Jump to content

சாத்தான் ஓதும் வேதமும் சுமந்திரனின் ஒற்றுமைக்கான அழைப்பும்


Recommended Posts

சில தினங்களுக்கு முன்னர் சுமந்திரன் கட்சிகளைநோக்கி அழைப்புவிடுத்திருந்தார். ஏன் வெளியில் நிற்கின்றீர்கள். நாங்கள் யாரையும் வெளியில் போகச் சொல்லவில்லை. அதேபோன்று உள்ளுக்குள் வருவதையும் நாங்கள் எதிர்க்கவில்லை. இலங்கை தமிழரசுக் கட்சியுடன் அரசியல் ரீதியில் முரண்பட்டு, வெளியேறிய கட்சிகளை நோக்கித்தான் சுமந்திரன் இவ்வாறு அழைப்பு விடுத்திருந்தார்.

முன்னைநாள் வடக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவருமான சி.வி.விக்கினேஸ்வரனை மையப்படுத்தி மாற்று தலைமையொன்றை உருவாக்குவதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருகின்ற நிலையில்தான், சுமந்திரன் இவ்வாறானதொரு அழைப்பை விடுத்திருக்கின்றார். சுமந்திரன் தனது பேச்சில் ஒருவிடயத்தை அழுத்திக் குறிப்பிட்டிருக்கின்றார். அதாவது, மாற்று அணி ஒன்றை உருவாக்கக் கூடாது. அதற்கான தருணம் இதுவல்ல. இதிலிருந்து சுமந்திரனின் உள் நோக்கத்தை ஒருவர் தெளிவாக விளங்கிக்கொள்ள முடியும்.

இதுவரை இறுமாப்பாக பேசிவந்த சுமந்திரனின் பேச்சில் ஏன் இந்த திடீர்மாற்றம்? அனைத்துக்கும் கோட்டபாயவின் வெற்றிதான் காரணம். கோட்டபாயவின் வெற்றியைத் தொடர்ந்து 2015இல் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட ராஜபக்சேக்கள் மீண்டும் அதிகாரத்திற்கு வந்துவிட்டனர். தற்போதுள்ள நிலையில் இனி அதிகாரத்தில் இருக்கப் போபவர்கள் அவர்கள்தான்.

இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் சுமந்திரன் புதிய உக்திகளை கையாள முற்படுகின்றார். அடுத்த ஆண்டு மே மாதம் நாடாளுமன்ற தேர்தல் இம்பெறவுள்ள நிலையில் அதில் மீளவும் கூட்டமைப்பின் கதிரைகளை உறுதிப்படுத்திக்கொள்வதற்கு சுமந்திரன் – சம்பந்தன் தரப்பிற்கு ஒரு ஒற்றுமை நாடகம் தேவைப்படுகின்றது. ஓற்றுமை தொடர்பில் மக்கள் மத்தியில் இயல்பானதொரு கரிசனை இருப்பதை தங்களுக்கு சாதமாக்கிக் கொண்டு, விக்கினேஸ்வரன் தலைமையில் உருவாகவுள்ள மாற்றுத் தலைமையை முளையிலேயே கழைந்துவிடவேண்டுமென்பதே சுமந்திரனின் திட்டம். இதற்கு ஒரு காரணமுண்டு.

அதாவது, சம்பந்தன் – சுமந்திரன் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட கூட்டமைப்பின் அனைத்து அரசியல் நகர்வுகளும் படுதோல்வியடைந்துவிட்டன. அந்தவகையில் பார்த்தால் சம்பந்தனும் சுமந்திரனும் அவமானகரமான தோல்வியை சந்தித்த அரசியல்வாதிகளாகவே காட்சியளிக்கின்றனர். தங்களது படுமோசமான தோல்விக்கான பொறுப்பை அவர்கள் இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக மொட்டைக் காரணங்களை கூறிவருகின்றனர்.

ஒருவேளை அரசியல் தீர்வு முயற்சிகள் வெற்றிபெற்றிருந்தால் அதற்கான பொறுப்பை இவர்களே எடுத்திருப்பார்கள். அந்தப் பொறுப்பில் பங்காளிக் கட்சிகளுக்கு கூட இடமிருந்திருந்திருக்காது. ஒருமுறை கனடிய தமிழ் ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணலில் இதனை சுமந்திரன் மிகவும் இறுமாப்புடன் குறிப்பிட்டிருந்தார். அரசியல் தீர்வு ஒன்றை காண்பதற்கான பொறுப்பே எனக்கு தரப்பட்டுள்ளது. அதற்காகவே நான் அரசியலில் இருக்கின்றேன். அந்த முயற்சி வெற்றி பெற்றால் அது முற்றிலுமாக என்னையே சாரும். அது தோல்வியடைந்தாலும் என்னையேசாரும். அரசியல் தீர்வில் வெற்றிபெற்றாலும் தோல்வியடைந்தாலும் அரசியலில் இருந்து ஒதுங்கும் எண்ணத்தில் இருக்கின்றேன். இன்று படுமோசமான தோல்வியை சந்தித்த பின்னரும் ஏன் சுமந்திரன் அரசியலிலிருந்து ஒதுங்கவில்லை. ஏன் தோல்விக்கு பொறுப்பேற்கவில்லை.

இந்திய இலங்கை ஒப்பந்தத்தை தீண்ட முடியாது– 13வதை தாண்டி நாங்கள் வேறு எங்கோ சென்றுவிட்டோம் என்று கூறிய சம்பந்தனும் சுமந்திரனும் ஏன் இன்று மீண்டும் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் அமுலாக்கம் பற்றி பேசுகின்றனர்? 13வது தொடர்பில் மோடி பேசியதை ஏன் வரவேற்கின்றனர்? உண்மையில் சுமந்திரனிடம் ஆகக் குறைந்தளவாவது அரசியல் நேர்மை இருக்குமாயின் பதவி சுகபோகங்களை விட்டுவிட்டு ஒதுங்கியல்லவா இருக்கவேண்டும். ஆனால் கோட்டபாயவின் வெற்றியின் பின்னர் சாத்தான் வேதம் ஓதுவதுபோல் ஒற்றுமை பற்றி மற்றவர்களுக்கு வகுப்பெடுக்க முயற்சிக்கின்றார்.

இன்று அரசியல்வாதிகளாக வலம் வரும் பலரும் தமிழ் மக்களை மறதிநோயால் பாதிப்பட்டவர்களாகவே கருத்திக் கொள்கின்றனர் போலும். இன்று ஒற்றுமை பற்றிபேசும் சுமந்திரன் எதனையோ சந்தர்ப்பங்களில் ஒற்றுமையை தன் காலில் போட்டு மிதித்திருக்கின்றார். ஓற்றுமைக்காக குரல் கொடுத்தவர்களை எள்ளிநகையாடியிருக்கின்றார். உண்மையிலேயே ஒற்றுமை முக்கியம் என்று சம்பந்தன் – சுமந்திரன் – மாவைசேனாதி ஆகியோர் கருதியிருந்தால் இன்று கூட்டமைப்பைவிட்டு சுரேஸ் பிரேமச்சந்திரன் வெளியேற நேர்ந்திருக்காது. ஆனந்தசங்கரி வெளியேற நேர்ந்திருக்காது. விக்கினேஸ்வரன் ஒரு தனியானகட்சியை ஆரம்பிக்கவேண்டிய தேவை உருவாக்கியிருக்காது. இவை அனைத்துக்கும் சுமந்திரனே பிரதானகாரணம்.

சுமந்திரனை தட்டிக் கேட்கும் திராணியற்று, வெறும் கதிரைபோதையில் தன்னை மறந்துகிடந்த இரா.சம்பந்தன் இவை அனைத்துக்குமான முழுமுதல் காரணம். தனக்குசவால் விடுக்கக் கூடியவர்கள் எவருமே கூட்டமைப்புக்குள் இருக்கக் கூடாது என்பதற்காக திட்டமிட்டு நயவஞ்சகமாக சூழ்சிகள் புரிந்து பலரும் வெளியேறக் கூடிய சூழலை உருவாக்கிய சுமந்திரன்தான், இன்று ஒற்றுமைபற்றி வேதம் ஓதுகின்றார். சுரேஸ் பிரேமச்சந்திரன் கூட்டமைப்புக்குள் இருந்தால் தான் நினைத்தவாறு பேசமுடியாது என்பதை தெரிந்துகொண்டு, திட்டமிட்டு சுரேஸ் பிரேமச்சந்திரனை வெளியேற்றினார்கள்.

உண்மையில் சுரேஸ்பிரேமச்சந்திரனை உள்ளுக்குள் வைத்திருக்க விரும்பியிருந்தால், தேசியபட்டியல் மூலம் சுரேஸை உள்ளுக்குள்ளேயே வைத்திருந்திருக்கலாம். ஆனால் சுரேஸை நிராகரித்துவிட்டு ஒன்றுக்கும் உதவாத இரண்டு பேருக்கு தேசியபட்டியல் ஆசனங்களை கொடுத்தனர். தாங்கள் வலிந்து அரசியலுக்கு கொண்டுவந்த விக்கினேஸ்வரன் தங்களுடன் ஒத்தோடவில்லை என்பதற்காக அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவந்தனர். இப்படி ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் ஒற்றுமைய கொலை செய்தவர்கள் இன்று கண்கெட்டபின்னர் சூரியநமஸ்காரம் என்கின்றனர். மாற்றுத் தலைமை உருவாகக் கூடாது என்கின்றனர்.

உண்மையில் தற்போதுள்ள நிலையில் தமிழரசு கட்சி வடக்குகிழக்கில் பலவீனமாக இருக்கின்றது. தேர்தலில் முன்னைய ஆசனங்களை இவர்களால் வெற்றிபெற முடியாது. நிச்சயமாக சில ஆசனங்களை இவர்கள் இழக்கநேரிடும். இதனை தெரிந்து கொண்டுதான் நாங்கள் ஒற்றுமையாக இருந்தால் 20 ஆசனங்களை பெறமுடியுமென்னும் புதிய ஏமாற்று பிரச்சாரம் ஒன்றை செய்கின்றனர். கடந்த ஆட்சியில் ரணிலில் செல்லப்பிள்ளையாக சுமந்திரன் இருந்தார்.

அவர் அமைச்சுப் பொறுப்புக்கள் எதனையும் வெளிப்படையாக வகிக்காவிட்டாலும் கூட, ரணிலின் அமைச்சரவையிலுள்ள அமைச்சர்களைவிடவும் அதிகாரமுள்ளவராக இருந்தார். கூட்டமைப்பிடம் 14 பாராளுமன்ற ஆசனங்கள் இருந்தன. ரணிலுக்கு நெருக்கடிகள் ஏற்பட்ட ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் அவரை காப்பாற்றுவதற்காக, கட்டியிருந்த வேட்டி கழன்று விழுவதையும் மறந்து இரவு பகலாக பாடுபட்டனர். ஆனால் வாக்களித்த தமிழ் மக்களுக்கு என்ன கிடைத்தது? அன்று 14 ஆசனங்களை வைத்திருந்து, ரணிலுக்கு நெருக்கமாக இருந்து செய்ய முடியாதவைகளை, இனி எவ்வாறு செய்யப் போகின்றனர்?

இவர்களிடம் 20 ஆசனங்கள் அல்ல, 200 ஆசனங்கள் இருந்தாலும் இவர்களால் எந்தவொரு நன்மையும் தமிழ் மக்களுக்கு கிடைக்காது.
ஏனெனில் சுமந்திரனுக்குதமிழ் மக்கள் தொடர்பில் எந்தவொரு கரிசனையும் இல்லை. அவரது கரிசனை ஒன்றே ஒன்றுதான். தான் கொழும்பில் செல்வாக்குள்ள ஒரு நபராக வலம்வரவேண்டும். தன்னை சுற்றி தமிழ் அரசியல் இருக்கவேண்டும். அவ்வாறு நடக்கவேண்டுமாயின் தமிழரசுகட்சிதொடர்ந்தும் அதிக ஆசனங்களை கொண்டிருக்கும் கட்சியாக இருக்கவேண்டும். தான் கூட்டமைப்பின் பேச்சாளராக இருக்கவேண்டும். அவ்வாறிருந்தால் முன்னர் ரணிலுடன் நெருக்கமாக இருந்தது போன்று இனி கோட்டாவுடன் நெருக்கமாக இருக்கலாம்.

இவை எல்லாம் நடக்கவேண்டுமாயின், தங்களது ஒற்றுமை நாடகத்தில் விக்கினேஸ்வரன் சுரேஸ் தேவைப்பட்டால் கஜேந்திரகுமார் அனைவரும் நடிக்கவேண்டும். ஆனால் கதை வசனங்களை சுமந்திரனே வழங்குவார். அதனை எப்படி கதைக்கவேண்டும் என்பதையும் அவரேசொல்லிக் கொடுப்பார். அனைவரும் சுமந்திரனின் நாடகத்தில் நடிக்க இணங்கினால் அதுதான் தமிழ் மக்களுக்கான ஒற்றுமை.இதுதான் ஒற்றுமைக்கான சுமந்திரனின் விளக்கம். இவ்வாறானதொரு ஒற்றுமையா இன்று தமிழ் மக்களுக்குத் தேவை?

– கரிகாலன் –

http://thamilkural.net/?p=11528

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோபத்தோடும், ஆற்றாமையோடும், ஏமாற்றத்தோடும் இருக்கும் மக்களை ஏய்ப்பதற்கு திட்டம் போட்டிட்டார்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.