு அள்ளிக் கொடுவென எம் உறவுகளுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் !"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]             
    • 17. MI என்று எழுதி  விடுங்கோ.  நன்றி 
    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் ச‌கோ🙏🥰..............................
    • "சிவப்பு உருவம்"   இரத்தினபுரி கஹவத்தையில் தொடங்கிய கிறீஸ் மர்ம மனிதன் விவகாரம் ஒரு ஊரிலோ, ஒரு மாவட்டத்திலோ மட்டுமல்லாமல், இலங்கையின் பல்வேறு மாவட்டங்களிலும், குறிப்பாக தமிழர், முஸ்லீம்கள் செறிந்து வாழும் பகுதியிலேயே இடம்பெற்றன. இச்சம்பவங்கள் 2011 ஆம் ஆண்டு ஜூலையில் ஆரம்பித்து ஆகஸ்ட்  மாதத்தில் கடுமையாக பரவியது. க்ரீஸ் பூதம் என்பது ஒரு திருடனாகும். அவன் வழமையில் உள்ளாடை மாத்திரமே அணிந்து கொண்டு உடல் பூராவும் க்ரீஸைப் பூசியிருப்பான். துரத்திச் செல்வோர் பிடிக்க முடியாமல் வழுக்கி விழக் கூடிய விதத்தில் க்ரீஸ் பூசப்படுவதுடன், திருடன் இலகுவாகத் தப்பிச் செல்வதற்கும் அது உதவியாக அமைந்து விடும். இப்படியான ஒரு கால கட்டத்தில் தான் நான், மலையகம் பகுதியில் தற்காலிகமாக வேலை நிமிர்த்தம் விடுதி ஒன்றில் தங்கி இருந்தேன்.   நான் தங்கி இருந்த விடுதி, கடல் மட்டத்திலிருந்து 1000-1500 மீட்டர் உயரத்திற்கு உயர்ந்து நிற்கிறது. இந்தப் பகுதி மிகவும் அமைதியாகக் காட்சியளிப்பதுடன் ஒரு  நீர்வீழ்ச்சிக்கு மேலே மலைப்பகுதியில் அமையப் பெற்றுள்ளது. இங்கு இயற்கை எழில் சூழ்ந்த தேயிலை தோட்டங்கள், நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் நிறைந்து காணப்படுகின்றன. மொத்தத்தில்  புத்துணர்ச்சி அளிக்கும் ஒரு குளிர் பிரதேசம் ஆகும். ஒரு வரவேற்பு கம்பளம் போல அமைக்கப் பட்ட மரகத பச்சை தேயிலை தோட்டங்களின் அழகை பார்த்தால் உங்களுக்கு மனதில் ஒருவித மகிழ்ச்சி பொங்கி வழியும். ஆமாம், நீர்வீழ்ச்சிகள், பச்சை பசேல் புல்வெளிகள் மற்றும் அடர்ந்த தேயிலை தோட்டங்கள் இயற்கையாகவே காதலர்களின் கனவை நனவாக்குகிறது. அதற்கு நானும் விதிவிலக்கல்ல.   தேயிலை தோட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியை செல்வி சயந்தியின் தொடர்பு, தற்செயலாக, அந்த பாடசாலையில் நடந்த தைப்பொங்கல் திருவிழா மூலம் கிடைத்தது. அவர் தான் அங்கு நடந்த நாட்டிய மற்றும் நாடகத்துக்கு பொறுப்பாக இருந்தார். அந்த நிகழ்வின் சிறப்புத் தன்மையை போற்ற அவரை சந்தித்தது, அவரின் அழகிலும் நடத்தையிலும் என்னை கவர வைத்து விட்டது. அதன் பின் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக இருவர் மனதிலும் மலர்ந்தது  .    "சிலுசிலு எனக் காற்று வீச கமகம என தேயிலை மணக்க  தொளதொள சட்டையில் வனப்பை காட்டி கிளுகிளுப்பு தந்து கூப்பிடுவது எனோ ?"   "தளதள ததும்பும் இளமை பருவமே   தகதக மின்னும் அழகிய மேனியே  சலசல என ஆறு பாய  வெலவெல என நடுங்குவது எனோ?"    "கலகல பேச்சு நெஞ்சை பறிக்க படபட என இமைகள் கொட்ட   கிசுகிசு ஒன்றை காதில் சொல்லி  சரசர என்று ஓடுவது ஏனோ ?"    ஒரு சனிக்கிழமை நாம் இருவரும் சந்தோசமாக தனியாக கழிக்க நுவரெலியா மாவட்டத்தில் ஹோட்டன் சமவெளியின் (Horton Plains) முடிவுடன் 1,200  மீட்டர் உயரத்தில், 700 - 1000 மீட்டர் செங்குத்து ஆழத்தைக் கொண்ட  உலக முடிவு [world's end] போய் பின், 19 மைல் நேரடி தூரத்தை அல்லது இருமடங்கு வீதி வழித் தூரத்தை கொண்ட  பதுளை மாவட்டத்தில் உள்ள எல்ல [எல்லா / Ella] நகரம் சென்று அங்கு ஒரு நீரூற்றுக்கு அருகில் உள்ள 98 ஏக்கர் உல்லாசப் போக்கிடத்தில் [98 Acres Resort & Spa] தங்கி, ஞாயிறு மாலை அங்கிருந்து திரும்பினோம். இருவரும் மிக மகிழ்வாக பேருந்தில் இருந்து இறங்கி, எம் விடுதிகளுக்கு கால்நடையாக பேசிக் கொண்டு நடக்கத் தொடங்கினோம். நாம் அந்த கும்மிருட்டில் தேயிலை தோட்டங்கள் மற்றும் மரங்களுக்கிடையில் ஒரு மைல் நடக்கவேண்டும். ஆனால் எமக்கு அது பிரச்சனையாகவோ பயமாகவோ இருக்கவில்லை. அவள் அந்த ஊர் ஆசிரியை. நான் அந்த நகர பொறியியலாளர். எம்மை எல்லோருக்கும் தெரியும். அந்த ஊர் மக்கள் மிகவும் மரியாதையும் கண்ணியமும் ஆனவர்கள்.       ஆனால் எம் கணக்கு தப்பு என்பதை சிறிது தூரம் இருவரும் கைகள் கோர்த்தபடி இருட்டில் ஏதேதோ சந்தோசமாக பேசிக் கொண்டு போகும் பொழுது தான் சடுதியாகத் தெரிந்தது. கொஞ்ச தூரத்தில், மரங்களுக் கிடையில் சிவத்த சால்வை அல்லது  துப்பட்டா மட்டும் தலையை மூடி தொங்க, கைவிரல்கள் மட்டும் எதோ கையில் இருக்கும் சிறு ஒளியில் ஒளிர , ஒரே இருட்டான ஒரு சிவப்பு உருவம் எம்மை நோக்கி வருவதைக் கண்டோம்.     கிழக்கு மாகாணம், மலையகம் மற்றும் நாட்டின் சில பகுதிகளில், யாழ்ப்பாணம் உட்பட கிறீஸ் மனிதன் விவகாரம் அடிக்கடி பத்திரிகையில் வருவதைப் பார்த்துள்ளேன், ஆனால் இந்த சிவப்பு உருவம் ஒரு சிவப்பு துணியால் தலையை மூடி தொங்க விட்டுக் கொண்டு வருவது ஆச்சரியமாக இருந்தது. ஒரு வேளை கிறீஸ் பூதத்தின் பரிணாமமாக இருக்கலாம்? அப்படியாயின் அவனை மடக்கி பிடிக்க முடியாது, அவன் உடல் வழுக்கும். ஆனால், அவன் சிவப்பு துணி தொங்க விட்டு வருவது எனக்கு சாதகமாக தெரிந்தது. அந்த துணியை வைத்தே அவனை மடக்க நான் தீர்மானித்தேன். ஏறுதழுவுதல் அல்லது ஜல்லிக்கட்டுவில் நான் நல்ல பயிற்சி பெற்றவன் என்பது எப்படி அவனுக்கு தெரியும்? காளைகளின் கொம்புகளை பிடித்து மடக்கும் தமிழர்களின் வீர விளையாட்டுக்கும் சிவப்பு நிற துணியை காளையிடம் காட்டி மடக்கும் ஸ்பெயின் நாட்டு விளையாட்டுக்கும் உள்ள வேறுபாடு அவனுக்கு என்ன தெரியும் ?. சிவப்பு துணியுடன் எம்மை நோக்கி வருகிறானே, இந்த சிவப்பு உருவம்!    நான் மிக நிதானமாக, ஆனால் அவசரமாக அவளிடம் எனது பையில் இருந்த சிகரெட் தீமூட்டியை கொடுத்து, பக்கத்தில் இருந்த மரத்தின் பின் ஒழிந்து இருந்து, அவன் என்னை நெருங்கும் பொழுது அதை தீம்மூடி அவனின் சிவப்பு துணிக்கு எரியூட்டக் கூடியதாக  எறியச் சொன்னேன். அவள் உயர் வகுப்புக்கு பிரயோக கணிதம் படிப்பிக்கும் ஆசிரியர் தானே, ஆகவே அவள் சரியாக செய்வாள் என்பதில் நல்ல நம்பிக்கை எனக்கு இருந்தது. அது மட்டும் அல்ல, பெரும்பாலான கிறீஸ் வகைகள் இலகுவாக எரியக்  கூடியவையும் ஆகும். நானும் கவனமாக அவன் நெருங்கும் பொழுது சிவப்பு துணியின் இரு தொங்களையும் தேவைப்பட்டால் பிடித்து இழுத்து, சிவத்த உருவத்தை  மடக்கி பிடிக்க ஆயத்தமாக முழு பலத்துடன் இருந்தேன்.   இந்த கிறீஸ் மர்ம மனிதர்கள் துட்டுகைமுனு அரசனின் வாளைத் தேடி அலைந்ததாக எத்தனை கதைகள் அன்று செய்திகளாக வந்தன. இது ஒன்றே இவர்கள் தமிழர்களை குறி வைத்து தாக்கியதுக்கு சிறந்த உதாரணமாக இருக்கிறது. எல்லாளனின் நீதியான, சமத்துவமான, எதிரியையும் மதிக்கும் திறமையான ஆட்சிக்கு எதிராகவே அன்று அவன் சைவ மதத்தான் என்ற ஒரே காரணத்தால் துட்டுகைமுனு அவனை எதிர்த்தான் என்பது வரலாறு. அப்ப சிங்களம் என்ற மொழி வளர்ச்சி அடையாத காலம். ஆகவே சிங்கள தமிழ் வேற்றுமை அங்கு இருக்க முடியாது. அது மட்டும் அல்ல துட்டுகைமுனு சிங்களவனாக இருக்கவும் முடியாது. அது தெரியாத முட்டால்கள் தான் இந்த கிறீஸ் பூதங்கள்!    எல்லாம் நாம் திட்டம் போட்ட படி  நிறைவேற, பாவம் அந்த சிவப்பு உருவம் என்னிடம் முறையாக அகப்பட்டார். என் நீள்காற் சட்டையின் வார், அந்த சிவப்பு உருவத்தை, ஒரு மரத்துடன் கட்ட உதவியது. அவன் உடலில் ஏற்பட்ட எரிகாயங்களால் சத்தம் போட, ஊர்க்காரர்கள் எல்லாம் திரண்டு விட்டார்கள். அதன் பின் எமக்கு என்ன வேலை. அவர்களிடம் மிகுதி பொறுப்பை கொடுத்து விட்டு நாம் எம் விடுதிகளுக்கு போனோம் . ஆனால் அவள் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை!  ஆகவே அவளை என் விடுதியில் உறங்க சொல்லி விட்டு , காவலுக்கு அவள் பக்கத்திலேயே , அவளை, அவள் அழகை ரசித்தபடி, அந்த சிவப்பு உருவத்துக்கு நன்றி கூறிக்கொண்டு இருந்தேன்!!    "சயனகோலம் அவளின் அழகு கோலம்  சரிந்த படுக்கையில் தேவதை கோலம்  சங்கு கழுத்து சிவப்பாய் ஒளிர்ந்து  சங்கடம் தருகிறது அவளின் பார்வை"     "சயந்தி அவள் இந்திரன் மகள் சந்திரன் போன்ற அழகு நிலா  சரீரம் தரும் கவர்ச்சி மயக்கத்தில்  சற்று நானும் என்னை மறந்தேன்"     "சக்கர தோடு கழுத்தை தொட  சடை பின்னல் அவிழ்ந்து விழ  சலங்கை கால் இசை எழுப்ப  சங்காரம் செய்யுது இள நகை"   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.