Jump to content

ஈழத் தமிழர் மீதான இந்திய அக்கறை?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

•ஈழத் தமிழர் மீதான இந்திய அக்கறை?

காணி அதிகாரம் இல்லை

பொலிஸ் அதிகாரம் இல்லை

வடக்கு கிழக்கு இணைப்புகூட இல்லை

இதுதான் கோத்தா தமிழருக்கு வழங்கப்போகும் தீர்வு

இதைத்தான் அன்று மகிந்தாவும் கூறினார்.

 அதைத்தான் இன்று கோத்தாவும் கூறுகிறார்.

ஆனால் கோத்தா இதை தைரியமாக இந்தியாவில் வைத்தே கூறியுள்ளார்.

பொதுவாக ஒரு நாட்டுக்கு செல்லும் இன்னொரு நாட்டு தலைவர் அந்த நாட்டுக்கு தர்ம சங்கடம் வரும் கருத்துகளை கூறுவதில்லை. இதுதான் உலக நடைமுறை.

ஆனால் கோத்தாவோ இந்த நடைமுறைபற்றி எல்லாம்  கவலைப்படாமல் தமிழருக்கு வழங்கும் தீர்வு பற்றி கூறியிருக்கிறார்.

தமிழருக்கு உரிய தீர்வு வழங்குமாறு கோத்தாவுக்கு அழுத்தம் கொடுத்ததாக இந்திய அரசு கூறுகிறது.

ஆனால் கோத்தாவோ “ தமிழருக்கு தீர்வு வழங்குவதை பெருன்பான்மை சிங்கள மக்கள் விரும்பவில்லை. எனவே சிங்கள மக்களை மீறி தீர்வு எதையும் நான் வழங்கப் போவதில்லை” என்று கூறியுள்ளார்.

தமிழருக்கு தீர்வு வழங்கப்போவதில்லை என்று இந்தியாவில் வைத்தே தைரியமாக கோத்தா கூறுகிறார். அவருக்கு 7000 கோடி ரூபா உதவியை இந்திய அரசு வழங்குகிறது.

அப்படியென்றால் தமிழருக்கு தீர்வு பெற்றுக் கொடுப்பதில் இந்திய அரசுக்கு உண்மையான அக்கறை இல்லை என்றுதானே அர்த்தம்.

ஆனால் எமது தமிழ் தலைவர்களோ “இந்தியா தமிழருக்கு தீர்வு பெற்று தரும்” என்று இன்னமும் கூறிக் கொண்டிருக்கிறார்கள்.
 

 

https://www.facebook.com/100003995132782/posts/1594330690710087?d=n&sfns=mo

Link to comment
Share on other sites

4 hours ago, கிருபன் said:

ஆனால் கோத்தாவோ “ தமிழருக்கு தீர்வு வழங்குவதை பெரும்பான்மை சிங்கள மக்கள் விரும்பவில்லை. எனவே சிங்கள மக்களை மீறி தீர்வு எதையும் நான் வழங்கப் போவதில்லை” என்று கூறியுள்ளார்.தமிழருக்கு தீர்வு வழங்கப்போவதில்லை என்று இந்தியாவில் வைத்தே தைரியமாக கோத்தா கூறுகிறார்.

https://www.facebook.com/100003995132782/posts/1594330690710087?d=n&sfns=mo

இது திரிக்கப்பட்ட செய்தி. கோத்தா சொன்னது, பெரும்பான்மை சிங்கள மக்கள்  அதிகாரப்பரவலாக்கல் என்ற அரசியல் தீர்வை விரும்பவில்லை. ஆனால், வடபகுதியை பொருளாதார அபிவிருத்தி செய்வதையோ, தமிழருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதையோ எவரும் எதிர்க்கவில்லை. நான் அவற்றையே தீர்வாக வழங்க இருக்கிறேன் என்றார்.  
http://www.jaffnamuslim.com/2019/12/blog-post.html

“70 ஆண்டுகளாக, அடுத்தடுத்த தலைவர்கள் ஒரே ஒரு உறுதியளித்துள்ளனர். அதிகாரப் பகிர்வு, அதிகாரப் பகிர்வு, அதிகாரப் பகிர்வு. ஆனால் இறுதியில் எதுவும் நடக்கவில்லை. பெரும்பான்மை சமூகத்தின் விருப்பங்களுக்கும் உணர்விற்கும் எதிராக நீங்கள் எதுவும் செய்ய முடியாது என்று நான் நம்புகிறேன்.
 
பெரும்பான்மையினரின் விருப்பத்திற்கு எதிராக எதையாவது உறுதியளிக்கும் எவரும் பொய்யானவர்.
 
எந்த சிங்களவரும் சொல்ல மாட்டார்கள், அங்கு அபிவிருத்தி செய்யாதீர்கள், அல்லது அவர்களுக்கு வேலை கொடுக்க வேண்டாம் என. ஆனால் அரசியல் பிரச்சினைகள் வேறு. “

 

 

Link to comment
Share on other sites

1 hour ago, Jude said:

இது திரிக்கப்பட்ட செய்தி. கோத்தா சொன்னது, பெரும்பான்மை சிங்கள மக்கள்  அதிகாரப்பரவலாக்கல் என்ற அரசியல் தீர்வை விரும்பவில்லை. ஆனால், வடபகுதியை பொருளாதார அபிவிருத்தி செய்வதையோ, தமிழருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதையோ எவரும் எதிர்க்கவில்லை. நான் அவற்றையே தீர்வாக வழங்க இருக்கிறேன் என்றார்.  
http://www.jaffnamuslim.com/2019/12/blog-post.html

“70 ஆண்டுகளாக, அடுத்தடுத்த தலைவர்கள் ஒரே ஒரு உறுதியளித்துள்ளனர். அதிகாரப் பகிர்வு, அதிகாரப் பகிர்வு, அதிகாரப் பகிர்வு. ஆனால் இறுதியில் எதுவும் நடக்கவில்லை. பெரும்பான்மை சமூகத்தின் விருப்பங்களுக்கும் உணர்விற்கும் எதிராக நீங்கள் எதுவும் செய்ய முடியாது என்று நான் நம்புகிறேன்.
 
பெரும்பான்மையினரின் விருப்பத்திற்கு எதிராக எதையாவது உறுதியளிக்கும் எவரும் பொய்யானவர்.
 
எந்த சிங்களவரும் சொல்ல மாட்டார்கள், அங்கு அபிவிருத்தி செய்யாதீர்கள், அல்லது அவர்களுக்கு வேலை கொடுக்க வேண்டாம் என. ஆனால் அரசியல் பிரச்சினைகள் வேறு. “

 

 

Jude,

கோட்டாபய கூறியதன் அடிப்படையில் உங்கள் கருத்து என்ன  ?? 

Link to comment
Share on other sites

2 hours ago, Jude said:

“70 ஆண்டுகளாக, அடுத்தடுத்த தலைவர்கள் ஒரே ஒரு உறுதியளித்துள்ளனர். அதிகாரப் பகிர்வு, அதிகாரப் பகிர்வு, அதிகாரப் பகிர்வு. ஆனால் இறுதியில் எதுவும் நடக்கவில்லை. பெரும்பான்மை சமூகத்தின் விருப்பங்களுக்கும் உணர்விற்கும் எதிராக நீங்கள் எதுவும் செய்ய முடியாது என்று நான் நம்புகிறேன்.

 
பெரும்பான்மையினரின் விருப்பத்திற்கு எதிராக எதையாவது உறுதியளிக்கும் எவரும் பொய்யானவர்.
 
எந்த சிங்களவரும் சொல்ல மாட்டார்கள், அங்கு அபிவிருத்தி செய்யாதீர்கள், அல்லது அவர்களுக்கு வேலை கொடுக்க வேண்டாம் என. ஆனால் அரசியல் பிரச்சினைகள் வேறு. “

 

29 minutes ago, Maharajah said:

Jude,

கோட்டாபய கூறியதன் அடிப்படையில் உங்கள் கருத்து என்ன  ?? 

இலங்கை பிரச்சினைக்கு இரண்டு சக்திவாய்ந்த பிரிவுகள் திருப்தியடையத்தக்க தீர்வு தேவை. அந்த பிரிவுகள்:

  1. சிங்களவர்
  2. ஈழத்தமிழர்

போரில் ஏற்பட்ட தோல்வியின் பின் ஈழத்தமிழர் தம்மை சக்திவாய்ந்த பிரிவாக கருதுவது குறைவு. ஆனால் ஜனாதிபதி கோத்தபாய ஈழத்தமிழரை சக்திவாய்ந்த பிரிவாக கருதுவதாகவே அவரது சொல்லும் செயலும் காட்டுகிறது. மாவீரர் நாளை நினைவுகூர அனுமதித்துவிட்டு, அவரது பாதுகாப்பு செயலாளரான முன்னாள் இராணுவ தளபதியை கொண்டு, “மாவீரர் நாளை நினைவுகூர்வது சட்டவிரோதமானதல்ல” என்று சொல்ல வைத்தது, கோத்தபாய எவ்வளவு தூரம் ஈழத்தமிழருடன் சமரசம் செய்து தீர்வுக்கு வர விரும்புகிறார் என்பதை காட்டுகிறது.

போருக்கு தயாரில்லாமல் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளிலும், விஞ்ஞானத்திலும், உல்லாசத்திலும் மூழ்கி இருந்த  அமெரிக்காவுடன் உயர்ந்த பட்ச நட்பில் இருந்துகொண்டே பேர்ள் ஹார்பரில் குண்டுகள் போட்டு அமெரிக்க கடற்படைக்கப்பல்களில் பெரும்பாலானவற்றையும், கிறிஸ்மஸ் கொண்டாட தயாராக இருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடற்படையினரையும் ஜப்பான் கொன்று குவித்து அமெரிக்காவை   இரண்டாம் உலகயுத்தத்திற்குள் இழுத்தது. உடனடியாக தன்னை தயார்படுத்திக்கொண்டு, யூத விஞ்ஞானிகள் செய்து தந்த அணுக்குண்டுகளை வீசி உலகறியா அழிவை ஏற்படுத்தி ஜப்பானை அமெரிக்கா சரணடைய செய்தது. சரணடைந்த ஜப்பானை, அமெரிக்கா முற்றாக அழித்திருக்கலாம், அல்லது நிரந்தர அடிமையாக வைத்திருக்கலாம். அப்படி செய்யாமல், ஜப்பானுக்கு பணத்தையும், தொழில்நுட்பத்தையும், சந்தைவாய்ப்பையும் அள்ளி வழங்கி, ஜப்பானை தனக்கடுத்த இரண்டாவது பணக்கார நாடாக்கியது அமெரிக்கா. இந்த வரலாற்றை பெரும்பாலான அமெரிக்கர்கள் நன்கறிவர். அவர்களுள் ஒருவர் கோத்தபாய.அவர் இலங்கையரானாலும், அவரது கொள்கைகளும் செயற்பாடுகளும் அவரை ஒரு அமெரிக்கராகவே காட்டுகின்றன.  

போர் செலவுகளாலும் ஊழல்களாலும், இலங்கை தாங்கமுடியாத கடன்சுமையை கொண்ட ஏழை நாடாக இருக்கிறது. தானும், தன் நண்பர்களும், காயப்பட்டு, உயிர்களை இழந்து போரில் இருந்து மீட்டெடுத்த இந்த நாடு இப்படி ஏழ்மையால் அழிந்து போவதை கோத்தபாய விரும்பவில்லை என்று தெரிகிறது. 70 வயது இருதய நோயாளியான அவர் தன்னால் இந்த நாட்டை. வறுமையில் இருந்தும் மீட்க முடியும் என்று நினைக்கிறார். ஆனால் அதற்கு ஈழத்தமிழரின் ஆதரவு அவருக்கு தேவைப்படுகிறது. நாட்டின் அபிவிருத்திக்கு தேவையான பணமும், தொடர்புகளும், சந்தைவாய்ப்பும், அறிவும், அனுபவமும் ஈழத்தமிழரிடமே உள்ளன - ஏழைச்சிங்களவரிடம் இல்லை. அமெரிக்காவில் ஆசிய நாட்டவர் அதிகம் வாழும் பணக்கார கலிபோர்னியாவில் 12 வருடங்கள் வாழ்ந்த கோத்தபாயவுக்கு இது நன்கு தெரியும். 

ஆகவே அவர் இரண்டு பிரிவினரும் ஏற்றுக்கொள்ளத்தக்க ஒரு தீர்வை தேடுகிறார். 

Link to comment
Share on other sites

பெரும்பான்மை சமூகத்தின் விருப்பங்களுக்கும் உணர்விற்கும் எதிராக நீங்கள் எதுவும் செய்ய முடியாது என்று நான் நம்புகிறேன்.
 
 
எந்த சிங்களவரும் சொல்ல மாட்டார்கள், அங்கு அபிவிருத்தி செய்யாதீர்கள், அல்லது அவர்களுக்கு வேலை கொடுக்க வேண்டாம் என. ஆனால் அரசியல் பிரச்சினைகள் வேறு. “

இவை தொடர்பாக நீங்கள் ஒன்றும் கூறவில்லையே   ?? 

 

Edited 3 hours ago by Jude

Link to comment
Share on other sites

17 minutes ago, Maharajah said:
பெரும்பான்மை சமூகத்தின் விருப்பங்களுக்கும் உணர்விற்கும் எதிராக நீங்கள் எதுவும் செய்ய முடியாது என்று நான் நம்புகிறேன்.
......
.......
இவை தொடர்பாக நீங்கள் ஒன்றும் கூறவில்லையே? 

 

1 hour ago, Jude said:

இலங்கை பிரச்சினைக்கு இரண்டு சக்திவாய்ந்த பிரிவுகள் திருப்தியடையத்தக்க தீர்வு தேவை. அந்த பிரிவுகள்:

  1. சிங்களவர்
  2. ஈழத்தமிழர்

ஆகவே அவர் இரண்டு பிரிவினரும் ஏற்றுக்கொள்ளத்தக்க ஒரு தீர்வை தேடுகிறார். 

 

18 minutes ago, Maharajah said:
எந்த சிங்களவரும் சொல்ல மாட்டார்கள், அங்கு அபிவிருத்தி செய்யாதீர்கள், அல்லது அவர்களுக்கு வேலை கொடுக்க வேண்டாம் என. ஆனால் அரசியல் பிரச்சினைகள் வேறு. “

இவை தொடர்பாக நீங்கள் ஒன்றும் கூறவில்லையே? 

 

1 hour ago, Jude said:

போர் செலவுகளாலும் ஊழல்களாலும், இலங்கை தாங்கமுடியாத கடன்சுமையை கொண்ட ஏழை நாடாக இருக்கிறது. தானும், தன் நண்பர்களும், காயப்பட்டு, உயிர்களை இழந்து போரில் இருந்து மீட்டெடுத்த இந்த நாடு இப்படி ஏழ்மையால் அழிந்து போவதை கோத்தபாய விரும்பவில்லை என்று தெரிகிறது. 70 வயது இருதய நோயாளியான அவர் தன்னால் இந்த நாட்டை. வறுமையில் இருந்தும் மீட்க முடியும் என்று நினைக்கிறார். ஆனால் அதற்கு ஈழத்தமிழரின் ஆதரவு அவருக்கு தேவைப்படுகிறது. நாட்டின் அபிவிருத்திக்கு தேவையான பணமும், தொடர்புகளும், சந்தைவாய்ப்பும், அறிவும், அனுபவமும் ஈழத்தமிழரிடமே உள்ளன - ஏழைச்சிங்களவரிடம் இல்லை. அமெரிக்காவில் ஆசிய நாட்டவர் அதிகம் வாழும் பணக்கார கலிபோர்னியாவில் 12 வருடங்கள் வாழ்ந்த கோத்தபாயவுக்கு இது நன்கு தெரியும். 

 

Link to comment
Share on other sites

1 hour ago, Jude said:

 

 

 

 

ஒவ்வொரு ஜனாதிபதிபதியும் என்ன மனநிலையில் இருந்து பேசுகிறார்கள் என்பதுதான் உண்மையான பிரச்சனையே.

எல்லா இலங்கையருக்குமான  ஜனாதிபதியா அல்லது பவுத்த சிங்களவருக்கான ஜனாதிபதியா என்பதிலிருந்தே எல்லாம் ஆரம்பமாகிறது.  அவர் யாருக்கு ஜனாதிபதி என்பதை அவரது பேச்சிலிருந்து புரிந்துகொள்ளலாம்.  அப்படியான மனநிலையில் இருந்து அவர் இனப் பிரச்சனைக்கு தீர்வை காணமுடியும்.  தருவதை பெற்றுக்கொள்ளுங்கள் என்பதற்கும் எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் தீர்வை கொண்டுவருவதற்க்கும் இடையே பாரிய வேறுபாடு உள்ளது.  

எனது பார்வையில்,  இவருக்கு மற்றெல்லா ஜனாதிபதிக்கும் இல்லாத அருமையான சந்தர்ப்பம் (Golden opportunity ) கிடைத்துள்ளது. வரலாறில் இடம் பிடிப்பாரா இல்லையா என்பது அடுத்த ஆண்டே விடை தெரியும். 

அப்படி அவர் எல்லோருக்குமான ஜனாதிபதியாக முனைந்தால் SWRD Bandaranayake வுக்கு நடந்ததுதான் இவருக்கும்.  

 

நன்மை நடந்தால் மகிழ்ச்சியே 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்ப‌த்தை ஆயுத‌ங்க‌ளை ப‌ற்றி நூற்றுக்கு நூறு உங்க‌ளுக்கு தெரியுமா இல்லை தானே நான் ஒரு ஆய்வில் தெரிந்து கொண்டேன் இந்த வ‌ருட‌ம்.................. அதை ஈரானே வெளிப்ப‌டையா அறிவித்த‌து😏............................. அவ‌ங்க‌ யாழுக்கு அதிக‌ம் வ‌ராட்டியும் அத‌தூற‌ ப‌ரப்ப வ‌ருவ‌தில்லை......................... அவாக்கும் குடும்ப‌ம் பிள்ளைக‌ள் வேலைக‌ள் என்று அதிக‌ம் இருக்கு உங்க‌ளை மாதிரி யாழுக்கை 24ம‌ணித்தியால‌ம் கும்பி அடிக்க‌ முடியாது தான் அவவாள்😁..........................
    • இந்த இரண்டு சம்பவமும் அண்மையில் நடந்ததாகவே தெரிகின்றது. ஏனென்றால்... இது சம்பந்தமாக சமூக ஊடகங்களில் பல நூற்றுக் கணக்கானவர்கள்  அதனைப்  பற்றிய கருத்துக்களை பதிவு செய்த போதும்... ஒருவர் கூட, அந்த 800 ரூபாய்  வடை இரண்டு வருசத்துக்கு முன்பு வந்த காணொளி என்று தெரிவிக்கவில்லை. இத்தனைக்கும் அவர்கள் இலங்கையில் வசிப்பவர்கள். அப்படி இருக்க... பையன் எப்படி அது இரண்டு வருடத்துக்கு முன் பார்த்த காணொளி என்று சொன்னார் என்று தெரியவில்லை. சில வேளை மனப் பிராந்தியோ.... நானறியேன். 😂 "ஆடு களவு போகவில்லை. களவு போனமாதிரி கனவு கண்டேன்". என்ற கதை மாதிரி இருக்கு. 🤣
    • யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! இனியபாரதி. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸாரினால் பிராந்திய உயிர்காப்பு நீச்சல் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை(19) வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக்.சி.ஏ.தனபாலவினால்  திறந்து வைக்கப்பட்டது. கடற்கரையில் குளிக்கும் போது, விளையாட்டுக்களில் ஈடுபடும்போது உயிர் இறப்பு மற்றும் அசம்பாவிதங்கள் ஏற்படாது தடுக்கும் வகையில் குறித்த பிரிவு செயற்படவுள்ளது. இதன்போது குறித்த பகுதியில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸ் காவலரணும் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர். (ச) யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! (newuthayan.com)
    • (இனியபாரதி)  யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைக்கப்பட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பாக (18)இன்று யாழ் ஊடக அமையத்தில் நடத்திய ஊட சந்திப்பில் சத்ர சிகிச்சையின் போது இருந்த பெண்ணின் தாயார் மற்றும் சகோதரர் விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்தனர் யாழ் போதனா  மருத்துவமனையில் இதய சத்திரசிகிச்சை  மேற்கொள்ளப்பட்ட சுரேஸ்குமார் பாக்கியச்செல்வி வயது 44 ஜெயபுரம் தெற்கு பல்லவராயன்கட்டு என்ற குடும்பப் பெண் கடந்த 08 திகதி நடைபெற்ற இதயச் சத்திரசிகிச்சையின் போது உயிரிழந்துள்ளார். தவறுதலான முறையில் சத்திரசிகிச்சை நடைபெற்றதாகவும் உறவினர்கள்  குற்றச் சாட்டுகின்றனர். அரச  மருத்துவமனையில் சத்திர சிகிச்சைகாக பணம் கேட்டதாகவும் குற்றச்சாட்டுகின்றனர்.இவ்வாறான இந்தச் சம்பவத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். அத்தோடு இறந்த பெண் கணவனால் கைவிடப்பட்ட மிகவும் வறுமையான பெண் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.(ப) யாழ் போதனாவில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைப்பு:உறவினர் குற்றச்சாட்டு! (newuthayan.com)
    • வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (மாதவன்) செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் ; கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும் - பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை! செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணியில் சர்வதேசத் தரத்திலான துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை தொடர்பாக பொ.ஐங்கரநேசன் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரித்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. அபிவிருத்தி முதலீட்டாளர்களின் வசதிகளையும் நலன்களையும் மாத்திரமே கருத்திற் கொள்வதாயின் அது நிலைபேறானதாக ஒருபோதும் அமையாது. அபிவிருத்தியில் சுற்றுச்சூழலினதும், அது சார்ந்த சமூகத்தினதும், நலன்கள் முன்னுரிமை பெறும்போதே அது நீடித்த – நிலையான - அபிவிருத்தியாக அமையும். அந்த வகையில் யாழ் நகரின் நுழைவாசல் என்பதற்காக மாத்திரமே செம்மணியில் துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கு முற்படுவது எவ்வகையிலும் ஏற்புடையது அல்ல. இதனை இதுவரையில் அபிவிருத்திகள் எதனையும் காணாத தீவகத்தின் பகுதிகளில் ஒன்றில்  நிறுவுவதே சாலச்சிறந்தது ஆகும். என்றும் தெரிவித்துள்ளார்.(ப) வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (newuthayan.com)
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.