Jump to content

நித்தியாந்தாவின் தனிநாடு


Recommended Posts

  • Replies 82
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தனிக்கொடி, தனி கடவுச்சீட்டு – ‘கைலாசா இந்து’ நாட்டினை உருவாக்கினார் நித்யானந்தா!

சாமியார் நித்யானந்தா தனிக்கொடி, தனி கடவுச் சீட்டு என புதிய தனிநாட்டை உருவாக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

திருவண்ணாமலையை சேர்ந்த நித்யானந்தா பெங்களூரை அடுத்த பிடதியை தலைமையிடமாகக் கொண்டு பரமஹம்ச நித்யானந்த தியான பீடம் என்ற பெயரில் ஆசிரமத்தை நிறுவி நடத்தி வருகிறார். இதன் கிளைகள் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் செயற்பட்டு வருகின்றன.

குழந்தைகள் கடத்தல், பாலியல் துஷ்பிரயோகம் போன்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் பொலிஸாரால் அவர் தேடப்பட்டு வருகிறார்.

நாள்தோறும் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிவரும் நித்யானந்தா, ‘கைலாஷ்’ என்ற பெயரில் தனிநாடு அமைக்கப் போவதாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈக்வடார் அருகே ஒரு தீவை விலைக்கு வாங்கி எல்லைகள் அற்ற, நாடுகள் அற்ற, சுத்த இந்து நாட்டைக் கட்டமைக்கும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளார் நித்யானந்தா.

தனது கனடா நாட்டு சீடரான சாரா லாண்ட்ரியிடம் தனிப்பட்ட முறையில் பேஸ்புக் மெசேஞ்சரில் உரையாடிய நித்யானந்தா, வத்திக்கான் போல குட்டி நாட்டை அமைக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், அண்மையில் வெளியிட்ட வீடியோவில் தனிநாடு குறித்து விளக்கம் அளித்துள்ளார். நித்யானந்தா கட்டமைக்கும் அந்த நாட்டிற்கு நித்யானந்தா கைலாசா என்று பெயர் வைத்துள்ளார்.

Nithyananda-Sets-Up-Kailaasa-Island-Nati

தனிநாடு இணையத்தளத்தில், இந்து மதத்தைப் பின்பற்றும் எவரும் தனது கைலாசா நாட்டின் குடிமகனாக ஆகலாம் என்று வெளிப்படையாக அறிவித்துள்ளார் நித்யானந்தா.

கைலாசா இந்து நாட்டின் தற்போதைய மொத்த மக்கள் தொகையாக 10 கோடி பேர் என்று பலரையும் வியக்கவைக்கும் வகையில் நித்யானந்தா குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அந்த நாட்டுக்கென்று கடவுச்சீட்டு, மொழி உள்ளிட்டவற்றையும் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஒரு அமைச்சரவையையும் உருவாக்கி உள்ளார்.

நாட்டின் பிரதமருக்கு இணையாக கைலாசா நாட்டின் பிரதமராக நித்யானந்தா இருப்பார். இந்தியாவைப் போல் உள்நாட்டு பாதுகாப்புத் துறை மற்றும் இராணுவத்திற்கு தனித் துறை அமைத்துள்ளார் நித்யானந்தா. ஒவ்வொரு நாளும் அங்கு அமைச்சரவைக் கூட்டத்தையும் நடத்தி வருகிறார்.

கைலாசா நாடு குறித்து அவர் வெளியிட்டிருக்கும் இணையதளத்தில், ‘இந்த நாடு எல்லைகள் கடந்தது. சனாதனத்தைக் காப்பதற்காக இந்த நாடு அமைக்கப்படுகிறது.

தங்களுடைய நாடு இந்து மதத்தை பின்பற்ற வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கான நாடு என்று குறிப்பிட்டுள்ளார். கைலாசா என்பது எல்லைகள் இல்லாத ஒரு நாடு. உலகெங்கிலும் இருந்து வெளியேற்றப்பட்ட இந்துக்களால் உருவாக்கப்பட்டது. அவர்கள் தங்கள் சொந்த நாடுகளில் இந்து மதத்தை கடைபிடிக்கும் உரிமையை இழந்துள்ளனர் என கூறப்பட்டுள்ளது.

கைலாசா அரசாங்கத்தில் 10 துறைகள் உள்ளன. அவற்றில் ஒன்று ‘அலுவலகத்திற்கு பொறுப்பானது’. அரசாங்கத்தின் சர்வதேச உறவுகள், டிஜிட்டல் ஈடுபாடு, சமூக ஊடக அலுவலகம். வீட்டு விவகாரங்கள், பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் கல்வி ஆகியவை பிற துறைகளாகும். நித்யானந்தா கைலாசத்திற்கு தனி நாடு அந்தஸ்து வழங்க ஐ.நா.வை நாடவுள்ளார்.

கடவுச்சீட்டு நிறங்களில் ( தங்கம் மற்றும் சிவப்பு) அறிமுகப்படுத்தப்பட இருக்கிறதாம். இங்கு இந்துக்கள் மட்டுமே வாழ முடியும். இந்த நாட்டை சட்ட ரீதியாக அறிவிக்கும் பணிகளையும் சட்ட செயற்பாடுகளையும் அமெரிக்காவைச் சேர்ந்த மிகப் பெரிய நிறுவனம் ஒன்று பொறுப்பேற்று செய்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Nithyananda-Sets-Up-Kailaasa-Island-Nati

 

 

http://athavannews.com/தனிக்கொடி-தனி-கடவுச்சீட/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நித்யானந்தா சுவாமி ஜீ... 
கைலாசா நாட்டில்..... பாவனைக்கு உள்ள பணம்,
ரூபாயா, டாலரா, ஐரோவா, பவுண்சா.... 
அதனை அறிய ஆவலாக உள்ளோம்... 

Link to comment
Share on other sites

4 hours ago, தமிழ் சிறி said:

நித்யானந்தா சுவாமி ஜீ... 
கைலாசா நாட்டில்..... பாவனைக்கு உள்ள பணம்,
ரூபாயா, டாலரா, ஐரோவா, பவுண்சா.... 
அதனை அறிய ஆவலாக உள்ளோம்... 

அனைத்து நாட்டு பணமும் பாவனையில் இருக்கும். உள்ளே கொண்டுவர 100% வரிவிலக்கு. வெளியே எடுக்க  அந்த 100 வீதத்தை  வரியாக கட்டினால் போதும். பெண்களுக்கு எப்போதும்  விசா, அழகான பெண்களுக்கு உடனடி விசா மற்றும்  நிரந்தர குடியுரிமை. இவ்வாறு பல விடயங்கள் அரசியலமைப்பு சட்டத்தில் உள்ளது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

நித்யானந்தா சுவாமி ஜீ... 
கைலாசா நாட்டில்..... பாவனைக்கு உள்ள பணம்,
ரூபாயா, டாலரா, ஐரோவா, பவுண்சா.... 
அதனை அறிய ஆவலாக உள்ளோம்... 

 Picture2.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உஸ் ......நித்தியர்  ஒரு சித்தர். எந்நேரமும் சித்தி களின் இதயத்தை தியானித்து பக்தர்களின் பாவங்களைப் போக்குபவர்.....!  🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நித்யானந்தா அறிவித்த புது நாடு ‘கைலாசா’ - கொடி, துறைகளும் அறிவிப்பு

வழக்கு ஒன்றில் ஆஜராவதற்காக பெங்களூரு நீதிமன்றத்துக்கு செல்லும் நித்தியானந்தா.படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionவழக்கு ஒன்றில் ஆஜராவதற்காக பெங்களூரு நீதிமன்றத்துக்கு செல்லும் நித்தியானந்தா (கோப்பு படம்)

சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தா தனி நாடு அறிவித்து, கொடி, துறைகள் ஆகியவற்றையும் அறிவித்துள்ளார்.

நித்யானந்தா தொடர்ந்து தலைமறைவாக இருக்கிறார். அவர் உள்நாட்டில் இருக்கிறாரா? வெளிநாடு தப்பிச் சென்றுவிட்டாரா என்பதுகூட உறுதியாகத் தெரியவில்லை.

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு மாணவிகளை கடத்தி சென்றதாக அவர்களின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் அவர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அகமதாபாத் டெல்லி பப்ளிக் ஸ்கூல் வளாகத்தில் இருந்த அவரது ஆசிரமம் மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில், அவர் இந்துக்களுக்கு என்று தனி நாடு ஒன்றை உருவாக்கிவிட்டதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்று பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

'கைலாசா' என்று அவர் தமது நாட்டுக்குப் பெயர் வைத்துள்ளதாகவும் அந்த செய்திகள் குறிப்பிடுகின்றன. தாம் அமைத்துள்ளதாக நித்யானந்தா குறிப்பிடுகிற நாட்டுக்கான 'அதிகாரபூர்வ' இணைய தளம் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.

https://kailaasa.org/ என்ற இணைய முகவரியில் காணப்படும் அந்த தளத்தில் கைலாசா என்பது எல்லைகள் இல்லாத தேசம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தங்கள் சொந்த நாடுகளில் முறைப்படி இந்துத்துவத்தை கடைபிடிக்க முடியாத உலகம் முழுதும் வாழும் இந்துக்களுக்கான நாடு இது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே நேரம் கைலாசா இயக்கம் அமெரிக்காவில் நிறுவப்பட்டது என்றும் இந்து ஆதி சைவர் சிறுபான்மை சமூகத்தால் முன்னெடுக்கப்பட்டது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தங்கள் நாட்டைப் பற்றிய குறிப்பு என்ற இடத்திலோ 100 மில்லியன் ஆதி சைவர்கள், 2 பில்லியன் இந்துக்கள் தங்கள் மக்கள் தொகை என்றும், ஆங்கிலம், சமஸ்கிருதம், தமிழ் ஆகியவை தங்கள் நாட்டின் மொழிகள் என்றும், சனாதன இந்து தர்மமே தங்கள் மதம் என்றும், தெற்காசியாவில் உள்ள 56 வேதாந்த தேசங்களை சேர்ந்தவர்களும், புலம் பெயர்ந்தவர்களும் தங்கள் இனக்குழுவினர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நித்தியானந்தர் அமர்ந்த நிலையில் இருக்க, அருகே நத்தி இடம் பெற்றிருக்கிற ரிஷபக் கொடியே தங்கள் கொடி என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. உள்நாட்டுப் பாதுகாப்பு, கல்வி, கருவூலம், வணிகம், வீட்டுவசதி என்பது உள்ளிட்ட துறைகள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றின் இணைப்புப் பக்கங்களில் பல பதவிகள் குறிப்பிடப்பட்டிருந்தாலும், அவற்றில் யார் இருக்கிறார்கள் என்ற விவரம் குறிப்பிடப்படவில்லை.

ஒவ்வொரு துறைக்கான பக்கத்திலும் அத்துறையில் பணியாற்ற விண்ணப்பிப்பதற்கு ஒரு இணைப்பும் தரப்பட்டுள்ளது.

யார் இந்த நித்யானந்தா?

தமிழ்நாட்டின், திருவண்ணாமலையில் ராஜசேகரன் என்ற பெயரில் பிறந்து வளர்ந்தவர் நித்யானந்தா. பெங்களூர் அடுத்த பிடதியில் உள்ள ஆசிரமும் மூலம் ஆயிரக்கணக்கான பக்தர்களைப் பெற்றவர் இவர். தமிழ்த் திரையுலகின் பிரபல நடிகையுடன் படுக்கையறையில் இவர் இருப்பதைக் காட்டும் வீடியோ பதிவுகள் வெளியாகி, அது தொலைக்காட்சிகளிலும் காட்டப்பட்ட நிலையில் இவர் சர்ச்சைக்குரிய பிம்பமாக உருவெடுத்தார்.

நித்தியானந்தாபடத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionநித்தியானந்தா - கோப்பு படம்.

பிறந்த ஊரான திருவண்ணாமலையில் மட்டுமல்லாமல் பல இடங்களில் இவருக்கு ஆசிரமம் இருக்கிறது. இவருக்கு எதிராக பாலியல் புகார்களும் விசாரிக்கப்படுகின்றன.

பார்த்து 22 மாதமாகிறது

நித்தியானந்தாவின் சீடராக நீண்ட நாள்கள் இருப்பவரும், அவருடை சொந்த ஊரான திருவண்ணாமலையை சேர்ந்தவருமான நிர்வாகி ஒருவரை தொடர்பு கொண்டு இந்த புது நாடு குறித்து கேட்டது பிபிசி தமிழ்.

தமது பெயரை வெளியிட வேண்டாம் என்ற நிபந்தனையோடு அவர் பேசினார்.

"இந்துக்களுக்கு ஒரு நாடு வேண்டும் என்ற நோக்கம் அவருக்கு இருந்தது, இப்போதும் இருக்கிறது. இதெல்லாம் அவர் சத் சங்கம் மூலம் முன்பே அறிவித்தவைதான். இந்தக் கொடி, இலச்சினை எல்லாமும் கூட அவர் முன்பே அறிவித்தவைதான். ஆனால், அவர் எங்கே இருக்கிறார் என்று எனக்குத் தெரியாது. அவர் தப்பித்து வெளிநாடு சென்றுவிட்டதாக ஊடகங்கள் கூறுகின்றன. ஒருவேளை அவர் இந்தியாவிலேயே கூட இருக்கலாம். அவரது காணொளிகள் வந்துகொண்டுதானே இருக்கின்றன. அரசாங்கம் அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கவேண்டியதுதானே" என்றார் அவர்.

"அவரை நான் சந்தித்து 22 மாதங்கள் ஆகின்றன. அவர் எங்கே இருக்கிறார் என்று எனக்குத் தெரியாது" என்றும் அவர் கூறினார்.

https://www.bbc.com/tamil/india-50655248

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட, இங்கேதான் பதுங்கி இருந்தாரா..? பீலா விட்ட நித்யானந்தாவை பிடரியில் தட்டித்தூக்கக் கிளம்பிய போலீஸ்..!

nithyananda_1200x630xt.jpg

தனித்தீவை விலைக்கு வாங்கி தனி நாடாக உருவாக்கி விட்டதாக பீலா விட்டு வந்த நிதியானந்தா பதுங்கி இருக்கும் இருப்பிடம் தெரிந்து அவரை இந்திய காவல்துறையினர் கைது செய்ய தயராகி விட்டதாக கூறப்படுகிறது.

பல ஆண்டுகளாக தலைமறைவாக உள்ள நித்தியானந்தாவை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில் தனித்தீவு ஒன்றை வாங்கி அதனை தனி நாடாக அறிவிக்கக்கோரி ஐநாவிடம் நித்தியானந்தா கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் கசிந்தன.

போலீசாருக்கு போக்கு காட்டி வந்த நித்யானந்தா, அவ்வபோது இணையதளம் வாயிலாக வீடியோ வெளியிட்டு கிச்சுக்கிச்சு காட்டி வருகிறார். இந்நிலையில் வழக்கம்போல் தற்போது வெளியிட்டுள்ள பிரசங்க வீடியோ ஒன்றில், திருவனந்தபுர நித்தியானந்தா பீடத்தின் ஆதினமாக ருத்திர கன்னியான பக்தி பிரியானந்தாவை நியமித்துள்ளதாகவும், நான் இல்லை என்றாலும் என்னுடைய ஆசிரமங்கள் சிறப்பாக இயங்கிக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

நான் ஒரு பொறம்போக்கு என்பதால் என்னை எதுவும் செய்ய முடியாது. மானம், அவமானத்தை பற்றியெல்லாம் நான் கவலைப்படுவதே இல்லை என கூறியுள்ளார். ஏற்கனவே காவல்துறையினர் நித்தியானந்தாவை தேடுவதில் தீவிரம் காட்டி வரும் நிலையில், இதுபோன்ற பேச்சுக்கள் காவல்துறையினரை உசுப்பேற்றி இருக்கிறது.

இந்நிலையில் நித்யானந்தா, இமயமலை சாரலில் பதுங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இமயமலை பகுதியில் பேசிய நித்தியின் வீடியோக்கள், பிடதி ஆசிரமத்தில் இருந்து பதிவேற்றம்  செய்யப்பட்டதும் தெரியவந்துள்ளது.  நித்தியில் இருப்பிடம் தெரிய வந்துள்ளதால், அவரை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

கைலாசா பிரதமராக பிரகடனப்படுத்தி பீலா விட்டு வந்த நித்யானந்தா இன்னும் சில தினங்களில் சிறைக்குள் களி உண்ணப்போகிறார். 

https://tamil.asianetnews.com/india/hey-was-that-hiding-here-bela-nithyananda-leaves-the-police-q1zhz6

டிஸ்கி

hqdefault.jpg

ஐயாம் புர்ரெக்டேட் பை கால பைரவா.. & லோர்ட் சிவா.. ☺️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் பொறாமையாகத்தான்  இருக்கு

நம்மால  முடியாததை......??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für pass port kailasa

இதுதான்.... நித்தியானந்தாவின் நாட்டின் கடவுச் சீட்டு.
இன்று தான்.. எனக்கு கிடைத்தது. 
வாற வெள்ளிக்கிழமை,  அங்கு போக விமான ரிக்கற்றும்  வாங்கி விட்டேன்.  :grin:

Link to comment
Share on other sites

3 hours ago, தமிழ் சிறி said:

Bildergebnis für pass port kailasa

இதுதான்.... நித்தியானந்தாவின் நாட்டின் கடவுச் சீட்டு.
இன்று தான்.. எனக்கு கிடைத்தது. 
வாற வெள்ளிக்கிழமை,  அங்கு போக விமான ரிக்கற்றும்  வாங்கி விட்டேன்.  :grin:

என்ன எல்லாம் ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் உள்ளது தமிழை காணோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நித்தி இன்றுவரை உண்மை சொன்னதா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, தமிழ் சிறி said:

Bildergebnis für pass port kailasa

இதுதான்.... நித்தியானந்தாவின் நாட்டின் கடவுச் சீட்டு.
இன்று தான்.. எனக்கு கிடைத்தது. 
வாற வெள்ளிக்கிழமை,  அங்கு போக விமான ரிக்கற்றும்  வாங்கி விட்டேன்.  :grin:

நீங்க இப்பதான் பாஸ் போட்ட எடுத்து இருக்குறியள் நாங்க அடுப்படி வேலையில இறங்கி இருக்கிறம் குறிப்பு குமாரசாமி அண்ணனிடமும் , நிழலி , நந்தன் ஆகியோரை சுகம் கேட்டதாக சொல்லவும் 

இரண்டு தோழிகள் தோசை எடுக்க வந்து ஆடர் கொடுத்து செல்பி எடுத்துக்கொண்ட் நேரம் கிளிக்கியது 

26904102-1618453504869377-87281692958206

ஜெய் நித்தியானந்தா பவர்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

நீங்க இப்பதான் பாஸ் போட்ட எடுத்து இருக்குறியள் நாங்க அடுப்படி வேலையில இறங்கி இருக்கிறம் குறிப்பு குமாரசாமி அண்ணனிடமும் , நிழலி , நந்தன் ஆகியோரை சுகம் கேட்டதாக சொல்லவும் 

இரண்டு தோழிகள் தோசை எடுக்க வந்து ஆடர் கொடுத்து செல்பி எடுத்துக்கொண்ட் நேரம் கிளிக்கியது 

26904102-1618453504869377-87281692958206

ஜெய் நித்தியானந்தா பவர்

 

வன்மையான கண்டனங்கள்

😋

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, விசுகு said:

வன்மையான கண்டனங்கள்

😋

இப்படியே சொல்லி சொல்லி இருங்கள் இன்னொன்று வந்து ஓடர் கொடுத்து ஓரமா நிற்கிறது 

26907571-693536231034492-680607729442341

குறிப்பு :

படங்கள் அனுமதி பெற்ற பின்னரே இங்கு காண்பிக்கப்படுகிறது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தனிக்காட்டு ராஜா said:

இப்படியே சொல்லி சொல்லி இருங்கள் இன்னொன்று வந்து ஓடர் கொடுத்து ஓரமா நிற்கிறது 

26907571-693536231034492-680607729442341

குறிப்பு :

படங்கள் அனுமதி பெற்ற பின்னரே இங்கு காண்பிக்கப்படுகிறது 

இவற்றை  ஏற்கனவே  நான்  பார்த்தாச்சு😜

வேற

வேற.....???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விசுகு said:

இவற்றை  ஏற்கனவே  நான்  பார்த்தாச்சு😜

வேற

வேற.....???

ஆஸ்ரமத்தில் எல்லோரும் பார்த்தவைகளே இருக்கின்றன  🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தனிக்காட்டு ராஜா said:

ஆஸ்ரமத்தில் எல்லோரும் பார்த்தவைகளே இருக்கின்றன  🤣

வேற வழியில்லை

நாமே  நித்தியானந்தா  ஆகிவிடவேண்டியது தான்  ஒரே வழி😋😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விசுகு said:

வேற வழியில்லை

நாமே  நித்தியானந்தா  ஆகிவிடவேண்டியது தான்  ஒரே வழி😋😜

அந்தாள் லெவலுக்கு வராது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Dash said:

என்ன எல்லாம் ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் உள்ளது தமிழை காணோம்.

பக்தகோடிகளின் 'வேண்டுகோளுக்கிணங்க' அரசமொழியாம் தமிழில் கடவுச் சீட்டு வெளியிடப்பட்டுள்ளதாம்..!

passport1.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம் என்னத்தைச் சொல்ல......

எங்கள் முனிவர்ஜியும் ஆசிரமம் வச்சு படாத பாடுபட்டதை பாத்தனாங்கள்தானே....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நீங்க இப்பதான் பாஸ் போட்ட எடுத்து இருக்குறியள் நாங்க அடுப்படி வேலையில இறங்கி இருக்கிறம் குறிப்பு குமாரசாமி அண்ணனிடமும் , நிழலி , நந்தன் ஆகியோரை சுகம் கேட்டதாக சொல்லவும் 

ஜெய் நித்தியானந்தா பவர்

ஓம் நித்தியானந்தம்...
விஐபி றூமிலை இருந்து குமாரசாமி ஸ்பீக்கிங் 😎
பக்தைகளும் சிஷ்யைகளும் எனக்கு பணிவிடை செய்துகொண்டிருக்கிறார்கள்🧷
ஓவர்...ஓவர்....🔈

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இரண்டு தோழிகள் தோசை எடுக்க வந்து ஆடர் கொடுத்து செல்பி எடுத்துக்கொண்ட் நேரம் கிளிக்கியது 

26904102-1618453504869377-87281692958206

தம்பி ராசன்! தோசை கருகப்போகுது கவனம்....
ஓவர்...ஓவர்....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
    • @nunavilan என்ன‌ அண்ணா க‌ள‌த்தில் குதிக்கிற‌ ஜ‌டியா இல்லையா இன்னும் சில‌ ம‌ணி நேர‌ம் தான் இருக்கு🙏🥰...................................
    • @நீர்வேலியான், உங்கள் பதில்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன😀 வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.