Jump to content

நித்தியாந்தாவின் தனிநாடு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ampanai said:

நித்தியானந்தாவுக்கும் எமக்கும் எந்தத் தொடர்புமில்லை – நல்லை ஆதீன குருமுதல்வர் விளக்கம்

நல்லை ஆதீனத்துக்கும் சுவாமி நித்தியானந்தாவுக்கும் எந்தத் தொடர்புமில்லை என்று நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தெரிவித்துள்ளார்.

0.jpg

“இதனை நாம் சர்ச்சைக்குரிய கருத்தாகவே பார்க்கின்றோம். சுவாமி நித்தியானந்தாவுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்புகளும் இல்லை.எமது இந்து மதப் பணிகளுக்கு இடையூறு வரும் வகையிலும் எமக்கு குடைச்சல் கொடுக்கும் வகையில் இந்த கருத்து வெளியிடப்பட்டுள்ளது” என்றும் அவர் குறிப்பிட்டதார்.

இந்தியாவின் சர்ச்சைக்குரியவரான நித்தியானந்த தனது முகநூலில் வெளியிட்டுள்ள காணொலியில் தனது அடுத்து இலக்கு இலங்கையில் உள்ள நல்லை ஆதீனம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதுதொடர்பில் பதிலளிக்கும் போதே நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் இந்தக் கருத்தை வெளியிட்டார்.

https://www.virakesari.lk/article/71015

நித்தியானந்தாவுக்கு.... 
மதுரை ஆதீனம்,  முடி சூட்டி...  பட்ட பாடு,
நல்லை ஆதீனத்திற்கும்... தெரிந்து விட்டது  போலுள்ளது. 😊
அதுதான்.. எல்லாரும், தலை தெறித்து  🏃🏿‍♂️   ஓடுகிறார்கள்.  :grin:

நித்தியானத்தாவை பற்றி, 
யாழ். களம்,  
ஏழு வருடங்களுக்கு முன்பே... விழிப்பாக இருந்துள்ளது. ❤️

 

 

Link to comment
Share on other sites

  • Replies 82
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஈசனுக்கு போட்டியாக இன்னும் ஓர் கைலாசா

கைலாயம் என்றாலே இந்துக்களின்  முழுமுதற் கடவுளான சிவன்  உறையும் புனித ஸ்தலம் என்பது இந்துக்களின் நம்பிக்கை. 

தேவாரங்களும் திருப்பதிகங்களும் பாடல் பெற்ற அந்த  ஈசனின் கைலாயத்துக்கு போட்டியாக பூமியில் அதேபெயரில் இன்னும் ஓர் கைலாயத்தை  சர்ச்சைகள் நிறைந்த சாமியார் நித்தியானந்தா உருவாக்கி வருகின்றார் என்பது  மேலும்  அவர் மீது சர்ச்சைகளை உருவாக்கியுள்ளதோடு,  உலகையே  அவர் பக்கம் திரும்பி பார்க்கவும் வைத்துள்ளது. கடந்த சில நாட்களாக  சமூக வலைத்தளங்களில் வைரலாகவும் இந்திய  ஊடகங்களில் தலைப்பு செய்தியாகவும் இதுவே வலம் வந்துொண்டிருக்கின்றது. 

virakesari.jpg

நித்தியானந்தா மீது பல்வேறு வழக்குகளும் சர்ச்சைகள் நிரம்பிய புகார்களும் நிரம்பி வழிகின்ற நிலையில் அவரை சர்வதேச பொலிஸாரின் உதவியோடு கைது செய்யுமாறு குஜராத் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால் அவர் எங்கு இருக்கின்றார் என்று பொலிஸாருக்கு தெரியாமல் விழி பிதுங்கி நிற்கின்றனர். ஆனால் நித்தம் நித்தியானந்தா சமூக வலைத்தளம் மூலமாக தனது பக்தர்களை சந்தித்து புதிய காணொளிகளை பதிவேற்றி வருகின்றார். அரசியல் தொடர்பில் கூட கருத்து தெரிவித்து வருகின்றார். 

நேரடி ஒலிப்பரப்புகளும் அவரது சமூக வலைத்தளங்களில் ஒலிபரப்பப்படுகின்றன. இந்நிலையில் அவர் கைலாயம் என்ற தனி நாட்டை  இந்துக்களுக்காக உருவாக்கி வருவதோடு அதில் குடியேறுவதற்கு 12 இலட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாகவும் அறிவித்துள்ளமை இந்திய மத்திய அரசையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அவர் அறிவித்துள்ள கைலாயம் நாடு ஈக்குவோடார் நாட்டுக்கு சொந்தமான ஒரு தனித்தீவு என்று கூறப்படுகின்றது. ஆனாலும் இதனை ஈக்குவோடார் அரசு மறுத்துள்ளது. 

நித்திக்கு முன்பு ஓஷோ கூட இதேபோல அமெரிக்காவில் ரஜ்னீஷ் என்ற பெயரில் குடியேறி ரஜ்னீஷ்புரம் என்ற ஊரை உருவாக்கி பின்னர்  இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். எனவே தனி நகர் அல்லது ஊரை உருவாக்குவது சாத்தியமே ஆனால் தனி நாடு உருவாக்குவது  என்பது சாத்தியம் குறைந்ததே.  எது  எப்படியோ  இந்திய பொலிஸாரின் கண்களில் மணலை தூவி விட்டு தான் எங்கு இருக்கின்றேன் என்று யாருக்கும் தெரியாமல் இந்துக்களுக்கு என்று தனி நாட்டை உருவாக்குகிறேன் என்று  கூறும் நித்திக்கு தைரியம் அதிகம்தான்.

 இன்று அசுர வளர்ச்சியடைந்துள்ள நித்தியானந்தாவின் ஆரம்பத்தை  சற்று  திரும்பி பார்ப்போம். 

தன்னைத் தானே கடவுள் என்று கூறிக்கொள்ளும் நித்யானந்தா, தமிழ்நாட்டின், திருவண்ணாமலையில் அருணாசலம் - லோகநாயகி தம்பதியினருக்கு 1978 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் திகதி  பிறந்தவர். அவருக்கு பெற்றோர் வைத்த பெயர் ராஜசேகரன். 

இராமகிருஷ்ண மடத்தில் சிறுவயதில் கல்வி கற்க தொடங்கிய ராஜசேகரன் சிறுவயதில் இருந்தே ஆன்மீக பற்று கொண்டிருந்தமையினால்   திருவண்ணாமலை சுற்று வட்டாரத்தில் தம்பி சாமியார் என இவரை அழைத்துள்ளனர். தன் வயது சிறார்கள் எல்லோரும் ஓடி விளையாடும் போது நித்தியானந்தா கோயில் குளமென சுற்றிக்கொண்டு ஆன்மீக தேடலில் ஈடுபட்டு கொண்டிருந்தார். இந்நிலையில்  தனது பன்னிரெண்டாம் வயதில் அருணாச்சல மலை அடிவாரத்தில் ஒரு புத்த பூர்ணிமா அன்று (31 மே 1990), ‘உடல் தாண்டிய அனுபவம்’ எனும் பேரானந்த நிலையினை முதல் ஆன்மீக அனுபவமாக  அடைந்ததாக  இவர்  தனது சுயசரிதையில் தெரிவித்துள்ளார். 

இதனைத் தொடர்ந்து ஆன்மீகத்தை அதிகம் நாடிச் சென்றார்.  பொறியியல் கல்லூரியில்  கல்வி கற்ற ராஜசேகரன் தனது 17 ஆவது வயதில் வீட்டை விட்டு வெளியேறி பல ஆன்மீக தலங்களை நோக்கி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இக்கால கட்டத்தில் நித்தியானந்தா தியானங்களை கற்க தொடங்கினார். இதன்போது கேதாரனாத் அருகில் உள்ள கெளரிகண்டில் மகா அவதார் பாபா ஜீ நித்தியானந்தாவுக்கு காட்சி தந்ததாகவும் அவரே பரமஹம்ச நித்தியானந்தா என்ற பெயரை இவருக்கு சூட்டியதாகவும் நித்தி கூறுகின்றார். இவ்வாறே ராஜசேகரன்.  நித்தியானந்தாவாக மாறினார். ராம கிருஷ் ண பரமஹம்சர், ரமண மகரிஷி ஆகியோரை தனது  மானசீகக் குருவாகக் கூறும் நித்தியானந்தா இந்தியாவில் பல ஆன்மீக தலங்களை  சுற்றி இறுதியில் மீண்டும் திருவண்ணாமலைக்கு வந்து சேர்ந்தார். அங்கு மக்களுக்கு ஆன்மீக அருளாசிகளை வழங்க தொடங்கினார். நோய்கள் தீர  ஆன்மீக தொடு சிகிச்சைகளையும் செய்ய தொடங்கினார். இதன் மூலம்  அவரது புகழ் தென் இந்தியா முழுவதும் பரவ தொடங்கியது. 

இதனையடுத்து பெங்களூருக்கு சென்ற இவர் 2003 பிடதியில்.  20 ஏக்கர் பரப்பளவில் நித்தியானந்தா தியான பீடம்  எனும் ஆச்சிரமத்தையும் நிறுவினார். அதன் மூலம் தனது ஆன்மீக அனுபவத்தை மக்களுக்கு வழங்கியதோடு  பல்வேறு தியான நிகழ்ச்சிகளையும் நடத்தினார். இதில் கூட்டம் அலைமோத தொடங்கியது.  உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் இருந்தும் இவரை நோக்கி பக்தர்கள் கூட்டம் படையெடுத்தது. இதன் விளைவு பிடதியில் இருந்து அமெரிக்கா லொஸ் ஏஞ்சல்ஸ் வரை ஆச்சிரமங்கள் உருவாகின. 

33 நாடுகளில் கிட்டத்தட்ட 1500 நித்தியானந்தா தியான பீட கிளைகள் தற்போது உள்ளன. சாதாரண மக்கள் தொட்டு பிரபலங்கள் வரை அவரை நோக்கி படையெடுத்தனர். ஆரம்பத்தில் சிறிய தொகை கட்டணத்துக்கு நடத்தப்பட்ட தியான வகுப்புகளின் கட்டணங்கள் பின்னர் இலட்சங்களை தாண்டியதாக கூறப்படுகின்றது. இவர் பல்வேறு ஆன்மீக தொடர்களை குமுதம் உள்ளிட்ட  பிரசித்தி பெற்ற இதழ்களில் எழுதியுள்ளதோடு தொலைக்காட்சிகளிலும் ஆன்மீக நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். மிக இளம் வயது சாமியாரான  நித்தியானந்தா 35 வயதுக்குள்ளேயே புகழின் உச்சிக்கு சென்றார். மதுரை காஞ்சிபுரம் உள்ளிட்ட பாரம்பரிய மடங்களுக்கு சவாலாக மாறினார். அவரது வெளிநாட்டு பக்தர்களினால் அவரது சொத்துமதிப்புகளும் கோடிகளை தாண்டியுள்ளன.

கிட்டத்தட்ட 2000 கோடி சொத்து மதிப்பு உள்ளதாக கூறப்படுகின்றது. இதேவேளை அவரது புகழோடு சேர்ந்து சர்ச்சைகளும் கூடவே வளர்ந்தது. ஆன்மீக ரீதியில் புகழோடு உச்சியில் இருந்த நித்திக்கு சறுக்கலை ஏற்படுத்திய முதல் சம்பவம் 2010 இல் இடம் பெற்றது. திரைப்பட நடிகை ரஞ்சிதாவுடன் அவர் இருப்பது போன்ற ஆபாசா வீடியோ ஒரு தனியார் தொலைக்காட்சியில் வெளியானது.

இது இந்தியா முழுவதும் ஒரே இரவில் நித்தியின் மொத்த புகழையும் ஆட்டம் காண வைத்தது. அவரது  தியான பீடங்கள் கல் வீச்சுக்கு உள்ளாகின.  இது தொடர்பில் அவருக்கு எதிராக மக்களின் மத நம்பிக்கைகளை புண்படுத்தியதாக வழக்கும் தொடரப்பட்டது. ஆனால்   அந்த வீடியோவில் இருப்பது தானில்லை என்று நித்தி மறுத்து குறித்த தொலைக்காட்சி நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். ஆனால் பெங்களூரு தடையியல் நிபுணர்களின் ஆய்வில்  வீடியோவில் இருப்பது நித்தியானந்தா என்பது உறுதியானது. இந்த வீடியோவை வெளியிட்டது அவரது முன்னாள் சீடரான லெனின் கருப்பனே. 

ஆனால் இவை அனைத்தும் பொய் என்று நித்தி மறுத்தார் இதனை தொடர்ந்து  293 ஆவது மதுரை இளைய ஆதீனமாக நித்தியானந்தா தற்போதைய மதுரை ஆதீனம் அருணகிரினாதரினால் நியமிக்கப்பட்டார். ஆனால் 2500 வருடங்கள் பழமையானதும் நாயன்மார்களில் ஒருவரான திருஞான சம்பந்தரினால் உருவாக்கப்பட்டதுமான மதுரை ஆதீனத்துக்கு பாலியல் சர்ச்சையில் சிக்கிய நித்தியை ஆதீனமாக்கியமைக்கு எதிராக ஆதீன மீட்பு போராட்டம் தொடங்கியது. இறுதியில் நித்தியானந்தா தன்னை ஏமாற்றி ஆதீனமாக்கியதாக மதுரை ஆதீனம் புகாரளித்து நித்தியை அப்பதவியில் இருந்து தூக்கினார். இதனை தொடர்ந்து  நித்தியானந்தா மீது பக்தை ஒருவர் பாலியல்  குற்றச்சாட்டை முன்வைத்தார். நித்தி மீது பாலியல் துஸ்பிரயோக வழக்குகள் பாய்ந்தன. 

ஆனாலும் தன்னால் பாலியல் உறவு வைத்துக்கொள்ள முடியாது தான் ஆண் பெண் என்பதை கடந்தவர் என்று நித்தியானந்தா கூறினார். அவருக்கு ஆண்மை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இதனை மறுத்தனர். இறுதியில் நித்தி சிறையில் அடைக்கப்பட்டு பிணையில் வந்தார். ஆனால் அவரது  பக்தர்களின் கூட்டம் பெரியளவில் குறையவில்லை. தொடர்ந்தும் சிறுவர்கள் கடத்தல்,  பாலியல் துஷ்பிரயோகம்  என அவர் மீது புகார்கள் எழுந்துகொண்டிருக்கின்றன. 

ஆனால் நித்தி அனைத்தையும் மறுத்து வருகின்றார். நித்தி மட்டும் அல்ல. அவரது சிறு வயது சிஷ்யைகள் கூட சர்ச்சையில் சிக்குகின்றனர் குறிப்பாக கவிபேரசு  வைரமுத்து ஆண்டால் தொடர்பில் வெளியிட்ட சர்ச்சை கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நித்தியின் சிஷ்யைகள் கடுமையான வார்த்தை பிரயோகங்களை சமூக வலைத்தளங்களில் வீடியோவாக வெளியிட்டனர். இது பலத்த சர்ச்சைகளை உருவாக்கியது. ஆயினும் நித்தி இதனை கண்டுகொள்ளவில்லை. 

தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் புது புது வீடியோக்களை வெளியிட்டு அசத்தினார். மிருகங்களை தமிழிலும் சமஸ்கிருதத்திலும் தான் பேச வைக்கப்போவதாக கூறினார். ஐன்ஸ்டினின் கோட்பாடு தவறு என்று கூறி நிறுவினார். இந்நிலையில் நித்திக்கு எதிரான வழக்குகள் தீவிரமடைந்தன. கொலை குற்றபுகார்களும் எழுந்தன.  

தொடர் பாலியல் குற்றச் சாட்டுகள், திருச்சி சங்கீதா என்கிற பக்தரின் மரணத்தில் சர்ச்சை, அமுலாக்கப் பிரிவு வழக்கு என அடுத்தடுத்த நெருக்கடிகள் கடந்த சில ஆண்டுகளாகவே இருந்து வருகின்றன. இந்தியாவில் தொடர்ந்து இருந்தால் தனக்கு சிக்கல் வந்துவிடும் என்பதை உணர்ந்துள்ளார் நித்தியானந்தா. 

அப்போது அவரின் வெளிநாட்டு பக்தர்கள் சிலர், ‘தீவு ஒன்றை வாங்கி அதில் குடியேறி விடுங்கள்’ என்று ஐடியா கொடுத்தி ருக்கிறார்கள். இதற்கான வேலைகளை மூன்று ஆண்டுகளுக்கு முன்பே ஆரம்பித்துள்ளார் நித்தி. இதற்கென வெளிநாட்டு பக்தர்களிடம் கோடிக்கணக்கில் பணம் வசூல் நடந்துள்ளது. இந்தியாவில் உள்ள பக்தர்கள்மூலம் நகைகளாகவும் இடங்களாகவும் வசூல் செய்துள்ளார்.

தென் அமெரிக்கக் கண்டத்தில் உள்ள ஈக்குவடோர் நாட்டுக்குச் சொந்தமான ஒரு தீவை வாங்க, அமெரிக்க பக்தர்கள்மூலம் வேலையை ஆரம்பித்த நித்தியானந்தா. ஒருவழியாக இரு ஆண்டுகளுக்கு முன்பே பல கோடி ரூபாய் மதிப்பில் தீவு வாங்கியதாக கூறப்படுகின்றது. அந்தத் தீவில் குடியேற, சத்தமில்லாமல் வியூகம் வகுக்கப்பட்டது. கடந்த வருடம் இறுதியில்  பிடதியிலிருந்து  இமயமலைக்கு ஆன்மீகப் பயணம் செல்வதாக கூறி சென்ற நித்தியானந்தா  உத்தரப்பிரதேசத்தில் சில நாட்கள் தங்கியுள்ளார். அங்கு இருந்து தரைவழி மார்க்கமாக நேபாளம் சென்றுள்ளார். இந்து நாடான நோபாளத்தில் அரசு அதிகாரிகள் நித்தியானந்தாவை இந்து மதத் தலைவராகக் கருதி, ராஜமரியாதையுடன் அவரை காத்மண்ட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். 

காத்மண்ட் விமான நிலையத்திலிருந்து தனி விமானம் மூலம் ஈக்குவடார் அருகே உள்ள தன் தீவுக்குச் சென்றிருக்கிறார் நித்தியானந்தா. அவருடன் இரண்டு பெண் சீடர்களும், ஜனார்த்தன சர்மாவின் மூத்த மகளும் உடன் சென்றுள்ளனர். அதற்குப் பிறகு மேலும் சிலர் அந்தத் தீவுக்குச் சென்று ஐக்கியமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் இதனை அந்நாடு மறுத்துள்ளது நித்தியானந்தா தங்களிடம் அகதி கோரிக்கை விடுத்ததாகவும் தாங்கள் அதனை மறுத்துவிட்டதால் அவர் வேறு நாட்டுக்கு சென்றுவிட்டதாகவும் கூறியுள்ளது. இதனால் நித்தி எங்கே உள்ளார் என்பது மர்மமாகவே உள்ளது. 

ஆனால் சமூக வலைத்தளத்தில் தனது சிஷ்யர்களுக்கு தான் நடத்தும்  சத்சங்கயம்  நிகழ்ச்சி மூலம் அவர் தொடர்பில் உள்ளார். அவர் தனது தனிநாடு தொடர்பிலும் செய்திகளை வெளியிட்டு வருகின்றார். 

கைலாயம் தற்போது ஸ்ரீ கைலாயமாக பெயர் மாற்றம் பெற்றுள்ளதாகவும் இதுவரை 12 இலட்சத்துக்கும் அதிகமானோர் இதில் குடியேற விண்ணப்பித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் பல்வேறு நாடுகள் தங்களது நாட்டுக்கு வரும்படி அவரை அழைப்பதாகவும் கைலாயம் தொடர்பில் நல்ல செய்தி வரும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேலும் தான் திருவண்ணாமலையில் சாதாரணமானவனாக சிவ சிந்தனையோடு இருந்ததாகவும் பக்தர்களின் அன்பாலேயே நித்தியானந்தா தியான பீடத்தை மக்களுக்காக தான் உருவாக்கியதாகவும் கூறும் நித்தி தன்னை ஓட, ஒட விரட்டி எல்லோரும் அடித்தாலும் மதுரை மீனாட்சி தன்னை காப்பதாகவும் கூறுகிறார். மீனாட்சியும் பரமேஸ்வரரும் நினைப்பதே நடக்கும் தன் கடவு சீட்டை புதுப்பிக்க அரசு மறுத்ததன் விளைவே கைலாயம் உருவாக காரணம் என்று விளக்கமும் அளித்துள்ளார்.

மேலும் அமெரிக்க சட்ட நிறுவனங்கள் மூலம் நித்தியின் தரப்பினால்  ஐ.நா.வில் தனி நாடு குறித்து கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. அதாவது  இந்து மதம், உலகின் சில நாடுகளில் மட்டுமே உள்ளது. அந்த மதத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவர் நித்தியானந்தா. அவருடைய நாட்டில் அவருக்கு போதிய பாதுகாப்பு இல்லை. இந்தியாவில் ஆன்மீகத் தலைவருக்கு எதிரான நெருக்கடிகள் அதிகரித்துள்ளன. 

எனவே, அவரை புலம்பெயர் அகதியாகவே இப்போது கருதவேண்டியுள்ளது. அவரின் மதரீதியான பிரசாரத்துக்கு தலைமையிடம் தேவை என்பதால், புதிய நாட்டுக்கான அங்கீகாரத்துக்கு விண்ணப்பிக்கிறோம்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளதாம்.

ஆனால் இந்து மதத்துக்கு ஆதரவான தற்போதைய இந்திய மத்திய அரசு இதனால் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளது என்றே கூற வேண்டும். ஏனெனில் இந்திய பிரஜை ஒருவர் தனிநாட்டை அறிவித்து ஒரு நாட்டின் தலைவராக பிரகடனம் செய்து தங்களுக்கே சவாலாக வந்துவிடுவார் என்று நினைக்கிறது மத்திய அரசு. இந்து மதத் தலைவருக்குப் பாதுகாப்பு இல்லை என்று ஐ.நா.-வில் பதிவுசெய்து ஒரு நாட்டை உருவாக்க நித்தியானந்தா முயற்சி செய்தால், அது

 பா.ஜ.க. ஆட்சிமீது உலக அரங்கில் அவப்பெயரை ஏற்படுத்திவிடும் என கவலைகொள்கிறது மத்திய அரசு. எனவே, நித்தியானந்தாவைக் கைதுசெய்து இந்தியாவுக்குக் கொண்டுவரும் வேலையில் தீவிரம் காட்ட ஆரம்பித்துவிட்டது மத்திய அரசு. இதனால் தேடப்படும் குற்றவாளியாக நித்தியானந்தா அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஆனால் இது எதனையும் பொருட்படுத்தாது சிரித்த முகத்துடன் நித்தி எங்கிருந்தோ நித்தம் சமூகவலைத்தளங்களில் வலம் வருகின்றார். அவரை பொலிஸார் தேடினாலும் இன்னும் அவரது பக்தர்கள் கடவுள் போல அவரைத் தேடிச் சென்று கொண்டுதான் இருக்கின்றனர். 

சித்தர்களும் ஞானிகளும் மகான்களும்  வாழ்ந்த புனித பூமியில் இன்று தெருவுக்குத் தெரு தான் தான் கடவுள் என கூறிக்கொள்ளும் போலிச்சாமியார்கள் முளைத்துவிட்டனர். கடவுளின் சந்நிதியில்  முறையிட்டு வேண்டுபவர்களை விட அதிகமான கூட்டம் இவர்களது ஆச்சிரமங்களிலேயே அலைமோதுகின்றது. தேச எல்லைகளையும் இன, மத பேதங்களையும்  கடந்து பல கோடி பக்தர்கள் கடவுளிடம்  போல இவர்களிடம் தஞ்சமடைகின்றனர். 

 உருவமாக, அருவுருவமாக, அருவமாக எல்லைகள் அற்று  எல்லாம் கடந்து எங்கும் நிறைந்திருக்கும் இறைவனை  'தெய்வம் மனிதரூபமாய்' என்று வேதம் சொல்கின்றது.   இந்த காலத்தில் பாவங்களின் இருப்பிடமாக மாறியுள்ள மனித குலத்தை தெய்வ  ரூபம் என ஒப்பிட முடியாது. ஆயினும்  மனிதம் குறையாத மனிதர்கள் சிலர்  இன்னும் இந்த பூமியில் வாழ்கின்றனர். ஆதலால்தான் நிற்காமல் இன்னும் சுற்றிக்கொண்டிருக்கின்றது பூமி.  நமக்கு எல்லையில்லா துன்பங்கள் நேரும் போதும் அல்லது ஏதாவது ஆபத்து வரும் போதும். இறைவனை  வேண்டி நிற்போம்.  அந்த சந்தர்ப்பத்தில் இறைவன் வேலோடும்

 அம்போடும் நம் முன்னே வர மாட்டார். உருவங்களை கடந்த இறைவன் ஏதாவது ஒரு மனித உருவில் நமக்கு உதவி செய்வார். இதைத்தான் சில பேர் சில கடினமான நேரங்களில்  சக மனிதன்  புரியும் உதவியை  நன்றி கூறும் போது' கடவுள் போல்  தக்க சமயத்தில் என்னை காப்பாத்துனீர்கள்'  என்று கூற கேட்டுள்ளோம். முற்காலத்தில் தெய்வ பண்புகள் நிறைந்த மனிதர்களும் சித்தர்களும் முனிகளும் வாழ்ந்துள்ளதை நாம் வரலாறுகளில் காண்கின்றோம். ஆனால் இன்று  இந்த கலிகாலத்தில்    போலிகளும் பொய்களும் நிறைந்தவனாக மனிதன் மாறிவிட்டான். வாய் சொல்ல கூசும் கேவலமான  நடவடிக்கைகளில் ஈடுபட்டு மனித குலத்தின் இருப்பையே கேள்விக் குறியாக மனிதம் இல்லாத மனிதன்  மாற்றிக்கொண்டிருக்கின்றான்.  

இதில் சிலர் வெறும் வணிக நோக்கத்துக்காக கஷ்டங்களில் சுழலும் மனிதர்களை காப்பாற்றுவதாக கூறி தெருவுக்கு தெரு   ஆச்சிரமங்களையும் ஆலயங்களையும் அமைத்து தன்னை தானே கடவுள் எனவும் மகான்கள் எனவும் அறிவித்துக்கொள்கின்றனர். மக்கள் இறைவனை விட அவரின் பிரதிநிதி என்று கூறும் சாமியார்களையே அதிகம் நம்புகின்றனர். 

இதனை மாற்றுவது என்பது நாய் வாலை நிமிர்த்துவதற்கு சமம். இதனால் காலங்கள் பல கடந்தாலும் மாற்றங்கள் பல நடந்தாலும் மனித மனம் மாறும் வரையில் சாமியார்கள் என்றும் அழியமாட்டார்கள். நேற்று பலர் இருந்தனர். இன்று பல சாமியார்கள் உள்ளனர். நாளையும் பலர் உருவாகுவர் என்பதில் 

மாற்று கருத்து இல்லை. அந்த இமயத்து கையலாயத்தில் வீற்றிருக்கும் ஈசனுக்கு போட்டியாக இன்னுமோர் கைலாயம் இந்த பூமியில் உருவாக்கப்பட்டாலும் அது அதிசயம் இல்லை.


- குமார் சுகுணா -

 

https://www.virakesari.lk/article/71082

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரஞ்சிதா கண் சிமிட்டினால் நித்யானந்தா சுருண்டு ஒக்காந்துடுவார்.! எல்லாமே ரஞ்சிதா மயம் ; ஓயவே ஓயாத நித்தி அலை.!

images--15--jpg.jpg

ஒரு மாதத்துக்கும் மேலாகிடுச்சு, ‘என் மகள்களை அபகரிச்சுண்டார்! என்று நித்யானந்தாவை நோக்கி ஜனார்த்தன சர்மா சரமாரியான குற்றச்சாட்டுக்களை சுமத்த துவங்கி.  அப்போது நித்திக்கு எதிராக கிளம்பிய அதிர்வலை இதோ இன்று வரை கொஞ்சம் கூட சூடு குறையாமல் செம்ம டிரெண்டிங்கில் போய்க் கொண்டே இருக்கிறது.நித்திக்கு எதிராக ஜனாவின் குற்றச்சாட்டு ‘ஏதோ ஆசிரமத்தின் உள் விவகாரம்’ என்றுதான் துவக்கத்தில் பார்க்கப்பட்டது. ஆனால் கிணறு தோண்ட துவங்கையில்  வேதாளம் வெளிப்பட்ட கதையாக, இந்த விவகாரத்தை டீல் பண்ண துவங்கிய பின் தான் நித்தியின் ‘கைலாஸா நாடு’ எனும் தனித்தீவு விவகாரங்களெல்லாம் வெளிப்பட துவங்கின. நாட்டை விட்டே எஸ்கேப் ஆன நித்தியானந்தாவை பழைய பாலியல் வழக்குகள், புதிய ‘சிறுமிகள் கடத்தல்’ வழக்குகள் என அத்தனையிலும் ஆஜர் படுத்திட வேண்டி, இழுத்து வர சொல்லியிருக்கிறது ஆணையம். இது போதாதென்று, மேட்டூரை சேர்ந்த முருகானந்தம் எனும் நபர் கடந்த சில வருடங்களாக நித்தியின் ஆசிரமத்தினுள் இருக்கிறார். அவரது பெயரை நித்ய பிரனாணந்தா! என  மாற்றியிருக்கிறார் நித்தி.

சமீபத்தில் இவரை ஆஸ்ரமத்தில் அடி பின்னி எடுத்துவிட்டார்கள்! என்று ஜனார்த்தன சர்மா ஒரு தகவலை தட்டிவிட, கொதித்துப் போன முருகானந்தம் குடும்பமோ சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்துள்ளது. ஆக நித்திக்கு எதிராக மிக கடுமையான சூழல்கள் இறுகி, இறுக்கிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் மாஜி சினிமா நடிகையும், நித்யானந்தாவின் ஆஸ்தான சீடரும், மா நித்தியானந்தமயி!யுமான ரஞ்சிதா தற்போது இந்தியாவுக்கு திரும்பி, நித்தியின் ஆஸிரமங்களுக்கு சொந்தமான ஆயிரக்கணக்கான கோடி சொத்துக்களை காப்பாற்றும் செயலில் இறங்கியிருக்கிறார்! ஒரு வேளை நித்தி கைதாகி, சில காலம் உள்ளே செல்ல வேண்டிய நிலை வந்தால் அப்போது இந்த சொத்துக்கள் ஆக்கிரமிக்கப்பட்டு விடவோ, அபகரிக்கப்பட்டு விடவோ கூடாது. மேலும் நித்தியை வெளியில் எடுக்க மிகப்பெரிய அளவில் பணத்தேவை தேவைப்படும் என்பதாலேயே ரஞ்சிதா இந்த வேலையை துவக்கியிருக்கிறார், சொல்லப்போனால் நித்தி தலைமறைவாக இருக்கும் நிலையில் அவரது இடத்தை இப்போது பிடித்திருப்பது ரஞ்சிதா தான்! என்று பரபரப்பாக பேசுகின்றனர் பிடதி ஆசிரமத்தில்.

அதாவது நித்யானந்தாவின் பெண் அவதாரமாகவே ரஞ்சிதா மாறியிருக்கிறார்! என்கிறார்கள். ரஞ்சிதாவுக்கு அவ்வளவு பவர் நித்தியிடம் இருக்கிறதா? என்று கேட்டால்....”நித்தியின் வட்டாரத்தில் ஆல் இன் ஆல் ஆக இருப்பது ரஞ்சிதாவே! லெலின் கருப்பன் வெளியிட்ட ‘நித்தி, ரஞ்சிதா சர்ச்சை சல்லாப வீடியோ’ விவகாரங்களுக்கு பின், மிக முழுமையான அளவில் ஆஸிரமத்தினுள் ஐக்கியமாகிவிட்டார் ரஞ்சிதா. படிப்படியாக வளர்ந்தவர், கடந்த சில காலமாக முழுமையாக நித்யானந்தாவை ஆக்கிரமித்திருக்கிறார். ரஞ்சிதா ஒரு வார்த்தை சொன்னால் போதும் அப்படியே அடங்கிடுவார் நித்தி. எந்த நேரத்தில் எப்படி செயல்பட வேண்டும், எந்த பிரச்னையை எப்படி டீல் பண்ண வேண்டும்? என்று நித்திக்கு ஐடியா கொடுப்பதே ரஞ்சிதா தான்! அவர் ஒரு பார்வை பார்த்து, கண் சிமிட்டினாலும் கூட போதும், நித்யானந்தா அடங்கிடுவார்! ரஞ்சிதாவுக்கு அப்படி என்ன அதிகாரம் அந்த ஆஸ்ரமங்களில் தெரியுமா?....நித்யானந்தா தன்னை தன் சீடர்களின் அப்பா! என்பார். ரஞ்சிதா தான் ‘மா’! அதாவது அம்மா. இதுக்கு மேல் என்ன சொல்லணும்?” என்று கேட்கிறார்கள்.

https://tamil.asianetnews.com/india/ma-nithyananda-mayi-ranjith-is-responsible-for-nithi-ashram-q2tbvb

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für darbar

குருநாதா 70 வயது கிழவன் வருஷத்துக்கு ஒரு படம் ரிலீஸ் பண்றான்.. உன்னோட படம் ரிலீஸ் ஆகி எட்டு வருஷம் ஆச்சு. அடுத்த படம் எப்ப தலைவா?

Bild

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அடுத்த அடுத்த வரிகளில் எப்படி இப்படி 180 பாகை எதிராக எழுத முடிகிறது? 👆🏼👇 2016 இல் இறங்கினார் சரி.  2021 வரை அனுபவம் ஜனநாயகம் செயல் அளவில் இல்லை என சொன்னபின்னும் ஏன் அதையே 2024 இல் செய்கிறார்? The definition of  insanity is doing the same thing again and gain and expecting a different outcome. அண்ணன் என்ன லூசா? அல்லது கமிசன் வாங்கி கொண்டு வாக்கை பிரிக்க இப்படி செய்கிறாரா? நான் என்ன ரோ எஜெண்டா அல்லது பிஜேபி பி டீமா? எனக்கு எப்படி தெரியவரும்? உங்களை சவுத் புளொக் கூப்பிட்டு காதுக்குள் ஐபி டைரக்டர் சொல்லி இருப்பார் என நினைக்கிறேன்? மாற்றுக்கருத்து ஏதும் இல்லை. நேற்று டவுனிங் ஸ்டிரீட் பக்கம் சும்மா வாக்கிங் போனேன். உங்களை பற்றி இந்த வகையில்தான் பேசி கொண்டார்கள். நான் கேள்விபட்ட வரையில் டிரம்ப் தான் வென்றதாம்….நீங்கள் சொல்லி விட்டீர்கள் என்பதால், தேர்தல் முடிவை குளறுபடி செய்து மாற்றினார்களாம்.
    • உங்க‌ட‌ அறிவுக்கு நீங்க‌ள் இப்ப‌டி எழுதுறீங்க‌ள் அவ‌ர்க‌ள் ஜ‌ன‌நாய‌க‌த்தின் மீது ந‌ம்பிக்கை இருந்த‌ ப‌டியால் தான் அர‌சிய‌லில் இற‌ங்கின‌வை இந்தியாவில் ஜ‌ன‌நாய‌க‌ம் என்ற‌து சொல் அள‌வில் தான் இருக்கு செய‌லில் இல்லை................ 2023 டெல்லிக்கு உள‌வுத்துறை கொடுத்த‌ த‌க‌வ‌ல் உங்க‌ளுக்கு வேணும் என்றால் தெரியாம‌ இருக்க‌லாம் இது ப‌ல‌ருக்கு போன‌ வ‌ருட‌மே தெரிந்த‌ விடைய‌ம்.........................நீங்க‌ள் யாழில் கிறுக்கி விளையாட‌ தான் ச‌ரியான‌ ந‌ப‌ர்.............................என‌க்கும் த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் அமெரிக்கா அர‌சிய‌ல் டென்மார்க் அர‌சிய‌ல் ப‌ற்றி ந‌ங்கு தெரியும் ஆனால் நான் பெரிதாக‌ அல‌ட்டி கொள்வ‌து கிடையாது.................   ந‌ண்ப‌ர் எப்போதும் த‌மிழ‌ன் ம‌ற்றும் விவ‌சாயிவிக் அண்ணா இவ‌ர்க‌ள் இருவ‌ரும் 2020ம் ஆண்டு ர‌ம் தான் மீண்டும் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்ன‌வை  நான் அதை ம‌றுத்து பைட‌ன் தான் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்னேன் அதே போல் நான் சொன்ன‌ பைட‌ன் அமெரிக்கன் ஜனாதிபதி ஆனார்😏............................ ஆர‌ம்ப‌த்தில் தாங்க‌ளும் வீர‌ர்க‌ள் தான் என்று வார்த்தைய‌ வீடுவின‌ம் ஒரு சில‌ர் அடிக்கும் போது  அடிக்கு மேல் அடி விழுந்தால் ப‌தில் இல்லாம‌ கோழை போல் த‌ங்க‌ளை தாங்க‌ளே சித்த‌ரிப்பின‌ம்🤣😁😂..............................
    • இந்த மாத முடிவில் சில நாடுகளின் நரித்தனத்தாலும், சுயநலத்தாலும் இரு நாடுகள் அணு ஆயுதங்களால் பலமாக தாக்கபட போகின்றன. ஜீசசும் வருகின்றார் என்ற செய்தும் உலாவுகிறது.
    • நான் யாழில் எழுத தொடங்கியது 2013. அதுதான் உளவுதுறை பிஜேபி கைப்பாவை ஆச்சே? அதேபோல் இப்படி சொன்ன தேர்தல் ஆணையம் மீது ஏன் சீமான் வழக்கு போடவில்லை? நம்ப வேண்டிய தேவை இல்லை. என் கருத்து அது. ஆனால் தேர்தல் ஆணையம் இப்படி ஒரு விடயத்தை சீமானிடம் சொல்லாது. எந்த அதிகாரியாவது மேலிட பிரசரால் இப்படி செய்கிறோம் என சீமானிடமே வெளிப்படையாக சொல்வாரா? மிகவும் சின்னபிள்ளைதனமாக சீமான் கதை பின்னுகிறார். நம்ப ஆள் இருக்கு என்ற தைரியத்தில். சீமான் சொல்வது உண்மை எனில் சீமான் வழக்கு போட்டிருக்க வேண்டும்.  போடமாட்டார் ஏன் என்றால் இது சும்மா….லுலுலுலா கதை. இந்த 😎 இமோஜியை பாவிக்காமலாவது விட்டிருக்கலாம். திருடப்போகும் இடத்தில் சிக்னேச்சர் வைத்தது போல் உள்ளது. 🤣🤣🙏
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.