Jump to content

‘புலம்பெயரிகள்’ ஒரு நோக்கு -நிவேதா உதயராஜன்


Recommended Posts

வழக்கப் போல் ஒற்றைப் பார்வையுடன் எழுதப்ப கட்டுரை.

நான் கடந்த நான்கு வரிசங்களாக ஊருக்கு போய் வருகின்றேன். இது வரைக்கும் எந்த உறவுகளும் இவ்வளவு தா என தொந்தரவு செய்ததில்லை, நானும் கொடுக்கின்ற ஆளும் இல்லை.

ஊரில் நிற்கும் போது வெளிநாட்டு வாழ்வு முகத்தில் தந்த சில மாறுதல்கள் மட்டுமே வெளிநாடு ஒன்றில் வந்த ஒருவனாக காட்டும். மற்றப்படி பாட்டா செருப்பும் வெளியே விட்ட சேர்ட்டுமாகவே திரிவதுண்டு. என் முகனூலில் இருக்கும யாழ் கள உறவுகள் பலருக்கு இது தெரிந்து இருக்கும்.

ஊரில் வெளிநாட்டு பண உதவி எதுவும் இல்லாமல் சொந்த கடை நடத்தியும் விவசாயம் செய்தும் வாழும் பலரை என்னால் காட்ட முடியும். அரசு எந்தவொரு தொழிலையும் பொருளாதார மேம்பாடுகளையும் செய்யாமல், அது பற்றி தமிழ் எம் பிக்கள் எந்த பிரக்ஞை யும் அற்று இருக்கும் சூழ்நிலையிலும் தம் சொந்த கால்கள தங்கியிருக்கும் இளையவர்கள் பலர் உள்ளனர்.

அங்கு உள்ள படித்த அல்லது ஏதாவது ஒன்றில் திறமையுள்ள ஒருவர் வெளிநாடு வர விரும்பின் அதற்கான வழிமுறைகள் பற்றி அறிய என்னிடம் கேட்டால் எனக்கு தெரிந்த வழிமுறைகள் அனைத்தையும் கூறுவது உண்டு. ஏனெனில் அங்கு தமிழர்கள் சுயமரியாதையுடன் நிம்மதியாக வாழும் காலம் இனி வரப் போவதில்லை என்பதில் தெளிவாக இருக்கின்றேன். 

வெளிநாட்டு வாழ்வு என்பது புலம்பெயர் தமிழர்களுக்கு போராளிகளின் தியாகத்தால் விளைந்த வாய்ப்பு. அங்கு இருப்பது அந்த வாய்ப்பை தந்தவர்களை சுமந்து நின்ற மண். அந்த மண்ணில் வாழ்கின்றவர்களுக்கு எம் மேல் இருக்கும் கோபம் பலவற்றுக்கு நியாயமான காரணங்கள் இருக்கு. அதை புரிந்து கொள்ளாமல் நாம் பணம் தந்தவர்கள்/ இப்பவும் தருகின்றவர்கள் தானே என நாட்டாமை குணத்தை காட்ட நினைத்தால் அவர்களுக்கும் எமக்குமான இடைவெளி தான் இன்னும் அதிகரிக்கும்.

நன்றி

Link to comment
Share on other sites

  • Replies 53
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஈழப்பிரியன் said:

உங்கள் உண்டியலில் விழ வேண்டிய பணமெல்லாம் மாறி கிருபனின் உண்டியலில் விழுந்திருக்கு.

 உண்டியலில்  விழுந்தவற்றை வைத்துக் கனடாவுக்குச் சென்றவர்கள் கிளிநொச்சியில் விற்க இருக்கும் மாபிள் பதித்த வீட்டை வாங்கப்போகின்றேன்🤪

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நிழலி said:

வெளிநாட்டு வாழ்வு என்பது புலம்பெயர் தமிழர்களுக்கு போராளிகளின் தியாகத்தால் விளைந்த வாய்ப்பு. அங்கு இருப்பது அந்த வாய்ப்பை தந்தவர்களை சுமந்து நின்ற மண். அந்த மண்ணில் வாழ்கின்றவர்களுக்கு எம் மேல் இருக்கும் கோபம் பலவற்றுக்கு நியாயமான காரணங்கள் இருக்கு. அதை புரிந்து கொள்ளாமல் நாம் பணம் தந்தவர்கள்/ இப்பவும் தருகின்றவர்கள் தானே என நாட்டாமை குணத்தை காட்ட நினைத்தால் அவர்களுக்கும் எமக்குமான இடைவெளி தான் இன்னும் அதிகரிக்கும்.

போராட்ட காலத்தில் பலர் தேசியம் சார்ந்து உதவியதைவிட போராளிகளின் தியாகத்தினால் கிடைத்த  வசதியான புலம்பெயர்வாழ்வு என்ற குற்ற உணர்வினால் உதவினார்கள்.

ஆனால் பக்கத்து வீட்டில் உப்பு, புளியை அவசரத்திற்கு வாங்குவதைக்கூட மரியாதைக்குறைவாக நினைத்த சமூகம் மற்றவர்களிடம் வாய்விட்டு உதவி கேட்கும் நிலையை, பொருளாதாரத் தடை நிலவிய போராட்ட காலம்தான் உருவாக்கியது. அதன் பிற்பாடு தோன்றிய தலைமுறையினரில் பெரும்பகுதியினருக்கு கடும் உழைப்பில் நாட்டம் உள்ளதா என்று தெரியவில்லை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Dash said:

தமிழனை அழிக்க யாரும் தேவை இல்லை; தானே புலம்பெயர்ந்து அழிந்து போவான், என்னுடைய சகோதரனின் நண்பன் 30 வயது அவர் உள்ளுர் நிறுவனத்தில் 100,000/=  சம்பளம் மனைவிக்கு சர்வதேச நிறுவனத்தில் 150,000= இதையெல்லாம் விட்டு போட்டு கனடாவில்  வந்து குப்பை கொட்டீனம்......

தாயக கனவுடன் உயிர் நீத்த மாவீர் தான் பாவம் ...புலம் பெயர்வு தான் குறிக்கொள் என்றால் ஏன் இத்தனை அழிவு.... போராடாமல் புலம் பெயர்ந்து இருக்கலாம்.

தாஸ் அண்ணை, 

போராட்டத்தியும் புலம் பெயருதலையும் போட்டு நாம் குழப்பிக்கொள்ள கூடாது.
1978, 1979 களில் நான் சிறுவனக இருந்த காலத்திலேயே, ஜெர்மன் போக கொழும்பில் வந்து யாழ்ப்பாணாத்து இளைஞ‌ர்கள் இருபதை கண்டுள்ளேன். இது இலங்கையர்களின் இயல்பு, வறுமையான நாடுகளில் வாழும் இளைஞ‌ர்கள் எப்படியாவாது நாட்டை விட்டு போகவே முயற்சிப்பர்.

மேலும் புலம் பெயர்ந்து யாரும் அழிந்து போக மாட்டார்கள், மாறக செழிப்படைவார்கள்

மேலும் கட்டுரையாளர் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை ஆற்றமையை வெளிப்படுத்தியுள்ளார், இவர் எழுதியதுபோல் புலத்தில் எல்லோரும் அப்படியல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உண்மையைச் சொன்னதற்கு நன்றி தம்பியா. வெளிநாட்டவரைத் திட்டி வரும் வீடியோக்களும், முகநூல் பதிவுகளாலும் ஏற்பட்ட கடுப்பினாலும் கசப்பினாலும் எழுதியது இது.
என்னிடம் உதவி கேட்ட ஒரு உறவு ஒரு ஆண்டில் கொஞ்சம் கொஞ்சமாகத் திரும்பத் தருகிறேன் என்று வாங்கிய பணத்தை நான்கு ஆண்டுகளாகியும் தரவே இல்லை. அவர் முகநூலில் போடும் பதிவுகளை பார்த்துக் கடுப்பாகி என் பணத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகத் திருப்பித் தாருங்கள் என்று கேட்டதற்கு இரு மாதங்களுக்கு ஒரு தடவை 5000 ரூபாய் போடுகிறேன் என்கிறார். சரி என்று அங்குள்ள பாதிக்கப்பட்ட ஒருவருக்கு போகுமாறு ஒழுங்கு செய்தால் ஒரு மாதம் போட்டுவிட்டு மூன்றாம் மாதம் போடவில்லை. ஏன் போடவில்லை என்று கேட்டால் மனைவி குழந்தைகளுடன் சுற்றுலாச் சென்றதாகக் கூறுகிறார். எனக்கு எப்படி இருக்கும் என்று பாருங்கள்.

இன்னுமா அவர் அந்த பணத்தை கொடுக்கல ?? 

12 hours ago, நிழலி said:

அங்கு உள்ள படித்த அல்லது ஏதாவது ஒன்றில் திறமையுள்ள ஒருவர் வெளிநாடு வர விரும்பின் அதற்கான வழிமுறைகள் பற்றி அறிய என்னிடம் கேட்டால் எனக்கு தெரிந்த வழிமுறைகள் அனைத்தையும் கூறுவது உண்டு. ஏனெனில் அங்கு தமிழர்கள் சுயமரியாதையுடன் நிம்மதியாக வாழும் காலம் இனி வரப் போவதில்லை என்பதில் தெளிவாக இருக்கின்றேன். 

ஏதும் விவசாயம் சார்ந்த வேலைகள் ஏதும் கிடைக்குமாக இருந்தால் பகிரவும் அல்லது அறிவிக்கவும் பலர் சொல்கிறார்கள் ஏன் காசும் கொடுத்துள்ளார்கள் பண்ணைகள் (கோழி , மாடு) வேலை வாய்ப்பு இருக்குதாம் என  அப்படி ஏதும் வேலை வாய்ப்புக்கள் அங்கு கிடைக்குமா?? நிழலி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமே ஆண்களைக்காட்டிலும் பெண்களால் எவ்விடயத்தையும் கூர்மையாக அவதானிக்கமுடியும். உங்கள் கட்டுரை சொல்லும் செய்தி அதுதான். அநேகமாக புலம்பெயர்ந்து வாழ்ந்துகொண்டு தாயகத்தில் இருக்கும் உறவுகளுக்கு பொருளாதார உதவி செய்பவர்கள் இப்படியாக இக்கட்டில் கணிசமாகவே மாட்டுப்பட்டுள்ளனர். தாயகத்தின் மீதான பற்றுதலால் அங்குள்ள உறவுகளுக்கு நேர்ந்த துன்பங்களால் இப்படியான கசப்பான உணர்வுகளை நேர் கொண்டபோதும் அதனை பெரிது படுத்தாமல் விட்டுவிடுகிறார்கள். ஒரு புதிய சமூகம் அங்கு உருவாகி இருக்கிறது என்பது உண்மை. சில சமயங்களில் தம் குண இயல்புகளுக்கு அப்பால் பொருளாதார மோகம் பிறள்வுகளை உருவாக்கி அவர்களை சுரணையற்றவர்களாகக்கூட ஆக்கிவிடுகிறது. அன்பொழுக அழைப்பார்கள் உணவு தருவார்கள் என்பதெல்லாம் போராட்டகாலத்திற்கு முந்தையது அந்த எதிர்பார்ப்பை இப்போது நாங்கள் தேடுவது தவறு. ஏனென்றால் அச்சத்துடனான அவர்கள் அன்றாட வாழ்வை பெரும் பிணியோடு கடந்தவர்கள். ஒரு வேளை உணவுக்காகக்கூட ஒவ்வொரு குடும்பமும் தத்தளித்திருக்கின்றன. அதன் நிமித்தம் மற்றவரை உபசரிக்கும் பண்புகள் இழந்திருக்கின்றன. நீண்ட காலமாக எதிலியாக இடங்கள் மாறி தத்தம் சொந்தத்தேவைகளைப் பாதுகாக்க சுயநலமியாக மாறவேண்டிய கட்டாயத்திற்கு உட்பட்டவர்கள். இன்னும் அந்நிலையின் ஆதிக்கத்திலிருந்து விடுபடாத தன்மைகள் அவர்களை உபசரிக்கும் பண்பிலிருந்து விலத்தி வைத்திருக்கிறது. இவற்றை தவறென்று கருதிவிட முடியாது. புலம்பெயர்ந்தவர்கள் கஸ்டப்படுகிறோம் என்பதை அவர்கள் உணரவில்லை என்று சொல்லிவிடமுடியாது நாங்கள் கஸ்ரப்படுவதை தாங்கள் அறிந்திருப்பதாக காட்டிக்கொண்டால் உங்களிடம் பெறக்கூடிய ஏதேனும் உதவிகளை கேட்க முடியாதே அதுதானே அடிப்படை நீங்கள் சரியாக கஸ்ரப்படுகிறீர்கள் என்று சொல்லிவிட்டு எனக்கு ஏதேனும் உதவி செய்யலாம்தானே என்று கேட்க முடியுமா? இல்லைத்தானே... அடுத்து போராட்ட காலத்தில் ஓடியோடி அன்றாட தொழில்களை செய்யாமல் நிலையற்ற தன்மையால் சோம்பேறிகள் ஆகியிருக்கிறார்கள்.  தொழில் ரீதியாக நமக்குள் உள்ள ஏற்றத்தாழ்வுகளால் சாதிய வன்மங்களால் இப்போது அங்குள்ள இளையவர்கள் அவர்களுக்கான தொழிலைத் தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்துகிறார்கள். கூலித் தொழில் செய்பவர்கள் அநேகமாக முதியோர்களாகவே இருக்கிறார்கள். இளைவர்கள் மத்தியில் உழைப்பு என்றால் வெளிநாடு என்பதுதான் வேதமாக இருக்கிறது. எப்படியாவது வெளிநாடு போய்விட்டால் இந்த பொருளாதாரம் மற்றும் சமூக வன்மங்களிலிருந்து விடுபட்டுவிடுவோம் என்ற நப்பாசைதான். நாங்கள் புலம்பெயர்ந்து இருந்தாலும் எங்கள் சமூக அடிப்படைக்குணத்திலிருந்து விடுபட்டுவிட்டோம் என்று சொன்னால் அது வேசமாகும். புலம்பெயர்ந்த நாங்கள் கொஞ்சம் பொருளாதார மேம்பாட்டுடன் எம் சமூகத்திற்கே உரிய அடிப்படை குணங்களை மறைத்து மேக்கப்போட்டு மறைத்திருக்கிறோமேயன்றி மாறவில்லை. வசதி வாய்ப்புகள் இருக்கும் நாங்களே மாற்றமில்லாதவர்களாக பயணிக்கும்போது வாய்ப்புகளும் இல்லாமல் வசதியும் இல்லாமல் அத்தோடு ஒடுக்கப்பட்ட வாழ்வியலுக்குள் நின்று மன அழுத்தங்களுக்குள் ஆட்பட்டிருக்கும் சமூகமாகவே அவர்களை நாங்கள் நோக்கவேண்டும். கூர்மையான நோக்கல்கள் உங்கள் கட்டுரையில் நிறைந்திருக்கின்றன. அதே நேரம் உள் ஊடுருவும் பார்வையைத் தவிர்த்து விட்டீர்கள். உங்கள் நேரடியான அநுபவங்களும் ஆதங்கமும் தெரிகிறது. ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் அநுபவங்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருந்தாலும் அவை அவரவர்கள் உணரும் விதம் வேறல்லவா. உங்களுடைய பதிவில் உள்ளவைகள்  எனக்கும் ஏற்பட்டிருக்கின்றன. நாம் ஏற்றுக்கொள்ளும் விதம் மாறுபடுகிறது சுமே. ஆரோக்கியமான பதிவுதான் பலரை பேசவைக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இன்னுமா அவர் அந்த பணத்தை கொடுக்கல ?? 

ஏதும் விவசாயம் சார்ந்த வேலைகள் ஏதும் கிடைக்குமாக இருந்தால் பகிரவும் அல்லது அறிவிக்கவும் பலர் சொல்கிறார்கள் ஏன் காசும் கொடுத்துள்ளார்கள் பண்ணைகள் (கோழி , மாடு) வேலை வாய்ப்பு இருக்குதாம் என  அப்படி ஏதும் வேலை வாய்ப்புக்கள் அங்கு கிடைக்குமா?? நிழலி 

உங்களுக்கு வேற வேலை இல்லை...இவர்களது பேச்சை நம்பி மனிசியையும்,பிள்ளையையும் விட்டுட்டு இந்த குளிருக்குள்ள வந்து கஷ்ட படாமல் இருப்பதை கொண்டு திருப்தியாய் வாழுங்கோ ...அல்லது மத்திய கிழக்கு நாடுகளுக்கு 1, 2 வருச விசாவில் போய் உழையுங்கோ 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, நிழலி said:

வழக்கப் போல் ஒற்றைப் பார்வையுடன் எழுதப்ப கட்டுரை.

நான் கடந்த நான்கு வரிசங்களாக ஊருக்கு போய் வருகின்றேன். இது வரைக்கும் எந்த உறவுகளும் இவ்வளவு தா என தொந்தரவு செய்ததில்லை, நானும் கொடுக்கின்ற ஆளும் இல்லை.

ஊரில் நிற்கும் போது வெளிநாட்டு வாழ்வு முகத்தில் தந்த சில மாறுதல்கள் மட்டுமே வெளிநாடு ஒன்றில் வந்த ஒருவனாக காட்டும். மற்றப்படி பாட்டா செருப்பும் வெளியே விட்ட சேர்ட்டுமாகவே திரிவதுண்டு. என் முகனூலில் இருக்கும யாழ் கள உறவுகள் பலருக்கு இது தெரிந்து இருக்கும்.

ஊரில் வெளிநாட்டு பண உதவி எதுவும் இல்லாமல் சொந்த கடை நடத்தியும் விவசாயம் செய்தும் வாழும் பலரை என்னால் காட்ட முடியும். அரசு எந்தவொரு தொழிலையும் பொருளாதார மேம்பாடுகளையும் செய்யாமல், அது பற்றி தமிழ் எம் பிக்கள் எந்த பிரக்ஞை யும் அற்று இருக்கும் சூழ்நிலையிலும் தம் சொந்த கால்கள தங்கியிருக்கும் இளையவர்கள் பலர் உள்ளனர்.

அங்கு உள்ள படித்த அல்லது ஏதாவது ஒன்றில் திறமையுள்ள ஒருவர் வெளிநாடு வர விரும்பின் அதற்கான வழிமுறைகள் பற்றி அறிய என்னிடம் கேட்டால் எனக்கு தெரிந்த வழிமுறைகள் அனைத்தையும் கூறுவது உண்டு. ஏனெனில் அங்கு தமிழர்கள் சுயமரியாதையுடன் நிம்மதியாக வாழும் காலம் இனி வரப் போவதில்லை என்பதில் தெளிவாக இருக்கின்றேன். 

வெளிநாட்டு வாழ்வு என்பது புலம்பெயர் தமிழர்களுக்கு போராளிகளின் தியாகத்தால் விளைந்த வாய்ப்பு. அங்கு இருப்பது அந்த வாய்ப்பை தந்தவர்களை சுமந்து நின்ற மண். அந்த மண்ணில் வாழ்கின்றவர்களுக்கு எம் மேல் இருக்கும் கோபம் பலவற்றுக்கு நியாயமான காரணங்கள் இருக்கு. அதை புரிந்து கொள்ளாமல் நாம் பணம் தந்தவர்கள்/ இப்பவும் தருகின்றவர்கள் தானே என நாட்டாமை குணத்தை காட்ட நினைத்தால் அவர்களுக்கும் எமக்குமான இடைவெளி தான் இன்னும் அதிகரிக்கும். 

நன்றி

உங்களுக்கு வாய்த்த அனுபவத்தை வைத்துக்கொண்டுதான் நீங்களும் கதைக்கிறீர்கள்.  
நாங்கள் ஒன்றும் வெளிநாட்டில் இருந்தவர்கள் என்று பந்தா காட்டுவதில்லை. உன்னட்டை இதைவிட நல்ல உடுப்புகள் இல்லையோ என்று கேட்க்கும் அளவுக்கு மிகச் சாதாரணமாகவே நானோ அல்லது இன்னும் சிலரோ திரிவது. ஆனாலும் எப்படியோ வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் என்று அவர்களுக்குத் தெரிந்துவிடுகிறது. ஒட்டோ பிடித்துத் திரியாமல் பஸ்சில் திரிகிறா என்று சிரித்தவர்களும் உண்டு.

நான் கூறியது என் அனுபவம் மட்டும் அல்ல.

போரினால் தான் நாம் இங்கு வந்தோம் என்றாலும் எம்மைக் கண்டபடி திட்டுவதற்கு அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை. அவர்களுக்கு உரிமை இருக்கு என்றால் எமக்கும் உரிமை உண்டு. நீங்கள் வழமைபோல் வேண்டுமென்றோ அல்லது உங்கள்மனதில் படத்தை எழுதுகிறீர்கள் அவ்வளவே.

13 hours ago, colomban said:

தாஸ் அண்ணை, 

போராட்டத்தியும் புலம் பெயருதலையும் போட்டு நாம் குழப்பிக்கொள்ள கூடாது.
1978, 1979 களில் நான் சிறுவனக இருந்த காலத்திலேயே, ஜெர்மன் போக கொழும்பில் வந்து யாழ்ப்பாணாத்து இளைஞ‌ர்கள் இருபதை கண்டுள்ளேன். இது இலங்கையர்களின் இயல்பு, வறுமையான நாடுகளில் வாழும் இளைஞ‌ர்கள் எப்படியாவாது நாட்டை விட்டு போகவே முயற்சிப்பர்.

மேலும் புலம் பெயர்ந்து யாரும் அழிந்து போக மாட்டார்கள், மாறக செழிப்படைவார்கள்

மேலும் கட்டுரையாளர் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை ஆற்றமையை வெளிப்படுத்தியுள்ளார், இவர் எழுதியதுபோல் புலத்தில் எல்லோரும் அப்படியல்ல.

எல்லோரும் என்று நான் எங்கே எழுதினேன். அப்ப நீங்களும் கட்டுரையை வடிவாக வாசித்து விளங்கிக்கொள்ளவில்லை 😀

5 hours ago, வல்வை சகாறா said:

சுமே ஆண்களைக்காட்டிலும் பெண்களால் எவ்விடயத்தையும் கூர்மையாக அவதானிக்கமுடியும். உங்கள் கட்டுரை சொல்லும் செய்தி அதுதான். அநேகமாக புலம்பெயர்ந்து வாழ்ந்துகொண்டு தாயகத்தில் இருக்கும் உறவுகளுக்கு பொருளாதார உதவி செய்பவர்கள் இப்படியாக இக்கட்டில் கணிசமாகவே மாட்டுப்பட்டுள்ளனர்.

ஆண்கள் பற்றிய உங்கள் அவதானிப்பு மிகச் சரியாகவுள்ளது 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ரதி said:

உங்களுக்கு வேற வேலை இல்லை...இவர்களது பேச்சை நம்பி மனிசியையும்,பிள்ளையையும் விட்டுட்டு இந்த குளிருக்குள்ள வந்து கஷ்ட படாமல் இருப்பதை கொண்டு திருப்தியாய் வாழுங்கோ ...அல்லது மத்திய கிழக்கு நாடுகளுக்கு 1, 2 வருச விசாவில் போய் உழையுங்கோ 

அப்படித்தான் யோசித்து இருக்கிறன் ரதி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, வல்வை சகாறா said:

சுமே ஆண்களைக்காட்டிலும் பெண்களால் எவ்விடயத்தையும் கூர்மையாக அவதானிக்கமுடியும். உங்கள் கட்டுரை சொல்லும் செய்தி அதுதான்.

பெண்கள் ஆண்களை விட  எல்லாவிடயத்தையும் கூர்ந்து கவனிக்கிறதெல்லாம் வீடுகளுக்கு சரி வந்தாலும்....நாடு/ உலகம் என்று வரும்போது பூச்சியமாகவே இருந்து தொலைக்கின்றது.:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

16 hours ago, ரதி said:

உங்களுக்கு வேற வேலை இல்லை...இவர்களது பேச்சை நம்பி மனிசியையும்,பிள்ளையையும் விட்டுட்டு இந்த குளிருக்குள்ள வந்து கஷ்ட படாமல் இருப்பதை கொண்டு திருப்தியாய் வாழுங்கோ ...அல்லது மத்திய கிழக்கு நாடுகளுக்கு 1, 2 வருச விசாவில் போய் உழையுங்கோ 

அதே.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

 

ஆண்கள் பற்றிய உங்கள் அவதானிப்பு மிகச் சரியாகவுள்ளது 😀

சுமே ஏன் ராசாத்தி எல்லாம் ஒழுங்காத்தானே போயிட்டிருக்கு....😶  இதில் நம்ம பங்குக்கு நம்ம எண்ணத்தை எழுதினோம் தப்பா...... ஐ கெய்ட் யுவர் கொலைவெறி🤬

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/30/2019 at 6:26 PM, கிருபன் said:

புலத்தில் வாழும் இளம் பெண்களைப் பொறுத்தவரை வெளிநாடு என்பது சொர்க்கம் என்னும் அசைக்கமுடியாத நம்பிக்கை அவர்கள் எல்லோர் மனதிலும் வேரூன்றியிருக்கிறது. வெளிநாட்டு மாப்பிளைகளையே பெற்றோரும் விரும்புவதற்குக் காரணம் பிள்ளைகள் அங்கு சென்றால் தம் பொருளாதார வளம் சீரடையும் என்ற எண்ணமும் வெளிநாட்டில் பிள்ளை வசதியாக வாழ்வாள் என்ற எண்ணப்போக்கும்தான். பல பெற்றோர் கூட மணமகனுக்கு எந்தவிதக் கல்வித் தகுதியோ  அல்லது எத்தனை வயது வித்தியாசம் இருந்தாலும் கூட அதைப்பற்றி எவ்வித கவலையும் இன்றி மணமகனின் குணநலன்களைக் கூட விசாரிக்காது அல்லது கண்டுகொள்ளாது  மணமுடித்துக் கொடுக்கின்றனர். இதற்கான காரணம் பணமும் வசதியான வாழ்வும் என்ற எண்ணமேயன்றி வேறென்ன இருக்கமுடியும்?

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் நல்லாய் இருக்க வேண்டும் என நினைப்பது தப்பா மேடம்?

எவ்வித கல்வித்தகமைகள் இல்லாமலும் பலர் நல்லபடியாகத்தான் வாழ்கின்றார்கள். இதையும் அவர்கள் உதாரணமாக எடுத்திருக்கலாம் அல்லவா? tw_glasses:
 

உடன் பதில் தரவும் 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/1/2019 at 9:11 AM, ராசவன்னியன் said:

சரியான வேலை வாய்ப்புகள் அமையாமல், பொருளீட்ட நியாயமான, சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு புலம் பெயர ஆசை கொள்வதில் நிச்சயம் தவறில்லை.

ஆனால் எப்படியோ வாய்ப்பு கிட்டி, புலம் பெயர்ந்து அங்கே செட்டிலாகிய பின், தாயகத்திலிருந்து பின்னால் புலம் பெயர எத்தனிப்பவர்களைப் பார்த்து "இங்கொன்றும் சரியில்லை, நீங்கள் அங்கேயே தாயகத்தில் சமாளித்து வாழுங்கள்..!" என அறிவுறுத்துவது சரியன்று.

ஆனால் இங்கு நிலமை வேறு.50-- 60 இலச்சங்கள் செலவளித்து  அதுவும் உத்திரவாதம் இல்லாமல் வெளிநாடு செல்ல முயற்ச்சிப்பது எந்தளவுக்கு உகந்த செயல் என்று தெரியவில்லை.அப்படி போய் சேர்ந்தாலும் வேலை என்பது அடுத்த பிரச்சனை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, வல்வை சகாறா said:

சுமே ஏன் ராசாத்தி எல்லாம் ஒழுங்காத்தானே போயிட்டிருக்கு....😶  இதில் நம்ம பங்குக்கு நம்ம எண்ணத்தை எழுதினோம் தப்பா...... ஐ கெய்ட் யுவர் கொலைவெறி🤬

நானும் என் எண்ணத்தைத் தாம்மா எழுதினது 🤓

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் நல்லாய் இருக்க வேண்டும் என நினைப்பது தப்பா மேடம்?

எவ்வித கல்வித்தகமைகள் இல்லாமலும் பலர் நல்லபடியாகத்தான் வாழ்கின்றார்கள். இதையும் அவர்கள் உதாரணமாக எடுத்திருக்கலாம் அல்லவா? tw_glasses:
 

உடன் பதில் தரவும் 😀

தமிழ் சமூகம் இன்னும் பெற்றோரை மிக உயர்வாக்கச் சித்தரித்து ஏமாற்றுகிறது. பலர் நல்ல பெற்றோராக இருந்தாலும் சிலர் சுயநலமுள்ளவர்களாகவே இருக்கின்றனர் அங்கும் இங்கும். பலர் தம் சுமை குறைந்தால் போதும் என்னும் சுயநலத்தில் தான் எதையும் கண்டுகொள்ளாது பிள்ளைகளை வெளிநாட்டுக் கிழட்டு மாப்பிளைகளுக்கும், திருடர்களுக்கும் திருமணம் முடிதத்துக் கொடுக்கின்றனர். இதில் பிள்ளை நல்லாய் இருக்கவேண்டும் என்பது எங்கே வருகிறது குமாரசாமி ???. 

கல்வித் தகைமை பற்றிப் பார்க்காத தேவையில்லை. வயது வித்தியாசத்தை திருமணம் ஆனவரா இல்லையா என்பதைக் கூடப் பார்ப்பதில்லை. சில பெற்றோர் வெளிநாட்டிலிருந்து வருபவர்களுடன் தம் பிள்ளைகளை தெரிந்தே ஊர் சுற்ற விட்டுப் பணம் ஈட்டுகின்றனர். இவை எல்லாம் சரி என்கிறீர்களா ???

உடனடியாய் வாசிக்கவும் 😎

3 hours ago, சுவைப்பிரியன் said:

ஆனால் இங்கு நிலமை வேறு.50-- 60 இலச்சங்கள் செலவளித்து  அதுவும் உத்திரவாதம் இல்லாமல் வெளிநாடு செல்ல முயற்ச்சிப்பது எந்தளவுக்கு உகந்த செயல் என்று தெரியவில்லை.அப்படி போய் சேர்ந்தாலும் வேலை என்பது அடுத்த பிரச்சனை.

ராஜவன்னியன் அண்ணாவுக்கு எம்மவர்களின் வாழ்வியல் தெரியவில்லை. எல்லோரும் வசதியாக வாழ்வதாக எண்ணிக்கொண்டிருக்கிறார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

தமிழ் சமூகம் இன்னும் பெற்றோரை மிக உயர்வாக்கச் சித்தரித்து ஏமாற்றுகிறது. பலர் நல்ல பெற்றோராக இருந்தாலும் சிலர் சுயநலமுள்ளவர்களாகவே இருக்கின்றனர் அங்கும் இங்கும். பலர் தம் சுமை குறைந்தால் போதும் என்னும் சுயநலத்தில் தான் எதையும் கண்டுகொள்ளாது பிள்ளைகளை வெளிநாட்டுக் கிழட்டு மாப்பிளைகளுக்கும், திருடர்களுக்கும் திருமணம் முடிதத்துக் கொடுக்கின்றனர். இதில் பிள்ளை நல்லாய் இருக்கவேண்டும் என்பது எங்கே வருகிறது குமாரசாமி ???. 

கல்வித் தகைமை பற்றிப் பார்க்காத தேவையில்லை. வயது வித்தியாசத்தை திருமணம் ஆனவரா இல்லையா என்பதைக் கூடப் பார்ப்பதில்லை. சில பெற்றோர் வெளிநாட்டிலிருந்து வருபவர்களுடன் தம் பிள்ளைகளை தெரிந்தே ஊர் சுற்ற விட்டுப் பணம் ஈட்டுகின்றனர். இவை எல்லாம் சரி என்கிறீர்களா ???

உடனடியாய் வாசிக்கவும் 😎

ராஜவன்னியன் அண்ணாவுக்கு எம்மவர்களின் வாழ்வியல் தெரியவில்லை. எல்லோரும் வசதியாக வாழ்வதாக எண்ணிக்கொண்டிருக்கிறார்

இவ்வளவும் உண்மை...அநேகமான குடும்பங்களில் இந்தக் கதை தான் நடக்குது 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

...ராஜவன்னியன் அண்ணாவுக்கு எம்மவர்களின் வாழ்வியல் தெரியவில்லை. எல்லோரும் வசதியாக வாழ்வதாக எண்ணிக்கொண்டிருக்கிறார்

அப்படி நான் எங்குமே சொல்லவில்லையே அம்மணி..?

மேற்கத்திய நாடுகளின் குளிரில் பலரும் ஒரு நாளைக்கு இரண்டு, மூன்று வேலை செய்து கடினமாக உழைத்து பொருளீட்டிதான் வாழ்கிறார்கள் (சிலர் செல்வந்தர்களாக இருக்கலாம்)என அறிந்துதான் உள்ளேன்.

நான் முன்பு சொன்னது புலம் பெயர்வது, செல்லும் நாட்டின் சட்டவிதிகளுக்கு உட்பட்டதாய் இருக்கவேண்டும் என்பதே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/4/2019 at 2:03 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

தமிழ் சமூகம் இன்னும் பெற்றோரை மிக உயர்வாக்கச் சித்தரித்து ஏமாற்றுகிறது. பலர் நல்ல பெற்றோராக இருந்தாலும் சிலர் சுயநலமுள்ளவர்களாகவே இருக்கின்றனர் அங்கும் இங்கும். பலர் தம் சுமை குறைந்தால் போதும் என்னும் சுயநலத்தில் தான் எதையும் கண்டுகொள்ளாது பிள்ளைகளை வெளிநாட்டுக் கிழட்டு மாப்பிளைகளுக்கும், திருடர்களுக்கும் திருமணம் முடிதத்துக் கொடுக்கின்றனர். இதில் பிள்ளை நல்லாய் இருக்கவேண்டும் என்பது எங்கே வருகிறது குமாரசாமி ???. 

கல்வித் தகைமை பற்றிப் பார்க்காத தேவையில்லை. வயது வித்தியாசத்தை திருமணம் ஆனவரா இல்லையா என்பதைக் கூடப் பார்ப்பதில்லை. சில பெற்றோர் வெளிநாட்டிலிருந்து வருபவர்களுடன் தம் பிள்ளைகளை தெரிந்தே ஊர் சுற்ற விட்டுப் பணம் ஈட்டுகின்றனர். இவை எல்லாம் சரி என்கிறீர்களா ???

 

மறுத்துவிட்டு அகல முடியாத விடயம்.  பெற்றோர் திருமணம் செய்து வைக்கிறார்கள் பிள்ளைகள் திருமணம் செய்கிறார்கள் இதில் உங்களுக்கு ஏன் வருத்தம் என்று பலர் கேட்கக்கூடும். ஒரு திருமண முகவராக செயற்படுவதால் இவ்விடயத்தில் இருக்கும் உண்மையை அதிகம் அறியக்கூடியதாக இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/4/2019 at 8:03 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

தமிழ் சமூகம் இன்னும் பெற்றோரை மிக உயர்வாக்கச் சித்தரித்து ஏமாற்றுகிறது. பலர் நல்ல பெற்றோராக இருந்தாலும் சிலர் சுயநலமுள்ளவர்களாகவே இருக்கின்றனர் அங்கும் இங்கும். பலர் தம் சுமை குறைந்தால் போதும் என்னும் சுயநலத்தில் தான் எதையும் கண்டுகொள்ளாது பிள்ளைகளை வெளிநாட்டுக் கிழட்டு மாப்பிளைகளுக்கும், திருடர்களுக்கும் திருமணம் முடிதத்துக் கொடுக்கின்றனர். இதில் பிள்ளை நல்லாய் இருக்கவேண்டும் என்பது எங்கே வருகிறது குமாரசாமி ???. 

கல்வித் தகைமை பற்றிப் பார்க்காத தேவையில்லை. வயது வித்தியாசத்தை திருமணம் ஆனவரா இல்லையா என்பதைக் கூடப் பார்ப்பதில்லை. சில பெற்றோர் வெளிநாட்டிலிருந்து வருபவர்களுடன் தம் பிள்ளைகளை தெரிந்தே ஊர் சுற்ற விட்டுப் பணம் ஈட்டுகின்றனர். இவை எல்லாம் சரி என்கிறீர்களா ???

உடனடியாய் வாசிக்கவும் 😎

 

ஒரு சில குடும்பங்கள் அல்லது வறுமையில் வாடும் குடும்பங்களின் நடவடிக்கைகளை வைத்து ஒட்டுமொத்த சமூகத்தையும் கணிப்பிடலாகாது.
சமூக நடப்புகளை நிதானமாக ஆராய்ந்து விட்டு நிதானமாக பதில் எழுதவும்.✍️

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

“சில பெண்கள் அங்கு ஒரு காதலன் இருக்க அவரின் சம்மதத்துடனும் திட்டத்துடனும் திருமணம் செய்துகொண்டு வந்து இங்கு விசா பெற்றுக்கொண்டபின் கணவனை விவாகரத்துச் செய்துவிட்டு பழைய காதலனைக் கூப்பிட்டுத் திருமணம் செய்து வாழ்கிறார்கள்.”


இந்த கருத்தை வாசித்த போது எனக்குள் கேள்வி எழுந்தது.. 

ஒரு காதலி/பெண் இந்த  மாதிரி நடப்பதற்கு சம்மதம் தெரிவிக்கும் காதலன்/ஆணிற்கு(? ) கூட பொருளாதார முன்னேற்றம் மட்டுமே கண்களில்  தெரிகிறதோ என்று?
 

 


 

Link to comment
Share on other sites

21 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

“சில பெண்கள் அங்கு ஒரு காதலன் இருக்க அவரின் சம்மதத்துடனும் திட்டத்துடனும் திருமணம் செய்துகொண்டு வந்து இங்கு விசா பெற்றுக்கொண்டபின் கணவனை விவாகரத்துச் செய்துவிட்டு பழைய காதலனைக் கூப்பிட்டுத் திருமணம் செய்து வாழ்கிறார்கள்.”


இந்த கருத்தை வாசித்த போது எனக்குள் கேள்வி எழுந்தது.. 

ஒரு காதலி/பெண் இந்த  மாதிரி நடப்பதற்கு சம்மதம் தெரிவிக்கும் காதலன்/ஆணிற்கு(? ) கூட பொருளாதார முன்னேற்றம் மட்டுமே கண்களில்  தெரிகிறதோ என்று?
 

 


 

திருமணம் செய்து ஸ்பான்சர் பண்ண  அவர்கள் விமானநிலையத்தில் வந்திறங்கி  காதலனுடன் சென்ற சம்பவங்கள் எனக்கு தெரிந்து இரண்டு.

அவர்கள் வெளிநாட்டுவாழ்க்கைக்காக எந்த எல்லைக்கும்  செல்ல தயாராக இருக்கிறார்கள் வயது வித்தியாசம் 15 மேல் அநேகமான தற்போதைய திருமணங்களில்,அதை விட காதலன் காதலியை வெளிநாட்டு மாப்பிளை க்காக கைவிடுதல் இது இப்போது ஆரம்பித்ததல்ல இப்பிடி இன்னும் பல 

பணம் தேவை எனும் போது அடுத்தடுத்து அழைப்பினை எடுக்கும் உறவுகள் பணம் கையில் கிடைத்தவுடன் அது கிடைத்து விட்டது என போன் பண்ணி சொல்வதற்கு கூட மறக்கிறார்கள் அடுத்தமுறை பணத்தேவை ஏற்படும் போது தான் எங்கள் நினைவு அவர்களிற்கு வருகிறது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

“அவர்கள் வெளிநாட்டு வாழ்க்கைக்காக எந்த எல்லைக்கும் செல்ல தயராக இருக்கிறார்கள்”.

உண்மைதான், இது இருபாலாருக்குமே பொருந்தும். ஏனெனில் உங்களுக்கு தெரிந்த சம்பவங்கள் இரண்டு வேறு, எனக்கு தெரிந்த சம்பவங்கள் நான்கு வேறுவிதம், இன்னும் பலருக்கு இன்னும் பலவித சம்பவங்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வித கண்ணோட்டத்துடன் பார்ப்பார்கள், கருத்துக்களை எழுதுவார்கள். நான் எனது கருத்தை எழுதினேன். 

உங்களது கருத்திற்கும் மிக்க நன்றிகள் அபராஜிதன்.

Link to comment
Share on other sites

 எனது மேல் உள்ள கருத்தில் தனியாக பெண்கள் வர்க்கத்தை மட்டுமே குற்றஞ்சாட்டுவது போல ஒரு தொனி இருப்பதாக படுகிறது அல்லது தவறாக புரிந்து கொள்ளப்படக்கூடுமென நினைக்கிறேன்..அதில் பெண்களை மட்டும் குற்றம் சொல்லவில்லை பொதுவான சமூக போக்கினை மட்டுமே குறிப்பிட்டுள்ளேன்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் எழுதும் கருத்துகள் மூலம் மற்றையவர்களை வருத்தப்பட வைக்க வேண்டும் என்பது எனது நோக்கம் இல்லை. அப்படி ஏதும் எழுதிருந்தால் மன்னிக்கவும். 

நான் கூற வந்த கருத்து இதுதான் “ வெளிநாட்டு மோகம், பொருளாதார தேவை கருதி தனது காதலி இன்னொருவரை திருமணம் செய்ய சம்மதம் கொடுக்கும் போது காதலன்/ஆண் என்ற தகுதியை, சுயமரியாதையை இழந்து விடுகிறான், அந்த பெண் கூட இப்படியான ஒருவனை காதலிப்பதை விட தன்னை திருமணம் செய்தவருடன் உண்மையாக வாழ்ந்துவிட்டு போனால் அந்த பெண் புத்திசாலி”
இங்கே அந்த சில பெண்களில் மட்டுமல்ல அந்த சில ஆண்களிலும் தவறு உள்ளது.
ஒருவர் எப்படி வாழ வேண்டும் என்பது அவரவர் விருப்பம். ஆனால் இந்த மாதிரி விடயங்களில்  பெரும்பலான  சமயங்களில் பெண்களை குற்றம் கூறுவது எனக்கு சரியாக தோன்றவில்லை.

மேலும், புலத்தில் இப்பொழுது “ வெளிநாட்டு மோகம்” குறைந்து வருவதை நான் காண்கிறேன். முன்பு போல் அல்லாது இப்பொழுது இங்கேயுள்ள வாழ்க்கை முறைகள், பிரச்சனைகள், நடக்கும் சம்பவங்களை அறியும் வாய்ப்புகள் அதிகம் என்பதால், பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை உள்ளூரிலேயே திருமணம் செய்து வைக்க விரும்புகிறார்கள், அதே போல ஆண் பெண் இருவருமே ஓரளவிற்கு சம்பாதிக்க கூடியதாக இருப்பதால், வெளிநாட்டு திருமணங்களை அதிகம் விரும்புவதில்லை.

அதே போல, படித்த கல்விக்கு ஏற்ற வேலைவாய்ப்பு இல்லாவிடிலோ, பொருளாதார முன்னேற்றம் கருதி புலம்பெயர விரும்புவர்கள் கூட, தம்பதிகளாகவே இங்கே வருகிறார்கள், முன்னேறுகிறார்கள், தமது குடும்பம், சமூகத்தையும் முன்னேற்றுகிறார்கள்.

நான் முன்பே கூறியது போல, ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு அனுபவங்கள் ஏற்பட்டிருக்கும், அதைப்பற்றிய அவர்களது கண்ணோட்டமும் வித்தியாசமாகவே இருக்கும். 

நன்றி..


 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.