Jump to content

கோவை பள்ளி மாணவி: ஆண் நண்பர் முன்னிலையிலேயே கூட்டுப் பாலியல் வல்லுறவு - அதிர்ச்சி சம்பவம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கோவை பள்ளி மாணவி: ஆண் நண்பர் முன்னிலையிலேயே கூட்டுப் பாலியல் வல்லுறவு - அதிர்ச்சி சம்பவம்

கோவை பள்ளி மாணவி: ஆண் நண்பர் முன்னிலையிலேயே கூட்டு பாலியல் வல்லுறவுபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: "கோவையில் பள்ளி மாணவி கூட்டு பாலியல் வல்லுறவு"

கோவை சீரநாயக்கன்பாளையத்தில் பள்ளி மாணவி ஒருவர் ஆறு பேரால் கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டதாகவும், அதில் நான்கு பேரை போலீஸார் பிடித்து விசாரித்து வருவதாகவும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

11ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் தனது உறவினர் ஒருவருடன் பிறந்தநாள் கொண்டாடுவதற்கு மாலையில் பூங்கா ஒன்றுக்கு சென்றுள்ளார். இரவு சுமார் 9 மணியளவில் அவர்கள் வீட்டுக்குச் செல்ல தயாரான போது, 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று அவர்களை வழிமறித்துள்ளது.

போலீஸார் என்று கூறிய அவர்கள், ஆண் நண்பரை மட்டும் தனியாக அழைத்துச் சென்று ஆடைகளை அவிழ்த்ததாகவும், பின்னர் மாணவியை ஆண் நண்பர் முன்னிலையிலேயே கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்ததாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்ததை வீடியோ பதிவாகவும் அவர்கள் எடுத்ததாகக் கூறப்படுகிறது.

குற்றம் சாட்டப்பட்ட 6 பேரில் நான்கு பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இதையடுத்து போக்சோ சட்டம் மற்றும் பாலியல் பலாத்காரம், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்து, 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும், இருவரைப் பிடிக்கத் தனிப்படை அமைத்துத் தேடி வருகின்றனர்.

https://www.bbc.com/tamil/india-50618987

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும், வெட்கப்படக் கூடிய செயல்.
கைது செய்யப் பட்டவர்கள்... எப்படியும் ஒரு மாதத்தில், 
வெளியே வந்து இந்தச் சமூகத்தில் நடமாடத்தான் போகின்றார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

கோவை பள்ளி மாணவி: ஆண் நண்பர் முன்னிலையிலேயே கூட்டுப் பாலியல் வல்லுறவு - அதிர்ச்சி சம்பவம்

இது வட இந்திய கலாச்சாரமாச்சே?

திரைப்படங்களில் கூட்டு பாலியல் வல்லுறவுகளை எப்படி  கடைப்பிடிக்க வேண்டும் என்பதை விலாவரியாக காட்டுவார்கள்.
மணிரத்தினம் எண்ட ஒரு கோதாரி இயக்குனர் ஒருபடத்திலை எப்பிடி ஓடிப்போய் கலியாணம் கட்டலாம் எண்டதை அந்தமாதிரி காட்டியிருப்பார்.அதையே இப்ப தென்னிந்தியாவிலை குஞ்சுகுருமனெல்லாம் தாலிகட்டிக்கொண்டு திரியுதுகள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோவை பள்ளி மாணவி கூட்டு வன்புணர்வு: பிறந்தநாள் கொண்டாட பூங்கா சென்றவருக்கு கொடுமை, நால்வர் கைது

ஹைதராபாத்தில் 27 வயது பெண் வன்புணர்வு செய்து கொல்லப்பட்டதை கண்டித்து கொல்கத்தாவில் பெண்கள் நடத்திய போராட்டம்.படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஹைதராபாத்தில் 27 வயது பெண் வன்புணர்வு செய்து கொல்லப்பட்டதை கண்டித்து கொல்கத்தாவில் பெண்கள் நடத்திய போராட்டம்.

கோவையில் பிளஸ் ஒன் படித்து வரும் 17 வயது மாணவியை 6 பேர் கும்பல் கூட்டு வன்புணர்வு செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

கடந்த வாரம் செவ்வாய்கிழமை, மாலை வேளையில், தனது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக, வீட்டின் அருகே உள்ள பூங்காவிற்கு தனது நண்பருடன் சென்றிருக்கிறார் பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமி. அப்போது அங்கிருந்த 6 பேர் இருவரையும் தாக்கியதோடு, சிறுமியை கூட்டு வன்புணர்வு செய்துள்ளது, என்று போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இது குறித்து, அடுத்த சில நாட்களில் தனது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார் பாதிக்கப்பட்ட பெண். இதனையடுத்து, அவரது தாய் ஆர்.எஸ். புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இன்ஸ்பெக்டர் பிரபாதேவி தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர்கள் மோகனஜோதி, சீனிவாசன் மற்றும் போலீசார் மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த கும்பலை தேடி வந்தனர்.

இந்நிலையில், மாணவியை கூட்டு வன்புணர்வு செய்ததாக ராகுல் (வயது 21), பிரகாஷ் (22), கார்த்திகேயன் (28), நாராயணமூர்த்தி (30) ஆகியோரை போலீசார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். இவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழும், வன்புணர்வு, கொலை மிரட்டல் ஆகியவற்றுக்கான சட்டப் பிரிவுகளின் கீழும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பின்னர், கைது செய்யபட்டவர்களை பெண்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனா்.

"பூங்காவில் இருந்த மாணவியையும், அவருடைய நண்பரையும் அங்கிருந்த நபர்கள் மிரட்டி உள்ளனர். பின்னர் அவர்கள், சிறுமியின் நண்பரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே மயங்கிவிட்டார்.

சிறுமியையும் தாக்கி, அவர் சத்தம்போடாமல் இருக்க வாயை பொத்தியதோடு, இருவரையும் கொலைசெய்துவிடுவதாக மிரட்டியுள்ளனர். இதையடுத்து அந்த கும்பல், சிறுமியை பூங்காவின் மறைவான பகுதிக்கு தூக்கி சென்று வன்புணர்வு செய்துள்ளனர். அதை செல்போனில் படம் பிடித்து, சமூகவலைத்தளங்களில் பரப்பிவிடுவோம் என மிரட்டி, அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர்" என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும் மணிகண்டன் மற்றும் கார்த்திக் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். இவர்களை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதால், பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர், முகவரி, முதல் தகவல் அறிக்கை போன்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை.

https://www.bbc.com/tamil/india-50621011

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 4 people, people standing

இந்தியாவில் தொடர்பாலியல் வன்கொடுமை .... 
பெண்களுக்கு முழு பாதுகாப்பு வழங்க மத்தியஅரசு முடிவு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோவை சிறுமி வன்புணர்வு வழக்கில் பிரதான சந்தேக நபர் சரண்

கோவையில் சிறுமியை கூட்டு வன்புணர்வுபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

கோவையில் சிறுமியை கூட்டு வன்புணர்வு செய்த வழக்கில் பிரதானமாக குற்றம்சாட்டப்பட்ட மணிகண்டன் கோவை மகளிர் நீதிமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) சரணடைந்துள்ளார்.

கோவையில் பதினொன்றாம் வகுப்பு படித்து வரும் 17 வயது சிறுமியை, 6 நபர்கள் வன்புணர்வு செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 26ஆம் தேதி, மாலை வேளையில், தனது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக, வீட்டின் அருகே உள்ள பூங்காவிற்கு தனது நண்பருடன் சென்றிருக்கிறார் பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமி. அப்போது அங்கிருந்த 6 நபர்கள் கொண்ட கும்பல் இருவரையும் தாக்கியதோடு, சிறுமியை கூட்டுப் பலாத்காரம் செய்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து, அடுத்த சில நாட்களில் தனது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார் பாதிக்கப்பட்ட சிறுமி. இதனையடுத்து, சிறுமியின் தாயார் ஆர்.எஸ்.புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இன்ஸ்பெக்டர் பிரபாதேவி தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர்கள் மோகனஜோதி, சீனிவாசன் மற்றும் போலீசார் சிறுமியை மிரட்டி வன்புணர்வு செய்த கும்பலை தேடி வந்தனர்.

இந்நிலையில், சிறுமியை வன்புணர்வு செய்ததாக ராகுல் (வயது 21), பிரகாஷ் (22), கார்த்திகேயன் (28), நாராயணமூர்த்தி (30) ஆகியோரை வெள்ளிக்கிழமை கைது செய்தனர். இவர்கள் மீது போக்சோ சட்டம் மற்றும் பாலியல் பலாத்காரம், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பின்னர், கைது செய்யபட்டவர்களை மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனா்.

கோவையில் சிறுமியை கூட்டு வன்புணர்வுபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

'பூங்காவில் இருந்த சிறுமியையும், அவருடைய நண்பரையும் அங்கிருந்த நபர்கள் மிரட்டி உள்ளனர். பின்னர் அவர்கள், சிறுமியின் நண்பரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே மயங்கிவிட்டார்.

சிறுமியையும் தாக்கி, அவர் சத்தம்போடாமல் இருக்க வாயை பொத்தியதோடு, இருவரையும் கொலைசெய்துவிடுவதாக மிரட்டியுள்ளனர். இதையடுத்து அந்த கும்பல், சிறுமியை பூங்காவின் மறைவான பகுதிக்கு தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அதை செல்போனில் படம் பிடித்து, சமூகவலைத்தளங்களில் பரப்பிவிடுவோம் என மிரட்டி, அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர்', என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

சிறுமியை அழைத்துச் சென்ற நபர் தான், குற்றம்சாட்டப்பட்ட 6 பேரோடு கூட்டு சேர்ந்து வன்புணர்வு செய்தார், எனவும் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து காவல்துறை இதுவரை முறையான தகவல்கள் எதுவும் வெளியிடவில்லை.

இந்நிலையில், சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் பிரதானமாக குற்றம்சாட்டப்பட்ட மணிகண்டன், கோவை மகளிர் நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தார்.

மற்றொரு முக்கியசந்தேக நபரான கார்த்திக் இன்னும் தலைமறைவாகவே உள்ளார். அவரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

https://www.bbc.com/tamil/india-50643374

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் தாயக பூமி என்பது சொறீலங்காவை அல்ல.. தமிழீழத்தை. என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உங்கள் மகிழ்ச்சி நிலைக்க வேண்டும். 
    • Copy Cat அனிருத் க்கு ஒரு keyboard ம் ஒரு  laptop ம் வாய்த்ததுபோல தங்களைத் தாங்களே சிரித்திரன் சுந்தருக்கு ஈடாக கற்பனை செய்துகொள்ளும்  சிலருக்கு laptop  கிடைத்திருக்கிறது.  உயர உயரப் பறந்தாலும்  ஊர்க் குருவி பருந்தாகாது.   
    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.