Jump to content

கோயில் மடப்பள்ளிக்குள் வைத்து சிறுமியை சீரழித்த பூசகர்: வல்வெட்டித்துறையில் அதிர்ச்சி சம்பவம்!


Recommended Posts

On 12/8/2019 at 5:50 PM, tulpen said:

சட்டம், நீதித்துறை ஆகியவற்றை தவறாக நடத்துபவர்கள் தானே என்கவுண்டரையும் செய்கிறார்கள். சட்டதை தவறாக நடைமுறைப்படுதுபவர்கள் என்கவுண்டரை மட்டும் நியாயமாக சரியாக நடத்துவார்கள் என்று எப்படி எதிர்பார்ககிறீர்கள். குற்றவாளிகளை காப்பாற்ற அப்பாவிகளைப் போட்டுத்தள்ளும் என்கவுண்டரை செய்ய வாய்பபு உள்ளதல்லவா?  

தவறாக புரிந்துவிட்டீர்கள்!
வர வர அந்த நாட்டில, ஹிந்தியாவில, பெரும்பாலும் எதுக்குமே நீதிநியாமில்லை! இந்த நிலைல என்கவுண்டர் மட்டும் எப்பிடி தப்பா ஆகிவிடும் என்பதே உட்கருத்து.
மேலும், இதிலையும் இவங்க தான் அல்லது இவங்க மட்டும் தான் குற்றவாளி என்று யாருக்கு தெரியும்?

சொறிலங்கால நடக்காத என்கவுண்டரா? அப்பாவிகள் பாதிக்கப்பட்டதில்லையா? எதுக்குமே நீதிநியாமில்லை!

சமூக விரோதிகளை அடையாளம் கண்டு, விசாரித்து, நீதியான தீர்ப்பு வழங்குமளவுக்கு விடுதலைப் புலிகளிடமிருந்த திறமையிலும் நேர்மையிலும் 1% கூட ஹிந்திய, சொறிலங்கா அரசுகளிடம் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/30/2019 at 8:06 PM, தனிக்காட்டு ராஜா said:

சிறையில் இருக்கும் இவர்களை உள்ளிருக்கும் கைதிகள் நன்றாக கவனிப்பார்கள் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன் சிறைக்காவலர்களை விட கைதிகள் உள்ள வச்சி நல்லா செய்வார்கள் 

எல்லா  சிறைச் சாலைகளிலும்,  ஓரினச்  சேர்க்கை  உடைய, 
கைதிகளின்  தொல்லை, பெரிய தொல்லை... என்று சொல்வார்கள்.

ஐயர்... எக்கச் சக்கமாக, மாட்டுப் பட்டுப் போனார். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

எல்லா  சிறைச் சாலைகளிலும்,  ஓரினச்  சேர்க்கை  உடைய, 
கைதிகளின்  தொல்லை, பெரிய தொல்லை... என்று சொல்வார்கள்.

ஐயர்... எக்கச் சக்கமாக, மாட்டுப் பட்டுப் போனார். :grin:

எனது நண்பர்கள் பல ர் சிறைச்சாலை காவலர்கள் அவர்கள் சொன்னது நாங்கள் கைவைக்க முதல் கைதிகள் என்ன கேஸ் என்பதைக்கேட்டு முதலில் வெட்சீட் போட்டு மொத்தமாக மொத்துவார்களாம் இரவு 1 ,மணிக்கு ஐயருக்கு சாம பூசை நடந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

எனது நண்பர்கள் பல ர் சிறைச்சாலை காவலர்கள் அவர்கள் சொன்னது நாங்கள் கைவைக்க முதல் கைதிகள் என்ன கேஸ் என்பதைக்கேட்டு முதலில் வெட்சீட் போட்டு மொத்தமாக மொத்துவார்களாம் இரவு 1 ,மணிக்கு ஐயருக்கு சாம பூசை நடந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை 

 

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், நிற்கிறார்

மேல் உள்ள படத்தில் உள்ளவர்தான் ஆள் மாறி அடிபோட்டுவிட்டு விடக்கூடாது 😀

Link to comment
Share on other sites

8 hours ago, Rajesh said:

தவறாக புரிந்துவிட்டீர்கள்!
வர வர அந்த நாட்டில, ஹிந்தியாவில, பெரும்பாலும் எதுக்குமே நீதிநியாமில்லை! இந்த நிலைல என்கவுண்டர் மட்டும் எப்பிடி தப்பா ஆகிவிடும் என்பதே உட்கருத்து.
மேலும், இதிலையும் இவங்க தான் அல்லது இவங்க மட்டும் தான் குற்றவாளி என்று யாருக்கு தெரியும்?

சொறிலங்கால நடக்காத என்கவுண்டரா? அப்பாவிகள் பாதிக்கப்பட்டதில்லையா? எதுக்குமே நீதிநியாமில்லை!

சமூக விரோதிகளை அடையாளம் கண்டு, விசாரித்து, நீதியான தீர்ப்பு வழங்குமளவுக்கு விடுதலைப் புலிகளிடமிருந்த திறமையிலும் நேர்மையிலும் 1% கூட ஹிந்திய, சொறிலங்கா அரசுகளிடம் இல்லை.

ராஜேஸ் நீங்கள் கூறிய  திறமையான நேர்மையான விடுதலை புலிகள் கூட இந்த விடயத்தில் சறுக்கிய தவறாக தீர்ப்பு வழங்கி அதை நிறைவேற்றிய  பல சம்பவங்கள் உண்டு.   இலங்கை இந்திய நாடுகளில் பல என்கவுண்டர்கள் உண்மைக் குற்றவாளியை தப்ப வைப்பதற்காக செய்யப்படுகின்றன. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/6/2019 at 6:03 PM, goshan_che said:

நீதி வழுவி, நீதியை நிலைநாட்டலும் அநீதியே!

நீதி சரியாக இருப்பின் அநீதிக்கு வேலை ஏது? :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/9/2019 at 6:01 PM, Maruthankerny said:

புரியவில்லை 

 

On 12/9/2019 at 6:20 PM, ரதி said:

கோட் மூலம் தண்டனை கொடுக்காமல் புலிகள் தண்டனை கொடுத்தது சரியில்லை என்று சொல்கிறார் என்று நினைக்கிறேன் .

 

அதே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

நீதி சரியாக இருப்பின் அநீதிக்கு வேலை ஏது? :cool:

நீதி ஏன் சரியில்லாமல் போகிறது? அதை சரிபடுத்தாமல் ஏன் விடுகிறோம்?

Link to comment
Share on other sites

 

what is Sexual Harassment? ஆண்களும் பெண்களும் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டியவை

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, பெருமாள் said:

 

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், நிற்கிறார்

மேல் உள்ள படத்தில் உள்ளவர்தான் ஆள் மாறி அடிபோட்டுவிட்டு விடக்கூடாது 😀

நானும்... ஏதோ... இளவயது, பூசகர் என நினைத்திருந்தேன். 😡

Link to comment
Share on other sites

1 hour ago, ampanai said:

 

what is Sexual Harassment? ஆண்களும் பெண்களும் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டியவை

 

துன்புறுத்தல்களுக்கு ஆளாகும் பதின்ம வயதை தாண்டிய பல பெண்கள் தங்கள் காரியம் நடக்க நெருக்கமாக பழகிவிட்டு பிறகு துன்புறுத்தல் என்று நாடகமாடுவதாக பலர் கூறுகிறார்கள்.

இது எந்தளவுக்கு உண்மை?

Link to comment
Share on other sites

1 minute ago, Rajesh said:

துன்புறுத்தல்களுக்கு ஆளாகும் பதின்ம வயதை தாண்டிய பல பெண்கள் தங்கள் காரியம் நடக்க நெருக்கமாக பழகிவிட்டு பிறகு துன்புறுத்தல் என்று நாடகமாடுவதாக பலர் கூறுகிறார்கள்.

இது எந்தளவுக்கு உண்மை?

சட்டம் மூலம் தான் உண்மையை கண்டறிய முடியும். ( கண்ணால் காண்பதும் காதால் கேட்பதும் போயாயா இருக்கலாம், தீர விசாரித்து அறிவதே மெய் ) 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஐயருக்கு ஒரு சட்டத்தரணி ஆஜராகி உள்ளாராம் ஆது சிறிகாந்தாவாம் உன்மையா ?????

Link to comment
Share on other sites

9 வயதுச் சிறுமியை 2 வருடமாக பாலியல் துஷ்பிரயோகம்  செய்த72 வயது அர்ச்சகர் ; நீதிமன்று அதிரடி உத்தரவு

9 வயதுடைய நான்காம் தரத்தில் கல்வி பயிலும் மாணவியை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆலய அர்ச்சகர் உள்ளிட்ட இருவரது விளக்கமறியலையும் எதிர்வரும் 20ஆம் திகதிவரை நீடித்து பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

அர்ச்சகரின் சார்பில் முன்னிலையான மூத்த சட்டத்தரணி என்.சிறிகாந்தா பிணை விண்ணப்பம் செய்தபோதும் பாதிக்கப்பட்ட சிறுமியின் நலன் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி கனகரட்னம் சுகாஷ் கடுமையான ஆட்சேபனையை முன்வைத்த நிலையில் சந்தேகநபர்களின் பிணை விண்ணப்பம் நிராகரித்து விளக்கமறியலை நீதிமன்றம் நீடித்தது.

கடந்த நவம்பர் 27ஆம் திகதி பாடசாலையில் சிறுமி தொலைபேசி வைத்திருப்பதை ஆசிரியர் கண்டறிந்தார். இதுதொடர்பில் சிறுமியிடம் விசாரித்த போது, வல்வெட்டித்துறை ஆலயம் ஒன்றின் அர்ச்சகர் வாங்கி கொடுத்ததாகவும் அவர் தொலைபேசி மூலம்  பிரசாதம் தர கூப்பிடுவதாகவும் சிறுமி கூறியுள்ளார்.

சிறுமியின் தகவலில் சந்தேகம் கொண்ட ஆசிரியர், சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு அறிவித்தார். அவர் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து  உடனடியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

அர்ச்சகர் தன்னை ஆலய மடப்பள்ளியில் வைத்து துன்புறுத்தலுக்குள்ளாகியதாகவும் தனக்கு அதிகளவான பணத்தை அவர் தந்ததாகவும் சிறுமி விசாரணையில் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் தனது சித்தப்பா ஒருவரும் இவ்வாறு தன்னை துன்புறுத்துவதாகவும் சிறுமி தெரிவித்திருந்தார்.

அத்துடன், அர்ச்சகரால் வழங்கப்பட்ட பணம் ஒரு தொகையையும் சிறுமி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.

சிறுமியின்  தொலைபேசி சிம் அட்டை அர்ச்சகரின் பெயரிலேயே இருந்துள்ளது.

இந்த நிலையில் சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் 72 வயது அர்ச்சகரும் சிறுமி சித்தப்பாவான 50 வயதுடைய குடும்பத்தலைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் இருவரும் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் கடந்த 30ஆம் திகதி முற்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிமன்று, சந்தேகநபர்கள் இருவரையும் இன்று  வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.

இந்த வழக்கு பருத்தித்துறை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. சந்தேகநபர்கள் இருவரும் மன்றில் முற்படுத்தப்பட்டனர்.

முதலாவது சந்தேகநபரான அர்ச்சகர் சார்பில் மூத்த சட்டத்தரணி என்.சிறிகாந்தாவும் பாதிக்கப்பட்ட சிறுமியின் நலன்சார்பில் சட்டத்தரணி கே.சுகாஷும் முன்னிலையானார்கள்.

முதலாவது சந்தேகநபர் சார்பில் பிணை விண்ணப்பம் செய்து மூத்த சட்டத்தரணி என்.சிறிகாந்தா சமர்ப்பணம் செய்தார்.

“முதலாவது சந்தேகநபரான அர்ச்சகர் 72 வயது நிரம்பியவர். அவர் வன்புணர்வுக்குட்படுத்தியதாக பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தில் சிறுமி தெரிவிக்கவில்லை. அர்ச்சகர் பிணையில் விடுவிக்கவேண்டும்” என்று மன்றுரைத்தார்.

“சிறுமி ஆலய அர்ச்சகரால் 2 வருடங்களாக தொடர்ச்சியாக வன்புணர்வுக்கு உள்படுத்தப்பட்டுள்ளார். மக்கள் வழிபடும் ஆலயத்துக்குள் இவ்வாறான சமூகப்பிரள்வு இடம்பெற்றுள்ளமை பாரதூரமான விடயம். இதனை சமூகத்தில் அனுமதிக்கவே முடியாது.

சிறுமி பராயமடையாதவர். அவருக்கு அர்ச்சகரால் தனக்கு இழைக்கப்பட்ட பாதிப்பை விவரிக்க முடியாது. அதனால்தான் சட்ட மருத்துவ அறிக்கையைக் கோருகின்றோம்.

பராயமடையாத சிறுவர்களின் காப்பகமாக நீதிமன்றமே உள்ளது. எனவே முதலாவது சந்தேகநபரான அர்ச்சகரும் அவருக்கு உடந்தையாகவிருந்த சிறுமியின் சித்தப்பாவையும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கவேண்டும்” என்று சட்டத்தரணி சுகாஷ் மன்றுரைத்தார்.

இருதரப்பு விண்ணப்பங்களையும் ஆராய்ந்த நீதிவான், சந்தேகநபர்கள் சார்பான பிணை விண்ணப்பத்தை நிராகரித்து அவர்களது விளக்கமறியலை வரும் 20ஆம் திகதிவரை நீடித்தார்.

அத்துடன், சிறுமியின் சட்ட மருத்துவ அறிக்கையையும் அவரது வாக்குமூலத்தையும் வரும் 20ஆம் திகதி மன்றில் சமர்ப்பிக்க நீதிமன்றம் பொலிஸாருக்கு உத்தரவிட்டது.

https://www.virakesari.lk/article/70941

Link to comment
Share on other sites

13 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இந்த ஐயருக்கு ஒரு சட்டத்தரணி ஆஜராகி உள்ளாராம் ஆது சிறிகாந்தாவாம் உன்மையா ?????

ஆமாம். இவர் இப்படியான ஆட்களுக்குத்தான் ஆஜர் ஆகுவார். இவரைப்பற்றி நான் முதலும் எழுதி இருந்தேன். நேற்று இவர் இந்த பாலியல் குற்றவாளிகளுக்காக மன்றில் ஆஜராகி பெரும் குழப்பத்தை உருவாக்கி விடடார்.

இவருடைய தொழிலே குழப்பத்தை உருவாக்குவதுதான். இவர் ஒரு கட்சியை ஆரம்பிக்கப்போவதாக கூறி இருந்தார். இவருடைய ஆதரவாளர் யாரெண்டால் கள்ளர், கொலைகாரர், பாலியல் குற்றவாளிகள், குடு காரர் போன்றோரே. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதுதான சிங்கள இனவாதம்  படித்து படித்து பலமுறை  சொல்லியிள்ளோம் ?
    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.