Jump to content

கோயில் மடப்பள்ளிக்குள் வைத்து சிறுமியை சீரழித்த பூசகர்: வல்வெட்டித்துறையில் அதிர்ச்சி சம்பவம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பாடசாலை மாணவி ஒருவருக்கு கைத்தொலைபேசி, இனிப்புக்கள் வாங்கி கொடுத்து, அவரை மயக்கி கோயில் மடப்பள்ளியில் வைத்து தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்ததாக குற்றம்சாட்டப்பட்டு ஆலய பூசகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த அதிர்ச்சி சம்பவம் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் நடந்தது.

தந்தையற்ற தரம் 4ல் கல்வி கற்கும் மாணவியே சீரழிக்கப்பட்டுள்ளார். மாணவி பாடசாலைக்கு கைத்தொலைபேசி கொண்டு சென்றபோது, அவருக்கு எவ்வாறு கைத்தொலைபேசி கிடைத்தது என சந்தேகமடைந்த பாடசாலை ஆசிரியர்கள் விசாரணை செய்ததில் விடயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பாடசாலை நிர்வாகம் உடனடியாக சம்பவத்தை பருத்தித்துறை பிரதேச செயலக சிறுவர் பிரிவுக்கு அறிவித்துள்ளனர்.

பருத்தித்துறை பிரதேச செயலக சிறுவர் பிரிவு அதிகாரிகள் மேலதிக புலன் விசாரணை மேற்கொண்டதையடுத்து வல்வெட்டித்துறை பொலிஸில் முறைப்பாடு செய்தனர். மாணவியிடம் கைப்பற்றிய தொலைபேசியை சான்று பொருளாக ஒப்படைக்கப்பட்டது.

சிறுமியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அம்மன் கோவில் பூசகர் அந்த தொலைபேசியை தந்ததாக குறிப்பிட்டார். அத்துடன், பூசகர் காசு மற்றும் உணவு பொருட்களை கொடுத்து சிறுமியை நயவஞ்சகமாக கோயில் மடப்பள்ளிக்குள் அழைத்து தொடர்ச்சியாக பல மாதங்கள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக குற்றம்சுமத்தப்படுகிறது.

பொலிஸார் மேற்கொண்ட மேலதிக விசாரணையில் மாணவியின் சித்தப்பாவும் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததை கண்டறிந்து உள்ளனர். பூசகரால் துஷ்பிரயோகம் செய்யப்படுவதற்கு அவரும் உடந்தையாக இருந்ததாக குறிப்பிடப்படுகிறது

பூசகர் மற்றும் சித்தப்பா ஆகிய இருவரையும் சிறுமிக்கு தொடர்ச்சியாக பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்திற்காக கைது செய்து நேற்று முன்தினம் (28) பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர். சந்தேக நபர்கள் இருவரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கவும், சிறுமியை மருத்துவ பரிசோதனை செய்யவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

http://www.pagetamil.com/90758/?fbclid=IwAR2XJlVr5wEQok0hjUsHNLj3_np0DY5S3dZLsjqFW1sJ4a4QFfGL2EvA5P4

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறையில் இருக்கும் இவர்களை உள்ளிருக்கும் கைதிகள் நன்றாக கவனிப்பார்கள் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன் சிறைக்காவலர்களை விட கைதிகள் உள்ள வச்சி நல்லா செய்வார்கள் 

காசால் வெளியில் கூட்டி வர வக்கீல்கள் இருக்கும் வரைக்க்கும் சம்பவங்கள் தொடரத்தான் செய்யும்  இந்தியாவில் ஓர் வைத்திய பெண்ணை கூட்டு பாலியல் செய்து எரித்து கொன்றிருக்கிறார்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பிழம்பு said:

பூசகர் மற்றும் சித்தப்பா ஆகிய இருவரையும் சிறுமிக்கு தொடர்ச்சியாக பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்திற்காக கைது செய்து நேற்று முன்தினம் (28) பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர். சந்தேக நபர்கள் இருவரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கவும், சிறுமியை மருத்துவ பரிசோதனை செய்யவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இலங்கை அரசு போட்ட விதைகள் இப்போ தமிழர்களிடத்தில் நல்ல விளைச்சலைப் பெறுகிறது.

Link to comment
Share on other sites

1 hour ago, ஈழப்பிரியன் said:

இலங்கை அரசு போட்ட விதைகள் இப்போ தமிழர்களிடத்தில் நல்ல விளைச்சலைப் பெறுகிறது.

எவ்வளவு காலத்திற்கு எம் சமூகத்தில் நிகழும் இத்தகைய பிறழ்வான செயல்களுக்கு இலங்கை அரசை மட்டும் குற்றம்சாட்டிக் கொண்டு இருக்க போறீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, நிழலி said:

எவ்வளவு காலத்திற்கு எம் சமூகத்தில் நிகழும் இத்தகைய பிறழ்வான செயல்களுக்கு இலங்கை அரசை மட்டும் குற்றம்சாட்டிக் கொண்டு இருக்க போறீர்கள்?

நிழலி இது நல்லதொரு கேள்வி.

ஆனாலும் விடை தெரியவில்லை.வெகுவிரைவில் விடை கிடைக்காது என்பது மட்டும் தெரிகிறது.

தலைவர் பிரபாகரன் மாதிரியான ஒரு தலைவனைத் தேடுகிறேன்.அதுக்காக ஆயுதப் போராட்டம் என்றில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

1952இல் பராசக்தி திரைப்படத்துக்கு கலைஞர் எழுதிய வரிகள் இவை

“பணம் பறிக்கும் கொள்ளைக் கூட்டத்தை வளரவிட்டது யார் குற்றம் ? பஞ்சத்தின் குற்றமா ? அல்லது பஞ்சத்தை மஞ்சத்திற்கு வரவழைக்கும் வஞ்சகர்களின் குற்றமா ? கடவுள் பெயரால் காம லீலைகள் நடத்தும் போலிப் பூசாரிகளை நாட்டிலே நடமாட விட்டது யார் குற்றம் ? கடவுளின் குற்றமா ? அல்லது கடவுளின் பெயரைச் சொல்லி காலட்சேபம் நடத்தும் கயவர்களின் குற்றமா ?”

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பிழம்பு said:

பாடசாலை மாணவி ஒருவருக்கு கைத்தொலைபேசி, இனிப்புக்கள் வாங்கி கொடுத்து, அவரை மயக்கி கோயில் மடப்பள்ளியில் வைத்து தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்ததாக குற்றம்சாட்டப்பட்டு ஆலய பூசகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த அதிர்ச்சி சம்பவம் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் நடந்தது.

 

2 hours ago, ஈழப்பிரியன் said:

இலங்கை அரசு போட்ட விதைகள் இப்போ தமிழர்களிடத்தில் நல்ல விளைச்சலைப் பெறுகிறது.

 

3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இந்தியாவில் ஓர் வைத்திய பெண்ணை கூட்டு பாலியல் செய்து எரித்து கொன்றிருக்கிறார்கள் 

இதுவும் இலங்கை அரசு போட்ட விதைகளோ?

Link to comment
Share on other sites

5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இந்தியாவில் ஓர் வைத்திய பெண்ணை கூட்டு பாலியல் செய்து எரித்து கொன்றிருக்கிறார்கள் 

3 hours ago, ஈழப்பிரியன் said:

இலங்கை அரசு போட்ட விதைகள் இப்போ தமிழர்களிடத்தில் நல்ல விளைச்சலைப் பெறுகிறது.

1 hour ago, விளங்க நினைப்பவன் said:

இதுவும் இலங்கை அரசு போட்ட விதைகளோ?

இதென்ன நீங்கள் இப்படி கேட்கிறீர்கள்? இப்படி எவ்வளவு வன்கொடுமைகளை இலங்கை அரசு செய்திருக்கிறது? அவற்றை செய்திகளில் படித்த இந்தியர்கள், தாமும் இப்படியான வன்கொடுமைகளை செய்யும் போது, “இலங்கை அரசு போட்ட விதைகள்” என்று சொல்வது பொருத்தமானது, இல்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/30/2019 at 6:38 PM, பிழம்பு said:

பாடசாலை மாணவி ஒருவருக்கு கைத்தொலைபேசி, இனிப்புக்கள் வாங்கி கொடுத்து, அவரை மயக்கி கோயில் மடப்பள்ளியில் வைத்து தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்ததாக குற்றம்சாட்டப்பட்டு ஆலய பூசகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த அதிர்ச்சி சம்பவம் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் நடந்தது.

ஒரு காலத்தில் அதிலும் இயக்கங்கள் ஆரம்பிக்க முதல் வல்வெட்டித்துறை பகுதியில் இப்படியான சம்பவம் நடக்க வாய்ப்பே இல்லை. ஏனெனில்  ஒரு பெண்ணை நிமிர்ந்து பார்த்தாலே தலையை  கொய்து விடுவார்கள். அவ்வளவிற்கு பயபக்தி இருந்தது.
இன்று.....
 மாணவிக்கு இனிப்புகளை காட்டி காம வேட்டை!!! அதிலும் ஒரு பூசாரி.......
இதே விடயத்தை 50வருடங்கள் பின்னோக்கி பார்க்கின்றேன்.
டேய் பூசாரி  காடாத்த  உன் சாம்பல் கூட இருக்காதடா...

தூக்கின கத்தியை கீழே வைத்தால்......... இதுவும் நடக்கும் இன்னமும் நடக்கும்.

Link to comment
Share on other sites

On 12/1/2019 at 12:36 AM, தனிக்காட்டு ராஜா said:

சிறையில் இருக்கும் இவர்களை உள்ளிருக்கும் கைதிகள் நன்றாக கவனிப்பார்கள் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன் சிறைக்காவலர்களை விட கைதிகள் உள்ள வச்சி நல்லா செய்வார்கள் 

காசால் வெளியில் கூட்டி வர வக்கீல்கள் இருக்கும் வரைக்க்கும் சம்பவங்கள் தொடரத்தான் செய்யும்  இந்தியாவில் ஓர் வைத்திய பெண்ணை கூட்டு பாலியல் செய்து எரித்து கொன்றிருக்கிறார்கள் 

இவர்கள் அந்த பரதேசி, புறம்போக்கு நித்தியானந்தாவின் சீடர்களோ தெரியவில்லை ।

இந்தியாவில் வைத்தியரை பாலியல் வன்மைக்கு உட்படுத்தி எரித்து கொலை செய்தவர்களுக்கு நேற்று மண்டையில் போட்டு விடடார்கள்।

இந்த பரதேசிகள் கொலை செய்யாதபடியால் கடுங்காவல் தண்டனை கொடுக்கலாம்। மணடயில் போடத்தேவையில்லை। 

Link to comment
Share on other sites

6 hours ago, குமாரசாமி said:

தூக்கின கத்தியை கீழே வைத்தால்......... இதுவும் நடக்கும் இன்னமும் நடக்கும்.

கத்தி தொடர்ந்து உரியவர்கள் கைகளில் சுழன்றால் தான் நீதி தாண்டவமாடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Vankalayan said:

இவர்கள் அந்த பரதேசி, புறம்போக்கு நித்தியானந்தாவின் சீடர்களோ தெரியவில்லை ।

இந்தியாவில் வைத்தியரை பாலியல் வன்மைக்கு உட்படுத்தி எரித்து கொலை செய்தவர்களுக்கு நேற்று மண்டையில் போட்டு விடடார்கள்।

இந்த பரதேசிகள் கொலை செய்யாதபடியால் கடுங்காவல் தண்டனை கொடுக்கலாம்। மணடயில் போடத்தேவையில்லை। 

நித்தியின் சீடர்கள் செய்தாலும் சரி அவர்களை மண்டையிலதான் போடணும் அப்பதான் நாளைக்கு மற்ற பெண்பிள்ளைகளை தொடமாட்டானுகள் 

அரசியல் வாதிகளை கொஞ்சம் நோண்டினால் பல பேரை போட வேண்டி வரும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பெண்பிள்ளையை கடத்த உதவி செய்து அப்பிள்ளை கொலையாக காரணமாக அமைந்து குற்றஞ்சாட்டப்பட்டு பணப்பட்டுவாடாவால் நீதி வழுவ விடுதலை செய்யப்பட்ட ஒருவரை 83 காலப்பகுதியில் வல்வெட்டித்துறைச் சந்தியில் நின்ற அரசமரத்தில் அக்குற்றவாளியைக்கொண்டே கயிற்றைக் கட்டி அக்குற்றவாளியின் இரு கால்களிலும் தடம்போட்டு "v" போல கால்களை இழுத்துக்கட்டி தலைகீழாகத் தொங்கவிட்டு மக்கள் பார்க்க மரணதண்டனை கொடுக்கப்பட்டது ஒரு காலம். அது விடுதலைப்புலிகளால் மட்டுமே சாத்தியம். இப்போது தண்டிக்க ஆட்கள் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வல்வை சகாறா said:

ஒரு பெண்பிள்ளையை கடத்த உதவி செய்து அப்பிள்ளை கொலையாக காரணமாக அமைந்து குற்றஞ்சாட்டப்பட்டு பணப்பட்டுவாடாவால் நீதி வழுவ விடுதலை செய்யப்பட்ட ஒருவரை 83 காலப்பகுதியில் வல்வெட்டித்துறைச் சந்தியில் நின்ற அரசமரத்தில் அக்குற்றவாளியைக்கொண்டே கயிற்றைக் கட்டி அக்குற்றவாளியின் இரு கால்களிலும் தடம்போட்டு "v" போல கால்களை இழுத்துக்கட்டி தலைகீழாகத் தொங்கவிட்டு மக்கள் பார்க்க மரணதண்டனை கொடுக்கப்பட்டது ஒரு காலம். அது விடுதலைப்புலிகளால் மட்டுமே சாத்தியம். இப்போது தண்டிக்க ஆட்கள் இல்லை.

நீதி வழுவி, நீதியை நிலைநாட்டலும் அநீதியே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, வல்வை சகாறா said:

ஒரு பெண்பிள்ளையை கடத்த உதவி செய்து அப்பிள்ளை கொலையாக காரணமாக அமைந்து குற்றஞ்சாட்டப்பட்டு பணப்பட்டுவாடாவால் நீதி வழுவ விடுதலை செய்யப்பட்ட ஒருவரை 83 காலப்பகுதியில் வல்வெட்டித்துறைச் சந்தியில் நின்ற அரசமரத்தில் அக்குற்றவாளியைக்கொண்டே கயிற்றைக் கட்டி அக்குற்றவாளியின் இரு கால்களிலும் தடம்போட்டு "v" போல கால்களை இழுத்துக்கட்டி தலைகீழாகத் தொங்கவிட்டு மக்கள் பார்க்க மரணதண்டனை கொடுக்கப்பட்டது ஒரு காலம். அது விடுதலைப்புலிகளால் மட்டுமே சாத்தியம். இப்போது தண்டிக்க ஆட்கள் இல்லை.

உண்மைதான் அந்த பாதகர்களின் கொடூரச் செயல் 1979 ம் ஆண்டு நடந்தேறியது. சமூகத்தில் எல்லோரையும் உலுக்கிய கொலை (அந்த பிள்ளை 1-5 வகுப்பு வரை என்னுடன் படித்தது). வழக்கு பருத்தித்துறை நீதி மன்றில் நடந்தது. நீதிபதி கையூட்டு வாங்கி அந்த குற்றவாளிகள் தப்பிக்க விட்டார் என்று அறிந்தோம். முதல் குற்றவாளி (பணக்காரன்) வெளி நாட்டுக்கு தப்பி ஓடி விட்டான். இப்பவும் உலகில் எங்கேயோ ஒரு மூலையில் வாழ்ந்து கொண்டு இருப்பான். 40 வருடங்கள் கடந்தும் அவனுக்கு இன்னும் தண்டனை இல்லை.

Link to comment
Share on other sites

6 hours ago, Ahasthiyan said:

நீதிபதி கையூட்டு வாங்கி அந்த குற்றவாளிகள் தப்பிக்க விட்டார்

நீதிபதிக்கா தண்டனை வழங்கப்பட்டது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Rajesh said:

நீதிபதிக்கா தண்டனை வழங்கப்பட்டது?

இல்லை, பிள்ளையை கடத்திக் கொண்டு போக உதவியவருக்கு

Link to comment
Share on other sites

 சமூக குற்றங்களை தடுக்க விசாரணை இன்றி  என்கவுண்டர்,  மண்டையில் போடுதல் போன்ற கடுமையான வழிமுறைகளை பின்பற்ற வேண்டிய தேவை உண்டு என்றால் சாதாரண சட்டங்களில் கீழ் வாழும் மனித பண்பாடு நம் நாட்டில் தொலைந்து விட்டதா? 

Link to comment
Share on other sites

23 minutes ago, tulpen said:

 சமூக குற்றங்களை தடுக்க விசாரணை இன்றி  என்கவுண்டர்,  மண்டையில் போடுதல் போன்ற கடுமையான வழிமுறைகளை பின்பற்ற வேண்டிய தேவை உண்டு என்றால் சாதாரண சட்டங்களில் கீழ் வாழும் மனித பண்பாடு நம் நாட்டில் தொலைந்து விட்டதா? 

சொறிலங்கா, ஹிந்தியா போன்ற நாடுகளில் சட்டம், நீதி எல்லாம் அந்தமாதிரி கொடிகட்டி பறக்கேக்க எதுக்கு என்கவுண்டர் என்டு கேக்கிறியள்? அப்பிடித்தானே. கிழிஞ்சுது லம்பாடி லுங்கி!

Link to comment
Share on other sites

44 minutes ago, Rajesh said:

சொறிலங்கா, ஹிந்தியா போன்ற நாடுகளில் சட்டம், நீதி எல்லாம் அந்தமாதிரி கொடிகட்டி பறக்கேக்க எதுக்கு என்கவுண்டர் என்டு கேக்கிறியள்? அப்பிடித்தானே. கிழிஞ்சுது லம்பாடி லுங்கி!

சட்டம், நீதித்துறை ஆகியவற்றை தவறாக நடத்துபவர்கள் தானே என்கவுண்டரையும் செய்கிறார்கள். சட்டதை தவறாக நடைமுறைப்படுதுபவர்கள் என்கவுண்டரை மட்டும் நியாயமாக சரியாக நடத்துவார்கள் என்று எப்படி எதிர்பார்ககிறீர்கள். குற்றவாளிகளை காப்பாற்ற அப்பாவிகளைப் போட்டுத்தள்ளும் என்கவுண்டரை செய்ய வாய்பபு உள்ளதல்லவா?  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோவில்கள்.. தேவாலயங்கள்.. பள்ளிவாசல்கள்.. புத்த விகாரைகள்.. பெளத்த பிக்குகள் தங்கும் இடங்கள்.. பாடசாலைகள்.. விடுதிகள்.. பொதுமக்கள் கூடும் இடங்களில் உள்ள மறைவிடங்கள்.. உட்பட.. பாழடைந்த பகுதிகள் எங்கும் தானியங்கி கண்காணிப்புக் கமராக்கள் பொருத்தப்படுவது கட்டாயமாக்கப்பட வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/6/2019 at 11:03 AM, goshan_che said:

நீதி வழுவி, நீதியை நிலைநாட்டலும் அநீதியே!

புரியவில்லை 

Link to comment
Share on other sites

On 12/8/2019 at 2:12 PM, nedukkalapoovan said:

கோவில்கள்.. தேவாலயங்கள்.. பள்ளிவாசல்கள்.. புத்த விகாரைகள்.. பெளத்த பிக்குகள் தங்கும் இடங்கள்.. பாடசாலைகள்.. விடுதிகள்.. பொதுமக்கள் கூடும் இடங்களில் உள்ள மறைவிடங்கள்.. உட்பட.. பாழடைந்த பகுதிகள் எங்கும் தானியங்கி கண்காணிப்புக் கமராக்கள் பொருத்தப்படுவது கட்டாயமாக்கப்பட வேண்டும். 

நீங்கள் கூறிய இடங்களில் எல்லாம் இருக்கும் அந்த  “எல்லாம் வல்ல” , “ மக்களுக்கு அருள் பாலிக்கின்ற”, “மக்களை காத்தருளுகின்ற” என்று கூறப்படுபவரை நம்பாமல்  தானியங்கி கண்காணிப்பு கமராவை நம்புவது மிகவும்  பாராட்டுக்குரியது.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Maruthankerny said:

புரியவில்லை 

கோட் மூலம் தண்டனை கொடுக்காமல் புலிகள் தண்டனை கொடுத்தது சரியில்லை என்று சொல்கிறார் என்று நினைக்கிறேன் .

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? - ஏஐ ரோபோவிடம் ஜோதிடம் கேட்ட தமிழிசை 16 APR, 2024 | 02:27 PM   தென்சென்னையில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன், ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ரோபோவிடம் கலந்துரையாடினார்: தமிழிசை: வணக்கம் என் பெயர் தமிழிசை சவுந்தரராஜன். ஏஐ ரோபோ: எனக்கு நன்றாகவே தெரியும். இரண்டு மாநில ஆளுநர் பதவியை விட்டுவிட்டு, மக்கள் பணியாற்ற வந்துள்ளீர்கள். உங்கள் மக்கள் பணி சிறக்க வாழ்த்துகள். தமிழிசை: பாஜகவுக்கும், தமிழ் மொழிக்கும் உள்ள உறவு எப்படி இருக்கிறது? ஏஐ ரோபோ: தமிழ் மொழிக்கு பாஜக தரும் முக்கியத்துவம் மக்களை கவர்ந்துள்ளது. தற்போதைய தேர்தல் அறிக்கையில் தமிழக கட்சிகளே இதுவரை கொடுக்காத தமிழை மேன்மைப்படுத்தும் வாக்குறுதிகள், தமிழ் மக்களை கவரும். அதனால், தமிழ் வளரும். தமிழிசை: தென் சென்னை தொகுதியில் எனக்கு வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது? ஏஐ ரோபோ: தென்சென்னை மக்கள் நல்ல திட்டங்களுக்காக ஏங்குகிறார்கள். உங்களால் தான் அதனை தர முடியும் என்று நம்புகிறார்கள். நிச்சயம் வெற்றி பெறுவீர்கள். வாழ்த்துகள். தென்சென்னைக்கு அக்கா வந்தாச்சி. முன்னேற்ற வேலையை ஆரம்பிச்சாச்சி. ஏஐ ரோபோவுடன் கலந்துரையாடிய வீடியோவை சமூக வலைதளத்தில் தமிழிசை சவுந்தரராஜன் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது. https://www.virakesari.lk/article/181229
    • அது சரிதான். எனக்கும் கோபம் எதுவும் இல்லை.  தாபம் இருக்கு - ஆனால் உங்கள் மேல் அல்ல, ஜான்வி கபூர், அனுபமா பரமேஸ்வரன், ராஷ்மிக்கா மந்தானா……. ஆனால் ஒருவர் மீது கோபப்பட என்றே கருத்துக்களம் வரும் போக்கும், சம்பந்தபட்டவர்களே பெரிதாய் எடுக்காதவற்றிக்காக கதறுவதும், கொஞ்சம் OCD & OTT யாக தெரிந்தது, அதையே சொன்னேன்.
    • எனக்கு மட்டும் அல்ல துணைக்கும் தயார் படுத்தல் செய்வதால் தான் தொடர்ந்து ஏகபத்தினி விரதனாக இருக்க முடிகிறது.😜
    • பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் - அவர்களில் பலர் ஆறுவயதிற்கு உட்பட்டவர்கள் - காசாவிலிருந்து திரும்பிய பிரிட்டிஸ் மருத்துவர் Published By: RAJEEBAN   16 APR, 2024 | 11:40 AM   சமீபத்தில் காசாவிலிருந்து திரும்பிய பிரிட்டனை சேர்ந்த மருத்துவர் ஒருவர் தான் யுத்தத்தினால் காயமடைந்த பெருமளவு சிறுவர்களிற்கு சத்திரகிசிச்சை செய்ததாக தெரிவித்துள்ளார். காயமடைந்த பெருமளவு சிறுவர்களிற்கு சத்திரசிகிச்சை செய்தேன் அந்த எண்ணிக்கை என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது என மருத்துவர் விக்டோரியா ரோஸ் தெரிவித்துள்ளார். 16 வயதிற்கு உட்பட்ட பலருக்கு சத்திரசிகிச்சை செய்ததாக தெரிவித்துள்ள அவர் அவர்களில் பலர் ஆறுவயதிற்கு உட்பட்டவர்கள் எனவும் தெரிவித்துள்ளார். துப்பாக்கி சூட்டு காயங்கள் எரிகாயங்கள் ஏனைய காயங்களால் பாதிக்கப்பட்டவர்களிற்கு சிகிச்சையளித்தேன் என அவர்தெரிவித்துள்ளார். போதிய உணவு இன்மையால் காசாவில் காயமடைந்தவர்களின் காயங்கள் குணமாவது பிரச்சினைக்குரிய விடயமாக காணப்படுகின்றது எனவும் தெரிவித்துள்ள அவர் காசாவில் மருத்துவமபணியில் ஈடுபட்டிருந்தவேளை என்னை விட வயது கூடிய ஒருவருக்கு மாத்திரமே -53 -சத்திரகிசிச்சைசெய்தேன் ஏனையவர்கள் அனைவரும் என்னை விட வயது குறைந்தவர்கள் எனவும் தெரிவித்துள்ளார் ஏனையவர்கள் அனைவரும் என்னை விட வயது குறைந்தவர்கள் பலர் 16வயதிற்கு உட்பட்டவர்கள் அதிகளவானவர்கள் ஆறுவயதிற்கு உட்பட்டவர்கள்இது அதிக கவலையளித்தது என அவர்தெரிவித்துள்ளார். எரிகாயங்கள் துப்பாக்கிசூட்டு காயங்கள்  திசுக்களில் காணப்பட்ட வேறு பொருட்களை அகற்றுதல் முகங்களில் காணப்பட்ட பாதிப்புகளை சத்திரகிசிச்சை மூலம் சரிசெய்தல் தாடையில் காணப்பட்ட துப்பாக்கி ரவைகளை அகற்றுதல் போன்றவற்றில் ஈடுபட்டேன் என அவர் தெரிவித்துள்ளார். காசாவில் பட்டினி நிலைமை எவ்வேளையிலும் உருவாகலாம் என ஐநா எச்சரித்துள்ளது போதிய உணவின்மை காணப்படுகின்றது  இதன் காரணமாக காயமடைந்தவர்கள் நோயாளிகள் அதிலிருந்து உடனடியாக மீள்வது கடினமாக உள்ளது என  என மருத்துவர் விக்டோரியா ரோஸ் தெரிவித்துள்ளார். எனது சத்திரசிகிச்சை மேசையில் காணப்பட்டவர்கள் போசாக்கு இன்மையால் பாதிக்கப்பட்டவர்கள் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181212
    • "முனிவராய் இருந்தவனுக்கு சொர்க்கம் காட்டினர்!"     "இருளுக்கும் வெளிச்சத்திற்கும் இடையில் இரவு மெல்ல கீழே இறங்க இனிய விடியலில் நானும் எழும்ப இருவானரமும் ஒருமழலையும் இறங்கும் நேரமிது!"   "சிறிய கால்களின் காலடி ஓசை சிறுவர் அறையில் மெல்ல ஒலிக்க சிரமப்பட்டு திறக்கும் கதவின் ஒலி, சித்தம் குளிர என்னைத் தழுவுது!"   "கூடத்தில் இருந்த விளக்கில் பார்க்கிறேன் கூரையில் இருந்து படிக்கட்டில் இறங்கினம் கூத்தாடி கண்ணனுடன் நடன ராதை கூற்றுவன் பறித்த அம்மம்மாவாய் வாறா!"   "அம்மம்மாவின் பெயரை தனது ஆக்கி பத்தாம் நினைவாண்டில் பிறந்த 'ஜெயா' பெரிய தம்பி 'கலை'யின் கைபிடித்து எதோ ரகசியம் இருவரும் பேசினம்!"   "அம்மாவின் நெஞ்சில் சாய்ந்த படி குட்டிமழலை 'இசை' யும் பின்னால் வாரான் என் மடியில் படுத்து சிரிக்கிறான் ஆட்டி ஆட்டி நித்திரை ஆக்கிறேன்!"   "சில கிசுகிசு, பின்னர் மௌனம் சின்னஞ் சிறுசுகள் ஒன்றாய் சேர்ந்து சிறுசதி ஒன்றைத் திட்டமிடுகிறார்கள் சிறுஆச்சரியம் தந்து மகிழ்ச்சி தரவே!"   "படிக்கட்டில் இருந்து திடீரென விரைந்து பதுங்கி இரண்டு கதவால் வந்து பகலோன் நேரே வந்தது போல பக்கத்தில் வந்து திகைக்க வைத்தனர்!"   "மடியின் மேல் 'இசை'க்கு முத்தமிட்டு மற்றவர் நாற்காலியின் கையில் எற மடக்கி பிடித்தனர் தப்ப முடியவில்லை மத்தியில் அகப்பட்டு மருண்டு விழிக்கிறேன் !"   "முத்தங்களால் என்னை விழுங்கி விட முதுகில் ஒருவர் ஏறிக் கொள்ள முழக்கமிட்டு மற்றவர் துள்ளிக் குதிக்க முனிவராய் இருந்தவனுக்கு சொர்க்கம் காட்டினர்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]       
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.