Jump to content

‘புலம்பெயரிகள்’ ஒரு நோக்கு -நிவேதா உதயராஜன்


Recommended Posts

பிழைத்திருத்தல் கேழ்விக்குறியாகும் தருணங்களில் ஆண் பெண்ணாகவல்ல தப்பிக்க வழிதேடும் மனிதர்களாவே நாம் எல்லோரும் செயல்படுகிறோம். இது தொடர்பான புரிந்துணர்வு மனிதாபிமானத்தின் அடிப்படையாகும்.  

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • Replies 53
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
On 12/5/2019 at 11:22 PM, குமாரசாமி said:

ஒரு சில குடும்பங்கள் அல்லது வறுமையில் வாடும் குடும்பங்களின் நடவடிக்கைகளை வைத்து ஒட்டுமொத்த சமூகத்தையும் கணிப்பிடலாகாது.
சமூக நடப்புகளை நிதானமாக ஆராய்ந்து விட்டு நிதானமாக பதில் எழுதவும்.✍️

 

வறுமையில் வாடுபவர்களைப் பற்றி மட்டும் நான் கூறவில்லை. ஒரு விதானைத் தந்தையின் வாழ்வுகூட சீரழிந்துபோய் இருப்பதற்கு பெற்றோரின் பேராசையே காரணமாக இருந்திருக்கிறது. ஆண்கள் எப்போதும் சில விடயங்களை மேலோட்டிடமாகவே அறிந்து வைத்திருக்கிறீர்கள் 😀

On 12/5/2019 at 8:52 PM, வல்வை சகாறா said:

மறுத்துவிட்டு அகல முடியாத விடயம்.  பெற்றோர் திருமணம் செய்து வைக்கிறார்கள் பிள்ளைகள் திருமணம் செய்கிறார்கள் இதில் உங்களுக்கு ஏன் வருத்தம் என்று பலர் கேட்கக்கூடும். ஒரு திருமண முகவராக செயற்படுவதால் இவ்விடயத்தில் இருக்கும் உண்மையை அதிகம் அறியக்கூடியதாக இருக்கிறது.

நன்றி சகாரா. அனைவராலுமிது விளங்கிக்கொள்ள முடியாதது.

On 12/6/2019 at 7:50 AM, பிரபா சிதம்பரநாதன் said:

“சில பெண்கள் அங்கு ஒரு காதலன் இருக்க அவரின் சம்மதத்துடனும் திட்டத்துடனும் திருமணம் செய்துகொண்டு வந்து இங்கு விசா பெற்றுக்கொண்டபின் கணவனை விவாகரத்துச் செய்துவிட்டு பழைய காதலனைக் கூப்பிட்டுத் திருமணம் செய்து வாழ்கிறார்கள்.”


இந்த கருத்தை வாசித்த போது எனக்குள் கேள்வி எழுந்தது.. 

ஒரு காதலி/பெண் இந்த  மாதிரி நடப்பதற்கு சம்மதம் தெரிவிக்கும் காதலன்/ஆணிற்கு(? ) கூட பொருளாதார முன்னேற்றம் மட்டுமே கண்களில்  தெரிகிறதோ என்று?
 

அது மட்டும்தான் அப்படியான ஆண்களின் நோக்கம். ஆனால் அவர்கள் வெளிநாடு வந்தபின்னர் விசா பெற்றுக்கொண்டதும் அந்தப் பெண்ணுடன் இருக்கிறார்களா என்பது கேள்விக்குறி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/6/2019 at 8:21 AM, அபராஜிதன் said:

திருமணம் செய்து ஸ்பான்சர் பண்ண  அவர்கள் விமானநிலையத்தில் வந்திறங்கி  காதலனுடன் சென்ற சம்பவங்கள் எனக்கு தெரிந்து இரண்டு.

அவர்கள் வெளிநாட்டுவாழ்க்கைக்காக எந்த எல்லைக்கும்  செல்ல தயாராக இருக்கிறார்கள் வயது வித்தியாசம் 15 மேல் அநேகமான தற்போதைய திருமணங்களில்,அதை விட காதலன் காதலியை வெளிநாட்டு மாப்பிளை க்காக கைவிடுதல் இது இப்போது ஆரம்பித்ததல்ல இப்பிடி இன்னும் பல 

பணம் தேவை எனும் போது அடுத்தடுத்து அழைப்பினை எடுக்கும் உறவுகள் பணம் கையில் கிடைத்தவுடன் அது கிடைத்து விட்டது என போன் பண்ணி சொல்வதற்கு கூட மறக்கிறார்கள் அடுத்தமுறை பணத்தேவை ஏற்படும் போது தான் எங்கள் நினைவு அவர்களிற்கு வருகிறது

இப்படி இன்னும்பல. ஆனால் எல்லோரும் அதை வெளியே சொல்வதில். தம்முள்ளே வருந்திவிட்டு விட்டுவிடுகிறார்கள்.

தம்மை ஏமாற்றுகிறார்கள் என்று தெரிந்தே பணமும் மீண்டும் மீண்டும் அனுப்புகின்றனர். இதற்கான காரணம் இவர்கள் கொண்டிருக்கும் அன்பு மற்றையது நாம் வெளிநாட்டில் வாழ்கிறோம் என்னும் குற்ற உணர்வு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/7/2019 at 7:07 AM, poet said:

பிழைத்திருத்தல் கேழ்விக்குறியாகும் தருணங்களில் ஆண் பெண்ணாகவல்ல தப்பிக்க வழிதேடும் மனிதர்களாவே நாம் எல்லோரும் செயல்படுகிறோம். இது தொடர்பான புரிந்துணர்வு மனிதாபிமானத்தின் அடிப்படையாகும்.  

பிழைத்திருத்தலுக்காக எல்லோரும் நியாயமற்ற வழிகளைத் தேடுவதில்லையே அண்ணா. மனிதாபிமானம் என்பது வேறு. இது வேறு.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 03:40 PM   அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில் இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்  வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் என்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தூய்மையான ஒரு எதிர்காலத்தினை  தூய்மையான அரசியலிற்கான ஒரு தேவைப்பாட்டினை அரசிடமிருந்து மக்கள் நீண்டகாலமாக  எதிர்பார்க்கின்றனர். இலங்கைதொடர்ந்து பல வருடங்களாக பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துவந்தாலும் 2022ம் ஆண்டு மிக மோசமான அடியை சந்தித்தது 2022 பொருளாதார பிரச்சினை என்பது வெறுமனே 2022 ம் ஆண்டு வந்தது அல்ல இது மிகநீண்டகாலமாக தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை தீர்க்காமல் அந்த பிரச்சினைகளை மையமாக வைத்து அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடிக்கொண்டிருந்தவர்களால் எடுத்துக்கொண்டுவரப்பட்டு பின்னர் அது ஒரு பூகம்பமாக வெடித்தது. அதுதான் நாங்கள் அனைவரும் எதிர்நோக்கிய மோசமான பொருளாதார  நெருக்கடி. அதன் பிற்பாடு நாங்கள் மீட்சியை அடைந்துவிட்டோம் என சிலர் கூறினாலும் கூட நாங்கள் உண்மையான மீட்சியை அடையவில்லை. சிறந்த ஒரு பொறிமுறை ஊடாக நாங்கள் அடையவேண்டிய இலக்குகள் இன்னமும் உள்ளன. சமத்துவம் என்ற வார்த்தையை வைத்து நாங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த  பிரச்சினையையும் அடையாளம் காணமுடியும். சமத்துவமற்ற ஜனநாயகத்தினால் நாங்கள் எந்தவொரு முன்னேற்றத்தையும் அடைந்துவிட முடியாது. இலங்கையில் இலவசக்கல்வி வழங்கப்படுகின்றது இந்த இலவசக்கல்வி ஊடாக தங்களுடைய இலக்கினை ஒரு பணக்கார மாணவன் அடைந்துகொள்ளும்;  தன்மையும் ஏழை மாணவன் அடைந்துகொள்ளும் முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. அடித்தட்டுமக்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் ஏன் அவர்கள் இவ்வளவு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்பதை சற்றே சிந்தித்து பார்த்தால் சமத்துவமற்ற நிலையே இதற்கு காரணம் என்பது புலப்படும். வருமானசமத்துவம் இன்மை அதிகரித்துவருகின்றது செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர்  வறியவர்கள் மேலும் வறியவர்களாகின்றனர். இங்கு காணப்படுகின்ற ஜனநாயகத்தில் தமிழர்கள் முஸ்லீம்கள்  ஒருபோதும் அதிகாரம் செலுத்துவதில்லை. சிங்களவர்கள் கொண்டுவருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அதிகாரம் செலுத்துகின்றார்கள. நாங்கள் பங்காளிகள் இல்லையா என்ற கேள்வி  தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் காணப்படுகின்றது. வடக்குகிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் அடாத்தாக கைப்பற்றப்படுகின்றன இதற்கு பொலிஸார் துணைபோகின்றனர். இனங்களுக்கு இடையில் சமத்துவம் இன்மையே இதற்கு காரணம் மற்றைய சமூகங்களிற்கு அதிகாரங்கள் சென்றடையவில்லை. கொரோனா காலத்தில் முஸ்லீம்மக்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன அவர்கள் பழிவாங்கப்பட்டார்கள் இதற்கு யாராவது பொறுப்புக்கூறச்செய்யப்பட்டார்களா  சிறுபான்மை சமூகங்களின் இடங்களை பிடித்து  பௌத்த மக்களை கவர்ந்து நாயகர்களாக மாறி தேர்தல்களில் வெற்றிபெறுகின்றனர் ஆனால் அவர்களை வெற்றிபெறச்செய்தவர்களின் வாழ்க்கை மாற்றமடையாமல் வறுமையில் நீடிக்கின்றது. இந்த உணர்வு அரசியலை என் சகோதரசிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். சரியான முறையில்  அதிகாரபகிர்வு இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை நீங்கள் நம்பவேண்டும். மீண்டும் மீண்டும் இந்த விடயங்களை  கூறி எங்களை எத்தனை காலமாக எங்களை ஏமாற்றப்போகின்றீர்கள். புரிந்துணர்வுதான் இந்த ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானது. https://www.virakesari.lk/article/179972
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • சீமானுக்கு எதிராக பொங்கி எழுபவர்கள் யாரென்று பார்த்தால் சிங்கள ஆக்கிரமிப்பையும் கிந்திய ஆக்கிரமிப்பை பற்றியும் வாயே திறக்காதவர்கள் தான் 🤣
    • எம் ஜிஆர் ,  கருணாநிதி , நெடுமாறன்,திருமாளவன்,வைகோ,துரைமுருகன் போன்றோர் செய்யாத ஈழ அரசியலையா சீமான் செய்து விட்டார்? அதிலும் பழ நெடுமாறன்  ஒருபடி மேலே......! நான் தமிழன். நீங்கள் ஈழத்து திராவிடர்களா?😁
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.