Jump to content

சுவிட்ஸர்லாந்து தூதரக அதிகாரிக்கே பாதுகாப்பு இல்லையென்றால் சாதாரண மக்கள், ஊடகவியலாளர்களின் நிலை என்னவாகும்? : தலதா கேள்வி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டில் தேசிய பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக கோத்தாபய ராஜபக்ஷவிற்கு வாக்களிக்க வேண்டும் என்று தேர்தல் பிரசாரத்தின் போது குறிப்பிட்டார்கள்.

Thalatha-Atukorale.jpg

அவ்வாறு கூறி ஆட்சிபீடமேறியவர்களின் செயற்பாடுகள் தேசிய பாதுகாப்பை ஏற்படுத்தும் வகையிலா அமைந்திருக்கின்றன? சுவிட்ஸர்லாந்து தூதரக அதிகாரிக்கே பாதுகாப்பு இல்லையென்றால் சாதாரண மக்கள், ஊடகவியலாளர்களின் நிலை என்னவாகும்? இத்தகைய செயற்பாடுகள் தொடர்பில் வருத்தம் தெரிவிக்கும் அதேவேளை அவற்றைக் கடுமையாகக் கண்டனம் செய்கின்றோம் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அதுகோரள குறிப்பிட்டார். 

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

அங்கு அவர் மேலும் கூறியதாவது:

நல்லாட்சி அரசாங்கமொன்றை உருவாக்குவதற்கு நாட்டுமக்கள் 2015 ஆம் ஆண்டில் எமக்கு ஆணை வழங்கினார்கள். கடந்த அரசாங்கத்தில் இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பில் சுயாதீனமான விசாரணைகளை முன்னெடுப்பதுடன், நிறைவேற்றதிகார ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைக்க வேண்டும் என்பதே மக்கள் எமக்கு ஆணையை வழங்குவதற்கான பிரதான காரணமாக இருந்தது.

அதன்படி அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தின் ஊடாக ஜனாதிபதியின் நிறைவேற்றதிகாரத்தைக் குறைத்து, அதனைப் பாராளுமன்றத்திற்குப் பெற்றுக்கொடுத்தோம். நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மையை உறுதிப்படுத்தியதுடன், சுயாதீன ஆணைக்குழுக்களை ஸ்தாபித்தோம். 

பொலிஸ் திணைக்களத்திற்கு எந்தவொரு அழுத்தங்களையும் வழங்காத அதேவேளை, அவர்களுடைய விசாரணைகளின் தலையீடு செய்யாத ஒரே அரசாங்கம் எம்முடையது மாத்திரமே என்பதை இப்போதும் உறுதியாகக் கூறமுடியும். 

19 ஆவது திருத்தத்தின் ஊடாக அமைக்கப்பட்ட சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் மூலமாகவே இம்முறை ஜனாதிபதித் தேர்தல் மிகவும் அமைதியானதும் ,நியாயமானதுமான முறையில் இடம்பெற்று முடிந்திருக்கிறது.

எனினும் தற்போது அந்த 19 ஆவது திருத்தத்தை இல்லாமல் செய்ய வேண்டும் என்று அரசாங்கத்தில் சிலர் கூறிவருகிறார்கள்.

அதேபோன்று புதிய அரசாங்கம் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் மீது அழுத்தங்களைப் பிரயோகித்து வருகின்றது.

குற்றப்புலனாய்வுப் பிரிவின் பிரதானியாக இருந்த ஷானி அபேசேகர சுமார் 10 வருடகாலம் அப்பிரிவில் பணியாற்றியவராவார்.

நீண்டகாலம் அனுபவம் என்பது ஒருபுறமிருக்க அவர்களுக்குப் பயிற்சியளிப்பதற்கும் பெருமளவான அரசநிதி செலவிடப்பட்டிருக்கும். அவ்வாறிருக்க தற்போது குற்றப்புலனாய்வுப் பிரிவு தொடர்பில் எவ்வித விளக்கமும் இல்லாத ஒருவரை அதன் பிரதானியாக நியமித்திருக்கின்றார்கள்.

அதுமாத்திரமன்றி 704 குற்றப்புலனாய்வு அதிகாரிகள் வெளிநாடுகளுக்குச் செல்வதற்குத் தடை விதித்திருக்கும் நிலையில் சட்டமாதிபர் திணைக்களத்தின் ஊடாக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை விசாரணை செய்வதிலும் இடையூறுகள் ஏற்படும். 

நாட்டில் தேசிய பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக கோத்தாபய ராஜபக்ஷவிற்கு வாக்களிக்க வேண்டும் என்று தேர்தல் பிரசாரத்தின் போது குறிப்பிட்டார்கள்.

அவ்வாறு கூறி ஆட்சிபீடமேறியவர்களின் செயற்பாடுகள் தேசிய பாதுகாப்பை ஏற்படுத்தும் வகையிலா அமைந்திருக்கின்றன? சுவிட்ஸர்லாந்து தூதரக அதிகாரிக்கே பாதுகாப்பு இல்லையென்றால் சாதாரண மக்கள், ஊடகவியலாளர்களின் நிலை என்னவாகும்? இத்தகைய செயற்பாடுகள் தொடர்பில் வருத்தம் தெரிவிக்கும் அதேவேளை அவற்றைக் கடுமையாகக் கண்டனம் செய்கின்றோம்.

https://www.virakesari.lk/article/69961?fbclid=IwAR0WsMsWQpdGst8MSZzuTwHOkBBgv9vf5h5xbHMy5R5pq3TvjLBXa8fcjE0

Link to comment
Share on other sites

4 hours ago, பெருமாள் said:

சுவிட்ஸர்லாந்து தூதரக அதிகாரிக்கே பாதுகாப்பு இல்லையென்றால் சாதாரண மக்கள், ஊடகவியலாளர்களின் நிலை என்னவாகும்?

நல்ல கேள்வி!

சொறிலங்காவுக்கு ஆதரவா நின்ற சுவிஸ் செய்த வினைகளுக்கு விளைவுகளை சந்திக்குது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, Rajesh said:

நல்ல கேள்வி!

சொறிலங்காவுக்கு ஆதரவா நின்ற சுவிஸ் செய்த வினைகளுக்கு விளைவுகளை சந்திக்குது.

பிரச்சனை வேறு விதமாக திரும்ப போகின்றது போல் உள்ளது இனி கோத்தவுக்கு பயம் என்று நிறைய சிங்கள கூட்டம் ஐரோப்பிய நாடுகளில் அசேலம் அடிக்க போகினம் அப்படி வருபவர்களில் கோத்தவின் வெள்ளைவான் கூட்டமும் உள்ளே வர சந்தர்ப்பம் உண்டு டபுள் ஏஜென்டாக .

Link to comment
Share on other sites

1 hour ago, பெருமாள் said:

பிரச்சனை வேறு விதமாக திரும்ப போகின்றது போல் உள்ளது இனி கோத்தவுக்கு பயம் என்று நிறைய சிங்கள கூட்டம் ஐரோப்பிய நாடுகளில் அசேலம் அடிக்க போகினம் அப்படி வருபவர்களில் கோத்தவின் வெள்ளைவான் கூட்டமும் உள்ளே வர சந்தர்ப்பம் உண்டு டபுள் ஏஜென்டாக .

அங்கை யுத்த குற்றம் செய்த கனபேர் மேற்கத்திய நாடுகளில் இரட்டை   பிரஜாவுரிமை எடுத்து வாழ்கிறார்கள். மனித உரிமை எல்லாம் பேச்சுக்கு தான் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, puthalvan said:

அங்கை யுத்த குற்றம் செய்த கனபேர் மேற்கத்திய நாடுகளில் இரட்டை   பிரஜாவுரிமை எடுத்து வாழ்கிறார்கள். மனித உரிமை எல்லாம் பேச்சுக்கு தான் 

எல்லாம் சுமத்திரன் போன்ற ஆட்காட்டிகள் இருக்கும்மட்டும் மனித உரிமை பேச்சுக்குத்தான் இருக்கும் நண்பரே .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பிரச்சனைக்கெல்லாம் உடனடி தீர்வு அமெரிக்கன் கையிலை இருக்கு. இதுவரை கிடப்பில் போடப்பட்டிருந்த கோத்தாவின் பிரஜாவுரிமை விலகல் விண்ணப்பத்தை பரிசீலிக்க தொடங்கியிருக்கிறோம் என்று அமெரிக்க குடிவரவு குடியகல்வு அமைச்சு ஒரு அறிக்கை விட்டாலே போதும் கோத்தாவின் கதை கந்தலாகிவிடும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.