Jump to content

ஈழப் பிரச்சனை குறித்து சீமான் தேவையில்லாமல் பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்-நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஈழப் பிரச்சனை குறித்து சீமான் தேவையில்லாமல் பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்-நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன்

தமிழ்நாட்டில் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக சில அரசியல் தலைவர்கள் தெரிவிக்கும் கருத்து இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.சென்னையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்,

அவர் மேலும் தெரிவிக்கையில் அவர், சீமான் போன்றவர்கள் யுத்தம் நிறைவடைந்த பின், பிரச்சினைகள் தீர்ந்த பின் ஈழப்பிரச்சினை குறித்து பேசுவது வேடிக்கையானது.அத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பை விமர்சிக்க, திருமுருகன் காந்திக்கு என்ன அருகதை உள்ளது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் விடுதலைப் புலிகள் தாங்கள் செய்கின்ற செயலை ஒப்புக் கொள்ளும் கொள்கை உடையவர்கள் எனத் தெரிவித்த அவர், ராஜீவ்காந்தியை கொலை செய்ததாக ஒருபோதும் ஒப்புக் கொள்ளவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் குறித்தும், ஈழப் பிரச்சனை குறித்தும் சீமான் தேவையில்லாமல் பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.(15)
 

http://www.samakalam.com/செய்திகள்/ஈழப்-பிரச்சனை-குறித்து-ச/

Link to comment
Share on other sites

  • Replies 67
  • Created
  • Last Reply

எவ்வகையான பிரச்னைகள் வருகிறதாம் ?  தமிழ்நாட்டில் ஈழம் என ஓன்று இருப்பதையும் அங்கே தமிழர்கள் வாழ்வதையும்,  அவர்களுக்கு பிரச்சனை இருப்பதையும் நாளாந்தம் நினைவுபடுத்திக்கொண்டு இருப்பதே சீமான் போன்ற ஓரிருவரால்தான்.  

தமிழ்நாட்டில் பேசாவிட்டால் இவர்கள் இங்கே பிரச்சனையை தீர்த்துவிடுவார்களாக்கும் 🤔🤔🤔🤔🤔

Link to comment
Share on other sites

பயிற்சி எடுக்க , ஊர்வலம் நடாத்த , உண்ணாவிரதம் இருந்து சாக தமிழ் நாடு வேண்டும். குரல்  கொடுக்க மட்டும் தமிழ் நாடு வேண்டாம். 
அது சரி கிழக்கில்  நீங்கள் கிழித்தவைகளை பட்டியல் இடுங்கள் பார்க்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் ஈழத்தின் தணலை தக்க வைக்க யாரும் பேசலாம், ஆனால் பொய்கள், புனைவுகள் கூடாது. அவைகள் விசிலடிச்சான் குஞ்சுகளைத் தவிர பொதுமக்களிடம் எடுபடாது.

எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, ராசவன்னியன் said:

தமிழகத்தில் ஈழத்தின் தணலை தக்க வைக்க யாரும் பேசலாம், ஆனால் பொய்கள், புனைவுகள் கூடாது. அவைகள் விசிலடிச்சான் குஞ்சுகளைத் தவிர பொதுமக்களிடம் எடுபடாது.

எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும்.

அண்ண‌ன் பேசும் போது ம‌க்க‌ள் ம‌கிழ்சியில் விசில் அடிச்சா த‌வ‌றா , யாரும் விசில் அடிக்க‌ நேர‌ம் ஒதுக்கி பேச‌ முன் வ‌ர‌ மாட்டின‌ம் இந்த‌ கால‌த்தில் , 
கொள்கை இல்லா ம‌னித‌ர்க‌ள் ம‌த்தியில் கொள்கையோடு ப‌ய‌ணிக்கும் ம‌னித‌ர் எவ‌ள‌வோ மேல் ,

ஆர‌ம்ப‌ம் தொட்டே அண்ண‌ன் சீமான் அப்ப‌டி தான் பேசி வ‌ருகிறார் , அண்ண‌ன் சீமான் பேசுவ‌தில் என்ன‌ பொய்யை க‌ண்டீங்க‌ள் , நாம் த‌மிழ‌ர் க‌ட்சிக்கு ஓட்டு போட்ட‌ 17ல‌ச்ச‌ ம‌க்க‌ள் புரித‌ல் இல்லாம‌ள் ஓட்டு போட்டின‌மா , 

 

48 minutes ago, ராசவன்னியன் said:

தமிழகத்தில் ஈழத்தின் தணலை தக்க வைக்க யாரும் பேசலாம், ஆனால் பொய்கள், புனைவுகள் கூடாது. அவைகள் விசிலடிச்சான் குஞ்சுகளைத் தவிர பொதுமக்களிடம் எடுபடாது.

எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும்.

திராவிட‌ம் எவ‌ள‌வு பொய்யை சொல்லி இருக்கும் , அவ‌ர்க‌ளுக்கு ம‌க்க‌ள் தொட‌ர்ந்து ஓட்டு போடின‌ம் தானே , அப்ப‌ ஏன் அவ‌ர்க‌ளை ம‌க்க‌ள் புற‌க்க‌னிக்க‌ல‌ இன்னும் ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராசவன்னியன் இனி பதில் சொல்லிப் பாருங்கோ..😁

Link to comment
Share on other sites

1 hour ago, ராசவன்னியன் said:

தமிழகத்தில் ஈழத்தின் தணலை தக்க வைக்க யாரும் பேசலாம், ஆனால் பொய்கள், புனைவுகள் கூடாது. அவைகள் விசிலடிச்சான் குஞ்சுகளைத் தவிர பொதுமக்களிடம் எடுபடாது.

எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும்.

உண்மைதான் ராசவன்னியன், 

ஆனால்,  அங்கே எங்கள் உண்மை நிலை தெரிந்த,  நிதானமாக கதைக்கக்கூடிய  யார் இருக்கிறார்கள்  ?? 

நாங்கள் இருப்பதையாவது தக்கவைக்க வேண்டிய நிலைமையில் உள்ளோம். 

சீமான் குரல் கொடுப்பதை வைத்து ஆறுதல் அடையவேண்டிய நிலையில் நாங்கள் உள்ளோம். 

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

 

அவர் மேலும் தெரிவிக்கையில் அவர், சீமான் போன்றவர்கள் யுத்தம் நிறைவடைந்த பின், பிரச்சினைகள் தீர்ந்த பின் ஈழப்பிரச்சினை குறித்து பேசுவது வேடிக்கையானது.அத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பை விமர்சிக்க, திருமுருகன் காந்திக்கு என்ன அருகதை உள்ளது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.


 

http://www.samakalam.com/செய்திகள்/ஈழப்-பிரச்சனை-குறித்து-ச/

யோகேஸ்வரன் அவர்கள் தனது பிள்ளைகளில் யாருக்கோ அங்குள்ள பல்கலைக்கழகத்திலோ அன்றேல் வேறெங்காவதோ இடம்பிடிக்க இப்படியானவற்றை வாந்தி எடுக்கிறார். 

சீமான் ஈழம்பற்றிப்பேசுவதில் ஒரு சில விடையங்கள் ஏற்புடையதல்ல காரணம் இப்போது வடக்குக்கிழக்கிலும் புலம்பெயர்தேசங்களிலும் வாழும் மக்கள் தமது உரிமைகளை வென்றெடுப்பது தொடர்பிலான செயல்பாடுகளை கூட்டமைப்புச் சம்சும், விக்கியர், இந்திய நடுவண் அமைப்பு இவைபோன்றவற்றுக்கு ஒப்பந்த அடிப்படையில் பொறுப்புக்கொடுத்துவிட்டார்கள்.

ஏனையோர் மாவீரர் தினத்துக்கு தேசியத் தலைவர் படம்பொறித்த கைத்தொலைபேசி உறை, எல் ஈ டி விளக்குப்பொறித்த தேசியத்தலைவரது படங்கள் கலண்டர்கள் என  தமிழீழப்போராட்டத்தை கோயில் கால மணிக்கடை ஆக்கிவிட்டார்கள்.
தமிழ்நாட்டுக்கு தற்போதைய தேவை சீமான்போன்ற அரசியல்வாதிகளே ஆனால் சீமான் வந்து போராடி ஈழம்பெற்றுத்தருவார் என மேற்கூறிய சோம்பேறிக்கூட்டம் யோசிக்கக்கூடாது.

தண்ணிர் விலைக்கு வந்துவிட்டது அடுத்து சுவாசிக்கும் காற்றும் விலைக்குவரும் எனக்கூறியது சீமானே இப்போது அதுவும் விலைக்கு வந்துவிட்டது இந்தியாவில் ஆகவே எல்லா உயிர்களுக்குமான அரசியலை முன்னெடுக்கிறேன் எனக்கூறும் சீமானை ஒதுக்கிவிட்டு எதிர்கால தமிழ்நாட்டு அரசியல் இருக்காது என்பதே எனது கருத்து.

அண்மையில் வலிகாமத்தின் ஒரு பிரதேசசபைத் தவிசாளரது மகன் கூறினார் சிறீலங்கா அதிபர் தேர்தலில் செல்வம் அடைக்கலநாதனும் கஜேந்திரகுமாரும் மகிந்தவிடம் காசுவாங்கிவிட்டார்கள் என ஆனால் தேர்தலின் பின்பு கூட்டமைப்பே கோடிக்கணக்கில் காசு பார்த்துவிட்டது என்பதே உண்மை,

சிங்களவன் தனது நாட்டுக்கான சிங்களத்து ராஜாவைத் தெரிவுசெய்கிறான் அதற்கு ஒப்புக்குச் சப்பாணியாக தமிழர்களிடமும் வாக்குக்கேதிறான் ஆனால் தமிழர்கள் நாம் ஒற்றுமையாக ஒரு பொது வேட்பாளரை முன்னிறுத்தி எமக்கான கோரிக்கைகளை முன்வைத்து கடந்துபோன சிறீலங்காவின் அதிபர் தேர்தலை எமக்கான கருத்துகளை முன்வைக்கும் தேர்தலாக மாற்றியிருந்தால் நாம் அரசியலை இராஜதந்திர ரீதியாகச் சிந்த்தித்து செயல்படுத்துகிறோம் என அனைவரும் அற்ந்திருப்பர் எம்மையும் ஒரு பொருட்டாக மத்தித்திருப்பர் ஆனால் நாம் காசுக்கு கக்கூஸ் கட்டுவதற்கும் அடிமைப்பட்டால் விக்கியர் சுமந்திரன் மவை சம்பந்தர் போன்றோர் இன்னமும் எங்கள் தலையில் மிளகாய் அரைப்பார்கள்.

என்னைப்பொறுத்தவரையில் புலம்பெயர் தேசங்களில் வாழும் நாம் இனிமேல் ஈழம் உரிமை அது இது எனக் கத்துவதை விட்டுவிட்டு பிள்ளைகளைப் படிக்கவைக்கலாம்.

இன்றும் நான் யாழ்ப்பாணத்துக்கு தொலைபேசியில் கதைக்கும்போது இங்குள்ள பிரச்சனை உங்களுக்குத் தெரியாது நீங்கள் உங்கட அலுவலைப்பர்த்துக்கொண்டு சும்மா இருங்கோ எனக்கூறுகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

இப்ப‌டி சொல்ல‌ த‌மிழ் நாட்டில் யாருக்கு துனிவு இருக்கு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ராசவன்னியன் said:

தமிழகத்தில் ஈழத்தின் தணலை தக்க வைக்க யாரும் பேசலாம், ஆனால் பொய்கள், புனைவுகள் கூடாது. அவைகள் விசிலடிச்சான் குஞ்சுகளைத் தவிர பொதுமக்களிடம் எடுபடாது.

எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும்.

#தலைவர்_பிரபாகரனின் அழைப்பில் அண்ணன் சீமான் #ஈழத்தில் தங்கியிருந்தபோது நடந்தவற்றை சொல்லும் போது சிலர் அவற்றை நம்ப மறுத்து கிண்டலடிக்கிறார்கள்....
அது சம்பந்தமாக எனது கருத்துகளை இங்கே பகிர்கிறேன்....

(1). #ஈழத்தில்_விருந்தோம்பல் (hospitality) சிறப்பானது... சாதாரண தினங்களிலேயே சோறுடன் குறைந்தது 3 கறிகளாவது (மரக்கறிகள் உட்பட) இருக்கும்... விருந்தினர் வரும்போதோ அல்லது விரத முடிவு நாட்களிலோ குறைந்தது 6 / 7 கறிகள் இருக்கும்...
இது ஈழத்தில் வசித்த அல்லது ஈழத்தமிழர்களுடன் பழகிய அனைவருக்கும் தெரிந்த ஒன்று....

(2). #புலிகளின்_விருந்தோம்பல் இன்னும் சிறப்பானது... விருந்தாளியாக வருபவர்களை சிறப்பாக உணவு கொடுத்து உபசரிப்பது அவர்களது வழமை.... இதை நோர்வே நாட்டு சமாதான தூதுவர் எரிஹ் சொல்ஹெய்ம் அவர் எழுதிய புத்தகத்திலேயே கூறி இருக்கிறார்...

(3). இலங்கையில் #ஆமை_இறைச்சி உண்பது தடைசெய்யப்பட்ட போதிலும், புலிகளின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆமை இறைச்சி விற்பனை இருந்தது....

(4). புலிகள் வன்னிக் காடுகளில் இருந்த முகாம்களில் இருந்து #வேட்டைக்கு போவது உண்மை.... மரை, உடும்பு, முயல் இறைச்சிகள் சாதாரணமாகவும் காட்டுப் பன்றி அரிதாகவும் கிடைக்கும்... காட்டுக்கு வேட்டைக்கு போவதில் பயிற்சி பெறும் புலிகளிடத்தில் மறைமுகமாக போட்டியே நடப்பது இயக்க முகாம்களில் பயிற்சி பெற்றவர்களுக்கு தெரியும்....

(5). தலைவர் பிரபாகரன் ஒரு #சாப்பாட்டுப்_பிரியர்... தன்னிடம் வருபவர்களை விதவிதமான சாப்பாடுகள் கொடுத்து அன்பால் திணறடிப்பார்... சாப்பாடு கொடுத்துவிட்டு, அது எப்படி இருந்தது..?? என்று விருந்தாளிகளிடம் நிச்சயம் கேட்டு அறிந்துகொள்வார்... போதும் என்றாலும் இன்னும் கொஞ்சம் சாப்பிட சொல்வார்... சாப்பிடும்போது, யாருடைய தட்டில் என்ன கறி தீர்ந்து போகிறது என்பதை அவதானித்து வைத்து அந்த கறியை போடச் சொல்லி பரிமாறும் நபரிடம் சொல்வார்...

(6). அத்தோடு, தலைவர் நன்றாக #சமைக்க_கூடியவரும் கூட... அவரது முகாமில், தலைவர் சமைக்கும் நாளுக்காக ஏனைய போராளிகள் காத்திருப்பதை அவர்கள் சொல்லிக் கேள்விப்பட்டு இருக்கிறேன்...

(7). ஒருவர் சந்திப்புக்கு வரும்போதே அவரது உணவுப் பழக்க வழக்கங்கள் பற்றி ஆராயப்பட்டு, அதற்கு ஏற்ற மாதிரி உணவு தயார் செய்யப்பபடும்.... உதாரணமாக, இலங்கை முஸ்லிம் அமைச்சர் ஹக்கீம் பேச்சுவார்த்தைக்கு வன்னிக்கு வந்தபோது அவருக்கு #ஹலால்_இறைச்சி வழங்கப்பட்ட போதும் ‘வன்னியில் ஹலால் முறை இறைச்சி இல்லை’ என்று அவர் சாப்பிட மறுத்தார்...
ஆனால், அதை ஹலால் முறைப்படி செய்த முஸ்லிம் போராளி ஒருவரின் தாய் அங்கு வரவழைக்கப்பட்டு அவர் தானே ஹலால் முறைப்படி செய்ய உணவு என்று சொன்ன பிறகு அமைச்சர் ஹக்கீமே வியந்து, நன்றி கூறி, பிறகு சாப்பிட்டார்.....

(8). போராளிகள் சாப்பிடும் நேரங்களில் தலைவர் முகாம்களுக்கு வந்தால் மரியாதைக்காக எழுந்து நிற்பார்கள்... ஆனால், தலைவர் உட்கார்ந்தே சாப்பிட சொல்வார்.... பொறுப்பாளர் சாப்பிடுகிறார் அல்லது தூங்குகிறார் என்றால் #தலைவர்_காத்திருந்து_சந்தித்துவிட்டு_செல்வார்....

(9). தன்னிடம் விருந்தாளியாக வருபவரின் பாதுகாப்பில் தலைவர் அதீத கவனம் எடுப்பார்... ஈழத்திற்கு சென்ற #வைகோ இற்கு அவர் ஈழத்தை விட்டு இந்தியா திரும்பும் போது அப்போதைய சூழலில் இயன்ற அளவு அதிக பாதுகாப்பை கொடுத்ததோடு மட்டுமல்லாது தலைவரது கழுத்தில் இருந்த இரண்டு சயனட் குப்பிகளில் ஒன்றை தனக்கு கொடுத்ததாக வைகோ சொல்லி இருக்கிறார்......

இரண்டு பொதுக் கூட்டங்களில் 3 மணித்தியாலம் பேசிய அண்ணன் சீமானின் பேச்சுகளில், 3 நிமிடங்கள் வரும் - புலிகளின் விருந்தோம்பலையும் வேட்டைக்கு போகும் முறையையும் மட்டும் எடுத்து கிண்டல் செய்வீர்கள் என்றால்.... உங்களின் நோக்கம் எங்களுக்கு புரியாமல் இல்லை....

#கதறல்களை_கொஞ்சம்_சேமியுங்கள்....
நாங்கள் வளர வளர, தமிழராய் இணைய இணைய நீங்கள் இன்னும் அதிகமாக கதற வேண்டி இருக்கும்...!!!!!

நன்றி Thobiyas Segaram

https://www.facebook.com/TSBVICTOR?__tn__=%2CdC-R-R&eid=ARA6zb-2Oq1sld_7YgDbzxiC_bi_0cct4_LeW3sJuVyQsVEi0I1bYDoFn-4mvVF9-DXyjPJiRIv00r9T&hc_ref=ARSS_lo6CrJAFP4b0WzpIpL-sKmwWwPBNa4KMRulv5rkrHeNPm5KUIWWqzPiGs3wZ5g&fref=nf

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, பெருமாள் said:

#தலைவர்_பிரபாகரனின் அழைப்பில் அண்ணன் சீமான் #ஈழத்தில் தங்கியிருந்தபோது நடந்தவற்றை சொல்லும் போது சிலர் அவற்றை நம்ப மறுத்து கிண்டலடிக்கிறார்கள்....
அது சம்பந்தமாக எனது கருத்துகளை இங்கே பகிர்கிறேன்....

(1). #ஈழத்தில்_விருந்தோம்பல் (hospitality) சிறப்பானது... சாதாரண தினங்களிலேயே சோறுடன் குறைந்தது 3 கறிகளாவது (மரக்கறிகள் உட்பட) இருக்கும்... விருந்தினர் வரும்போதோ அல்லது விரத முடிவு நாட்களிலோ குறைந்தது 6 / 7 கறிகள் இருக்கும்...
இது ஈழத்தில் வசித்த அல்லது ஈழத்தமிழர்களுடன் பழகிய அனைவருக்கும் தெரிந்த ஒன்று....

(2). #புலிகளின்_விருந்தோம்பல் இன்னும் சிறப்பானது... விருந்தாளியாக வருபவர்களை சிறப்பாக உணவு கொடுத்து உபசரிப்பது அவர்களது வழமை.... இதை நோர்வே நாட்டு சமாதான தூதுவர் எரிஹ் சொல்ஹெய்ம் அவர் எழுதிய புத்தகத்திலேயே கூறி இருக்கிறார்...

(3). இலங்கையில் #ஆமை_இறைச்சி உண்பது தடைசெய்யப்பட்ட போதிலும், புலிகளின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆமை இறைச்சி விற்பனை இருந்தது....

(4). புலிகள் வன்னிக் காடுகளில் இருந்த முகாம்களில் இருந்து #வேட்டைக்கு போவது உண்மை.... மரை, உடும்பு, முயல் இறைச்சிகள் சாதாரணமாகவும் காட்டுப் பன்றி அரிதாகவும் கிடைக்கும்... காட்டுக்கு வேட்டைக்கு போவதில் பயிற்சி பெறும் புலிகளிடத்தில் மறைமுகமாக போட்டியே நடப்பது இயக்க முகாம்களில் பயிற்சி பெற்றவர்களுக்கு தெரியும்....

(5). தலைவர் பிரபாகரன் ஒரு #சாப்பாட்டுப்_பிரியர்... தன்னிடம் வருபவர்களை விதவிதமான சாப்பாடுகள் கொடுத்து அன்பால் திணறடிப்பார்... சாப்பாடு கொடுத்துவிட்டு, அது எப்படி இருந்தது..?? என்று விருந்தாளிகளிடம் நிச்சயம் கேட்டு அறிந்துகொள்வார்... போதும் என்றாலும் இன்னும் கொஞ்சம் சாப்பிட சொல்வார்... சாப்பிடும்போது, யாருடைய தட்டில் என்ன கறி தீர்ந்து போகிறது என்பதை அவதானித்து வைத்து அந்த கறியை போடச் சொல்லி பரிமாறும் நபரிடம் சொல்வார்...

(6). அத்தோடு, தலைவர் நன்றாக #சமைக்க_கூடியவரும் கூட... அவரது முகாமில், தலைவர் சமைக்கும் நாளுக்காக ஏனைய போராளிகள் காத்திருப்பதை அவர்கள் சொல்லிக் கேள்விப்பட்டு இருக்கிறேன்...

(7). ஒருவர் சந்திப்புக்கு வரும்போதே அவரது உணவுப் பழக்க வழக்கங்கள் பற்றி ஆராயப்பட்டு, அதற்கு ஏற்ற மாதிரி உணவு தயார் செய்யப்பபடும்.... உதாரணமாக, இலங்கை முஸ்லிம் அமைச்சர் ஹக்கீம் பேச்சுவார்த்தைக்கு வன்னிக்கு வந்தபோது அவருக்கு #ஹலால்_இறைச்சி வழங்கப்பட்ட போதும் ‘வன்னியில் ஹலால் முறை இறைச்சி இல்லை’ என்று அவர் சாப்பிட மறுத்தார்...
ஆனால், அதை ஹலால் முறைப்படி செய்த முஸ்லிம் போராளி ஒருவரின் தாய் அங்கு வரவழைக்கப்பட்டு அவர் தானே ஹலால் முறைப்படி செய்ய உணவு என்று சொன்ன பிறகு அமைச்சர் ஹக்கீமே வியந்து, நன்றி கூறி, பிறகு சாப்பிட்டார்.....

(8). போராளிகள் சாப்பிடும் நேரங்களில் தலைவர் முகாம்களுக்கு வந்தால் மரியாதைக்காக எழுந்து நிற்பார்கள்... ஆனால், தலைவர் உட்கார்ந்தே சாப்பிட சொல்வார்.... பொறுப்பாளர் சாப்பிடுகிறார் அல்லது தூங்குகிறார் என்றால் #தலைவர்_காத்திருந்து_சந்தித்துவிட்டு_செல்வார்....

(9). தன்னிடம் விருந்தாளியாக வருபவரின் பாதுகாப்பில் தலைவர் அதீத கவனம் எடுப்பார்... ஈழத்திற்கு சென்ற #வைகோ இற்கு அவர் ஈழத்தை விட்டு இந்தியா திரும்பும் போது அப்போதைய சூழலில் இயன்ற அளவு அதிக பாதுகாப்பை கொடுத்ததோடு மட்டுமல்லாது தலைவரது கழுத்தில் இருந்த இரண்டு சயனட் குப்பிகளில் ஒன்றை தனக்கு கொடுத்ததாக வைகோ சொல்லி இருக்கிறார்......

இரண்டு பொதுக் கூட்டங்களில் 3 மணித்தியாலம் பேசிய அண்ணன் சீமானின் பேச்சுகளில், 3 நிமிடங்கள் வரும் - புலிகளின் விருந்தோம்பலையும் வேட்டைக்கு போகும் முறையையும் மட்டும் எடுத்து கிண்டல் செய்வீர்கள் என்றால்.... உங்களின் நோக்கம் எங்களுக்கு புரியாமல் இல்லை....

#கதறல்களை_கொஞ்சம்_சேமியுங்கள்....
நாங்கள் வளர வளர, தமிழராய் இணைய இணைய நீங்கள் இன்னும் அதிகமாக கதற வேண்டி இருக்கும்...!!!!!

நன்றி Thobiyas Segaram

https://www.facebook.com/TSBVICTOR?__tn__=%2CdC-R-R&eid=ARA6zb-2Oq1sld_7YgDbzxiC_bi_0cct4_LeW3sJuVyQsVEi0I1bYDoFn-4mvVF9-DXyjPJiRIv00r9T&hc_ref=ARSS_lo6CrJAFP4b0WzpIpL-sKmwWwPBNa4KMRulv5rkrHeNPm5KUIWWqzPiGs3wZ5g&fref=nf

 

பெருமாள் அண்ணா , யாழில் அண்ண‌ன் சீமானை கிண்ட‌ல் செய்ப‌வ‌ர்க‌ள் , புரித‌ல் இல்லா ம‌னித‌ர்க‌ள் , இல‌வ‌ச‌ அறிவுரை சொல்லுவ‌தோடு நிக்காம‌ குறைக‌ளையும் சொல்லின‌ம் , த‌ங்க‌ளின் க‌ண்ணால் எல்லாத்தையும் பார்த‌து போல் ,

ஒரு திரியில் வைக்கோ திருமுருக‌ன் காந்தி கூட‌ சீமான் ஒன்னா ப‌ய‌ணிக்க‌ வேனுமாம் , இன்னொரு திரியில் சீமான் பேசுவ‌து பொய்யாம் , விசில் அடி வேண்ட‌ தான் சீமான் பேசுகிறார் என்று வெக்க‌ம் எல்லாம‌ எழுதுகிறார் , அண்ண‌ன் சீமான் பேசின‌ ஆயிர‌ம் ந‌ல்ல‌ விடைய‌ங்க‌ள் இருக்கே  அதில் ஒன்றை இர‌ண்டை த‌ன்னும் இவ‌ர்க‌ள் நேர‌ம் ஒதுக்கி கேட்டு இருப்பினாமா என்றால் இல்ல‌வே இல்லை , 

குறை சொல்லி சொல்லியே கால‌த்தை ஓட்ட‌ ஒரு கூட்ட‌ம் இருக்குது , 

மேல‌ விள‌க்க‌மா எழுதி ப‌தில‌ கேட்டு இருந்தேன் , அதுக்கு ப‌தில் அளிக்காம‌ திரியை திசை திருப்புவ‌து , 

வைக்கோ , திருமாள‌வ‌ன்   , திருமுருக‌ன் காந்தி ராம‌தாஸ் , இவ‌ர்க‌ள் கூட‌ ஒன்னா ப‌ய‌ணிக்க‌ட்டாம் அண்ண‌ன் சீமானை , 

எம் இன‌த்தை அழித்த‌ க‌ய‌வ‌ர்க‌ளுட‌ன் வைக்கோ போய் நிக்குது , அந்த‌ இட‌த்தில் வைக்கோவோடு அண்ண‌ன் சீமான் நிக்க‌ முடியுமா 😁 /

Link to comment
Share on other sites

Image may contain: 1 person
Image may contain: 2 people, people smiling
 
 

தலைவர் பிரபாகரனின் அழைப்பில் அண்ணன் சீமான் ஈழத்தில் தங்கியிருந்தபோது நடந்தவற்றை சொல்லும் போது சிலர் அவற்றை நம்ப மறுத்து கிண்டலடிக்கிறார்கள்....
அது சம்பந்தமாக எனது கருத்துகளை இங்கே பகிர்கிறேன்....

1. ஈழத்தில் விருந்தோம்பல் (hospitality) சிறப்பானது... சாதாரண தினங்களிலேயே சோறுடன் குறைந்தது 3 கறிகளாவது (மரக்கறிகள் உட்பட) இருக்கும்... விருந்தினர் வரும்போதோ அல்லது விரத முடிவு நாட்களிலோ குறைந்தது 6 / 7 கறிகள் இருக்கும்...
இது ஈழத்தில் வசித்த அல்லது ஈழத்தமிழர்களுடன் பழகிய அனைவருக்கும் தெரிந்த ஒன்று....

2. புலிகளின் விருந்தோம்பல் இன்னும் சிறப்பானது... விருந்தாளியாக வருபவர்களை சிறப்பாக உணவு கொடுத்து உபசரிப்பது அவர்களது வழமை.... இதை நோர்வே நாட்டு சமாதான தூதுவர் எரிஹ் சொல்ஹெய்ம் அவர் எழுதிய புத்தகத்திலேயே கூறி இருக்கிறார்...

3. இலங்கையில் ஆமை இறைச்சி உண்பது தடைசெய்யப்பட்ட போதிலும், புலிகளின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆமை இறைச்சி விற்பனை இருந்தது....

4. புலிகள் வன்னிக் காடுகளில் இருந்த முகாம்களில் இருந்து வேட்டைக்கு போவது உண்மை.... மரை, உடும்பு, முயல் இறைச்சிகள் சாதாரணமாகவும் காட்டுப் பன்றி அரிதாகவும் கிடைக்கும்... காட்டுக்கு வேட்டைக்கு போவதில் பயிற்சி பெறும் புலிகளிடத்தில் மறைமுகமாக போட்டியே நடப்பது இயக்க முகாம்களில் பயிற்சி பெற்றவர்களுக்கு தெரியும்....

5. தலைவர் பிரபாகரன் ஒரு சாப்பாட்டுப் பிரியர்... தன்னிடம் வருபவர்களை விதவிதமான சாப்பாடுகள் கொடுத்து அன்பால் திணறடிப்பார்... சாப்பாடு கொடுத்துவிட்டு, அது எப்படி இருந்தது..?? என்று விருந்தாளிகளிடம் நிச்சயம் கேட்டு அறிந்துகொள்வார்... போதும் என்றாலும் இன்னும் கொஞ்சம் சாப்பிட சொல்வார்... சாப்பிடும்போது, யாருடைய தட்டில் என்ன கறி தீர்ந்து போகிறது என்பதை அவதானித்து வைத்து அந்த கறியை போடச் சொல்லி பரிமாறும் நபரிடம் சொல்வார்...

6. அத்தோடு, தலைவர் நன்றாக சமைக்க கூடியவரும் கூட... அவரது முகாமில், தலைவர் சமைக்கும் நாளுக்காக ஏனைய போராளிகள் காத்திருப்பதை அவர்கள் சொல்லிக் கேள்விப்பட்டு இருக்கிறேன்...

7. ஒருவர் சந்திப்புக்கு வரும்போதே அவரது உணவுப் பழக்க வழக்கங்கள் பற்றி ஆராயப்பட்டு, அதற்கு ஏற்ற மாதிரி உணவு தயார் செய்யப்பபடும்.... உதாரணமாக, இலங்கை முஸ்லிம் அமைச்சர் ஹக்கீம் பேச்சுவார்த்தைக்கு வன்னிக்கு வந்தபோது அவருக்கு ஹலால் இறைச்சி வழங்கப்பட்ட போதும் ‘வன்னியில் ஹலால் முறை இறைச்சி இல்லை’ என்று அவர் சாப்பிட மறுத்தார்...
ஆனால், அதை ஹலால் முறைப்படி செய்த முஸ்லிம் போராளி ஒருவரின் தாய் அங்கு வரவழைக்கப்பட்டு அவர் தானே ஹலால் முறைப்படி செய்ய உணவு என்று சொன்ன பிறகு அமைச்சர் ஹக்கீமே வியந்து, நன்றி கூறி, பிறகு சாப்பிட்டார்.....

8. போராளிகள் சாப்பிடும் நேரங்களில் தலைவர் முகாம்களுக்கு வந்தால் மரியாதைக்காக எழுந்து நிற்பார்கள்... ஆனால், தலைவர் உட்கார்ந்தே சாப்பிட சொல்வார்.... பொறுப்பாளர் சாப்பிடுகிறார் அல்லது தூங்குகிறார் என்றால் தலைவர் காத்திருந்து சந்தித்து விட்டு செல்வார்....

9. தன்னிடம் விருந்தாளியாக வருபவரின் பாதுகாப்பில் தலைவர் அதீத கவனம் எடுப்பார்... ஈழத்திற்கு சென்ற வைகோ இற்கு அவர் ஈழத்தை விட்டு இந்தியா திரும்பும் போது அப்போதைய சூழலில் இயன்ற அளவு அதிக பாதுகாப்பை கொடுத்ததோடு மட்டுமல்லாது தலைவரது கழுத்தில் இருந்த இரண்டு சயனட் குப்பிகளில் ஒன்றை தனக்கு கொடுத்ததாக வைகோ சொல்லி இருக்கிறார்......

இரண்டு பொதுக் கூட்டங்களில் 3 மணித்தியாலம் பேசிய அண்ணன் சீமானின் பேச்சுகளில், 3 நிமிடங்கள் வரும் - புலிகளின் விருந்தோம்பலையும் வேட்டைக்கு போகும் முறையையும் மட்டும் எடுத்து கிண்டல் செய்வீர்கள் என்றால்.... உங்களின் நோக்கம் எங்களுக்கு புரியாமல் இல்லை....

கதறல்களை கொஞ்சம் சேமியுங்கள்....
நாங்கள் வளர வளர, தமிழராய் இணைய இணைய நீங்கள் இன்னும் அதிகமாக கதற வேண்டி இருக்கும்...!!!!!
😋😋👍👍😀😀

 
 
 
Link to comment
Share on other sites

12 hours ago, கிருபன் said:

ஈழப் பிரச்சனை குறித்து சீமான் தேவையில்லாமல் பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்-நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன்

யோகேஸ்வரனுக்கு அறளை பேர்ந்து போச்சு!

பிஜேபி, ஆர்.எஸ்.எஸ். ஓட கூட்டுவைச்சு கொண்டிருக்கும் யோகேஸ்வரன் அவர்கள் வழங்கிய போதையில் உளறி இருக்கிறார். 

சீமானின் கருத்துக்களில் சில தேவையாற்ற அல்லது அளவுக்கு மீறிய விடயங்கள் இருப்பினும் அவரளவுக்கு விஷயங்களை, உண்மைகளை சிறப்பாக முன்வைக்கும் ஒருவர் தமிழகத்தில் இப்போது இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பையன்26 said:

பெருமாள் அண்ணா , யாழில் அண்ண‌ன் சீமானை கிண்ட‌ல் செய்ப‌வ‌ர்க‌ள் , புரித‌ல் இல்லா ம‌னித‌ர்க‌ள் , இல‌வ‌ச‌ அறிவுரை சொல்லுவ‌தோடு நிக்காம‌ குறைக‌ளையும் சொல்லின‌ம் , த‌ங்க‌ளின் க‌ண்ணால் எல்லாத்தையும் பார்த‌து போல் ,

ஒரு திரியில் வைக்கோ திருமுருக‌ன் காந்தி கூட‌ சீமான் ஒன்னா ப‌ய‌ணிக்க‌ வேனுமாம் , இன்னொரு திரியில் சீமான் பேசுவ‌து பொய்யாம் , விசில் அடி வேண்ட‌ தான் சீமான் பேசுகிறார் என்று வெக்க‌ம் எல்லாம‌ எழுதுகிறார் , அண்ண‌ன் சீமான் பேசின‌ ஆயிர‌ம் ந‌ல்ல‌ விடைய‌ங்க‌ள் இருக்கே  அதில் ஒன்றை இர‌ண்டை த‌ன்னும் இவ‌ர்க‌ள் நேர‌ம் ஒதுக்கி கேட்டு இருப்பினாமா என்றால் இல்ல‌வே இல்லை , 

குறை சொல்லி சொல்லியே கால‌த்தை ஓட்ட‌ ஒரு கூட்ட‌ம் இருக்குது , 

மேல‌ விள‌க்க‌மா எழுதி ப‌தில‌ கேட்டு இருந்தேன் , அதுக்கு ப‌தில் அளிக்காம‌ திரியை திசை திருப்புவ‌து , 

வைக்கோ , திருமாள‌வ‌ன்   , திருமுருக‌ன் காந்தி ராம‌தாஸ் , இவ‌ர்க‌ள் கூட‌ ஒன்னா ப‌ய‌ணிக்க‌ட்டாம் அண்ண‌ன் சீமானை , 

எம் இன‌த்தை அழித்த‌ க‌ய‌வ‌ர்க‌ளுட‌ன் வைக்கோ போய் நிக்குது , அந்த‌ இட‌த்தில் வைக்கோவோடு அண்ண‌ன் சீமான் நிக்க‌ முடியுமா 😁 /

vil-sourcils.gif  தம்புடு, தங்களின் புரிதலுக்கு மிக்க நன்றி.

Link to comment
Share on other sites

சிங்களவர்களை பொறுத்தவரையில் அவர்கள் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் இப்படியான பேச்சுக்களை கணக்கில் எடுப்பதே இல்லை. வைக்கோவை ஓரளவு தெரிந்தாலும், சீமான் என்றால் அவர்களுக்கு யார் எண்டே  தெரியாது.

 இப்போதைய நிலமையில் இவர்கள் இலங்கை குறித்து பேசாமல் இருப்பதே நல்லது. இவர்கள் இலங்கை குறித்து பேசி தங்களுக்கு அரசியல் செல்வாக்கை அங்கு அதிகரிக்க முடியுமெண்டால் அப்படி செய்யட்டும். மற்றப்படி எமக்கு எந்த பிரயோசனமும் இல்லை. சிலவேளைகளில் எமக்கு பாதிப்பாகவும் அமையலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, நிழலி said:

மிகவுன் சரியான கருத்து யோகேஸ்வரன். பாராட்டுகள்

இந்த யோகேஸ்வரன் ஒரு இலங்கை வெங்காயம் அங்கால் சீமான் ஒரு இந்திய தமிழ் நாட்டு வெங்காயம் 

முதலில் அங்குள்ள அகதி சனத்து ஏதாவதை செய்துட்டு பீலா விடட்டும் , வைகோ , ஏன் ஈழம் பற்றி கூவுற அனைத்தும்  வெங்காயங்களும்  

Link to comment
Share on other sites

https://ibb.co/dsTKWFd
https://ibb.co/R70K7DN
https://ibb.co/w6BJd5h

https://ibb.co/rHp0Nhm
https://ibb.co/k85Z20T
https://ibb.co/YjHPkT7
https://ibb.co/GdMG0qN
https://ibb.co/4g8V475

 

இவைகள் எல்லாம் சீமானை ட்ரோல் பண்ணுவதாக நினைத்து தலைவரை பொட்டு அண்ணையை ,மற்றும் போராளிகளை அவமானப்படுத்தும் மீம் கள் ,( விரும்பினவர்கள் லிங் உள்ளே சென்று பாருங்கள்)நீங்கள் சோசியல் மீடியாவில் அதிகம் இருப்பவர்கள் ஆயின் இவற்றை கடந்திருப்பீர்கள்... கடந்த சில நாட்களில் அதுவும் சீமானின் பிறந்த தின உரைக்கு பின்னராக தான் இவைகள் வந்து கொண்டிருக்கின்றன.

தலைவருடன் பன்றி வேட்டைக்கு போனேன் பொட்டு அண்ணையுடன் அண்ணியுடன் இடியப்பம் சாப்பிட்டன் ,போராளி தனக்கு பின்னால் நின்று தான் சாப்பிடுவதை குறிப்பெடுத்தான் இதுகள் தான் எமது போராட்டம் பற்றி புகழ்ந்து கூற சீமான் கிட்ட இருப்பவைகளா..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

இந்த யோகேஸ்வரன் ஒரு இலங்கை வெங்காயம் அங்கால் சீமான் ஒரு இந்திய தமிழ் நாட்டு வெங்காயம் 

முதலில் அங்குள்ள அகதி சனத்து ஏதாவதை செய்துட்டு பீலா விடட்டும் , வைகோ , ஏன் ஈழம் பற்றி கூவுற அனைத்தும்  வெங்காயங்களும்  

முனிவா , சீமான் என்ன‌ இப்ப‌ த‌மிழ் நாட்டு முத‌ல் அமைச்ச‌ராயா இருக்கிறார் , இந்த‌ கேள்விய‌ திராவிட‌ கும்பல்க‌ளிட‌ம் கேட்க‌னும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ராசவன்னியன் said:

vil-sourcils.gif  தம்புடு, தங்களின் புரிதலுக்கு மிக்க நன்றி.

ஜ‌ய‌டு உங்க‌ளின் இல‌வ‌ச‌ அறிவுரைக்கும் புரித‌லுக்கும் மிக்க‌ ந‌ன்றி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, அபராஜிதன் said:

https://ibb.co/dsTKWFd
https://ibb.co/R70K7DN
https://ibb.co/w6BJd5h

https://ibb.co/rHp0Nhm
https://ibb.co/k85Z20T
https://ibb.co/YjHPkT7
https://ibb.co/GdMG0qN
https://ibb.co/4g8V475

 

இவைகள் எல்லாம் சீமானை ட்ரோல் பண்ணுவதாக நினைத்து தலைவரை பொட்டு அண்ணையை ,மற்றும் போராளிகளை அவமானப்படுத்தும் மீம் கள் ,( விரும்பினவர்கள் லிங் உள்ளே சென்று பாருங்கள்)நீங்கள் சோசியல் மீடியாவில் அதிகம் இருப்பவர்கள் ஆயின் இவற்றை கடந்திருப்பீர்கள்... கடந்த சில நாட்களில் அதுவும் சீமானின் பிறந்த தின உரைக்கு பின்னராக தான் இவைகள் வந்து கொண்டிருக்கின்றன.

தலைவருடன் பன்றி வேட்டைக்கு போனேன் பொட்டு அண்ணையுடன் அண்ணியுடன் இடியப்பம் சாப்பிட்டன் ,போராளி தனக்கு பின்னால் நின்று தான் சாப்பிடுவதை குறிப்பெடுத்தான் இதுகள் தான் எமது போராட்டம் பற்றி புகழ்ந்து கூற சீமான் கிட்ட இருப்பவைகளா..

அண்ணேய் ஆயிரம் கைகள்மறைத்து சூரியன் வெளிச்சம் தராமல் விட்டதல்ல இதுக்கு கவலைப்படும் நீங்கள் நம்மவர் சமூக ஊடகங்களில் தலையை பற்றி அவதூறு பரப்புவர்களுக்கு எதிராக என்ன செய்ய முடிந்தது ? கணக்க வேண்டாம் இதே களத்தில் புலி தேசம் தேசமாய் பவுடர் வித்தது இறுதிபோரில் தலை சரணடைந்து கோடலியால் சிங்களவன் கொத்திதான் இறந்தவர் அடுத்தமுறை மாவீரர் நாளுக்கு கோடாலியை வைத்து நினைவு கூறபோரன் என்று அவதூறு பரப்பினவரை எங்களால் என்ன செய்ய முடிந்தது ? இவ்வளவுக்கும் பயிற்ச்சி எடுத்த சத்திய பிரமாணம் எடுத்த புலி என்று வேறு பிலா வேறு .

சீமான் விருந்தினராய் வன்னி வந்து சென்றவர் அவ்வளவே அடுத்து சமூக ஊடகங்களில் இப்படி மீம்ஸ் தயாரிப்பவர்கள் 2௦௦ க்கு ஜல்லியடிக்கும் திமுகவின் அல்லகைகள் அவர்களுக்கு மறுபடியும் ஆட்சியை பிடிக்கணும் எனும் அவா என்பதும் தமிழ்நாட்டு சராசரி தமிழனுக்கு விளங்கும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, பெருமாள் said:

அண்ணேய் ஆயிரம் கைகள்மறைத்து சூரியன் வெளிச்சம் தராமல் விட்டதல்ல இதுக்கு கவலைப்படும் நீங்கள் நம்மவர் சமூக ஊடகங்களில் தலையை பற்றி அவதூறு பரப்புவர்களுக்கு எதிராக என்ன செய்ய முடிந்தது ? கணக்க வேண்டாம் இதே களத்தில் புலி தேசம் தேசமாய் பவுடர் வித்தது இறுதிபோரில் தலை சரணடைந்து கோடலியால் சிங்களவன் கொத்திதான் இறந்தவர் அடுத்தமுறை மாவீரர் நாளுக்கு கோடாலியை வைத்து நினைவு கூறபோரன் என்று அவதூறு பரப்பினவரை எங்களால் என்ன செய்ய முடிந்தது ? இவ்வளவுக்கும் பயிற்ச்சி எடுத்த சத்திய பிரமாணம் எடுத்த புலி என்று வேறு பிலா வேறு .

சீமான் விருந்தினராய் வன்னி வந்து சென்றவர் அவ்வளவே அடுத்து சமூக ஊடகங்களில் இப்படி மீம்ஸ் தயாரிப்பவர்கள் 2௦௦ க்கு ஜல்லியடிக்கும் திமுகவின் அல்லகைகள் அவர்களுக்கு மறுபடியும் ஆட்சியை பிடிக்கணும் எனும் அவா என்பதும் தமிழ்நாட்டு சராசரி தமிழனுக்கு விளங்கும் .

இந்த‌ கால‌ போக்கில் உங்க‌ளுக்கு தெரிந்த‌ ப‌ல‌ நித‌ர்ச‌ன‌  உண்மைக‌ள் , எம்ம‌வ‌ர் ப‌ல‌ருக்கு தெரிய‌ வில்லை , 

வைக்கோவின் ஆட்க‌ள் தான் இந்த‌ மீம்ஸ் போன்ற‌த‌ ப‌ர‌ப்பின‌ம் , வைக்கோ எப்ப‌டி ப‌ட்ட‌ ம‌னித‌ர் என்ப‌து இந்த‌ நூற்றாண்டில் ப‌ல‌ர் க‌ண்டு அருவ‌ருத்து இருப்பின‌ம் , 

மாவீர‌ர் நாளில் அண்ண‌ன் சீமான் பேசும் போது , வ‌ன்னியில் எம் த‌லைவ‌ர் கூட‌ அருகில் இருந்த‌ ஜ‌யாவும் அண்ண‌ன் சீமான் பேசுவ‌தை கேட்டு கொண்டு தான் இருந்தார் , அண்ண‌ன் சீமான் பொய் பேசி இருந்தா அந்த‌ ஜ‌யாவே அண்ண‌ன் சீமானை க‌ண்டித்து இருப்பார் , எம்ம‌வ‌ர் ப‌ல‌ர் இப்ப‌வும் இருண்ட‌ உல‌கில் வாழுகின‌ம் , இணைய‌ த‌ள‌த்தில் திருட்டு திராவிட‌த்துக்கு 200ரூபாய்க்கு கூலி வேலை செய்ப‌வ‌ர்க‌ள் எழுதுவ‌தை உண்மை என‌ நினைக்கின‌ம் ,

வைக்கோ பிர‌பாக‌ர‌ன் உயிருட‌ன் இருக்கிறார் என்று வாய் கிழிய‌ பொய் சொல்லுகிறார் அப்ப‌ எங்கை போன‌து இவ‌ர்க‌ளின் ந‌டு நிலை /

வைக்கோவின் ந‌ரிக் குன‌ம் எம்ம‌வ‌ர் ப‌ல‌ருக்கு தெரியாது , சிங்க‌ள‌ ர‌னில் விக்கிர‌ம‌சிங்க‌ போல‌ , வைக்கோவும் குள்ள‌ ந‌ரி தான் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

த‌லைவ‌ர் அருகில் நிக்கும் இந்த‌ ஜ‌யா யார் என்று தெரியுதா , த‌ன‌து இர‌ண்டு ம‌க‌ன்க‌ளையும் போராட்ட‌த்தில் இணைத்த‌வ‌ர் , த‌மிழீழ‌த்தில் மாவீர‌ர் துயிலும் இல்ல‌த்தை இந்த‌ ஜ‌யா தான் திற‌ந்து வைச்ச‌வ‌ர் , அண்ண‌ன் மாவீர‌ நாளில் பேசும் போது ஜ‌யாவும் முன்னுக்கு இருந்து அண்ண‌ன் சீமானின் பேச்சை கேட்டு கொண்டு இருந்தார் /

இதை பார்த்த‌ பிற‌க்கும் அண்ண‌ன் சீமான் பொய் பேசுகிறார் என்று நீங்க‌ள் எழுதினா உண்மையில் உங்க‌ளை விட‌ அடி முட்டாள்க‌ள் இந்த‌ உல‌க‌த்தில்  இருக்க‌ மாட்டின‌ம் 

20191202-114005.png 20191202-113940.png

20191202-114005.png
20191202-113940.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

20191202-121333.jpg

முத‌ல் க‌ரும்புலி ( மில்ல‌ரின் அம்மாவுட‌ன் அண்ண‌ன் சீமான் )

இவ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமான் மீது விம‌ர்ச‌ன‌ம் வைச்சா யோசிக்க‌ வேண்டிய‌ விடைய‌ம் , த‌லைவ‌ர் அருகில் இருந்த‌ ப‌ல‌ உற‌வுக‌ள் அண்ண‌ன் சீமானோடு இருக்கிறார்க‌ள் ,

சிங்க‌ள‌வ‌னை விட‌ த‌மிழின‌த்தில் இருக்கும் ஒரு சில‌ கொசுக்க‌ளின் தொல்லை தாங்க‌ முடிய‌ல‌  🤣😂😁

20191202-121333.jpg

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கல்லறையில் உடல்கள் தோண்டியெடுப்பு.. மனித எலும்பில் உருவாகும் போதைப் பொருள்.. அடிமையாகும் இளைஞர்கள்! ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ’குஷ்’ என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ’குஷ்’ போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ’குஷ்’ ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புகளுடன் , கஞ்சா மற்றும் சில இரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை (புத்தகங்கள், ஆடைகள்) விற்று அந்த போதை மருந்தை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.   https://thinakkural.lk/article/299459
    • வடக்கு மீனவர்களின் ஓயாத போராட்டம் ஜே.ஏ.ஜோர்ஜ் “அது ஒரு சனிக்கிழமை, நான் எனது வலைகளை எடுப்பதற்காக கடலுக்கு சென்றேன். வலை நிறைய மீன்களை எதிர்பார்த்து சென்ற எனக்கு அங்கு அதிர்ச்சியே மிஞ்சியது. ஏனென்றால் நான் விரித்து வைத்திருந்த வலைகள் அங்கு இல்லை.  எனது வலைகளை இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை சேதப்படுத்தி விட்டனர். ஆனால் இது முதல் முறையாக நடக்கும் சம்பவம் இல்லை” -  இவ்வாறு தனது கதையை கூறும் மீனவரான ரெஜினோல்ட் தனது கடந்த கால அனுபவங்களுடன் ஒப்பிடுகையில் தற்போதைய தனது போராட்டம் தீவிரமடைந்திருப்பதாக கூறுகின்றார். 20 ஆண்டுகளாக தனது வாழ்க்கைக்காக கடல் அலைகளுடன் போராடி வரும் ரெஜினோல்ட் மட்டுமன்றி வடமாகாண மீனவர்களில் அதிகளவானவர்கள் தற்போது இவ்வாறு கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர். இலங்கை கடற்பரப்பிற்குள் இழுவை படகுகளை பயன்படுத்தி இந்திய மீனவர்கள் முன்னெடுக்கும் மீன்பிடி நடவடிக்கைகளே இந்த நெருக்கடிக்கு காரணமாக உள்ளது. நெடுந்தீவைச் சேர்ந்த ரெஜினோல்ட் தனது தந்தையுடன் இணைந்து நீண்டகாலம் மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில், திருமணத்துக்கு பின்னர் தற்போது தனியாக தொழில் செய்கின்றார். “நான் என் படகை மோட்டார் இல்லாமல் பயன்படுத்துகிறேன். மோட்டார் ஒன்றை வாங்க என்னிடம் போதுமான பணம் இல்லை. அதனால் என்னால் அதிக தூரம் செல்ல முடியாது. கடந்த காலங்களில் மீன்பிடிக்க பாரம்பரிய வலைகளைப் பயன்படுத்தினேன். இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை எனது வலைகளை சேதப்படுத்தி விட்டனர். எனவே, இப்போது மீன்பிடிக்க சிறிய வலையைப் பயன்படுத்துகிறேன். இதனால், முன்பு போல் மீன் பிடிக்க முடியவில்லை. கடலில் இரண்டு மூன்று மணி நேரம் மாத்திரமே செலவிட முடிகின்றது. எனக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.  எனது மூத்த மகன் ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். அவர்களுக்காக நான் பல செலவுகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. பொருட்களின் விலை முன்பை விட அதிகமாக உள்ளது. குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவது இப்போது மிகவும் கடினமாக உள்ளது” என்கிறார் ரெஜினோல்ட். அமெரிக்க பாதுகாப்பு பல்கலைக்கழகம் 2008ஆம் ஆண்டு துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ஏற்பாடு செய்திருந்த செயற்குழு கூட்டத்தில் கலாநிதி சனத் டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட அறிக்கையின்படி, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடல் எல்லை மூன்று கடல் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. வடக்கில் வங்காள விரிகுடா, நடுவில் பாக்கு நீரிணை, தெற்கில் மன்னார் விரிகுடா என இந்த கடல் எல்லைகள் உள்ள நிலையில், பாக்கு நீரிணை ஊடாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சராசரி தூரம் சுமார் 32 கிலோமீற்றர்கள் என அறிக்கை கூறுகிறது. கச்சதீவில் இருந்து இந்தியாவின் ராமேஸ்வரம் வரையிலான தூரம் சுமார் 14 கடல் மைல்கள், அதாவது சுமார் 26 கிலோமீட்டர்கள். யாழ்ப்பாணத்தில் இருந்து கச்சத்தீவு வரை சுமார் 60 கிலோமீட்டர் தொலைவான கடற்பரப்பில் தனது அதிகாரத்தை கொண்டுள்ள இலங்கை கடற்படை, சர்வதேச கடல் எல்லையை தாண்டி இலங்கை கடலுக்குள் நுழையும்  இந்திய இழுவை படகுகள் குறித்து அவ்வப்போது  நடவடிக்கை எடுத்து வருகிறது. எவ்வாறாயினும், இலங்கை  கடற்பரப்புக்குள் இந்திய இழுவை படகுகள் பிரவேசிப்பது  நாளாந்தம் இடம்பெறுவதாக வடபகுதி மீனவ சங்க தலைவர்கள் கூறுகின்றனர். “இது ஒரு தீவிரமான பிரச்சினை. இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை உள்ளிட்டவர்கள் தேவையான நடவடிக்கை எடுக்காதமையே இந்த பிரச்சினை தொடர்வதற்கு முக்கிய காரணமாக உள்ளது.  ஏராளமான இந்திய இழுவை படகுகள் இலங்கை கடல் பகுதிக்குள் நுழையும் நிலையில், கைது செய்யப்படும் இந்திய மீனவர்கள் மற்றும் கைப்பற்றப்படும் இந்திய இலுவை படகுகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கை எடுத்து இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மீன்பிடி அமைச்சு நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை. இந்திய மீனவர்கள் பயன்படுத்தும் இழுவை படகுகள் வடபகுதி மீனவர்களுக்கு சொந்தமானதை படகுகளை விட பெரியவை. அவை தினமும் வடக்கு கடல் பகுதிக்குள் நுழைவதால், ஏராளமான பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனால் வடபகுதி மீனவர்களின் வருமானம் பாதிக்கப்படுவதுடன், இந்திய இழுவை படகுகளால் இலங்கை மீனவர்களின் வலைகளுக்கு சேதம் ஏற்படுகின்றது. அத்துடன், எமது மீன்பிடி வளம் பறிபோகிறது. எமது மீனவர்களுக்குச் சொந்தமான படகுகளை சேதப்படுத்திய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன”- என யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார். அத்துடன், இந்தியாவில் இருந்து இழுவை படகுகள் வருவதை தடுக்கும் வகையில் இலங்கையில் சட்ட அமைப்பு இருப்பதாகவும் எனினும், அவற்றால் நடைமுறையில் இலங்கை மீனவர்களால் எந்தவித பயனையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை என, அன்னராசா சுட்டிக்காட்டினார். 1979 ஆம் ஆண்டின் 59 ஆம் இலக்க கடற்றொழில் (வெளிநாட்டு மீன்பிடி படகுகளை ஒழுங்குபடுத்துதல்) சட்டத்தின் 04ஆவது பிரிவின்படி, அனுமதியின்றி மீன்பிடி தொடர்பான நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டு மீன்பிடி படகுகளை இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க பயன்படுத்தக்கூடாது என்று கூறுகிறது. அத்துடன், இலங்கை கடற்பரப்பிற்குள் வெளிநாட்டுப் படகுகள் பிரவேசித்தால், மீன்பிடிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், அந்தப் படகில் உள்ள மீன்பிடி சாதனங்களை முறையான முறையில் தடுத்து வைக்க வேண்டும் என்று சட்டத்தின் 05வது பிரிவு கூறுகிறது. வெளிநாட்டுப் படகுகளை நிறுத்தவும், சோதனைகளை நடத்தவும், பிடியாணையுடன் அல்லது இல்லாமலும் படகுகளைக் கைப்பற்றவும், தனிநபர்களைக் கைது செய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.  2018 ஆம் ஆண்டில், இந்த சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டதுடன், இலங்கையில் உள்ள ஆயுதப்படைகளின் தளபதிகள் மற்றும் அதன் அமுலாக்கத்துக்காக கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் தலைவர் ஆகியோருக்கு பொறுப்பை வழங்கும் கூடுதல் சரத்துகள் அறிமுகப்படுத்தப்பட்டன. வெளிநாட்டுப் படகுகள் மூலம் இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்தால் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். இந்த குற்றம் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் ஒரு மாதத்துக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. இந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கு பொறுப்பான அமைச்சருக்கு விதிமுறைகளை உருவாக்கும் திறன் உட்பட விரிவான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. 1981 ஆம் ஆண்டு இந்தச் சட்டத்தின் கீழ் இலங்கைக் கடற்பரப்பில் நுழைவதற்கான அனுமதியைப் பெறுவதற்கான நடைமுறைகளை கோடிட்டுக் காட்டும் விதிமுறைகள் வெளியிடப்பட்டன. இந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மீன்பிடி அமைச்சு மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் என்பன மீள தவிர்க்க முடியாத பொறுப்பைக் கொண்டுள்ளன. இந்திய மீனவர்கள் வட கடலில் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை முற்றாக நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்பிலான கலந்துரையாடல் 2023 ஜனவரி 24 ஆம் திகதி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.  மேலும், 2023ல் சட்டவிரோத வெளிநாட்டு மீன்பிடி கப்பல்கள் மற்றும் மீனவர்கள் குறித்து அந்தந்த நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. எவ்வாறாயினும், இந்திய இழுவை படகுகளினால் வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண போதிய நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் இன்னமும் தவறியுள்ளதுடன், இதனால் பிரச்சினை தொடர்ந்து மோசமாகி வருகிறது. இவ்விடயம் தொடர்பில் வினவிய போது கடற்றொழில் அமைச்சின் செயலாளர் கே.என். குமாரி சோமரத்ன, இந்த பிரச்சினைக்கு இரு நாடுகளுக்கிடையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என தெரிவிக்கின்றார். “இந்த விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்த விடயம் தொடர்பில் மீண்டும் ஒருமுறை கலந்துரையாடலை ஆரம்பிக்குமாறு வெளிவிவகார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். வெளிவிவகார அமைச்சரும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதை நாம் அறிவோம். இப்பிரச்சினை தொடர்பாக தற்போதுள்ள சட்டங்களில் திருத்தம் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. தற்போது, முதல் தடவை கைதுக்கான தண்டனை மற்றும் மீண்டும் மீண்டும் கைது செய்யப்பட்டதற்கான தண்டனையை சட்டம் குறிப்பிடுகிறது, ” என்று அவர் கூறுகின்றார். இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்ய கடற்படையின் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு ஏன் பணிப்புரை வழங்கப்படவில்லை என வினவியபோது, அந்தச் சட்டம் இன்னமும் அமுலில் உள்ளதாகவும், அதன்படி தற்போது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் செயலாளர் தெரிவித்தார். இது இவ்வாறாக இருக்கும் நிலையில், இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் எண்ணிக்கை 150க்கும் அதிகமாகும். இது அதிக எண்ணிக்கையாக தெரிந்தாலும், நாளாந்தம் இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய மீனவர்களின் வருகையுடன் ஒப்பிடுகையில் இது மிகக் குறைவு என மீனவ சங்கத் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில், இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் இந்திய மீனவர்களை கண்காணிப்பதற்காக வடக்கில் ‘கடல் காவலர்கள்’ எனப்படும் தன்னார்வ குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தை கடற்றொழில் அமைச்சர் சமர்ப்பித்துள்ளார். இதேவேளை, இந்திய மீன்பிடி பிரச்சனையால் நாளாந்தம் 350 மில்லியன் ரூபாய் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக அமைச்சு மதிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், தற்போதைய கடற்றொழில் அமைச்சர் வடக்கில் உள்ள மீனவர்களின் வாக்குகளால் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டதாகவும், கடற்றொழில் அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அவர் போதிய தலையீடுகளை மேற்கொள்ளவில்லை என வடமாகாண மீனவர் சங்க தலைவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். வடக்கில் உள்ள எழுவைத்தீவு, அனலைத்தீவு, நெடுந்தீவு உள்ளிட்ட, மீன் பிடி தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ள மக்கள் வசிக்கும் தீவு பகுதிகள் இன்னும் இலங்கை கடற்படையினரின் கண்காணிப்பிலேயே உள்ளதை எம்மால் நேரடியாக காண முடிந்தது. இந்த தீவுகளின் கடற்படையினரின் சோதனை சாவடி அல்லது முகாம் இன்னும் செயற்பாட்டிலேயே உள்ளது. இவ்வாறு வடக்கின் கடற்பரப்பை சுற்றி ரோந்து நடவடிக்கையில் ஈடுபடும் இலங்கை கடற்படையினர், இந்திய மீனவர்கள் இலங்கைக்குள் பிரவேசிப்பதை தடுக்க  உரிய நடவடிக்கை எடுக்காதது குறித்து வடபகுதி மீனவர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர். இலங்கை கடற்படையினர் நினைத்தால் இந்திய மீனவர்களை இலங்கை கடல் வளத்தை சுரண்டாமல் இலகுவாக தடுத்து நிறுத்த முடியும் என்பதே வடபகுதி மீனவர்கள் நம்பிக்கையாகும். ஆனால், அது இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை என்பது அந்த மீனவர்கள் நிலையை நேரில் பார்க்குத்போது தெளிவாக புலப்படுகின்றது.   https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வடக்கு-மீனவர்களின்-ஓயாத-போராட்டம்/91-336077
    • யாழ்.பல்கலையின் பொன்விழாவை முன்னிட்டு ஆய்வு மாநாடு! adminApril 18, 2024 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பதாண்டைப் பூர்த்தி செய்து பொன்விழாக் காண்கின்றது. அதனை முன்னிட்டு முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வுமாநாட்டை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப்படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன. ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வடக்கு மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இவ் ஆய்வுமாநாடு அரங்கேறவுள்ளது. கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி.ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராகச் செயற்படுகின்றார். வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தாளர்களாகக் கலந்துகொள்கின்றனர். எதிர்வரும் 20ம் திகதி சனிக்கிழமையும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் எனத் திட்டமிடப்பட்டுள்ள இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன. சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கைப் பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார். ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள்: வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இவ் உரை நிகழவிருக்கின்றது. திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்கிற்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார். ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் – சவால்களும் பிரச்சனைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர்.தி.முகுந்தனும், ‘வட மாகாணக் கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உளமருத்துவ நிபுணர் சி.சிவதாசும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமை தாங்கவுள்ளார். இந் நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார். அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீடப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமாகிய என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஜெய மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமாகிய ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக் கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது. ‘வடக்கு மாகாணப் பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் – எங்கு நாம் நிற்கின்றோம் – முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’, மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் – சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு நாள்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன   https://globaltamilnews.net/2024/201875/
    • போட்டியில் கலந்துகொண்ட @kalyani யும், @கந்தப்புவும் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 15 மணித்தியாலங்களே இருப்பதனால், யாழ்களப் போட்டியில் விரைவில் கலந்துகொள்ளுங்கள்😀 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு  
    • அமெரிக்கா ஏதோ ஒரு விதத்தில் பங்கு எடுக்கும், எடுக்க வேண்டிய நிலை, இஸ்ரேல் ஈரானுக்கு திருப்பி அடித்தால் . (மற்ற திரியில் சொன்னனது போல , இஸ்ரேல் க்கு தெரியும், அமெரிக்கா, மேற்கு பாதுகாப்புக்கு எப்போதும் வரும் என்று. அதை மேற்கும், மீண்டும், மீண்டும் சொல்லுகின்றன. இதுவே பங்கு எடுப்பது. அமெரிக்கா செய்வது, இஸ்ரேல் ஐ பாதுகாப்பத்தற்கு ஈரானின் ஏவுகணனைகளை தடுப்பது act of  war,)   ஈரானின் தூதரகம் மீதான இஸ்ரேல் இன் தாக்குதல் , மேற்கு, குறிப்பாக US க்கு தெரிந்து (அதன் மூலம் 5 கண்கள் உளவு நாடுகளுக்கு - 5 eyes intelligence community தெரிந்து), US ஆமோதித்து, அனுமதித்து  நடத்தப்பட்ட தாக்குதல். ஏனெனில், இஸ்ரேல் இப்படியானவற்றை அமெரிக்காவிடம் சொல்லாமல் செய்வதில்லை. மேலும், France க்கும்  உச அறிவித்து இருக்கும், ஏனெனில், சிரியா பிரான்ஸ் இன் காலனித்துவம்  கீழ் இருந்தது. மற்றது, பிரச்னை வந்தால் செக்யூரிட்டி கவுன்சில் இல் பிரான்ஸ் இந்த உதவி தேவை, ஆனால், இந்த காலனி என்பதே பிரதான  காரணம். இது செக்யூரிட்டி கவுன்சில் இல் எழுதப்படாத  விதி- காலனித்துவ அரசுகளே, முனைய காலணிகளின் இப்போதைய அரசுக்கள் சார்ந்த  விடயத்தில் முன்னுரிமை உள்ளது என்பது .  எனவே, மேற்கு ஆகக்குறைந்தது மறைமுக பங்குதாரர் (கனடா தூதரகத்தை காலி செய்தது அநேகமாக இந்த 5 eyes வழியாகத் தான் இருக்கும்) இஸ்ரேல் சொல்லியது தாக்குதலுக்கு மிகச் சிறிய நேரத்துக்கு முதல் என்று (வேண்டும் என்று) அமெரிக்கா கசிய விட்டு, சில செய்திகள் காவுகின்றன. அனால், தாக்குதலை இஸ்ரேல் 2 மாதமாக திட்டமிட்டது என்று பின் செய்து வந்தது.  கேக்கிறவன் கேணையனாக இருந்தால் ... என்ற அமெரிக்காவின் கதை. (அப்படி US  இடம் சொல்லாமல் இஸ்ரேல் செய்தது, Sinnai மீதான தாக்குதல், கைப்பற்றலும்  , ஆனால், அது பெரிய யுத்தத்தின் ஒரு பகுதி, Egypt முதல் தாக்கி இருந்தது). அமெரிக்காவுக்கு முதலே (ஏற்ற காலத்தில் ) தெரியும் என்றது, newyork times வெளியிட்டு உள்ள இன்னொரு செய்தியானா, அமெரிக்கா, இஸ்ரேல் அதிகாரிகள் ஈரானின் எதிர்பபை குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள் என்று அதிகாரிகள் அவர்களின் வாயால் சொன்னதாக என்ற செய்தியில்   இருந்து தெரிகிறது.   இதனால் தான் மேற்கு, ஈரானை தடுக்க முனைந்தது. முடியாமல் போக, அது தடுத்தது. un இன் பகுதி charter ஐ குழிதோண்டி புதைத்தன அமெரிக்காவும், அதன் வாலுகளும்.  இதை மேற்கு rule based என்று சொல்லும் என்று நினைக்கிறன்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.