Jump to content

சீமானின் இன்னொரு புருடா பேச்சு - ஆள் வைத்து உபசரித்தார் பிரபாகரன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ராசவன்னியன் said:

எங்காவது அப்படி சொல்லி இருக்கிறேனா..?

ஒவ்வொருவருக்கும் சில விருப்பு, வெறுப்புகள் இருக்கின்றன, சிலருக்கு சீமானின் உணர்ச்சிகரமான பேச்சுகள் பிடித்திருக்கிறது, ஆனால் அவைகள் பெரும்பான்மையோரை கவர்ந்திழுத்து ஈழத்திற்கு உதவும் சக்தியாக மாறுமா? என்பதுதான் கேள்வி. மாறினால் அனைவருக்கும் சந்தோசம்

சில முதிர்ச்சியற்ற பேச்சுகள் இருக்கும் ஆதரவு தளத்தையும் குறைத்துவிடக் கூடாது என்ற ஆதங்கம் தானப்பு.

உங்களாலோ அல்லது இங்கு சீமானுக்கு எதிராக கருத்து எழுதுபவர்களால் அல்லது என்னால் கூட தமிழர்களுக்காக சீமானின் அசுரத்தனமான இயங்கு நிலைக்கு போக முடியாது எங்களால் முடியாத ஒன்றை சீமான் செய்கிறார் தமிழுக்காய் உண்மையில் தமிழ் நல்லா இருக்கணும் என்றால் என்ன செய்யணும் ?

பதில் உங்களின் சிந்தனைக்கு .

சீமான் உங்களிடமோ எங்களிடமோ வந்து சொத்தை பிரித்து தா என்று திமுக அல்லது அதிமுக போன்று அராஜகம் பண்ணுவதில்லை அவர் சரியாக கதைக்கிறார் பிழையாக கதைத்தாலும் அது அவர் கொண்ட பாதை நாங்க அழுது ஒண்டும் ஆவபோவதில்லை .

Link to comment
Share on other sites

  • Replies 193
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அணுகுமுறையை மாற்றி ஈழ ஆதரவு சக்திகளை ஒருங்கிணைத்து செல்ல, விலைபோகாத அதே சமயம் மக்களுக்கு தீர்க்கமான முடிவெடுக்க, தமிழ் நலன் காக்க வசீகரமான தலைமை வேண்டும். தமிழ்நாட்டில் இதுவரை அப்படி யாரும் வரவில்லை. (தமிழை பேசி, தமிழால் தன்னை மட்டும் உயர்த்திக்கொண்டவர்களை பார்த்திருப்பீர்கள்.) மக்கள்தான் தேடி தெரிவு செய்ய வேண்டும்.

ஒருவேளை சீமான் பக்குவப்பட்டு அந்த இடத்திற்கு வந்தால் மிக்க மகிழ்ச்சியே.   

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ராசவன்னியன் said:

ஒருவேளை சீமான் பக்குவப்பட்டு அந்த இடத்திற்கு வந்தால் மிக்க மகிழ்ச்சியே.   

அவர் அப்படி வரும்வரை நாங்கள் அவர்மீது  கல்லெறிவதை நிப்பாட்டி வைப்போமே ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

றீ

33 minutes ago, பெருமாள் said:

அவர் அப்படி வரும்வரை நாங்கள் அவர்மீது  கல்லெறிவதை நிப்பாட்டி வைப்போமே ...

அப்படீங்றீங்க..?

சரியானால் ஓ.கே! vil-donne5.gif

 

Link to comment
Share on other sites

2 hours ago, ராசவன்னியன் said:

அணுகுமுறையை மாற்றி ஈழ ஆதரவு சக்திகளை ஒருங்கிணைத்து செல்ல, விலைபோகாத அதே சமயம் மக்களுக்கு தீர்க்கமான முடிவெடுக்க, தமிழ் நலன் காக்க வசீகரமான தலைமை வேண்டும். தமிழ்நாட்டில் இதுவரை அப்படி யாரும் வரவில்லை. (தமிழை பேசி, தமிழால் தன்னை மட்டும் உயர்த்திக்கொண்டவர்களை பார்த்திருப்பீர்கள்.) மக்கள்தான் தேடி தெரிவு செய்ய வேண்டும்.

ஒருவேளை சீமான் பக்குவப்பட்டு அந்த இடத்திற்கு வந்தால் மிக்க மகிழ்ச்சியே.   

 

 

அவ்வாறான எந்த ஒரு தலமையும் உருவாக ஈழத்திலும் தமிழகத்திலும் வாய்ப்பே இல்லை. புலிகளின் முடிவுக்குப் பின்னர் புலிக்கொடியையும் தலைவர் உருவப்படத்தையும் வெளிப்படையாக முன்நிறுத்தி செல்லும் சீமானின் போக்கு ஏனைய ஈழ ஆதரவாளர்களிடம் இருநது வேறுபடுகின்றது. இதற்கக சீமானை தூக்கி உள்ளுக்கு போட்டிருக்கலாம் , ராஜீவை தமிழ்மண்ணில் கொன்றோம் என்றதற்காகவேனும் உள்ளுக்கு போட்டிருக்கலாம். இருந்தும் அவை நடக்கவில்லை. புலிகளின் அடயாளத்தை முன்றாக அழிப்பதால் எந்த நன்மையும்  இலங்கை தொடர்பான அணுகுமுறையில் இந்தியாவுக்கு கிடையாது. இனிவரும் காலங்களில் இலங்கை இந்திய உறவுகளின் போக்குக்கு ஏற்ப இநத நிலமை மாறலாம் இதன் அடிப்படையில் சீமான்மேலும் வளரலாம் அல்லது காணாமல் போகலாம். புலிகளின் முடிவு, அதன் பின்னரான இலங்கை இந்திய உறவு, இவற்றின் மீதான உளவுத்துறையின் கவனிப்பு என்ற பலதரப்பட்ட நிலையில் ஒரு வாய்ப்பு சீமானுக்கு ஏற்படுகின்றது. அதை சரியாகப் பயன்படுத்திக்கொண்டார்.  ஈழப்போராட்ட முடிவோடு ஏற்பட்ட வாய்ப்பை திராவிட கருத்தியலை கடந்த தமிழ்த்தேசீய கருத்தியலை முன் நகர்த்தவும் தமிழ்நாட்டின் இயற்கை வளங்கள் மீதான விழிப்புணர்வு. அணு உலை மீதேன் திட்டங்களுக்கு எதிரான போராட்டங்கள் என பலதை இந்த வாய்ப்போடு இணைத்துக்கொண்டார். ஈழத்தமிழர்கள் மீதான மத்திய அரசின் துரோகங்கள் வெளிப்படையக பேசப்பட்டது. தமிழக அரசியலில் புதியதொரு சிந்தனை தோற்றுவிக்கப்பட்டது. சீமான் ஆட்சியை பிடிப்பார் அல்லது டெப்பாசிட் வாங்கமாட்டார் என்பது பெரியவிசயமில்லை. எதிர்காலத்தில் என்ன ஆவார் என்பது கூட நிச்சயமில்லை. ஆனால் ஒரு வாய்ப்பை தமிழர்கள் சார்பான பால பிரச்னைகளை பேசவும் பல கேள்விகளை எழுப்பவும் பல கோணத்திலும் சிந்திக்கவும் என பயன்படுத்திக்கொண்டார்.  இந்த வாய்பை எப்படி புரிந்துகொள்வதென்றால் புலிகள் போராட்டம் உயிர்ப்புடன் இருக்கும் போது சீமான் புலிக்கொடியை தூக்கியிருந்தால் அதை ஒருபோதும் இந்திய உளவுத்துறை அனுமதித்திருக்காது. 

எம்மவர்களிடம் தமது இனம் குறித்து மேன்மையான இனம் என்ற ஒரு கற்பனை இருக்கின்றது,,  அந்த கற்பனை மேன்மைக்கு ஏற்ப ஒரு தலமையையும் கற்பனை செய்கின்றபடியால் முட்டையில் மயிர் புடுங்கிக்கொண்டிருப்பார்கள். யதார்த்தத்தில் சாதி மதம் பிரதேசவாத ஏற்றதாழ்வுகளை கடந்து இனம் என்ற ஒரு கட்டமைப்பை நோக்கி நகர எத்தனிக்கின்றோமே தவிர நாம் ஒரு முழுமையான இனக்கட்டமைபில் இல்லை.பானையில் இல்லாத ஒன்றை அகப்பையில் தேடுவது போல தலமையை தேடுகின்றோம். 

சீமான் பேசுவதில் ஒரு குறை கண்டுபிடிப்பதை விட ஒன்பது நிறைவை கேட்க முடியும். ஒன்றை விட ஒன்பது பெரிது என கருதுவதே ஆரோக்கியமானது. இல்லை என்பவர்கள் ஒரு குறையும் இல்லாத ஒரு அரசியல் தலமையை சுட்டிக்காட்டுங்கள் அத்தலமைக்கு ஆதரவை கொடுப்போம்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, சண்டமாருதன் said:

அவ்வாறான எந்த ஒரு தலமையும் உருவாக ஈழத்திலும் தமிழகத்திலும் வாய்ப்பே இல்லை. புலிகளின் முடிவுக்குப் பின்னர் புலிக்கொடியையும் தலைவர் உருவப்படத்தையும் வெளிப்படையாக முன்நிறுத்தி செல்லும் சீமானின் போக்கு ஏனைய ஈழ ஆதரவாளர்களிடம் இருநது வேறுபடுகின்றது. இதற்கக சீமானை தூக்கி உள்ளுக்கு போட்டிருக்கலாம் , ராஜீவை தமிழ்மண்ணில் கொன்றோம் என்றதற்காகவேனும் உள்ளுக்கு போட்டிருக்கலாம். இருந்தும் அவை நடக்கவில்லை. புலிகளின் அடயாளத்தை முன்றாக அழிப்பதால் எந்த நன்மையும்  இலங்கை தொடர்பான அணுகுமுறையில் இந்தியாவுக்கு கிடையாது. இனிவரும் காலங்களில் இலங்கை இந்திய உறவுகளின் போக்குக்கு ஏற்ப இநத நிலமை மாறலாம் இதன் அடிப்படையில் சீமான்மேலும் வளரலாம் அல்லது காணாமல் போகலாம். புலிகளின் முடிவு, அதன் பின்னரான இலங்கை இந்திய உறவு, இவற்றின் மீதான உளவுத்துறையின் கவனிப்பு என்ற பலதரப்பட்ட நிலையில் ஒரு வாய்ப்பு சீமானுக்கு ஏற்படுகின்றது. அதை சரியாகப் பயன்படுத்திக்கொண்டார்.  ஈழப்போராட்ட முடிவோடு ஏற்பட்ட வாய்ப்பை திராவிட கருத்தியலை கடந்த தமிழ்த்தேசீய கருத்தியலை முன் நகர்த்தவும் தமிழ்நாட்டின் இயற்கை வளங்கள் மீதான விழிப்புணர்வு. அணு உலை மீதேன் திட்டங்களுக்கு எதிரான போராட்டங்கள் என பலதை இந்த வாய்ப்போடு இணைத்துக்கொண்டார். ஈழத்தமிழர்கள் மீதான மத்திய அரசின் துரோகங்கள் வெளிப்படையக பேசப்பட்டது. தமிழக அரசியலில் புதியதொரு சிந்தனை தோற்றுவிக்கப்பட்டது. சீமான் ஆட்சியை பிடிப்பார் அல்லது டெப்பாசிட் வாங்கமாட்டார் என்பது பெரியவிசயமில்லை. எதிர்காலத்தில் என்ன ஆவார் என்பது கூட நிச்சயமில்லை. ஆனால் ஒரு வாய்ப்பை தமிழர்கள் சார்பான பால பிரச்னைகளை பேசவும் பல கேள்விகளை எழுப்பவும் பல கோணத்திலும் சிந்திக்கவும் என பயன்படுத்திக்கொண்டார்.  இந்த வாய்பை எப்படி புரிந்துகொள்வதென்றால் புலிகள் போராட்டம் உயிர்ப்புடன் இருக்கும் போது சீமான் புலிக்கொடியை தூக்கியிருந்தால் அதை ஒருபோதும் இந்திய உளவுத்துறை அனுமதித்திருக்காது. 

எம்மவர்களிடம் தமது இனம் குறித்து மேன்மையான இனம் என்ற ஒரு கற்பனை இருக்கின்றது,,  அந்த கற்பனை மேன்மைக்கு ஏற்ப ஒரு தலமையையும் கற்பனை செய்கின்றபடியால் முட்டையில் மயிர் புடுங்கிக்கொண்டிருப்பார்கள். யதார்த்தத்தில் சாதி மதம் பிரதேசவாத ஏற்றதாழ்வுகளை கடந்து இனம் என்ற ஒரு கட்டமைப்பை நோக்கி நகர எத்தனிக்கின்றோமே தவிர நாம் ஒரு முழுமையான இனக்கட்டமைபில் இல்லை.பானையில் இல்லாத ஒன்றை அகப்பையில் தேடுவது போல தலமையை தேடுகின்றோம். 

சீமான் பேசுவதில் ஒரு குறை கண்டுபிடிப்பதை விட ஒன்பது நிறைவை கேட்க முடியும். ஒன்றை விட ஒன்பது பெரிது என கருதுவதே ஆரோக்கியமானது. இல்லை என்பவர்கள் ஒரு குறையும் இல்லாத ஒரு அரசியல் தலமையை சுட்டிக்காட்டுங்கள் அத்தலமைக்கு ஆதரவை கொடுப்போம்.

எப்படியாகினும் இன உணர்வும், தமிழரின் தனித்தன்மையும் தக்க வைக்கப்படல் வேண்டும். இல்லையெனில் போலி தேசியத்தில் அமிழ்ந்துவிடும் நிலை உள்ளது.

சிவப்பில் குறிக்கப்பட்டுள்ளவை கசப்பான உண்மைதான்.

சுகன் அவர்களுக்கும் இனத்தின் மீது சற்றே மனக்கசப்பும், துறவறம் போன்ற மனநிலையும் அவரின் அனுபவ பதிவில் உணர முடிகிறது.

கருத்திற்கு நன்றி, திரு.சுகன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

த‌லைவ‌ர் அருகில் நிக்கும் இந்த‌ ஜ‌யா யார் என்று தெரியுதா , த‌ன‌து இர‌ண்டு ம‌க‌ன்க‌ளையும் போராட்ட‌த்தில் இணைத்த‌வ‌ர் , த‌மிழீழ‌த்தில் மாவீர‌ர் துயிலும் இல்ல‌த்தை இந்த‌ ஜ‌யா தான் திற‌ந்து வைச்ச‌வ‌ர் , அண்ண‌ன் மாவீர‌ நாளில் பேசும் போது ஜ‌யாவும் முன்னுக்கு இருந்து அண்ண‌ன் சீமானின் பேச்சை கேட்டு கொண்டு இருந்தார் /

இதை பார்த்த‌ பிற‌க்கும் அண்ண‌ன் சீமான் பொய் பேசுகிறார் என்று நீங்க‌ள் எழுதினா உண்மையில் உங்க‌ளை விட‌ அடி முட்டாள்க‌ள் இந்த‌ உல‌க‌த்தில்  இருக்க‌ மாட்டின‌ம் 

20191202-114005.png
20191202-113940.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முத‌ல் க‌ரும்புலி ( மில்ல‌ரின் அம்மாவுட‌ன் அண்ண‌ன் சீமான் )

இவ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமான் மீது விம‌ர்ச‌ன‌ம் வைச்சா யோசிக்க‌ வேண்டிய‌ விடைய‌ம் , த‌லைவ‌ர் அருகில் இருந்த‌ ப‌ல‌ உற‌வுக‌ள் அண்ண‌ன் சீமானோடு இருக்கிறார்க‌ள் ,

சிங்க‌ள‌வ‌னை விட‌ த‌மிழின‌த்தில் இருக்கும்  ஒரு சில‌ கொசுக்க‌ளில் தொல்லை தாங்க‌ முடிய‌ல‌ 😁😂🤣

20191202-121333.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, சண்டமாருதன் said:

 

 

எம்மவர்களிடம் தமது இனம் குறித்து மேன்மையான இனம் என்ற ஒரு கற்பனை இருக்கின்றது,,  அந்த கற்பனை மேன்மைக்கு ஏற்ப ஒரு தலமையையும் கற்பனை செய்கின்றபடியால் முட்டையில் மயிர் புடுங்கிக்கொண்டிருப்பார்கள். யதார்த்தத்தில் சாதி மதம் பிரதேசவாத ஏற்றதாழ்வுகளை கடந்து இனம் என்ற ஒரு கட்டமைப்பை நோக்கி நகர எத்தனிக்கின்றோமே தவிர நாம் ஒரு முழுமையான இனக்கட்டமைபில் இல்லை.பானையில் இல்லாத ஒன்றை அகப்பையில் தேடுவது போல தலமையை தேடுகின்றோம். 

சீமான் பேசுவதில் ஒரு குறை கண்டுபிடிப்பதை விட ஒன்பது நிறைவை கேட்க முடியும். ஒன்றை விட ஒன்பது பெரிது என கருதுவதே ஆரோக்கியமானது. இல்லை என்பவர்கள் ஒரு குறையும் இல்லாத ஒரு அரசியல் தலமையை சுட்டிக்காட்டுங்கள் அத்தலமைக்கு ஆதரவை கொடுப்போம்.

அதே...

நன்றி  ஐயா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, ஈழப்பிரியன் said:

சீமான் சொல்லும் நல்ல விடயங்களைப் பற்றி கதைக்க உற்சாகப்படுத்த யாருமே முன்வருவதில்லை.

அருமையான‌ ப‌திவு ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா , த‌மிழ் நாட்டுக்கு போனால் அண்ண‌னை நேரில் ச‌ந்திச்சு க‌தைச்சு பாருங்கோ , ப‌ல‌ உண்மைக‌ள் அப்ப‌ தெரியும் , 
இவ‌ர்க‌ள் யாரையும் விட்டு வைக்க‌ மாட்டின‌ம் , ஒருத‌ர் மெதுவாய் வ‌ள‌ந்து வ‌ருகிறார் என்றால் அவ‌ர் மீது அதிக‌ க‌ல் எறிக‌ள் விழும் ,

அண்ண‌ன் சீமானின் பெற்றோர் குடுசை வீட்டில் தான் வாழுகிறார்க‌ள் , இதை நான் சொன்னால் யாராவ‌து ந‌ம்புவின‌ம்மா ,

த‌மிழ் நாட்டுக்கு போகும் போது வைப்ப‌ரில் சொல்லுங்கோ , அண்ண‌னுட‌ன் ச‌ந்திப்பை நான் ஏற்ப‌டுத்தி தாறேன் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா , 

இதுவ‌ரை யாழ் உற‌வுக‌ள் பார்க்காத‌ நிறைய‌ ப‌ட‌ங்க‌ள் இருக்கு அண்ண‌ன் சீமான் வ‌ன்னியில் நின்ற‌ போது எடுத்த‌ ப‌ட‌ங்க‌ள் , 

Link to comment
Share on other sites

7 hours ago, சண்டமாருதன் said:

 

 

சீமான் பேசுவதில் ஒரு குறை கண்டுபிடிப்பதை விட ஒன்பது நிறைவை கேட்க முடியும். ஒன்றை விட ஒன்பது பெரிது என கருதுவதே ஆரோக்கியமானது. இல்லை என்பவர்கள் ஒரு குறையும் இல்லாத ஒரு அரசியல் தலமையை சுட்டிக்காட்டுங்கள் அத்தலமைக்கு ஆதரவை கொடுப்போம்.

 

 

சீமான் பேசுவதில் உள்ளது குறை அல்ல. அவர் ஈழம் தொடர்பாக, தலைவர் தொர்பாக பேசுவது பொய்,பம்மாத்து, பித்தலாட்டம்.

போலி திராவிடம் பேசும் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக தன் கட்சியை மக்கள் முன் நிறுத்துகின்றேன் என்று பறை சாற்றும் சீமான் பேசுவதும் பொய்யும் பித்தலாட்டமும் பாசிசமும் தான். பிரச்சனைகளின் மூலத்தினை விட்டு விட்டு தமிழகத்தின் பிரச்சனைகளுக்கு திராவிடமும், தமிழர் அல்லாதவர்களும் மட்டுமே காரணம் என்கின்ற பாசிசமும் அவரின் அரசியல் முழுதும் வியாபித்து கிடக்கு.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ண‌ன் சீமான் ஆயிர‌ம் ந‌ல்ல‌ விடைய‌ங்க‌ளை பேசி இருக்கிறார் , அது இவ‌ர்க‌ளில் காதில் கேக்காது , 200ரூபாய்க்கு அண்ண‌ன் சீமானுக்கு எதிரா மிம்ஸ் புர‌ளிய‌ கில‌ப்ப‌ த‌மிழ் நாட்டில் ப‌ல‌ர் இருக்கின‌ம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

அருமையான‌ ப‌திவு ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா , த‌மிழ் நாட்டுக்கு போனால் அண்ண‌னை நேரில் ச‌ந்திச்சு க‌தைச்சு பாருங்கோ , ப‌ல‌ உண்மைக‌ள் அப்ப‌ தெரியும் , 
இவ‌ர்க‌ள் யாரையும் விட்டு வைக்க‌ மாட்டின‌ம் , ஒருத‌ர் மெதுவாய் வ‌ள‌ந்து வ‌ருகிறார் என்றால் அவ‌ர் மீது அதிக‌ க‌ல் எறிக‌ள் விழும் ,

அண்ண‌ன் சீமானின் பெற்றோர் குடுசை வீட்டில் தான் வாழுகிறார்க‌ள் , இதை நான் சொன்னால் யாராவ‌து ந‌ம்புவின‌ம்மா ,

த‌மிழ் நாட்டுக்கு போகும் போது வைப்ப‌ரில் சொல்லுங்கோ , அண்ண‌னுட‌ன் ச‌ந்திப்பை நான் ஏற்ப‌டுத்தி தாறேன் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா , 

இதுவ‌ரை யாழ் உற‌வுக‌ள் பார்க்காத‌ நிறைய‌ ப‌ட‌ங்க‌ள் இருக்கு அண்ண‌ன் சீமான் வ‌ன்னியில் நின்ற‌ போது எடுத்த‌ ப‌ட‌ங்க‌ள் , 

அப்படியே  வல்வை சகாறாவைத் தெரியுமா என்றும் கேட்டு சொல்லுங்க......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, வல்வை சகாறா said:

அப்படியே  வல்வை சகாறாவைத் தெரியுமா என்றும் கேட்டு சொல்லுங்க......

இது  தான்  உங்க பிரச்சினையா?🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

****

11 hours ago, சண்டமாருதன் said:

 

அவ்வாறான எந்த ஒரு தலமையும் உருவாக ஈழத்திலும் தமிழகத்திலும் வாய்ப்பே இல்லை. புலிகளின் முடிவுக்குப் பின்னர் புலிக்கொடியையும் தலைவர் உருவப்படத்தையும் வெளிப்படையாக முன்நிறுத்தி செல்லும் சீமானின் போக்கு ஏனைய ஈழ ஆதரவாளர்களிடம் இருநது வேறுபடுகின்றது. இதற்கக சீமானை தூக்கி உள்ளுக்கு போட்டிருக்கலாம் , ராஜீவை தமிழ்மண்ணில் கொன்றோம் என்றதற்காகவேனும் உள்ளுக்கு போட்டிருக்கலாம். இருந்தும் அவை நடக்கவில்லை. புலிகளின் அடயாளத்தை முன்றாக அழிப்பதால் எந்த நன்மையும்  இலங்கை தொடர்பான அணுகுமுறையில் இந்தியாவுக்கு கிடையாது. இனிவரும் காலங்களில் இலங்கை இந்திய உறவுகளின் போக்குக்கு ஏற்ப இநத நிலமை மாறலாம் இதன் அடிப்படையில் சீமான்மேலும் வளரலாம் அல்லது காணாமல் போகலாம். புலிகளின் முடிவு, அதன் பின்னரான இலங்கை இந்திய உறவு, இவற்றின் மீதான உளவுத்துறையின் கவனிப்பு என்ற பலதரப்பட்ட நிலையில் ஒரு வாய்ப்பு சீமானுக்கு ஏற்படுகின்றது. அதை சரியாகப் பயன்படுத்திக்கொண்டார்.  ஈழப்போராட்ட முடிவோடு ஏற்பட்ட வாய்ப்பை திராவிட கருத்தியலை கடந்த தமிழ்த்தேசீய கருத்தியலை முன் நகர்த்தவும் தமிழ்நாட்டின் இயற்கை வளங்கள் மீதான விழிப்புணர்வு. அணு உலை மீதேன் திட்டங்களுக்கு எதிரான போராட்டங்கள் என பலதை இந்த வாய்ப்போடு இணைத்துக்கொண்டார். ஈழத்தமிழர்கள் மீதான மத்திய அரசின் துரோகங்கள் வெளிப்படையக பேசப்பட்டது. தமிழக அரசியலில் புதியதொரு சிந்தனை தோற்றுவிக்கப்பட்டது. சீமான் ஆட்சியை பிடிப்பார் அல்லது டெப்பாசிட் வாங்கமாட்டார் என்பது பெரியவிசயமில்லை. எதிர்காலத்தில் என்ன ஆவார் என்பது கூட நிச்சயமில்லை. ஆனால் ஒரு வாய்ப்பை தமிழர்கள் சார்பான பால பிரச்னைகளை பேசவும் பல கேள்விகளை எழுப்பவும் பல கோணத்திலும் சிந்திக்கவும் என பயன்படுத்திக்கொண்டார்.  இந்த வாய்பை எப்படி புரிந்துகொள்வதென்றால் புலிகள் போராட்டம் உயிர்ப்புடன் இருக்கும் போது சீமான் புலிக்கொடியை தூக்கியிருந்தால் அதை ஒருபோதும் இந்திய உளவுத்துறை அனுமதித்திருக்காது. 

எம்மவர்களிடம் தமது இனம் குறித்து மேன்மையான இனம் என்ற ஒரு கற்பனை இருக்கின்றது,,  அந்த கற்பனை மேன்மைக்கு ஏற்ப ஒரு தலமையையும் கற்பனை செய்கின்றபடியால் முட்டையில் மயிர் புடுங்கிக்கொண்டிருப்பார்கள். யதார்த்தத்தில் சாதி மதம் பிரதேசவாத ஏற்றதாழ்வுகளை கடந்து இனம் என்ற ஒரு கட்டமைப்பை நோக்கி நகர எத்தனிக்கின்றோமே தவிர நாம் ஒரு முழுமையான இனக்கட்டமைபில் இல்லை.பானையில் இல்லாத ஒன்றை அகப்பையில் தேடுவது போல தலமையை தேடுகின்றோம். 

சீமான் பேசுவதில் ஒரு குறை கண்டுபிடிப்பதை விட ஒன்பது நிறைவை கேட்க முடியும். ஒன்றை விட ஒன்பது பெரிது என கருதுவதே ஆரோக்கியமானது. இல்லை என்பவர்கள் ஒரு குறையும் இல்லாத ஒரு அரசியல் தலமையை சுட்டிக்காட்டுங்கள் அத்தலமைக்கு ஆதரவை கொடுப்போம்.

 

 

சீமான் ,புலிக் கொடியையும்,தலைவர் படத்தையும் வைத்து எதுவும் செய்யலாம் ...இந்திய அரசு கண்டு கொள்ளாது....சீமான் றோவின் ஆள் என்று தெரியாதா?...தலைவரது படத்தை ,புலிக் கொடியை வைத்து வைகோவோ அல்லது வேறு யாராவது தமிழகத் தலைவர் ஆர்ப்பாட்டம் செய்தால் உடன் உள்ளுக்கு போய் விடுவார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாட்டி வ‌டை சுட்ட‌ க‌தை முடிஞ்சு , இப்ப‌ வாத்து முட்டை இட்ட‌ க‌த‌ தொட‌ங்கியாச்சு ,

பொட்டு அம்மானுக்கு ப‌க்க‌த்தில் நின்ற‌வை கூட‌ இப்ப‌டி ம‌ட்ட‌மாய் எழுத‌ மாட்டின‌ம் ,

ச‌கோத‌ர‌ன் ( இடும்பாவ‌ன‌ம் கார்த்திக் ) போன‌ ஆண்டு சிறை வாழ்க்கையை அனுப‌விச்ச‌ அவ‌னுக்கு தான் தெரியும் ) 

20191202-191802.png
upload image

அண்ண‌ன் சீமான் மீது எத்த‌னை வ‌ழ‌க்குக‌ள் இருக்கு என்று கூட‌ தெரியாது , ஏதோ சும்மா கிறுக்கி போட்டு போக‌னும் சீமான் இந்திய‌ன் உள‌வுத்துறை ஆள் என்று , 

ஒரு பொது கூட்ட‌ம் போட‌ இட‌ம் எடுக்க‌ க‌ட்சி தொண்ட‌ர்க‌ள் ப‌டும் பாடு அவைக்கு தான் தெரியும் ,

அண்ண‌ன் சீமான் த‌மிழ் நாட்டு காவ‌ல்துறையுட‌ன் ச‌ண்டை போட்ட‌வ‌ர் , த‌லைவ‌ர் ப‌ட‌த்தை எல்லாம் எடுக்க‌ முடியாது என்று , 

சில‌ருக்கு விடியுர‌தும் தெரியாது இருளுற‌தும் தெரியா , சும்மா சீமான் மீது வாந்தி ம‌ட்டும் எடுக்க‌ தெரியும் , 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

இது  தான்  உங்க பிரச்சினையா?🤣

முகவர்களின் உண்மை முகத்தை அறிய ஆவல்  அதான்

Link to comment
Share on other sites

8 hours ago, பையன்26 said:

பாட்டி வ‌டை சுட்ட‌ க‌தை முடிஞ்சு , இப்ப‌ வாத்து முட்டை இட்ட‌ க‌த‌ தொட‌ங்கியாச்சு ,

பொட்டு அம்மானுக்கு ப‌க்க‌த்தில் நின்ற‌வை கூட‌ இப்ப‌டி ம‌ட்ட‌மாய் எழுத‌ மாட்டின‌ம் ,

ச‌கோத‌ர‌ன் ( இடும்பாவ‌ன‌ம் கார்த்திக் ) போன‌ ஆண்டு சிறை வாழ்க்கையை அனுப‌விச்ச‌ அவ‌னுக்கு தான் தெரியும் ) 

20191202-191802.png
upload image

அண்ண‌ன் சீமான் மீது எத்த‌னை வ‌ழ‌க்குக‌ள் இருக்கு என்று கூட‌ தெரியாது , ஏதோ சும்மா கிறுக்கி போட்டு போக‌னும் சீமான் இந்திய‌ன் உள‌வுத்துறை ஆள் என்று , 

ஒரு பொது கூட்ட‌ம் போட‌ இட‌ம் எடுக்க‌ க‌ட்சி தொண்ட‌ர்க‌ள் ப‌டும் பாடு அவைக்கு தான் தெரியும் ,

அண்ண‌ன் சீமான் த‌மிழ் நாட்டு காவ‌ல்துறையுட‌ன் ச‌ண்டை போட்ட‌வ‌ர் , த‌லைவ‌ர் ப‌ட‌த்தை எல்லாம் எடுக்க‌ முடியாது என்று , 

சில‌ருக்கு விடியுர‌தும் தெரியாது இருளுற‌தும் தெரியா , சும்மா சீமான் மீது வாந்தி ம‌ட்டும் எடுக்க‌ தெரியும் , 

வாத்து முட்டை தான் போடும் பையா,

குட்டி ஈணாது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, வல்வை சகாறா said:

முகவர்களின் உண்மை முகத்தை அறிய ஆவல்  அதான்

அப்படியானால்  எனது  பெயரை  முதலாவதாக  பதிந்து  வைத்துக்கொள்ளுங்கள்

தமிழன்  ஒன்று படாமல் 

சிங்களத்தை  சிறுபான்மையாக்காமல்

எமக்கு  விடிவில்லை

அதற்காக நான்  ஒரு  முகவர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, அபராஜிதன் said:

வாத்து முட்டை தான் போடும் பையா,

குட்டி ஈணாது 

சம்பந்தன் கொம்பனியும் ஊழலின் இமயம் கருணாநிதி வம்சங்களும் போட்ட பொன்வாத்து முட்டைகள் எத்தனை?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, நிழலி said:

சீமான் பேசுவதில் உள்ளது குறை அல்ல. அவர் ஈழம் தொடர்பாக, தலைவர் தொர்பாக பேசுவது பொய்,பம்மாத்து, பித்தலாட்டம்.

போலி திராவிடம் பேசும் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக தன் கட்சியை மக்கள் முன் நிறுத்துகின்றேன் என்று பறை சாற்றும் சீமான் பேசுவதும் பொய்யும் பித்தலாட்டமும் பாசிசமும் தான். பிரச்சனைகளின் மூலத்தினை விட்டு விட்டு தமிழகத்தின் பிரச்சனைகளுக்கு திராவிடமும், தமிழர் அல்லாதவர்களும் மட்டுமே காரணம் என்கின்ற பாசிசமும் அவரின் அரசியல் முழுதும் வியாபித்து கிடக்கு.

 

பிரச்சனைகளின் மூலத்தை யாழ்கள உறவுகளுக்காக உங்களால் கொஞ்சம் விளக்கி எழுத முடியுமா?
சீமான் கூறும் காரணிகளே மூலமானவை என்பதை சீமானுக்கு முந்திய திராவிட கட்சிகளும் 
சொல்லி இருக்கின்றன அதை பின்னாளில் வெறும் பார்ப்பனிய எதிர்ப்பாக சுருக்கிக்கொண்டு விடார்கள்.
ஒரு பகுதியை கம்யூனிஸ்ட் கட்சிகள் தமது கொள்கை பரப்பாகவே செய்கிறார்கள். 
அதுதான் உண்மை என்று ........ இன்னொரு வடிவில் யாரும் பேசாததால் நான் சீமானை நம்பி வருகிறேன்.

உங்களிடம் இன்னொரு மூலம் இருக்கிறது என்றால் அதை அறிய வேண்டும் என்று எண்ணுகிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/1/2019 at 9:11 PM, ராசவன்னியன் said:

அணுகுமுறையை மாற்றி ஈழ ஆதரவு சக்திகளை ஒருங்கிணைத்து செல்ல, விலைபோகாத அதே சமயம் மக்களுக்கு தீர்க்கமான முடிவெடுக்க, தமிழ் நலன் காக்க வசீகரமான தலைமை வேண்டும். தமிழ்நாட்டில் இதுவரை அப்படி யாரும் வரவில்லை. (தமிழை பேசி, தமிழால் தன்னை மட்டும் உயர்த்திக்கொண்டவர்களை பார்த்திருப்பீர்கள்.) மக்கள்தான் தேடி தெரிவு செய்ய வேண்டும்.

ஒருவேளை சீமான் பக்குவப்பட்டு அந்த இடத்திற்கு வந்தால் மிக்க மகிழ்ச்சியே.   

 

உங்கள் எதிர்பார்ப்பு சரியானது   தமிழக தளம் பிழையானது.
தமிழ்த்தேசியம் என்னும்  கருத்து சீமானுக்கு சொந்தம் என்றுதான் பலரும் எண்ணுகிறார்கள் 
சில நூறு வருடம் முன்பே தமிழ் தேசிய கருத்தாக்கம் இருந்து இருக்கிறது. அதை திராவிட விற்பன்னர்கள் 
மழுங்கடித்து உணர்வாளர்களை பார்ப்பான்தான் உன் எதிரி என்று காட்டி திசை திருப்பினார்கள். பார்ப்பான் 
எதிரி என்பதால் அது உணர்வாளர்கள் தளத்தில் இலகுவாக பற்றியது என்பதுதான் உண்மை. 

உலகின் ஒட்டுமொத்த மீடியாவும் பண முதலாளிகள்  அரசியல் கட்சிகள் சார்ந்தவை 
சீமானின் 1 மணிநேர பேச்சில்  1 நிமிடத்தை மக்களிடம் சேர்த்து வெறுப்பை உண்டுபண்ணுவது என்பதை 
தமிழக மீடியாக்கள் சிறப்பாக செய்துவருகிறார்கள். இதை செய்கிறார்கள் என்பது தெரிந்துகொண்டும் 
அசதியாக இருக்கும் சீமானின் போக்கில் உங்களைப்போல எனக்கும் உடன்பாடு இல்லை. 

இங்கு யாழ்களத்தில் ஈழத்தவர்கள் எழுதுகிறார்கள் என்றால் இவர்கள் எதோ புலிபற்றி 
தெரிந்தவர்கள் என்று பொருள் கிடையாது எல்லோரும் தம் தம் பாதுகாப்பு கருதி ஓடியவர்கள்தான் 
நடுநிலை வாதி என்று இல்லாத ஒரு நிலையில் தொங்கிக்கொண்டு வாந்தி எடுப்பதை தவிர இவர்கள் யாரும் 
புடுங்கியது என்று ஒரு ஆணியும் கிடையாது. இதை பலமுறை நான் நேரிலேயே பார்த்தவன். 1987 கடைசிகளில்  நான் புலி ஆதரவாளனே கிடையாது ... நான் டெலோ இயக்கத்தை சார்ந்து இருந்தததால் என்னைக்கூட  புலிகள் கொண்டு சென்று வைத்திருந்தார்கள் ..... அதிர்ஷ்டவசமாக டெலோ அப்போது தாஸ் க்ரூப்  பொபி குரூப் ஏன்னு பிரிந்து இருந்தது தலைமை (சிறிசபாரட்ணம்) பொபியோடு இருந்தார் இருவரும் கூடியே  தாஸை சுட்டு கொன்றார்கள்.  இதில் தாஸ் குரூப்பை சார்ந்தவர்களிடம் ஆயுதங்களை வாங்கிவிட்டு மேலதிக  விசாரணைகளையும் செய்துவிட்டு 3-10 நாட்களுக்குள் விட்டு விடார்கள் அவர்கள் அவர்கள் பற்றிய  பொறுப்புகள்  ஆயுத கையாளுதல் என்பதால் சிலர் முன்னும் பின்னுமாக விடுதலை ஆனார்கள். நான் சிறுவனாக  இருந்தேன் 4ஆவது நாளே என்னை விட்டு விடார்கள்.  1987 கடைசியில் இந்திய இராணுவ சண்டை தொடங்கியவுடன்  பிரபாகரனின் மனைவியும் மகள் துவாராகவும் வந்தது எமது ஊருக்குத்தான் அங்கிருந்து எங்கோ கொண்டுசெல்ல  அவர்கள் திட்டம் இருந்து இருக்கும் அது சூழ்நிலை சரியில்லாத காரணத்தால் பின்தள்ள பட்டுக்கொண்டே இருந்தது. அப்போ இங்கு யாழ்களத்தில் குப்பை கொட்டுபவர்கள் போல இருந்த எந்த புலி  ஆதர்வாள்களும் அடைக்கலம் கொடுக்க தயாரில்லை. அவர்கள் இவர் இன்னார்தான் என்பதை யாருக்கும் சொல்லவும் இல்லை (ஒருவேளை தெரிந்து இருந்தால் கொடுத்து இருப்பார்களோ தெரியாது) அனேகணவர்கள்  அது இறந்துபோன புலேந்திரன் அம்மானின் மனைவி என்று ஊகித்து கொண்டார்கள் . இவர்களை  அப்போது ஒரு பாதுக்காப்பான இடத்தில் கொண்டு சென்று விட்டது நானும் எனது நண்பனும்.
பின்னாளில் ஒரு புலி ஆதரவு காரன்  அதில் பங்குபற்றிய புலிக்கு சொல்லியிருக்கிறார் .... என்னை நம்ப வேண்டாம் என்றும் நான்  டெலோவை சேர்ந்தவன் என்றும். அதை அவர் என்னிடம் சிரித்துக்கொண்டே சொன்னார்  காரணம் 1987இல் அவர்கள் ஓடிக்கொண்டு இருந்தபோது இருந்த நிலைமை அவர்களுக்கு தெரியும் என்பதால். இது யாழ்ப்பாண தமிழனின் இரத்தத்தில் ஊறியது ....  தானும் படுக்கான் தள்ளியும் படுக்கான்  என்று சொல்வதைப்போல. தானும் செய்யான் .... செய்கிறவனையும் விட மாட்டான். 

இப்போ சீமானை பற்றி இகழும் யாருக்கும்  முத்துக்குமார் எப்படி அநாதை பிணமானான்? என்பது மறந்து போயிருக்கும்  தமிழக அரசியல் தளத்தில் நான் புலி ஆதரவாளன் என்று நின்றது எவ்ளவு பெரியது என்று  பழையதை  மறந்து இருந்தால்  2008க்கு முந்திய தமிழகம் உங்களுக்கே ஞாபகம் இருக்காது. 
பிரபாகரன் எமது தலைவன் என்று இன்று தமிழகத்தில் எவன் சொன்னாலும் அதுக்கு சீமான்தான் காரணம்.
அப்படி ஏற்றுக்கொள்ளும் மனநிலை யாருக்கும் இருந்து இருந்தாலும் அரசியல் லாபம்  சொந்த வாழ்வு என்று எண்ணி  பயநிலையில்தான் இருந்தார்கள். அதை தகர்த்து ஒரு அக்கினி குஞ்சை முதலில் வைத்தது சீமான்தான் அதனால் அவர் சிறைக்கு கூட போனார் ........ அடங்கவில்லை தொடர்ந்தார். 

நேர்த்தியாக நீங்கள் விரும்புவதுபோல பேசிக்கொண்டு இருந்தால் ....... சீமானை எனக்கே தெரியாமல் போயிருக்கும். மீடியாக்கள் அப்படியே மழுங்கடித்து இருப்பார்கள். இப்போது கரி பூசுவத்துக்காவது 1 நிமிடம் என்றாலும்  சீமானை காட்டுகிறார்கள்.  சர்ச்சை பேச்சு வேண்டாம் என்று உங்களைப்போல நானும் விரும்புகிறேன் .......... சர்ச்சை இல்லாதுபோனால்  சீமானும் இல்லாமல் போய்விடுவார் என்ற இன்னொரு கசப்பான  உண்மையும் இருக்கிறது. 

உங்கள் விருப்பம்போல எல்லோரையும் ஒன்று சேர்ப்பது என்பது முடியாத காரணம் 
சீமானின் நிலைப்பாடே அவர்களுடன் கூடாது இருப்பதுதான். சீமானின் அரசியல் வேறுவிதமானது 
அதில் தோல்வி கிடையாது  .......தேர்தல் ஆடசி என்பது எல்லாம் இரண்டாம் பட்ஷம். அவர்களிடம் இருந்து பறிக்க வேண்டும்  என்பதுதான் முன்னிலை ....... ஆளுதல் என்பது இரண்டாம் நிலை அதனால்தான் தூர பார்வை  இல்லையோ என்று கூட எண்ணுகிறேன். 

Link to comment
Share on other sites

Wஎல்லோருக்கும் என்னதான் பிரச்சனை   ? 

சீமான் தன்னை தலைவரோடு சேர்த்து பேசுவதா ??? 

சீமான் பேசினால் பேசிவிட்டு போகட்டுமே.  அதனால் உங்களுக்கென்ன பிரச்சனை  ?  சீமான் அதிகமாக கதைப்பதுதான்  பிரச்சனை என்றால் அது அவர் அரசியல் செய்யும் தமிழகம் பார்த்துக்கொள்ளும்.  உங்களுக்கென்ன வந்தது  ???? 

சீமான் பிரபாகரனை தவறான விடயங்களுக்கு பாவித்ததால் அது எவ்வளவு காலத்துக்கு நின்று பிடிக்கும்  ? 

கொஞ்சம் யோசிக்க வேண்டாமா  ? 

நாங்கள் மட்டும்தான் பிரபாகரனையும் விடுதலைப் புலிகளையும் தத்தெடுத்துக் கொண்டோமா ? 

எல்லோருக்கும் என்னதான் பிரச்சனை  ? 

Karl marx,  Lenin,  Fidel Castro,  Che Guvera எல்லோரையும் எங்கள் விருப்பப்படி கதைப்போம் ஆனால் பிரபாகரனை எண்களைத் தவிர வேறு ஒருவரும் கதைப்பது கூடாதா ? 

என்ன மனநிலை இது  ? 

அதுக்குள்ள கேலிச்சித்திரம் வேற.

 

பிரபாகரனை  தமிழக மக்கள் கதைக்காமல் வேறு யாருக்கு கதைக்க உரிமை இருக்கு ?  

(சீமானின் பேச்சில் தவறுகளிருந்தால் அதனை ஒரு தாய் தகப்பன்,  ஆசிரியர் நிலையில் இருந்து திருத்துவீங்களா,  அதை விடுத்து........ )

Link to comment
Share on other sites

2 hours ago, குமாரசாமி said:

சம்பந்தன் கொம்பனியும் ஊழலின் இமயம் கருணாநிதி வம்சங்களும் போட்ட பொன்வாத்து முட்டைகள் எத்தனை?

அதை ஏன்யா என்கிட்ட கேட்கிறீங்க நான் என்ன நீங்க சீமானுக்கு முட்டு கொடுப்பது போல சம்பந்தன் சுமந்திரன் அல்லது் கருணாநிதி குடும்பத்துக்கு கண்ணை மூடிக்கொண்டு என்ன செய்தாலும் சரி என்டு  முட்டு கொடுத்தேனா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.