Jump to content

அனைத்து அரச நிறுவன உயரதிகாரிகளையும் இராஜினாமா செய்யுமாறு அறிவித்தல்


Recommended Posts

அனைத்து அரச நிறுவனங்கள் மற்றும் கூட்டுத்தாபனங்களின் தலைவர்களையும் பணிப்பாளர்களையும் இராஜினாமா செய்ய அறிவித்தல் விடுக்குமாறு அமைச்சுகளின் செயலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் செயலாளர் P.B.ஜயசுந்தரவினால் அமைச்சுகளின் செயலாளர்களுக்கு இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

https://www.newsfirst.lk/tamil/2019/11/29/அனைத்து-அரச-நிறுவன-உயரதி/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இராஜினாமா செய்வது.... என்பது, 
ஒருவர், சுயமாக விரும்பி... எழுதிக் கொடுப்பது, என நினைக்கின்றேன். :)

அதனை... அறிவுறுத்தலாக  சொல்வது,  ஸ்ரீலங்காவில்....
அதுகும்.... கோத்தா / மகிந்த ...  ராஜபக்ஸ  சகோதரர்களின்  ஆட்சியில்....
நடப்பது.. வியப்பை... தரவில்லை.  😎

இவங்களை வைத்து,  இன்னும்... ஐந்து வருடத்தை....
எப்படி... தாக்குப் பிடிப்போமோ... தெரியவில்லை.   😮

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

இராஜினாமா செய்வது.... என்பது, 
ஒருவர், சுயமாக விரும்பி... எழுதிக் கொடுப்பது, என நினைக்கின்றேன். :)

அதனை... அறிவுறுத்தலாக  சொல்வது,  ஸ்ரீலங்காவில்....
அதுகும்.... கோத்தா / மகிந்த ...  ராஜபக்ஸ  சகோதரர்களின்  ஆட்சியில்....
நடப்பது.. வியப்பை... தரவில்லை.  😎

இவங்களை வைத்து,  இன்னும்... ஐந்து வருடத்தை....
எப்படி... தாக்குப் பிடிப்போமோ... தெரியவில்லை.   😮

ஐந்து வருடங்கள் மட்டுமா?!
குறைந்தது பத்தாண்டுகளாவது ஆட்சி தொடரும்!

Link to comment
Share on other sites

9 hours ago, தமிழ் சிறி said:

இராஜினாமா செய்வது.... என்பது, 
ஒருவர், சுயமாக விரும்பி... எழுதிக் கொடுப்பது, என நினைக்கின்றேன். :)

அதனை... அறிவுறுத்தலாக  சொல்வது,  ஸ்ரீலங்காவில்....

இராஜினாமா செய்வது என்பது, ஒருவர், சுயமாக விரும்பி எழுதிக் கொடுப்பது என்பது உண்மை. நான் இப்படி இரண்டு பதவிகளில் இருந்து இராஜினாமா செய்து இருப்பதால் சொல்ல முடிகிறது.

சில பதவிகளில் இருப்பவர்களை, அவர்களை நியமிக்கும் அதிகாரம் உள்ளவர்கள் எந்த நேரத்திலும் காரணம் காட்டாமலே பதவி நீக்கம் செய்யலாம். (at will) என்று எழுதப்பட்டு வழங்கப்படும் நியமனங்கள் இவை. பதவி நீக்கம் செய்வதால் சில பாதகங்கள் இருக்கின்றன. அவற்றை தவிர்க்க இராஜினாமா செய்ய சந்தர்ப்பம் கொடுப்பதும் உண்டு, ஆனால் இது அபூர்வம். இங்கே அதுதான் நடக்கிறது. 

யாழ் பல்கலைக்கழக துணை வேந்தரை மைத்திரி பதவி நீக்கம் செய்தபோது இப்படி  சந்தர்ப்பம் கொடுக்கவில்லை. பொலிஸ்மா அதிபரை பதவிநீக்கம் செய்ய முதல் இராஜினாமா செய்ய சந்தர்ப்பம் கொடுத்தார். ஆனால்  பொலிஸ்மா அதிபர் பூஜித இராஜினாமா செய்ய மறுத்த நிலையில் பதவி நீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். இன்று சிறையில் இருக்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தமிழ் சிறி said:

இராஜினாமா செய்வது.... என்பது, 
ஒருவர், சுயமாக விரும்பி... எழுதிக் கொடுப்பது, என நினைக்கின்றேன். :)

அதனை... அறிவுறுத்தலாக  சொல்வது,  ஸ்ரீலங்காவில்....
அதுகும்.... கோத்தா / மகிந்த ...  ராஜபக்ஸ  சகோதரர்களின்  ஆட்சியில்....
நடப்பது.. வியப்பை... தரவில்லை.  😎

இவங்களை வைத்து,  இன்னும்... ஐந்து வருடத்தை....
எப்படி... தாக்குப் பிடிப்போமோ... தெரியவில்லை.   😮

இது உலகம்  பூராகவும்  உள்ள  நடைமுறை  தானே  சிறி?

அரசுகள்

அரச  தலைவர்கள்  மாறுகின்றபோது

தாம் தேர்தல்  நேரம்  மக்களுக்கு  கொடுத்த  வாக்குறுதியை  செயற்ப்படுத்த???

தமக்கு  சார்பானவர்கள்  முக்கிய  பதவிகளில்  இருக்கணும் என்பதும்

முக்கியமாக தமது  கொள்கைக்கு  முரணான முன்னைய ஆட்சி  அல்லது கட்சியை  சார்ந்தவர்கள் இருப்பது  தமக்கு  தடையாக  இருக்கலாம்  என்பதும்

எல்லா  நாடுகளிலும்  நடப்பது தானே???

Link to comment
Share on other sites

இந்த விடயத்தில்  சுவிஸ் மக்கள் கொடுத்து வைத்தவர்கள். யார் தற்போதய ஜனாதிபதி என்பதையே கூகிளில் தேடிப்பார்ககும் நிலையில் கணிசமான மக்கள் உள்ளார்கள்.

நாட்டின் அமைச்சர்கள் பொதுப்  போக்குவரத்தை உபயோகித்து அமைச்சரவைக் கூட்டத்திற்கோ பாராளுமன்றத்திற்கோ மக்களோடு மக்களாக செல்வதை பார்க்க முடியும். அப்படி காரில் செல்வதாக இருந்தால் தானே காரை ஓட்டிச் சென்று வாகனத்தரிப்பிடம் தேடி காரை நிறுத்தி விட்டு கட்டண தரிப்பிடமாக இருந்தால்  அதற்கான பணத்தையும் செலுத்திவிட்டு செல்ல வேண்டிய நிலை. 

2015 வரை பாதுகாப்பு அமைச்சராக இருந்த Ueli Mauer கோடை காலத்தில் நல்ல காலநிலை  உள்ள நேரத்தில் பல தடவை   20 Km சைக்கிளில் அலுவலகம் சென்ற வரலாறும் உண்டு. 

அதை விட மக்கள் வரிப்பணத்தில்  மக்களுக்கு செய்யும் அபிவிருத்தித்திட்டங்களை தனது சொந்த பணத்தில் செய்தது போல் எமது நாட்டு அமைசர்கள் போல்   பந்தா காட்ட முடியாத பரிதாப நிலை  இங்குள்ள அமைச்சர்களுக்களுக்கு.  அப்படி சிறிது பெருமை பேசினால் இதை கூட செய்யாமல் விட்டால்  எமது வரிப்பணத்தில் உனக்கு  எதற்கு சம்பளம் என்று நாட்டின் கடை குடிமகன் கேட்டுவிடுவானே என்ற பயப்படும் நிலை. 

எமது நாட்டில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக உள்ள டக்லஸ் தேவானாந்தா வின் கல்வி தரத்தில் உள்ள ஒருவரை  இங்கு சிறிய கிராம சபை உறுப்பினராக கூட தெரிவு செய்ய மாட்டார்கள். வேண்டுமானால் கிராம சபையின்  Hauswart  ஆக இருந்து விட்டு போகலாம். 

ஒரு கிராம சபை தலைவரின் அதிகாரத்தில் நாட்டின் ஜனாதிபதி கூட தலையிட முடியாத அரசியலமைப்பு சட்டம். 

 

2018 ன் சுவிஸ் ஜனாதிபதி Alain Berset  நியூயோர்க் ஐ நா சபையின் 73 வது அசெம்பிளியில்  கலந்து கொள்ள சென்ற போது இடை வேளை நேரத்தில்  வளாக சாலை ஒரத்தில்  தரையில் அமர்த்து கூட்ட அறிக்கைகளை பார்வையிட்டு அடுத்த அமர்வுக்கான தயார்படுத்தலை செய்த விடயம் மற்றய நாட்டு தலைவர்களின் பார்வையில் வித்தியாசமாக பார்க்கபட்ட போதும் சுவிஸ் மக்கள் பார்வையில் அது வழமையான நிகழ்வாகவே பார்க்கப்பட்டது.  

large.D9AD7A47-DB29-4248-A39B-51A661E4DFA3.jpeg.51ebd41511a7dd5f9a209f8294d5a219.jpeg

Link to comment
Share on other sites

14 hours ago, தமிழ் சிறி said:

இராஜினாமா செய்வது.... என்பது, 
ஒருவர், சுயமாக விரும்பி... எழுதிக் கொடுப்பது, என நினைக்கின்றேன். :)

அதனை... அறிவுறுத்தலாக  சொல்வது,  ஸ்ரீலங்காவில்....
அதுகும்.... கோத்தா / மகிந்த ...  ராஜபக்ஸ  சகோதரர்களின்  ஆட்சியில்....
நடப்பது.. வியப்பை... தரவில்லை.  😎

இவங்களை வைத்து,  இன்னும்... ஐந்து வருடத்தை....
எப்படி... தாக்குப் பிடிப்போமோ... தெரியவில்லை.   😮

5 வருடம் தேவை இல்லை; பங்குனி மாதம் தேர்தல் வரும் போது 2/3 பெரும்பான்மையுடன் தேர்தலை வென்று அரசியல் சாசனத்தை மாற்றாவிடில் ராஜபக்ச குடும்பம் முன்னாள் பிரதமர் W M தஹனாயக்க போன்று மெதமுலானவுக்கு முதல் பஸ்ஸை பிடிக்க வேண்டியது தான்.... ரணில் செய்த ஒரு நல்ல காரியம் 19  சீர்திருத்தம்.. அல்லாவிடிக் கோத்தா ஜனாதிபதியாக இருந்து எதையும் கிழிக்க முடியாது😀😀😀😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, Dash said:

5 வருடம் தேவை இல்லை; பங்குனி மாதம் தேர்தல் வரும் போது 2/3 பெரும்பான்மையுடன் தேர்தலை வென்று அரசியல் சாசனத்தை மாற்றாவிடில் ராஜபக்ச குடும்பம் முன்னாள் பிரதமர் W M தஹனாயக்க போன்று மெதமுலானவுக்கு முதல் பஸ்ஸை பிடிக்க வேண்டியது தான்.... ரணில் செய்த ஒரு நல்ல காரியம் 19  சீர்திருத்தம்.. அல்லாவிடிக் கோத்தா ஜனாதிபதியாக இருந்து எதையும் கிழிக்க முடியாது😀😀😀😀

எழுதி வைத்துக்கொள்ளுங்கள்

பங்குனித்தேர்தலில் மகிந்த  பிரதமர்

அதிகாரம் ஐனாதிபதியின்  கைகளிலிருந்து  பிரதமருக்கு மாறும்

மக்களுக்கு கொடுத்த  வாக்கறுதியையும்

தமிழ்  மக்களை நிரந்தர  அடிமைகளாக்கியமைக்கும்

தொடர்ந்து ஆட்சி

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்போ  நான் எப்படியும்  தப்பிவிடுவேன் லிஸ்டில் நம்மடை  (Chanel, Dior) சரக்கு இல்லை   வரும் 24 அன்று இலங்கைக்கு 2 மாத விஜயம் யாழ்கள உறவுகள் நின்றால் சந்திக்கலாம் 
    • வணக்கம் வாத்தியார்......! ஆண் : மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா தேனம்மா தேனம்மா நாணம் ஏனம்மா சுகமான புது ராகம் உருவாகும் வேளை நாணமோ இதமாக சுகம் காண துணை வேண்டாமோ ஓஓ பெண் : சிங்கம் ஒன்று நேரில் வந்து ராஜ நடை போடுதே தங்க மகன் தேரில் வந்தால் கோடி மின்னல் சூழுதே ஆண் : முத்தை அள்ளி வீசி இங்கு வித்தை செய்யும் பூங்கொடி தத்தி தத்தி தாவி வந்து கையில் என்னை ஏந்தடி பெண் : மோகம் கொண்ட மன்மதனும் பூக்கணைகள் போடவே காயம் பட்ட காளை நெஞ்சும் காமன் கணை மூடுதே ஆண் : மந்திரங்கள் காதில் சொல்லும் இந்திரனின் ஜாலமோ சந்திரர்கள் சூரியர்கள் போவதென்ன மாயமோ பெண் : இதமாக சுகம் காண துணை நீயும் இங்கு வேண்டுமே சுகமான புது ராகம் இனி கேட்கத்தான்…. ஆண் : இட்ட அடி நோகுமம்மா பூவை அள்ளி தூவுங்கள் மொட்டு உடல் வாடுமம்மா பட்டு மெத்தை போடுங்கள் பெண் : சங்கத்தமிழ் காளை இவன் பிள்ளை தமிழ் பேசுங்கள் சந்தனத்தை தான் துடைத்து நெஞ்சில் கொஞ்சம் பூசுங்கள் ஆண் : பூஞ்சரத்தில் ஊஞ்சல் கட்டி லாலி லல்லி கூறுங்கள் நெஞ்சமென்னும் மஞ்சமதில் நான் இணைய வாழ்த்துங்கள் பெண் : பள்ளியறை நேரமிது தள்ளி நின்று பாடுங்கள் சொல்லி தர தேவை இல்லை பூங்கதவை மூடுங்கள் பெண் : சுகமான புது ராகம் உருவாகும் வேளை நாணுமே இதமாக சுகம் காண துணை வேண்டாமோ ஓஓ .......! --- மீனம்மா மீனம்மா ---
    • ஆஹா....அற்புதம்......அற்புதம்......!  😂
    • பாகவலி நாட்டினிலே .....அநியாயம் இந்த ஆட்சியிலே இது அநியாயம்........!   😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.