Jump to content

லண்டனில் முன்னாள் போராளிகள் சிறப்பாக நடத்திய தேசிய தலைவரின் பிறந்தநாள் நிகழ்வு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் முன்னாள் போராளிகள் சிறப்பாக நடத்திய தேசிய தலைவரின் பிறந்தநாள் நிகழ்வு

Thalaivar-BD-2.jpg

முன்னாள்போராளிகளால் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனின் 65வது அகவை நாள்நிகழ்வு மேற்கு லண்டனிலுள்ள பெருவில் ( Perivale) பகுதியில் 26.11.2019 கொண்டாடப்பட்டது.

தமிழீழவிடுதலைப்புலிகளின் முன்னாள் மருத்துவப் போராளி உயர்ச்சி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்தமிழீழ தேசிய கொடியினை முன்னாள்கடற்புலி போராளி சுடரொளி ஏற்றிவைத்து நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில் முன்னாள்போராளிகள், ஊடகவியலாளர்கள், பொதுமக்கள் உட்பட நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தேசியத்தலைவர் பிரபாகரனுக்கு மிகவும் பிடித்த உணவான கோழிப்புக்கை இந்த நிகழ்வில் வழங்கப்பட்டது .

தலைவர் பிரபாகரன் பற்றி தனது நினைவுகளை மக்களுடன்பகிர்ந்து கொண்ட முன்னாள் கடற்புலி போராளி சுடரொளி தலைவர் அவர்களின் மனிதநேய பண்புகள் பற்றி உரையாற்றியிருந்தார். 1996ல்விடுதலைப்புலிகள் முல்லைத்தீவுஇராணுவமுகாம் மீது நடாத்திய வெற்றித்தாக்குதலான ஓயாதஅலை- 1 நடவடிக்கையில் உயிர்தப்பிய சிங்கள இராணுவ சிப்பாய் ஒருவர் பலநாட்களாகமுல்லைத்தீவு இராணுவமுகாமிருந்த பகுதியில் மறைந்துவாழ்ந்து வந்த நிலையில் விடுதலைப் புலிகளால் கைது செய்யப்பட்டிருந்தார். பல நாட்களாக போதியளவுஉணவு கிடைக்காமையினால் அவரது உடல் நிலை மோசமடைந்திருந்தது. அவரதுகைது பற்றி விடுதலைப் புலிகளின் தலமைப்பீடத்திற்கு அறிவித்த பொழுது தலைவர் பிரபாகரன் அவர்கள் அந்த இராணுவ சிப்பாய்க்கு தேவையான மருத்துவ உதவியினை செய்து அவரை இலங்கை செஞ்சிலுவைசங்கத்தினூடாக பாதுகாப்பாக இலங்கை அரசிடம் கையளிக்கும் படி உத்தரவிட்டிருந்தாத்தாக அவர் குறிப்பிட்டார்.

மேலும்வேறொரு சந்தர்ப்பத்தில் கடற்புலிகளின் சர்வதேசக் கப்பல் ஓன்றுக்கு ஆழ்கடலில் வைத்து எரிபொருள்நிரப்ப வந்த வேற்றுநாட்டு படகு ஒன்று தற்செயலாக தீப்பிடித்தபொழுது தீக்காயங்களுக்குள்ளான அதிலிருந்த படகோட்டிகளை கப்பலிலிருந்த கடற்புலிகள் காப்பாற்றியிருந்தனர். அவர்களைகப்பலுக்கு கொண்டுவந்து முதலுதவியளித்த பின்னர் அவர்கள் தொடர்பில் எடுக்க வேண்டிய மேலதிக நடவடிக்கைகள் பற்றி முல்லைத்தீவு கடற்கரைலிருந்த விடுதலைப் புலிகளின் கட்டளை மையத்துடன் தொடர்புகொண்ட பொழுது கட்டளை மையத்தினர் தலைமைபீடத்துடன்தொடர்பினை ஏற்படுத்தி மேலதிக நடவடிக்ககைள் தொடர்பில் வினவிய பொழுது தலைவர் பிரபாகரன் அவர்கள் அப் படகோட்டிகளை அவர்களுடைய நாட்டு மருத்துவமனையில் சேர்க்கும்படி உத்தரவிட்டிருந்தார். இவ்வாறு உத்தரவிட்டிருந்த தலைவருக்கு ஆழ்கடலில் கடற்புலிகளின் கப்பல் தரித்து நிற்பது மிகவும் ஆபத்தானது எனத் தெரிந்திருந்தும் அப்படகோட்டிகளை அந்நாட்டு மருத்துவமனையில் சேர்க்க நடவடிக்கையெடுத்ததானது அப்படகோட்டிகளின் குடும்பத்தினர் அவர்களின் நலன்பற்றி கரிசனையுடன் இருப்பார்கள் என்பதற்காகவே என குறிப்பிட்டிருந்தார். இந்நிகழ்வுக்கு நேரடிச்சாட்சியாகவிருந்தமுன்னாள் போராளிகள் இன்னமும் இருப்பதாகவும் சுடரொளி கூறினார்.

அத்துடன்தலைவர் அவர்கள் போராளிகளை சந்திக்க வருகின்ற பொழுது தனக்கு மிகவும் பிடித்தமான கோழிப்புக்கையினை போராளிகளுக்கு சமைத்து அளிக்கும்படி சமையல் பிரிவுக்கு கூறுவதனாலேயே அவருடைய அகவை நாளில் முன்னாள்போராளிகள் சிலர் இணைந்து கோழிப்புக்கையினை சமைத்து வழங்கியதாக குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிகழ்வில் தேசியதலைவர் பற்றிய நினைவுப் பகிர்வுகள் , தாயக எழுச்சிப் பாடல்கள் மற்றும் கவிதை ஆகியவை இடம்பெற்றன. ( அங்கயற்கண்ணி).

Thalaivar BD (1)Thalaivar BD (3)Thalaivar BD (4)

 

 

http://www.samakalam.com/செய்திகள்/லண்டனில்-முன்னாள்-போராளி/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தண்ணி பார்ட்டி யாற்றை செலவாம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, ரதி said:

இந்த தண்ணி பார்ட்டி யாற்றை செலவாம் 

ஏன் நீங்கள் கொடுக்கவா???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, MEERA said:

ஏன் நீங்கள் கொடுக்கவா???

நான் இவையளுக்கு காசு கொடுத்தால் அது தலைவருக்கே அடுக்காது 

அது சரி நந்தனார் போகேல்லையா 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, ரதி said:

இந்த தண்ணி பார்ட்டி யாற்றை செலவாம் 

இங்க அண்ணன்ர  படத்தை செயார் பண்ணுனவனையே கொண்டு போய் விசாரிக்காங்க இவங்கள் வேற இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லோரும் செளக்கியமே 

15 hours ago, MEERA said:

ஏன் நீங்கள் கொடுக்கவா???

கொடுக்கிறத இங்க உள்ள யாராவது ஒர்  முன்னாள் போராளிக்கு அனுப்பலாம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்சிலும்  ஆரம்பத்திலிருந்து முன்னாள்கள் தான்  செய்கிறார்கள்

தலைவருடைய  பிறந்தநாள்  என்பதால் 

அவர் வளர்ப்பு தெரியும்படியாகவே இருக்கும்

நானும்   ஒவ்வொருவருடமும் சென்று

தலைவர்  கேக்  என  மக்களுக்கும்  கொண்டு  வந்து கொடுப்பது  வழக்கம்

Link to comment
Share on other sites

17 hours ago, ரதி said:

இந்த தண்ணி பார்ட்டி யாற்றை செலவாம் 

செலவைப் பற்றி யோசிக்கவேண்டாம். நீங்களும் தாராளமாக கலந்துகொள்ளலாம். உங்களுக்கு எல்லாம் இலவசம்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, Maharajah said:

செலவைப் பற்றி யோசிக்கவேண்டாம். நீங்களும் தாராளமாக கலந்துகொள்ளலாம். உங்களுக்கு எல்லாம் இலவசம்.  

ஏன் நீங்கள் அமைப்போ?

Link to comment
Share on other sites

2 hours ago, ரதி said:

ஏன் நீங்கள் அமைப்போ?

கற்பனை குதிரையை கொஞ்சம் கட்டிவையுங்கோ.  😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/29/2019 at 2:34 PM, ரதி said:

இந்த தண்ணி பார்ட்டி யாற்றை செலவாம் 

அது ஆர் ரதி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎12‎/‎1‎/‎2019 at 1:04 PM, Maharajah said:

கற்பனை குதிரையை கொஞ்சம் கட்டிவையுங்கோ.  😃

பின் எப்படி எனக்கு எல்லாம் இலவசம் என்று சொன்னனீங்கள் 😁

On ‎12‎/‎1‎/‎2019 at 4:49 PM, வல்வை சகாறா said:

அது ஆர் ரதி

யாரை கேட்கிறீங்கள் ?

Link to comment
Share on other sites

2 hours ago, ரதி said:

பின் எப்படி எனக்கு எல்லாம் இலவசம் என்று சொன்னனீங்கள் 😁

யாரை கேட்கிறீங்கள் ?

இரகசியம் காக்கோணும் அக்கா,  இரகசியம் காக்கோணும்.

எனக்கென்ன ஓட்டை வாயா இல்லையே

😃😃 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.