Jump to content

ஈழப் பிரச்சனை குறித்து சீமான் தேவையில்லாமல் பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்-நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் ஈழப் பிரச்சனை குறித்து.. தமிழினப் பேரழிவு நிகழ்ந்த 2009 ப் பின் தான் பேசி வருகிறார். ஆனால் யோகேஸ்வரன் போன்றவர்கள்.. சொந்த இனத்தின் அழிவைக் கூட பேச முடியாமல்.. பேசா மடைந்தைகளாக இருந்து எதை சாதித்தார்கள்.

அதிலும் சீமான்.. பேசி.. ஒரு இனத்தின் துயரை சொந்தவர்களாவது சந்ததிக்கும் உணரச் செய்வது எவ்வளவோ மேல். அது தான் முக்கியம்.. ஒரு இனத்தின் வரலாற்று இருப்புக்கு. 

யோகேஸ்வரன் போன்றோர்.. தமிழ் இனத்தின் இருப்பை தான் காக்க முடியவில்லை.. குறைந்தது.. அந்த இனம்.. இலங்கைத் தீவில் வாழ்ந்தது என்ற வரலாற்றையாவது வாழ விடட்டும். 

Link to comment
Share on other sites

  • Replies 67
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கின்றேன்  யோகேஸ்வரனை  சீமான்  தொட்டிருக்கணும்

அல்லது அந்தப்பயம் வந்திருக்கணும்

Link to comment
Share on other sites

8 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இந்த யோகேஸ்வரன் ஒரு இலங்கை வெங்காயம் அங்கால் சீமான் ஒரு இந்திய தமிழ் நாட்டு வெங்காயம் 

முதலில் அங்குள்ள அகதி சனத்து ஏதாவதை செய்துட்டு பீலா விடட்டும் , வைகோ , ஏன் ஈழம் பற்றி கூவுற அனைத்தும்  வெங்காயங்களும்  

உண்மை, இருவரும் வெங்காயங்கள் என்பது உண்மை. ஆனாலும் ஒரு வித்தியாசம் உள்ளது.

யோகேஸ்வரன் இரண்டு தடவைகளும் மக்களால் வாக்களிக்கப்பட்டு தேர்தலில் வென்று பாராளுமன்றம் சென்றவர். அவருடைய கட்சியும் அடுத்த தேர்தலிலும் வடக்கு கிழக்கில் அதிகப்படியான வாக்குகளை பெறக் கூடிய கட்சி. ஆனால் சீமான்? ஒவ்வொரு தேர்தலிலும் கணிசமான அளவுக்கு கட்டுக்காசை இழக்கும் கட்சியை சேர்ந்தவர். பெரும்பாலான மக்களால் முற்றிலும் நிராகரிக்கப்பட்டவர். அடுத்தடுத்த அனைத்து தேர்தகளிலும் கூட தோற்கடிக்கப்படப் போகின்றவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, நிழலி said:

உண்மை, இருவரும் வெங்காயங்கள் என்பது உண்மை. ஆனாலும் ஒரு வித்தியாசம் உள்ளது.

யோகேஸ்வரன் இரண்டு தடவைகளும் மக்களால் வாக்களிக்கப்பட்டு தேர்தலில் வென்று பாராளுமன்றம் சென்றவர். அவருடைய கட்சியும் அடுத்த தேர்தலிலும் வடக்கு கிழக்கில் அதிகப்படியான வாக்குகளை பெறக் கூடிய கட்சி. ஆனால் சீமான்? ஒவ்வொரு தேர்தலிலும் கணிசமான அளவுக்கு கட்டுக்காசை இழக்கும் கட்சியை சேர்ந்தவர். பெரும்பாலான மக்களால் முற்றிலும் நிராகரிக்கப்பட்டவர். அடுத்தடுத்த அனைத்து தேர்தகளிலும் கூட தோற்கடிக்கப்படப் போகின்றவர்.

60வ‌ருட‌ க‌ட்சிக‌ளுட‌ன் 9வ‌ருட‌ க‌ட்சியை ஒப்பிட்டு பார்ப்ப‌து உங்க‌ளின் அறியாமை , ஊட‌க‌ ப‌ல‌ம்  ப‌ண‌ ப‌ல‌ம் இல்லாம‌ தேர்த‌ல‌ ச‌ந்திக்கிறார் அண்ண‌ன்சீமான் அதே பாராட்ட‌ த‌க்க‌து , காசை குடுத்தா ஓட்டை போடும் ம‌க்க‌ள்  ம‌த்தியில் , ஓட்டுக்கு காசு குடுக்காம‌ தேர்த‌ல‌ ச‌ந்திக்கிறார் /

சீமான் என்ற‌ ஒரு ம‌னித‌ர் இல்லை என்றால் இப்ப‌ இருக்கிற‌ இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளுக்கு பிர‌பாக‌ர‌னையும் தெரிந்து இருக்காது எம் போராட்ட‌த்தையும் தெரிந்து இருக்காது , த‌ல‌ பான்ஸ் த‌றுத‌ல‌ பான்ஸ் என்ற‌ நிலையில் இருந்து இருப்பின‌ம்  , 

த‌மிழின‌த்தில் இப்போது உள்ள‌ சூழ் நிலையில் ம‌ற்ற‌வ‌ர்க‌ளை விட‌ அண்ண‌ன் சீமான் எவ‌ள‌வோ மேல் , எம‌க்காக‌ போராடுகிறோம் என்று வெளிக்கிட்ட‌ ஆட்க‌ள் க‌ட‌சியில் முக‌ மூடிய‌ க‌ழ‌ட்டிட்டு சிங்க‌ள‌வ‌னின் எலும்புதுண்டுக்கு விஸ்வாஸ்ச‌மாக‌ இருக்கின‌ம் , 

எங்க‌டைய‌ளே இப்ப‌டி இருக்கும் போது , இர‌வு ப‌க‌ல் என்று பாராம‌ல் க‌டினாமாக‌ இன‌த்துக்காக‌ உழைக்கும் அண்ண‌ன் சீமானை குறை சொல்ல‌ எங்க‌ளில் ஒருவ‌ருக்கும் த‌குதி இல்லை , 

த‌மிழ் நாட்டு அர‌சிய‌லில் வைக்கோவின் பொய் பித்த‌லாட்ட‌ம் க‌ருணாநிதியின் பொய் பித்த‌லாட்டாம் எல்லாம் எம் க‌ண்ணால் க‌ண்டு இருக்கிறோம் , 

ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளுக்காக‌ உண்மையா இர‌த்த‌ க‌ண்ணீர் வ‌டிச்ச‌து என்றால் அது எம்ஜீஆர்  ,

இப்போது உள்ள‌ நிலையில் மாவீர‌ர் நாள் தொட்டு எம்ம‌வ‌ர்க‌ளில் நினைவு நாளை நாம் த‌மிழ‌ர் க‌ட்சியை த‌விற‌ வேர‌ க‌ட்சிகார‌ர்க‌ள் செய்வ‌து இல்லை ,

உத‌வி செய்யாட்டியும் உவ‌த்திர‌ம் செய்ய‌ வேண்டாம் ,

ந‌ன்றி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, நிழலி said:

உண்மை, இருவரும் வெங்காயங்கள் என்பது உண்மை. ஆனாலும் ஒரு வித்தியாசம் உள்ளது.

யோகேஸ்வரன் இரண்டு தடவைகளும் மக்களால் வாக்களிக்கப்பட்டு தேர்தலில் வென்று பாராளுமன்றம் சென்றவர். அவருடைய கட்சியும் அடுத்த தேர்தலிலும் வடக்கு கிழக்கில் அதிகப்படியான வாக்குகளை பெறக் கூடிய கட்சி. ஆனால் சீமான்? ஒவ்வொரு தேர்தலிலும் கணிசமான அளவுக்கு கட்டுக்காசை இழக்கும் கட்சியை சேர்ந்தவர். பெரும்பாலான மக்களால் முற்றிலும் நிராகரிக்கப்பட்டவர். அடுத்தடுத்த அனைத்து தேர்தகளிலும் கூட தோற்கடிக்கப்படப் போகின்றவர்.

தவறான கணிப்பு

காலம்  பதில்  சொல்லட்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, விசுகு said:

தவறான கணிப்பு

காலம்  பதில்  சொல்லட்டும்

இதுக்கு தான் நான் மேல‌ த‌குந்த‌ விள‌க்க‌ம் குடுத்து இருக்கிறேன் புரியும் ப‌டி 

Link to comment
Share on other sites

22 minutes ago, பையன்26 said:

60வ‌ருட‌ க‌ட்சிக‌ளுட‌ன் 9வ‌ருட‌ க‌ட்சியை ஒப்பிட்டு பார்ப்ப‌து உங்க‌ளின் அறியாமை , ஊட‌க‌ ப‌ல‌ம்  ப‌ண‌ ப‌ல‌ம் இல்லாம‌ தேர்த‌ல‌ ச‌ந்திக்கிறார் அண்ண‌ன்சீமான் அதே பாராட்ட‌ த‌க்க‌து , காசை குடுத்தா ஓட்டை போடும் ம‌க்க‌ள்  ம‌த்தியில் , ஓட்டுக்கு காசு குடுக்காம‌ தேர்த‌ல‌ ச‌ந்திக்கிறார் /

சீமான் என்ற‌ ஒரு ம‌னித‌ர் இல்லை என்றால் இப்ப‌ இருக்கிற‌ இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளுக்கு பிர‌பாக‌ர‌னையும் தெரிந்து இருக்காது எம் போராட்ட‌த்தையும் தெரிந்து இருக்காது , த‌ல‌ பான்ஸ் த‌றுத‌ல‌ பான்ஸ் என்ற‌ நிலையில் இருந்து இருப்பின‌ம்  , 

த‌மிழின‌த்தில் இப்போது உள்ள‌ சூழ் நிலையில் ம‌ற்ற‌வ‌ர்க‌ளை விட‌ அண்ண‌ன் சீமான் எவ‌ள‌வோ மேல் , எம‌க்காக‌ போராடுகிறோம் என்று வெளிக்கிட்ட‌ ஆட்க‌ள் க‌ட‌சியில் முக‌ மூடிய‌ க‌ழ‌ட்டிட்டு சிங்க‌ள‌வ‌னின் எலும்புதுண்டுக்கு விஸ்வாஸ்ச‌மாக‌ இருக்கின‌ம் , 

எங்க‌டைய‌ளே இப்ப‌டி இருக்கும் போது , இர‌வு ப‌க‌ல் என்று பாராம‌ல் க‌டினாமாக‌ இன‌த்துக்காக‌ உழைக்கும் அண்ண‌ன் சீமானை குறை சொல்ல‌ எங்க‌ளில் ஒருவ‌ருக்கும் த‌குதி இல்லை , 

த‌மிழ் நாட்டு அர‌சிய‌லில் வைக்கோவின் பொய் பித்த‌லாட்ட‌ம் க‌ருணாநிதியின் பொய் பித்த‌லாட்டாம் எல்லாம் எம் க‌ண்ணால் க‌ண்டு இருக்கிறோம் , 

ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளுக்காக‌ உண்மையா இர‌த்த‌ க‌ண்ணீர் வ‌டிச்ச‌து என்றால் அது எம்ஜீஆர்  ,

இப்போது உள்ள‌ நிலையில் மாவீர‌ர் நாள் தொட்டு எம்ம‌வ‌ர்க‌ளில் நினைவு நாளை நாம் த‌மிழ‌ர் க‌ட்சியை த‌விற‌ வேர‌ க‌ட்சிகார‌ர்க‌ள் செய்வ‌து இல்லை ,

உத‌வி செய்யாட்டியும் உவ‌த்திர‌ம் செய்ய‌ வேண்டாம் ,

ந‌ன்றி 

சீமான் என்பவர் உலகிற்கு தெரியமுன்னரே பல ஆயிரக்கணக்கான காயம்ப்பட்ட போராளிகளுக்கு மருத்துவம் செய்து அனுப்பி வைத்ததில் இருந்து டீசல் பெற்றோல் போன்றவற்றை கூட அனுப்பி வைத்த ஏராளமான தமிழக அன்பு உள்ளங்கள் தமிழகத்தில் இருந்தன என்பதை மறக்க வேண்டாம்.

கட்சி வேறுபாடுகள்  இல்லாமல் பல கட்சி, பல அமைப்புகள் என பரந்து பட்ட தமிழக மக்கள் மத்தியில் எம் போராட்டம் மீது இருந்த ஆதரவு அனுதாபம் அனைத்தையும் வெறும் ஒரு கட்சி ஆக்களிடம் மட்டுமே என்று குறுக்கி முன்னர் இருந்ததை விட பல மடங்கு ஆதரவை இழக்க வைத்த ஒருவர் எவரென்றால் அது சீமான் தான்.

இந்திய அவலப் படைகள் மீதான தாக்குதல்களுக்கு பின்பும் கூட  பார்ப்பனீயத்தை தூக்கிப் பிடிப்பவர்கள் மத்தியிம் மட்டுமே ஈழம் தொடர்பான எதிர்ப்புணர்வு இருந்தது.  திமுக, அதிமுக, திக என்று மட்டுமல்லாமல் பரந்து பட்டு இருந்த ஆதரவுத்தளத்தை மாற்றி ஈழ மக்கள் தொடர்பான கடும் எதிர்ப்புணர்வை தமிழக மக்களின் எல்லா தளங்களிலும் பரப்பிய ஒரு கட்சி என்றால் அது நாம் தமிழர் கட்சி மட்டுமே.

ஆனால் உங்களை போன்றவர்களுக்கு இது ஒரு போதும் புரியப் போவதில்லை. கைகள் வலிக்க வலிக்க அவருக்காக நியாயம் கதைப்பீர்கள். பக்கம் பக்கமாக எழுதி தள்ளுவீர்கள்.

ஒரு சந்தோசம் என்னவெனில் தாயக மக்கள் ஒரு மருந்துக்கும் கூட சீமானை நம்புவதும் கிடையாது, மதிப்பதும் கிடையாது.

நன்றி

Link to comment
Share on other sites

19 minutes ago, பையன்26 said:

இதுக்கு தான் நான் மேல‌ த‌குந்த‌ விள‌க்க‌ம் குடுத்து இருக்கிறேன் புரியும் ப‌டி 

இதற்கு பேர் விளக்கம் இல்லை முட்டுக்கொடுப்பு 😄

 

Link to comment
Share on other sites

20 minutes ago, விசுகு said:

தவறான கணிப்பு

காலம்  பதில்  சொல்லட்டும்

நீங்கள் மேற்கோள் காட்டியிருப்பது வடக்கு கிழக்கில் எந்தக் கட்சி அதிகப்படியாக வாக்குகள்  பெறும் என்பது தொடர்பான நான் எழுதியதை. கண்டிப்பாக இது தான் வரும் நாடாளுமன்ற தேர்தலில் நிகழும். விக்கியர் (தேர்தலில் நின்றால் அல்லது அவர் கட்சி ஆரம்பித்தால்), கஜேந்திரகுமார் போன்றவர்கள் மிகச் சிறிதளவு வாக்குகள் மட்டுமே பெறுவர். மிஞ்சிப் போனால் வடக்கில் ஒரு ஆசனம் மட்டும் கிடைக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, அபராஜிதன் said:

இதற்கு பேர் விளக்கம் இல்லை முட்டுக்கொடுப்பு 😄

 

இது முட்டு கொடுப்பு இல்லை , ச‌ட்டிக்கை இருக்கிற‌து தான் அக‌ப்பேக்கை வ‌ரும் 😁 ,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீமான், தமிழருக்காக இயங்குவதை யாரும் தடுக்கவில்லை, சந்தோசமே!

ஆனால் புனைவுகளோடும், ஏகபோக உரிமைகளுடன் நானே இங்கு தக்கவன், மற்ற யாருமில்லை என்ற போக்கில் செல்வது சரியன்று.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, நிழலி said:

சீமான் என்பவர் உலகிற்கு தெரியமுன்னரே பல ஆயிரக்கணக்கான காயம்ப்பட்ட போராளிகளுக்கு மருத்துவம் செய்து அனுப்பி வைத்ததில் இருந்து டீசல் பெற்றோல் போன்றவற்றை கூட அனுப்பி வைத்த ஏராளமான தமிழக அன்பு உள்ளங்கள் தமிழகத்தில் இருந்தன என்பதை மறக்க வேண்டாம்.

கட்சி வேறுபாடுகள்  இல்லாமல் பல கட்சி, பல அமைப்புகள் என பரந்து பட்ட தமிழக மக்கள் மத்தியில் எம் போராட்டம் மீது இருந்த ஆதரவு அனுதாபம் அனைத்தையும் வெறும் ஒரு கட்சி ஆக்களிடம் மட்டுமே என்று குறுக்கி முன்னர் இருந்ததை விட பல மடங்கு ஆதரவை இழக்க வைத்த ஒருவர் எவரென்றால் அது சீமான் தான்.

இந்திய அவலப் படைகள் மீதான தாக்குதல்களுக்கு பின்பும் கூட  பார்ப்பனீயத்தை தூக்கிப் பிடிப்பவர்கள் மத்தியிம் மட்டுமே ஈழம் தொடர்பான எதிர்ப்புணர்வு இருந்தது.  திமுக, அதிமுக, திக என்று மட்டுமல்லாமல் பரந்து பட்டு இருந்த ஆதரவுத்தளத்தை மாற்றி ஈழ மக்கள் தொடர்பான கடும் எதிர்ப்புணர்வை தமிழக மக்களின் எல்லா தளங்களிலும் பரப்பிய ஒரு கட்சி என்றால் அது நாம் தமிழர் கட்சி மட்டுமே.

ஆனால் உங்களை போன்றவர்களுக்கு இது ஒரு போதும் புரியப் போவதில்லை. கைகள் வலிக்க வலிக்க அவருக்காக நியாயம் கதைப்பீர்கள். பக்கம் பக்கமாக எழுதி தள்ளுவீர்கள்.

ஒரு சந்தோசம் என்னவெனில் தாயக மக்கள் ஒரு மருந்துக்கும் கூட சீமானை நம்புவதும் கிடையாது, மதிப்பதும் கிடையாது.

நன்றி

உங்க‌ளுக்கு இது தெரிந்து இருக்குமோ தெரியாதோ இதை சொல்லி காட்ட‌ விரும்புகிறேன்  , 

அண்ண‌ன் சீமான் க‌ட்சி ஆர‌ம்பிக்க‌ முத‌ல் குளத்தூர் மணி தொட்டு ப‌ல‌ருட‌ன் ஒன்னா ப‌ய‌ணிக்க‌ தான் விரும்பினார் , ஏன் குள‌த்தூர் ம‌ணி ஜ‌யாவிட‌ம் அண்ண‌ன் சீமான் சொன்ன‌து , நீங்க‌ள் முன்னுக்கு நில்லுங்கோ நான் உங்க‌ளுக்கு பின்னுக்கு நிக்கிறேன் என்று , அதுக்கு குள‌த்தூர் ம‌ணி ம‌றுத்து விட்டார் ,

ஈழ‌ விடைய‌த்தில் வைக்கோவுக்கு ஈழ‌த்தை விட‌ திராவிட‌ம் தான் முக்கிய‌ம்  , ஈழ‌ விடைய‌த்தில் க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் வைக்கோ போட்ட‌து  எல்லாம் வேச‌ம் , 

அண்ண‌ன் வேல் முருக‌ன்  அண்ண‌ன் சீமான் இவ‌ர்க‌ள் இருவ‌ரும் , எல்லாரையும் ஒன்னா இணைக்க‌ முய‌ற்சி எடுத்தார்க‌ள் அது கை கூட‌ வில்லை , 

அண்ண‌ன் சீமானால் தான் ம‌ற்ற‌வ‌ர்க‌ள் ஈழ‌ம் ச‌ம்ம‌ந்த‌ம்மா வாய் திற‌க்கின‌ம் இல்லை இணையின‌ம் இல்லை என்றால்  இது ந‌ம்பும் ப‌டியாய் இல்லை ,

இப்போது உள்ள‌ சூழ் நிலையில் எதிரி கூட‌ கை குலுக்க‌ த‌மிழ் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ள் அடுத்த‌ நிமிட‌மே த‌யார் , அதுக்கு உதார‌ண‌ம் ( வைக்கோ ம‌ற்றும் திருமாள‌வ‌ன் ) 

திராவிட‌ ஈழ‌ ஆத‌ர‌வாள‌ர்க‌ளுக்கு ஈழ‌த்தை விட‌ திராவிட‌ம் தான் முக்கிய‌ம் அதை முத‌ல் புரிந்து கொள்ளுங்கோ ,

நீங்க‌ள் எழுதும் போது உங்க‌ளுக்கு கைவ‌லிச்சா ம‌ற்ற‌வ‌ர்க‌ளுக்கும் கை வ‌லிக்குது என்று அர்த்த‌மா 😂😁 /
ந‌ன்றி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, நிழலி said:

நீங்கள் மேற்கோள் காட்டியிருப்பது வடக்கு கிழக்கில் எந்தக் கட்சி அதிகப்படியாக வாக்குகள்  பெறும் என்பது தொடர்பான நான் எழுதியதை. கண்டிப்பாக இது தான் வரும் நாடாளுமன்ற தேர்தலில் நிகழும். விக்கியர் (தேர்தலில் நின்றால் அல்லது அவர் கட்சி ஆரம்பித்தால்), கஜேந்திரகுமார் போன்றவர்கள் மிகச் சிறிதளவு வாக்குகள் மட்டுமே பெறுவர். மிஞ்சிப் போனால் வடக்கில் ஒரு ஆசனம் மட்டும் கிடைக்கும்.

இல்லை  ராசா

நான்  மேலே  குறிப்பிட்டது

யோகேஸ்வரன் என்பவர் தனிப்பட்ட நபரோ

அல்லது  தனியொரு  கட்சியினைச்சார்ந்து  வென்றவரோ  அல்ல

பல  கட்சிகளின்  கூட்டமைப்பு

அதுவும்  புலிகளின் ஆசி  பெற்ற  கட்சியைச்சேர்ந்தவர்

இந்த  தகுதிகளையெல்லாம்  இவர்கள் இழந்து வருவதும்

அடுத்த  கட்டங்களை நோக்கி  மக்கள் தயாராவதும்  தாயக  நிலமை

இதனை நீங்களும் அறிவீர்கள்

ஆனால் சீமான்  அப்படியல்ல..

அதனையே  குறிப்பிட்டேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kavi arunasalam said:

DAD51648-04-AE-43-D3-A50-B-F8388-B2-E5-E

எங்கட கருத்துக்கள "மூனா" விடம் கொஞ்சம் கவனமாத்தான் கதைக்கவேணும்........ மனுசன் கார்டூன் படம்போட்டு காவடி ஆட வைத்துவிடுவார்...... யப்பா நான் இந்தப்பக்கம் இனி தலை வச்சும் படுக்கமாட்டன்.

ZestySarcasticFlatcoatretriever.webp

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, வல்வை சகாறா said:

எங்கட கருத்துக்கள "மூனா" விடம் கொஞ்சம் கவனமாத்தான் கதைக்கவேணும்........ மனுசன் கார்டூன் படம்போட்டு காவடி ஆட வைத்துவிடுவார்...... யப்பா நான் இந்தப்பக்கம் இனி தலை வச்சும் படுக்கமாட்டன்.

அடுத்த படம் உங்களுடையது தான்.

Link to comment
Share on other sites

10 hours ago, நிழலி said:

சீமான் என்பவர் உலகிற்கு தெரியமுன்னரே பல ஆயிரக்கணக்கான காயம்ப்பட்ட போராளிகளுக்கு மருத்துவம் செய்து அனுப்பி வைத்ததில் இருந்து டீசல் பெற்றோல் போன்றவற்றை கூட அனுப்பி வைத்த ஏராளமான தமிழக அன்பு உள்ளங்கள் தமிழகத்தில் இருந்தன என்பதை மறக்க வேண்டாம்.

கட்சி வேறுபாடுகள்  இல்லாமல் பல கட்சி, பல அமைப்புகள் என பரந்து பட்ட தமிழக மக்கள் மத்தியில் எம் போராட்டம் மீது இருந்த ஆதரவு அனுதாபம் அனைத்தையும் வெறும் ஒரு கட்சி ஆக்களிடம் மட்டுமே என்று குறுக்கி முன்னர் இருந்ததை விட பல மடங்கு ஆதரவை இழக்க வைத்த ஒருவர் எவரென்றால் அது சீமான் தான்.

இந்திய அவலப் படைகள் மீதான தாக்குதல்களுக்கு பின்பும் கூட  பார்ப்பனீயத்தை தூக்கிப் பிடிப்பவர்கள் மத்தியிம் மட்டுமே ஈழம் தொடர்பான எதிர்ப்புணர்வு இருந்தது.  திமுக, அதிமுக, திக என்று மட்டுமல்லாமல் பரந்து பட்டு இருந்த ஆதரவுத்தளத்தை மாற்றி ஈழ மக்கள் தொடர்பான கடும் எதிர்ப்புணர்வை தமிழக மக்களின் எல்லா தளங்களிலும் பரப்பிய ஒரு கட்சி என்றால் அது நாம் தமிழர் கட்சி மட்டுமே.

ஆனால் உங்களை போன்றவர்களுக்கு இது ஒரு போதும் புரியப் போவதில்லை. கைகள் வலிக்க வலிக்க அவருக்காக நியாயம் கதைப்பீர்கள். பக்கம் பக்கமாக எழுதி தள்ளுவீர்கள்.

ஒரு சந்தோசம் என்னவெனில் தாயக மக்கள் ஒரு மருந்துக்கும் கூட சீமானை நம்புவதும் கிடையாது, மதிப்பதும் கிடையாது.

நன்றி

இந்திய மத்திய அரசு இயக்கங்களுக்கு ஆயுதப்பயிற்சி கொடுத்து வளர்த்தது இலங்கையில் குழப்பங்களை ஏற்படுத்தி தனக்கு சாதகமாக தலையீடு செய்வதற்காக அன்றி தமிழர்களுக்கு விடுதலை பெற்றுத்தர இல்லை. தமிழகத்தில் இருந்த ஆதரவு மத்திய அரசின் இந்த நிலைப்பாட்டை உடைத்தெறிந்து கொடுக்கப்பட்ட ஆதரவு கிடையாது. மேலும் பத்மநாபா கொலை ராஜீவ் கொலைகளுக்கு பிறகு ஆங்காங்கே இருந்த ஆதரவு என்பது எந்த ஒரு அரசியல் நன்மையையும் ஈழத்தமிழருக்கு ஏற்படுத்துமளவுக்கு வலிமையாக இருந்தது கிடையாது. இறுதியுத்தத்தில் மக்கள் அழிவை எவ்வகையிலும் தமிக அரசியலால் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து தடுக்க வக்கற்ற நிலையிலேயே இந்த ஆதரவு இருந்தது. நாம் தமிழர் கட்சியின் தமிழ்த்தேசிய அரசியல் முன்னெடுப்பு இலங்கையில் தமிழர் விடுதலைப்போராட்டம் தோற்கடிக்கப்பட்டு பல்லாயிரம் மக்கள் கொல்லப்பட்டதில் இருந்து ஆரம்பிக்கின்றது. போராட்ட காலத்தில தமிழகத்தில் இருந்த ஆதரவானது  அரசியல் வலிமையற்றதால் இறுதியில் நடந்த படுகொலைகளை கூட தடுக்க முடியாத நிலையின் விழைவில் இருந்த அரசியல் வலிமையை வளர்த்தெடுப்பது நோக்கியே நாம்தமழர் கட்சி தொடங்குகின்றது. மேலுள்ள உங்கள் கருத்துக்கள் மொட்டந்தலைக்கும் முழுங்காலுக்கும் முடிச்சுபோடுவதாக உள்ளது. 

தாயக மக்கள் தமிழீழத்தில் உள்ள அரசியல் கட்சிகளையே நம்புவதில்லை, வேறு வழியில்லாததால் தேர்தல் வரும்போது வாக்களிக்கின்றனர். அவர்களால் எதுவும் செய்ய முடியாது என்பது மக்களுக்கு தெரியும். அதேபோல் புலம்பெயர் மக்களையும் சரி நாடுகடந்த அரசையும் சரி எதையும் அவர்கள் நம்புவதில்லை. நம்பவும் முடியாது. அரசியலுக்கான  தளமே இல்லாதபோது அரசியல் சார்ந்த நம்பிக்கைகள் அர்த்தமற்றது. தமிழ் இனத் தேசீய அரசியல் தமிழகத்திலோ இல்லை ஈழத்திலோ வலிமையற்று எதையும் செய்ய முடியாத வக்கற்ற நிலையிலேயே உள்ளது. தமிழகத்தில் திராவிட கட்சிகளின் அரசியல் சாதீயக் கட்சிகளின் அரசியல் மதவாதக் கட்சிகளின் அரசியல் ஈழத்தில்  பிரதேசவாத அரசியல் மதவாத அரசியல் என்று தமிழின அரசியல் சிதைந்துபோன நிலையில் நாம்தமிழர் என்ற குரல் இங்கு பலருக்கு மிகப்பெரும் கொதிப்பையும் காழ்ப்புணர்வையும் ஏற்படுத்துவதை பலரது கருத்தில் இருந்தும் கருத்துப்படங்களில் இருந்தும் காணக்கூடியதாக உள்ளது. 

9 hours ago, Kavi arunasalam said:

DAD51648-04-AE-43-D3-A50-B-F8388-B2-E5-E

முன்பு கவிஞர் வைரமுத்து குறித்து அறியப்பட்டவர்கள் என்ற தலைப்பில் ஒரு கருத்துப்படம்  வரைந்திருந்தீர்கள். ஆதராமற்ற குற்றச்சாட்டுக்கு உங்களின் அவசர ஆர்வக்கோளாறு புரிந்தது. இவ்வாறான படங்களால் யாருக்கு என்ன நன்மை என்பது புரியவில்லை.  இவ்வாறான படங்களால் தமிழ்ச் சமூகத்திற்கு நன்மைசெய்வதாக நீங்கள் கருதினால் அதில் எனக்கு உடன்பாடு கிடையாது என்பதை பதிவு செய்கின்றேன். 

 

 

Link to comment
Share on other sites

16 minutes ago, சண்டமாருதன் said:

இந்திய மத்திய அரசு இயக்கங்களுக்கு ஆயுதப்பயிற்சி கொடுத்து வளர்த்தது இலங்கையில் குழப்பங்களை ஏற்படுத்தி தனக்கு சாதகமாக தலையீடு செய்வதற்காக அன்றி தமிழர்களுக்கு விடுதலை பெற்றுத்தர இல்லை. தமிழகத்தில் இருந்த ஆதரவு மத்திய அரசின் இந்த நிலைப்பாட்டை உடைத்தெறிந்து கொடுக்கப்பட்ட ஆதரவு கிடையாது. மேலும் பத்மநாபா கொலை ராஜீவ் கொலைகளுக்கு பிறகு ஆங்காங்கே இருந்த ஆதரவு என்பது எந்த ஒரு அரசியல் நன்மையையும் ஈழத்தமிழருக்கு ஏற்படுத்துமளவுக்கு வலிமையாக இருந்தது கிடையாது. இறுதியுத்தத்தில் மக்கள் அழிவை எவ்வகையிலும் தமிக அரசியலால் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து தடுக்க வக்கற்ற நிலையிலேயே இந்த ஆதரவு இருந்தது. நாம் தமிழர் கட்சியின் தமிழ்த்தேசிய அரசியல் முன்னெடுப்பு இலங்கையில் தமிழர் விடுதலைப்போராட்டம் தோற்கடிக்கப்பட்டு பல்லாயிரம் மக்கள் கொல்லப்பட்டதில் இருந்து ஆரம்பிக்கின்றது. போராட்ட காலத்தில தமிழகத்தில் இருந்த ஆதரவானது  அரசியல் வலிமையற்றதால் இறுதியில் நடந்த படுகொலைகளை கூட தடுக்க முடியாத நிலையின் விழைவில் இருந்த அரசியல் வலிமையை வளர்த்தெடுப்பது நோக்கியே நாம்தமழர் கட்சி தொடங்குகின்றது. மேலுள்ள உங்கள் கருத்துக்கள் மொட்டந்தலைக்கும் முழுங்காலுக்கும் முடிச்சுபோடுவதாக உள்ளது. 

தாயக மக்கள் தமிழீழத்தில் உள்ள அரசியல் கட்சிகளையே நம்புவதில்லை, வேறு வழியில்லாததால் தேர்தல் வரும்போது வாக்களிக்கின்றனர். அவர்களால் எதுவும் செய்ய முடியாது என்பது மக்களுக்கு தெரியும். அதேபோல் புலம்பெயர் மக்களையும் சரி நாடுகடந்த அரசையும் சரி எதையும் அவர்கள் நம்புவதில்லை. நம்பவும் முடியாது. அரசியலுக்கான  தளமே இல்லாதபோது அரசியல் சார்ந்த நம்பிக்கைகள் அர்த்தமற்றது. தமிழ் இனத் தேசீய அரசியல் தமிழகத்திலோ இல்லை ஈழத்திலோ வலிமையற்று எதையும் செய்ய முடியாத வக்கற்ற நிலையிலேயே உள்ளது. தமிழகத்தில் திராவிட கட்சிகளின் அரசியல் சாதீயக் கட்சிகளின் அரசியல் மதவாதக் கட்சிகளின் அரசியல் ஈழத்தில்  பிரதேசவாத அரசியல் மதவாத அரசியல் என்று தமிழின அரசியல் சிதைந்துபோன நிலையில் நாம்தமிழர் என்ற குரல் இங்கு பலருக்கு மிகப்பெரும் கொதிப்பையும் காழ்ப்புணர்வையும் ஏற்படுத்துவதை பலரது கருத்தில் இருந்தும் கருத்துப்படங்களில் இருந்தும் காணக்கூடியதாக உள்ளது. 

முன்பு கவிஞர் வைரமுத்து குறித்து அறியப்பட்டவர்கள் என்ற தலைப்பில் ஒரு கருத்துப்படம்  வரைந்திருந்தீர்கள். ஆதராமற்ற குற்றச்சாட்டுக்கு உங்களின் அவசர ஆர்வக்கோளாறு புரிந்தது. இவ்வாறான படங்களால் யாருக்கு என்ன நன்மை என்பது புரியவில்லை.  இவ்வாறான படங்களால் தமிழ்ச் சமூகத்திற்கு நன்மைசெய்வதாக நீங்கள் கருதினால் அதில் எனக்கு உடன்பாடு கிடையாது என்பதை பதிவு செய்கின்றேன். 

 

 

நீங்கள் உங்கள் கருத்துக்களை  எழுத்துக்களாக வெளிப்படுத்துவது போல அவர் தனது கருத்துக்களை கோட்டோவியங்களாக வெளிப்படுத்துகிறார். ஒருவர் வெளிப்படுத்தும் கருத்து கட்டாயமாக உங்களின் கருத்துகளுடன் உடன்பாடாக தான் இருத்தல் வேண்டும் என எதிர்பார்க்க முடியாது தானே.. உங்களின் கருத்துக்கள் அவரின் ஆர்வத்தினை மட்டுப்படுத்தும் ஜனநாயகவெளியில் எல்லோருக்கும் தமது கருத்துக்களை எல்லாவடிவத்திலும் வெளிப்படுத்த உரிமை  உள்ளது என்பது.ஜனநாயக நாடொன்றில் வாழும் உங்களிற்கு தெரியாததல்ல..இதற்கும் உங்களிடம் விளக்கங்கள் இருக்கலாம்..என்கருத்தை தெரிவித்துள்ளேன்.உங்களை கருத்துக்களால் காயப்படுத்தும் நோக்கம் இல்லை 

Link to comment
Share on other sites

18 minutes ago, அபராஜிதன் said:

நீங்கள் உங்கள் கருத்துக்களை  எழுத்துக்களாக வெளிப்படுத்துவது போல அவர் தனது கருத்துக்களை கோட்டோவியங்களாக வெளிப்படுத்துகிறார். ஒருவர் வெளிப்படுத்தும் கருத்து கட்டாயமாக உங்களின் கருத்துகளுடன் உடன்பாடாக தான் இருத்தல் வேண்டும் என எதிர்பார்க்க முடியாது தானே.. உங்களின் கருத்துக்கள் அவரின் ஆர்வத்தினை மட்டுப்படுத்தும் ஜனநாயகவெளியில் எல்லோருக்கும் தமது கருத்துக்களை எல்லாவடிவத்திலும் வெளிப்படுத்த உரிமை  உள்ளது என்பது.ஜனநாயக நாடொன்றில் வாழும் உங்களிற்கு தெரியாததல்ல..இதற்கும் உங்களிடம் விளக்கங்கள் இருக்கலாம்..என்கருத்தை தெரிவித்துள்ளேன்.உங்களை கருத்துக்களால் காயப்படுத்தும் நோக்கம் இல்லை 

// முன்பு கவிஞர் வைரமுத்து குறித்து அறியப்பட்டவர்கள் என்ற தலைப்பில் ஒரு கருத்துப்படம்  வரைந்திருந்தீர்கள். ஆதராமற்ற குற்றச்சாட்டுக்கு உங்களின் அவசர ஆர்வக்கோளாறு புரிந்தது. இவ்வாறான படங்களால் யாருக்கு என்ன நன்மை என்பது புரியவில்லை.  இவ்வாறான படங்களால் தமிழ்ச் சமூகத்திற்கு நன்மைசெய்வதாக நீங்கள் கருதினால் அதில் எனக்கு உடன்பாடு கிடையாது என்பதை பதிவு செய்கின்றேன். //

உங்கள் கருத்துக்கு நன்றிகள்.  ஓவியத்தை வரைவதும் இணைப்பதும் அவரது உரிமை அவரது ஓவியக் கருத்தில் சமூக நன்மை குறித்து எனக்கு உடன்பாடு இல்லை என்பதை பதிவுசெய்துள்ளேன் அவ்வளவுதான். இதனால் சமூகத்திற்கு நன்மை என்று கருதுபவர்கள் இவ் ஓவியத்துடன் உடன்படுவார்கள். அது அவர்களது உரிமை. அதில் குறுக்கிடவும் இல்லை. கருத்து சுதந்திரத்துக்கு எதிராக எனது கருத்தும் இல்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, சண்டமாருதன் said:

முன்பு கவிஞர் வைரமுத்து குறித்து அறியப்பட்டவர்கள் என்ற தலைப்பில் ஒரு கருத்துப்படம்  வரைந்திருந்தீர்கள். ஆதராமற்ற குற்றச்சாட்டுக்கு உங்களின் அவசர ஆர்வக்கோளாறு புரிந்தது. இவ்வாறான படங்களால் யாருக்கு என்ன நன்மை என்பது புரியவில்லை.  இவ்வாறான படங்களால் தமிழ்ச் சமூகத்திற்கு நன்மைசெய்வதாக நீங்கள் கருதினால் அதில் எனக்கு உடன்பாடு கிடையாது என்பதை பதிவு செய்கின்றேன். 

சண்டமாருதன் உங்கள் பதிவை வாசித்தேன்.

பொதுவாக எனது கருத்துப் படங்களுக்கு வரும் விமர்சனங்களுக்கு நான் பதில் எழுதுவதில்லை.

எனது கருத்தில் மாற்றம் இல்லை. உங்கள் கருத்தை மாற்ற வேண்டும் என்ற தேவையும் எனக்கு இல்லை.

பாராட்டுக்களைவிட. எதிர்ப்பில்தான் எனக்கு நாட்டம் அதிகம். அதுதான் எனக்கு ஒரு உத்வேகத்தைத் தரும்.

நன்றி சண்டமாருதன்.

Link to comment
Share on other sites

ஈழப் போராட்டத்தை தமிழக அரசியல் கட்சிகள் அரசியல் இலபத்திற்காக பயன்படுத்தின என்ற குற்றச்சாட்டுகளில் நியாயம் இருப்பினும் தமிழகத்தில்  இருந்த ஈழப்போராட்ட ஆதரவு தளத்தை எம்மவரது முன்யோசனை அற்ற  நடவடிக்கைகளும் பாரிய உந்து சக்தியை வழங்கியது என்ற உண்மையையும் நாம் மறக்காமல் இருப்பது எதிர்காலத்தில் அப்படியான தவறு ஏற்படாம் இருக்க உதவும். எமது உண்மையான எதிரிகளுக்கு 

1980 களின் ஆரம்பத்தில்  ஆட்சியில் இருந்த எம். ஜி.ஆர் தலைமையிலான அதிமுக ஆட்சியும் 1989 ஜனவரியில் பதவிக்கு வந்த கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியும் இந்திய  ஈழப்போராட்டத்திற்கு வழங்கிய மறைமுக உதவிகள்  இந்தி அரசியலமைப்பையே மீறிய செயல்கள். 

டக்டலின் சூளைமேடு துப்பாக்கு சூடு எம்ஜியாருக்கு தர்ம சங்கடத்தையும் பத்மநாபா மீதான தாக்குதல் கருணாநிதிக்கு தர்ம சங்கடத்தையும் கொடுத்திருந்தன. ஈழப்போராட்டத்திற்கான மக்கள் ஆதரவு த்தளத்தின் வீழ்சசிக்கு இவை முக்கிய காரணியாக இருந்தன. 1989 இந்திய இராணுவத்துடனான போர்க்காலத்தில் திமுக ஆட்சியில் புலிகளுக்கு வழங்கிய மறைமுகமான பல உதவிகளை இன்றும் அவர்களால் வெளியில் சொல்ல முடியாது. ஏதாவது பொலிஸ்  பிரச்சனை என்றால் சுப்புலட்சுமி அம்மாவுக்கு போன் பண்ணினால்  போதும் என்று போராளிகளே தமக்குள் உரையாடும்  அளவுக்கு நிலமை இருந்தது. (சுப்புலட்சுமி ஜெகதீசன் அன்றைய தமிழக உள்துறை அமைச்சர்)

இன்று சீமான் ஆட்சிக்கு வந்தாலும் மாநிலத்தின் சட்ட ஒழுங்கை நிலைநாட்ட கடமைப்பட்டவர். இந்திய அரசியமைபை மீறி அவரால்  எதுவும் செய்ய முடியாது. அவரின் ஈழ  மக்கள் மீதான கரிசனை வரவேற்க தக்கது. அதை உண்மையான வினை திறனுடன் ஆற்ற அவர் பொறுப்புணர்வுடன் நடந்து  நட்பு சக்திகளை வளர்த்து கொள்ள வேண்டும். தன்னைவிட மற்றவர்கள் எல்லோரும்  அயோக்கியர்ககள் என்ற அவரது பரப்புரை தவறானது.  அரசியலில் தகுதி மிக்க நபராக சீமான் தன்னை வளர்தது க் கொள்வதன் மூலம்  ஈழ மக்களுக்கும் உதவும் அவரின் விருப்பை மட்டுப்படுத்தப்பட்ட அளவிலாவது நடைமுறைப்படுத்தலாம். (இந்திய அரசியலமைப்பின் படி அது தான் உடனடி சாத்தியமான நடைமுறை) 

நான் ஆட்சிக்கு வருவதற்கு முன் எனக்கு எதிராக செயல்பட்டவர்கள் எல்லோரும் இறந்து விடுங்கள். அல்லது அவர்களை கொலை செய்த பழியை நான் சுமக்க வேண்டு வரும் என்ற  அவரின் உரையும்  அதற்கு விசில் அடித்த ஆதாரவாளர்களின் செயலும்  சர்வதேச பத்திரிகைகளில் வருவது அவருக்கும் அவர் பேசும் தமிழ் தேசிய அரசியலுக்கும் உதவப் போவதில்லை. மாறாக எதிர்மறையாக எமக்கு  பாதகமாகவே முடியும். சுதந்திரத்தை வேண்டி போரடும் இனத்தின் நன்மதிப்பை இது பாதிக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kavi arunasalam said:

சண்டமாருதன் உங்கள் பதிவை வாசித்தேன்.

பொதுவாக எனது கருத்துப் படங்களுக்கு வரும் விமர்சனங்களுக்கு நான் பதில் எழுதுவதில்லை.

எனது கருத்தில் மாற்றம் இல்லை. உங்கள் கருத்தை மாற்ற வேண்டும் என்ற தேவையும் எனக்கு இல்லை.

பாராட்டுக்களைவிட. எதிர்ப்பில்தான் எனக்கு நாட்டம் அதிகம். அதுதான் எனக்கு ஒரு உத்வேகத்தைத் தரும்.

நன்றி சண்டமாருதன்.

இவை எல்லாம் கருத்துப்படங்கள் என்று நினைத்துத்தான்  கிறுக்கி கொண்டிருக்கிறீர்களா? நான் எதோ கேலிச்சித்திரம் எண்டெல்லோ நினைச்சன்!!

இம்ரான் கான் கட்சி தொடங்கிய போதும் எத்தனையோ விமர்சனங்கள் வந்தன ஆனால் இப்போ அவர் பிரதமர். என்ன பாகிஸ்தான்  சனம் கொஞ்சம் யோசிக்க கூடியது! ஆனால் தமிழ் நாட்டில் ***** ******  நல்ல விடயங்கள் சென்றடைய கூட வருடங்கள் எடுக்கலாம்??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் கூடாதவன் என்று சொல்லிவிட்டேன் 
நிரூபிக்க சீமான் கூடாதவனாக மாறுவதுக்கு 
............... இப்போ காத்து இருக்கிறேன். 

அப்போ அப்போ ஏதும் இப்படியாக வந்து என்னை 
கிளு கிளுப்பாக வைத்திருக்கிறது.
ஆனாலும் எனது நிரந்தர புத்திக்கு மகிழ்ச்சி இன்னமும் இல்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Eppothum Thamizhan said:

இவை எல்லாம் கருத்துப்படங்கள் என்று நினைத்துத்தான்  கிறுக்கி கொண்டிருக்கிறீர்களா? நான் எதோ கேலிச்சித்திரம் எண்டெல்லோ நினைச்சன்!!

இம்ரான் கான் கட்சி தொடங்கிய போதும் எத்தனையோ விமர்சனங்கள் வந்தன ஆனால் இப்போ அவர் பிரதமர். என்ன பாகிஸ்தான்  சனம் கொஞ்சம் யோசிக்க கூடியது! ஆனால் தமிழ் நாட்டில் ***** ******  நல்ல விடயங்கள் சென்றடைய கூட வருடங்கள் எடுக்கலாம்??

இம்ரான் கான் க‌ட்சி ஆர‌ம்பிக்கும் போது ஊட‌க‌ங்க‌ள் கேள்விக்கு மேல‌ கேள்விக‌ள் கேட்டின‌ம் ந‌ண்பா ( அவையின் கேள்விக்கு இம்ரான் கான் சொன்ன‌ ப‌தில் ( என‌க்கு வாக்க‌ளிக்கும் பிள்ளைக‌ள் இப்போது பாட‌சாலைக‌ளில் ப‌டித்து கொண்டு இருக்கிறார்க‌ள் என்று சொல்லி விட்டு க‌ட‌ந்து சென்று விட்டார் ) 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.